நாட்டுடமை சீரிஸின் வேர்ப்பதிவு இங்கே.
சேதுராமன் முடித்து வைத்துவிட்டார். ஆனால் ராஜம் கிருஷ்ணன் இப்போது புதிதாக லிஸ்டில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதனால் நானே எழுதுகிறேன்.
ராஜம் கிருஷ்ணன் 1925-இல் முசிறியில் பிறந்தவர். பதினைந்து வயதில் அவருக்கு கல்யாணம் ஆயிற்று. குழந்தைகள் இல்லை. வயதான காலத்தில் கொஞ்சம் கஷ்டத்தில் இருக்கிறார் என்று அரசு செய்திக் குறிப்பின் மூலம் தெரிகிறது. இப்போது ஒரு ஓல்ட் ஏஜ் ஹோமில் இருக்கிறாராம். அரசு இவருக்கு 3 லட்சம் அளித்திருக்கிறது. Literary quantity and quality-ஐ வைத்து பார்க்கும்போது இது எனக்கு குறைவாக படுகிறது.
நான் ராஜம் கிருஷ்ணனின் புத்தகங்களை அதிகமாக படித்தவன் இல்லை. அவரது சிறப்பு தள ஆய்வு. ஒவ்வொரு புத்தகத்தையும் எழுதுவதற்கு முன்னால் கருப்பொருளை பற்றி தீவிர ஆய்வு மேற்கொள்வார். அவரை பற்றிய விக்கிபீடியா குறிப்பு அவர் பிரபல் சம்பல் கொள்ளைக்காரனான டாகு மான்சிங்கை பேட்டி கண்டு முள்ளும் மலரும் என்ற நாவலை எழுதியதையும், தூத்துக்குடி மீனவர் பற்றி எழுதிய கரிப்பு மணிகள் புத்தகத்துக்கு அவர் மேற்கொண்ட தள ஆய்வையும் குறிப்பிடுகிறது. நான் அவர் நீலகிரி தோடர் படகர் ஆகியோரை பின்புலமாக கொண்டு எழுதிய ஒரு நாவலை படித்திருக்கிறேன். இந்த மாதிரி தள ஆய்வு செய்து எழுதுபவர்கள் தமிழில் மிக குறைவு. ஆய்வு செய்வதே அபூர்வம், அப்படியே ஆய்வு செய்வதாக இருந்தாலும் ஏதாவது புத்தகத்தை reference-க்குகாக பார்ப்பார்கள், அவ்வளவுதான்.
அவர் ஒரு பெண்ணிய எழுத்தாளர் என்று பலரும் சொல்கிறார்கள். என் கருத்தில் அவர் பெண்ணியத்தை பற்றியும் எழுதி இருக்கிறார், அவ்வளவுதான். இது என்னுடைய impression, நான் அவருடைய படைப்புகளை மிக குறைவாகவே படித்திருக்கிறேன்.
அவர் மணலூர் மணியம்மை பற்றி எழுதிய பாதையில் பதிந்த அடிகள் புத்தகம் படிக்க எனக்கு மிகவும் ஆசை உண்டு, இன்னும் கை கூடவில்லை.
அவருடைய புத்தகங்களில் எஸ். ராமகிருஷ்ணன் சிபாரிசு செய்வது கரிப்பு மணிகள். முன் குறிப்பிட்ட மாதிரி இது தூத்துக்குடி மீனவர் வாழ்க்கையை பின்புலமாக கொண்டது.
ஜெயமோகன் சிபாரிசு செய்யும் அவரது புத்தகம் பாதையில் பதிந்த அடிகள். அதை பற்றி அவர் சொல்வது:
கள ஆய்வு செய்து எழுதுவது ராஜம் கிருஷ்ணனின் பாணி. அவரது பல கதைகளை மேலோட்டமான தகவல்களாக ஆக்குவது இந்த அம்சம். இவ்வம்சமே மணி அம்மாள் என்ற உண்மையான புரட்சிவாதியின் வரலாற்றை புனைவாக ஆக்கும் போது பெரிதும் கை கொடுக்கிறது.
பல விருதுகளை பெற்றவர். வேருக்கு நீர் என்ற புத்தகத்துக்கு 1973-இல் சாஹித்ய அகாடமி பரிசு கிடைத்திருக்கிறது. 1950-இல் நியூ யார்க் ஹெரால்ட் ட்ரிப்யூன் அவருக்கு ஒரு விருது கொடுத்திருக்கிறது. 53-இல் கலைமகள் விருது, 75-இல் சோவியத் லாண்ட் விருது, 91-இல் திரு.வி.க. விருது பெற்றிருக்கிறார்.
பிரபல பதிவர் கானாபிரபு அவரிடம் எடுத்த ஒரு பதித்த பேட்டியை இங்கே காணலாம். விகடனில் வந்த பெட்டியை மறு பதிப்பு செய்திருப்பதாக கானா பிரபு தெரிவிக்கிறார், தவறை திருத்திய அவருக்கும், விகடனுக்கும் நன்றி!
மரபூர் ஜெய. சந்திரசேகரன் எடுத்த ஒரு பேட்டியை இங்கே காணலாம்.
அதிகமாக படிக்காவிட்டாலும், இவருக்கு இந்த கவுரவம் கொடுக்கப்பட வேண்டியதுதான் என்று நினைக்கிறேன். செத்த பிறகு சிலை வைப்பதை விட உயிரோடு இருக்கும்போது, தேவைப்படும் போது, பண உதவி செய்வது நல்ல விஷயம். அதற்காக அரசையும் முதலமைச்சர் கலைஞரையும் பாராட்டுகிறேன். ஆனால் கொஞ்சம் அதிகமாக பணம் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
சேதுராமனின் பின்குறிப்பு: திருமதி ராஜம் கிருஷ்ணன் “முள்ளும் மலர்ந்தது” நாவலை எழுதச் சம்பல் பள்ளத்தாக்குகளுக்கு நேரில் செல்லத் தீர்மானித்ததும், அவரது கணவர் தமது உத்தியோகத்தையே ராஜினாமா செய்துவிட்டு உடன் புறப்பட்டார். எத்தனை பேர்களால் இப்படிப்பட்ட தியாகங்களை, இலக்கிய ஆர்வத்தை முன்னிட்டுச் செய்ய முடியும்? சம்பல் பள்ளத்தாக்குகளுக்குச் சென்று வந்த செலவுகளை அவருக்கு யார் ஈடு கட்டப் போகிறார்கள்? அரசாங்கம் இது பற்றி யோசித்து, எழுத்தாளர்களுக்குப் பல இடங்களுக்கும் போய் நிலைக்களங்களை ஆராய வசதிகள் செய்தளிப்பது நல்லது. ஒருமைப்பாட்டை வளர்க்க இதை விடச் சிறந்த மார்க்கம் வேறு ஏது? (கல்கி கி.ராஜேந்திரன் “எழுதுவது எப்படி?” என்ற கட்டுரையில் – தொகுப்பாசிரியர் மகரம் கே.ஆர்.கல்யாணராமன் -பாகம் இரண்டு -பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பு, 1979)
ஜூன் 13, 2009 at 3:13 முப
வணக்கம் நண்பரே
மதிப்புக்குரிய ராஜம் கிருஷ்ணன் அவர்களைப் பேட்டி எடுத்தது நானல்ல, அவள் விகடனில் வெளிவந்த பேட்டியை மீள் இடுகையாக என் நனவிடை தோய்தலில் எடுத்தாண்டிருந்தேன்.
ஜூன் 13, 2009 at 4:24 முப
கானா பிரபா,
தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி! பதிவையும் திருத்திவிட்டேன்.
ஜூன் 25, 2009 at 4:46 முப
படித்ததில் கிடைத்தது!!
***திருமதி ராஜம் கிருஷ்ணன் “முள்ளும்
மலர்ந்தது” நாவலை எழுதச் சம்பல்
பள்ளத்தாக்குகளுக்கு நேரில் செல்லத்
தீர்மானித்ததும், அவரது கணவர் தமது
உத்தியோகத்தையே ராஜினாமா செய்து
விட்டு உடன் புறப்பட்டார். எத்தனை பேர்
களால் இப்படிப் பட்ட தியாகங்களை,
இலக்கிய ஆர்வத்தை முன்னிட்டுச் செய்ய
முடியும்? சம்பல் பள்ளத்தாக்குகளுக்குச்
சென்று வந்த செலவுகளை அவருக்கு
யார் ஈடுகட்டப் போகிறார்கள்? அரசாங்கம்
இது பற்றி யோசித்து, எழுத்தாளர்களுக்குப்
பல இடங்களுக்கும் போய் நிலைக்களங்களை
ஆராய வசதிகள் செய்தளிப்பது நல்லது.
ஒருமைப்பாட்டை வளர்க்க இதை விடச்
சிறந்த மார்க்கம் வேறு ஏது?
(கல்கி கி.ராஜேந்திரன் “எழுதுவது எப்படி?”
என்ற கட்டுரையில் – தொகுப்பாசிரியர்
மகரம் கே.ஆர்.கல்யாணராமன் -பாகம்
இரண்டு -பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பு
1979)
ஜூன் 14, 2012 at 5:41 பிப
கதை நடைபெறும் களத்தை கண்முன்னே நிறுத்தும் எழுத்தாற்றல் கொண்டவர். எண்பதுகளில் இவரது எழுத்துக்களை வாசித்திருந்தாலும் கரிப்பு மணிகள், மற்றும் அணைக்கட்டு கட்டுமிடத்தில் நடைபெறும் ஒருநாவல்(பெயர் மறந்துவிட்டது) மூலம் இன்னும் என் மனதில் உயரிய இடத்தில் இருக்கும் எழுத்தாளர்.நான் வாசிப்பை மறந்து பல ஆண்டுகளாகியும் வேறுசில எழுத்தாளர்களின் நாவல்களை இணையத்தில் கண்டு, இவரது ஞாபகம்வரப்பெற்று கூகுளில் தேடி இங்கு வந்தேன்.இவரது நாவல்களை தேடிக்கொண்டிருக்கிறேன்.
மார்ச் 15, 2013 at 3:29 பிப
நேயர்களே! ராஜம் கிருஷ்ணன் என்ற எழுத்தாளரை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். உங்களில் பலர் மறந்திருந்தாலும்கூட இலக்கியப்பிரியர்களும், புத்தக ஆர்வலர்களும் அவ்வளவு சீக்கிரம் அவரை மறந்திருக்க வாயப்பு இல்லை. ஆனால் தமிழ் எழுத்துலகில் கொடிநாட்டிய
ராஜம் கிருஷ்ணன் இன்று எங்கே என்று கேட்டால் உங்களில் பலரிடம் பதில் இருக்காது.. அமெரிக்காவின் நியூயார்க் ஹெரால்டு டிரிப்யூன் விருது முதல் சாகித்ய அகாதெமி விருது வரை வாங்கி குவித்த அந்த திருமகள் இன்று ஆதரவற்ற அனாதைபோல மருத்துவமனையில் வீழ்ந்து கிடக்கிறார். ஆம் நேயர்களே! நெஞ்சை உலுக்கும் ராஜம் கிருஷ்ணனின் பரிதாபக் கதையை பிரத்யேக படக்காட்சிகளுடன் பார்க்க வாருங்கள்.
மீனவர்களுக்காக கரிப்பு மணிகள், உப்பள தொழிலாளர்களுக்காக வேருக்கு நீர்,இலங்கை தமிழர்களுக்காக மாணிக்க கங்கை, கொள்ளையர் தலைவன் டாகுமான்சிக்காக முள்ளும் மலரும் என வாழ்க்கையில் தாம் சந்தித்த பல தரப்பு மக்களுக்காகவும், உண்மையும் உணர்வும் மிக்க கதைகளாக எழுதித் தள்ளிய ராஜம் கிருஷ்ணன் என்ற எழுத்துலக ராணியே இன்று நமக்கு கதையாக கிடைத்திருக்கிறார்.
1925ல் திருச்சி மாவட்டம் முசிறியில் பிறந்து, 15வயதிலேயே கிருஷ்ணனை மணந்து, விருதுகளுக்காக பல வெளிநாடுகளுக்கு பறந்து இன்று படுக்கையில் கிடக்கிறார் அவர்.இடதுசாரி சிந்தனை கொண்ட இந்த இலக்கியச்செல்விக்கு 1950லேயே நியூயார்க் ஹெரால்டு டிரிபியூன் விருது கிடைத்தது. 1973ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது இவரைத் தேடி வந்தது. கூட்டுக்குஞ்சுகள், உயிர் விளையும் நிலங்கள், பெண் விடுதலை,சத்திய தரிசனம் என 50க்கும் மேற்பட்ட நாவல்கள், 100க்கும் அதிகமான சிறுகதைகள், ஏராளமான கட்டுரைகள் என ராஜம் கிருஷ்ணனின் படைப்புக்கள் ஆண்டுகள் பலவற்றை கடந்து
அமெரி்க்கன் நூலகம் வரை இன்று மணம் வீசிக்கொண்டிருக்கின்றன.மணம் வீசிய அந்த மல்லிகை எங்கே என இன்றைய இலக்கிய வட்டாரத்தில் விசாரித்தோம். இடிபோல இறங்கிய செய்தி என்ன தெரியுமா?சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையின் இலவச நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை எண் 13044ல் படுத்துக்கொண்டு நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னது அந்தச் செய்தி.செய்தி கேட்டதுமே இடிந்து போன எங்கள் செய்திக்குழு,ராஜம் கிருஷ்ணனை தேடிப்போய் பார்த்தபோது பதறியேபோய் விட்டது. ரஷ்யா, அமெரிக்கா, செக்கொஸ்லோவேகியா என நாடு நாடாக பறந்து சென்ற இந்த படைப்பு பறவை, இறுதியில் இப்படியொரு பரிதாப கூண்டில் அடைந்து கிடக்கிறதே என பதறியது நெஞ்சம். சமுதாயத்தை நேசித்து, அடித்தட்டு மக்களையே குழந்தைகளாக பாவித்த இந்த கலைத்தாய் தன்வயிற்றில் குழந்தைகள் யாரையும் பெற்றெடுக்கவில்லை..
வயதாகி இறந்து விட்ட கணவர் கிருஷ்ணனும் உயிருடன் இல்லை.படைப்புக்களை பணமாக்கும் பசப்பு வித்தை தெரியாததால்,உற்றார் உறவினரும் உடன் இல்லை.உங்களை படம்பிடிக்கப் போகிறோம்….உங்கள் வாசகர்களுக்கு காட்டப்போகிறோம் என்று சொன்னால் ஏற்பாரோ மாட்டாரோ என்ற தயக்கம் எங்களுக்கு இருந்தது.வேறு வழியில்லை. சத்திய தரிசனம் படைத்த இந்த சீமாட்டியை சத்தியம் தொலைக்காட்சி இப்படி ரகசியமாகத்தான் படம் பிடிக்க நேர்ந்தது.எழுதி எழுதி ஓய்ந்து போன அந்த கரங்களுக்கு இன்று படைக்கும் சக்தி குறைந்திருக்கலாம்.ஆனால் படித்து படித்து பழகிப்போன இந்த கண்களுக்கு இன்னும் ஆர்வம் குறையவில்லை.இந்த காட்சியே அதற்கு சாட்சி…
சென்னை விஸ்ராந்தி அனாதை ஆஸ்ரமத்திலிருந்து 3ஆண்டுகளுக்கு முன்பாக காணாமல் போன எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் இப்பொழுது எங்கிருக்கிறார்…எப்படி இருக்கிறார் என சத்தியம் தொலைக்காட்சி வெளிச்சம் போட்டுக்காட்டுவது அனைவரும் சென்று அவரை தொந்தரவு செய்வதற்காக அல்ல.அன்புள்ளம் கொண்டோர் அவரை அரவணைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
சத்தியம் செய்திகளுக்காக சிறப்பு புலனாய்வுக்குழு.,
(ஆதரவு வழங்)
more {watch):http://sathiyam.tv/tamil/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF
மார்ச் 28, 2015 at 9:54 முப
You are saying her Karippu Manigal deals with the lives of fisherfolk: you seem to have taken the comment from Essraa; or from Rajam Krishnan herself. Because she says in the interview linked to your article that KM is about fisherfolk. Please remember the interview was taken when she was past 84 and naturally her memory gave in. She confuses between her novel verukku neer and KM. I haven’t read VN but did read KM. She is incorrect.
Essra seems to have not read KM; otherwise he couldn’t have made the same mistake.
For your information, KM is about the lives of salt pan coolies of Tuticorin who are not fishermen at all. But the salt pans depend on seawater and as such, such pans have to be created only on coast. In Tuticorin, fishermen don’t keep any contact with people of other occupations. Saltpan coolies and fishermen are two different tribes of people living detached from one another, not out of any animosity, rancor or ill will; but out of being no reason to come together. However, their colonies are close to each other: that of the fishers being the closest to the sea.
RK is rightly given credit to bring authentic touches to her creations thanks to her having first hand experiences of the background and its people before writing about them. Other writers too write about the down trodden but they may have been born among them; or near them. They don’t go to another place to live among another people: RK did that. It is special in Tamil novel writing; not so in English or French.
In KM about which I can speak with a certain authenticity of the locale, RK succeeded only in the dialogues of the novels in the dialect of the salt pan workers. Otherwise, she has made many lapses about them. For e.g. she didn’t care to know who the owners of the salt pans and who the workers are: I mean , the castes or community. This despite living there for some years and lived with the families of workers.
The novel is loosely written one; but calculated to win prize. Incidents are artificial; and her fervor to press feminist thoughts in all that she wrote, spoiled the novel’s climax and other places.
The novel is unreadable for readers because the dialogues at many places are unintelligible to all those who don’t know Tuticorin.
Ok. enough now. I shall write an article on this novel either in Solvanam or in Thinnai shortly and when it appears, I shall draw attention to it here.
Thanks and regards.