தமிழ் ஹிந்து தளத்துடன் எனக்கு சில கருத்து வேறுபாடுகள் உண்டு. அவர்கள் கொஞ்சம் paranoid ஆக இருக்கிறார்கள், இஸ்லாமிய கிருஸ்துவர்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள் என்பது என் கருத்து. ஆனால் ஒரு நல்ல நண்பர் சொல்லும் சில விஷயங்கள் அதிர்ச்சியாகத்தான் இருக்கின்றன. அவர் பெயரை சொல்வதை அவர் விரும்புவதில்லை. (திராவிட கழக ஆட்கள் ரௌடிகள் அவரை அடிக்க ஒரு முறை தேடி இருக்கிறார்களாம், அதனால் அவர் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க விரும்புகிறார்.) அதனால் அவரை நல்ல நண்பர் என்றுதான் குறிப்பிட முடிகிறது.
ஆனால் ஏமாற்றி மத மாற்றம் செய்வதைப் பற்றி எனக்கும் அவர்களுக்கும் ஒரே கருத்துதான். திராவிட இயக்கத்தைப் பற்றி அங்கே சொல்லப்படும் தகவல்கள் (கவனிக்கவும், தகவல்கள்; அவர்களது கருத்துகள் இல்லை) திராவிட இயக்கம் மற்றும் பெரியாரின் தலையை சுற்றி ஒரு ஒளி வட்டம் (halo) உருவாக்க தமிழகத்தில் எடுக்கப்படும் முயற்சிகளை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. என்னுடைய கருத்தில் பெரியாரே – a straightforward and transparent man – அப்படிப்பட்ட முயற்சிகளை விரும்பமாட்டார்.
போகப் போகத் தெரியும் நல்ல முயற்சி. அது பல தெரியாத தகவல்களைத் தருகிறது. சுப்பு என்பவர் எழுதி இருக்கிறார். இணையக் கட்டுரைகளை இப்போது தொகுத்து புத்தகமாகப் போடுகிறார்களாம். என்னை மாதிரி கஞ்சப் பிசினாரிகள் இணையத்தில் இங்கே படிக்கலாம்.
எனக்கு நினைவிருக்கும் சில:
- வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்கு தமிழ் நாட்டில் பொதுவாக நினைப்பது போல பெரியது இல்லை என்பதை பல பகுதிகளில் எழுதி இருக்கிறார். இதைப் பற்றி சமீபத்தில் ஜெயமோகனும் எழுதி (பகுதி 1, பகுதி 2) இருந்தார். குறிப்பாக கேரளத்தில் அப்படி நினைக்கப்படுவதில்லை என்று சொல்லி இருந்தார். வைக்கத்தைப் பற்றி திராவிட இயக்கத்தினரை விட மலையாளிகளுக்குத்தான் அதிகம் தெரியும் என்பதை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். 🙂
- சுயமரியாதைத் திருமணம் என்று பலமாக பிரச்சாரம் செய்த பெரியார் மணியம்மையை சுயமரியாதைத் திருமணம் செய்துகொள்ளவில்லை. பதிவுத் திருமணம்தான் செய்துகொண்டார்.
- சேரன்மாதேவியில் வ.வே.சு.ஐயர் ஒரு குருகுலம் அமைத்தார். அதற்கு காங்கிரஸ் ஐயாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்தது. ஆனால் அங்கே இரண்டு பிராமணச் சிறுவர்கள் மற்ற ஜாதி சிறுவர்களோடு ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட வேண்டாம் என்றாம் ஐயர் அனுமதி கொடுத்திருந்தார். அது பெரிய விஷயமாக வெடித்து பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார். இதைப் பற்றி இரு தரப்பு வாதங்களும் பல பதிவுகளில் பேசப்பட்டன.
எனக்கு பிடித்த சில பதிவுகள் பற்றி மேலும்:
பகுதி இரண்டில் சுவருக்குள் சித்திரங்கள் என்ற ஜூவி தொடரைப் பற்றி எழுதுகிறார். அதில் மாணிக்கம் கவுண்டரின் கடைசி வார்த்தைகள் ஒரு அருமையான சிறுகதை படித்த உணர்வைத் தருகின்றன. அமெரிக்காவில் நாலு மாடி வீடும், எட்டு மெர்சிடஸ் காரும், பாங்கில் பத்து மில்லியன் டாலரும் இருந்தாலும் கொசு கடிக்கும் மாம்பலம்தான் என் ஊர் என்ற ரேஞ்சில் யாரோ ஒருவர் “கவிதை” எழுதி இருந்தார். அந்த மாதிரி இருக்கிறது.
பதிவு 28: வீரமணியை சோ கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களும் தவறானவையே என்று சொல்ல வைக்க ததிங்கினத்தோம் போட்டுப் பார்க்கிறார், முடியவில்லை. ஆனால் என் நெருங்கிய நண்பன் தங்கமணிமாறன் திராவிட கழகக் குடும்பத்தவன். அவன் எனக்கு கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை எதிர்க்கும் திராவிட கழக பிரசுரங்களை காட்டி இருக்கிறான். அவன் சொன்ன விளக்கம் “எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது. பெரியார்/தி.க. சில விஷயங்களில் focus செய்ய முடிவு செய்தது. அதனால் அவர்கள் கிருஸ்துவ மதம் சரி, ஹிந்து மதம் மட்டுமே தவறு என்று நினைப்பதாக முடிவு செய்யக் கூடாது”. இந்த அணுகுமுறையில் எனக்கு தவறு எதுவும் தெரியவில்லை. ஆனால் அதை வீரமணி வெளிப்படையாக சொல்லாதது, அதுவும் இப்படி கிடுக்கிப்பிடி போட்டு கேட்கும்போது சொல்லாதது சரி என்று அவனால் கூட சொல்ல முடியாது.
தொகுக்கப்பட்ட பக்கங்கள்: படிப்பு, ஆளுமைகள்
தொடர்புடைய பதிவுகள்:
பெரியார் – என் மதிப்பீடு
பெரியார் திரைப்பட விமர்சனம்
வைக்கம் போராட்டம் பற்றி ஜெயமோகன் – பகுதி 1, பகுதி 2
போகப் போகத் தெரியும் கட்டுரைகளின் தொகுப்பு
போகப் போகத் தெரியும் கட்டுரைகள் புத்தகமாக வெளி வருகிறது
போகப் போகத் தெரியும் பகுதி 2 – ஜெயிலில் மத மாற்றம்
போகப் போகத் தெரியும் பகுதி 28 – சோ வீரமணியை எடுத்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி
ஜனவரி 26, 2010 at 1:46 பிப
வராலாறு பற்றிய தெளிவு இல்லாமல் சுப்பு எழுதிய தொடர் கட்டுரைகள் வெற்றி பெற்றதற்குக் காரணம், இன்று பெரியாரின் கைசுத்தமான பொதுவாழ்க்கைக்கு வாரிசு இல்லாமல் போனதுதான்.ஊழலில் ஊறித் திளைக்கும் இன்றைய கட்சி அரசியலை நிச்சயமாக பெரியார் சபித்திருப்பார். மற்றபடி பொதுவாக தேசியவாதிகள் பேசும் வாதத்தைதான் சுப்பு பேசுகிறார். அதில் புதிதாக ஒன்றும் இல்லை. பெரியார் கேட்ட கேள்விகளுக்கு அவர் முறையான பதிலளிக்கவில்லை.
ஜனவரி 26, 2010 at 7:21 பிப
உங்களைப்போன்றவர்கள் வரலாறு பற்றிய உங்கள் “தெளிவை” பிரச்சாரம் செய்து பரப்புவதற்கு முன்னர் அவர் முந்திக்கொண்டார். அவர் மட்டுமல்ல, ஒரு மாபெரும் வரலாற்று ஆப்பு பெரியார் தொண்டர்களுக்கு ஜெயமோகன் வைக்கிறார். அதுக்கு என்ன சொல்லப்போறீங்க…?
ஜனவரி 26, 2010 at 1:58 பிப
உங்களுடைய திராவிடர் கழக நண்பரிடம் நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி: கோவிலில் சமஸ்கிருதம் பயன்படுத்துவற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திகவினர், மசூதியில் அரபு மொழியில் அழைப்பு விடுக்கிறார்களே
அதை ஏன் கண்டிப்பதில்லை?
ஜனவரி 26, 2010 at 6:10 பிப
விருத்தன், பெரியாரின் “வாரிசுகளின்” கை சுத்தத்துக்கும் இந்த கட்டுரைகளுக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. வாரிசுகள் பெரியாருக்கு பின்னால் ஒழி வட்டம் எழுப்ப muyarsikkiRaarkaL என்ற என் கருத்தைப் பற்றி ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? சுப்பு எழுதி இருப்பது பத்திகளின் தொகுப்பு. அது informal writing மட்டுமே.
இளையவா, அதுதான் பதிவிலேயே எழுதி இருக்கிறேனே? அவர்கள் focus செய்யும் இடம் ஹிந்து மதம் என்று? நான் பக்கத்து வீட்டு பையனுக்கு இலவசமாக ட்யூஷன் சொல்லிக் கொடுத்தால் ஏன் எதிர் வீட்டுப் பெண்ணுக்கு சொல்லிக் கொடுக்கவில்லை என்றா கேட்பீர்கள்? நினைக்கும் எல்லாவற்றையும் செய்வதற்கு நேரம் வேண்டும், என் நேரத்தை எப்படி efficient ஆக செலவழிப்பது என்று தீர்மானிப்பது என் உரிமை இல்லையா? அதைத்தான் என் நண்பன் மாறன் சொன்னான். ஆனால் வீரமணி எதிர் வீட்டுப் பெண்ணுக்கு ட்யூஷன் சொல்லிக் கொடுப்பதும் நல்ல விஷயம்தான் என்று பேச்சளவில் கூட சொல்லாமல் நழுவுகிறார், அதைத்தான் சுட்டிக் காட்டி இருந்தேன்.
ஜனவரி 26, 2010 at 7:18 பிப
மொத்தத்தில் யாருக்கு டியூஷன் எடுக்கப்போகிறீர்கள் என்றே புரியவில்லை. ஆமா…ஏன் டியூஷன் எடுக்கிறீர்கள் ?
ஜனவரி 27, 2010 at 7:02 முப
there is enough evidence in subbu`s book to prove that evr tried to propagate islam. the question is islam fre of fault? i request your friend to clarify before he goes for the tution.
ஜனவரி 27, 2010 at 5:09 பிப
ஜெயம்,
நான் படித்த வரையில் பெரியார் இஸ்லாமை பரப்ப முயற்சித்தார் என்று எதுவும் இல்லை. உங்களுக்கு நினைவிருந்தால் சுட்டி கொடுங்களேன்!
அப்புறம் என் நண்பன் மாறன் என்ன சொன்னான் என்பதை மீண்டும் ஒரு முறை படியுங்களேன்! படிக்காமலே பேசினால் எப்படி? அவன் இஸ்லாம் நல்ல மதம் என்று சொல்லவில்லை. எல்லா மதங்களும் தவறானவையே, நாங்கள் ஹிந்து மதத்தின் தவறுகள் மீது focus செய்கிறோம் என்று சொன்னான் என்றுதான் எழுதி இருக்கிறேனே? அதுதான் best bang for the buck என்று அவர்கள் முடிவு செய்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே? அதை வீரமணி வெளிப்படையாக சொல்லாமல் நழுவுவதுதான் உறுத்துகிறது.
பிப்ரவரி 1, 2010 at 11:15 முப
//நாங்கள் ஹிந்து மதத்தின் தவறுகள் மீது focus
செய்கிறோம் என்று சொன்னான் என்றுதான் எழுதி இருக்கிறேனே? //
islam patri pesina vettuvan illati kolluvan athan atha patthi epsa tairiyam illa ungaluku
பிப்ரவரி 1, 2010 at 5:34 பிப
பேச்சால் வீம்பு பேசியே காலம் கழித்த ஒரு பெரியவரின் போலி முகம் சற்று வருத்தம் கொள்ளத் தான் வைக்கும். இந்துகள் அமைதியானவர்கள் என்று அவர்கள் மேல் மட்டும் குற்றங்களையும், கேலிகளையும் அடுக்கிக் கொண்டே போகும் தி.க நண்பர்கள் கொஞ்சம் பார்வையை பெரிது படுத்தினால் தேவலை.
செய்திகளுடன் சுட்டிகளையும் இணைத்தமைக்கு ஒரு பெரிய சபாஸ்.
பிப்ரவரி 1, 2010 at 6:25 பிப
There was a time for periyaar. He came then; and went. The impact was effective: majority of non-brahmin tamils looked up; and feel today grateful.
I think there ends everything.
Subbu’s effort, or Jeyamohan’s are aimed at DKists. But the impact of periyaar is elsewhere, where neither Subbu nor Jeyamohan or any brahmin can make a dent.
பிப்ரவரி 1, 2010 at 8:34 பிப
கார்த்திக்/ஜெகதீஸ்வரன்
ஒரு வாதத்துக்காக நீங்கள் சொல்வதுதான் உண்மை என்றே வைத்துக் கொள்வோம். அது தவறு என்று ஏன் உங்களுக்கு தோன்றுகிறது என்றுதான் புரியவில்லை. நீங்கள் பழனி முருகன் கோவில் உண்டியலில் நூறு ரூபாய் போடுகிறீர்கள். நீங்கள் ஏன் வேளாங்கண்ணி உண்டியலில் பத்து ரூபாய் கூட போடவில்லை என்று யாராவது உங்களை கேட்கமுடியுமா? உங்களுக்கு பழனி முருகன்தான் best bang for the buck – அவ்வளவுதான். பெரியார் அவருக்கு தவறு என்று தோன்றிய சில விஷயங்களை எதிர்த்து போராடினார். என் நண்பன் சொன்னதை வைத்தும், என் கண்ணால் பார்த்த திராவிட கழக பிரசுரங்களை வைத்தும் யோசிக்கும்போது தி.க.வுக்கு பத்து விஷயம் தவறு என்று பட்டது, அதில் ஆறு விஷயங்களை எதிர்த்து பெரிதாக போராடுவோம் என்று நினைத்திருக்கிறார்கள். நீங்கள் சொல்வது போல மிச்ச நாலு விஷயங்களை எதிர்த்து போராடினால் வெட்டிவிடுவார்கள் என்று பயந்திருக்கலாம். இல்லை இந்த ஆறு விஷயங்களில்தான் கொஞ்சமாவது மாறுதல் கொண்டுவர முடியும், இங்கே focus செய்வோம் என்று நினைத்திருக்கலாம். நீங்கள் பெரியார் தவறு என்று சொன்ன விஷயங்கள் சரி என்று வாதிடுங்கள், நானும் படித்துப் பார்க்கிறேன். ஆனால் முஸ்லிம்களை ஏன் பெரிதாக கண்டிக்கவில்லை என்று கேட்பது முட்டாள்தனமாக இருக்கிறது. தடுப்பூசி போட வந்தால் பக்கத்து வீட்டுக்காரன் போட்டுக்கலியே, நான் மட்டும் ஏன் போட்டுக்கணும் என்றா கேட்பீர்கள்?
பெரியாரிடம் எனக்கு பல குறைகள் தெரிகின்றன. முக்கியமாக அவருடைய அணுகுமுறை வெறுப்பின் மீது கட்டப்பட்டது. ஆனால் இந்த அவனை திருந்த சொல்லு, அப்புறம் நான் திருந்தறேன் என்பதெல்லாம் சினிமாவுக்குத்தான் சரிப்படும்.
ஸ்வார்ட்ஃபிஷ்,
பிரச்சினை பெரியாரைப் பற்றியதில்லை. பெரியாரை நிறை குறை உள்ள ஒரு மனிதராக பார்க்காமல் அவரை தெயய்வமாக்கும் திராவிட இயக்கத்தினரைப் பற்றியது. சரித்திரத்தை திரிப்பது எப்படி சரியாகும்? பெரியார் இல்லாமல் நான் முன்னேறி இருக்க முடியாது என்று நினைக்கிறீர்களா? சரி, அதில் உண்மை இருக்கலாம். அதற்காக அவர் கத்தி சண்டை, குதிரை ஏற்றம், கர்நாடக சங்கீதம் எல்லாவற்றிலும் மேதை என்று சொல்ல வேண்டுமா என்ன? காந்தி இல்லாவிட்டால் இந்தியா முன்னேறி இருக்கவே முடியாது. அதற்காக காந்தி குறை இல்லாதவர் என்று சொல்வீர்களா? நான் காந்தி மகாத்மா என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அவரும் தவறு செய்திருக்கிறார்தான். அதை மறைப்பது காந்திக்கு செய்யும் அவமரியாதை. பெரியாரைப் பற்றியும் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.
பிப்ரவரி 26, 2010 at 2:02 முப
the openion of swordfish is based on his wrong assumptions.neither subbu nor jayamohan are brahmins.
மார்ச் 1, 2010 at 7:55 முப
வெற்றி,
ஸ்வார்ட்ஃபிஷ் அப்படி சொல்லவில்லை. ஜெயமோகன், சுப்பு மற்றும் பிராமணர்கள் என்றுதான் சொல்ல வருவது போல இருக்கிறது.
மார்ச் 28, 2010 at 2:13 முப
subbu has advocated reservation in `poka poka theriyum`.so i doubt he is a brahmin.