ஒவ்வொரு வருஷமும் சிஎன்என் தளம் ஹீரோக்கள் என்று சமூக சேவை செய்யும் சிலரை ஷார்ட்லிஸ்ட் செய்யும். இந்த முறை மதுரையை சேர்ந்த 29 வயது நாராயணன் கிருஷ்ணன் இந்த லிஸ்டில் இருக்கிறார்.
கிருஷ்ணன் தெருவிலே அலையும் மனநிலை பிறழ்ந்த, முதியவர்களுக்கு எட்டு வருஷமாக உணவளிக்கிறார். மதுரையின் பாலங்களுக்கு அடியே இப்படிப்பட்டவர்களைத் தேடித் தேடிப் பிடித்து உணவளிக்கிறார். ஒரு நாளைக்கு சராசரியாக நானூறு பேருக்கு சாப்பாடு போடுகிறாராம். பணம்? அவருடைய அக்ஷயா ட்ரஸ்டுக்கு வரும் நன்கொடைகள், தனக்கு சொந்தமான ஒரு வீட்டின் வாடகை, அப்பா/அம்மாவின் ஆதரவு இவைதான் ஆதாரம். அக்ஷயா ட்ரஸ்டிலிருந்து அவருக்கு சம்பளம் எதுவும் கிடையாது.
அவர் உதவியால் சாப்பிடுபவர்கள் பலருக்கு அவர் யாரென்று தெரியாது, நன்றி என்று கூட சொல்ல முடியாது. பல சமயம் அவரிடம் கோபப்படுவார்களாம். சாதாரணமாக உதவி செய்யும்போது நன்றி என்று சொல்லும் ஒரு வார்த்தை நம்மை கொஞ்சம் ஊக்கப்படுத்தும். அது கூட இல்லை!
முடிந்தால் பண உதவி செய்யுங்கள். இல்லாவிட்டால் சிஎன்என் தளத்துக்கு சென்று அவருக்கு ஓட்டாவது போடுங்கள். அவர் வென்றால் இன்னும் கொஞ்சம் நன்கொடைகள் கிடைக்கலாம்!
தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்
தொடர்புடைய சுட்டிகள்:
அக்ஷயா ட்ரஸ்ட்
சிஎன்என் தளத்தில் நாராயணன் கிருஷ்ணன்