பட்ஜெட் உரையிலிருந்து:
117. With a view to ensuring that the views and thoughts of great Tamil Savants who dedicated their lives to the Tamil language, benefits not only the present but future generations also, the Tamil Nadu Government is implementing the scheme of nationalization of books of Tamil scholars. The books of 95 Tamil scholars have been nationalized by the State Government so far. Out of these, the works of 87 scholars have been nationalized by the DMK Government. After assuming charge by this Government in 2006 the works of 65 Tamil scholars including that of Parithimar Kalaignar, Pulavar Kuzhanthai, Muthamizh Kavalar K.A.P.Viswantham, Ilakkuvanar, Prof.Vellaivaranar, Dr.R.P.Sethupillai and Va. Suba. Manickam have been nationalised and solatium of Rs.4.86 crores have been given to their legal heirs. In continuation of this, this year books of 28 Tamil scholars namely Kuzhanthi Kavignar Ala.Valliappa, Kaviarasu Kannadhasan, Prof.Viayapuri Pillai, Pandithamani M.Kathiresan Chettiar, M.Raghavaiyangar, Pammal Sambandanar, A.Chidambaranathan Chettiar, M.S.Poornalingam Pillai, T.M.Baskara Thondaiman, Palur Kannappa Mudaliar, Raya.Chockalinganar, Dr.M.Varadharajanar, Dr.S.Akathiyalingam, Pavalar N.R.Natchiappan, Puliyur Kesikan, Writer Chandilyan, Writer V.M.Kothainayaki, Chinna Annamalai, Poovai S.Arumugam, N.V.Kalaimani, Kavingnar Murugusundaram, Pulavar T.Kovendan, Writer Sundara Ramasamy, Tirukural Mani, A.K.Navaneetha Krishnan, Lakshmi, Vaduvoor Duriasamy Iyengar, Jamathagni and J.R.Rangaraju will be nationalised and solatium will be given to their legal heirs having regard to the number of books written by them, their social impact and their literary value.
ஹைலைட் செய்யப்பட்டிருக்கும் பெயர்களில் ஒரு அச்சுப்பிழை இருக்கிறது என்று நினைக்கிறோம். ஏனென்றால் 28 பேர் என்று சொல்லிவிட்டு 29 பெயர்கள் பட்டியல் இடப்பட்டிருக்கின்றன. திருக்குறள் மணி என்பது அ.க.நவநீதகிருஷ்ணனின் பட்டப் பெயர் என்பது எங்கள் யூகம். மேலும் விவரங்களுக்கு அ.க. நவநீதகிருஷ்ணன் பற்றிய குறிப்பை பார்க்கவும்.
இதை பற்றி நான் முதலில் எழுதுவதாக இல்லை. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்தான் எழுத்தாளர்களின் முழு லிஸ்ட் கிடைத்தது. ஜே.ஆர். ரங்கராஜு, வடுவூர் துரைசாமி ஐயங்கார் ஆகியவர்களின் பேரை இந்த லிஸ்டில் கண்டு அசந்தேன். இவர்கள் இருவரும் அந்த காலத்து ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் மாதிரி. ஒரு காலத்தில் பிரபலமானவர்கள்தான், ஆனால் இவர்கள் எழுத்து வருங்கால சந்ததியருக்காக காப்பாற்றப்பட வேண்டியது என்றோ, இலக்கியத் தரம் வாய்ந்தது என்றோ சொல்லிவிட முடியாது. அவர்கள் புத்தகம் கிடைத்தால் நான் வாங்குவேன். எனக்கு புத்தகப் பித்து. அதற்காக வரிப் பணத்தை செலவழிக்க வேண்டுமா என்ன? இந்த எழுத்தாளர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிய வேண்டும். சின்ன வயதில் கலைஞர் விரும்பிப் படித்த எழுத்தாளர்கள் எழுதியது நாட்டுடமை என்ற நிலை தவறு. அப்புறம் நான் நாளைக்கு முதலமைச்சரானால் முத்து காமிக்ஸ், இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ்-டேவிட், ஜானி நீரோ ஆகியோரின் சாகசங்கள் நாட்டுடமை ஆகும்.
அதற்காக நான் எழுத்துகளை நாட்டுடமை ஆக்குவது தவறு என்று சொல்லவில்லை. எழுத்துக்கள் நாட்டுடமை ஆவது புத்தகப் பிரியர்களுக்கு மட்டும் அல்ல, எல்லாருக்குமே நல்ல விஷயம். அந்த எழுத்தாளர்களுக்கோ, அவர்கள் வாரிசுகளுக்கோ ஓரளவு பணம் கிடைக்கிறது. மறந்து போகப்பட்ட புத்தகங்கள் மீண்டும் தெரிய வர ஓரளவு வாய்ப்பு இருக்கிறது.
இந்த வருஷம் சுந்தர ராமசாமி, கண்ணதாசன் ஆகியவர்களின் படைப்புகள் நாட்டுடமை ஆனதாகவும், அவர்கள் வாரிசுகள் சம்மதிக்காததால் அந்த முயற்சி கைவிடப்பட்டதாகவும் படித்தேன். முதலில் கேட்டுவிட்டு பிறகு நாட்டுடமை திட்டத்தை அறிவித்திருக்கலாம். அறிவித்துவிட்டு விட்டு பிறகு அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது take it for granted mentality. ஆனால் சின்ன விஷயம், எதிர்காலத்தில் சுலபமாக தவிர்க்கலாம். தவிர்ப்பார்கள் என்று நம்புவோம்.
ஒரு பெரிய விஷயமும் உண்டு. நாட்டுடமை ஆக்கிவிட்டு யாராவது புத்தகங்களை போடுவார்கள் என்று அரசு உட்கார்ந்திருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? ஒரு செம்பதிப்பு கொண்டு வரப் பட வேண்டும். ஏதோ தமிழ் பல்கலை கழகம் எல்லாம் இருக்கிறதாம், அங்கெல்லாம் இது போன்ற முயற்சிகளை மேற்கொள்ளலாமே? இல்லை என்றால் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் எழுதியவற்றை எல்லாம் யாரும் பதிக்கப் போவதில்லை.
சில கேள்விகள் இருக்கின்றன. இது வரை எத்தனை எழுத்தாளர்களின் எழுத்துக்கள் நாட்டுடமை ஆகி இருக்கிறது? யாரிடமாவது லிஸ்ட் இருக்கிறதா? இல்லை என்றால் உள்ளூர் ஆள் யாராவது இதை Right to information act மூலம் தெரிந்து சொல்ல முடியுமா? இதற்கு எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டிருக்கிறது? இதற்கு ஏதாவது விதிமுறைகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றனவா இல்லையா?
ராஜம் கிருஷ்ணன் இந்த லிஸ்டில் சேர்க்கப்பட்டிருக்கிறார். கள ஆய்வு செய்து புத்தகம் எழுதுவது இவருடைய தனி சிறப்பு. வேருக்கு நீர் புத்தகம் சாஹித்ய அகாடெமி பரிசு பெற்றது. மணலூர் மணியம்மையை பற்றி எழுதிய பாதையில் பதிந்த அடிகள் ஒரு முக்கியமான ஆவணம். குறிஞ்சித்தேன் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
இந்த வருஷ லிஸ்டில் எனக்கு தெரிந்தவர்களை பற்றி சிறு குறிப்புகள் கீழே. மற்றவர்களை பற்றி தெரிந்தவர்கள் சொல்லவும். இவர்களை தெரிந்து கொள்வது நல்ல விஷயம்தானே!
முனைவர் ச. அகத்தியலிங்கம் – யாரென்று தெரியாது. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம். தமிழ் விக்கிபீடியா குறிப்பு இங்கே
சின்ன அண்ணாமலை – சுதந்திர போராட்ட வீரர். ஐம்பதுகளில் ஒரு பதிப்பகம் வைத்து பல நல்ல நூல்களை வெளியிட்டார் என்று ஞாபகம். ஒரு காலத்தில் காமராஜருக்கு துணை. சிவாஜி ரசிகர் மன்றத் தலைவரோ? தலைவர். இவர் எழுதி நான் அதிகமாக படித்ததில்லை. அதனால் இந்த தேர்வை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. சின்ன அண்ணாமலையை பற்றி சேதுராமன் அவர்கள் ஒரு guest post எழுதி இருக்கிறார். இங்கே அவர் பேரை க்ளிக் செய்தால் அந்த கட்டுரையை படிக்கலாம்.
பூவை எஸ். ஆறுமுகம் – ஏதோ சில சிறுவர் கவிதைகள் படித்த ஞாபகம் இருக்கிறது. ஒன்றும் சொல்வதற்கில்லை. ேரை க்ளிக் செய்தால் சேதுராமன் எழுதிய guest postஐ படிக்கலாம்.
கண்ணதாசன் – கண்ணதாசனின் சினிமா பாட்டுகள் பிடிக்கும். நாட்டுடமை அவரது சினிமா பாட்டுகளை பாதிக்காது என்று நினைக்கிறேன். அவர் எழுதிய கதைகள், காவியங்கள் எல்லாம் நல்ல இலக்கியம் இல்லை. அர்த்தமுள்ள இந்து மதம் இன்னும் விற்கிறது. அதனால் காந்தி கண்ணதாசன் எதிர்க்கிறார். இது புரிந்து கொள்ளக் கூடியதே. மோசமான தெரிவு. பேரை க்ளிக் செய்தால் விக்கிபீடியாவில் உள்ளதை காணலாம்.
பாலூர் கண்ணப்ப முதலியார் – டோண்டு ராகவன் இவர் சென்னை நியூ காலேஜ் தமிழ் துறை தலைவராக இருந்தவர் என்று தெரிவிக்கிறார். பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம்.
பண்டிதமணி கதிரேசன் செட்டியார் – பெரும் தமிழ் பண்டிதர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எதுவும் படித்ததில்லை. இவர் எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டது நல்ல தெரிவு என்றுதான் தோன்றுகிறது. பேரை க்ளிக் செய்தால் இவரை பற்றி சேதுராமன் எழுதிய குறிப்புகளை காணலாம். இவரை பற்றிய ஒரு திண்ணை தளக் கட்டுரையை இங்கே காணலாம்.
என்.வி. கலைமணி – யாரென்று தெரியாது. இவரைப் பற்றி சேதுராமன் அவர்கள் ஒரு guest post எழுதி இருக்கிறார். இங்கே அவர் பேரை க்ளிக் செய்தால் அந்த கட்டுரையை படிக்கலாம்.
புலியூர் கேசிகன் – எங்கேயோ பார்த்த ஞாபகம் இருக்கிறது, ஆனால் யாரென்று தெரியவில்லை. பல சங்க, பிற்கால இலக்கியங்களுக்கு உரை எழுதி இருக்கிறாராம். லிஃப்கோ இவரது புத்தகங்களை பதித்தது என்று நினைவு. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம்.
வை.மு. கோதைநாயகி – இவர் அந்த காலத்து பெண்ணிய எழுத்தாளரோ? எழுத்தாளர். சரியாக நினைவில்லை, ஆனால் நல்ல தெரிவு என்று தோன்றுகிறது. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம். இவரை பற்றி குமுதத்தில் வந்த ஒரு கட்டுரை இங்கே.
புலவர் த. கோவேந்தன்– யாரென்று தெரியாது. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம். கோவேந்தனும் நாச்சியப்பனும் பாரதிதாசன் பரம்பரையை சேர்ந்த கவிஞர்கள். பாரதிதாசன் பரம்பரை பற்றி மு. இளங்கோவன் எழுதிய ஒரு கட்டுரை இங்கே. கோவேந்தன் நடத்திய வானம்பாடி பற்றிய விவரங்கள் இங்கே. இதுவும் இளங்கோவன் எழுதிய பதிவு.
பம்மல் சம்பந்த முதலியார் – நல்ல தெரிவு. தாமதமான தெரிவு. யாராவது மனோகரா நாடகத்தை பதியுங்கள்! (சங்கரதாஸ் ஸ்வாமிகளின் எழுத்துக்கள் நாட்டுடமை ஆகிவிட்டனவா?). பேரை க்ளிக் செய்தால் இவரை பற்றிய போஸ்டை படிக்கலாம். விக்கிபீடியா குறிப்பு இங்கே.
சாண்டில்யன் – தவறான தெரிவு. சாண்டில்யன் ஒரு டைம் பாஸ் எழுத்தாளர். நல்ல எழுத்தாளர் இல்லை. பேரை க்ளிக் செய்தால் இவரை பற்றிய போஸ்டை படிக்கலாம். விக்கிபீடியா குறிப்பு இங்கே. சாண்டில்யனை பற்றி ஒரு அலசல் இங்கே.
அ. சிதம்பரநாதன் செட்டியார் – யாரென்று தெரியாது. இவரும் ஒரு தமிழறிஞர் என்று சேதுராமன் சொல்வதிலிருந்து தெரிகிறது. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம்.
சுந்தர ராமசாமி – தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். நல்ல தெரிவு. இன்னும் மார்க்கெட் உள்ள எழுத்தாளர். காலச்சுவடு கண்ணன் இதை எதிர்ப்பது புரிந்து கொள்ளக்கூடியதே.
ராய. சொக்கலிங்கம் – யாரென்று தெரியாது. இவரும் ஒரு தமிழறிஞர் என்று சேதுராமன் சொல்வதிலிருந்து தெரிகிறது. ராய. சொ. சுதந்திர போராட்ட வீரர். மரபுக் கவிஞர். ஊழியன் என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர். இவருக்கு வ.ரா, தி.ஜ.ர., புதுமைப்பித்தன் ஆகியிவர்கள் உதவி ஆசிரியர்களாக இருந்திருக்கிறார்கள். விவரங்களை சிரமப்பட்டு தேடிய சேதுராமனுக்கும, அவருக்கு விவரங்களை கொடுத்து உதவிய காரைக்குடி சித. ராயப்ப செட்டியாருக்கும் நன்றி! விரைவிலேயே சேதுராமன் ராய.சொ. பற்றி ஒரு guest post எழுதி இருக்கிறார். பேரை க்ளிக் செய்தால் அந்த guest post-ஐ படிக்கலாம்.
வடுவூர் துரைசாமி ஐயங்கார் – 1920-களின் ராஜேஷ் குமார். மோசமான தெரிவு. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம்.
திருக்குறள் மணி அ.க. நவநீதகிருஷ்ணன் – யாரென்று தெரியாது. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம். பட்ஜெட் உரையில் ஒரு கமா தவறாக பிரிண்ட் ஆகிவிட்டது போலிருக்கிறது. அதனால் திருக்குறள் மணி அ.க. நவநீதகிருஷ்ணன் என்று படிக்காமல், திருக்குறள் மணி, நவநீதகிருஷ்ணன் என்று படித்து குழப்பம். திருக்குறள் மணி என்பது இவரது பட்டப் பெயர் போல. திருக்குறளை கரைத்துக் குடித்த மாமணி என்று யாராவது பட்டம் கொடுத்திருப்பார்கள். பட்ஜெட் உரையை படித்தால் திருக்குறள் என்பது மணி என்பவரின் அடைமொழி போல தெரியும். சேதுராமன்தான் முதலில் இதை யூகித்தது. பிறகு தமிழம்.நெட் தளமும் இதை உறுதி செய்வதை பார்த்தேன்.
திருக்குறள் மணி – யாரென்று தெரியாது. இவர்தான் அ.க. நவநீத கிருஷ்ணன் என்று சேதுராமன் நினைக்கிறார். பட்ஜெட்டில் 28 பேர் எழுத்துகளை நாட்டுடமை செய்கிறோம் என்று சொல்லிவிட்டு 29 பேர் லிஸ்ட் கொடுத்திருக்கிறார்கள். அதனால் திருக்குறள் மணி என்பது பட்டப் பெயராக இருக்கலாமோ என்று சந்தேகம்.
பாவலர் நா.ரா. நாச்சியப்பன் – இவர் பேர் ஊடகங்களில் வந்த லிஸ்டில் விட்டுப் போய்விட்டது. பட்ஜெட் அறிக்கையில் இவர் பேர் இருக்கிறது. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம். நாச்சியப்பனும் கோவேந்தனும் பாரதிதாசன் பரம்பரையை சேர்ந்த கவிஞர்கள். பாரதிதாசன் பரம்பரை பற்றி மு. இளங்கோவன் எழுதிய ஒரு கட்டுரை இங்கே.
தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் – யாரென்று தெரியாது. இவரும் ஒரு தமிழறிஞர் என்று சேதுராமன் சொல்வதிலிருந்து தெரிகிறது. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம்.
மு.சு. பூரணலிங்கம் பிள்ளை – யாரென்று தெரியாது. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம்.
கவிஞர் முருகுசுந்தரம் – யாரென்று தெரியாது. பேரை க்ளிக் செய்தால் இவரை பற்றி சேதுராமன் எழுதிய போஸ்டை காணலாம். காலச்சுவட்டில் வந்த கட்டுரை ஒன்று இவரது படைப்புகளை பற்றி அருமையாக ஆய்வு செய்கிறது.
ஜே.ஆர். ரங்கராஜு– 1910-களின் ராஜேஷ் குமார். மோசமான தெரிவு. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம்.
மு. ராகவையங்கார் – தமிழ் பண்டிதர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இவர் எழுத்துகளை படித்திருக்காவிட்டாலும் சரியான தெரிவு என்றுதான் நினைக்கிறேன். சேதுராமன் அவர்கள் இவரைப் பற்றி விவரங்கள் சேகரித்து ஒரு guest post எழுதி இருக்கிறார். பேரை க்ளிக் செய்தால் அதை படிக்கலாம். ராகவையங்கார் பற்றிய விக்கி குறிப்பு இங்கே.
லக்ஷ்மி – அந்த கால(1950 onwards), கொஞ்சம் நன்றாக எழுதக் கூடிய ரமணி சந்திரன். தவறான தெரிவு. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம்.
மு.வ. – மு.வ. தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்று சொல்ல மாட்டேன். ஆனால் அவர் ஒரு கால கட்டத்தின் லட்சியங்களை நன்றாக எழுத்தில் கொண்டு வந்தவர். இவர் எழுதிய மொழி நூலோ, மொழி வரலாறோ ஏதோ ஒன்று மிக நல்ல புத்தகம். மொழி எப்படி உருவாகிறது என்பதை மிக அருமையாக ஒரு layman-க்கு விளக்கும். (ஃப்ரீமான்ட் நூலகத்தில் கிடைக்கும்.) இந்த தெரிவு சரிதான். பேரை க்ளிக் செய்தால் இவரை பற்றிய போஸ்டை காணலாம். விக்கிபீடியா குறிப்பு இங்கே.
அழ. வள்ளியப்பா– குழந்தை கவிஞர். என் சிறு வயதில் இவரது பாட்டுகளை படித்திருக்கிறேன். சிறுவர்களுக்காக எழுதுபவர்கள் குறைவு. அதனால் இது சரியான தெரிவு. பேரை க்ளிக் செய்தால் இவரை பற்றிய போஸ்டை காணலாம். இவரை பற்றி விக்கிபீடியாவில் உள்ளது இங்கே.
வையாபுரிப் பிள்ளை – தாமதமான தெரிவு. எப்போதோ செய்திருக்க வேண்டும். பேரை க்ளிக் செய்தால் இவரை பற்றி விக்கிபீடியாவில் உள்ளதை காணலாம். சேதுராமனின் guest post இங்கே. அவரை பற்றிய சில சர்ச்சைகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
கே.ஆர். ஜமதக்னி – யாரென்று தெரியாது. இவரை பற்றி சேதுராமனின் guest postஐ பேரை க்ளிக் செய்தால் படிக்கலாம்.
இங்கே உள்ள அநேக எழுத்தாளர்களை சேதுராமன்தான் அறிமுகம் செய்துவைத்தார். அவருடைய concluding remarks.
மார்ச் 15, 2009 at 4:41 முப
I think it is high time you visit the District Libraries and start reading all old books — That you do not know about Chidambaranathan, Raya.Chockalingam, V.M. Kothainayaki, T.M. Bhaskara Thondaiman et al. tells a lot about your post! Chinna Annamalai was a good speaker too, and he was publishing a magazine called “Velli Mani” Kothainayaki was a congress social worker and was the editor of “Jaganmohini” and she comes from the illustrious ‘Vaithamaanidhi Mudumbai’ family. Another member of this family V.M. Gopalakrishnamachariar has published many books too.
Lakshmi a doctor by profession, had written many novels some which were published in the Ananda Vikatan. Bhaskara Thondaiman was a wellknown Tamil Scholar… I do not know whether it is due to this acquisition, JR’s and Vaduvur’s novels are stocked aplenty in the District Libraries !!
மார்ச் 15, 2009 at 4:51 முப
Pl.Muthuveerappan, Dean, Faculty of Indian Languages, said that of the 28 Tamil scholars whose works were recently taken over by the State government four served in the university. They were Pandithamani Kathiresan Chettiar, A.Chidambaranathan Chettiar, M.Raghava Iyengar and AgathialingaM— the above is an excerpt from THE HINDU OF Feb.24, 2009
மார்ச் 15, 2009 at 6:06 முப
பாலூர் கண்ணப்ப முதலியார் நான் சமீபத்தில் 1962-ல் புதுக்கல்லூரியில் புகுமுக வகுப்பில் படித்த காலக் கட்டத்தில் அக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர். அதே துறையில் அப்போது இருந்த தமிழாசிரிய நா. பாண்டுரங்கன் அவர்கள் எம்.ஜி.ஆர். நடித்த “நல்லவன் வாழ்வான்” திரைப்படத்துக்கான கதையை எழுதியவர் என்பதை இங்கே போகிற போக்கில் கூறிவிட்டு செல்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மார்ச் 16, 2009 at 1:07 முப
சேதுராமன்,
எங்கேயோ சொன்ன மாதிரி எனக்கு கவிதை எல்லாம் அவ்வளவாக பிடிக்காது. அதுவும் பழங்கால தமிழ் கவிதை என்றால் துண்டை காணோம் துணியை காணோம் ஓட்டம்தான். பல தமிழ் அறிஞர்களை பற்றி எல்லாம் எனக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை. அதனால் மாவட்ட நூலகங்கள் வரைக்கும் என்றாவது போனாலும் ஒரு பயனும் இருக்காது.
என்னைப் போல நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்கள் எல்லாருக்கும் ஓரளவாவது இந்த ஞானம் இருப்பது அவசியம். அதனால்தான் உங்களுக்கு தெரிந்திருந்தால் நீங்கள் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் விரும்பினால், நீங்களே இங்கே ஒரு போஸ்ட் எழுதலாம். விருப்பப்பட்டால் உங்கள் ஈமெயில் முகவரியை எனக்கு சொல்லுங்கள், we will work out the logistics.
லக்ஷ்மி ஒரு கால கட்டத்தின் பிரதிநிதிதான். ஆனால் அவரது கதைகள் டைம் பாஸ் என்ற நிலையை தாண்டவில்லை. நான் சொன்ன மாதிரி ரமணி சந்திரனை விட பெட்டர் என்று சொல்லலாம், அவ்வளவுதான்.
டோண்டு, பாலூர் கண்ணப்ப முதலியார் பற்றி சொன்னதற்கு நன்றி! அவரை பற்றி மேல் விவரங்கள் தெரிந்தால் நீங்களே ஒரு போஸ்டோ இல்லை இங்கே ஒரு guest post-ஒ எழுதுங்களேன்! நல்லவன் வாழ்வான் அண்ணாவின் கதை என்று ஞாபகம். நீங்கள் சொல்லும் பாண்டுரங்கன் திரைக்கதையோ இல்லை வசனமோ எழுதி இருப்பாரோ?
மார்ச் 16, 2009 at 10:14 முப
வடுவூர் மரணக் கடி என்று பாதிக்கப்பட்ட நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் சொல்வது போல் லஷ்மி, வை.மு.கோ. எல்லாம் டைம்பாஸ்தான், அதுவும் அந்தக் காலத்துப் பெண்களுக்கு. அதற்குப் பின் ராஜம் கிருஷ்ணன், சிவசங்கரி, இந்துமதி, வாஸந்தி எல்லாம் வந்துவிட்டார்கள். அழ. வள்ளியப்பா, சாண்டில்யன், கண்ணதாசன்… காமெடியான பட்டியல்!
மார்ச் 17, 2009 at 12:40 முப
சாத்தான்,
வடுவூரின் ஒரே ஒரு புத்தகம்தான் முழுதாக படித்திருக்கிறேன். (சமீபத்தில் அல்லையன்ஸ் பதிப்பகம் அவரது சில நூல்களை மறு பதிப்பு செய்தது.) மிக கொடுமையான நடை. அவருக்கு முந்திய ராஜம் ஐயர், பாரதியார், மாதவையா போன்றவர்களின் எழுத்து இதை விட சுலபமாக புரியும். உப்பு சப்பில்லாத கதை. அடுத்த புத்தகம் வாங்க இன்னும் மனம் வரவில்லை.
என்னுடைய கருத்தில் லட்சுமி, சிவசங்கரி இருவரும் ஒரே லெவல். இந்துமதி இவர்களை விட கொஞ்சம் பெட்டர், ஆனால் அதே கேடகரிதான். வாஸந்தி பெஸ்ட். ராஜம் கிருஷ்ணனின் கள ஆய்வு அவரை வேறு தளத்தில் வைக்கிறது.
உங்களுடைய தளத்திலிருந்து நாள் ஒரு நூல் தளத்தை பற்றி தெரிந்து கொண்டேன். அருமையான முயற்சி. நன்றி!
ஏப்ரல் 4, 2009 at 5:57 முப
பதிவிலும் பின்னூட்டங்களிலும் அரிய தகவல்கள்.
ஒரு சேர படித்ததில் மகிழ்ச்சி.
தொடர் பதிவாக அனைவரும் சேர்ந்து எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
ஏப்ரல் 10, 2009 at 4:59 முப
சூர்யா,
இவற்றை தொகுக்கத்தான் திட்டம். இப்போதைக்கு நாட்டுடமை ஆன எழுத்துக்கள் பதிவில் புதிதாக சேர்க்கப்படும் எல்லாவற்றுக்கும் ஹைப்பர்லின்க் இருக்கிறது.
ஏப்ரல் 30, 2009 at 8:50 முப
நன்றி RV.
Thanx a lot..
மே 12, 2009 at 4:16 முப
A related news:
(Reproduced from http://www.tn.gov.in/budget/budsp_2009_10_3.htm)
Tamil Development
116. The success of the tireless efforts of the Hon’ble Chief Minister Kalaignar in ensuring students studying in all schools in Tamil Nadu learn Tamil language, making the Union Government declare Tamil language as a classical language and establishing Central Institute for research in Classical Tamil at Chennai, is a matter of satisfaction and happiness to all of us. This Government will leave no stone unturned for making Tamil one of the official languages of the Union Government and a language of transaction in all proceedings of the Madras High Court.
117. With a view to ensuring that the views and thoughts of great Tamil Savants who dedicated their lives to the Tamil language, benefits not only the present but future generations also, the Tamil Nadu Government is implementing the scheme of nationalization of books of Tamil scholars. The books of 95 Tamil scholars have been nationalized by the State Government so far. Out of these, the works of 87 scholars have been nationalized by the DMK Government. After assuming charge by this Government in 2006 the works of 65 Tamil scholars including that of Parithimar Kalaignar, Pulavar Kuzhanthai, Muthamizh Kavalar K.A.P.Viswantham, Ilakkuvanar, Prof.Vellaivaranar, Dr.R.P.Sethupillai and Va. Suba. Manickam have been nationalised and solatium of Rs.4.86 crores have been given to their legal heirs. In continuation of this, this year books of 28 Tamil scholars namely Kuzhanthi Kavignar Ala.Valliappa, Kaviarasu Kannadhasan, Prof.Viayapuri Pillai, Pandithamani M.Kathiresan Chettiar, M.Raghavaiyangar, Pammal Sambandanar, A.Chidambaranathan Chettiar, M.S.Poornalingam Pillai, T.M.Baskara Thondaiman, Palur Kannappa Mudaliar, Raya.Chockalinganar, Dr.M.Varadharajanar, Dr.S.Akathiyalingam, Pavalar N.R.Natchiappan, Puliyur Kesikan, Writer Chandilyan, Writer V.M.Kothainayaki, Chinna Annamalai, Poovai S.Arumugam, N.V.Kalaimani, Kavingnar Murugusundaram, Pulavar T.Kovendan, Writer Sundara Ramasamy, Tirukural Mani, A.K.Navaneetha Krishnan, Lakshmi, Vaduvoor Duriasamy Iyengar, Jamathagni and J.R.Rangaraju will be nationalised and solatium will be given to their legal heirs having regard to the number of books written by them, their social impact and their literary value.
ஜூலை 5, 2009 at 7:54 முப
ஆர்.வி,
பெரும்பாலான உங்கள் கருத்துக்களை நான் ஆமோதிக்கிறேன். நாட்டுடமை குறித்த என்னுடைய கருத்தும் இது தான். உண்மையில் இது போன்ற கருத்துக்களை இங்குள்ள பெரும்பாலான பத்திரிக்கைகள் கொண்டு வருவதில்லை. (அரசாங்க விளம்பரம் அவர்களது பத்திரிக்கைகளில் வர வேண்டும் என்ற எண்ணம் ஒரு காரணம்).
இது போன்ற கருத்துக்களை இங்குள்ள பதிவர்களும், தீவிர வாசகர்களும் கொண்டு வந்துள்ளனர். ஆனால் இவ்வளவு அற்புதமான இந்த கட்டுரையில் என்னை செய்த ஒரே விஷயம் இதோ இந்த வரிகள் தான்:
//அப்புறம் நான் நாளைக்கு முதலமைச்சரானால் முத்து காமிக்ஸ், இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ்-டேவிட், ஜானி நீரோ ஆகியோரின் சாகசங்கள் நாட்டுடமை ஆகும்.//
இந்த இடத்தில், இதை படிக்கும்போது எனக்கு எழுந்த எண்ணம் என்னவென்றால் “இந்த மாதிரி புத்தகங்களுக்கும் நாட்டுடமை வழங்குவேன்” என்று கூறுவது இந்த காமிக்ஸ் கதைகளை கிண்டல் செய்வதைப் போலவோ / இவற்றிற்கும் வழங்குவேன் என்று கூறுவதின் மூலம் இவைஎல்லாம் வெகு சாதரணம் என்ற கருத்தை வெளிப்படுத்துகிறது. The Tone is like this: EVEN these books and it Hurts to get that “EVEN these books” feeling.
காமிக்ஸ் என்பது (அனைவரும் நினைக்கும் வகையில்) ஒரு சிறுபிள்ளைகள் சமாச்சாரம் என்று நினைப்பது எவ்வளவு அபத்தம் என்றால் அது “திருக்குறள் என்பது இரண்டு இரண்டு வரிகளில் இருக்குமே, அதுதானே?” என்று நினைப்பதை போல. உண்மையில் அதனை சரியான முறையில் படித்தவர்கள் இப்படி எண்ண மாட்டார்கள்.
அந்த வரிகளை மாற்றினால் சந்தோஷம், மாற்றாவிட்டால் வருத்தமில்லை.
ஜூலை 5, 2009 at 9:42 முப
கிங் விஸ்வா,
நாட்டுடமை பதிவுக்கு மறுமொழி இட்டதற்கு, பொதுவாக என் கருத்துகள் உங்களுக்கும் சரியாக படுகிறது என்று சொன்னதற்கு, நன்றி!
காமிக்ஸ் பற்றி எழுதி இருந்தீர்கள். Even these books என்ற தொனி வர எழுதி இருப்பது உண்மைதான். அப்படி எழுத நினைத்துதான் எழுதினேன். எனக்கு காமிக்ஸ் மிகவும் பிடிக்கும் – அதுவும் மாயாவி, லாரன்ஸ்-டேவிட், ஜானி நீரோ போன்றவை மிக பிடிக்கும். ஆனால் அவை எதுவும் வருங்கால தமிழர்கள் படிக்க வேண்டிய இலக்கியத் தரம் வாய்ந்தவை என்றோ, இல்லை பாதுக்காக்கப்பட வேண்டிய ஆய்வுகள் என்றோ சொல்ல மாட்டேன். அப்படிப்பட்ட புத்தகங்கள் மட்டுமே நாட்டுடமை ஆக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். வரிப் பணத்தை நாஸ்டால்ஜியாவுக்காக செலவழிப்பது தவறு என்று நினைக்கிறேன். எனக்கு இலக்கியத் தரம் இல்லாததாக தெரிவது உங்களுக்கு இலக்கியத் தரம் உள்ளதாக தெரியலாம். இது தனிப்பட்ட ரசனையை பொறுத்தது. மௌனி பலரும் கொண்டாடும் ஒரு எழுத்தாளர். எனக்கு புரிவதில்லை, பிடிப்பதும் இல்லை, அவரது எழுத்துகளை நாட்டுடமை ஆக்கினால் அதவும் எனக்கு தவறாகத்தான் தெரியும். முத்து காமிக்ஸை நாட்டுடமை ஆக்கினாலும் தவறாகத்தான் தெரியும்.
உங்கள் தளத்தை பார்த்தேன். இப்படி ஒரு தளம் இருப்பது இத்தனை நாள் தெரியாமல் போய்விட்டது. மிக அருமையான முயற்சி. இன்னும் முழுதாக படித்துவிட்டு எழுதுகிறேன்.
ஜூலை 5, 2009 at 10:03 முப
திரு ஆர்,வி அவர்களே,
பதிலுக்கு நன்றி.
//வரிப் பணத்தை நாஸ்டால்ஜியாவுக்காக செலவழிப்பது தவறு என்று நினைக்கிறேன்//
இந்த கருத்தில் இருவேறு கருத்திருக்க முடியாது.
இருந்தாலும் காமிக்ஸ் மேல் உள்ள தீராத காதலால் அவ்வாறு சொல்லி விட்டேன்.
தவறாக இருப்பின் மன்னிக்கவும்.
ஜூலை 5, 2009 at 10:09 முப
//எனக்கு காமிக்ஸ் மிகவும் பிடிக்கும் – அதுவும் மாயாவி, லாரன்ஸ்-டேவிட், ஜானி நீரோ போன்றவை மிக பிடிக்கும். ஆனால் அவை எதுவும் வருங்கால தமிழர்கள் படிக்க வேண்டிய இலக்கியத் தரம் வாய்ந்தவை என்றோ, இல்லை பாதுக்காக்கப்பட வேண்டிய ஆய்வுகள் என்றோ சொல்ல மாட்டேன்//
இதற்க்கு பதிலாக நீங்கள் ஒரு மாத நாவலையோ அல்லது எழுத்தாளரையோ கூறி இருந்தால் நன் கவலைப் பட்டு இருக்க மாட்டேன்.
//ஆனால் அவை எதுவும் வருங்கால தமிழர்கள் படிக்க வேண்டிய இலக்கியத் தரம் வாய்ந்தவை என்றோ,//
இங்கு நான் சற்று மாறுபடுகிறேன். வருங்கால தமிழர்கள் படிக்க வேண்டிய நூல்கள் எல்லாமே இலக்கியத் தரமாக தான் இருக்க வேண்டுமா? பள்ளி நாட்களில் உலக அறிவையும், தன நம்பிக்கையையும் வளர்க்க இந்த காமிக்ஸ் புத்தகங்களே சிறந்த கருவிகள். உங்களின் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் புத்தகங்கள் இவையே. பிறகே நாம் அனைவரும் மற்ற கதைகளை படிக்க ஆரம்பிக்கிறோம்.
இப்போது இருக்கும் தமிழ் ஜெனரேஷன் சீரழிவதற்கு காரணம் தமிழில் படிக்கும் பழக்கம் குறைந்ததும், தரமான சிறுவர் இலக்கியங்கள் இல்லாததும் தான் காரணம் என்பது என்னுடைய கருத்து.
நாம் உங்களின் பதிவில் இருந்து வெகு தூரம் விலகி விட்டோம். நான் தனியாக உங்களுக்கு மின் அஞ்சல் அனுப்பி உரையாடுகிறேன்.
ஏதேனும் தவறாக கூறி இருந்தால், மன்னிக்கவும்.
ஜூலை 6, 2009 at 6:12 முப
கிங் விஸ்வா,
// வருங்கால தமிழர்கள் படிக்க வேண்டிய நூல்கள் எல்லாமே இலக்கியத் தரமாக தான் இருக்க வேண்டுமா? //
வருங்கால தமிழர்கள் அவர்களுக்கு பிடித்ததை படித்துக் கொள்வார்கள்தான். அவை அத்தனையும் இலக்கியத்தரம் வாய்ந்தவையாக இருக்க வேண்டியதில்லைதான். ஆனால் நான் இலக்கியத் தரம் வாய்ந்தவையே நாட்டுடமை ஆக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். இலக்கியத் தரம், பாதுக்காக்கப்பட வேண்டிய ஆய்வுகள், வேறு காரணங்களுக்காக வருங்காலத் தமிழர்கள் படிக்க வேண்டியவை ஆகியவை மட்டுமே நாட்டுடமை ஆக்கப்பட வேண்டும் என்று கருதுகிறேன்.
மற்றபடி ஏன் தவறாக எழுதிவிட்டேனோ என்று நினைத்து நினைத்து கவலைப்படுகிறீர்கள்? லூசா விடுங்க!
மார்ச் 29, 2010 at 4:01 முப
[…] இந்தபதிவு உங்களுக்கு உதவக்கூடும்.. […]
ஓகஸ்ட் 5, 2010 at 1:02 பிப
I wish to introduce myself Iam an emplyoee of sona synthetics. Kindly go through the wiki pedia karumuttu thiagarajan chettiar in tamil and click uraiyaadal there you can see the articles of tamil scholars. Now Iam at sharjah . I will be here for one month. Kindly convey my regards to your father sri.c.valliappa chettiar.
ஓகஸ்ட் 10, 2010 at 3:30 முப
இளமுருகன், வேறு எங்காவது எழுத நினைத்த மறுமொழியை இங்கே எழுதிட்டீங்களா? ஒண்ணும் புரியலியே?
நவம்பர் 24, 2012 at 5:42 முப
tamil scholars writings are there . They are nationalised now. One amog them K.A.P. visuvanatham.
ஓகஸ்ட் 10, 2010 at 5:00 முப
வெ.சாமிநாத சர்மாவின் படைப்புகள் கண்டிப்பாக எல்லாரையும் போய் சேரவேண்டும்.அவரை படித்தால் தான் தமிழ் படித்தவன் என்று அர்த்தம்.”எனது பர்மா நடைவழி பயணம் ” என்ற நூலை நான் முதலில் இக்கால வாசகனுக்கு சிபாரிசு செய்கிறேன். அவர் நூலைஎல்லாம் நாட்டுடமை செய்யமாட்டார்கள்.
ஓகஸ்ட் 12, 2010 at 1:02 முப
விஜயன்,
சாமிநாத சர்மாவின் எழுத்தக்கள் நாட்டுடமை ஆகிவிட்டன என்று நினைக்கிறேன். நாட்டுடமை ஆனால் மட்டும் போதாது, அந்த எழுத்துகளை மீண்டும் பதிக்க வேண்டும் என்று தோன்றாமல் இருப்பதுதான் சோகம்.
ஓகஸ்ட் 18, 2010 at 8:12 முப
//நாட்டுடமை ஆக்கிவிட்டு யாராவது புத்தகங்களை போடுவார்கள் என்று அரசு உட்கார்ந்திருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? ஒரு செம்பதிப்பு கொண்டு வரப் பட வேண்டும்.//
http://www.tn.gov.in/policynotes/default.htm
தொடர்பில் tamil development என்பதை சொடுக்கினால் கிடைக்கும் pdf கோப்பில் பக்கங்கள் 20, 21 -இல் தங்களுக்கு தேவையான சில விவரங்கள் கிடைக்கும் என நினைக்கிறேன்.
ஓகஸ்ட் 18, 2010 at 10:52 பிப
மிக உபயோகமான சுட்டி, நன்றி மாரிமுத்து!
ஜனவரி 1, 2011 at 7:18 முப
articles in tamil written by scholars like kaviarasu kannadasan , kalaignar m.karunanidhi, pandithamani kathiresan chettiar, thamilannal, ma.po.si., pazha nedumaran, somaley, karunaithasan, solomon poppiah,panjalai kavingar s.elamurugan,pallai karikalan, k.ap.visuvanatham about karumuttu thiagarajan chettiar uploaded at Panjaalai.blogspot.com
ஜனவரி 14, 2013 at 3:43 பிப
i am having copy of tamilsangam ponviza malar madurai. i wish to bring the tamil readers knowledge
ஏப்ரல் 14, 2013 at 11:02 முப
kindly see the picasa photo sharing at google search Araneriannal pavaza viza photos. you can see the photo M.G.R. honor Araneriannal. on7.1.1981. M.G> R. dream project is implemented by Govt, Now what is the fate of that photo
நவம்பர் 8, 2014 at 2:41 முப
[…] […]
மே 4, 2017 at 6:36 பிப
[…] நாட்டுடமை ஆன எழுத்துக்கள் பற்றிய ஒரி… […]
செப்ரெம்பர் 17, 2017 at 6:32 பிப
[…] நாட்டுடமை ஆன எழுத்துக்கள் பற்றிய ஒரி… […]
ஏப்ரல் 8, 2019 at 6:30 பிப
[…] சேதுராமன் கஷ்டப்பட்டு 2009-இல் யார் யார் எழுத்து நாட்டுடமை ஆக்… அவரைப் பற்றி விவரங்கள் […]
ஜூன் 18, 2019 at 6:38 முப
எழுத்துகளை நாட்டுடைமை ஆக்குவதில் இத்தனையா முரண்பாடு,மேலே கண்ட பல எழுத்தாளர்களை நான் படித்திருக்கிறேன் இப்பேோது கிடைத்தாலும் வாங்கிப் படிப்பேன்.சில நடைகளை விலக்கி இருக்கலாம் நீங்கள்,
ஜூன் 18, 2019 at 6:51 முப
படிக்கிற வழக்கம் மீண்டும் வளரணும்.பண்டிதமணி பற்றி அப்படி எழுதியிருக்கவேண்டாம், எனக்கு வலித்தது.சிலவற்றை நாம் படிப்போம்.சில நம்மைப் படிக்க வைக்கும். அதற்குப் படிக்கிற வழக்கம் வேண்டும்.
ஜூன் 11, 2020 at 6:31 பிப
[…] அறிமுகம் செய்து வைப்போம் என்று ஒரு பதிவு எழுதினேன். அதில் பலருடைய பங்களிப்பு […]