நாலைந்து நாளைக்கு முன்னால்தான் திரு விஸ்வநாதன் கக்கனை சந்தித்தேன். சுப்ரமணிய சாமியும் அவரும் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள். சாதாரணமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். அவர் மறைவு அதிர்ச்சியாக இருக்கிறது.
விஸ்வநாதன் கக்கன் மறைந்த காங்கிரஸ் தலைவரான கக்கனின் தம்பி. சுப்ரமணிய சாமி தலைவராக இருக்கும் ஜனதா கட்சிக்கு இவர்தான் செயலாளராக இருந்தார். சென்னை ஹை கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அண்ணன் காங்கிரஸ், காமராஜ் என்று போனால் இவர் ஆர்எஸ்எஸ், ஹிந்துத்வா என்று கொஞ்சம் வேறு திசையில் போயிருக்கிறார். ஏதோ ஒரு வாயில் நுழையாத பேர் சொல்வார்களே, சர்சங்க்சாலக் என்ற மாதிரி, அந்த பொறுப்பில் ஆர்எஸ்எஸ் பிரசாரகராக இருந்திருக்கிறார். காஞ்சி சங்கர மடத்திடம் ஆழமான தொடர்பு இருந்திருக்கிறது. ஜெயேந்திர சரஸ்வதிக்கு கொஞ்சம் நெருக்கமானவர் போலிருக்கிறது. ஜெயேந்திரர் விசிட் அடித்த தலித் கிராமங்கள், கோவில்களில் இவருடைய தும்பைப்பட்டி கிராமமும் ஒன்று, அனேகமாக முதல் கிராமம் இதுதான். ஹிந்துத்வத்தில் ஆழமான நம்பிக்கை உடையவர். ஹிந்து முன்னணி துணைத்தலைவராக எல்லாம் இருந்திருக்கிறார். 2006 தேர்தலில் ஜனதா கட்சி சார்பில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டார், வெற்றி பெறவில்லை. அவருடைய குடும்பத்தில் நிறைய கலப்புத் திருமணங்கள் நடந்திருக்கின்றன. அவரே அப்படி மணந்துகொண்டவர்தாம். இங்கே தன் மகளையும் மருமகனையும், புதிதாக பிறந்திருக்கும் பேரனையும் பார்க்க வந்தவர் இப்படி இறந்துபோனது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
அவருடைய கொள்கைகள் – குறிப்பாக ஹிந்துத்வா ஆதரவு எனக்கு இசைவானதில்லை. ஆனால் அவருக்கு அதில் முழு நம்பிக்கை இருந்தது தெளிவாகத் தெரிந்தது. அதுவும் ஹிந்து மதத்தின் ஒரு மோசமான கூறை நேரடியாக அனுபவித்தவர் எப்படி ஹிந்துத்வா ஆதரவாளராக மாறினார் என்று ஆச்சரியமாக இருந்தது. ஒரு நாள் சாவகாசமாக உட்கார்ந்து அவருடன் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எதையும் தள்ளிப் போடாதீர்கள்!
அவருடைய குடும்பத்தினருக்கு என் அனுதாபங்கள்.
பிற்சேர்க்கை: ஃபோட்டோ சுட்டி கொடுத்த ரீச்விநோவுக்கு நன்றி!
தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்
தொடர்புடைய பக்கங்கள்:
சிலிகான் பள்ளத்தாக்கு பகுதிக்கு வரும் சுப்ரமணிய சாமி
கக்கன்
ஜூலை 4, 2010 at 8:45 முப
//ஹிந்து மதத்தின் ஒரு மோசமான கூறை நேரடியாக அனுபவித்தவர் எப்படி ஹிந்துத்வா ஆதரவாளராக மாறினார் என்று ஆச்சரியமாக இருந்தது//
மனிதர்களால் உருவாக்கப் பட்ட குறை என்பதும் வேற்று மதங்கள் அதை முற்றிலும் களைந்து விட உதவப் போவதில்லை என்றும் ( அங்கும் மனிதர்கள் தானே இருக்கிறார்கள்) என்று அவர் புரிந்து கொண்டிருக்கிறார் தெரிகிறது.
அவர் ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்
ஜூலை 5, 2010 at 7:09 முப
திரு. விஸ்வநாதன் கக்கன் அவர்களை பற்றி நான் முதன் முதலில் தங்களது வலைத்தளத்தில் தமிழ் சங்க சிறப்பு விருந்தினர் பற்றி அறிவிப்பில் தான் படித்தேன் உடனே அவருடைய புகைப்படத்தை கூகுள் செய்து பார்த்தும் பார்க்க முடியவில்லை, சரி என்று விட்டு விட்டேன்.. எனக்கு கேரளாவில் வேலை என்பதால் வர விடுமுறையின் போது சென்னைக்கு சென்று திரும்புவேன் இந்த வாரம் சென்று திரும்பும் போது கடந்த மூன்றாம் தேதி வாங்கிய தின தந்தி நாளிதழை ரயிலில் புரட்டி கொண்டு இருந்தேன், அப்போது தான் திரு. விஸ்வநாதன் கக்கன் அவர்கள் தனது மகளின் வலை காப்பிற்கு சென்றது பற்றியும் அவர் அங்கு இயற்கை எய்தினார் என்றும் அறிந்து மிகவும் துயர் உட்ட்றேன். அவருடைய புகைப்படத்தை தின தந்தி பிரசுரித்து இருந்தது. அவர் ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்.
ஜூலை 7, 2010 at 2:54 முப
விருட்சம், ரீச்வினோ, விஸ்வநாதன் கக்கன் பற்றிய பதிவுக்கு மறுமொழி எழுதியதற்கு நன்றி! அவரது ஃ போட்டோ இருக்கும் சுட்டியை முடிந்தால் அனுப்புங்கள்!
ஜூலை 7, 2010 at 5:17 முப
போட்டோ இருக்கும் சுட்டி
ஜூலை 7, 2010 at 5:16 முப
போட்டோ இருக்கும் சுட்டி
நன்றி!