மன்மோகன் அடுத்த பிரதமர் என்பது நிச்சயம் ஆகிவிட்டது. அவரது அமைச்சரவையில் யார் யார் இடம் பெற வேண்டும்?
நான் அமெரிக்காவில் வாழ்பவன். என் வேர்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன. அமெரிக்க அரசியலை விட இந்திய அரசியலைத்தான் நான் கவனிக்கிறேன். ஆனாலும் தூரம் அதிகம். இந்தியாவில் இருந்தால் நேரடியான பாதிப்பு, நண்பர்கள், டீக்கடை பேச்சு, செய்தித்தாள்கள், டிவி என்று பலதரப்பட்ட விதத்தில் என் கருத்துகள் முழுமை அடையும். இப்போதோ இணையத்தில் நுனிப்புல் மேய்வதுதான் எனக்கு செய்திகளின் ஆதாரம். அதனால் இமேஜை மட்டும் வைத்து இதை எழுதுகிறேன்.
மனித வள மேம்பாடு அல்லது கல்வி அல்லது கிராம மேம்பாடு: ராகுல் காந்தி. ராகுல் மந்திரி சபையில் பொறுப்பேற்றே ஆக வேண்டும். அவரது கவனம் இந்த துறைகளில் இருக்கிற மாதிரி தோன்றுகிறது. அதனால் இதில் ஏதோ ஒரு துறை கொடுக்கலாம்.
கபில் சிபல்: முன்னாள் சாலிசிடர் ஜெனரல். திறமையாளர். இவருக்கு சட்டம் மாதிரி எதையாவது கொடுத்து மூலையில் உட்கார வைக்காமல் நல்ல துறையாக கொடுக்கலாம். உள்துறை?
நிதி: மாண்டெக் சிங் ஆலுவாலியா. முன்னாள் நிதித்துறை செயலாளர். திட்டக் கமிஷன் துணைத் தலைவர். முன்பு மன்மோகன் நரசிம்ம ராவ் அரசில் செயல்பட்ட மாதிரி செயல்படுவார்.
வெளியுறவுத் துறை: சஷி தரூர். தரூர் ஐ.நா.வில் பெரிய பொறுப்பில் இருந்தவர். செக்ரடரி ஜெனரல் பதவிக்கு போட்டியிட்டு தோற்றுப் போனார். ஆனாலும் அவருக்கு இருக்கும் அனுபவம், தொடர்புகள் ஆகியவை இந்த பதவிக்கு பெரும் உதவியாக இருக்கும். அவருக்கு அனேகமாக ஒரு உதவி அமைச்சர் பதவியாவது கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் காபினெட் அமைச்சர் பதவிதான் சரி.
ரயில்வே: லாலு யாதவ். போன முறை சிறப்பாக செயல்பட்டார். அந்த ஒரு காரணத்துக்காவே அவரை இப்போதும் மந்திரி சபையில் சேர்த்து அதே துறை வழங்கப் பட வேண்டும்.
தகவல் துறை: தயாநிதி மாறன். தயாநிதி ஊழல் பேர்வழி என்றுதான் நினைக்கிறேன். ஆனால் நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்றபடி சாதாரண மக்களுக்கும் நன்மை விளைந்திருக்கிறது.
இந்த ஆறு பேருக்கு சீட் கொடுக்க வேண்டும். இவர்கள் முதல் லிஸ்ட்.
இரண்டாவது லிஸ்டில் சீனியர்கள், தோழமைக் கட்சியினர், “இளைஞர்கள்” எல்லாம் வருவார்கள். பிரணாப் முகர்ஜி, சிதம்பரம், ஷரத் பவார் போன்ற மூத்தவர்களுக்கு எப்படியும் சீட் கொடுக்க வேண்டும். பிரனாபுக்கு ராணுவம், சிதம்பரத்துக்கு உள்துறை (இல்லை என்றால் சிதம்பரத்துக்கு ராணுவம், பிரனாபுக்கு உள்துறை), பவாருக்கு விவசாயம் ஆகியவற்றை கொடுக்கலாம். “இளைஞர்களான” சச்சின் பைலட், ஜோதி சிந்தியா ஆகியவர்களுக்கு விமானத்துறை, கல்வி, பெட்ரோலியம், சாலைகள், வணிகம் என்று முக்கியமான infrastructure துறை கொடுப்பது நல்லது. குலாம் நபி ஆசாத், கமல்நாத், பிரஃபுல் படேல், ஜெயராம் ரமேஷ், சல்மான் குர்ஷீத் போன்றவர்கள் நிச்சயமாக இடம் பெறுவார்கள். மம்தா பானர்ஜிக்கு ராகுலுக்கு எதையாவது கொடுத்த பிறகு மிச்சம் இருப்பவற்றில் மனித வள மேம்பாடு அல்லது கல்வி என்று எதையாவது கொடுக்கலாம். தி.மு.க. எப்படியும் அழகிரி, கனிமொழி, டி.ஆர்.பாலு, ராசா, பழனிமாணிக்கம் ஆகியோருக்கு பதவி கேட்கும். எதையாவது கொடுத்து தொலைக்க வேண்டியதுதான்.
அர்ஜுன் சிங், ஷிவ்ராஜ் பாட்டில் போன்றவர்களை மறந்துவிட வேண்டும். இவர்கள் எல்லாம் தண்டம்.
மே 21, 2009 at 6:13 முப
மிக அருமையான பதிவு! என் கவலை எல்லாம் நீங்கள் அருமையான பல விஷயங்கள் எழுதியும் கவனிக்கப்படாமல் இருக்கின்றீகளே என்பது தான்! நான் உங்களுக்கு நல்ல ஊக்கம் தருகின்றேன்! தொடர்ந்துஎழுதவும்!
மே 21, 2009 at 6:42 முப
அமெரிக்காவிற்கு ஆட்டோ அனுப்ப
முடியாது என்ற தைர்யத்திலே என்ன
வேண்டுமானாலும் எழுதலாமா?
இங்கே வராமலா இருப்பீங்க? டின்
கட்டிடுவாங்க, ஜாக்கிரதை!!
மே 21, 2009 at 7:02 முப
சேதுராமன், அண்ணன் அழகிரியை அவ்வளவு குறைத்து மதிப்பிடாதீர்கள்!
அபி அப்பா, ஊக்கம் தரும் பாராட்டுகளுக்கு நன்றி!
மே 21, 2009 at 7:33 முப
உன்ன தான் மன்மோகன் தேடிட்டு இருக்காராம். நல்லா கிச்சி கிச்சி மூட்ற போ. :))
மே 21, 2009 at 2:33 பிப
மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு, தி.மு.க (திருடர்கள் முன்னேற்ற கழகம்) முடிவு.
மே 21, 2009 at 4:03 பிப
கருத்து கந்தசாமி, கூடுவாஞ்சேரி டீக்கடையில் உட்கார்ந்துகொண்டு ஒபாமாவுக்கும் ஒசாமாவுக்கும் எச்சரிக்கை விடும் பரம்பரை எங்கள் தமிழ் பரம்பரை. நீங்கள் என்ன ஒரு அரசியல் கட்சி பொதுக்கூட்டத்துக்கும் போனதில்லையா?
குமரன், இதெல்லாம் சும்மா லுலுலாயி. மன்மோகன் சரி போங்கடா என்று சொல்லிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
மே 21, 2009 at 4:33 பிப
சஷி தரூர் நிச்சயம் திறமை வாய்ந்தவர். ஆனால் அவருக்கு பதவி கொடுப்பதில் பல சிக்கல்கள் இருக்க வேண்டும். அவர் இன்னும் நியூ யார்க் நகரத்தில் தானே வாழ்ந்து கொண்டிருக்கிறார்?
மே 21, 2009 at 4:47 பிப
>>>தி.மு.க. எப்படியும் அழகிரி, கனிமொழி, டி.ஆர்.பாலு, ராசா, பழனிமாணிக்கம் ஆகியோருக்கு பதவி கேட்கும். எதையாவது கொடுத்து டதொலைக்க வேண்டியதுதான்.
எல்லோருக்குமா? மந்திரி சபை என்ன சுண்டலா? 🙂 மேலும் தி.மு.க பேரம் பேசும் நிலைமையில் காங்கிரஸ் வெற்றி அமையவில்லை. சுயேட்சைகளின் ஆதரவை வைத்தே சோனியா மந்திரி சபையை அமைத்து விடுவார். ஆனால் சோனியாவிற்கும், கருணாநிதிக்கும் ஒத்துபோகும் ஒரு பெர்ஸனல் கெமிஸ்டிரி இருப்பதால் ஏதோ ஒன்று கிடைக்கலாம். ஒரு அமைச்சரவை கிடைத்தாலே தி.மு.க. அதிர்ஷ்டசாலிகள் தான்.
இதை புரிந்து கொண்டு தான் தி.மு.க். வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக் கூறுகிறது போலும்.
மே 21, 2009 at 7:30 பிப
பக்ஸ்,
சஷி தரூர் இப்போது திருவனந்தபுரத்திலிருந்து எம்.பி. ஆகி இருக்கிறார். மந்திரி ஆவதில் ஒரு சிக்கலும் இருக்காது.
7 எம்.பி.களுக்கு ஒரு காபினெட் மந்திரி + ஒரு துணை அமைச்சர் என்று ஃபார்முலாவாம். தி.மு.க.வுக்கு 2-3 காபினெட் மந்திரி, 2-3 துணை அமைச்சர், மொத்தமாக ஐந்து பதவி என்று வருகிறது. அவர்கள் ஒன்பது பதவி கேட்கிறார்களாம்.
மே 22, 2009 at 4:41 முப
சஷி தரூர் தகவலுக்கு நன்றி. சமீப காலமாக அவரை ஃபாலோ பண்ண முடியவில்லை. இவர் தேர்தலில் நின்றது ஆச்சரியமாக இருக்கிறது. டெல்லியில் கல்லூரியில் இவரது சீனியர் என்.டி.திவாரி என்று நினைக்கிறேன், அரசியல் வாழ்க்கை பற்றி கசப்புணர்வுடன் பகிர்ந்து கொண்டதாகவும் அதனால் தான் ஐ.நா. போன்ற பாதையில் தன் தன் கரீயரை அமைத்துக் கொண்டதாகவும் படித்ததாக ஒரு நினைவு. நேரிடையாக அரசியலில் ஈடுபடுவது இவருக்கு உடன்பாடு கிடையாது என நினைத்தேன். ஆனால் அரசியல் மோகம் யாரை விட்டது?
மே 22, 2009 at 4:10 பிப
>>>7 எம்.பி.களுக்கு ஒரு காபினெட் மந்திரி + ஒரு துணை அமைச்சர் என்று ஃபார்முலாவாம். தி.மு.க.வுக்கு 2-3 காபினெட் மந்திரி, 2-3 துணை அமைச்சர், மொத்தமாக ஐந்து பதவி என்று வருகிறது. அவர்கள் ஒன்பது பதவி கேட்கிறார்களாம்.
இப்படியும் பார்க்கலாம்.
தன் குடும்பத்திற்கு 3 மந்திரி (கனிமொழி, அழகிரி மற்றும் தயாநிதி மாறன்) + தி.மு.க.விற்கு 6 🙂
மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது 😦