Indian Legends



பக்ஸ் ரொம்ப நாளைக்கு முன் துரோணாச்சாரியார் அந்தணரா? என்று ஒரு பதிவு எழுதி இருந்தான். சமூகம் துரோணரை பிராமணன் என்று பார்த்தாலும் அவர் பிராமணன் என்ற லட்சியத்தை அடைந்தவர் இல்லை என்பது அவன் வாதம்.

இந்த தளத்தில் பல சுவாரசியமான மறுமொழிகள் எழுதி இருக்கும் விருட்சம் இதைப் பற்றி தன கருத்துகளை எழுதி இருக்கிறார். பாலகுமாரன் துரோணரைப் பற்றி அன்பு மந்திரம் என்று ஒரு நாவல் எழுதி இருக்கிறாராம். அதைப் படித்து இவரது சிந்தனைகள் தூண்டப்பட்டிருக்கின்றன. முதல் இரண்டு பகுதிகளில் நாவலைப் பற்றியும் கடைசி பகுதியில் தன கருத்துகளையும் எழுதி இருக்கிறார். படித்துப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: கூட்டாஞ்சோறு–>ஜாதி

தொடர்புடைய பக்கங்கள்:
துரோணாச்சாரியார் அந்தணரா? – பக்ஸ்
துரோணாச்சாரியார் அந்தணரா? – விருட்சம் – பகுதி 1, பகுதி 2, பகுதி 3


nullClick Here Enlarge

உனக்கு ஒரு டாக்டர் பட்டம் கொடுத்து நாங்கள் மகிழவில்லை.    சாஹித்திய அகாடமி சாத்திக்கொண்டது.
பத்மஸ்ரீ பதுங்கிக் கொண்டது.   வாக்குப் பதிவு இயந்திரத்தை வடிவமைத்த வாத்தியாருக்கு கெளரவம் தர வக்கில்லை நமக்கு.

ஞான பீடத்தில் அவரை ஏற்றிப் பாராட்டும் ஞானம் நமக்கு முற்றவில்லை.

திருப்பாவை அருளிய ஆண்டாளும், திருப்புகழ் தந்த அருணகிரியும், தேசிய மகாகவி பாரதியும், தமிழ்த்தாய் தொலைத்துவிட்ட காப்பியச் சுவடிகளை, அவளுக்குத் தேடித் தந்த டாக்டர் உ.வே.சா.வும், பட்டங்களுக்காகப் பாடுபட வில்லை.

அவரது நட்பு வட்டாரத்தின் விஸ்தீரணம் பலப் பல ஹெக்டேர்கள். சுஜாதாவுக்கு நாடு பூரா பெரிய இடத்து ரசிகர்கள்.

ஆனால், தானொரு வி.ஐ.பி. என்ற எண்ணமே அவருக்கு எழுந்ததில்லை என்பதற்குச் சான்று வேண்டுமா? ராதாகிருஷ்ணன் சாலை சரவண பவன் ஓட்டலில் ஓர் ஒதுக்குப்புறமான சாளரத்தருகே நின்றவாறு மதிய நேர சிற்றுண்டியைப் பொறுமையாக ஸ்பூனினால் சாம்பாரின் கொத்துமல்லிகளையும், கறிவேப்பிலைகளையும் இதர ஜட வஸ்துக் களையும், சீராக எடுத்துத் தட்டின் ஒரு மூலையில் போடுவதைப் பார்த்திருக்கிறேன்.

அவரை அங்கே சந்தித்தபோது, அந்தக் கல்விக் கடலுடன் பேச அறிவார்ந்த வார்த்தைகளின்றி மிகச் சாதாரண வசனங்களை, ‘எப்படி யிருக்கீங்க, சவுக்கியமா, டிபன் இங்கேதான் சாப்பிடுவீங்களா?’ என்பது போன்ற குழந்தைத்தனமான கேள்விகளையே கேட்டிருக்கிறேனென்றாலும், அவரது உயிரைக் காப்பாற்றிய ஓர் அதி உன்னதமான சாகஸத்தையும் நான் செய்திருக்கிறேன்.

அவர் குமுதத்தில் எழுதிய ‘ரத்தத்தின் நிறம் சிவப்பு’ என்ற ஓர் அற்புதமான சரித்திர நாவலில் சில வரிகள் ஒரு சிலரின் மனம் புண்படுமாறு அமைந்திருந்ததாக ஒரு கலவரம் ஏற்பட்டது.

‘எங்கே அந்த சுஜாதா?’ என்று வெறித் தனமான கூட்டம் அன்று குமுதம் அச்சகத்துக்குள் மூர்க்கத்தனமாகப் பிரவேசித்தது.

ஏறக்குறைய முற்றுகை இட்டுக் கொண்டிருந்தது.

சுஜாதாவை அனுப்பு வெளியே’ என்று வெறிக் கூச்சல்.

எவருடைய மனத்தையும் புண்படுத்தக்கூடிய விஷயங்களைப் போட விரும்பாத நெறியைக் கடைப்பிடித்து வந்த குமுதம் ஆசிரியர் அவர்கள், மேற்படி தொடர்கதையை அன்றே, அங்கே அப்பொழுதே நிறுத்திவிட்டு, அதை நிறுத்திவிட்டதான அறிவிப்பை யும் மாலைப் பத்திரிகையான ‘மாலை முரசு’வில் அறிவிப்பு விடும்படி செய்தார்.

மாலை முரசு பத்திரிகைக்கு விளம்பரத்தைக் கொடுத்துவிட்டு, அந்த சமாசாரத்தை குமுதம் அச்சகத்தில் சொல்லிவிடலாம் என்று நான் அச்சகம் வந்தால், காம்பவுண்டு பூரா கோபக் கும்பல் _ கைகளில் கிடைத்த உருட் டுக் கட்டைகள் சகிதம்.

null

உள்ளே செல்ல முடியாது. கதவு உட்புறம் தாழிடப்பட்டுள்ளது. ‘சரி, வாபஸாவதே விவேகம்’ என்று திரும்புவதற்குள் சிலர் (என்னையும் என் உதவி ஆசிரியர் பணியையும் அறிந்த வர்கள்) ‘அந்த ஆளைப் பிடியுங்கள்’ என்று குரல் கொடுத்ததும், ஒரு கும்பல் என்னைச் சூழ்ந்து கொண்டு  ‘சுஜாதாவை வெளியே வரச் சொல். இல்லாவிட்டால் குத்திவிடுவோம், கொன்று விடுவோம்’ என்று மிரட்டினர்.

தொடர்கதை எழுதுகிறவர்கள் பத்திரிகை ஆபீஸுக்குள்தான் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருப்பார்கள் என்ற தவறான புத்திசாலித்தனம் கும்பலில் சிலருக்கு.

நான், ‘சுஜாதா இங்கிருந்து எழுதமாட்டார். வெளியூரிலிருந்து எழுதுவார்’ என்றேன்.

அதுகள் என் சட்டையைப் பிடித்து உலுக்கி, ‘எந்த ஊர் என்று சொல்லு. அட்ரஸ் என்ன? எங்க ஆளுங்க எல்லா ஊரிலும் இருக்காங்க. கிழிச்சுடணும் கிழிச்சு’ என்று ஆவேசப்பட்டார்கள்.

நான் நிதானமாக சட்டையை விடுவித்துக்கொண்டு நிதானமாக யோசித்து., நிதானமாக ஒரு பொய்யான முகவரியை மனசுக்குள் சிருஷ்டித்து மனப்பாடம் செய்துகொண்டு, அவர் களிடம் இன்ன நம்பர், இன்ன தெரு, பெங்களூர் என்றேன்.

குறித்து வைத்துக் கொண்டு கும்பல் கலைந்தது.

குமுதம் ஆசிரியருக்கு சுஜாதாவின்மீது அளவு கடந்த பிரியம், மதிப்பு, பாசம்.

சுஜாதாவைப் பாராட்ட எடிட்டர் எஸ்.ஏ.பி.க்கு எப்போதுமே வெகு பிரியம். ஆனாலும் அடிக்கடி அவருக்கு போனில் தன் அபிப்பிராயத்தைக் கூறிக் கொண்டிருக்கமாட்டார். ரசனை தாங்க முடியாதபோது ரா.கி.ர. அவர்களிடம், ‘அவருக்கு வேணும்னா லைன் போடறீங்களா, ‘நான் பேசறேன்’ என்று தொலைபேசியில் கூப்பிடச் செய்து பேசி மகிழ்வார்.

ஒரு கெட்டிக்கார எழுத்தாளனது மதிப்பு, ஒரு பத்திரிகை முதலாளியின் அந்தஸ்தைவிடவோ, சினிமா டைரக் டரின் அந்தஸ்தை விடவோ உயர்ந்தது என்பது போன்ற சுயமரியாதை உடைய வராகவே சுஜாதா கடைசி வரை இருந்தார்.

இத்தனைக்கும் அவர் தன் விளம்பரத்துக்காக ஓர் உள்ளங்கை அளவு சின்னத் தம்பட்டத்தைக் கூட உபயோகித்தது இல்லை. அவரது ஓரோர் எழுத்துமே அவரது புகழைப் பாடின. இனியும் பாடிக்கொண்டிருக்கும்..

( நன்றி: குமுதம் 12.3.2008 )


தேவன் பற்றி…

8.9.1913ல் திருவிடைமருதூரில் பிறந்தவர். இயற்பெயர் ஆர். மகாதேவன். கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றவர். சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். எழுத்துத் துறையில் இருந்த ஆர்வத்தில் ஆனந்த விகடனில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து, நிர்வாக ஆசிரியரானவர். 23 ஆண்டுகள் விகடனில் பணியாற்றிய தேவன், நகைச்சுவைக் கதைகளும் கட்டுரைகளும் எழுதினார். தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருமுறை பதவி வகித்தவர். மே 5, 1957 அன்று தம்முடைய 44ம் வயதில் காலமானார்.

அரை நூற்றாண்டைக் கடந்து, இன்றும் மேலும் மேலும் படிக்கத் தூண்டுபவையாக இருக்கின்றன தேவனின் படைப்புகள். எழுத்தில் தேவன் கையாளாத உத்திகளே இல்லை எனலாம். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என ஒவ்வொன்றும் ஒரு விதம். தேவனின் நாவல்கள் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் தொடராக வெளி-யான காலகட்டத்தில், ‘துப்பறியும் சாம்பு’, ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘சி.ஐ.டி. சந்துரு’, ‘கோமதியின் காதலன்’, ‘கல்யாணி’, ‘மிஸ் ஜானகி’ ஆகியவற்றுக்காக, குடும்பத்துக்குள் நிகழ்ந்த சண்டைகளை அக்கால வாசகர்களால் மறக்க முடியாது. இப்பொழுது இந்தப் புத்தகத்துக்காக அவர்களுடன் அவர்களது குழந்தைகளும் மல்லுக்கு நிற்கப் போகிறார்கள். காலத்தால் அழியாத தேவனின் எழுத்துகளுக்கு வாசகர்கள் பரம்பரையாகத் தொடர்வதில் ஆச்சரியமில்லை.

கிழக்கு பதிப்பகம் பற்றி….
https://i0.wp.com/thoughtsintamil.blogspot.com/images/personal/badri_p2.jpg
தரமான நல்ல புத்தகங்களை சர்வதேசத் தரத்தில் வெளியிடுவதே கிழக்கு பதிப்பகத்தின் நோக்கம். புத்தகம் என்பது ஒரு பொருள் அல்ல. அது ஓர் இயக்கம். New Horizon Media Private Limited நிறுவனத்தின் ஓர் அங்கமான கிழக்கு பதிப்பகம், தமிழில் இலக்கியம், கலை, அறிவியல், அரசியல், சமூகம், வரலாறு, மானுடவியல், வாழ்க்கை, கேளிக்கை எனப் பல்வேறு துறைகள் சார்ந்த ஆழமும் அக்கறையும் மிக்க படைப்புகளைத் தொடர்ந்து வெளியிடும். உள்ளடக்கம், உருவம் இரண்டிலுமே சமரசமற்ற, உயர்தரத்தைப் பேண விரும்புகிறது கிழக்கு.

கிழக்கு  வெளியிட்டுள்ள தேவனின் புத்தகங்கள்….

கோமதியின்  காதலன்

அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். காதல். கொஞ்சம் போல் மோதல். பிறகு, டும் டும் டும். உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் இதுவரை வெளிவந்துள்ள காதல் கதைகளின் அடிப்படை இலக்கணம் இதுதான்.

கோமதியின் காதலனும் இந்த இலக்கணத்தை ஒட்டி எழுதப்பட்ட நாவல்தான். ஆனால்,இதற்கு ஈடாக இன்னொரு காதல் கதையைமுன்வைப்பது கடினம். எழுதப்பட்ட காலம் தொடங்கி இன்று வரை சிரஞ்சீவியாக கோலோச்சிக்கொண்டிருக்கிறது இந்நாவல்.

நாயகனும் நாயகியும் அல்ல. காதலும் நகைச்சுவையும்தான் இந்நாவலின் மெய்யான ஜோடி. வாசித்துப் பாருங்கள். சுவாசிக்கத் தொடங்கிவிடுவீர்கள். வார்த்தைகளைக் கொண்டல்ல; வருடிக்கொடுக்கும் தென்றலைக் கொண்டு இந்நாவலை தேவன் எழுதிஇருப்பதை உணர முடியும்.

சி.ஐ.டி  சந்துரு

‘சி.ஐ.டி. சந்துரு’, முதல் வரி தொடங்கி கடைசி வரி வரைக்கும் குறையாத விறுவிறுப்புடன் வாசகர்களைக் கட்டிப்போடும்  சுவாரசிய-மான துப்பறியும் நாவல். தேவனுக்கே உரித்தான ஓட்டமான நடை, அழுத்தமான வசனங்கள் இந்த நாவலின் சிறப்பு. சாகசம், சாமர்த்தியம், சவால் என பக்கத்துக்குப் பக்கம் எகிறும் எதிர்பார்ப்பு  புத்தகத்தைக் கையில் எடுத்தால் கீழே வைக்கவிடாது.

ஸ்ரீமான்  சுதர்சனம்

வாழ்க்கையின் சிக்கலான தருணங்களைக்கூட நகைச்சுவையாகச் சொல்லும் தேவனின் முக்கியமான படைப்புகளுள் ஒன்று ஸ்ரீமான் சுதர்சனம்.

குடும்பம், அலுவலகம் சார்ந்த உலகம் -இரண்டும் கலந்த ஒரு சராசரி ஆபீஸ் குமாஸ்தாவின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் அவனை வாழ்வின் அடுத்தக் கட்டத்துக்கு எப்படி உயர்த்துகிறது? குமாஸ்தா சுதர்சனம் எப்படி ஸ்ரீமான் சுதர்சனமாகிறான்?

ஸ்ரீமான் சுதர்சனமாக அவன் படும் கஷ்டங்களும், குடும்பத்தினரிடம் மாட்டிக் கொண்டுபடும் அவஸ்தைகளும் தேவனின் நடையில் ஹாஸ்யமாக வந்து விழுகின்றன.

பொதுவாக, நகைச்சுவைக் கதைகளின் ஆயுள்காலம் மிகவும் சொற்பம். உலக அளவில் எடுத்துக் கொண்டால் கூட, இன்று வரை நீடித்து நிற்கும் நகைச்சுவைக் கதைகளின் பெயர்களை ஒரு உள்ளங்கையில் எழுதிவிடலாம். தேவனின் ஸ்ரீமான் சுதர்சனம் அந்தப் பட்டியலில் மிகச் சுலபமாக வரும்.

விகடனில் 23 ஆண்டுகள் பணியாற்றிய தேவனின் ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘சி.ஐ.டி.சந்துரு’ ஆகியவை முக்கியப் படைப்புகள்.அவருடைய நகைச்சுவைக் கதைகளில் மிகவும் பிரபலமானவை, ‘கோமதியின் காதலன்’,   ‘கல்யாணி’,   ‘மிஸ் ஜானகி’.

துப்பறியும் சாம்பு

‘துப்பறியும் சாம்பு’வை தேவனின் மாஸ்டர் பீஸ் என்பார்கள். உண்மையில் தமிழில் எழுதப்பட்ட நகைச்சுவை இலக்கியங்கள்அனைத்துமே சாம்புவுக்குப் பின்னால்தான் அணிவகுக்கின்றன என்று சொல்ல வேண்டும்.

விளாம்பழம் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? கொஞ்சம் பெரிய விளாம்பழத்தை நனைத்துக்கொள்ளுங்கள்; அதுதான் சாம்புவின் தலை! கன்றுக் குட்டிகள் அழகாகக் காதுகளை முன்புறம் வளைத்துக் கொண்டு பார்க்கு மல்லவா? அந்த மாதிரி சாம்புவின் காதுகள் துருத்திக்கொண்டு இருக்கும். கண்கள், ஒரு மாதிரியாக அரைத் தூக்கத்தைத் தேக்கிக்கொண்டிருக்கும்.

இந்த லட்சணங்களுடன் ஒரு பித்தானில்லாத சட்டை, ஒரு பழைய கோட்டு, கிழிசல் குடை இவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இதுதான் சாம்புவின் தோற்றம்.துப்பறியப் போகிறேன் எனக் கிளம்பி, சாம்பு அடிக்கும் லூட்டிகள் ஒவ்வொன்றும் நகைச்சுவையின் உச்சம். தலைமுறை தலைமுறையாகத் தமிழ் மக்களை,பாகம் பாகமாக மகிழ்வித்து வந்திருக்கிறார் அமரர் தேவனின் துப்பறியும் சாம்பு.சாம்பு என்னும் இந்தக் குருவி உட்கார்ந்தால், பனம்பழம் மட்டுமல்ல, பனைமரமே விழுந்துவிடும்.

ராஜத்தின்  மனோரதம்

வீடு கட்டுவது சுலபம். செங்கல், சிமெண்ட்,ஜல்லி, இரும்பு, நகை, கடன் என்று கலவையாக உருட்டித் திரட்டி ஒரு வீட்டை உருவாக்கிவிடலாம். ஆனால், கட்டிய வீட்டை ஓர் இல்லமாக மாற்றுவது அத்தனை சுலபமல்ல.அதென்ன, இரண்டும் ஒன்றுதானே என்கிறீர்களா? கிடையாது.

வீடு என்பது அறைகளும் கதவுகளும் கொண்டஒரு கான்க்ரீட் இருப்பிடம். வீடு, இல்லமாக மாறவேண்டும் என்றால் முதலில், குதூகலம் குடிபுக வேண்டும். அதனால்தான், வீடு கட்டுவதைப் பற்றிய இந்த நாவலில் செங்கல்,மணல், ஜல்லியை விட அதிகமான அளவில் நகைச்சுவையைப் பயன்படுத்தியிருக்கிறார் தேவன்.

நிஜமாகவே நீங்கள் ஒரு வீடு கட்ட விரும்புகிறீர்கள் என்றால் இந்த புத்தகத்தைப் படியுங்கள். வீடு கட்டும் அனுபவத்தை ரசித்து ரசித்து அனுபவிக்க விரும்பினால் உங்களுக்கு இந்நாவலைத் தவிர வேறு விருந்து கிடையாது!

லஷ்மி கடாட்சம்

தேவன் நாவல்களில் ‘லக்ஷ்மி கடாட்சம்’ தனித்துவமானது. மனித குணங்களில் எத்தனை வகை உண்டோ, அத்தனையையும் இந்நாவலில் காணலாம். நட்புக்கு வேங்கடாசலம், பெருந்தன்மைக்கு கோவிந்தன், குரூரத்துக்கு நடராஜப் பிள்ளை, கபடத்துக்கு சாரங்கபாணி, மனித நேயத்துக்கு கல்யாண சுந்தரம் பிள்ளை என ஒவ்வொரு பாத்திரத்தையும் பார்த்துப் பார்த்து இழைத்திருக்கும் தேவனின் சாதனை ஆச்சரியமானது.

கல்யாணி
See  full size image

ஒரே ஒரு கட்டுரையினால், ஒரே நாளில், தமிழ்நாடெங்கும் பிரசித்தியாகிவிட்டார் தேவன். முதன் முதலில் கையெழுத்துப் பிரதியில் அவர் கட்டுரையைப் படித்தபோது, இவ்வளவு குதூகலத்துடன் குழந்தைகளின் வாழ்க்கையை எழுதும் இந்த ஆசாமி யார் என்று வியப்படைந்தேன். இவரோ இன்னும் இருபது வயது நிரம்பாத இளைஞர் என்று அறிந்த போது, அளவிலாத மகிழ்ச்சி உண்டாயிற்று. குழந்தைகளின் அற்ப சந்தோஷங்களையும் துக்கங்களையும் பற்றி மட்டுமல்ல; வயதான மனிதர்களுடைய மகா அற்ப சுக துக்கங்களையும் அவ்வளவு குதூகலத்துடன் எழுதக் கூடியவர் தேவன். -கல்கி

தேவனின் கதைகளை ஒன்று விடாமல் படித்தவன் நான். அவர் ஒரு தலைசிறந்த நகைச்சுவை எழுத்தாளர். அவர் உரைநடையின் சரளமும் துடுக்கும், தொடர்கதை அத்தியாயங்களில் ஆரம்பத்தில் பிரயோகிக்கும் ஆச்சரியங்களும், சிறுகதைகளில் வாசகரின் கவனத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தியிருக்கும் அற்புதமும், அவரை விட்டால் தமிழ் எழுத்தாளர்களில் மிகச் சிலரிடமே உள்ளன. என்போன்ற எழுத்தாளர்களுக்கு ஒரு முன்னோடியாகவும், மானசீக ஆசானாகவும் இருந்திருக்கிறார் தேவன். அவரை இன்று படித்தாலும் புதிதாகவே இருக்கும். தேவன் என்றைக்கும் இருப்பார். அவர் நிஜமாகவே தேவன்தான். -சுஜாதா.

மாலதி

சீனிக் கற்கண்டாக இனிக்கும் தேவனின் பதினெட்டு சிறுகதைகள் நூல் வடிவில் இதோ!

டாக்டர், திருடன், காதலன், காதலி, பில் கலெக்டர் என்று இவர் எடுத்துக்கொள்ளும் கேரக்டர்கள் அனைவரும் மிக மிகச் சாதாரணமானவர்கள். ஆனால், தேவனின் பேனாவுக்குள் ஒருமுறை புகுந்து வெளியே வரும்போது, ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக ஜொலிக்கிறார்கள்.

மணிமணியாக மின்னும் அத்தனை கதைகளையும் நகைச்சுவை என்னும் பிரமாதமான இழையில் கோத்திருக்கிறார் தேவன்.

காலத்தைக் கடந்து நிற்கும் எழுத்தாளராக தேவன் நீடிப்பது ஏன் என்பதற்கான விடைகளுள் இந்நூல் முக்கியமானது.

மிஸ்டர்  வேதாந்தம்

செல்வச் செழிப்பில் வளர்ந்த வேதாந்தம், திடீரென்று வரும் சரிவு-களால் உருவாகும் வாழ்க்கைப் போராட்டத்துக்கும் காதலுக்கும் இடையே சந்திக்கும் சவால்கள்தான் எத்தனை! வேண்டாத மனிதர்கள் உருவாக்கும் பிரச்னைகள் வேறு. எல்லாவற்றையும் சமாளித்து, காதலி செல்லத்தைக் கைப்-பிடிக்கிறான் வேதாந்தம்.

இயக்குநர் ஸ்ரீதர் தயாரிப்பில் ‘மிஸ்டர் வேதாந்தம்’  தொலைக்காட்சித் தொடராகவும் வந்து மகத்தான வரவேற்பைப் பெற்றது.

ஜஸ்டிஸ்  ஜகந்நாதன்  |  

தேவன் நாவல்களில் ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’ ஒரு புதுமையான படைப்பு. முழுக்க முழுக்க, ஒரு கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நடைபெறும் குறுக்கு விசாரணை மூலமே உருவாக்கப்பட்ட வித்தியாசமான நாவல். விறுவிறுப்பான வழக்கறிஞர்களின் வாதப் பிரதிவாதங்-களும் மெலிதான நகைச்சுவையும் இழையோடும் மர்ம நாவல் இது.

‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’ ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, மகத்தான வரவேற்பைப் பெற்றது.

அண்மையில் அல்லையன்ஸ் பதிப்பகம் ‘தேவ’னின் பல படைப்புகளை வெளியிட்டுள்ளது.  (டாக்டர் ருத்ரன் அளித்த தகவலுக்கு நன்றி)

உடுமலையில் கிடைக்கும் மற்றும் சில  தேவனின் புத்தகங்கள்….

அப்பளக்கச்சேரி  |  

கமலம்  சொல்கிறாள்  |  

சின்னஞ்சிறு கதைகள்  |  

சீனுப்பயல்  |  

சொன்னபடி கேளுங்கள்  |  

ஜாங்கிரி சுந்தரம்  |  

பல்லிசாமியின் துப்பு  |  

பார்வதியின் சங்கல்யம்  |  

பெயர்போன புளுகுகள்  |  

போக்கிரி மாமா  |  

மல்லாரி  ராவ் கதைகள்  |  

விச்சுவுக்கு கடிதங்கள்  |  

தொடர்புடைய பதிவுகள்: தேவன் பற்றி சுஜாதா


திருவருட்செல்வர் ‘  படத்தில் அப்பராக வேடம் போடுவதற்கு தனக்கு இன்ஸ்பிரேஷன் (Inspiration ) காஞ்சி சங்கராச்சாரியாரான ‘பரமாச்சாரியாள்‘  தான் என்று நடிகர் திலகம் சிவாஜி ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.

அதுபற்றி அவர் தனது “எனது சுயசரிதை” புத்தகத்தில் மேலும் கூறுகிறார்….

‘எனக்கு ‘காஞ்சி பரமாச்சாரியாள்‘  மீது மதிப்பும்,  பக்தியும் உண்டு.   அதற்கு ஒரு காரணம் உண்டு.  அது ஒரு முக்கியமான சம்பவம்.  ஒரு நாள், காஞ்சி முனிவர் பரமாச்சாரியாள் அவர்கள் என்னைக் கூப்பிட்டு அனுப்பியதாக,  சங்கர மடத்திலிருந்து செய்தி வந்தது.  அவர் மயிலாப்பூரில் உள்ள ஒரு மடத்தில் தங்கியிருந்தார்.  அந்தமடம்,  கற்பகாம்பாள் கல்யாண மடத்திற்குப் பக்கத்தில்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

https://i0.wp.com/www.indiadivine.org/content_images/1/7/paramacharya-01.jpg
நான், எனது தாயார்,  எனது தந்தையார்,  எனது மனைவி நான்கு பேரும் சென்றோம்.  சென்றவுடன் எங்களை உள்ளே ஒரு அறையில் உட்கார வைத்தார்கள்.  நாங்கள் ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்திருந்தோம்.  காஞ்சி முனிவர் அங்கே மக்களுக்கு உபன்யாசம் செய்து கொண்டிருந்தார்.  அப்போது திடீரென லைட்டெல்லாம்  அணைந்துவிட்டது.  அவர் கையில் ஒரு சிறிய குத்து விளக்கை எடுத்துக்கொண்டு,  மெதுவாகப் பார்த்துக் கொண்டே வந்தார்.  மெல்லக் கீழே உட்கார்ந்து,  கையைப் புருவத்தின் மேல் வைத்து எங்களைப் பார்த்தார்.  ‘நீதானே சிவாஜி கணேசன்?‘ என்றார்.  ‘ஆமாங்கய்யா!  நான்தான்‘, என்று காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன்.  என் மனைவியும், பெற்றோர்களும் அவரை வணங்கினார்கள்.

அப்போது அவர்,  “உங்களைப் பார்த்ததில் மிகவும் சந்தோஷம்.  திருப்பதி சென்றிருந்தேன்.  அங்கு ஒரு யானை எனக்கு மாலை போட்டது.  யானை நன்றாக இருக்கிறதே  யாருடையது?  என்றேன்.  ‘சிவாஜி கொடுத்தது‘  என்றார்கள்.  திருச்சி சென்றிருந்தேன்.  அங்கு திருவானைக்கா கோவிலுக்குப் போனேன்.  அங்கும் யானை மாலை போட்டது.  யானை அழகாக இருக்கிறது.  யானை யாருடையது?  என்றேன்.  ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள்.  தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் சென்றிருந்தேன்.  அங்கேயும் யானையை விட்டு மாலை போட்டார்கள்.  ‘இது யாருடையது ?’  என்றேன்.    ‘சிவாஜி கணேசன்  கொடுத்தது‘ என்றார்கள்.  நாட்டில் பணக்காரர்கள் பல பேர் இருக்கிறார்கள்.  அவர்கள் பப்ளிசிடிக்காக  சில சமயம் கோயில்களுக்குப் பணம் தான் நன்கொடையாகக் கொடுப்பார்கள்”.

“ஆனால்,  யானை கொடுப்பதற்குப் பெரிய மனசு வேண்டும்.  அந்த மனசு உனக்கிருக்கிறது.  ஆகையால் உன்னைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.  அவர்களுக்காக நான் பகவானைப் பிரார்த்தனை செய்கிறேன்”  என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டார்.  அப்போது என் மனம் எப்படியிருந்திருக்கும் ?  எத்தனை அனுக்கிரஹம்!   எண்ணிப் பாருங்கள்.”

ஒரு வேளை,  இந்தச் சம்பவம் என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கலாம்.    பரமாச்சாரியாளை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன்.   எனவே, அது ‘அப்பராக’ பிரதிபலித்திருக்கலாம் .








அன்று காலையில்தான் மதிப்பிற்குரிய முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் காஞ்சிபுரத்தில் ஸ்ரீ மடத்தில்  பரமாசார்யாளைத் தரிசித்து விட்டு ஆசி பெற்றுச் சென்றிருந்தார்கள் .  ஆசார்யாள் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள்.  மாலை சுமார் நான்கு மணியிருக்கும்.   “பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ள பிரஞ்சு பேராசிரியர்கள் பெரியவாளை தரிசிக்க இப்பொழுது வரப் போகிறார்கள்.  நீங்களும் இருந்து விட்டுப் போங்களேன்” என்றார் ஸ்ரீ மடத்தில் இருந்த ஒருவர்.   “சரி” என்று தயங்கினேன்.

சில நிமிடங்களுக்குள்ளாக எதிர்பார்த்த பேராசிரியர்கள் வந்தனர்.  “பெரியவாளைப் பார்க்க அவர்கள் வரலாம்.  உங்களையும் பெரியவாள் கூட வரச் சொன்னார்” என்றார் மடத்தைச் சேர்ந்தவர்.  மகிழ்ச்சியுடன் உடன் சென்றேன்.  பெரியவாள் எளிமையே உருவமாகத் தரையில் அமர்ந்திருந்தார்கள்.  தரிசிக்க வந்த ஐந்து பிரஞ்சு பேராசிரியர்களையும் எதிரில் அமரும்படி கூறினார்.  என்னை தமக்கு அருகில் வந்து அவர்களுக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொல்லுமாறு பணித்தார்.

வந்தவர்களில் மூவர் பெண்கள்;  இருவர் ஆண்கள்.  அவர்களின் தலைவராக இருப்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்திருப்பதாகவும்,  மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வந்திருப்பதாகவும் கூறினார்.  பெரியவாள் சிரித்துக் கொண்டே ஒவ்வொருவருடைய பெயரையும்,  அவர்கள் எந்தத் துறையில் பேராசிரியர்களாகத் திகழ்கிறார்கள் என்பதையும் கேட்டறிந்து கொண்டார்.

அவர்கள் தங்கள் தங்கள் துறைகளைக் கூறி வரும்போது,  பெரியவாள் சட்டென்று அவர்களில் ஒரு பெண்மணியைப் பார்த்து,  “நீங்கள் இத்தாலியிலிருந்து வந்தவர்களா?” என்று கேட்டார்.  அந்தப் பெண்மணி பிரஞ்சு நாட்டு பாரீஸ் மாநகரைச் சேர்ந்தவர்.  அங்கு பேராசிரியர்.  அப்படி இருக்கும்போது ஏன் இப்படிக் கேட்கிறார் என்று எண்ணினேன்.  அந்த பெண்மணி கூறிய பதில் எங்களை வியப்பிலாழ்த்தியது. “எங்கள் முன்னோர்கள் இத்தாலியைச் சார்ந்தவர்கள் தாம்” என்றார்.  அடுத்து பெரியவாள் கேட்ட கேள்வி மேலும் எங்களை வியப்பில் ஆழ்த்தியது.  பாரிஸுக்கு வடக்கில் லுக்ஸ்ம்பர்க்  என்ற நகருக்குத் தெற்கில் வாழ்ந்தவர்களா? என்று கேட்டார்.  அந்த பெண்மணி ஆச்சரியத்தில் மூழ்கி தன்னுடன் வந்த ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டே,  “ஆமாம்” என்று கூறினார்.  இதற்கு முன் அப்பெண்மணி இந்தியா வந்ததேயில்லை.  அப் பெண்மணியைப் பற்றி யாருக்குமே தெரியாது.  அப்படியிருக்க, பெரியவாள் பிரான்சு ஜெர்மனி நாடுகளின் அமைப்பையும்,  இந்தப் பகுதி தான் என்று வரையறுத்துக் கூறும் பாங்கையும் கண்டு நாங்கள் வியப்பை அடக்க முடியாது வாய் புதைத்து நின்றோம்.

எங்கள் முக பாவங்களைப் பார்த்து பெரியவாளே அது எப்படி என்று விரித்து உரைத்தார்கள்.  “இத்தாலிய நாட்டினருக்கும்,  பாரிஸுக்கும் வடக்கே லுக்ஸ்ம்பர்கிற்குத்   தெற்கில் உள்ளவர்களுக்கும் பெரும்பாலும் தலைக் கேசம் கருப்பாயிருக்கும்.  இத்தாலியர்களின் லத்தீன் மொழியின் உச்சரிப்பு ஒருவிதமாக இருக்கும்”  என்றார்கள்.  அதைக் கேட்டு அந்த பெண்மணி, “ஆமாம்!  ஆமாம்!” என்று வேகமாகத் தலையாட்டினார்.

காஞ்சிபுரத்தில் ஏதோ ஒரு பகுதியிலிருக்கும் பெரியவாள்,  உலகில் எங்கிருந்து யார் வந்தாலும்,  எம்மொழி பேசினாலும்,  இந்த பகுதியிலிருந்து வந்தவர்,  இந்த மொழி பின்னணி கொண்டவர் என்று சொல்லும் பாங்கையும் பார்த்த போது,  வேத காலத்தில் அனைத்தையும் அறிந்த மகரிஷிகள் எல்லாம் ஒருங்கே இணைந்து  இன்று பெரியவாள் உருவில் ஒரு ஒப்பற்ற பரம ஞானியாகத் திகழ்வதை உணர்ந்தேன்.

— டாக்டர்,  இரா.  நாகசாமி (முன்னாள் தொல்பொருள்  ஆய்வுத் துறை தலைவர்)



நான் ஆதாரமாக கதைகள்,  நாவல்கள் எழுதும் எழுத்தாளன்.  என்னைப் பல முறை பல காரணங்களுக்காகத்  திரைக்கதை எழுதுவதற்கு அழைப்பார்கள்.  கதை பிடித்திருந்தால்தான் அவற்றை எடுத்துக் கொள்வேன்.

கதை பிடித்திருந்தது என்பதற்கு சில விதிகள் எனக்கு உள்ளன.

முதலாவதாக கதைக்கு ஒரு ‘ப்ரிமைஸ்‘ இருக்க வேண்டும்.  அதன் சாரத்தை ஒரு வரியில் சொல்வதற்கு இயல வேண்டும்.

ப்ரிமைஸ்‘ என்பது,  கதையை ஒரு வரியில் சொல்ல வேண்டும்.  இதை ‘வாட் இப்  — what if ‘ என்பார்கள்.  எல்லா நல்ல  படங்களுக்கும் இந்த ‘ப்ரிமைஸ்’ உண்டு.

இந்த ‘ப்ரிமைஸ்‘ என்பது நன்றாக, எழுதப்பட்ட பெரிய நாவல்களுக்குக் கூட உண்டு.  உதாரணமாக பொன்னியின் செல்வன்.
சில உதாரணங்கள்:
பெற்றோர்கள் பேச்சைக் கேட்காமல் ஐந்து பையன்கள் வீட்டைவிட்டுச் சென்றால் என்ன ஆகும் ?  (பாய்ஸ்)

ஒரு பணக்காரனுக்குத் தன்னை அறியாமல் திருட்டுப் பழக்கம் இருந்தால் என்ன ஆகும் ?  (கண்களால் கைது செய்)

பழைய காலேஜ் நண்பர்கள் ஒருவன் கல்யாணத்தில் சந்தித்தால் என்ன ஆகும் ?  (பெப்சி)

திருநெல்வேலி கிராமத்துப் பெண்ணின் கணவனைக் காஷ்மீர் தீவிரவாதிகள் கடத்திச் சென்று விட்டால் என்னாகும் ?  (ரோஜா)

https://i0.wp.com/www.bollywood-stars.net/images/terror-roja.jpg

சுதந்திரப் போராட்டத் தாத்தா, லஞ்சம் வாங்குபவர்களையெல்லாம்  கொல்ல ஆரம்பித்தால் என்னாகும் ?  (இந்தியன்)

https://i0.wp.com/www.123musiq.com/Tamil-Images/ARRahmanMusicCollections/Indian.JPG

https://i0.wp.com/3.bp.blogspot.com/_MJBOxOuZOkU/RquX1HOdJcI/AAAAAAAAAHQ/VHhBXUSK8u8/s400/indian1.PNG

வரவேண்டிய சொத்தை எதிர்பாராமல் இழந்தால்,  இரு சகோதரிகளின் காதல்கள் என்னாகும் ?  (கண்டுகொண்டேன்  கண்டுகொண்டேன்)

அல்லது

சொத்தை இழந்த பெண்ணுக்குக்  காதல்  மலர்ந்தால் என்ன ஆகும் ?   (கண்டுகொண்டேன்  கண்டுகொண்டேன்)

https://i0.wp.com/3.bp.blogspot.com/__7s9GUTM-oY/R5p2gUQhW0I/AAAAAAAABeI/fis6HH1tL5I/s320/200px-Kandukondain_Kandukondain.jpg

https://i0.wp.com/www.thiraipadam.com/images/movies/2000/Kandukonden%20Kandukonden4.jpeg

https://i0.wp.com/www.thiraipadam.com/images/movies/2000/Kandukonden%20Kandukonden3.jpeg

https://i0.wp.com/chandrag.tripod.com/9903_ash.jpg

ஆப்த நண்பனிடம்,  அவன் தங்கையைக் காதலிப்பதை வெளிப்படையாகச் சொல்ல முடியாவிட்டால் என்னாகும் ?  (கண்ணெதிரே தோன்றினாள்)

பிரிவினையின் வகுப்புக் கலவரங்களில் மனைவியை இழந்தவன்,  காந்திதான் அதற்குக் காரணம் எனத் தீர்மானித்தால் என்னாகும் ?  (ஹே ராம்)

https://i0.wp.com/i44.tinypic.com/155p75z.jpg ஹே ராம்

ஒரு சாதாரண டி.வி.  ரிபோர்ட்டருக்கு,  ஒரு நாள் மட்டும் முதல்வராகும் வாய்ப்பு வந்தால் என்னாகும் ?  (முதல்வன்)

https://i0.wp.com/icdn.raaga.com/Catalog/CD/T/T0000002.jpg

ஒரு தாய்க்குப் பிறந்த இரட்டைப் பிள்ளைகளில் ஒருவன் குள்ளன் என்றால் என்ன ஆகும் ? (அபூர்வ சகோதரர்கள்)

https://i0.wp.com/4.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/SnvLZKtqNmI/AAAAAAAAAm4/oCR2hsqj8Ko/s400/appu.jpg

https://i0.wp.com/2.bp.blogspot.com/_ps_cLyiVbhA/SgAgqtiN6kI/AAAAAAAAA9c/H6la6rNNaL0/s400/aboorva.jpg

ஒருவன் விரும்பும் பெண்ணை அவனது இரட்டை சகோதரன் கல்யாணம் செய்து கொண்டுவிட்டால் என்ன ஆகும் ? (வாலி)
https://i0.wp.com/www.ajithfans.com/article-uploads/2010/03/vaali-1.jpg
https://i0.wp.com/i40.tinypic.com/30m5ru8.jpg

ஒரு மிகச் சிறிய கிராமத்தில் ஒருவனுக்கு லாட்டரி விழுந்த அதிர்ச்சியில் அவன் இறந்து போனால் என்ன ஆகும் ? (Waking Ned Divine என்னும் ஐரிஷ் படம்)

ஒரு கணவன் மனைவி தம் பெண் குழந்தையின் ஒன்பதாவது பிறந்த நாளில் அவள் தத்து எடுக்கப்பட்டவள் என்ற உண்மையை அவளிடம் முதல் முறையாகச் சொன்னால் என்ன ஆகும் ?  (கன்னத்தில் முத்தமிட்டால்)
கன்னத்தில் முத்தமிட்டால்கன்னத்தில் முத்தமிட்டால்கன்னத்தில் முத்தமிட்டால்கன்னத்தில் முத்தமிட்டால்கன்னத்தில் முத்தமிட்டால்

ஓர் இளம் பெண் பெரிய வித்வானைச் சபையில் தைரியமாகத் தமிழில் பாடச் சொன்னால் என்ன ஆகும் ?  (சிந்து பைரவி)
SindhuBhairavi சிந்து பைரவி

இப்படி யோசித்தால்,  எல்லா வெற்றிப் படங்களிலும் இந்த ‘என்னாகும்‘  இருக்கும்,  இருக்க வேண்டும்.   இதை நம் சினிமா பரிபாஷையில்  ‘நாட்‘ அல்லது ‘தாட்‘ என்கிறார்கள்.  ஹாலிவுட்டில்  அவர்கள்  ‘ப்ரிமைஸ்‘  என்கிறார்கள்.


நான் தினமணி கதிரில் இருந்த போது ஒரு நாள் வித்வான் லட்சுமணன் எனக்கு போன் செய்து,  “உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறேன்.  எம்.ஜி.ஆர் உங்களைப் பார்க்க விரும்புகிறார்.  தாங்கள் அவசியம் அவரைச் சந்திக்க வேண்டும்”  என்று கூறி,  தேதி நேரம் இடம் மூன்றையும் குறிப்பிட்டார்.  அவர் விருப்பப்படியே நான் சத்யா ஸ்டுடியோவுக்குப் போய் எம்.ஜி.ஆரைச் சந்தித்தேன்.

அன்று எம்.ஜி.ஆர் அவர்களின் அன்னையின் நினைவு நாள்.

“வருடா வருடம் என் அன்னையின் நினைவு நாளன்று நான் மிகவும் விரும்பும் ஒருவரை அழைத்து அவருக்குப் பாயசம் தருவேன்.  இந்த ஆண்டு உங்களுக்கு!”   என்று பாயசத்தை எடுத்து என்னிடம் கொடுத்தார்.  பிறகு அவர் மதிய உணவுக்கு உள்ளே சென்ற போது கூடவே என்னையும் அழைத்துச் சென்று பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.

“ஆனந்த விகடனில் ‘நான் ஏன் பிறந்தேன்?’   என்று நான் எழுதும் கட்டுரைத் தொடரைப் படிக்கிறீர்களா ?”  என்று கேட்டார்.  இரண்டொரு வாரம் மட்டுமே படித்ததாகச் சொன்னேன்.

“இப்போது உங்களை அழைத்தது எதற்குத் தெரியுமா ?”

“தெரியாது.”

“”உங்கள் தினமணி கதிரில் நான் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் எழுதப் போகிறேன்.”

“அதற்கென்ன,  தாராளமாகச் செய்யுங்கள்.  ஆனால் ஒரு சின்ன நிபந்தனை.  உங்கள் கேள்வி பதில் பகுதியை எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி விடும் உரிமை எனக்கு உண்டு.  நான் சொல்லும் வரை நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.  நீங்களாகவே நிறுத்தி விடக் கூடாது”  என்றேன்.


“அது முழுக்க முழுக்க உங்கள் உரிமை.  அதில் நான் தலையிட மாட்டேன்”  என்று  எம்.ஜி.ஆர் உறுதி அளித்தார்.

கதிரில் இரண்டு மூன்று வாரங்கள் விளம்பரம் செய்தேன்.  அதன் பலனாய் அலுவலகத்துக்கு வந்து குவிந்த வாசகர்களின் கேள்விகளை சாக்குப் பையில்தான்  மூட்டை மூட்டையாகக் கட்டிவைக்க வேண்டியதாயிற்று.  ஒரு தனி மனிதரின் பதிலுக்காக அப்போது வந்த கடிதங்களின் எண்ணிக்கை அளவுக்கு என் பத்திரிகை வாழ்வில் நான் எங்கும் கண்டதில்லை.

அந்த ஆண்டு ஆகஸ்ட் 14 -ம் தேதி பெரம்பூரில் ஒரு சபாவின் ஆதரவில் நான் எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ நாடகத்தை திருவல்லிக்கேணி பைன் ஆர்ட்ஸ் நாடகக் குழு நடத்தியது.  அன்றைய நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர் தலைமை தாங்கினார்.   அந்தக் கதையை எழுதியவன் என்ற முறையில் என்னையும் நாடகத்துக்கு அழைத்திருந்தார்கள்.  நான் வருவதாகச் சொல்லியிருந்த போதிலும் போக முடியாதபடி இக்கட்டான ஒரு நிலை ஏற்பட்டு விட்டது.

ரொம்ப நாளாகவே காமராஜ் அவர்கள் என் வீட்டுக்கு வருவதாகச் சொல்லிக் கொண்டிருந்தவர் அன்று பார்த்து வருவதாகத் தகவல் அனுப்பி விட்டார்.  அவர் வருவதை நான் மிகப் பெரிய பாக்கியமாகக் கருதியதால் சபாக்காரர்களுக்கு நிலைமையை விளக்கிக் கடிதம் எழுதி அனுப்பி விட்டேன்.  “தமிழகத்தின் ராக்பெல்லரான திரு. எம்.ஜி.ஆர் அவர்களே விழாவுக்கு வரும்போது பிறகென்ன ?” என்று நகைச்சுவையாக அதில் எழுதியிருந்தேன்.  விழாவின்போது என் கடிதத்தை  மைக்கில் படித்து விட்டார்கள்.  காமராஜ் வீட்டுக்கு வருவதால்தான் நான் வரவில்லை என்பது எம்.ஜி.ஆருக்கும் தெரிந்து விட்டது.  ஆனால் அது பற்றி அவர் என்ன நினைத்தார் என்பது எனக்குத் தெரியவில்லை.

See  full size image
ஆகஸ்ட் 14 -ம் தேதி இரவு எட்டரை மணிக்கு என் வீட்டுக்கு வந்த காமராஜ் மறுநாள் காலை 3 -30  மணிக்குத்தான், அதாவது ஆகஸ்ட் 15 -ம் தேதிதான் திரும்பிப் போனார்.

Cho Ramaswamy

என் அழைப்பின் பேரில் அன்று ‘சோ’ வும் என் வீட்டுக்கு வந்திருந்தார்.  நாங்கள் இருவரும் அன்று இரவு நாட்டு நடப்பு பற்றி திரு. காமராஜ் அவர்களோடு விடிய விடியப் பேசிக் கொண்டிருந்தோம்.

அப்புறமும் எம்.ஜி.ஆர். பதில்கள் கதிரில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.  அவர் தம்முடைய பதில்கள் சிலவற்றில் சோ அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்தார்.  நான் அவற்றைப் பிரசுரிக்கவில்லை.  அரசியல் கருத்துக்கள் எப்படியிருந்தாலும் சோவும் என்னைப்போல் ஒரு பத்திரிகை ஆசிரியர் என்பதால் அவரைத் தாக்கி எழுதும் பதில்களை என் பத்திரிகையில் வெளியிடுவது முறையல்ல என்று எனக்குத் தோன்றியது.  எனவே எம்.ஜி.ஆர். ‘சோ’வைத் தாக்கி எழுதியிருந்த பதில்களை மட்டும் தனியாக எடுத்து வைத்து விட்டு மற்றவற்றைப் பிரசுரித்து வந்தேன்.

நாலைந்து வாரங்கள் கழித்து வித்வான் லட்சுமணன் என்னிடம் வந்தார்.  “எம்.ஜி.ஆர்.எழுதும் பதில்களில் சிலவற்றை நிறுத்தி விடுகிறீர்களே,  எல்லாவற்றையுமே வெளியிட்டால் தேவலை” என்றார்.

“சோ வைத் தாக்கி எழுதும் பதில்களைத்தானே சொல்கிறீர்கள்?  அவற்றை நான் பிரசுரிப்பதற்கில்லை.  மன்னிக்க வேண்டும்”  என்றேன்.  “இல்லை,  எம்.ஜி.ஆர். எதிர்பார்க்கிறார்.  அதெல்லாம் அவருடைய கருத்துதானே ?  எல்லாவற்றையும் போட்டு விடுங்களேன்” என்றார்.  வித்வான் லட்சுமணனின் தர்மசங்கடம் எனக்குப் புரிந்தது.

இது பற்றி நானும் எம்.ஜி.ஆரும் சந்தித்துப் பேசுவது நல்லது என்று எனக்குத் தோன்றியதால் வித்வானிடம்,  “நான் எம்.ஜி.ஆரைப் பார்த்துப் பேசட்டுமா?” என்று கேட்டேன்.

“ரொம்ப நல்லது”  என்றார் வித்வான்.

அதன்படி எம்.ஜி.ஆரை ஒரு நாள் சந்திக்கப் போயிருந்தேன்.

கோடம்பாக்கம் ஸ்டூடியோ ஒன்றில் அவர் இருந்தார்.  ஏதோ சண்டைக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது.  நான் போய் ஒரு மணி நேரமாகியும் எம்.ஜி.ஆர் என்னைக் கண்டு கொள்ளவே இல்லை.  பார்த்துவிட்டுப் பேசாமலேயே இருந்தார்.  நானாக வலியச் சென்று பேசியபோது ஒரே வார்த்தையில் பதில் சொன்னார்.  ஏதோ கோபம் என்று மட்டும் புரிந்து கொண்டேன்.  எனக்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது.  ஆனாலும் அரைமணி நேரம் பொறுமையோடு உட்கார்ந்து ஷூட்டிங் பார்த்துக் கொண்டிருந்தேன்.  அப்புறம் பேசுவார் என்று எதிர்பார்த்தேன்.  ஆனால் ஷூட்டிங் கலைந்த பிறகும் அவர் என்னிடம் பேசத் தயாராயில்லை என்பது தெரிந்தது.  “இங்கே இவரை ஏன் பார்க்க வந்தோம்”  என்று எனக்கு நானே நொந்து கொண்டேன்.    கடைசியில், “நான் போய் வருகிறேன்”  என்று சொல்லி விடை பெற்றுக் கொண்ட போதுகூட  அவர்,  “எதற்காக வந்தீர்கள்?  ஏன் போகிறீர்கள்?”  என்று என்னிடம் எதுவுமே  கேட்கவில்லை.

என் மீது எம்.ஜி.ஆர்.  கோபமாக இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.  ஆனால் கோபம் எதனால் என்பது விளங்கவில்லை.  இரண்டு காரணங்களுக்காக அவர் கோபப் பட்டிருக்க வேண்டும்.  ஒன்று அவரைவிட நான் காமராஜருக்கு முக்கியத்துவம் தந்து அவர் தலைமை வகித்த நடக்க நிகழ்ச்சிக்குப் போகாமல் இருந்ததாயிருக்கலாம்.  அல்லது ‘சோ’ பற்றி அவர் எழுதிய பதில்களைப் பிரசுரிக்காமல் விட்டதா யிருக்கலாம்.  இவை இரண்டில் எது அவருக்குக் கோபமூட்டியது என்பது அவருக்குத் தான் தெரியும்.


கணையாழியின் கடைசிப் பக்கங்களிலிருந்து  (பிப்ரவரி – 1991 )

கிளம்பும்போதே வேன் மக்கர் செய்தது.  இந்த தடங்கலுக்கு ஏதாவது தெய்வக் குற்றம் சம்பந்தப்பட்ட காரணம் சொல்வதற்குள் மற்றொரு வாகனம் வந்து விட்டதால் தடங்கலை மறந்து விட்டோம்.  காலை ஒன்பதரை மணிக்கு காஞ்சிபுரம் சென்றோம்.  நான்காம் நூற்றாண்டிலிருந்து குறிப்பிடப்பட்ட நகரம் இன்று ஒலிபெருக்கிகள் மூலம் ரம் பம் பம் என்று அலறிக் கொண்டிருந்தது.  ராஜீவ் வருகிறார் என்று சவுக்குக் கம்பங்கள் நட்டுக் கொண்டிருந்தார்கள்.  அழகிரி பஸ்கள் இரைச்சலாகத் தெருவை ஆக்ரமித்துக்கொண்டு  செல்ல முனிசிபாலிடிக்காரர்கள் தெருவை சுத்தம் செய்கிறேன் என்று புழுதி கிளப்பிக்கொண்டிருந்தார்கள்.

சங்கர மடத்தில் புதுப் பெரியவாள் பாதபூஜை செய்து கொண்டிருக்க,  பரமாச்சாரியார் தரிசனத்துக்கு, முன் மண்டபத்தில் வெள்ளைக்காரிகள் காத்துக் கொண்டிருந்தனர்.  பூஜை முடிந்ததும் அவரைப் பார்க்கலாம் என்றால் ‘ஸ்பீக்கர் ரபிராய் வந்துட்டான்’.   அவர் போன கார்களின் புழுதி அடங்கினதும்தான் போது மக்களை அனுமதித்தார்கள்.  பரமாச்சாரியாள்  அவர்களை நான் முன்பு மெகபூப் நகரில் தரிசித்திருக்கிறேன்.  இப்போது நூறு வயசுக்கருகில் அவர் தம் ஞானயாத்திரையின் இறுதியில் இருக்கிறார்.  ஈஸிசேரில்  சாய்ந்திருக்க காதருகில் இரைந்து  இன்னார் வந்திருக்கா  என்று வந்தவர்களை சுருக்கமாக அறிமுகப்படுத்தி,  எப்போதாவது ஆசிர்வாதம் செய்கிறார்.  அத்தனை ஞானம் கண்டு,  அத்தனை தூரம் நடந்து,  அத்தனை போதித்து,  அத்தனை எழுதி,  அத்தனை தலைவர்களும்,  நீதிபதிகளும்,  ராஜாக்களும்,  ஆர்தர் கோஸ்டலர்களும் வந்து வந்து பார்த்துப் பேசி ஓய்ந்துபோன அந்த மனதில்,  இப்போது என்ன எண்ணங்கள் ஓடும் என்று வியப்படைகிறேன்.  பட்டாபிராமன் என்னைப் பற்றிச் சொல்லி “இவர் சுஜாதான்னு கதை எழுதறவர்.  குவளகுடி சிங்கமையங்கார்னு  சீரங்கத்துல வேத பாடசாலை ஸ்தாபிச்சவர்.  அவருடைய பேரன்….”  இதெல்லாம் காதில் சொனனபோது  சலனமே இல்லை.  “ஒரு ஏழைப் பெண்ணுக்கு ஹார்ட் ஆபரேஷன் பண்ண ஒத்தாசை செய்யறதா சொல்லியிருக்கார்”  என்று கேட்ட மாத்திரத்தில் இரண்டு கைகளையும் உயர்த்தி வாழ்த்தினார்.  காமகோடி மடம் சிருங்கேரி போல அத்தனை செல்வாக்கு இல்லை.  பெருந்தலைவர்கள் வந்து பார்த்தாலும் காசுக்கு பிரயோசனமில்லை.  புதுப் பெரியவாள் என்று சொல்லப்படும் தேஜஸ்வியான  முகம் கொண்ட அந்த இளைஞரிடம் மடத்தில் இருக்கும் ஆப்பிள் பழங்களை விட ஆப்பிள் கம்ப்யூட்டர் உபயோகமானது.  அதைப் பயன்படுத்தி ரிகார்டுகளை வேணுமெனில் சம்ஸ்க்ருதத்தில்கூட எழுதி வைத்துக் கொள்ளலாம்.  நல்ல புத்தகங்கள் பதிப்பிக்கலாம்.  உதாரணமாக ஹிந்து என்பது யார் என்பது பற்றியே பல்லாயிரம் குழப்பங்கள் உள்ளன,  அதுபற்றி எழுதலாம்.  வருமானக் கணக்கை துல்லியமாக வைத்துக் கொண்டு அனாவசிய செலவைக் கட்டுப்படுத்தலாம்  என்று சொன்ன போது ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்.  நாளந்தா போல ஒரு பல்கலைக் கழகம் காஞ்சிபுரத்தில் ‘கடிகாஸ்தானம்’ என்ற பெயருடன் முன்பு இருந்திருக்கிறது.  அதைத் திரும்ப அமைக்கத் திட்டமிட்டு நிலம் கூட வாங்கியிருக்கிறார்கள்.  1993 -ல் முடிக்க மூன்று கோடி ரூபாய் தேவைப்படும்.  அதற்கு உதவி செய்ய பெரிய மனிதர்களைக் கேட்பதில் தப்பில்லை என்றேன்.  சாந்தமாகப் புன்னகைத்தார்.


இங்கே, காஞ்சிப் பெரியவர் ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பற்றிச் சமீபத்தில் எனக்குத் தெரிய வந்த சிலிர்ப்பூட்டும் தகவல்களை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். உண்மையிலேயே பெரியவர் பெரியவர்தான்!

நாற்பது ஆண்டுகளுக்கு முன், காஞ்சிப் பெரியவரின் ஜன்ம தினத்தன்று அவரைச் சந்தித்து ஆசி பெறுவதற்காக ‘கலவை’யில் எக்கச்சக்கக் கூட்டம் திரண்டிருந்தது. அப்போது ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தன் மனைவியோடு, ஸ்வாமிகளின் தரிசனத்துக்காக முன் வரிசையில் காத்திருந்தார். அவர் கழுத்திலும், அவரின் மனைவியின் கழுத்திலும் காதிலும் தங்க நகைகள் ஏராளம் மின்னின. அவர் ஒரு பெரிய தொழிலதிபர் என்பது பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது.

பெரியவர் தம் அறையிலிருந்து வெளிப்பட்டதும், முன்னால் இருந்த அந்தத் தம்பதி மீதுதான் அவரது பார்வை விழுந்தது. அந்தத் தொழிலதிபரை, “எப்படி இருக்கே?” என்று விசாரித்தார் பெரியவர்.

அதற்கு அந்தத் தொழிலதிபர், தான் செய்து வரும் தான தருமங்கள் பற்றியும், தொடர்ந்தாற்போல் நான்கு நாட்களுக்குத் தன் சொந்தச் செலவில் இலவசமாக ஏழை பிராமணர்களுக்கு ‘சமஷ்டி உபநயனம்’ செய்து வைத்தது பற்றியும் சொல்லிவிட்டு, அது தொடர்பான கையேடுகளைப் பெரியவரிடம் காண்பித்தார். அதை வாங்கிப் பார்வையிட்ட பெரியவர், “சரி, இதுக்கெல்லாம் உனக்கு எவ்வளவு செலவாச்சு?” என்று கேட்டார். தொழிலதிபர் பெருமிதம் தொனிக்கும் குரலில், “சில லட்ச ரூபாய்கள் ஆகியிருக்கும்” என்றார்.

பெரியவர் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பின்னர், “அதிருக்கட்டும்… திருநெல்வேலில தக்ஷிணாமூர்த்தின்னு ஒரு பையன் இருந்தானே, அவன் இப்போ எப்படி இருக்கான்?” என்று சன்னமான குரலில் கேட்டுவிட்டுப் பதிலை எதிர்பாராமல் நகர்ந்து போய்விட்டார்.

தொழிலபதிபர் அப்போது அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் குமுறிக் குமுறி அழத் தொடங்கிவிட்டார். அவர் மனைவி அவரைச் சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. அதற்குள் பத்திரிகையாளர்கள் சிலர் அங்கு கூடி, அவர் ஏன் அழுகிறார் என்று விசாரித்தனர். அதற்கு அவர், “நான் அயோக்கியன்… அயோக்கியன்..!” என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டு இருந்தார். அவரை ஒருவாறு சமாதானப்படுத்தி விஷயத்தைக் கேட்டதற்கு அவர் சொன்னார்…

“எனக்கு ஒரு அக்கா உண்டு. அவள் கணவனை இழந்தவள். அவளுக்கு ஒரு பையன். அவன் பெயர்தான் தக்ஷிணாமூர்த்தி. அவர்கள் இருவரும் என் வீட்டில்தான் தங்கி வளர்ந்தார்கள். பின்னர் அக்கா காலமாகிவிட்டாள். அதன்பின் அந்தப் பையனை என் வீட்டில் வைத்திருக்க விரும்பாமல், வீட்டை விட்டுத் துரத்தி விட்டேன். அதன்பின் அவன் எங்கே போனான், என்ன ஆனான் என்று எனக்குத் தெரியாது. ‘ஊருக்கெல்லாம் சமஷ்டி உபநயனம் செய்து வைப்பதாய் பெருமை பேசுகிறாய். ஆனால், உன் சொந்தச் சகோதரி மகனை மறந்துவிட்டாய். நீ பெரிய தர்மவானா?’ என்றுதான் பெரியவர் இப்போது என்னை மறைமுகமாகக் கேட்டார். உடனடியாக அந்தப் பையனைத் தேடிக் கண்டுபிடித்து, நல்ல முறையில் வளர்த்துப் பெரியவனாக ஆக்க வேண்டியது என் பொறுப்பு!” என்றபடி தன் மனைவியுடன் கிளம்பிச் சென்றார் அந்தத் தொழிலதிபர்.

இன்னொரு சம்பவம்…

ஒருமுறை ‘திருவாடனை’ என்னும் ஊரிலிருந்து பக்தர்கள் கூட்டம் பெரியவாளைத் தரிசிக்க வந்தது. பெரியவர்கள் அன்று காஷ்ட மௌனம் இருந்தார். அதாவது, ஒரு சிறு சப்தம் கூட எழுப்பாமல், முழுமையான மௌனத்தில் இருப்பார். வருடத்தில் ஒருநாள் அவர் இப்படி காஷ்ட மௌனம் இருப்பது வழக்கம். முப்பது வருடங்களுக்கும் மேலாக அவர் கடைப்பிடித்து வந்த வழக்கம் இது. ஒருமுறை, அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி வந்த சமயத்தில்கூடப் பெரியவர் தம் மௌன விரதத்தை விட்டுக் கொடுக்கவில்லை.

அன்றைக்குத் திருவாடனை ஊரிலிருந்து வந்திருந்த பக்தர் கூட்டத்தில் சங்கரன் என்பவரும் இருந்தார். அவர் பிரிட்டிஷ் ஆட்சியின்போது தேச விடுதலைக்காகப் போராடி, ஆங்கிலேயர்களிடம் தடியடி பட்டு, இரு கண் பார்வையையும் இழந்தவர்.

மடத்துச் சிப்பந்தி ஒருவர், வந்திருந்த பக்தர் ஒவ்வொருவரையும் பெரியவாளுக்கு அறிமுகம் செய்துவைக்க, பெரியவர் மௌனமாகவே ஆசி வழங்கிக்கொண்டு இருந்தார்.

சங்கரன் முறை வந்தபோது, அவரையும் பெரியவருக்கு அறிமுகம் செய்தார் மடத்துச் சிப்பந்தி. சங்கரனை பெரியவருக்கு ஏற்கெனவே தெரியும். சங்கரனைப் பார்த்ததும் பெரியவர் உரத்த குரலில், “என்ன சங்கரா? எப்படி இருக்கே? சௌக்கியமா? உன் மனைவியும் குழந்தைகளும் நன்னா இருக்காளா? இன்னும்கூட உன்னால முடிஞ்ச வரைக்கும் தேசத் தொண்டு செஞ்சுண்டு இருக்கே போலிருக்கே?” என்று கேட்டு, ஆசீர்வதித்தார்.

சங்கரனுக்கு ரொம்ப சந்தோஷம். அதே நேரம், மடத்து சிப்பந்திகளுக்கும் மற்றவர்களுக்கும் பெரிய ஆச்சரியம்… முப்பது வருஷமாகக் கடைப்பிடித்து வரும் மௌன விரதத்தை முறித்து விட்டாரே பெரியவர் என்று!

எல்லோரும் பிரசாதம் வாங்கிக்கொண்டு அங்கிருந்து அகன்ற பின்பு, சிப்பந்திகள் தயங்கித் தயங்கிப் பெரியவரிடம் சென்று, “பெரியவா எதுக்காக மௌன விரதத்தை முறிச்சுட்டீங்க? எல்லாருக்கும் மௌனமா ஆசி வழங்கினது போலவே இந்தச் சங்கரனுக்கும் ஆசி வழங்கியிருக்கலாமே? இவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா?” என்று கேட்டனர்.

பெரியவர் புன்னகைத்தபடியே, “எல்லாரையும் போல சங்கரனை நடத்தக் கூடாது. இவனுக்குப் பாவம் கண் தெரியாது. என்னைப் பார்த்து ஆசி வாங்கணும்னு அவ்வளவு தூரத்திலேர்ந்து வந்திருக்கான். அவனால் என்னைப் பார்க்க முடியாது. நானும் மௌனமா ஆசீர்வாதம் பண்ணினேன்னா, அது அவனுக்குப் போய்ச் சேராது. நான் அவனைப் பார்த்தேனா, ஆசீர்வாதம் பண்ணினேனான்னு அவனுக்குத் தெரியாது. மனசுக்குக் குறையா இருக்கும். வருத்தப்படுவான். இந்தத் தேசத்துக்காகத் தன் கண்களை தானம் செஞ்சவன் அவன். அவனுக்காக நான் என் ஆசாரத்தை விட்டுக் கொடுத்தேன்னா ஒண்ணும் குடிமுழுகிப் போயிடாது. அதனால எதுவும் குறைஞ்சுடாது. அவனோட தியாகத்துக்கு முன்னாடி என்னோட ஆசாரம் ஒண்ணுமே இல்லே!” என்றார் நிதானமாக.

பெரியவர் வெறும் சாஸ்திர சம்பிரதாயங்களை மட்டும் வறட்டுப் பிடிவாதமாகப் பிடித்துக்கொண்டு இருப்பவர் அல்ல; அதற்கும் மேலாக மனிதாபிமானத்தை, மனித நேயத்தையே விரும்பியவர்; இந்த விஷயத்தில் மற்றவர்களுக்குத் தாமே ஒரு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் உதாரணம்!

***

நீங்களே உதாரணமாகத் திகழ்ந்துவிட்டால், பலப் பல உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டிய வேலை உங்களுக்கு மிச்சம்!

பல வருடம் பத்திரிகைத் தொழிலில் ஊறியவர்களுக்கே கூட முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் வாழ்ந்துகாட்டிய மாமனிதர்தான், அமரர் சாவி அவர்கள்.

அமரர்கள் கல்கி, வாசன், தேவன் போன்ற எழுத்துலக முன்னோடிகளோடு, சேர்ந்து பணி புரிந்ததுமல்லாமல்,

அவர்களுடைய பெருமதிப்பையும், நட்பையும் பெற்றவர். காந்தியடிகள் முதல், காமராஜர், இந்திராகாந்தி, ராஜாஜி, பெரியார், கலைஞர் கருணாநிதி வரையில், பல்வேறு, அரசியல் தலைவர்களோடு, நெருங்கி பழகியதோடு, அவர்களின், அன்பையும், ஆதரவையும் பெற்ற ஒரே பத்திரிகையாளர் திரு.சாவி அவர்கள்.

சாவி-85  நூலின் ஆசிரியர், திரு. ராணிமைந்தன், ஒரு கால் நூற்றாண்டு காலம், அமரர் சாவியோடு, நெருங்கிப் பழகி, பணியாற்றியவர்.

புகைப் படத்தில் வலது ஓரத்தில் இருப்பவர் ராணி மைந்தன்

அவருடைய முன்னுரையில், ராணிமைந்தன்  கூறுகிறார்:

” அவரோடு (சாவி) உரையாடும் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் – நான் ஒரு பத்திரிகை ஆசிரியரோடு பழகுவது போன்றே உணர்ந்ததில்லை.. ஒரு பல்கலைக் கழக நூலகத்தில் படித்துக் கொண்டிருப்பது போலவேத்தான் உணர்ந்திருக்கிறேன்.

உழைப்பு, நேர்மை, துணிவு – இந்த மூலதனம் ஒருவரை உயர்த்துமா?

உயர்த்தும் என்பதுதான் சாவியின் வாழ்க்கை…”

இந்தப் பகுதியை மேற்கோள் காட்டி, முதல்வர் கலைஞரும் தன்னுடைய முகவுரையில், நூலாசிரியரை வழிமொழிந்திருப்பது, குறிப்பாக கவனிக்கத்தக்கது.

கவிஞர் வைரமுத்து, சாவியைப் ‘பெருமைக் குரிய பெரியவர்’ என்று போற்றுகிறார்.

சாவியின், ‘வேதவித்து’, நாவலுக்கு, எழுதிய முன்னுரையில், “இந்த நாவலை நான் வாசித்தேன் என்பது பொய். இந்த நாவலுக்குள் நான் வசித்தேன் என்பதே மெய்” என்று வைரமுத்து கூறுவது மிகைப் படுத்தப்படாத முழு உண்மை.

அவரே, மீண்டும் கூறுகிறார்,

“பேராசிரியர் கல்கியை நான் பார்த்ததில்லை. அக்கிரகாரத்து அதிசய மனிதர் வ.ரா.வை நான் பார்த்ததில்லை. ஆசிரியர் சாவியிடம் இந்த இருவரையும் ஒரு சேரப் பார்க்கிறேன்…

எழுத்தாளர்..

எழுத்தாளர்களை உருவாக்கிய எழுத்தாளர்..

வாழ்க்கையின் பன்முகப்பட்ட வலிகளை – மகிழ்ச்சியை – தனது உடம்பிலும் நெஞ்சிலும் தேக்கி வைத்திருக்கும் அனுபவங்களின் கஜானா..”

எத்துணை பொருத்தமான வரிகள்…?

சாவி-85, வெறும் ஒரு புத்தகமல்ல.. எழுத்தாளராகவிரும்பும், பத்திரிகையாளராக விரும்பும், ஒவ்வொருவரும் படித்தே ஆகவேண்டிய, நோ-சாய்ஸ், கட்டாயப் பாடம்….!

·போர்த் ·பார்முடன், படிப்பை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு, பத்திரிகை தொழிலின் மேல் காதல் கொண்டு, அது ஒன்றையே, தன் மூச்சாக, இறுதிவரை வாழ்ந்த கர்ம ஞானிதான், சாவி அவர்கள்.

இந்தப் புத்தகம், ஒரு வாழ்க்கை வரலாறு போல் எழுதப்படாமல், சாவியின் அனுபவத் தொடர்போல, நகைச்சுவையுடன் எழுதப் பட்டிருப்பதே சாவி அவர்களுக்கு, சரியான ‘டிரிபியூட்’, சிறந்த முறையில் செய்யப்பட்டிருக்கும் மரியாதை..

அமரர் சாவியின் நகைச்சுவை, எல்லா தரப்பு வாசகர்களையும் ஈர்க்கக்கூடிய நகைச்சுவை.. எவரையும் புண்படுத்தாத இயல்பான நகைச்சுவை..! 100% கலப்படமில்லாத அக்மார்க் நகைச்சுவை..! அவரது முத்திரைப் படைப்பான, ‘வாஷிங்டனில் திருமணம்’, சொர்க்கத்தில் நாடகமாக இந்நேரம் அரங்கேறிக் கொண்டிருந்தாலும் ஆச்சரியப் படுவதில்லை..! சொந்த வாழ்கையின் சோகங்களையும், சுகங்களையும் சம நோக்கோடு எடுத்துக் கொண்டு, எல்லோரையும் தரமான நகைச்சுவையினாலே கவர்ந்தவர் திரு. சாவி.

ஆசிரியர், ராணிமைந்தன், திரு சாவியின் பத்திரிக்கை லே-அவுட் அறிவைப் பற்றியும், அவருடைய புதுமையான கண்ணோட்டங் களைப் பற்றியும், விவரிக்கும் போது, ‘அடடா.. இந்த மாதிரி ஒரு மனிதரோடு, சேர்ந்து பத்திரிக்கைத் தொழிலைக் கற்றுக் கொள்ளவில்லையே’ என்னும் ஆதங்கம்தான் தோன்றுகிறது.

அவருடைய ஆரம்பகால விளம்பர போர்டு எழுதும் தொழில் அனுபவமும், அவர் எழுத்தாளராக அவர் பட்ட கஷ்டங்களையும், நகைச்சுவை உணர்வோடு, சாவி அவர்கள் நினைவு கூர்ந்திருப்பதைப் படிக்கும் போது,

மனிதரின், தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியும், சாதித்துக் காட்டவேண்டும் என்னும் ஆர்வமும், நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன!

எவருக்காகவும் பத்திரிகை தர்மத்தையும், தன்னுடைய கொள்கைகளையும் விட்டுக் கொடுக்காத அவருடைய போக்கு, அவருக்கு சில நேரங்களில் பாதகமாக இருந்தாலும், பல நேரங்களில், பாராட்டுக்களையே பெற்றுத் தந்திருக்கின்றன.

காஞ்சி பரமாசாரியாரிடத்தில் மிகவும் ஈடுபாடும், பக்தியும் கொண்டிருந்தாலும், ஈரோட்டு பெரியாரைப் பாராட்டுவதிலே, அவை குறுக்கிட்டதில்லை..!

ஆனந்த விகடனின் அசகாய சூரப் பத்திரிகை ஆசிரியக் குழுவுடன் உதவி ஆசிரியராகப் பணி புரிந்தது, அவருக்கு, தி.ஜா.ரா., மாலி, துமிலன், தேவன், நாடோடி போன்றவர்களின் அறிமுகமும், நட்பு கிடைக்கச் செய்தது. உரிமையாளர் வாசனுடன் பணிபுரிந்த அனுபங்களையும், அவருடைய குருவாக அவர் போற்றிய கல்கி அவர்களுடனான அனுபவங்களையும், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை குழுவின், தினமணிக் கதிர் இப்பத்திரிகை நாட்களைப் பற்றியும், அவரது விவரிப்புகள், மிகவும் சுவாரசியமானவை.

மூதறிஞர் ராஜாஜியிடம், அவர் கற்றுக் கொண்டதாகச் சொல்லும் பாடம், ‘பிறர் எழுதிய கடிதங்களுக்கு, உடனடி பதில் போடுவது’ என்பதுதான்..

நவகாளி யாத்திரையைப் பற்றி எழுதச் சென்று, மகாத்மா காந்தியுடன் ஏற்பட்ட அனுபவம்,

தொழில் மேதை ஜி.டி.நாயுடுவுடன் நட்பு, இவற்றைப் பற்றி படிக்கும் போது, ஆஹா.. இந்த மனிதரின் ஒட்டுமொத்த வாழ்க்கையே, ஒரு பல்கலைக் கழக முதுகலை அல்லது ஆய்வுப் பட்டத்துக்கான பாடமாக இருக்கிறதே என்று வியக்காமல் இருக்கமுடியவில்லை…!

அமரர் சாவி துருவ நட்சத்திரம் போன்றவர்.. அவரது படைப்புகளால், அவரது புகழும், பெயரும், மிக நீண்ட காலத்துக்கு ஒளி வீசிக்கொண்டிருக்கும்.


நன்றி – தென்றல் மாத இதழ் – March , 2001

ஒருமுறை பெருந்தலைவர் காமராஜரும், எழுத்தாளர் சாவியும் ஊட்டியில் சந்தித்தார்கள். முதலமைச்சராக இருந்த காமராஜர், எழுத்தாளர் சாவியை அருகில் அழைத்து “ஊட்டி ஏரியை சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கும் வகையில் அழகு படுத்த வேண்டுமாம் அதை என்னை வந்து பார்க்கச் சொல்கிறார்கள். வாருங்கள் படகில் போய் வருவோம்” என்றார்.

படகு சவாரி செய்யும்போதே “ஊட்டினா.. அது பணக்காரர்களுக்கு மட்டும் உரிய இடம் என்ற நிலை இருக்கக்கூடாது. அதை ஏழைகளும் அனுபவிக்க வேண்டும். இந்த ஏரியைச் சுற்றி நிறைய மரங்கள் உள்ளன. இந்த மரங்களுக்கு நடுவே சின்ன காட்டேஜ்கள் கட்டி குறைந்த வாடைக்குக் கொடுக்க வேண்டும். சமையலுக்கு பாத்திரங்கள் கூட அரசாங்கமே கொடுத்திடனும். வாடையாக பத்து ரூபாய்க்கு மேல் வசூலிக்கக்கூடாது.

ஆனால் படு பாவிங்க இங்கே மரத்தைக் கூட வெட்டி விடுகிறார்கள். மரத்தை வெட்டக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. சட்டம் இருந்த என்ன பலன்? கலெக்டரைக் கூப்பிட்டு நல்ல சாப்பாடு போட்டு விட்டால் போதும் ‘வெட்டிக்கொள்ளுங்கள்’ எனச் சொல்லிவிடுவார்கள்” என்று மிகவும் வருத்தத்தோடு காமராஜர் சொல்லிக் கொண்டே போனார்.

படகு போய்க்கொண்டே இருந்தது. சிறிது நேரத்தில் “அதோ அங்கே பாருங்கள் இப்போதுதானே இதைப் பற்றிச் சொன்னேன்” என்றார் காமராஜர்.

அங்கே பார்த்தால்… ஒருபெரிய மரம் வெட்டப்பட்டு சாய்ந்து கிடந்தது. கலெக்டருக்கு நல்ல சாப்பாடு கிடைத்து விட்டதாக நினைத்தாராம் எழுத்தாளர் சாவி.


இயக்குனர் வசந்த்

ரிதம்

ரிதம், நான் எடுத்த படங்களில் எனக்கு அதிக நிறைவைத் தந்த படம் ..

அதிகம் சிரமப்பட்டு திரைக்கதை அமைத்ததும் அந்தப் படத்துக்காகத்தான். நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், அப்படம், எழுத்தாளர் சாவி குடும்பத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஒரே விபத்தில் கணவனை இழந்த ஒரு பெண்ணும், மனைவியை இழந்த ஒரு ஆணும் இணைவதுதான் கதை. கதையின் போக்குப் படி, இருவருக்கும், ஒருவருக்கொருவர் மீது எந்த விதமான ஈர்ப்பும் இல்லை.

ரிதம்

தொடக்கத்தில் இருந்தே இருவரும் எதிரும் புதிருமாகத் திரும்பி நிற்கிறார்கள். அங்கேயே கதை முடிந்துவிட்டது. பிறகு எப்படிக் கதையை வளர்த்துவது ? நடுவிலே வில்லனைக் கொண்டுவந்தால் செயற்கையாக இருக்கும். சின்ன சின்னதாக சம்பவங்கள்., துணைப்பாத்திரங்கள், சூழ்நிலைகள் எல்லாம் சேர்த்து, ரொம்ப சிரத்தையுடன் செய்த திரைக்கதை.

அடுத்த பக்கம் »