World Politics



வட ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு புரட்சிக்கு காரணம் 2009ல் நாமெல்லாம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது வகுக்கப்பட்ட ”இது”வாக இருக்கலாம் என்று நண்பர் ஒருவர் ஐயப் படுகிறார். அந்த “இது”  ஹில்லேரி கிளிண்டனின்  Civil Society 2.0

(ஒரு விளக்கம் – இங்கே நண்பர் என்று நான் குறிப்பிட்டது   – திரு.அருணகிரி . இவர் சொல்வனம்.காம் பத்திரிக்கையில் எழுதுபவர்.  திரு.அருணகிரி மிகவும் ஞானம் நிறந்தவர் என்பது நான் சொல்ல வேண்டியதில்லை. அவருடைய இது பற்றிய விளக்கமான கட்டுரை சொல்வனத்தில் விரைவில் வெளிவருகிறது.  சிவில் சொசைட்டி 2.0 பற்றி இந்த கோணத்தில் முதலில் பார்த்தவர் இவரே. )

 

5 மில்லியன் டாலர் பைலட் ப்ரொகிராமில் தொடங்கிய ”மாணியம்” (நம் ஊரில் இதற்கு ஒரு நல்ல பெயர் உண்டே? என்ன சார் அது?) அமோகமாக வேலை செய்கிறது.

பரவாயில்லை இரண்டு வருடத்தில் வேலை மும்மரமாகத் தான் நடந்திருக்கிறது.

முழுச் செய்தி

03 November 2009

State Department on Civil Society 2.0 Initiative

Initiative to help grassroots organizations use digital technology

(begin text)

U.S. DEPARTMENT OF STATE
Office of the Spokesman
For Immediate Release
November 3, 2009

MEDIA NOTE

Secretary Clinton Announces Civil Society 2.0 Initiative to Build Capacity of Grassroots Organizations

In her remarks today to the Forum for the Future, Secretary Clinton announced Civil Society 2.0, which will help grassroots organizations around the world use digital technology to tell their stories, build their memberships and support bases, and connect to their community of peers around the world.

Building the capacity of grassroots civil society organizations will enable them to do the work that, in the past, Western NGOs and governments have done. With increased capacity, communities are better able to initiate, administer and sustain their own programs and solutions to shared problems.

“Civil Society 2.0” includes the following components:

1. Deploying a team of experienced technologists to work with civil society organizations around the globe to provide training and support to build their digital capacity. The competencies developed in the trainings will include:

• How to build a website

• How to blog

• How to launch a text messaging campaign

• How to build an online community

• How to leverage social networks for a cause

2. Partnering these technologists with local civil society organizations and governments to develop and implement technology-based solutions to local problems.

3. Publishing interactive “how to” programs and curriculum online to help organizations that do not have access to in-person assistance.

4. Creating a curated open platform that allows any citizen or company to develop, share or suggest content for the curriculum.

5. Allocating $5 million in grant funds for pilot programs in the Middle East and North Africa that will bolster the new media and networking capabilities of civil society organizations and promote online learning in the region.

The United States is a strong supporter of civil society around the world. Civil society activists and organizations work to improve the quality of people’s lives and protect their rights, hold leaders accountable to their constituents, shine light on abuses in both the public and private sectors, and advance the rule of law and social justice. They are key partners for progress.

The Forum for the Future is a joint civil society initiative of the countries of the Broader Middle East and North Africa region (BMENA) and the Group of Eight (G8).  It brings together leaders from government, civil society and the private sector to exchange ideas and form partnerships to support progress, reform, and expanded opportunities for the people of the region.


(ராஜனின் கட்டுரை என் சிந்தனையைத் தூண்டியது. இதைப்பற்றி எழுதிக் கொண்டே போகலாம். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் முயற்ச்சிக்கிறேன்)

தன் நாட்டிற்கு தேவையானவை நிறைவேறுவதற்க்கு இடைஞ்சலாக இருக்கும் பிற நாடுகளை தண்டிக்கவேண்டும் என்பது எல்லா நாடுகளுக்கும் இருக்கும் ஆவல் தான். சில நாடுகளால் முடியும். பிற சில நாடுகளால் முடியாது. இன்று எஞ்சிய ஒரே வல்லரசாக இருக்கும் அமெரிக்காவால் இதுவரை சர்வ சாதரணமாக பிற நாடுகளின் மீது படையெடுக்க முடிந்திருக்கிறது. போரிடுவதற்கு முன் அவர்களுக்கு இருக்கும் பிரச்சனை எதிரி நாடல்ல. தன் நாட்டிற்க்குள் இருக்கும் காங்கிரஸ் தான். கேப்பிட்டால் ஹில் அனுமதிக்கு பிறகு தான் எதுவும் செய்ய முடியும் என்ற ஒரு நிலை இருந்து வந்திருக்கிறது. கால காலமாய் நிர்வாகச் சிறகிற்க்கும், சட்டச் சிறகிற்க்கும் பிரச்சனைகள் இருந்தாலும், சட்டச் சிறகை உரிய மரியாதையுடன் நடத்தியும், வீட்டோ பலத்தை விரயமாக்காமலும், தக்க விவாதங்களுக்குப் பிறகே வழி வழியாக வந்த குடியரசுக் கட்சிகளும், ஜனநாயக கட்சிகளும் பிற நாடுகளின் மேல் போர் தொடுத்திருக்கிறது. 60களின் இறுதிகளில் ஜனநாயக கட்சியின் லிண்டன் ஜான்சன் நடத்திய வியட்நாம் போர், அதற்கு பின் 90களின் ஆரம்பங்களில் குடியரசு கட்சியின் முதலாம் ஜார்ஜ் புஷ் ஈராக்கில் நடத்திய ”ஆப்பரேஷன் டெஸர்ட் ஸ்ட்ராம்”  ஆகியவைகள் கூட இந்தக் கோட்பாடுகளை மீறவில்லை. சட்டச் சிறகில் இருக்கும் சில நல்ல இதயங்கள் எப்பொழுதுமே அமெரிககாவின் அநீதியான போர்களுக்கு உடன் படாமல் முட்டுக் கட்டை போட்டு வந்திருக்கிறார்கள். அதனால் தான் தினந்தோறும் ஒரு போர் என்று அமெரிக்கா கிளம்பி விடாமல் தடுக்க முடிந்து வந்தது. ஆனால் சமீப காலங்களில் காங்கிரஸிர்க்கு அழுத்தங்கள் கொடுக்கும் ஒரு சில யுக்திகளை கையாண்டு வந்திருக்கிறது நிர்வாகச் சிறகு. இந்த அழுத்தங்களின் முன் வாயில்லா பூச்சியாக படிந்து போகும்படி சட்டச் சிறகின் கட்டுப்பாடு மற்றும் சமன்படுத்தும் இயந்திரம் பழுது அடைந்து வருகிறது.

(Operation Desert Storm - Courtesy - Wikipedia)

அடுத்தக் கட்ட இடைஞ்சல் பன்னாட்டு மன்றம். அமெரிக்க நிற்வாகச் சிறகு பன்னாட்டு மன்றத்தை ஒரு கிள்ளுக் கீரையாகவே மதித்து வந்திருக்கிறது. அமெரிக்காவை பொறுத்தவரை பன்னாட்டு மன்றம் என்ற அமைப்பு ஒரு உணவு விநியோக இயக்கமே. அமெரிக்கா பன்னாட்டு மன்றத்திற்கு அதற்கு மேல் எந்த ஒரு அதிகாரத்தையும் விட்டுக் கொடுக்க தயாரில்லை. 2001 இறுதியில் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ”பன்னாட்டு மன்றம் ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் அமெரிக்கா ஈராக்கின் மேல் படையெடுக்கும்” என்று திட்ட வட்டமாக கூறியதும் இன்றைய கால பன்னாட்டு மன்ற பாதுகாப்பு மன்றத்தின் இயலாமை வெட்ட வெளிச்சத்திற்கு வந்து விட்டது. அன்றைய செக்ரட்டரி ஜெனரல் கோஃபி ஆனன் இதை வெளிப்படையாகவே கூறிவிட்டது நினைவிருக்கலாம். அப்படியென்றால் பன்னாட்டு மன்றத்தின் பணிகள் மிகவும் சுறுக்கபட்டுவிடுகிறதா? இது இயற்க்கையாக நடந்து வருகிறதா? இல்லை திட்டமிட்ட சதியா? இறுதியில் பன்னாட்டு மன்றம் அதன் எல்லா அதிகாரங்களையும் இழக்கச் செய்து, அதனை “லீக் ஆஃப் நேஷன்ஸ்”க்கு நேர்ந்த முடிவிற்க்கு தள்ளி விடுவதே உறுப்பு நாடுகளின் எண்ணமா? அதுவும் அமெரிக்காவின் நடவடிக்கைகளைப்ப் பார்க்கும் பொழுது சதியாக இருக்கலாம் என்பது  நம்பும் படியாகவே உள்ளது.

பன்னாட்டு மன்றம் பல விதங்களில் அமெரிக்க வெளியறவு கொள்கைகள், குறிப்பாக குடியரசு கட்சியின் கொள்கைகள், மேலும் குறிப்பாக ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சிக் கொள்கைகள் மற்றும் ஆசை, அமிலாஷைகளிற்கு நடுவே இடைஞ்சலாக நின்று கொண்டு வந்திருக்கிறது. இந்தப் பிரச்சனைகளை அடியோடு வேறறுக்க ரீகன் காலம் முதல் பல அலோசனை-குழு (think-tank) சிந்தித்துக் கொண்டு தானிருந்தார்கள். 1997ல் அதற்க்காக ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதற்கு Project for the New American Century (PNAC) என்று பெயர். (Project Manhattan என்று அணுகுண்டு தயரிப்பிற்கு ஒரு பெயர் இருந்தது நினைவிருக்கலாம்.  PNACக்கும் ஒருவிதத்தில் ஒரு பெரிய அணுகுண்டு தான்). குடியரசு கட்சியின் நியோ-கான் குழு 2006 வரையில் மிகவும் மும்மரமாக இந்த ஏற்ப்பாட்டில் செயல் பட்டு வந்தது. டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட், டிக் ஷெய்னி, பால் உல்ஃபாவிட்ஸ், பில் கிஸ்டால் மற்றும் பலர் இதன் மைய அச்சு. அவர்கள் கொளகை “குளொபலைசேஷன்” (வர்த்தக கண்ணோட்டத்தில் அல்ல – அரசியல் கண்ணோட்டத்தில்; ஆனால் வர்த்தகம் உள்ளடங்கியது). அதாவது அமெரிக்கா மேலே, மற்ற நாடுகளெல்லாம் அமெரிக்காவின் கீழே. இதன் அர்த்தம் என்ன வென்றால் உலகை ஆள ஒரு மைய அரசே இருக்கவேண்டும். அந்த மைய அரசு அமெரிக்கா. மற்ற நாடுகளெல்லாம் அமெரிக்கா சொல்வது போல் கேட்டு அதன் படி எதிர்ப்பின்றி நடக்க வேண்டும். அப்படி ஒரு ”வேர்ல்ட் ஆர்டர்” வந்தால் செல்லாக் காசாகிப் போய்கொண்டிருக்கும் பன்னாட்டு மன்றத்திற்கு நிரந்தர ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடலாம், தன் இஷ்டப்படி ஆடலாம், தன் இஷ்டப்படி பிற நாடுகளைஆட்டி வைக்கலாம் என்பது அமெரிக்காவின் கனவு. இது பகல் கனவல்ல. பீதியை விளைவித்த ஒரு உண்மை. இதைச் செயலாக்கும் முதல் திட்டமே எப்பாடு பட்டாவது ஜார்ஜ் புஷ்ஷை ஜனாதிபதி ஆக்குவது என்பது என் யூகம். அதன் பிறகு நடந்த செப்டம்பர் 11, 2001 திவிரவாத சம்பவங்கள் இவர்களுக்கு ஒரு நல்ல தொடக்கமாக இருந்தது. வர்த்தக பலத்திற்கு ஈராக்கின் எண்ணெய், ஈரானை முற்றுகையிடல் , ஏன் அணைத்து மத்தியக் கிழக்கு நாடுகளையுமே கைக்குள் கொண்டு வருதல், வட கொரியாவை அடக்குதல் எல்லாம் இதன் பரந்த திட்டங்களின் சில பகுதிகள் தான். சேச்சன்ய தீவிரவாதத்தின் மூலம் ரஷ்யாவிற்கு தலைவலி கொடுத்தல, யுக்ரெய்ன் நாட்டின் உள் நாட்டு குழப்பத்திற்கு துணைபோதல் எனறு பல இடஙகளில் அமெரிக்க கைவைக்கும் பொழுதெல்லாம் PNAC பார்வையில் பார்த்தால் எல்லாவற்றிற்கும் ஒரு உள்ளார்த்தம் இருப்பதாக தோன்றும்.


ராஜன் எங்கள் நண்பர். மிக விவரம் தெரிந்தவர். அவர் இங்கே பல கட்டுரைகள் எழுதியுள்ளார். சமீபத்தில் அவரது ”அமெரிக்க போர்களும் விளைவுகளும்: கடந்த பத்தாண்டு- ஒரு பார்வை: ராஜன் சடகோபன்” என்ற தலைப்பில் தினமலர் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. மிக தெளிவாகவும், அபாரமான தகவல்களுடனும் தொகுத்து வழங்கியுள்ளார். அமெரிக்க போர்களை பற்றி தெரியாதவர்கள் “catch up” செய்து கொள்ள ஒரு அருமையான சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்.

படித்துப் பாருங்கள். விரைவில் அது பற்றிய கட்டுரைகள் இங்கேயும் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.


animalfarm
வெகு நாட்களாக இந்த புத்தகத்தை படிக்கவேண்டும் என்று ஒரு ஆவலிருந்தது. RVயிடம் புத்தகத்தை கேட்டிருந்தேன். ஓவ்வொரு முறையும் அவனிடமிருந்து விடைபெறும் பொழுது மறந்து விடுவேன். என்னுடைய பெண் பிருந்தாவிற்கு இலக்கிய வகுப்பிற்க்காக பள்ளியில் இந்த புத்தகம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதை அவள் படித்து முடித்தும் நான் எடுத்துக் கொண்டேன். அவள் ஒரு எச்சரிக்கை கொடுத்தாள். “Daddy, don’t read the introduction, it will give away the story” என்றாள். நானும் அதை முழுமையாக ஏற்றுக் கொண்டு பிரிஃபேஸ், இண்ட்ரொடக்‌ஷன் இரண்டையும் விட்டு விட்டு படிக்கத் தொடங்கினேன். பின்னர் அவை இரண்டையும் படித்து சரி பார்த்தேன். பிருந்தா சொன்னது ஓரளவு சரியாகத்தானிருந்தது. கதையில் வரும் மேஜர், ஸ்னோபால், நெப்போலியன் கதாபாத்திரங்களை நிஜபாத்திரங்களுடன் உடனே அடையாளம் கண்டுகொண்டேன். இன்னும் சில பாத்திரங்களையும் கண்டு கொள்ளமுடிந்தது. சில பாத்திரங்களை கண்டுபிடிக்கமுடியவில்லை.

பண்ணை வைத்திருக்கும் மிஸ்டர்.ஜோன்ஸை எதிர்த்து பண்ணை மிருகங்கள் புரட்சி செய்து பண்ணையின் நிலைமையை மாற்றிய கதை.  இது காலத்தினுடன் சேர்த்து பார்த்து படித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். இப்பொழுது படிப்பவர்களுக்கு எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும் என்று தெரியவில்லை. ரஷ்யப் புரட்சி, கம்யூனிஸம், கார்ல் மார்க்ஸ், லெனினின், ஸ்டாலின், ட்ராட்ஸ்கி ஆகியவர்களின் மேல் நாட்டமுள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த இலக்கியம்.

ஜார்ஜ் ஆர்வெல் கலையையும், அரசியலையும் பிணைத்து அழகான இலக்கியமாக Animal Farmஐ நமக்கு வழங்கியுள்ளார். இன்றைய காலத்தில் ”அரசியலில் இதெல்லாம் சகஜம்” என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் 1920-1950 காலகட்டங்களில் புரட்சி மலர்ந்தால் நமக்கு தினம் விருந்து என்று கனவு கண்டு கொண்டிருந்த பல கோடி மக்களுக்கு அரசியல்வாதிகளின் அந்தர் பல்டிகள் மிகுந்த ஏமாற்றமாகியிருக்கலாம். இன்று இருக்கும் நமக்கு அரசியல்வாதிகள் செயல்கள் இவ்வளவு ஏமாற்றம் அடைய செய்யாது. ஏனென்றால் அன்றைய காலத்தை விட இன்று அரசியல்வாதிகள் நிறையவே மக்களை தலையில் மிளகாய் அரைத்து மொட்டையாக்கி விட்டார்கள். ஏதாவது கொஞ்சம், நஞ்சம் முடி இருந்தாலும் அதையும் திருடி விற்று காசு பார்த்துவிடுவார்கள். இதனால் மக்கள் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை கேட்டும், செயல்களை பார்த்தும் தங்கள் மொட்டை தலையை தடவிப் பார்த்து பழகிக் கொண்டார்கள்.

இன்று Animal Farmஐ இலக்கிய ஆர்வத்துடன் படிப்பவர்களுக்கு, இது இன்றும் மகிழ்வூட்டும் ஒரு புத்தகம். மிருகங்களின் ஏழு கட்டளைகள் (மோசஸின் 10 கட்டளைகளை போல்), Beasts of England என்ற கவிதை எல்லாம் நல்ல தமாஷ்.

அதிகம் கதையை சொல்லவேண்டாம் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். புத்தகத்தை ஆன்லைனில் படிக்க விரும்புவோர் இங்கே சொடுக்கவும்.