சேதுராமனின் தொடரும் அறிமுகங்கள்.
நாட்டுடமை சீரிஸின் வேர்ப்பதிவு இங்கே.
வட ஆற்காடு மாவட்டம் கடப்பேரி கிராமத்தில், 1903ம் வருடம் ஏப்ரில் 12ம் தேதி, இராகவன், முனியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். இளமை முதலே காந்திய நெறியில் ஈடுபட்டவர். காந்திய இயக்கங்கள் அனைத்திலும் கலந்து கொண்டு, தம் மாவட்டத்தில் முன்னணியில் நின்று ஒன்பது ஆண்டுகள் சிறை சென்றவர்.
இண்டர் படித்து முடித்த பின் ஆறு மாதம் பள்ளி ஆசிரியராக இருந்து, காங்கிரசில் சேர்ந்து பொதுத் தொண்டிற்குத் தன்னை அர்ப்பணித்தவர். கனல் தெரிக்க ஆவேசமாகப் பேசும் ஆற்றல் படைத்தவர். இவர் மகாகவி பாரதியின் பக்தர். தமிழை உயிரினும் இனியதாகக் கொண்டவர்.
இவரது வாழ்க்கைத் துணைவியார் லீலாவதி அம்மாளும் தியாகக் குடும்பத்தில் பிறந்தவர். காந்தியின் வேண்டுகோளுக்கிணங்க சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு சிறை சென்ற அஞ்சலையம்மாள் மகள் லீலாவதி. அஞ்சலை அம்மாள் பின்னாளில் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவராம். (தன் கொள்ளுப்பாட்டி பற்றிய சுட்டியை கொடுத்த சந்தனமுல்லைக்கு நன்றி!)
ஜமதக்னியின் மகளான சாந்தி 2004-இலிருந்து தமிழ் நாடு திட்ட கமிஷன் துணைத் தலைவராக இருக்கும் நாகநாதன் அவர்களின் மனைவி. ஜமதக்னியின் மனைவி லீலாவதியின் தங்கை கல்யாணியின் மகள் மங்கையும், மங்கையின் மகள் சந்தனமுல்லையும் பல விவரங்களை கொடுத்து உதவி இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி! சந்தனமுல்லையின் தளத்தை இங்கே காணலாம். அவரே தன் பெரிய தாத்தா ஜமதக்னி பற்றி ஒரு பதிவும் எழுதி இருக்கிறார்.
ஜமதக்னி தேசபக்தர் மட்டுமல்லர். சிறந்த இலக்கிய அறிஞர். தமிழ், வடமொழி, இந்தி, ஆங்கில மொழிகளில் வல்லவர். கம்பனில் ஊறியவர். மார்க்சிய சிந்தனையாளர். கார்ல் மார்க்சின் படைப்பை மூலதனம் – மிகை மதிப்புக் கோட்பாடுகள் என்ற தலைப்பில் தமிழில் முதன் முதலாக மொழி பெயர்த்தவர். (இப்புத்தகம் 1998ல் பதிப்பிக்கப் பெற்றது என்று வலைச் செய்தி கூறுகிறது) கம்யூனிசத்தில் இவருக்கு ஆர்வம் வர சிறை சென்றபோது சிங்காரவேலரோடு ஏற்பட்ட பழக்கம் ஒரு முக்கிய காரணம் என்று இந்தப் பதிவில் படித்தேன். ராஜாஜி சிங்காரவேலர் பழக்கம் வேண்டாம் என்று தடுத்தும் இது நடந்ததாம்.
இந்தி மொழியில் மாகாவியமான, திரு.ஜெய சங்கர் பிரசாதின் காமாயனியைச் செந்தமிழ்க் கவிதையில் காமன் மகள் என வடித்தவர். காளிதாசனின் ரகுவம்சத்தையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் (1969)
இவரது மற்ற நூல்கள்:
1. கனிந்த காதல்
2. தேசிய கீதம்
3. சோசலிஸ்ட் கீதங்கள்
4. பக்த விஜயம்
5. மார்க்சீயம்
6. பூமி வரலாறு
7. உயிர்களின் தோற்றம்
8. லெனின்
இவர் விரிவுரை எழுதிய நூல்கள்:
1. திருமுருகாற்றுப்படை
2. கந்தரலங்காரம்
3. கந்தரனுபூதி
4. குமரேச சதகம்
தகவல் ஆதாரம்:
1. மது.ச.விமலானந்தம் எழுதிய “தமிழ் இலக்கிய வரலாறு” 1987
2. வலைத்தளத்திலிருந்து அமுதம் ராமசாமி ஹிந்துவில் எழுதிய கட்டுரை
3. தமிழக அரசு ப்ளானிங் கமிஷன் வலைத்தளம்
மே 27, 2009 at 1:44 பிப
Iam so happy to read about my uncle’s short biographical sketch.He was an erudite scholar.we used to admire him when he was alive. Thank you so much for making this article
மே 27, 2009 at 11:21 பிப
மங்கை,
ஜமதக்னி அவர்கள் உங்கள் மாமா என்பது தெரிந்து மிக்க மகிழ்ச்சி. சேதுராமன் ஒவ்வொரு முறையும் உறவினர்களை, குடும்பத்தினரை தேடிக் கொண்டிருக்கிறார். அவரும் மிக்க மகிழ்ச்சி அடைவார்.
ஜமக்தக்னியை பற்றி நீங்களும் எழுதுங்களேன்! உங்கள் மாமாவைப் பற்றி உங்களுக்கு தெரியாததா? அவரது புத்தகங்கள் எதையாவது படித்திருக்கிறீர்களா? அவற்றை பற்றியும் உங்கள் கருத்துகளை எழுதுங்களேன்! அவரது புகைப்படம் உங்களிடம் கிடைக்குமா?
மே 28, 2009 at 10:02 முப
ஜமதக்னி அவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், இன்றைக்கும் தாஸ் கேபிடல்-ன் ஒரே தமிழ் மொழியாக்கம் இவருடையதுதான் என்று! எங்கள் ஆயா இன்னும் அதிகமாக சொல்லக் கூடும். எங்கள் ஆயா கல்யாணி, இவரது மனைவி லீலாவதியின் உடன்பிறந்த சகோதரி! 🙂
மே 29, 2009 at 12:36 முப
சந்தன முல்லை,
ஜமதக்னி அவர்களை பற்றிய பதிவுக்கு மறுமொழி இட்டதற்கு நன்றி! மற்றும் ஒரு உறவினரான மங்கை எழுதிய மறுமொழியை பார்த்தீர்களா?
உங்கள் தளத்தை அவசரமாக ஒரு பார்வை பார்த்தேன். பப்புவின் திருவிளையாடல்கள் சுவாரசியமாக இருக்கிறது. எங்கள் குடும்ப குழந்தைகளின் திருவிளையாடல்களையும் பாருங்கள்! (குடும்பம் என்ற பக்கம்)
மே 28, 2009 at 1:47 பிப
To RV Thank u for your cheerful reply.He was my ‘periappa’ actually[tamil tamildhan].He was afan of Perrymason.Even at night 120’clock we could see him with that book or working out problems from Algebra.Infact we used to go near him rarely,fearing he would ask qns from any quarter.There is a book on the birth and growth of communism in N.A Dt authored by N.Ramakrishnan. A detailed life sketch and his contribution to the ‘iyakkam’ along with his photo are given in that book. He had three children out of which one[daughter] is alive whose husband is the chairman of planning commission,T.Nad.hank you once again.
மே 29, 2009 at 12:30 முப
மங்கை,
பெரியப்பாவை மாமா என்று நினைத்து குழம்பிவிட்டேன். 🙂
தற்போதைய திட்டக் கமிஷன் துணைத் தலைவரான திரு நாகநாதன் ஜமதக்னி அவர்களின் மருமகனா?
நீங்கள் குறிப்பிட்ட புத்தகத்தை படித்ததில்லை. உங்களிடம் ஏதாவது ஃபோ ட்டோ இருக்குமா?
ஜமதக்னி அவர்களின் மனைவியின் தங்கை பேத்தியான சந்தன முல்லை என்பவரும் மறுமொழி இட்டிருக்கிறார். பார்த்தீர்களா?
மே 29, 2009 at 4:45 முப
Now I am the one who is most surprised, as it is with Mr. Naganathan I have been trying to establish a personal contact for the past two months nearly. When I was searching for material on Jamadagni in the net, his site was the first one to appear and carrying the info about the translation of Das Kapital by KRJ – unfortunately I have not been able to speak to Mr. Naganathan so far, though I spoke to his assistan morethan six times sending him the brief I had on KRJ and seeking more info and a photo!!. He was busy with the elections, then a visit south to Poompuhar and then now I believe he is on a trip to Russia.. Hopefully I will get in touch with him when he returns and supplement the information -Sethuraman
மே 29, 2009 at 5:14 முப
RV, என் பங்குக்கு நானும் உங்களை குழப்பியிருக்கிறேன். மங்கையின் மகள் நான்! 😉
மே 29, 2009 at 4:54 பிப
சேதுராமன், நாகநாதன் ஜமதக்னி அவர்களின் மாப்பிள்ளை என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. மங்கையோ, சந்தன முல்லையோ உறுதிப்படுத்தட்டுமே! அவர்களே உதவி செய்யவும் கூடும்.
சந்தன முல்லை, இது உங்கள் நிஜப் பெயரா? மிக அழகாக இருக்கிறது. மங்கை, இப்படி ஒரு பெயரை வைத்ததற்கு என் பாராட்டுகள். நீங்கள்தான் மங்கையின் மகள் என்பதை முன்னாலேயே சொல்லாமல் இப்படி என் மானத்தை வாங்குகிறீர்களே? 🙂 அம்மாவுக்கு பெண்ணை அறிமுகம் செய்து வைக்கும் ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன். 🙂
மே 30, 2009 at 8:20 முப
RV,It is Mr.naganathan who is his son-in-law.My cousin’s name is Shanthi who is also a Prof of Economics. Almost the whole family has tamil names.My son’s name is Yazhiniyan[ofcourse his voice is hoarse.One of my students commented once’how tr,u selected this name?There is no connection at all!I replied,’see ur name is also Gunasundari-is there any connection btwn the name and you?’she kept mum.Anyway this is the lighter side of life.].My mother came to my place this morning[she is 85.Her younger brother abt 82 are the survivers of Mrs Anjalaiammal’s direct descendents.you may come to know abt Anjalaiammal in Kamat’s congress archives]she felt v.happy when i read abt her uncle from ur blog. Thank you so much.you makes us happy. There are so many admirers of the name-sandanamullai and also for her personality as a whole.Thank you for ur no-hesitation compliment.Only in K.B’s movies it happens-daughter introduced to mother;son to father.Lets enjoy every iota of our life. Bye.
மே 30, 2009 at 2:43 பிப
மங்கை,
சேதுராமன் அவர்கள் திரு. நாகநாதனை தொடர்பு கொள்ள முயற்சி செய்துகொண்டிருக்கிறார். இங்கே இருக்கும் நாட்டுடமை சீரிஸின் அறிமுகங்களை – திரு ஜமதக்னி உட்பட – எழுதியது அவர்தான். அவருக்கு நீங்கள் திரு. நாகநாதனை அறிமுகம் செய்து வைக்க முடியுமா?
அஞ்சலை அம்மாளை பற்றி காமத் தளத்தில் தேடித் பார்த்தேன், கிடைக்கவில்லை. ஏதாவது சுட்டி கொடுக்க முடியுமா?
உங்களையும் சந்தன முல்லையையும் இன்கே சந்தித்தது பெரும் மகிழ்ச்சி!
மே 30, 2009 at 3:55 பிப
//அஞ்சலை அம்மாளை பற்றி காமத் தளத்தில் // சுட்டி இங்கே கொடுத்திருக்கிறேன்.
http://www.kamat.com/kalranga/freedom/congress/19026.htm
நன்றி,
சந்தனமுல்லை(ஒரே பெயர்தான், நடுவில் ஸ்பேஸ் இல்லை) 🙂
மே 30, 2009 at 5:40 பிப
சந்தனமுல்லை/மங்கை,
உங்கள் குடும்ப விவரங்கள், தள விவரங்கள், அஞ்சலை அம்மாள் பற்றிய சுட்டி ஆகியவற்றையும் இப்போது பதிவில் இணைத்துவிட்டேன். நன்றி!
ஜூன் 15, 2010 at 12:33 பிப
அன்பு சந்தனமுல்லை,
தாஸ் காப்பிடலின் தமிழாக்கம் தோழர் தியாகுவினாலும் செய்யப்பட்டு என் சி பி ஹெச் சினால் வெளியிடப்பட்டதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா ? அது தான் என்னிடம் இருக்கிறது.
சீனி மோகன்
ஜூலை 15, 2011 at 3:20 முப
[…] மார்க்ஸின் ‘மூலதனம்’ (க.ரா.ஜமதக்னி) […]
மார்ச் 12, 2012 at 2:14 பிப
[…] அவர்களின் நாட்டுடைமையாக்&#…காணலாம். […]
திசெம்பர் 12, 2020 at 7:40 முப
I am in a Novel work about South Pattern Therukoothu Artists in the Name of ”Kalari”. The novel travels across one century through the old South Arcot and Pudcherry. i included the message of Cuddalore Anjalai Ammal and Jamadhakni, C.Govidharajans part in freedom movement in order to trace the time of events.
ஓகஸ்ட் 15, 2022 at 11:56 முப
பல அரிய செய்திகளை அறிந்து கொண்டேன் மகிழ்ச்சி