சேதுராமனின் தொடரும் அறிமுகங்கள்.
நாட்டுடமை சீரிஸின் வேர்ப்பதிவு இங்கே.
எதிர்காலம் இன்னும் எத்தனையோ எழுத்தாளர்களை, பேராசிரியர்களை, துணை வேந்தர்களைப் பெறலாம். ஆனால் மலர் போன்ற இரக்க நெஞ்சமும், மலை போன்ற கொள்கை உறுதியும் கொண்ட ஒரு பண்பாளர் – அறிவுத் தந்தையாய், அன்புள்ள தாயாய்ப் பலருக்கு விளங்கிய ஒரு நல்ல மனிதரை – இறுதி வரையில் கொள்கைப் பிடிவாதம் கொண்டு, அளவோடு நெறி வகுத்து, வாழ்ந்து காட்டிய ஒரு பெருந்தகையாளரை எதிர்காலத்தில் இனி பார்க்க முடியுமா? (மு.வ.நூல்களைத் திறனாய்வு செய்தவரும், அவரது மாணவருமான இரா. மோகன்)
மு.வரதராசன், வட ஆற்காடு திருப்பத்தூர் தாலுகா வேலம் என்ற கிராமத்தில் திரு. முனுசாமி முதலியாருக்கும் அம்மாக்கண்ணு அவர்களுக்கும், 1912ம் வருடம் ஏப்ரல் மாதம் 25ம் தேதி பிறந்தவர். பிறப்பின் போது இவருக்கு இடப்பட்ட பெயர் திருவேங்கடம், ஆனால் காலப்போக்கில் வரதராசன் என்ற பெயரே நிலைத்தது. இளமையில் ஆதாரக் கல்வியை கிராமத்திலும், உயர் நிலைக் கல்வியை அருகிலுள்ள திருப்பத்தூரிலும் 1928ல் முடித்தார்.
இவர் தமிழ் பயின்றது முருகையா முதலியார் என்பவரிடம். உயர் நிலைக் கல்வி முடிந்ததும், சில காலம் திருப்பத்தூர் தாலுகா காரியாலயத்தில் எழுத்தராகப் பணியாற்றினார்.
பின்னர் தமிழ்க் கல்வியைத் தொடர்ந்தவர் தமிழ் வித்துவான் முதல் நிலைப் படிப்பை 1931ல் முடித்து மேல் நிலைப் படிப்பை 1935ல் மாநிலத்திலேயே முதல்வராகத் தேறி திருப்பனந்தாள் மடத்தின் ஆயிரம் ரூபாய்ப் பரிசும் பெற்றார்.
அதே வருடம் மு.வ. தனது மாமன் மகள் ராதா அம்மாளை மணந்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு திருநாவுக்கரசு, நம்பி, பாரி என்ற மூன்று மகன்கள் உண்டு.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராக 1939ம் ஆண்டு சேர்ந்தவர் தொடர்ந்து 1961ம் வருடம் வரை அங்கு பணி புரிந்தார். பணியிலிருந்தவாறே தமிழ்க் கல்வியைத் தொடர்ந்த மு.வ. 1939ல் பி.ஓ.எல். பட்டத்தையும், தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தனது ஆய்வின் மூலம் 1944ல் எம்.ஓ.எல்.பட்டமும் பெற்றார். மேலும் தமது தமிழாராய்ச்சியைத் தொடர்ந்து 1948ல், சங்க இலக்கியத்தில் இயற்கை என்ற படைப்பில் முனைவரானார்.
பச்சையப்பன் கல்லூரிப் பணியை விட்டுவிட்டு, மு.வ. சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக 1961ம் ஆண்டு சேர்ந்தார். இப்பணியிலேயே தொடர்ந்த மு.வ. 1971ம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணை வேந்தராகப் பதவியேற்றார். 1972ம் வருடம் அமெரிக்காவிலுள்ள வூஸ்டர் பல்கலைக் கழகம் இவருக்கு இலக்கியப் பேரறிஞர்( D.Litt) என்ற பட்டத்தையளித்துக் கௌரவித்தது.
டாக்டர் மு.வரதராசனார் 1974ம் வருடம், அக்டோபர் மாதம் 10ம் தேதி காலமானார்.
நாவல்களும், சிறுகதைகளும், கட்டுரைகளும், வாழ்க்கை வரலாறுகளும் இவரது படைப்புகள். இவர் எழுதிய அகல் விளக்கு என்ற நாவலுக்கு 1963ல் சாகித்திய அகாதெமி பரிசு கிடைத்தது. கள்ளோ காவியமோ என்ற இவரது நாவல் தமிழக அரசின் விருது பெற்றது. இவரது படைப்புகளின் விவரங்கள் கீழே:
நாவல்கள்
1. கள்ளோ காவியமோ?
2. கரித்துண்டு
3. பெற்ற மனம்
4. நெஞ்சில் ஒரு முள்
5. அகல்விளக்கு
6. மண் குடிசை
7. செந்தாமரை (மு.வ. தானே பதிப்பித்தது)
8. பாவை
9. அந்த நாள்
10. அல்லி
11. கயமை
12. வாடா மலர்
சிறுகதைத் தொகுதி
1. விடுதலையா?
2. குறட்டை ஒலி
வாழ்க்கை வரலாறு
1. அறிஞர் பெர்னார்ட் ஷா
2. மகாத்மா காந்தி
3. ரவீந்திரநாத் தாகூர்
4. திரு.வி.க.
சிறுவர் இலக்கியம்
1. குழந்தைப் பாட்டுகள்
2. இளைஞர்களுக்கான இனிய கதைகள்
3. படியாதவர் படும் பாடு
4. கண்ணுடைய வாழ்வு
கட்டுரைகள்
1. அறமும் அரசியலும்
2. அரசியல் அலைகள்
3. பெண்மை வாழ்க
4. போர்
5. உலகப் பேரேடு
6. மொழிப் பற்று
7. நாட்டுப் பற்று
8. மண்ணின் மதிப்பு
9. கி.ப். 2000
10. பழியும் பாவமும்
இலக்கியம்
1. திருக்குறள் தெளிவுரை(முதற் பதிப்பு 1949, இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளிவந்துள்ளன – என்னிடமிருப்பது 1987ல் வெளியான 78வது பதிப்பு)
2. தமிழ் நெஞ்சம்
3. தமிழ் இலக்கிய வரலாறு
4. வாழ்க்கை விளக்கம்
5. ஓவச்செய்தி
6. கண்ணகி
7. மாதவி
8. இலக்கிய ஆராய்ச்சி
9. கொங்கு தேர் வாழ்க்கை
10. சங்க இலக்கியத்தில் இயற்கை
11. இலக்கியத் திறன்
12. இலக்கிய மரபு
13. முல்லைத்திணை
14. நெடுந்தொகை விருந்து
15. குறுந்தொகை விருந்து
16. நற்றிணை விருந்து
17. நடை வண்டி
18. புலவர் கண்ணீர்
19. இளங்கோ அடிகள்
20. இலக்கியக் காட்சிகள்
21. குறள் காட்டும் காதலர்
22. மொழி நூல்
23. மொழியின் கதை
24. மொழி வரலாறு
25. மொழியியற் கட்டுரைகள்
தகவல் ஆதாரம்:
1. புக்ஸ் கூகிள் வலைத்தளம்
2. தமிழ் விக்கிபீடியா
3. திண்ணை வலைத்தளத்தில் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் கட்டுரை
4. புகைப்படம் சுட்டது திருக்குறள் தெளிவுரை 1987
ஆர்வி: மு.வ. ஐம்பதுகளின் லட்சியங்களை, மன ஓட்டங்களை, சிந்தனைகளை தன புனைவுகளில் பிரதிபலித்தவர். அந்த காலத்தில் ஒரு சூப்பர்ஸ்டார் என்றே சொல்ல வேண்டும். அவரது நாவல்கள் ஒன்றிரண்டை படித்திருக்கிறேன், எதுவும் ஞாபகம் இல்லை. ஞாபகம் வைத்துக்கொள்ளும்படி அவர் எழுதவில்லை.
அவரது திருக்குறள் தெளிவுரை மிக புகழ் பெற்றது. அறுபதுகளிலும், ஏன் எழுபதுகளிலும் கூட தமிழ் பிரியர்களிடம் இந்த நூல் கட்டாயமாக இருக்கும். நூறு பதிப்புகளுக்கு மேல் வந்திருக்கிறது என்று சேதுராமன் குறிப்பிடுகிறார்.
அவர் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு புகழ் பெற்றது. பட்டப் படிப்பில் பாடப் புத்தகமாக இருந்தது என்று நினைவு. எப்போ பார்த்தாலும் அவர் எழுதிய கரித்துண்டு, கள்ளோ காவியமோ, அகல் விளக்கு ஆகியவற்றை பாடமாக வைப்பார்கள்.
அவர் எழுதிய மொழி நூல் எனக்கு மிக பிடித்த ஒன்று. மொழி எப்படி உருவாகிறது என்று எல்லாருக்கும் புரியும் வகையில் அருமையாக எழுதி இருப்பார். படியுங்கள் என்று எல்லாருக்கும் சிபாரிசு செய்கிறேன். ஃப்ரீமான்ட் நூலகத்தில் கிடைக்கும்.
அவர் எழுத்துக்கள் நாட்டுடமை ஆவது நல்ல விஷயம். பாராட்டப்பட வேண்டிய விஷயம். இதுதான் சரியான நேரமும் கூட. ஒரு நாற்பது ஐம்பது வருஷங்கள் போனால்தான் ஒரு எழுத்தாளரின் பங்களிப்பு என்ன என்று சரியாக உணர முடியும்.
மே 11, 2009 at 5:23 பிப
அருமையான தொகுப்பு.
அகல்விளக்கு படிக்கவேண்டும் என்று ஒரு ஆவல் இருக்கிறது.
பாவைவிளக்கு யார் எழுதியது? பாரதிதாசனா?
மே 20, 2009 at 5:45 முப
பக்ஸ்,
பாவை விளக்கு எழுதியது அகிலன். சினிமாவாக கூட வந்தது.
மே 12, 2009 at 11:51 முப
பக்ஸ்
நான் இன்று தகவல் சேகரிக்க பாரி நிலையம்
சென்றபோது மு.வ.வின் அனைத்து நூல்களும்
பதிக்கப்பட்டு விற்பனைக்கு வைத்திருக்கக்
கண்டேன்.. உங்களுக்கென ‘அகல் விளக்கு’
ஒரு காபி வாங்கிவந்துள்ளேன் – மே இறுதிக்குள்
உங்களுக்கு வந்து சேரும்…
பாவை விளக்கு அகிலனுடையது.
ஆமாம் அங்கே என்ன தேர்தல் ஏதாவது
நடக்கிறதா?.. சென்னை சுவர்கள் மாதிரி
ஒரே பக்ஸ் ‘போஸ்ட்-டர்”
மே 12, 2009 at 11:47 பிப
>>>உங்களுக்கென ‘அகல் விளக்கு’
ஒரு காபி வாங்கிவந்துள்ளேன் – மே இறுதிக்குள்
உங்களுக்கு வந்து சேரும்…
You are a scholar and a gentleman. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. உங்கள் கனிவுக்கு நன்றி.
>>>ஆமாம் அங்கே என்ன தேர்தல் ஏதாவது
நடக்கிறதா?.. சென்னை சுவர்கள் மாதிரி
ஒரே பக்ஸ் ‘போஸ்ட்-டர்”
திடீரென்று கொஞ்சம் நேரம் கிடைத்தது. சரி புதிய போஸ்ட் எழுதலாமா என்று நினைத்துகொண்டிருக்கையில் உங்கள் போஸ்டை பார்த்து பதில் எழுதி…அப்படியே மற்ற போஸ்ட்களுக்கும் பதில் எழுதி…நேரம் போய்விட்டது.
19ஆம் தேதி ஒரு குட்டி எலக்ஷன். அதில் மனிதர்கள் போட்டியிடவில்லை. (அதனால் நான் போட்டியிடவில்லை 🙂 ) கொள்கைகள் போட்டியிடுகின்றன.
http://www.voterguide.sos.ca.gov/
திசெம்பர் 7, 2010 at 4:50 பிப
[…] […]
ஏப்ரல் 2, 2011 at 6:21 பிப
[…] மு. வரதராஜன், பெற்ற மனம், பெற்ற மனம் […]
ஓகஸ்ட் 23, 2013 at 5:00 பிப
[…] மு. வரதராஜன், பெற்ற மனம், பெற்ற மனம் […]
ஒக்ரோபர் 22, 2014 at 12:00 முப
[…] மு. வரதராஜன் (மு.வ.): ஒரு காலத்தில் பாப்புலராக இருந்து இப்போது யாருடைய பிரக்ஞையிலும் இல்லாத எழுத்தாளர். இவருடைய திருக்குறள் உரை இன்னும் பாப்புலராக இருக்கிறதா? ஆனால் இவர் எழுதிய இரண்டு நாவல்கள் – கரித்துண்டு மற்றும் அகல் விளக்கு – எனக்குப் பிடித்தமானவை. சேதுராமன் எழுதிய அறிமுகம் இங்கே. […]
ஏப்ரல் 4, 2015 at 12:19 முப
[…] மு. வரதராஜன் (மு.வ.): ஒரு காலத்தில் பாப்புலராக இருந்து இப்போது யாருடைய பிரக்ஞையிலும் இல்லாத எழுத்தாளர். இவருடைய திருக்குறள் உரை இன்னும் பாப்புலராக இருக்கிறதா? ஆனால் இவர் எழுதிய இரண்டு நாவல்கள் – கரித்துண்டு மற்றும் அகல் விளக்கு – எனக்குப் பிடித்தமானவை. சேதுராமன் எழுதிய அறிமுகம் இங்கே. […]
ஏப்ரல் 5, 2015 at 4:21 பிப
//Once upon a time they were popular and now, they are not in the reckoning of people// – not a correct way of putting it.
Writers or actors can be popular. Tamil scholars are not be clubbed with them and rated as popular or unpopular. These scholars always remain to be sought after and read by those who seek knowledge and are interested in Tamil language, literature and ancient history. They never go out of fashion for lovers of Tamil language and ancient literature.
Kural has had many commentators or interpreters – right from the ancient Manakkudavar, Parlimelalagar to modern Mu Va, Sujatha and Muka. Sujatha or Muka are not preferred by those who want plain meaning of Kurals. Sujaatha is a self-conscious writer and naturally likes to play to the gallery whether it is writing about Alwars (he authored one) or interpreting Kurals whereas Muka says more than necessary that is annoying to many except his fans. Parimelalagar is charged with sanatana dharmasiing Kurals. For him Valluvar wrote Kural only to celebrate Sanatana Dharma.
We are thus left with only one writer MuVa as a safe bet for students and teachers and others like me – who want to refer to the meaning of a kural when it is difficult to know from Valluvar’s words directly. Naturally Muka has become a household name in Tirukkural commentary.
If at all I am forced to refer to popularity as you like, then, it is that in any competition on Tamil, if the organisers want to give away Kural as the prize, they buy only Mu Va’s Kural only. That is popularity for you.
ஏப்ரல் 5, 2015 at 4:40 பிப
Sethuraman recommends MuVa Mozhi Nool. I second it. On reading it, one comes to know MuVa has read deeply in English language and literature. When I read, it became obvious to me that he has borrowed many ideas on the subject of language from English writers. I don’t cavil at it, though. If a thing is new and worth bringing to ignorant Tamil readers with good intentions of dispelling their ignorance, no harm if it is second-hand. Beg, borrow or steal, to enlighten Tamil people. 🙂
Sethuraman also refers to History of Tamil literature by MuVa as a well-known book. Here,all that I have written about his Kural is contextual.. HoTL has been written by many. But except MuVa, others have either sensationised many periods of our history; or brought into it their prejudiced views. Ka Su Pillai’s HoTL were well received but he had many prejudices which you can come acorss therein. And your own friendly writer Jeyamohan has authored one: he used the opportunity to traduce writers who he dislikes for other reasons. It is a book of prejudices and predilections. Other Tamil scholars have done well.
However, MuVa’s is the safest bet for students who write TNPSC and PG examinations because of its objectivity and plain and clear Tamil.
If you keep a personalised Tamil library in your house, I would recommend MuVa’s HoTL and his Kural to your library. If your children don’t know Tamil, then buy HoTL written by Ra.Pi,Sethu Pillai in English. Simple English and objectively written. He says that even the first Sangam books are so late as Second Century AD, thus burying the fanatical myth of it being pushed back to BC. We need such Tamil scholars who keep away from politics.
ஏப்ரல் 5, 2015 at 4:50 பிப
The omission of MuVe’s epistolary essays in Sethuraman’s list is disheartening to me. Personally to me because I came to MuVa only thought his essays.
Maybe, Sethuraman has buried it in the generic term Essays. But it is worth mentioning as a separate entity. Dear RV, I have already said here that MuVa borrowed copiously from English literature; and one of the borrowings is this epistolary style.
(Epistle = letter; Epistolary is adjective. If essays are written in the format of letters addressed to some one, it is called epistolary essays. In English literature, such essays (for e.g. Lord Chesterfield’s essays to his bastard son Philip are so famous that one cannot come out of college w/o reading the famous ones from it )
Mu Va’s letters are addressed to imaginary Younger Brother, Mother, Younger Sister – thambikku, ammaavukku,thangkaikku). He used this format to write about all kinds of issues: except politics. Many of these imaginary letters to imaginary persons have become classics in our literature.
The credit of bringing this style in essay writing goes to MuVa. But epistolary novels and short stories by many writers exist in Tamil. But today it is out of fashion, perhaps because it is a difficult format.
நவம்பர் 24, 2021 at 7:51 பிப
[…] மு.வ.வை அதிகமாக படித்ததில்லை. […]
நவம்பர் 24, 2021 at 8:02 பிப
[…] மு.வ.வை அதிகமாக படித்ததில்லை. […]