படங்களை பற்றி:
- ஜாலியாக வீணை வாசிக்கும் பிள்ளையார் – பிள்ளையார் உட்கார்ந்திருக்கும் விதத்தில் குஷி தெரிகிறது.
- காலை மடக்கி இருக்கும் பாரத மாதா – நல்ல ஐடியா, ஆனால் என் கண்ணில் நல்ல ஆர்ட் இல்லை.
- பிள்ளையார் தலை மேல் நிர்வாணமாக உட்கார்ந்திருக்கும் லக்ஷ்மி, மற்றும் நிர்வாண சரஸ்வதி – நல்ல craft.
- புலி மேல் துர்கை – Bad taste
- எம்.எஃப். ஹுசேன்
- டாக்டர் ருத்ரன் வரைந்த நிர்வாண சரஸ்வதி – டாக்டர் ஒரு ஹிந்து.
கொஞ்ச நேரத்துக்கு முன் டோண்டு எம்.எஃப். ஹுசெனைப் பற்றி எழுதி இருந்ததைப் படித்தேன். சுருக்கமாக என் எண்ணங்களை எழுத முடியாததால் இங்கே ஒரு பதிவாகவே எழுதுகிறேன்.
எனக்கு ஓவியங்கள் பிடிக்கும். ஆனால் பல பிரபல ஓவியங்களில் என்ன இருக்கிறது என்று புரிவதில்லை. புகழ் பெற்ற மோனா லிசா ஓவியத்தை நான் லூவர் மியூசியத்தில் நேராகவே பார்த்திருக்கிறேன். இது என்ன பிரமாதம் என்று புரிந்ததே இல்லை. ஹுசேனின் ஓவியங்களைப் பற்றி எனக்கு அப்படி ஒன்றும் பிரமாதமான அபிப்ராயம் இல்லை. சில ஓவியங்களில் நல்ல தொழில் திறமை (craft ) தெரிகிறது, அவ்வளவுதான். எனக்கு பிடித்த இந்திய ஓவியர்கள் அம்ரிதா ஷெர்கில், ஜாமினி ராய்.
ஆனால் ஹுசேன் சரஸ்வதியையும் துர்கையையும் நிர்வாணமாக வரைந்ததில் எந்த தவறும் இல்லை என்பது என் உறுதியான கருத்து. சரஸ்வதி, துர்க்கை, கிருஷ்ணன், ஏசு, முகமது நபி யாரை வேண்டுமானாலும் நிர்வாணமாக வரைய அவருக்கு பூரண உரிமை உண்டு. எப்படி வேண்டுமென்றாலும் வரையலாம், அது அவரது கருத்துரிமை. தஸ்லிமா நசரீன், சாலமன் ரஷ்டி எல்லாருக்கும் அந்த கருத்துரிமை உண்டு. ஹுசேனின் கருத்துரிமையை பறித்துவிட்டு ரஷ்டியின் புத்தகத்தை தடை செய்ததை எப்படி குறை சொல்வது? தஸ்லிமாவுக்கு நிகழும் அநீதிகளை எந்த முகத்தை வைத்துக் கொண்டு எதிர்ப்பது? தஸ்லிமாவை ஆதரித்து பேசுபவர்கள் ஹுசேனை எதிர்க்கும் அதிசயமும், ஹுசேனை ஆதரித்து பேசுபவர்கள் தஸ்லிமாவை எதிர்க்கும் அதிசயமும் இந்த நாட்டில் ஒரு சேர நடக்கிறது!
சரஸ்வதியை இழிவுபடுத்துகிறார் ஹுசேன் என்று பேசும் ஹிந்துக்களின் மன நிலை எனக்கு புரிவதே இல்லை. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். நான் வணங்கும் அலகிலா விளையாட்டுடையானை, ராமனை, கிருஷ்ணனை, சக்தியை இழிவுபடுத்தும் ஆற்றல் உள்ளவரா இந்த ஹுசேன்? இல்லை எல்லாம் வல்ல சரஸ்வதிக்கு நாலு பாடிகார்ட் தேவையா? இப்படி உணர்பவர்கள் எல்லாம் உண்மையிலேயே கடவுள் சர்வ சக்தி படைத்தவர் என்று நினைக்கிறார்களா? போயும் போயும் இந்த ஹுசேனா சிவனை கேவலப்படுத்த முடியும்?
ஹுசேனின் சில சர்ச்சைக்குரிய படங்களை இங்கே கொடுத்திருக்கிறேன். அவரது கோட்டோவியங்களில் நல்ல craft தெரிகிறது. சரஸ்வதியின் படம் எந்த விதத்திலும் சரஸ்வதியை கேவலப்படுத்தவில்லை என்பது என் உறுதியான கருத்து. பாரத மாதா படம் நல்ல ஐடியா. காலை மடித்து உட்கார்ந்திருக்கும் பெண் இந்தியாவின் தெற்குப் பகுதியுடனும், மார்புகள் குஜராத்துடனும் நன்றாக பொருந்துகிறது. ஆனால் நல்ல கலை என்று சொல்ல மாட்டேன். துர்கையின் படம் is in bad taste. But bad taste is not a crime!
அடுத்தவர் செய்கை என் மனதை புண்படுத்துகிறது, அதனால் அது தடை செய்யப்பட வேண்டும் என்று சொல்வது மிக தவறான அணுகுமுறை. டோண்டு ராகவன் பூணூல் அணிவது சிலர் மனதை புண்படுத்துகிறது என்பதற்காக அவர் பூணூல் அணிவதை நிறுத்த வேண்டுமா? இல்லை என்றுதான் நானும் அவரும் கருதுகிறோம். அப்புறம் ஹுசேனின் படங்கள் டோண்டுவின் மனதை புண்படுத்துகின்றன என்பதற்காக ஹுசேன் மட்டும் ஏன் இப்படி படம் வரைவதை நிறுத்த வேண்டும்? உயிருள்ளவர்களை கேவலப்படுத்தினால் அவர்களை சட்டம் பாதுகாக்கும்.
ஹுசேனுக்கு ஏசுவை இப்படி வரைய தைரியம் இல்லை, சீவி விடுவார்கள், முகமது நபியை இப்படி வரைந்தால் ஃபட்வாதான், அதனால் அவர் அப்படி வரைவதில்லை என்றுதான் நிறைய பேர் கோபப்படுகிறார்கள். அப்படி நினைப்பவர்கள் செய்ய வேண்டியது தெளிவு – சீவி விடுவார்கள் ஃபட்வா போன்ற நிலையை மாற்றுங்கள். போலி மத சார்பின்மை பேசிக் கொண்டு யாராவது வந்தால் – ராமர் எந்த ஆர்கிடெக்சர் காலேஜில் படித்தார் என்று கேட்டுக் கொண்டே ரம்ஜான் கஞ்சி குடிப்பவர்களை – புறக்கணியுங்கள். அதை விட்டுவிட்டு ஹுசேன் மேல் கேஸ் போட வேண்டும் என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. அவனுக்கு ஜுரம் வந்தபோது ஊசி போடவில்லை, அதனால் எனக்கு ஜுரம் வரும்போது எனக்கும் போடக்கூடாது என்று குழந்தைகள் அடித்துக் கொள்வது மாதிரி இருக்கிறது!
இந்திய அரசு இந்த ஒரு விஷயத்தில்தான் consistent ஆக நடந்து கொள்கிறது, ஹுசேனின் மேல் கேஸ் போடுகிறது, டாவின்சி கோட், Midnight’s Children புத்தகத்தை தடை செய்கிறது!
புதிதாக சேர்க்கப்பட்டது.
டாக்டர் ருத்ரன் (இவருடன்தான் எனக்கு ஜெநோடைப் பற்றி தகராறு.) ஒரு ஹிந்து. தன்னுடைய வலைத்தளத்தில் இப்போது ஹுசேன் மாதிரி ஒரு சரஸ்வதி படம் வரைந்திருக்கிறார். குறும்புக்காரர்!
தொடர்புடைய பதிவுகள், சுட்டிகள்
எம்.எஃப். ஹுசேன் பற்றிய விக்கி குறிப்பு
டோண்டு ராகவனின் பதிவு
ஜெயமோகனின் பதிவு, அவருக்கு வந்த எதிர்வினைகள் பகுதி 1, பகுதி 2, பகுதி 3
தமிழ் ஹிந்து தளத்தில் ஜெயமோகனுக்கு எதிர்வினை
டாக்டர் ருத்ரனின் பதிவு
அம்ரிதா ஷெர்கில் பற்றிய விக்கி குறிப்பு, அவரது சில ஓவியங்கள்
ஜாமினி ராய் பற்றிய விக்கி குறிப்பு, அவரது சில ஓவியங்கள்
நவம்பர் 28, 2009 at 10:48 முப
அது உங்கள் கருத்து, நான் அதனுடன் ஒத்துப் போகவில்லை என்று மட்டும்தான் கூறமுடியும்.
வான்கோ சாதாரணமாக முகம்மதுவின் படத்தை வரைந்ததற்கே துலுக்கன்கள் ஆட்டம் போட்டு அவரைக் கொன்றார்கள். உருவப்படம் போடக்கூடாது என்ற கட்டுப்பாடு இருக்கும் ஒரு மதத்தைச் சேர்ந்தவர் மற்ற மதங்களின் கடவுளை வரைவது, அதுவும் நிர்வாணமாக வரைவது தேவையில்லாத கொழுப்புத்தானே. அதே ஹுசைனே ரஷ்டிக்கு எதிரான ஃபத்வாவுக்கு விரோதமாக ஒன்றுமே பேசவில்லை என்றுதான் உறுதியாக நம்புகிறேன்.
ஹிட்லர் படத்தை நிர்வாணமாக வரைந்தது அவனை அவமானப்படுத்தவே என்று கூறினான் ஹுசைன். காந்தியின் படத்தைத் தலையில்லாமல் வரைந்தான் எனவும் படித்தேன். இவனெல்லாம் இந்தியாவில் இருக்க வேண்டும் என யார் அழுதார்கள்?
ஒரு தரப்பினர் மட்டும் சகிப்புத் தன்மையுடன் இருந்தால் மிளக்கய் அரைத்து விடுவார்கள். ஆகவே சீற வேண்டிய இடங்களில் சீறத்தான் வேண்டும். அதைத்தான் செய்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவம்பர் 28, 2009 at 11:16 முப
இந்து மத தெய்வங்களை நிர்வாணமாக வரைவது தவறு என்று எந்த வேதத்தில்/ கோவில் ஆகமவிதிகளில் சொல்லியிருக்கிறது? எல்லாக் கோவில்களிலும் முலைக் காம்பு தெரியும்படிதானே பெண் சிலைகள் செய்யப் பட்டிருக்கின்றன! மார்பும் பிருட்டமும் பெரிதாக இருக்கும் தேவியர் சிலைகளும் ஓவியங்களும்தானே கோவில்களிலும் பூசை அறைகளிலும் உள்ளன? தாமரை மேல் சரஸ்வதி இருக்கும் ரவி வர்மா ஓவியத்தில் ஸ்தனங்கள் பெருத்து இருப்பது உங்கள் கண்ணில் பட்டதே இல்லையா? ஆணின் இனப் பெருக்க உறுப்பு விரைத்து இருப்பதுதானே சிவலிங்கம்? பார்வதியின் யோனிதானே லிங்கத்தின் பீடம்?
இந்து மதத்தில் காமம் என்பது கடவுள் வழிபாட்டோடு கலந்து இருப்பதை சட்ட பூர்வமாக நிரூபிக்க முடியும். ஹுசைனின் மீது கேஸ் போட்டால் கீழ் கோர்ட்டிலேயே பிசுபிசுத்து விடும். அதனால் இப்போது செய்து இருப்பது இந்துத்துவ ரவுடிக் கூட்டத்தை வைத்து மிரட்டியே காரியத்தை சாதித்துக் கொள்ளுங்கள்.
தாலிபான் முஸ்லீம்களையே கடிப்பதுபோல இந்த ஆர்.எஸ்.எஸ். கும்பலால் இந்துக்களுக்கு ஒரு நாள் பிரச்சினை வரும். அப்போது தலையில் அடித்துக் கொண்டு வருந்தலாம். அதுவரையில் “அவனக் கேட்டியா, இவனக் கேட்டியா” என்று வெட்டிப்பேச்சுப் பேசி, இந்தக் கல்சுரல் போலீசுகளை வளர்த்துக் கொண்டே போங்கள்.
நவம்பர் 28, 2009 at 11:19 முப
//வான்கோ சாதாரணமாக முகம்மதுவின் படத்தை வரைந்ததற்கே துலுக்கன்கள் ஆட்டம் போட்டு அவரைக் கொன்றார்கள்.//
சுத்தப் பேத்தல். கொல்லப்பட்ட வான்கோவுக்கும் முகம்மது வரைபடத்திற்கும் சம்பந்தமில்லை. ஓவியர் வின்செண்ட் வான்கோவிற்கும் திரைப்பட இயக்குனர் தியோ வான்கோவிற்கும் வித்தியாசம் தெரியாமல், அடிப்படை விஷயமே புரியாமல், உளருகிறீர்கள்! கொஞ்சம் படித்து விட்டு வந்து கருத்து சொல்லுங்கள் சார்.
நவம்பர் 28, 2009 at 12:55 பிப
இந்துக்கள் தங்கள் தெய்வங்களை ஆகம விதிப்படி காட்டுவதையும் ஒரு மாற்று மதத்தவன் அவ்வாறு காட்டுவதையும் ஒன்றாக ஒப்பிட இயலாது. மாற்று மதத்தவன் செய்வது துவேஷம்.
வான் கோ திரைப்பட இயக்குனர்தான். அவரை ஓவியர் எனக் கூறியது என் தவறுதான். சுட்டிக் காட்டியதற்கு நன்றி வித்தகன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவம்பர் 28, 2009 at 5:22 பிப
//மாற்று மதத்தவன் செய்வது துவேஷம்.//
விதி மீறினால்தானே துவேஷம்? இங்கே அவர் இந்து மதத்தின் சட்ட திட்டங்களுக்குப் புறம்பாக என்ன செய்து விட்டார்?
//முகமது நபியின் மனைவி கதீஜா நிர்வாணமாக வரையப்பட்ட ஓவியத்தைப் பார்க்க நேரிட்டால் அப்போதும் இதே கருத்தைச் சொல்வீர்களா?//
மாட்டேன். ஏனென்றால் அப்படிச் செய்வது தவறு என்று அம்மதம் சொல்கிறது. எனவே அவ்வாறு செய்வது அம்மதத்தைப் பின் பற்றுபவர்களுக்கு ஒவ்வாது. நிர்வாணம் தவறு என்று இந்து மதத்தில் சொல்லவே இல்லையே! அப்படி இருக்கும் போது இங்கு என்ன தவறு நடந்து விட்டது என்று குதிக்கிறீர்கள்? அவர் முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக உங்கள் வசதிக்கு ஏற்றாற்போல குறை சொன்னால் எப்படி? விரைத்த ஆணுறுப்பைத்தானே தீபாராதனை பாலபிஷேகம் மலர்மாலை சூட்டி எல்லோரும் வணங்குகிறார்கள்? நாளை சிவலிங்கத்தை இந்து அல்லாத ஒருவன் வரைந்தால் அடிக்கப் போவீர்களா?
இந்து மத விதிகளை யாரும் இங்கே மீறாத போது என்ன கூச்சல் கூப்பாடு வேண்டிக் கிடக்கிறது?
நவம்பர் 29, 2009 at 12:07 முப
//////முகமது நபியின் மனைவி கதீஜா நிர்வாணமாக வரையப்பட்ட ஓவியத்தைப் பார்க்க நேரிட்டால் அப்போதும் இதே கருத்தைச் சொல்வீர்களா?//
மாட்டேன். ஏனென்றால் அப்படிச் செய்வது தவறு என்று அம்மதம் சொல்கிறது. எனவே அவ்வாறு செய்வது அம்மதத்தைப் பின் பற்றுபவர்களுக்கு ஒவ்வாது. நிர்வாணம் தவறு என்று இந்து மதத்தில் சொல்லவே இல்லையே!///// ஐயா , ஒரு பெண் தனது கணவன் முன்பாக நிர்வாணத்தை ஒத்துக் கொள்கிறாள். அதற்காக அவள் தான் நிர்வாணத்தை ஒத்துக் கொள்கிறாளே என்று எல்லோரும் அவளை நிர்வாணப்படுத்த நினைத்தால்? அது போல தான் இதுவும் இந்து மதத்தின் சுதந்திரம் இந்துக்கள் அனுபவிக்கத்தான். போவோர் வருவோர் எல்லாம் அதன் மீது ஏறி விளையாட அல்ல. தன் மதம் மீதிருக்கும் பயமும் மதிப்பும் ஒருவனுக்கு இந்து மதத்தின் மீது ஏன் இல்லை. அவன் வேற்று மதக்காரணாக இருந்து இதை செய்வது தவறே.
நவம்பர் 28, 2009 at 2:59 பிப
i too do agree when there is sense prevailing in what is written. good post
நவம்பர் 28, 2009 at 3:30 பிப
ஹுசின் ஒரு முஸ்லிம்,ருஷ்டி, ட்ஸ்லிமா அது போலத்தான். அவரவர் மத் கருத்தை வெட்டி ஒடடி எழ்த்லாம்.அது அவரவர் வீட்டு சண்டை. ஹுசைன் செய்தது அடுத்த் வீடு சமாசாரம்.நான் மதிக்கிறேன் என்று சொன்னாலும்
அது ஏன் இந்து க்டவுள் மட்டும் தெரரியவேண்டும்.இத்னால் சர்சசை வரும் எனறூ தெரியாதா.எனன் லொல்லு
நவம்பர் 28, 2009 at 3:51 பிப
முகமது நபியின் மனைவி கதீஜா நிர்வாணமாக வரையப்பட்ட ஓவியத்தைப் பார்க்க நேரிட்டால் அப்போதும் இதே கருத்தைச் சொல்வீர்களா?
நவம்பர் 28, 2009 at 4:22 பிப
வித்தகன் அவர்களே,
//ஆணின் இனப் பெருக்க உறுப்பு விரைத்து இருப்பதுதானே சிவலிங்கம்? பார்வதியின் யோனிதானே லிங்கத்தின் பீடம்?//
கீழ உள்ள லிங்க்ல போய் முதல்ல படிங்க.. யாரோ உளறியதை உண்மை மாதிரி சொல்லாதீங்க.
http://madhavipanthal.blogspot.com/2008/06/blog-post.html
நவம்பர் 29, 2009 at 3:02 முப
லிங்கம் என்ற வட மொழி சொல் ஆணின் இனப் பெருக்க உருப்பையே குறிக்கும். சிவனும் பார்வதியும் புணரும் பொழுது சிவன் சபிக்கப் பட்டதால் லிங்க வடிவமாகவே அறியப் படுவதுதான் புராணம். என் குடும்பத்தில் உள்ள வடமொழி வித்தகர்களயும் புராண இதிகாச ஆராய்ச்சியாளர்களயும் வைத்து என்னால் ஒரு கிரிக்கெட் டீமே உருவாக்க முடியும். சும்மா உட்டாலக்கடி செய்து என்னை ஒதுக்க முடியாது. விரைத்த ஆணுறுப்பை வணங்குவதுதான் சைவர்களின் பிரதான வழிபாடு. லிங்கம் பீடத்தில் பொருத்தப்படுவதைப் பார்த்து இருக்கிறீர்களா? பீடத்தின் கீழிருக்கும் துளையின் வழியாக லிங்கம் நுழைக்கைப்பட்டு அழுத்தி உட்தள்ளப்படும் போது இந்த சந்தேகங்கள் எல்லாமே தீர்ந்து விடும்!
நவம்பர் 29, 2009 at 5:24 முப
வித்தகன் ஐயா, நான் கொடுத்த லிங்க்ல சொல்லப்பட்டிருக்கும் விளக்கத்துக்கு பதில் சொல்லாமா, நீங்க சொல்றது தான் சரி மத்ததெல்லாமே உட்டாலக்கடின்னு சொல்றது சிரிப்பைத்தான் வரவழைக்கும்.. வடமொழியில் ஒரு வார்த்தைக்கு பலபொருட்கள் கொள்ள முடியும்.. அதனால் வந்த வினையே இது.
லிங்க உருவமானது ஆணுருப்பு என்று சொல்லுறவங்களும் இருக்காங்க. எது சரியான் விளக்கம்கிறது அந்த சிவனே சொன்னால் தான் உண்டு.
நவம்பர் 29, 2009 at 5:32 முப
முஸ்லீம்களுக்கு குரான் போல இந்து மதத்தில் ஒரு authoritative text கிடையாது. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். இதற்கு நீங்கள் அனுப்பியுள்ள சுட்டி உதாரணம்.
நான் சொல்லும் ஆதாரம் பிருகு புராணம். அது தவறென்று சொல்லுங்கள். அதன் பின் உங்கள் சுட்டியைப் பற்றிப் பேசலாம். ஒரு விஷயம். பிருகு புராணம் பொய்யென்றால் ஜாதகம் ஜோசியம் எல்லாமும் பொய். காரணம் ஜாதகம் பார்ப்பதை வரையறுத்த பிருகுதான் சிவபெருமானை ஆணுறுப்பாக சபித்தவர். என்ன சொல்கிறீர்கள்?
நவம்பர் 28, 2009 at 4:27 பிப
//இந்து மத தெய்வங்களை நிர்வாணமாக வரைவது தவறு என்று எந்த வேதத்தில்/ கோவில் ஆகமவிதிகளில் சொல்லியிருக்கிறது? //
வேதத்தில் சொல்லியிருந்தால் மட்டும் ஒத்துக் கொண்டு நடக்கப் போகிறார்களா.. என்னவோ வேதம் சொல்லியபடி வாழ்வதைப் போல், வேதத்தில் சொல்லிருக்கிறதான்னு கேக்குறீங்களே, நிர்வாணமாக வரைந்தால் தவறில்லைன்னு மட்டும் சொல்லிருக்கிறதா ?
நவம்பர் 29, 2009 at 3:22 முப
//நிர்வாணமாக வரைந்தால் தவறில்லைன்னு மட்டும் சொல்லிருக்கிறதா ?//
கேனத்தனமான கேள்வி. தவறில்லை என்பதனால்தானே முலைக்காம்பு தெரியும், பிருட்டமும் துருத்தியிருக்கும் தேவியர் சிலைகளை எல்லாக் கோவில்களிலும் வைத்திருக்கிறார்கள்?
//வேதத்தில் சொல்லியிருந்தால் மட்டும் ஒத்துக் கொண்டு நடக்கப் போகிறார்களா..//
வேதத்தை மீறினால் எப்படி இருந்தாலும் காச் மூச்சென்று கத்துவீர்கள். மீறாத போது என்ன பிரச்சினை?
நவம்பர் 29, 2009 at 5:39 முப
கேனத்தனமான கேள்வியா :)) ஹா ஹா.. இருக்கட்டும்.
நீங்க தான் கொஞ்சம் தெளிவா பதில் சொல்லுங்களேன்.. வேணும்னா, வடமொழி வித்தகர்களையும் கூட்டி வந்து ஒரு கிரிக்கெட் மேட்ச் விளையாடுவோம்.
சிலா சாஸ்திரத்தில் ஒரு சிலை வடிக்கவேண்டிய முறைகளாக சொல்லப்பட்டவற்றை, ஒருவரின் ஈனச்செயலுக்கு சாதகமாக சொல்லாதீர்கள்.
நவம்பர் 29, 2009 at 5:44 முப
//வேதத்தை மீறினால் எப்படி இருந்தாலும் காச் மூச்சென்று கத்துவீர்கள். மீறாத போது என்ன பிரச்சினை//
ஓஹோ.. அவர் வேதத்தில் சொல்லியபடி தான் ஓவியம் வரைஞ்சார்னு சொல்றீங்களா.. வேதத்தில் ஓவியம் வரையும் முறை, சிலை வடிக்கும் முறை பற்றி எங்கே எப்படி சொல்லப்பட்டுள்ளதுன்னு வேதத்தில் இருந்தே எடுத்துக்காட்டினால் அடியேன் மகிழ்வேன்..
நவம்பர் 29, 2009 at 5:50 முப
ரொம்ப சிம்பிள் சாமி. ஹுசேன் வரைந்த நிர்வாண ஓவியங்கள் இந்துக்கள மனக்கிலேசத்துக்கு உள்ளாக்கிட்டதா சொல்றீங்க. இந்து மதத்துல எந்த இடத்துல நிர்வாணம் தவறு, மரியாதைக் குறைச்சல் போட்டிருக்குன்னு சொல்லுங்க. ஹுசேன ஓரங்கட்ட வேண்டியது சுலபமாயிடும். அவரு முஸ்லீம். இந்துக்களப் பற்றி எதுவுமே பேசக்கூடாதுன்னு சொல்றதத் தவிற, குறிப்பா அவரு செஞ்சது மத ரீதியாக எப்படி தவறுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்.
நவம்பர் 28, 2009 at 4:43 பிப
//ஆனால் ஹுசேன் சரஸ்வதியையும் துர்கையையும் நிர்வாணமாக வரைந்ததில் எந்த தவறும் இல்லை என்பது என் உறுதியான கருத்து.//
ஆர்.வி ஐயா, தனிப்பட்ட ஒருவரை மட்டும் எடுத்துக்கொள்ளக்கூடாது.. ஒரு சமூக அமைப்பில் வாழும் போது, ஒருவரின் செயல் சமூகத்தை பாதிக்கும்னா கட்டாயம் அது தடை செய்யப்பட வேண்டியது தான்.. ஒருவருக்கு பிடித்திருக்குமானால் தன் வீட்டில் நிர்வாணமா இருக்கலாமே தவிர, எனக்கு தனி மனித சுதந்திரம் உண்டு.. அதனால் நான் தெருவிலும் அப்படிப் போவேன்னு சொல்ல முடியுமா.. சமூகம் தான் சகித்துக் கொள்ளுமா..
எத்தனையோ கோடி மக்கள், தம் அன்னையாக வழிபடும் தெய்வத்தை இப்படி வரைந்து, பார்த்தீர்களா என் கலைத்திறமையைன்னு வெளியிடுதல் எப்படி சரியாகும். எல்லாரும் கேட்கும் கேள்வி, கோவில் கோபுரத்தில் காணப்படும் நிர்வாண கோபிகைகள் சிற்பங்கள்..ஹூசைன் செய்தது கலைன்னு சப்போர்ட் செய்றவங்க எல்லாரும் இதை மட்டும் அசிங்கம்னு சொல்றது, கொஞ்சம் சிரிப்பைத்தான் வரவழைக்கிறது.. பகவான் கண்ணன், கோகுலத்தில் இருந்த காலம் 7 வயது வரை மட்டுமே.. 5 வயதில் மேற்சொன்ன வஸ்திரங்களை களவாடிய நிகழ்வு குறிப்பிடப்பட்டுள்ளது.. இன்னமும் இதைப்பற்றி விளக்குகிறேன்.. பின்னொரு நாள். ஸ்ரீமத்பாகவத்தில் இந்தக்காட்சி சம்பந்தப்பட்ட அத்யாயத்தையாவது கோவில்களில் எழுதி வைப்பது பலரின் சந்தேகத்தை நிவர்த்திக்கும்னு நினைக்கிறேன்.
நவம்பர் 28, 2009 at 5:31 பிப
ஹலோ சார்,
நமது நாட்டு சட்ட திட்டங்கள் அப்படி இருக்கின்றன. மத நம்பிக்கையை புண்படுத்தும் விதத்தில் கலைப்படைப்புகள் படைத்தால் அதற்கு தண்டனை உண்டு என்கிறது மதச்சார்பற்ற இந்திய நாட்டுச் சட்டம்.
அத்தகய சட்டங்கள் இருக்கும் வரை இந்து அமைப்புகளைக் குறை சொல்ல முடியாது. அதே போல் ஹுசைனைப் பிடித்து கோர்ட்டில் நிறுத்து என்று சொல்லும் ஜட்ஜை இந்து சார்பு நிலை எடுத்துவிட்டார் என்று பார்ப்பானீயப்பட்டம் கொடுக்க முடியாது.
இதை சந்தன் மித்ரா என்பவர் அப்பட்டமான இந்துத்வா சார்புப் பத்திரிக்கை the pioneer ல் சொல்லியிருக்கிறார்.
இதுவரை ஹுசைன் கோர்ட்டுக்கு வந்து எதுவும் சொல்லியதாகத் தெரியவில்லை. அவர் தானாக நாடு கடத்திக்கொண்டு துபாயில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். பழி ஆர்.எஸ்.எஸ் மீது. பழி ஓரிடம் பாவம் ஓரிடமா ?
மற்றபடி, யார் வேண்டுமானாலும் எத்தகைய கலைப்படைப்பும் படைக்கும் உரிமையும் சுதந்திரமும் நமது கலாச்சாரத்தில் உள்ளது. ஆனால் அதை சட்டம் முடக்குகிறது.
ஹுசைன் வரைந்த படைப்புகளுக்கு அவர் விளக்கம் கொடுத்தார். நல்லது. அதே போல் அவர் மீனாக்ஸி படத்தில் வரும் குரான் வசனத்தை முல்லாக்கள் சத்தம் போட்டவுடன் நீக்கிய காரணத்தை விளக்கவில்லை.
அன்னை தெரசாவும் சரி, ஆயிஷாவும் சரி அவரது நிர்வாண அழகியலில் வரவில்லை என்பதும் ஒரு முரணான விஷயமாக இருக்கிறது.
கோவில்களில் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும் நிர்வாணத்தை ரசிக்கும் என்போன்றவர்களுக்கே அவர் செய்தது அசிங்கமாகத் தெரிகிறது. அவர் மீதுள்ள நம்பிக்கையில் நீங்கள் அவரை ஏற்கலாம். எனக்கு அவரையும் அவர் சார்ந்த மத நம்பிக்கையாளர்களையும் நம்ப முடிவதில்லை.
முழுமையாக உங்கள் கருத்தை இவ்விஷயத்தில் ஏற்க முடியவில்லை. மன்னிக்கவும்.
நவம்பர் 29, 2009 at 12:09 முப
///இந்து சார்பு நிலை எடுத்துவிட்டார் என்று பார்ப்பானீயப்பட்டம் கொடுக்க முடியாது///இதில் எங்கேப்பா பார்ப்பனன் வந்தான். மதவாதம் சொல்றது தானே. பாப்பான அடிச்சே பழக்கப்பட்டு எங்கே போனாலும் அவன் ஞாபகமாவே இருக்கீங்க
நவம்பர் 28, 2009 at 5:49 பிப
//டோண்டு ராகவன் பூணூல் அணிவது சிலர் மனதை புண்படுத்துகிறது என்பதற்காக அவர் பூணூல் அணிவதை நிறுத்த வேண்டுமா? இல்லை என்றுதான் நானும் அவரும் கருதுகிறோம். //
ஐயா,
பூணூல் அணிவதால் மட்டும் ஒருவன் உயர்ந்தவன் ஆகிவிடுவதில்லை.. ஒரு உடலில் முகம் உயர்ந்தது.. கால் தாழ்ந்தது என்று ஜல்லி அடிப்பவர்கள் சொல்லும் வீண்வாதம் இது. இன்னொன்று பூணூல் முதல் மூன்று வர்ணத்தவர்களுக்கும் உரியதாக சொல்லப்பட்டுள்ளது. எதற்கு?? சில கர்மாக்களை செய்வதற்கு பூணூல் அவசியமாகிறது அதற்காக.. அப்படி அணிவதால் மட்டும் ஒருவன் உயர்ந்தவன் ஆகி விடுவதும் இல்லை.
நவம்பர் 28, 2009 at 6:50 பிப
ஹுசைன் செய்தது மஹாமஹா முட்டால் தனம் என்பதில் மாற்றுக்கருதுக்கு இடம் இல்லை அவன் கண்டிக்கமட்டும் அல்ல தண்டிக்கபடவேண்டும்
இது ஒரு தனிமனிதனின் செயல்
அயோதில் இஸ்லாமியர்களால் இறை இல்லம் என்று கருதப்பட்ட பள்ளிவாசலை உடைத்து பல உயிர் போனதே அதர்கு
ஒரிசாவில் ஃபாதரியார் குடும்பத்தை உயிரோடு கொழுத்தினேமே அதர்கு
பிகாரில் கலவரம் என்ற பெயரில் பல நூறு உயிர்களையும் பல கோடி ரூபாய் சொத்துக்களை சூரையாடினோமே அதர்கு
இவையெல்லாம் தனி மனித செயல் அல்ல
டோண்டு ராகவன் என்ன நான் சொல்வது சரியா
நவம்பர் 29, 2009 at 7:07 முப
dondu paarppanukku muthalil navadakkam thevai.thannai mika periya puththisaliyaka ninaiththu kondu irukkum intha adi muttaal than karuththai achchu voodakaththil ezuthuvaana intha porukki.
நவம்பர் 29, 2009 at 11:46 முப
இதில் தவறு என்ன இருக்கிறது. கோவில்களில் நிர்வாணமாய் சிலைகள் வடிக்கலாம் ஒருவர் ஓவியமாய் வடிக்க கூடாதா.
டோண்டு சார்… அவர் அந்தப்படங்களை நிர்வாணமாய் வரைந்ததுதான் உங்களுக்கு பிரச்சனையா இல்லை… அதை ஹூசைன் வரைந்ததுதான் பிரச்சனையா? அதை முதலில் சொல்லுங்கள்… கற்பனைக்கு, ரசனைக்க வரைமுறை போட முடியாது. பார்ப்பவர்களின் கண்களில் இருக்கிறது.
இன்னும் ஏன் இந்த குறுகியமனப்பான்மை?
நவம்பர் 29, 2009 at 5:56 பிப
டோண்டு, உங்களுக்கு பிரச்சினை ஓவியத்தில் லக்ஷ்மியும் சரஸ்வதியும் நிர்வாணமாக இருக்கிறார்கள் என்பது இல்லை, ஓவியத்தை வரைந்தவர் முஸ்லிம் என்பதில்தான் என்று சொல்கிறீர்கள். என் புரிதல் சரிதானா? இதை உறுதிப்படுத்த முடியுமா?
வித்தகன், பிரச்சினை வேதம் இதை தடை செய்யவில்லை செய்திருக்கிறது என்பது இல்லை. நூறு கோடி பேர் உள்ள நாட்டில் பத்தாயிரம் பேருக்கு வேதம் தெரிந்திருந்தால் அதிகம். அப்புறம் வேதம்தான் ஹிந்துக்களின் நீதி நூல், வேதங்களுக்கு எதிராக நடப்பவர்கள் ஹிந்துக்கள் இல்லை என்பதில்லையே? பெரும்பாலான ஹிந்துக்கள் கடவுள் உருவங்களை புனிதம் என்று கருதுகிறார்கள்; பெரும்பாலான இந்தியர்கள் நிர்வாணம் என்பது கேவலப்படுத்துவது என்று கருதுகிறார்கள். இதில் ஏன் வேதம், ஆகமம் என்று யாருக்கும் தெரியாத விஷயங்களை எல்லாம் இழுக்கிறீர்கள்?
டாக்டர் ருத்ரன் இங்கேயா? Pleasant surprise! வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி, டாக்டர்!
தாயம், ஹுசேன் செய்வது லொள்ளு ஆக இருக்கலாம். ஏன், ஹிந்துக்கள் புனிதமாக கருதும் விஷயங்களை கேவலப்படுத்த வேண்டும் என்றே வரைந்திருக்கலாம். அப்படி வரைய அவருக்கு எல்லா உரிமையும் உண்டு என்பதுதான் என் நிலை. இது அவரது கருத்துரிமை. அதே போல முகமது நபியையோ, ஏசுவையோ பயம் இல்லாமல் எப்படி வேண்டுமானாலும் வரைய எழுத முடியும் நிலை நாட்டில் வேண்டும் என்பதுதான் என் நிலை. (சிவ பெருமானை ஹுசேன் கேவலப்படுத்த முடியும், முகமது நபியை ஆர்வி கேவலப்படுத்த முடியும் என்றால் சிவனுக்கும், முகமதுக்கும் உண்மையிலேயே ஏதாவது மகிமை இருக்கிறதா?)
திண்டுக்கல் சர்தார், சந்தேகம் என்ன? கதீஜா என்ன, நாளை ஏசுவும் மேரியும் உறவு கொள்வது போல படம் வரைந்தாலும் இதே நிலைதான். என்ன, நிர்வாணப் படம் எப்போதும் bad taste என்று சொல்வதற்கில்லை. ஏசு-மேரி படம் நிச்சயமாக bad taste. அடுத்தவர் மனதை தேவை இல்லாமல் புண்படுத்துவது வெறும் lack of courtesy மட்டுமே. But lack of courtesy and bad taste are not crimes!
வித்தகன்/ராகவன், லிங்கம் விரித்த ஆணுருப்பின் உருவகமா என்று விவாதிக்கும் அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது. எங்கேயோ படிக்கும் வரை எனக்கு அப்படி தோன்றியதில்லை. படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அவ்வளவுதான் சொல்ல முடியும்.
ராகவன், ஹுசேனின் செய்கை சமூகத்தை பாதிக்கிறது என்று சொல்கிறீர்கள். யார் இந்த சமூகம்? நான் அதில் உண்டா? உங்களுக்கு தெரிந்த பத்து பேர், அட ஆயிரம் பேர்தான் சமூகமா? என்ன referendum வைத்தா ஹுசேனின் செய்கை சமூகத்தை பாதிக்கிறதா இல்லையா என்று முடிவெடுத்தீர்கள்? நாட்டில் 95% பேருக்கு இதைப் பற்றி ஒரு கவலையும் இல்லை என்பது என் கருத்து.
ராகவன், பூணூல் அணிவது உயர்வு/தாழ்வு என்ற பிரச்சினையைத்தான் நாம் பேசவே இல்லையே? பிராமணர்கள் பூணூல் போடுவது தங்களை கேவலப்படுத்துவதாக இணையத்தில் கொஞ்சம் பேர் சொல்கிறார்கள். அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து பிராமணர்கள் பூணூலை கழற்றிவிட வேண்டுமா என்பதுதான் கேள்வி. அவர்கள் ஏன் அப்படி நினைக்கிறார்கள் என்ற கேள்வி முக்கியம்தான், ஆனால் அது இங்கே (இன்னும்) பேசப்படவில்லை. உங்கள் உணர்வுகளுக்கு ஹுசேன் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்பது தெளிவு. Given that, இவர்கள் உணர்வுகளுக்கு பிராமணர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் கேள்வி.
commie.basher, நாட்டின் சட்டங்கள் அமலாக்கப்படுகின்றன என்று சொல்கிறீர்கள். அது சரியான வார்த்தை. ஹுசேனுக்கு இந்த நாட்டில் வாழ வேண்டுமென்றால் இந்த நாட்டின் சட்டங்களை மதித்துத்தான் ஆக வேண்டும். அவருக்கென்று சட்டத்தை தளர்த்த முடியாது. ஆனால் சட்டம் தவறானது, மாற்றப்பட வேண்டியது என்பதுதான் என் நிலை. அது சரியாக பதிவில் வெளிப்படவில்லை, சுட்டிக் காட்டியதற்கு நன்றி!
தெரசாவும் ஆயிஷாவும் நிர்வாணமாக வரையப்படவில்லையே என்று குறைப்படுகிறீர்கள். இது என்ன கோட்டா சிஸ்டமா? அவர் நாளை சரஸ்வதியை ராஜா ரவி வர்மா ஸ்டைலில் வரைந்தால், உடனே முஸ்லிம்கள் ஆயிஷாவை அப்படி வரையவில்லையே என்று குமுற வேண்டுமா? சரி நீங்கள் ஏன் மாரியம்மனையும், சுடலை மாடனையும் வரையவில்லை என்று கவலைப்படவில்லை? கிளாசிகல் ஹிந்து தெய்வங்களைப் பற்றிதான் உங்கள் கவலையா? ஒரு வேளை ஹுசேன் தலித்திய வாதியாக இருப்பாரோ?
ராஜவம்சம், நீங்கள் எழுதுவது sarcasm-ஆ இல்லை நிஜமா என்று புரியவில்லை.
பராரி, அது என்ன பார்ப்பானுக்கு நாவடக்கம்? டோண்டுவுக்கு நாவடக்கம் வேண்டும் என்று நினைத்தால் டோண்டு என்று எழுதுங்கள். இல்லை உலகில் எல்லாருக்கும் நாவடக்கம் வேண்டும் என்று நினைத்தால் எல்லாருக்கும் என்று எழுதுங்கள். பார்ப்பானுக்கு மட்டும்தான் நாவடக்கம் வேண்டுமா? எனக்கு என்னவோ உங்களுக்குத்தான் அது தேவை என்று தோன்றுகிறது.
நாஞ்சில் பிரதாப், வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி! உங்கள் கருத்தில் எனக்கு முழு இசைவு. நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் ரஷ்டியின் புத்தகமும் தடை செய்யப்படக் கூடாது என்று நினைக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. அதை உறுதிப்படுத்த முடியுமா?
நவம்பர் 30, 2009 at 4:14 முப
//பூணூல் போடுவது தங்களை கேவலப்படுத்துவதாக இணையத்தில் கொஞ்சம் பேர் சொல்கிறார்கள். அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து பிராமணர்கள் பூணூலை கழற்றிவிட வேண்டுமா என்பதுதான் கேள்வி. //
டோண்டு ஐயா சொல்வது போல் சில/பல இணைய தாசில்தார்கள் சொல்வதைக் கேட்டு நாசமாவதை விட, நம் முன்னோர் சொல்படி நடத்தலே நலம். நாம் என்னதான் இவர்களிடம் எடுத்துச் சொல்ல முயன்றாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள். பூணூல் போட்ட பிராமணரான முனிவாகனர்,நான்காம் வர்ணத்தைச் சேர்ந்த பாணர் குலத்தில் பிறந்த்வரை தன் தோளில் தூக்கிக்கொண்டு ரங்கன் ஆலயத்திற்குள் அழைத்துச் சென்ற வரலாறு கேள்விப்பட்டிருக்கீங்களா? இன்னும் சொல்றேன்..
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே குலகுருவாக விளங்கும் ஸ்ரீராமானுஜர், தன் முதல் குருவாக ஏற்றுக்கொண்டவர் ஒரு வைசியர்.. அவ்ர் உண்டு மீதமான எச்சிலை தான் உண்ண ஆசைப்பட்டவர்.. இன்னும் எவ்வளவோ சொல்லலாம், இக்காலத்திலும். புரிந்து கொள்ள மறுப்பவர்களை எக்காலத்திலும் திருத்த முடியாது.. அப்போ என்ன பண்ணலாம் ?? நம் தாய் தந்தையர் சொல்படி.. நடந்தாலே உத்தமம்.. இணைய தாசில்தார்களை கண்டுகொள்ளாமல் இருத்தல் இன்னும் உத்தமம்.
திசெம்பர் 1, 2009 at 9:58 முப
//
தெரசாவும் ஆயிஷாவும் நிர்வாணமாக வரையப்படவில்லையே என்று குறைப்படுகிறீர்கள். இது என்ன கோட்டா சிஸ்டமா? அவர் நாளை சரஸ்வதியை ராஜா ரவி வர்மா ஸ்டைலில் வரைந்தால், உடனே முஸ்லிம்கள் ஆயிஷாவை அப்படி வரையவில்லையே என்று குமுற வேண்டுமா? சரி நீங்கள் ஏன் மாரியம்மனையும், சுடலை மாடனையும் வரையவில்லை என்று கவலைப்படவில்லை? கிளாசிகல் ஹிந்து தெய்வங்களைப் பற்றிதான் உங்கள் கவலையா? ஒரு வேளை ஹுசேன் தலித்திய வாதியாக இருப்பாரோ?
//
ஹுசைன் ஒரு இஸ்லாமியர். அவர் இஸ்லாமியர் என்பதாலேயே அவர் வரைந்த ஹிந்து தெய்வங்களின் படங்களை சந்தேகத்துடன் பார்க்கவைக்கிறது.
பொதுவாக இஸ்லாமியர்கள் இந்து தெய்வங்கள் மீது எப்படிப்பட்ட மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
நவம்பர் 29, 2009 at 6:54 பிப
//ராஜவம்சம், நீங்கள் எழுதுவது sarcasm-ஆ இல்லை நிஜமா என்று புரியவில்லை//
சீரியசான விவாதத்தில் பரிகாசம் கூடாது
நவம்பர் 29, 2009 at 7:18 பிப
//பெரும்பாலான இந்தியர்கள் நிர்வாணம் என்பது கேவலப்படுத்துவது என்று கருதுகிறார்கள்.//
Arbitrary யாக பெரும்பான்மையினரின் கருத்து மாறும் அதற்கேற்றாற்போல மற்றவர்களும் வளைய முடியுமா? எட்டாம் நூற்றாண்டு வரை மேலாடை அணியும் பழக்கம் இந்த நாட்டில் கிடையாது. கற்காலத்தில் இருந்து காந்தாரக் கலை உச்சத்தில் இருக்கும் வரை கிடைத்திருக்கும் சிலைகளிலோ ஓவியங்களிலோ மார் தெரியாத பெண்ணுருவமே இல்லை. இப்போது திடீரென்று தெய்வீக உருவங்கள் மேலாக்கு போட வேண்டும் கையில் செல் ஃபோன் வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்ல இந்த முட்டாள்கள் யார்? கஜுராஹோ சிலைகளின் கற்பூரவாசனை இந்தக் காட்டுக் கூட்டத்திற்கு தெரியுமா? அப்படி பெரும்பான்மை நிஜமாகவே offend ஆகிவிட்டால் கோவிலகளை மூட வேண்டியதுதானே? லிங்கங்களை உடைக்க வேண்டியதுதானே? ரவி வர்மா ஓவியங்களில் கிருஷ்ணன் ராதையின் மார்பை சுவைக்கும் படத்தைத் தேடிப் பிடித்து எரிக்கட்டுமே!
எது எப்படி இருந்தாலும் வன்முறை கொண்டு ஒரு கலைஞனை மிரட்டுவது வெட்கக் கேடு. முல்லா ஓமர் – பால் தாக்கரே எல்லோருமே ஒரே தட்டில் வைத்து தண்டிக்கப் பட வேண்டிய தீவிரவாதிகள். இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் முட்டாள்கள் உடனடியாக அடக்கப் பட வேண்டியவர்கள். இந்த முட்டாள்களில் பெரும்பான்மையினர் பிராமணர்களாகவோ ஆதிக்க சாதியினராகவோ இருப்பது அவர்களுக்கு இன்னும் அசிங்கம்.
நவம்பர் 30, 2009 at 4:03 முப
எதை எதனுடன் ஒப்பிடுவதென்றே உங்களுக்குத் தெரியாதா.. கண்ணன் ராதையுடன் இருப்பதைக் காட்டுவதற்கும், கண்ட பயல் எல்லாம் எம் சீதாபிராட்டியையும், சொல்லின் செல்வனையும் அசிங்கமாக வரைதலையும் ஒப்பிட்டு.. அது மட்டுமல்லாமல்.. துணைக்கு சில புராணக்கதைகளையும் சொல்லும் உங்களுடன் விவாதிக்க ஒன்றுமே இல்லை. நன்றி.
நவம்பர் 30, 2009 at 4:13 முப
//துணைக்கு சில புராணக்கதைகளையும் சொல்லும் உங்களுடன் விவாதிக்க ஒன்றுமே இல்லை.//
நீங்களும் கதை சொல்லித்தானே உங்கள் தரப்பை நியாயப் படுத்த முடியும்? மதங்கள் எல்லாமே கதைகள் தானே. என்ன வித்தியாசமென்றால் உங்கள் தரப்பை நிரூபிக்க உங்களிடம் இது போன்ற ஆதாரம் எதுவும் இல்லை. எந்தப் புராணத்திலும் நிர்வாணம் தவறென்று சொல்லப் படவில்லை. அதனால் தாராளமாக கோவித்துக் கொண்டு போங்கள். நீங்கள் விவாதிக்காததால் குளத்திற்கு எந்தக் குறையும் வராது. குறைந்த பட்சம் பிருகு பற்றி கற்றுக் கொண்டீர்களே. அதற்கு சந்தோஷப் படுங்கள்.
நவம்பர் 30, 2009 at 4:16 முப
//எந்தப் புராணத்திலும் நிர்வாணம் தவறென்று சொல்லப் படவில்லை//
அய்யா, நிர்வாணம் தவறேன்று நானும் சொல்லவில்லை.. ஆனால் இம்மாதிரி படங்கள் வரைந்த அந்தக் கலைஞனின் எண்ணம் தான் தவறு.. என்று சொல்கிறேன்.
நவம்பர் 30, 2009 at 4:22 முப
//நீங்கள் விவாதிக்காததால் குளத்திற்கு எந்தக் குறையும் வராது. //
ஐயா நான் விவாதிக்கத் தயார்.. நல்லதொரு விஷயங்கள் பற்றி.. நான் இப்போதுதான் நிறைய விஷ்யங்களைக் கற்றுக்கொள்ளவே ஆரம்பிக்கிறேன்.. ஆனால் நம் விவாதம் நம் அறிவு வளர்ச்சிக்கு உதவ வேண்டுமே தவிர, ஒருவனின் தவறான செயல் அதை அவன் எவ்வளவு நியாயப்படுத்தினாலும் தவறு தான்.
நவம்பர் 30, 2009 at 4:28 முப
//என்ன வித்தியாசமென்றால் உங்கள் தரப்பை நிரூபிக்க உங்களிடம் இது போன்ற ஆதாரம் எதுவும் இல்லை.//
ஹா ஹா.. ஏன் இல்லாமல். அதுதான் முதலிலேயே லிங்க் கொடுத்தேனே.. அது ஒன்றும் சொந்தக்கதையல்ல..இன்னும் வேண்டுமானால் எனது சைவசமய நண்பர்களிடம் கேட்டு வாங்கி தரமுடியும்.. (வைணவத்தை பற்றி த் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தினால் மற்றவற்றில் அதிக பரிச்சயம் இல்லை)
அப்புறம் அகலிகையிடம் அபசாரப்பட்ட இந்திரன் கதி தெரியும்தானே.. சீதையிடம் வந்து அபசாரப்பட்ட காக்காசுரனின் கதையும் தங்களுக்கு தெரிந்திருக்கும்.. அதே மாதிரி தவறைச் செய்தவர் தான் இந்த ஹூசைன்.
நவம்பர் 29, 2009 at 8:42 பிப
Very good article!!!
This Dondu old man always against with Islam and muslims.
He has got jealous with muslim community.
Dondu – Please read Quran and speak about Islam.
Thanks
Taj
நவம்பர் 30, 2009 at 12:34 முப
முகலாய மன்னன் ஔரங்கசீப் பற்றி ‘வரலாற்று ஓவிய நிகழ்ச்சி’ முடக்கப்பட்டது நினைவிற்கு வருகிறது.
மேலுள்ள கருத்தை எதிர்வாதமாக வைக்கவில்லை. படைப்புகள் எவருக்கும் புண் படும் வகையிலிருப்பின் அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இயலும்.
நவம்பர் 30, 2009 at 1:14 முப
With due respect, I disagree with your article. Hussein drawings are an offence to the majority of the Hindus.PERIOD. Only small minority know about these drawings is a spurious argument. I do not have to have the knowldge of the vedas to see what is offensive to me.Also, with artistic freedom comes with social responsibilities. You cannot have one without the other.
The Bible does not say that you CANNOT draw naked/copulating postures of J.Christ/Mary.Of course you cann see innumerable pictures and paintngs of naked angles, saints in lot of the famous popular churches.Drawing Christ/Mary naked and copulating might be a right of an individual but is is in poor taste and is not expected of a CULTURED, CIVIL PERSON. Such acts deserve total contempt. Besides, Hussein will not DARE to draw Christ or Mary naked as he knows the consequences.
We poor hindus are the mat for everyne to walk over. The funny thing is not only we allow this to happen but some of us actually SUPPORT these vermins, in the name of liberty and describing Hinduisim being a liberated religion, blah, blah blah, etc, etc. I condem such views more than Hussein’s paintings.
நவம்பர் 30, 2009 at 1:39 முப
Under Ian law freedom of expression is not a right without restrictions.Husain is careful when muslims’ sentiments are against such works of art.He can respect sentiments of Hindus too and withdraw the controversial paintings. He cannot travel to gulf states if the sentiments of muslims are affected.Hindus are more tolerant and the pseudo-seculars are with him.Let us see for how long this goes on.No body exiled him. He is a rich painter who can afford a luxurious life and travel to UK and gulf.
Freedom of expression is not a license to play safe with one community and wantonly
hurt the feelings of a section of another
community.His supporters should understand this.
நவம்பர் 30, 2009 at 3:16 முப
@ஆர்வி
ஹுசைன் ஒரு முசல்மான், நமது தத்துவங்களை உணர இயலாத/விருப்பமில்லாதவன். அவன் வரையும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சீதையையும் அனுமனையும் வைத்து வரைந்ததாக படித்தேன், பார்வதியும் நந்தியும்/சிங்கமும் என்றும் படித்தேன். நிஜமாகவே இசுலாமிய வெறியன் அவன்.
நீங்கள் ரொம்பவுமே நியாயமாக இருப்பதாக எண்ணிக் கொண்டு பேசுகிறீர்கள். உங்களுக்கு உலகம் தெரியவில்லை என நீங்களே வேறு தருணத்தில் ஒப்புக் கொண்டது இங்கும் பொருத்தமாகவே எனக்கு படுகிறது.
ஒன்று தெரிந்து கொள்ளுங்கள், உங்களை போன்று ரொம்பவும் புரிதல் உள்ளவர்கள் அடிக்கடி unpleasant surprise உங்களால் டிஃபண்ட் செய்யப்படுபவர்களிடமிருந்தே பெற்றுக் கொள்ள நேரிடும்.
நான் தெளிவாகவே உள்ளேன். அந்த சில்லுண்டிப் பயல் ஹுசைன் லண்டனிலோ அங்கு வேறு எங்கொ இருந்து தொலைக்கட்டும். இங்கு வேண்டாம், தேவைல்லாமால் ஏன் ரத்தம் சிந்த வேண்டும் அவன்?
//இந்த முட்டாள்களில் பெரும்பான்மையினர் பிராமணர்களாகவோ ஆதிக்க சாதியினராகவோ இருப்பது அவர்களுக்கு இன்னும் அசிங்கம்.//
உங்களைப் போன்றவர்களிடம் தன்மானம் இல்லாதது அதைவிட அசிங்கம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
திசெம்பர் 1, 2009 at 12:55 பிப
//சீதையையும் அனுமனையும் வைத்து வரைந்ததாக படித்தேன், பார்வதியும் நந்தியும்/சிங்கமும் என்றும் படித்தேன். //
You have seen none of this and you are willing to pass judgment on Hussein’s work purely on hearsay. Just a “படித்தேன்” is enough to justify all the hatred you are spewing on a man! Why cant you limit your opinion to things you actually know of? I have already noticed in your earlier posts you talk about so many things with half baked knowledge but in the voice of an expert! What a pathetic loser you are Mr. Dondu Raghavan! Shame on you.
நவம்பர் 30, 2009 at 3:57 முப
//ராகவன், ஹுசேனின் செய்கை சமூகத்தை பாதிக்கிறது என்று சொல்கிறீர்கள். யார் இந்த சமூகம்? நான் அதில் உண்டா//
ஆர்.வி ஐயா, உங்க வீட்டை விட்டு வெளில வந்துட்டாலே அவங்க சமூகம் தான்.. ஒரு கலைஞன் தன் செயலால் ஒருவர் மனம் வருந்தும்படி செயல்பட்டாலும் தவறே.. அதை ஹிந்துமத சம்ப்ரதாயங்கள் மூலம் நியாயப்படுத்த முயற்சிப்பவர்கள்… அதே ஹிந்து சமயத்தின் பிற கோட்பாடுகளை அறிவரா..இதே மாதிரி ஓவியத்தை ஒரு ஹிந்து வரைந்தாலும் தவறு தான். அவனுக்கு ஹூசைன் அவர்களுக்கு தரும் தண்டனையை விட இரு மடங்கு தரவேண்டும்.
நவம்பர் 30, 2009 at 5:53 முப
//நான் தெளிவாகவே உள்ளேன். அந்த சில்லுண்டிப் பயல் ஹுசைன் லண்டனிலோ அங்கு வேறு எங்கொ இருந்து தொலைக்கட்டும். இங்கு வேண்டாம், தேவைல்லாமால் ஏன் ரத்தம் சிந்த வேண்டும் அவன்?//
பூமிக்கு பாரமாக எத்தனையோ ஜீவராசிகள் இந்தியாவில் உலாவும் போது ஒரு கலைஞனுக்கு இடமில்லை என்பது வேதனையான விஷயம். இது காந்தி பிறந்த மண். ரத்தம் சிந்தும் என மிரட்டும் காட்டு மிராண்டித்தனத்திற்கு ஒரு போதும் இடம் கொடுக்க முடியாது. இந்து தீவிரவாதம், முஸ்லீம் தீவிரவாதம் இரண்டும் ஒன்றை ஒன்று வளர்த்துக் கொள்ளும் விஷச் செடிகள். அடியோடு களையப் பட வேண்டும்.
//உங்களைப் போன்றவர்களிடம் தன்மானம் இல்லாதது அதைவிட அசிங்கம்.//
உங்கள் பார்வையில் மனித நேயமும், எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் சம உரிமை உண்டு என்ற நிலைப்பாடும் தன்மானத்திற்கு எதிரிகள் என்றால் நான் தன்மானம் இல்லாதவனாகவே இருந்து விட்டுப் போகிறேன். என் பார்வையில் நீங்கள் ஒரு காட்டு மிராண்டி என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.
திசெம்பர் 1, 2009 at 3:30 முப
Mr Vithakan, to classify Hussein as an artist is equivalent to saying Islam is a peaceful religion.Where were the protectors of the rights of individual, yourself included, when Taslima Nasrin was hounded out of India?Where was our darling Arunthathi Roy, champion of the downtrodden? Where were the protests when De Vinci code was banned? All I can see here is a selctive anti hindu narrow mindedness.
Millions of Hindus worship Lord Rama, Sita and in potraying them naked and in vulgar postures delibrately and repeatedly in spite of loud protests and numerous court cases, this scum called Hussein,had lost all credibilities as an artist and should be treated as a rabid dog and a scum of the society.
Yes, India is the birth place of Gandhi, the FATHER of appeasemnt of militant Islam. It is also the birthplace of Sivaji, Tilak and numerous warriors belonging to our Dharma. It is the puniya bhoomi of Lord Krishna who advocates action against Adharma. Let us all show some Kshatriya sprit, bit of back bone and protect our eternal Dharmic culture.
திசெம்பர் 1, 2009 at 4:03 முப
Well that is a load of RSS crap. You can heap it on your fellow terrorists and leave normal Indians out.
For the record, those who threatened Taslima, those who called for a ban on Da Vinci Code and those who tore down Hussein’s paintings, they all follow the same philosophy – the philosophy of intimidation. They will all meet the same fate – rejection from the democratic society. You will remain the miscreants that you all are perfectly capable of, and never the leaders which you dont deserve to be.
திசெம்பர் 1, 2009 at 11:41 பிப
Mr Vithhakan, only problem with your point of view is that YOU KEPT QUIET REG TASLIMA,AND DE VINCI CODE, DANISH CARTON episodes.Now you are full of rage and bursting at the seams defending this creep Hussein. Where was your rage, anger and protests during those episodes? You can argue for all you want till cows come home but the fact remains that YOU KEPT QUIET, like all the other pseudosecularists. Blaming RSS, etc is the usual tactic employed by people like you to deflect attention when confronted with this simple truth
Anti hindu and selective defender of rights, eh? Also, do not speak for normal Indians as if such normal Indians have voted unanimously for you to be their spokesperson. You cannot and I certainly do not claim such privileges. Your view is yours. Mine is mine.
திசெம்பர் 2, 2009 at 2:59 முப
Of course I will speak for the majority of the Indians. And I will keep telling people like you to shut up. We cant let religious fanatics to dictate terms. Hearing Hindu fundamentalists like you behave as though this land belongs to you gets my blood boiling. No wonder BJP got whacked in the parliamentary elections.
திசெம்பர் 1, 2009 at 12:08 பிப
well, here it is!
a believer and a person who is practising hindu form of worship has drawn this…should this artist also be banned and bullied?
http://rudhrantamil.blogspot.com/2009/12/blog-post.html
i just wanted to send the image, but my inadequacy in computer techniques have made me send this link!
திசெம்பர் 1, 2009 at 12:28 பிப
//Mr Vithakan, to classify Hussein as an artist is equivalent to saying Islam is a peaceful religion//
I have never come across anything like this: classifying artists according to religious sensibilities.
An artist is an artist is an artist.
Rama should join that club of artlessness; therefore, should not enter into any definition of art.
What is being discussed here is the impact his art has in the other world of artlessness.
For e.g. Dondu Raagavan’s comments come from the world of religion and a world of artlessness or, philistines.
திசெம்பர் 2, 2009 at 3:19 முப
My point being:
Hussein is an artist.
Islam is a religion of peace.
Karunanithi loves Lord Rama
Barrack Obama of course deserves Nobel peace prize
My golf game is better than to Tiger Woods
All above staements are of course ridiculous.
By the way, art is in the eye of the beholder.What is artistic to you might be crap to me and vice versa.
Frankly, not only I find this creep’s so called art work disgusting and wants me to throw up, but could not see any ” artistic merrit” in them.
திசெம்பர் 2, 2009 at 3:28 முப
//By the way, art is in the eye of the beholder.What is artistic to you might be crap to me and vice versa.
Frankly, not only I find this creep’s so called art work disgusting and wants me to throw up, but could not see any ” artistic merrit” in them.//
Fair point. You dont have to like his work. You dont have to call him an artist. But that cant stop him from practicing his art. Your liking or not liking something is irrelevant. Forcing your views onto others and scaring someone into submission is not democratic.
திசெம்பர் 1, 2009 at 12:42 பிப
ராகவன் உங்கள் முன்னோர் யார்? அவர்கள் உங்களுக்கு தனியாக என்ன சொன்னார்கள்?
உங்கள் எழுத்துகளில் ஜாதிய நெடி நிறைய. மனத்தை மாற்றி உங்கள் முன்னோர்கள் என்று எவரும் தனியாக இல்லை என்று நினைக்கப்பழகுங்கள்.
முனிவாகனன் என்ற பூணுல் போட்ட பிராமணன்?
முனிவாகனன் எனபது திருப்பாணாற்றாழ்வாருக்கு இடப்பட்ட திருநாமம்.
அவரைச் சுமந்தவர் லோகசாரங்க முனிவர் – the high priest of Srirangam.
ஆயிரந்தான் மதம் தனக்கென ஒரு கருத்தைக்கொண்டிருந்தாலும், பார்ப்பனர்கள் பூணுல் போடுவது ஒரு சாதிச்சடங்காகவே.
அப்படித்தான் பிறராலும், பார்ப்பனராலும் கணிக்கப்படுகிறது.
உங்கள் முன்னோர்கல் உங்களுக்குச் சொன்னார்கள் என்று விளம்புவதிலிருந்து நீங்கள் உஙகளை வாழும் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திக்கொள்கிறீகள். அது கண்டிப்பாக உங்கள் மீது வெறுப்பைச்சம்பாதிக்கும்.
You cant blame others for a reaction, which is human and natural.
திசெம்பர் 2, 2009 at 4:21 முப
//அவரைச் சுமந்தவர் லோகசாரங்க முனிவர் – the high priest of Srirangam.//
தவற்றைத் திருத்தியமைக்கு நன்றி.
//உங்கள் எழுத்துகளில் ஜாதிய நெடி நிறைய. மனத்தை மாற்றி உங்கள் முன்னோர்கள் என்று எவரும் தனியாக இல்லை என்று நினைக்கப்பழகுங்கள்//
ஹா ஹா.. என் தந்தை, அவர் தந்தை அவருடைய தந்தை இவர்கள் தான் நான் கண்ட முன்னோர்கள். அவர்கள் சொல் போதும் எனக்கு.. மற்றவரின் புலம்பல்கள் தேவையில்லை.. இன்னொன்று பூணூல் மூன்று வர்ணத்தார்க்கும் உரியது..
என்னைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு? ஜாதி நெடின்னு சொல்றீங்க..
நான் மணக்கப்போகும் பெண் என் ஜாதி (பிராமண)அல்ல.. கடந்த 3 வருடமாக நாங்கள் இருவரும் தாய் தந்தையர் சம்மதத்திற்காக போராடுகிறோம். ஒருவரை அவரின் சில வார்த்தைகள் பற்றி வைத்து மட்டும் எடை போடும் தவறான குணம் உங்களிடம் உள்ளது.. அதை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள்.
கடைசியாக ஒன்று, நான் வைஷ்ணவனாக வாழ விரும்புபவன்.. எனக்கு பிராமணனாக இருக்கும் தகுதி கிடையாது
திசெம்பர் 2, 2009 at 6:01 முப
All the best for your love story. I hope your parents agree to the marriage and you both have a long and joyful life together.
That aside, there are seriously disturbing assumptions in your post. If poonul belongs to three varnas, what about the fourth? Are the fourth varna people, by birth, not good enough to be equated with the other three? Are you going to tell me a young dalit child born into this world should already be slotted into a corner of the society and denyied certain social respect reserved only for children born in upper caste?
The other one pertains to your last sentence when you claim you are not fit enough to be a brahmin While you may see it as a humble expression, it is actually giving undue importance to the brahmin caste. There is nothing great about being a brahmin. It is very important to be wise and knowledgeable and just. It is more important to be kind and loving and understanding. There is no big deal about being born in a particular caste.
திசெம்பர் 1, 2009 at 12:44 பிப
I am referring to Ragavan, who is replying to Viththakan. Not Dondu raagavan.
திசெம்பர் 1, 2009 at 12:59 பிப
In my view, an artist can draw anything to his artistic satisfaction – be it a religious subject or common one. Renaissance artists have drawn Jesus naked. Renaissance paintings have become classical art, cherished and preserved in European museums at expensive cost.
Can an artist draw a naked figure of a religious icon of another religion? Can an artist depict Mohameed in picture, as the danish artist did?
Of course, they can. They should if they feel they want to express their art that way.
Then, what the hiccup?
If he takes up such subjects which will, in the general reckoning, offend the religious sensitivities, he shoud forsee such possible offence. He should then display his art only amoung an eclectic group of fellow artistis or art connoissuers. Never among the people, who cant see an art as an art.
Christians are of two kinds: one liberal who can treat caricature of Jesus or Mary as fun, while at the same time, treating them far away from their religious belief. In other words, they separate art from religion.
Another group is not liberal. They dont want to treat art and religion as water-tight compartments.
An artist should draw targetting the first group, in addition to his own eclectic one, aforesaid.
In India, among Hindus, are such two group in existence? Not, as far as I think.
In that case, an artist can draw a naked saraswati, and should not display it here.
It is not a place for his art.
About Muslims, there is no question of any groups. They have nothing to do with anyting whatsoever which even innocently play with their religion.
Hindus should no longer pretend to be liberal. They should join with Muslims to covet the title of Religious fanatics.
Why to pretend?
No artist likes to display his pantings among philsitines. If he does, he is an idiot.
Art connoiseurs welcome all paintings, and they have no religion. In fact, for them, as Keats said,
‘Beauty is truth, truth beauty,’ – that is all ye know on earth, and all ye need to know.’
For artist, art is religion.
கலையே தெய்வம்.
இக்கருத்தைக்கொண்ட கண்ணதாசன் சினிமாப்பாடல் வரி உடனே நினைவுக்கு வரவைல்லை.
திசெம்பர் 1, 2009 at 4:53 பிப
so now what RV? am i supposed to go one giving “unpleasant” surprises? have you not yet seen through the pseudoconcerns and pseudofriendships? i am sorry that i have wasted my time (owing to my poor typing skill)..are you still with your friends? i am!!
திசெம்பர் 1, 2009 at 4:54 பிப
so now what RV? am i supposed to go on giving “unpleasant” surprises? have you not yet seen through the pseudoconcerns and pseudofriendships? i am sorry that i have wasted my time (owing to my poor typing skill)..are you still with your friends? i am!!
திசெம்பர் 2, 2009 at 3:31 முப
Mr Vitthagan, hang to your pants now. Answer my question and do not deviate from the topic.
WHERE WERE YOU WHEN NASLIMA TASARIN WAS HOUNDED OUT? Where was your rage then? Where was your protest about De Vinci code THEN and not belatedly now?
Where was your anger and all that steam coming out of your nostrils now, during the Danish carton times?
Of course we all know that you speak for the majority of the Indians. Of course we all know that you have the certficate from your shrink to say that you are sane.
திசெம்பர் 2, 2009 at 4:03 முப
I thought those were rhetorical questions. Or do you really want to know my whereabouts when those incidents happened? I have been writing in various forums and news groups for the past 14 years. Google archives carry a lot of my mid 90s posts. You can check it out if you want to verify the consistency of political/social stance. As for my shrink’s certificate, he is a mussalman. So is it valid in your books or should a brahmin certify me sane?
திசெம்பர் 2, 2009 at 6:19 முப
Vithagan, as long as someone had certified you sane, that is ok with me!
No luck on my search in google reg your activities
திசெம்பர் 2, 2009 at 2:20 பிப
That is too bad. Anyway, let me see how you react the next time a muslim is under attack from his / her own community, like taslima was, and see if your sense of social balance is intact or if you choose to step in only to protect your hindusim.
திசெம்பர் 2, 2009 at 11:42 பிப
Obviously,as expected and suspected, none exists reg your claims about defending the downtrodden. Cheers, have a good day
திசெம்பர் 3, 2009 at 5:47 முப
Yoiu will find only what you want to find. Well, RV has read some of my posts in other sites and he knows where I stand. I cant be bothered about proving my credibility to every RSS member in town. I hope you show equal enthusiasm and commitment in defending the rights of muslims and dalits as you have shown in hussein bashing here. Good day to you too.
திசெம்பர் 3, 2009 at 7:09 முப
பல மறுமொழிகளுக்கு விரிவாக பதில் எழுதினேன், ஆனால் அதை என் பிரவுசர் சாப்பிட்டுவிட்டது. மீண்டும் எழுத அலுப்பாக இருக்கிறது. இந்த முறை சுருக்கமாக எழுத முயற்சி.
என் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவளுக்கு ஹுசேன் மேல் (என் மேலும்) பயங்கரக் கடுப்பு. ஹுசேன் செய்தது தவறு என்பதில் அவளுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதற்கு என்ன தண்டனை என்று கேட்டேன். அவள் இதற்காக என்ன ஜெயிலிலா போட முடியும், போடா போடா புண்ணாக்கு என்று நகர்ந்துவிட வேண்டியதுதான் என்று சொன்னாள். அவள் சொன்னதிலிருந்து என் பதிவில் ஒரு விஷயம் தெளிவாக இல்லை என்பதை புரிந்துகொண்டேன். ஹுசேன் செய்தது தவறு என்று கண்டிக்கிறீர்களா? தாராளமாக கண்டியுங்கள். அது உங்கள் கருத்து. ஹுசேனுக்கு நிர்வாண சரஸ்வதி படம் வரைய எவ்வளவு உரிமை உண்டோ அதே அளவு உரிமை ராகவனுக்கு ஹுசேனின் படங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை என்று சொல்ல, ஹுசேனை கன்னா பின்னா என்று திட்ட உரிமை உண்டு. ஆனால் ஹுசேனை தண்டிக்க வேண்டும், ஜெயிலில் போட வேண்டும், சில்லுண்டிப் பையன் ரத்தம் சிந்த வேண்டும் என்று சொல்கிறீர்களா, அது தவறு. commie.basher சொல்வது போல இன்றைய சட்டமே அவருக்கு எதிராக இருக்கலாம். அந்த சட்டம் மாற்றப்பட வேண்டும் என்பது என் உறுதியான கருத்து. அவ்வளவுதான். (தஸ்லிமா, ரஷ்டி இந்தியாவுக்கு வந்து போகிறார்கல், அதனால் சும்மா பிலிம் காட்டத்தான் ஹுசேன் மேல் கேஸ் போடுகிறார்களோ என்று தோன்றத்தான் செய்கிறது.)
ராகவன், இணைய தாசில்தார்கள் மனம் புன்படுவதைவிட என் முன்னோர்கள் சொல்வதுதான் எனக்கு முக்கியம், அதனால் பூணூல் போடத்தான் போடுவேன் என்று சொல்கிறீர்கள். (அப்புறம் ஒருவர் மனம் புண்பட்டாலும் தவறுதான் என்றும் வேறு ஒரு மறுமொழியில் சொல்கிறீர்கள்.) என் கருத்தில் நீங்கள் எந்த தவறையும் செய்யவில்லை. அதே மாதிரி ஹுசேனும் அடுத்தவர் மனம் புன்படுவதை விட என் கலை முனைவு சொல்வதுதான் எனக்கு முக்கியம் என்று சொல்ல அவருக்கு உரிமை உண்டல்லவா? அவருக்கும், மற்றவர்களுக்கும் சரஸ்வதி மட்டுமல்ல, யாரையும் – முகமதாகட்டும், ஏசுவாகட்டும் – நினைத்தபடி பயம் இல்லாமல் வரையும் எழுதும் நிலை நாட்டில் உருவாக வேண்டும் என்றுதான் சொல்ல வருகிறேன். இணைய தாசில்தார்களை கண்டுகொள்ளாமல் இருப்பதே உத்தமம் என்று எழுதுகிறீர்கள். ஹுசெனைக் கண்டிப்பதில் உள்ள தாசில்தார்த்தனம் உங்களுக்கு தெரியவில்லையா? அப்புறம் அதே லோக சாரங்க முனிவர்தான் பானாழ்வாரை கண்டபடி திட்டினார், பெருமாள் சொன்ன பிறகுதான் ஆழ்வாரை தூக்கி சென்றார் என்பதை நினைவூட்டுகிறேன். பெருமாள் தலித்களை திட்டாதே என்று சொல்வது மிக அபூர்வம்.
உங்கள் காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
commie.basher, டாக்டர் ருத்ரனின் ஆர்ட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஆட்சேபனை இல்லையா? அவர் ஹிந்து என்பதை நினைவூட்டுகிறேன்.
வித்தகன், வேதம்/ஆகமம் பற்றி நான் சரியான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை என்று நினைக்கிறேன். எதிர்ப்பவர்கள் வேதத்துக்கு எதிரான செயல், ஆகமத்துக்கு எதிரான செயல் என்று எதிர்க்கவில்லை. தாங்கள் புனிதமாக மதிக்கும் விஷயத்தை கேவலம் என்று நினைக்கும் முறையில் வரைந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். வேதத்தில் நிர்வாணம் தவறு என்று எழுதவில்லையே, சுய இன்பம் மோசமான விஷயம் என்று எழுதவில்லையே என்று வாதிடுவது எங்கோ ஒரு டான்ஜெண்டில் போகிறது, அவ்வளவுதான்.
அப்புறம் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டீர்கள். நூறு இருநூறு வருஷத்தில் கட்டப்பட்ட கோவில்களில் நிர்வாண சிலைகள் பொதுவாக இருப்பதில்லை. கஜுராஹோ காலத்தில் இருந்த விழுமியங்கள் ஐரோப்பாவுடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு வெகுவாக மாறிவிட்டன. இன்றைய சமுதாயத்தில் வளரும்/வளர்ந்த பெரும்பாலோருக்கு நிர்வாணம்=ஆபாசம். அவர்களிடம் கஜுராஹோ காலத்து விழுமியங்கள் உன்னிடம் இல்லையே என்று கேட்கிறீர்கள். இது இன்னொரு டான்ஜென்ட் மட்டுமே.
எனக்கும் உங்களுக்கும் ஹுசேன் பற்றி இசைவு இருப்பது தெளிவு. ஆனால் உங்கள் வாதங்கள் சாதரணமாக இருப்பது போல வலுவாக இல்லை என்று எனக்கு தோன்றுகிறது.
தாஜ், எரிச்சல் ஊட்டாதீர்கள். டோண்டு தன மனதில் பட்டதை தைரியமாக சொல்கிறார். அவரோடு எனக்கு ஆயிரம் கருத்து வேறுபாடு உண்டு. ஆனால் ஹுசேனை எதிர்ப்பதால் ஒருவரை இஸ்லாமிய எதிர்ப்பாளர் என்று முடிவு கட்டுவது உங்கள் முட்டாள்தனம் மட்டுமே.
rama, // .Drawing Christ/Mary naked and copulating might be a right of an individual but is is in poor taste and is not expected of a CULTURED, CIVIL PERSON. Such acts deserve total contempt. // இதுதான் ஏறக்குறைய என் மனைவியின் நிலையம். எனக்கும் இதில் முழு இசைவே. ஆனால் poor taste is not a crime!
அப்புறம் வித்தகனின் சில மறுமொழிகளை வினவு தளத்தில் மட்டுமே படித்திருக்கிறேன். அவர் தஸ்லிமா பற்றி என்ன சொன்னார் என்றெல்லாம் நினைவில்லை. ஆனால் என்ன சொல்வார் என்று அனேகமாக தெரியும். தவறு என்று சொல்ல தயங்கமாட்டார் என்பதே என் எண்ணம்.
வித்தகனை விடுங்கள், நீங்கள் தஸ்லிமா, டாவின்சி கோட் etc . பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தவறு என்று நினைக்கிறீர்கள் என்றுதான் தோன்றுகிறது. அப்படி நினைத்தால், ஹுசேனுக்கு மட்டும் என் எதிர்நிலை எடுக்கிறீர்கள்? இல்லை தஸ்லிமாவுக்கு நடப்பது அநீதி என்றுதான் நீங்கள் சொல்வீர்கள் என்று நான் நினைப்பது தவறா?
xyz, ஹுசேனை யாரும் நாடு கடத்தவில்லை என்பது உண்மையே. ஆனால் அவர் பயந்துபோய்தான் ஓடிவிட்டார் என்பதும் உண்மையே. அப்படி பயப்படும் நிலை அவருக்கு (தஸ்லிமாவுக்கு, ரஷ்டிக்கு) இருக்கக் கூடாது என்பதுதான் என் நிலை.
டோண்டு, மனதில் பட்டதை சொல்ல நியாயவான் என்ன அநியாயவான் என்ன? உலகம் தெரியவில்லை என்றால் பட்டுதான் தெரிந்துகொள்ள வேண்டும். 🙂 என்ன செய்வது?
டாக்டர் ருத்ரன், இல்லை இல்லை ஓவியர் ருத்ரன், நீங்கள் இவ்வளவு குசும்பு உடையவர் என்று தெரியாமல் போய்விட்டதே? 🙂 கலக்குகிறீர்களே! உங்களுக்கு தஞ்சாவூர் பக்கமா? 🙂
கலை என்ற விதத்தில் நான் உங்கள் ஓவியத்தை அவ்வளவாக ரசிக்கவில்லை என்று சொன்னால் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களே?
திசெம்பர் 3, 2009 at 8:08 முப
படம் கேவலமாக இருக்கிறது.
அது தான் நீங்களே சொல்லிவிட்டீர்களே…கேவலமான ரசணை ஒருவனுக்கு இருப்பது ஒன்றும் குற்றமல்ல என்று. ஆக டாக்டரு ருத்திரன் “பரிசுத்தமானவர்”.
ஷகீலா பிட்டுப்படம் எடுத்துவிட்டு பாரதரத்தினாவுக்கு ஆசைப்படக்கூடாது. அந்த கேவலமான ரசணைக்கு என்ன மதிப்போ அது தான் கிடைக்கும். அதை ரசிப்பதற்கென்று ஒரு சுயமைதுணக்கூட்டம் இருக்கும். அவர்கள் இந்தப்படக் கலைஞருக்கு பாரத ரத்தினா கொடுக்கவேண்டும் என்று போராட்டம் எல்லாம் கூட நடத்தலாம்….தவறில்லை. அதுக்காக பாரத ரத்தினா தூக்கிக் கொடுத்துவிடுவதா ?
நிற்க, அப்படி பிட்டுப்படம் எடுப்பது கேவலமான ரசணை தான் என்றாலும் அதைத் தடுக்க யாருக்கும் உரிமையில்லை என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.
திசெம்பர் 3, 2009 at 3:50 பிப
ஆர். வி! என் எண்ணத்தின் அடி நாதத்தின் மிக அருகில்தான் இருக்கிறீர்கள். வேதங்களில் உள்ளதா என்று நான் கேட்பதன் பொருள், இந்துக்கள் மனது புண்படும் படி இருப்பதாக பேசப்படுவதன் முகாந்திரம் (on what basis) என்ன என்பதுதான். உதாரணமாக, பாஞ்சாலி ஐந்து பேரின் மனைவி என்று நான் சித்திரம் வரைந்தால் யாரும் திட்டப் போவதில்லை. காரணம் அது ஊரறிந்த விஷயம். ஆனால் தசரதனின் மனைவிகள் கோசலை, கைகேயி, சுமித்திரை மூவரையும் வெண்குதிரைகள் புணர்வது போலவும், குதிரைகள் விந்துவை அவர்களுள் செலுத்தும் போது அக்குதிரைகளின் தலை வெட்டப் படுவது போலும் படம் வரைந்தால் எல்லோரும் கொதித்து எழுவர். ஆனால், புத்திரகாமேஷ்டி யோகத்தின் முக்கியமான நிகழ்வு இது. பெருவாரி மக்களுக்குத் தெரியாத காரணத்தால், அல்லது ஐரோப்பிய நாகரீக வரையறைகள் நமக்கு எது சரி அல்லது எது தவறு என்று நிர்ணயிப்பதால், இக்கதையை நான் சொல்வது இந்து மதத்தை இழிவு செய்வது என்றாகி விடுமா?
பலநூறாண்டுகள் முன்பு இப்போது இந்துக்கள் வணங்கும் தெய்வங்களின் உருவங்களுக்கு மேலாக்கு இல்லை. இடையிடையே இந்தியாவில் வேறு இன ஆட்சிகள் இல்லாமல் இருந்திருந்தால் அவர்கள் இன்னும் மாராப்பு இல்லாமே இருந்திருப்பார்கள். இப்போது இருக்கும் இந்துமத கலாச்சார எல்லைகளை வரையறுத்திருப்பது யார்? ஆதிகால சனாதவாதிகளா அல்லது இடையில் வந்த ஆங்கிலேயர்களா? ஒருவேளை முகலாய ஆட்சியே இன்னும் 200 வருடம் தொடர்ந்திருந்தால் லட்சுமியும் சரஸ்வதியும் புர்கா போட்டு வணங்கப்பட்டிருக்கலாம். அதன் பின் புர்கா போடாத லட்சுமியை இப்போது வரைவது தவறு என்று இந்துக்கள் யாராவது கொதிப்பார்களா?
நிர்வாண இந்து தெய்வ உருவங்களைப் பார்த்துக் கொதிப்பவர்களைப் பார்த்தால் எனக்குக் கோவம் வருவதன் காரணமே இதுதான்! எது ஒரிஜினல் கதை எது இடைச்செருகல் என்று ஆராயாமல் கலாச்சாரத்தை இந்த முட்டாள்கள் கட்டிக் காப்பதாக சொல்லிக் கொள்வது குரங்கு கைப் பூமாலையையே நினைவூட்டுகிறது.
புத்திர காமேஷ்டி யோகத்தின் அடுத்த நிலை ராஜ குருவானவர் பட்டத்து ராணியுடன் உறவு கொண்டு கர்ப்பமாக்குவதே. பிள்ளை இல்லாத ராணியை குதிரை புணர்ந்ததும் (அசுவமேத யாகத்தின் முடிவும் குதிரை பட்டத்து ராணியைப் புணர்வதே) ராஜ குருவின் பொறுப்பில் விடப்படுவார். ராணி கர்ப்பமடைந்த பிறகே ராஜ குரு அரண்மணையிலிருந்து வெளியேருவார். அந்தக் கால IVF முறை இதுதான்!
விசுவாமித்திரரின் இன்னுமொரு பெயர் “கருத்த முனி”. ராமனின் நிறமும் கருப்பு. ஆனால் அவன் சகோதரர்கள் நிறம் கருப்பு அல்ல. தசரதனுக்கு புத்திர பாக்கியம் இல்லாததால் புத்திர காமேஷ்டி யாகம் செய்வித்த பிற முனிவர்களும் கருப்பு நிறத் தோலுடையவர்கள் அல்லர். கதை புரிகிறதா? இவர்கள் மகாராணிக்குப் பாயசம் கொடுத்து ராமன் பரதன் லட்சுமணன் சத்ருகணன் பிறந்ததாக ராமாயணம் ஆரம்பிக்கிறது! ஒரிஜினல் கதையை பாயசம் கொடுத்ததாக மாற்றியது யார்? ஏன்? எப்போது? பாயசம் குடித்து கர்ப்பமாவதை விட இதில் ஒரு லாஜிக்காவது இருக்கிறதே. ராமன் பிறப்பில் பிழை வரக் கூடாதென்று கதையை மாற்றி சொல்லி விட்டு அதையே பிடித்துக் கொண்டிருந்தால் எப்படி சரியாகும்?
லட்சுமியின் மார் தெரிவது வெள்ளைக்காரனுக்கும் அரேபியனுக்கும் பொருந்தாதென்று மாற்றிவிட்டு அதையே தன் கலாசாரம் என்று அடித்து சொன்னால் ஏன் நம்ப வேண்டும்?
திசெம்பர் 3, 2009 at 7:29 முப
டாக்டர் ருத்ரன், உங்கள் ஓவியத்தை உங்களை கேட்காமலே இங்கே இணைத்துவிட்டேன். நீங்கள் ஆட்சேபிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கைதான். ஆட்சேபனை இருந்தால் சொல்லுங்கள், எடுத்துவிடுகிறேன்.
திசெம்பர் 3, 2009 at 8:48 முப
once i put something on the net it is for anyone to see and use..thanks RV for asking my permission!
திசெம்பர் 3, 2009 at 8:59 முப
“””டாக்டர் ருத்ரன், இல்லை இல்லை ஓவியர் ருத்ரன், நீங்கள் இவ்வளவு குசும்பு உடையவர் என்று தெரியாமல் போய்விட்டதே? 🙂 கலக்குகிறீர்களே! உங்களுக்கு தஞ்சாவூர் பக்கமா? :-)””
நான் தஞ்சாவூர் பக்கமா என்று நூறுஆண்டுகளுக்கு முந்தைய என்மூதாதையர் பற்றி அறியாததால், தெரியாது.
ஆனால், என் ஜீன்களில் பிராமண (பார்ப்பனவும் சேர்த்துதான்) இருக்கிறது.
குசும்பு? 🙂
திசெம்பர் 4, 2009 at 7:18 முப
டாக்டர் ருத்ரன், உங்கள் ஓவியத்தை இங்கே மீள்பதிவு செய்ய அனுமதித்ததற்கு நன்றி!
ஒக்ரோபர் 23, 2010 at 10:19 முப
//என் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவளுக்கு ஹுசேன் மேல் (என் மேலும்) பயங்கரக் கடுப்பு. ஹுசேன் செய்தது தவறு என்பதில் அவளுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதற்கு என்ன தண்டனை என்று கேட்டேன். அவள் இதற்காக என்ன ஜெயிலிலா போட முடியும், போடா போடா புண்ணாக்கு என்று நகர்ந்துவிட வேண்டியதுதான் என்று சொன்னாள்////
RV
உங்கள் மனைவியின் மன நிலையே எனக்கும்.இங்கே பல பேர் பலவிதமாக விவாதிக்கிறார்கள் அவர்களுக்கு இணையாக என்னால் பேச முடியாது.
நானும் போடா போடா புண்ணாக்கு என்று தான் மனதில் நினைக்கிறேன் ஆனால் என் வழியை (வழிபாட்டை) இகழ்ந்த ஒருவனை கலைஞன் என்று எல்லாம் என்னால் மதிக்க முடியவில்லை. அவனை ஒன்றும் செய்ய முடியாது சட்டப்படி அவனுக்கு ஒரு குற்றமும் வராது ஆனால் எத்தனை பேருடைய வெளி சொல்ல முடியாத குமுறல் இருக்கும்.
என்னை பொறுத்தவரை அடுத்தவர் உணர்வுகளை புண்படுத்திய செயல் தவறு, உங்களால் என்ன செய்ய முடியும் என்கிற ரீதியில் தான் அந்த செய்கை உள்ளது. என் தெய்வம் (ஈகோ) அதனை ஒருவன் உள்நோக்குடன் சிறுமை படுத்துகிறான். அதற்கு பல வண்ணங்களில் (கருத்து சுதந்திரம், வேதத்தில் எதிர்ப்பு இல்லை, சிவலிங்க ஆராய்ச்சி இன்னும் எத்தனையோ) சாயம் பூசி நியாயபடுத்தும் கருத்துகளே இங்கே காண்கிறேன்.
மேலும் நீங்கள் குறிப்பிடும் மற்ற இயக்கங்களுடன் சேர்ந்து கொண்டு அவரை மிரட்டி நாமும் கைவெட்டி கும்பலை போன்ற மற்றொரு கும்பல் என பெயர் எடுக்க கூடாது.
அந்த வயதான சாடிஸ்ட் இப்படி படம் வரைந்த நோக்கம் என்ன என்று உங்களால் உணர்ந்து கொள்ள முடியவில்லையா? நம்மவர்கள் யாரவது அதுபோல செய்கிறார்களா? அந்த ஒரு சக மனித உறவுக்ககவாவது நம் பக்கம் தலையிடாமல் இருக்க வேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் கூட இல்லாத வெறியனாக தான் தெரிகிறான் அந்த கலைஞ்ஞன்.
இங்கே பலரின் கருத்துகளில் கூட தான் எடுத்த நிலைபாடு சரி எனவும் பிறரின் உணர்வுகளை பற்றி கண்டு கொள்ளாது மேதாவி தனமான விளக்கங்களும் தெரிகிறது.
மீண்டும் உங்கள் வார்த்தைகளையே சொல்கிறேன் அவரால் சிவனையும் உங்களால் அவர் கடவுளையும் சிருமைபடுத்திவிட முடியாது அப்படி செய்வது சாத்தியம் என்றால் அவர்கள் ஏதற்கு.
இங்கே சிறுமை படுத்த பட்டது நம் (மனிதர்களின்) உணர்வுகளை.
நீங்கள் வணங்கும் வழியை நாங்கள் எப்படியும் அசிங்கபடுத்துவோம் உங்களால் என்ன செய்ய முடியும் என்ற மமதையில்.
ஒக்ரோபர் 23, 2010 at 10:37 முப
அது அசிங்கமே இல்லை(பிரச்னைக்குரிய ஓவியங்கள் ) கலை என்றால் அவர்களின் நிலையே வேறு
தாயாக வணங்கும் தெய்வத்தை நிர்வனாமாக வரைவது எப்படி கலை ஆகும்.
தனங்களுடன் தேவியர் சிலை இருப்பது என்ன தவறு?
வீட்டிலே பெண்கள் இருப்பது போல கோவில் தேவியரின் சிலை, பெண்கள் என்பதை தாய்மையின் அடயாளமே ஆனா தனங்கள் அதனை தவிர்த்து ஒரு பெண்ணின் சிலையை எப்படி வடிக்க முடியும்?
தனம் இல்லாத தாய் யார் வீட்டிலாவது உண்டா? அவள் என்ன ஆபாசமா? ஆனால் தாயாக மதிக்க படுபவள் பிறரால் நிர்வாணமாக வரைய படும் போது அது அவன் கருத்து சுதந்திரம் என்று பொருத்து கொள்ள முடியுமா? மனக்குமுறல் கூட வராதா அதுவும் வரகூடாது அவர் செய்தது சரி நீங்கள் அவரை பற்றி எந்த கருத்தோ உங்கள் குமுறலை வெளியிடவோ கூட கூடாது என்கிற ரேஞ்சில் தான் இங்குள்ள மறுமொழிகளை காண்கிறேன்.
அவரின் தவறை அவருக்கு எடுத்து சொல்ல கூட ஏன் அது தவறு என்று எங்கள் உணர்வுகளை பதிவிட கூட எங்களுக்கு உரிமை மறுக்க படுகிறதா?
தேவிகளின் சிலை
அதனை எந்த எந்த பார்வையில் பார்க்கிறோம் என்பது அவரவர் பார்வையை பொருத்தது.
மரத்துக்கு கலர் புடவை சுற்றினாலும் முறைத்து பார்க்கும் நபர்களுக்கு தேவியின் சிலை அப்படி தெரியலாம், ஆனால் பக்தனுக்கு அவள் தாயகதான் தெரிகிறாள் ஒரு சிற்பிக்கு அதிலுள்ள குறைகள் தெரியலாம் எல்லாம் உணர்ந்தவனுக்கு எங்கும் இருப்பவளை சாதாரண மனித உருவில் அடைத்து அதன் பொருட்டு சண்டை போடும் நம்மை கேவலமாக தெரியலாம்.
அவ்வளவு ஏன் நாம் தினமும் பல பெண்களை பார்க்கிறோம் அவர்களை பார்த்தால் உடனே என்ன ஆபாசமா வந்து விடுகிறது? அது பெண்மையின் அடயாளம் அந்த எண்ணத்தில் பார்த்துதானே நாம் பெண்களுடன் பழகுகிறோம்?அதில் எப்படி விரசம் ? கோவில் சிலையையே ஆபசபடுத்தி பேசுபவர்கள் இன்னும் முதிர்ச்சி அடையாத மனநிலையில் உள்ளவர்களே.
ஒக்ரோபர் 26, 2010 at 4:57 பிப
சிவனடியான், பல கோவில் சிலைகள் உடலுறவு காட்சிகளை அப்பட்டமாக கான்பிப்பவை என்பதை மறுப்பதற்கில்லை.
ஹுசேன் செய்தது தவறு என்று சொல்வது வேறு, அவரை தாக்குவது வேறு. அந்த வித்தியாசம் இங்கே பலருக்கும் புரிவதில்லை. நீங்கள் தெளிவாக இருக்கிறீர்கள். நமக்கு தவறு என்று படுவதை அடுத்தவர்களுக்கு சொல்லும் உரிமை இருப்பது அவசியம் என்று நான் உறுதியாக கருதுகிறேன். என் மனம் புண்படுகிறது என்று ஹுசேனைத் தடுத்தால் குட்டைப் பாவாடை என் மனதை புண்படுத்துகிறது என்று சானியா மிர்சாவை ஒரு முல்லா தடுப்பார்; முகமதுவை கார்ட்டூன் வரைவதற்காக ஃ படவா தருவதும் நியாயப்படுத்தப்படும். அவற்றை தவிர்ப்பதற்காக தர வேண்டிய விலை இது என்றே நான் எண்ணுகிறேன்.
ஒக்ரோபர் 27, 2010 at 4:18 முப
அன்புக்குரிய ஆர்.வீ,
//பல கோவில் சிலைகள் உடலுறவு காட்சிகளை அப்பட்டமாக கான்பிப்பவை என்பதை மறுப்பதற்கில்லை.//
கோவில்கள் என்று எழுதி இருக்கிறீர்கள். எந்தக் கோவில்கள்? யாருடைய கோவில்கள்
இந்துக் கோவில்களில் புணர்ச்சி சிறபங்கள் இல்லை என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்
இந்துக்கள் தாங்கள் கடவுளுக்காக கட்டிய எந்தக் கோவிலிலாவது, அவர்கள வழிபாடு நடத்தும் எந்தக் கோவிலிலாவது புணர்ச்சி சிற்பங்கள் உள்ளனவா? இருந்தால் சொல்லுங்களேன்.
புததம்தம் வீழ்ச்சி அடைந்த காலத்திலேயே நாட்டிலே ஆன்மீக குழப்பம் இருந்தது. அப்போது வெளி நாட்டில் இருந்து இந்தியாவில் குடியேறிய பலர் அருவருப்பாக கருதக் கூடிய பல முறைகளை தங்கள் வழிபாடுகளாக இந்திய சமுதாயத்தில் புகுத்தினார்கள். அக்காலத்தில் கட்டப் பட்ட கோவில்களே நீங்கள் குறிப்பிடும் புணர்ச்சி சிற்பங்கள் உள்ள கோவில்கள் (இதைப் பற்றி சுவாமி விவேகானந்தர் சென்னை சொற்பொழிவில் சொல்லி இருப்பதை நீங்கள் படித்து இருக்க கூடும்). அவைகள் இந்துக் கோவில்கள் அல்ல.
நான் சிறுவனாக இருந்த போது பல கோவில்களுக்கு சென்று இருக்கிறேன். எந்த ஒரு இந்துக் கோவிலிலும் புணர்ச்சி சிறப்பத்தை பார்த்தது இல்லை. திரு. ஆர்.வீ. அவர்களே, நீங்கள் எங்காவது பார்த்து இருக்கிறீர்களா? இருந்தால் சொல்லுங்கள், நானும் தெரிந்து கொள்கிறேன்.
மற்றபடி இந்துக் கடவுள்களையோ, பிற மதக் கடவுள்களையோ அல்லது தூதர்களையோ
, சிறுமைப் படுத்தும் வகையில் துகில் உரிந்து படம் வரைபவர் யாராக இருந்தாலும் அதை கண்டிக்கிறோம், அத்தகைய படங்கள் அவசியமில்லாதது!
எம். எப் ஹுசேன் மாதுரி தீட்சித்தின் ரசிகர் என்று கேள்விப் பட்டு இருக்கிறோம். மாதுரி தீட்சித்தை வரைந்தால் கூட அவர் அனுமதி பெற்றுத்தான் வரைய வேண்டும்.
அந்தக் காலத்தில் யாரோ இந்துக் கடவுள்களை இதோ போல துகில் உரிந்து வரைந்து இருக்கிறார்கள். முதலில் அவர்களைப் போய் கண்டித்து விட்டு வா , என்று சொல்லுவது சாக்குப் போக்கே. அவர்கள் யார், பெயர் என்ன என்று தெரியாத போது எப்படி குறிப்பிட்டு கண்டிக்க முடியும்? எந்தக் காலமாக இருந்தாலும் , யாராக இருந்தாலும், மக்கள் மரியாதை செய்து வழிபடுபவர்களை துகில் உரிவது தேவை இல்லாத பிரச்சினையை உருவாக்குகிறது, எனவே கண்டிக்கிறோம்.
அந்தக் காலத்தில் வேட்டை ராஜா பல பெண்களைக் கற்பழித்து இருக்கிறான், அவனை நீ தண்டித்தாயா, அவனை முதலில் தண்டித்து விட்டு வா, அதற்குப் பிறகு இப்போது கற்பழிக்கப் படுவதை கண்டிக்கலாமா என்று யோசிக்கலாம், என்பது போல சிலர் எழுதுவதில் நியாயம் இல்லை, லாஜிக்கும் இல்லை!
ஒக்ரோபர் 23, 2010 at 11:43 முப
இந்து மதம் எந்த மாதிரியான வழிபாட்டையும் அனுமதிக்கிறது அதன் சுதந்திரம் எல்லாவற்றையும் நிர்வானமாக்குவதை புனிதமாக கருதுகிறது அதனை சொல்லி யாரும் எப்படியும் கேவலமாக சித்தரிக்கலாம் என்றால்(அப்படி சில இந்துக்களே தளங்களில் சொல்ல கேட்கிறேன் அதுவும் எழுத்துலக பிரபலங்கள் ) அந்த ஒரு வெட்கம் கெட்ட மதமே எனக்கு வேண்டாம்.புராணம் அப்படி சொல்கிறது என்றால் அது நிச்சயம் கொளுத்தவேண்டிய புராணம். நான் ஒரு இந்துவாக இருப்பதையே வெறுக்கிறேன்.
கடவுள் புராணத்திலோ வேதத்திலோ என் வழிபாட்டிலோ பிற மத வழிபாட்டிலோ எந்த ஒன்றினுக்குள்ளும் அடங்கி விட கூடியவர் அல்ல. கேவலம் அந்த சிலைகள் இறைவனுக்கு ஒப்பாகிவிடாது.ஆனால் அது தான் வழிபாட்டின் என் தேடலின் ஆரம்பம் என் முறையை நிந்திக்கும் ஒருவரை எல்லோரும் நல்லவர் அவர் செயல் சரி என்பீர்கள்
ஒலைசுவடியிலோ புத்தகத்திலோ உள்ள வேதம் ஒரு இறைவனை முடிவு செய்து விடாது அது வெறும் பேப்பர். அதிலுள்ள கருத்துகள் அனைத்தும் சரியா? அது பற்றி என் கவலை இல்லை.
என் வழிபாடு அதனை ஒருவன் கேவலபடுத்துகிறான் நான் அதுபோல எங்கேனும் செய்தானா? செய்வேனா? இந்த நியயபடுத்தலை தொடர்ந்து இன்னும் பல கலைஞ்ஞர்கள் இதே ரீதியில் உருவாகலாம்.
சமத்துவம், நல்லிணக்கம் என்பது என்ன? நானும் பிறரையும் பிறர் உணர்வுகளையும் மதிக்க வேண்டும் என் உணர்வுகளையும் இக்ழாதிருக்கவேண்டும்.
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என்பதற்கிணங்க மாதாவினை இழித்து செயல் புரிந்தவரின் மடமை கொளுத்தப்பட வேண்டியது. அது எம்மால் செய்ய முடியாத போது நம் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள கூட பத்வா போடும் நண்பர்களை என்ன சொல்ல?
எவனும் வந்து அடிப்பான் பேசாமல் இதுவும் நம் மதம் ஏற்றுகொள்கிறது வாலவிருங்கள் என்றால் உங்கள் கன்றாவி மதமே வேண்டாம்.
அமைதியாக அன்பாக சகிப்பு தன்மையுடன் இருப்பது அவசியம் ஆனால் இந்த செயல் அதனை தாண்டிய சகிக்க முடியாத செயல் அல்லது என் சகிப்பு தன்மையின் எல்லை குறைவு அல்லது பிறரின் சகிப்பு தன்மை எல்லை கடந்து விட்டது.
ஒருவன் என்ன வேண்டுமானாலும் செய்வான் எதையும் கானதிருக்க வேண்டுமா?
யாரும் சாணத்தையும் சந்தனத்தையும் சமமாக கருதும் அளவுக்கு பக்குவம் எய்தியவர்கள் இல்லை அந்த குற்ற செயலை நியயபடுத்துவதற்கு.
அதற்கு பதில் கொடுத்த இந்து இயக்கங்களின் வழிமுறை தவறானது அவ்வாறு பதிலடி கொடுக்க கூடாது என்பதில் நான் உடன் படுகிறேன். ஆனால் அந்த கொடூர குற்றத்தை நியாயபடுத்துவதை என்னால் சகிக்க முடியவில்லை. அது குற்றம், அதற்கு சட்டப்படி எதுவும் தண்டனை இல்லை என்பதால் எதிரி வலியார் என்பதால் அவர் செய்தது சரி என்று கூறுவது எப்படி? சிவ பெருமானே அப்படி செய்தாலும் குற்றம் குற்றமே.
என் வலியே அதனை நியாயபடுத்துவதும் நம்மை அறிவீலிகள் என்று நினைப்பதும் தான். அந்த ஓவியரால் என்ன அசிங்கம் ஏற்படுத்த முடியும்.
ஞமலி ஞாயிறை பார்த்து குறைப்பதை போன்ற செயல் என்று விட்டு விடலாம். ஆனால் அது குற்றம்.
ஒக்ரோபர் 27, 2010 at 5:44 முப
// கோவில்கள் என்று எழுதி இருக்கிறீர்கள். எந்தக் கோவில்கள்? யாருடைய கோவில்கள் // கஜுராஹோ.
ஒக்ரோபர் 27, 2010 at 11:28 முப
அன்ப்க்குரிய ஆர்.வீ,
கஜுராஹோ மட்டும் தானா, கொனாரக் கோவிலைக் கூட சொல்லாலாமே? ஆனால் இவை இந்துக் கோவில்களா? இந்துக்களால கட்டப் பட்டவையா? எந்த இந்துக் கடவுள்களை வணங்க இவை கட்டப் பட்டன என்று சொல்ல முடியுமா?
தஞ்சை பெரிய கோவில் சிவன் என்னும் இந்து தெய்வத்திற்காக , ராஜ இராஜ சோழன் என்னும் இந்து அரசனால் கட்டப் பட்டது.
மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் சொக்க நாதர் (இதுவும் சிவனுடைய பேர் ) , மீனாட்சி ஆகிய இந்து கடவுலரகளுக்காக , நாயக்கர் என்னும் இந்து அரசனால் கட்டப் பட்டது.
நீங்கள் குறிப்பிடும் கஜூராஹோ கோவில்கள் எந்த கடவுளுக்காக கட்டப் பட்டது?
லக்ஸ்மணன் கோவில் என்று ஒரு கோவிலுக்குப் பெயர் வைத்து இருக்கிறார்கள். உலகிலே இராம, சீதை, அனுமன் இல்லாமல் லட்சுமணன் மட்டும் தனியாக இருப்பதாக எந்த ஒரு கோவிலோ, சிற்பமோ , ஓவியமோ கூட இல்லை.
காமக் கலையில் விருப்பம் கொண்ட சிலர் சிற்பத்திலே அதை வடித்து அதைக் கோவில் என்றும் சொல்லி விட்டனர். யாராவது ஒருத்தர் மண்டையை உருட்ட வேண்டும் என்பதற்காக கடைச்யில் லக்சுமணன் பேரை வைத்து இருக்கின்றனர். இப்படி தான் கோவில்கள் அங்கே உள்ளன.
ஒக்ரோபர் 30, 2010 at 9:00 பிப
திருச்சிக்காரன், கஜுராஹோ சிவன் கோவில் என்று நினைவு.
ஒக்ரோபர் 31, 2010 at 6:36 முப
RV,
I heard as Laxman temple
நவம்பர் 17, 2013 at 5:46 பிப
எவர் ஒருவர் தன் மதத்தின் கொள்கைகளை மதிக்கிறார்களோ அவர்கள் பிறமத கொள்கைகளை பின்பற்றுபவர்களை அவமான படுத்துவதோ அவர்களின் நம்பிக்கைகளை சிதைப்பதோ இல்லை… எந்த மதமாய் இருப்பினும் நாம் யாரும் கடவுள் இல்லை நம்மை விட உயர்ந்த ஒரு சக்தி இந்த உலகில் இருக்கிறது என்ற புரிதல் வேண்டும்… ஒவ்வொருவரும் அவரவர் தாயை தந்தையை மதிப்பது போல் தான் அவரவர் பின்பற்றும் மதம் எல்லா மதக்கருத்துக்கும் எதிர்கருத்தை எல்லாராலும் சொல்ல இயலும் வாக்குவாதம் செய்ய வேண்டுமெனில் ஆனால் மதம் என்பது ஒருவர் வாழ்வில் நிம்மதியாக அமைதியான முறையில் பிறருக்கு உதவி வாழ வேண்டும் வாழ்க்கை என்பது ஒருமுறை என்பதை தான் குறிக்கிறது இங்கிருக்கும் அனைவரும் நன்கு படித்தவர்க்ளாகவும் அறிவு மிகுந்தவராகவும் தான் இருக்கிறீர்கள் .. அனைவரும் அப்படிதான் இருக்கிறோம் …ஆனால் சில நேரங்களில் பலர் இவ்வாறு விவாதம் செய்யும் போது அறியாமை தான் பலரில் வெளிப்படுகிறது… கடவுள் என்பவர் ஒரு நாளும் பூமியில் தோன்றமாட்டார் அப்படி அவர் தோன்றினாள் அவரும் மனிதராக தான் வாழ வேண்டும் …. இந்த உலகில் அப்படி பார்த்தால் சித்தர்கள் அனைவரும் கடவுள் தான் அவர்கள் எத்தனையோ கண்ணுக்கு புலப்படாத செயல்களை விளக்கிவிட்டு சென்றிருக்கிறார்கள் …. …. அதனால் மதம் என்பது உங்களில் மதத்தை ஏற்றிவிடாமல் பார்த்துக்கொள்வதே சிறந்தது… விவாதம் செய்பவர்கள் செய்து கொண்டே தான் இருப்பார்க்ள் பிற மதக்கொள்கைகளை மதிப்போம் பிறரை வாழவிடுவோம் ….
ஜூன் 25, 2020 at 6:31 பிப
[…] சிற்பிகளில் ராம்கிங்கர் பைஜ். எம்.எஃப். ஹுசேன் ஓவியங்களை அங்கும் இங்கும் […]