இரண்டு மூன்று நாட்களுக்கு முன் சுப்ரமணிய சாமி சிலிகான் பள்ளத்தாக்குக்கு வந்திருந்தார். அவரோடு நண்பர் வீட்டில் நாலைந்து பேர் சந்தித்தோம். பிறகு அவரோடு ஒரு ரெஸ்டாரண்டில் ஒரு முப்பது பேர் சேர்ந்து இரவு உணவு. அடுத்த நாள் அவரது பேச்சு மற்றும் கேள்வி பதில் செஷன் ஒன்று. ஒரு அறுபது எழுபது பேர் வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர் இன்னொரு உரை ஆற்ற சென்று கொண்டிருந்தார். ஏற்பாடு செய்திருந்த பாரதி தமிழ் சங்கம், அதன் தலைவர் ராகவேந்திரன், நண்பர் ராஜன் எல்லாருக்கும் நன்றி!
சாமி கேலிக்குரிய விதத்தில் பேசுபவர் (இன்னும் கடுமையான வார்த்தைகளை நீங்கள் சுலபமாக யூகிக்கலாம்), இந்திய அரசியலில் ஒரு irrelevant ஆளுமை என்றுதான் எனக்கு ஒரு பிம்பம் இருந்தது. இல்லை. நிச்சயமாக இல்லை. அதிபுத்திசாலி. இந்திய அரசியலை மாற்ற தன்னால் முடிந்த எல்லா விதத்திலும் போராடுபவர், ஆனால் போராடும் வழிகளில் காம்ப்ரமைஸ் செய்து கொண்டிருக்கிறார் என்றுதான் இப்போது தோன்றுகிறது. அவருடைய காம்ப்ரமைஸ்களைப் பற்றி எனக்கு கடுமையான விமர்சனம் இருக்கிறது.
எனக்கு சாமியின் “கொள்கைகள்” பற்றி இதற்கு முன்னால் எதுவும் தெரியாது. உண்மையை சொல்லப் போனால் நான் சாமியை சீரியஸாக எடுத்துக் கொண்டதே இல்லை. காமெடி பண்ணிக்கொண்டிருக்கிறார் என்று நினைப்பு, அதனால் அவர் எழுதிய கட்டுரை ஏதாவது கண்ணில் பட்டாலும் படிப்பதில்லை. சுப்ரமணிய சாமி என்ற பேரைப் பார்த்தாலே தானாக ஸ்விட்ச் ஆஃப். ஆனால் வினவு தளத்தில் முதல் முதலாக நான் சண்டை போட்டது அவர் மேல் முட்டை வீச்சு சம்பவம் நடந்து, அதற்கு அவர்கள் ஆஹா! ஜனநாயக முறைப்படி, மக்கள் விருப்பத்தை சாமி மேல் முட்டை வீசி நிறைவேற்றினோம் என்று முட்டாள்தனமாக குதித்தபோதுதான். சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடக் கூடாது என்று சொல்ல எந்த தீட்சிதருக்கும் உரிமை இல்லை என்று நான் உறுதியாக கருதுகிறேன். ஆனால் தீட்சிதர்களுக்கு அந்த உரிமை உண்டு என்று சொல்லவும் எல்லாருக்கும் கருத்துரிமை உண்டு; அப்படி சொல்பவர்கள் மேல் முட்டை வீசுபவர்கள் தண்டனை அடைய வேண்டியவர்களே என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதனால் எனக்கு அவரது கருத்துகளைப் பற்றி தெரிந்த ஒரே விஷயம் அவர் தீட்சிதர்கள் கண்ட்ரோலில்தான் சிதம்பரம் கோவில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்பது மட்டுமே. சரி அதைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதையாவது புரிந்து கொள்வோமே என்று நினைத்துதான் போனேன்.
அவருக்கு எழுபது வயது இருக்கும் என்று நினைக்கிறேன். டையோ என்னவோ, தலை நிறைய கறுபபு முடி. (நான் புதிதாக ஒரு ஆணை சந்தித்தால் தலையில் எவ்வளவு முடி இருக்கிறது என்றுதான் முதலில் பார்ப்பேன். சொந்தக் கதை சோகக் கதை.) ஐந்தரை அடி உயரம் இருக்கலாம். தொந்தி தொப்பை இல்லை. சிரித்த முகம். மேட்டுக்குடி ஆள் என்று தோன்ற வைக்கும் முகம், நிறம், தோற்றம், நடை உடை பாவனை. அதிரடி பேச்சு. குரல் கொஞ்சம் ஓங்கி ஒலிக்கிறது. கேள்விகள் எரிச்சல் மூட்டும்போது எரிச்சலை polished ஆக வெளிப்படுத்தும் லாவகம். தான் ஒரு பெரிய மனிதர், முன்னாள் மந்திரி என்றெல்லாம் எந்த வித hangup-உம் இல்லை. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எடுத்த ஒரு ஃபோட்டோவை காட்டினார். அதில் அவர் பாடம் நடத்துகிறார், போர்டில் என்னவோ சிக்கலான ஈக்வேஷன்கள். நான் ஈக்வேஷன்கள் சிக்கலாக இருக்கிறது என்று ஒரு சம்பிரதாய கமென்ட் விட்டேன். அவர் ஓ அதெல்லாம் வெறும் ஐகன் வால்யூக்கள் என்று சொன்னார். ஐகன் வால்யூ பற்றி தெரிந்த ஒரு அரசியல்வாதியா என்று எனக்கு கொஞ்சம் புல்லரித்தது!
நோபல் பரிசு வென்ற பால் சாமுவெல்சனின் மாணவர். சாமுவெல்சனோடு இணைந்து பேப்பர்கள் எழுதிய ஐந்து பேர்களில் ஒருவர். சாமுவெல்சன் இவர் அடுத்த ஜெனரேஷனில் பேசப்படும் எகானமிஸ்டாக வருவார் என்று சொல்லி இருக்கிறாராம். கோடைக் காலத்தில் ஹார்வர்டில் ஒரு Mathematical Methods for Economics என்று ஒரு கோர்ஸ் நடத்துகிறாராம். சிலபஸில் Calculus of Variations , Multivariate Calculus எல்லாம் உண்டாம். கேட்கவே சந்தோஷமாக இருந்தது. ஆனால் இது ஒரு undergraduate கோர்ஸ் என்றுதான் நினைக்கிறேன். இதை நடத்த பெரும் மேதையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை நடத்த ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஏன் இந்தியாவிலிருந்து ஒருவரை வரவழைக்க வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. என்னவோ.
வந்தபோதே களைத்திருந்தார். ஒரு பத்து நிமிஷம் தூங்கினார். பிறகு எழுந்து வந்தவர் எங்களுடன் பேச ஆரம்பித்தார். பல அதிரடி கேள்விகளை கேட்டார் – சோனியா காந்தி தான் கேம்ப்ரிட்ஜில் படித்தவர் என்று பொய் affidavit தாக்கல் செய்திருக்கிறாராம், ஆனால் அதை ஊடகங்கள் அமுக்கிவிட்டனவாம். மிட்ரோகின் என்ற கேஜிபி அதிகாரி சோனியா கேஜிபியிடம் பணம் வாங்கினார் என்று எழுதி இருக்கிறாராம். ஆனால் பா.ஜ.க. அரசு கூட அதைத் தோண்ட மறுத்துவிட்டதாம். இப்படி பல விஷயங்களை சொன்னார். ஏன் பா.ஜ.க. அரசு இவற்றை பயன்படுத்தி சோனியா காந்தியை ஒழிக்காமல் விட்டுவிட்டது என்று கேட்டேன். இதற்கு பதில் சொன்னால் நீங்கள் யாரும் நம்பமாட்டீர்கள் என்று சொல்லிவிட்டு அதற்கு மேல் அதைப் பற்றி பேச மறுத்துவிட்டார்.
பதிவு நீண்டுகொண்டே போவதால் இங்கே நிறுத்திக்கொண்டு ரெஸ்டாரண்டில் என்ன பேசினார் என்று நாளை தொடர்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: அரசியல், ஆளுமைகள்
தொடர்புடைய பதிவுகள்:
தொடர் பதிவின் பகுதி 2, பகுதி 3, , பகுதி 4
சிலிகான் பள்ளத்தாக்கில் சுப்ரமணிய சாமி
சுப்ரமணிய சாமி பற்றிய விக்கி குறிப்பு
சுப்ரமணிய சாமியை கிண்டல் அடித்து நான் எழுதிய ஒரு பதிவு, இன்னொரு பதிவு (சாமி என்னை மன்னிப்பாராக!)
பாரதி தமிழ் சங்கம்
ஜூன் 28, 2010 at 6:54 முப
>>அவருக்கு எழுபது வயது இருக்கும் என்று நினைக்கிறேன்.
b. 15 September 1939
>>சோனியா காந்தி தான் கேம்ப்ரிட்ஜில் படித்தவர் என்று பொய் affidavit தாக்கல் செய்திருக்கிறாராம், ஆனால் அதை ஊடகங்கள் அமுக்கிவிட்டனவாம்.
He has been a bitter critic of Ms. Sonia Gandhi, the foreign-born President of the Indian National Congress and his Janata Party’s web site http://www.janataparty. org has an article titled “Do You Know Your Sonia?, an article with a lot of facts about Ms.Sonia. Surprisingly, Sonia never dared to challenge Dr.Swamy in court.
http://janataparty.org/sonia.html
ஜூன் 28, 2010 at 5:42 பிப
சுட்டிக்கு நன்றி, ஸ்ரீனிவாஸ்!
ஜூன் 28, 2010 at 6:05 பிப
ஆர் வி
நீங்கள் மாலையில் ஹெச் பி யில் நடந்த கூட்டத்திற்கு வந்திருக்க வேண்டும் அருமையானதொரு பேச்சாக இருந்தது. இந்தியா, சீனா இரு நாடுகளின் பலம், பலவீனம், எங்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், எங்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் அவர்களை எப்படி அணுக வேண்டும் என்பதெல்லாம் குறித்து மிக அருமையான ஒரு உரையாக இருந்தது. பதிவிற்கும் உங்கள் ஆதரவுக்கும் நன்றி. மாலையில் சந்திக்கிறேன்
அன்புடன்
ராஜன்
ஜூன் 29, 2010 at 4:34 பிப
ஆர் வி,
அருமையான கட்டத்தில் தொடரும் போட்டு விட்டீர்களே…..
ரெஸ்டாரண்டில் அவர் பேசியதையும், மறுநாள் Milpitas பேச்சையும் உங்கள் வார்த்தைகளில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்…..
ஜூன் 30, 2010 at 2:01 முப
சுவாமி தன்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் அரசியல் செய்கிறார் என்று நினைக்கிறேன்.எவ்வளவோ மோசமான பேர்வழிகள் இருக்கையில் ஹெக்டேயை குறி வைத்து தாக்கி பதவியை விட்டு இறக்கினார். யோகியமான மனிதர்தான் போலும். மொத்தத்தில் வித்தியாசமான personality .
ஜூலை 2, 2010 at 4:02 முப
ஆர் வி,
எனது கருத்துக்கள் பொதுவாக எல்லோராலும் அமோதிக்கபடும் என்று நம்புகிறேன், இந்தியாவை பொறுத்த வரை ஒரு வக்கீல் நாட்டிற்கே நிதி அமைச்சர் ஆகலாம், அரசியலுக்கு முக்கிய தகுதி சினிமா என்று நினைப்பது, தான் தேர்தலில் தோல்வி அடைந்ததுக்கு காரணம் தன்னிடம் டிவி சேனல் இல்லை என்று சொன்னதை தலையங்கமாக பிரசுரிப்பது, மின்சாரமே இல்லாத வீட்டுக்கு இலவச டிவி அளிப்பது, ஒருவரை தாக்கி பேசி அதன் மூலம் நெகடிவ் போபுலரிட்டி தேடுவது, இப்படி பல சொல்லலாம் இதில் சுவாமி தன்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் அரசியல் செய்கிறார் என்று knvijayn சொன்னதில் எந்த தவறும் இல்லை என்றே கருதுகிறேன்.
ஜூலை 2, 2010 at 5:39 பிப
ராஜன், ஸ்ரீனிவாஸ், விஜயன், reachvino, மறுமொழிக்கு நன்றி!
நவம்பர் 28, 2010 at 8:32 முப
[…] மனிதரின் மேல்? சிறிது நாட்கள் முன் கூட்டாஞ்சோறு வலை தளத்தில் சுப்ரமணிய… பற்றிய ஒரு பதிவு வெளியிடப்பட்டது. RV […]
மார்ச் 16, 2015 at 12:00 முப
[…] கொண்டிருப்பதாக மன்மோகனிடம் சுப்ரமணிய சுவாமி புகார் […]
மே 16, 2021 at 9:00 பிப
[…] வருஷம் ஜெயின் கமிஷன், சந்திரசாமி சதி, சுப்ரமணியசாமியின் “திடுக்கிடும்” […]
நவம்பர் 18, 2022 at 11:30 முப
[…] வருஷம் ஜெயின் கமிஷன், சந்திரசாமி சதி, சுப்ரமணியசாமியின் “திடுக்கிடும்” […]