Xuanzangஹுவான் சுவாங் என்று படித்த ஞாபகம் இருக்கிறதா? ஹர்ஷன் என்ற ராஜா (இரண்டாம் புலிகேசி, மகேந்திர வர்மா பல்லவன் ஆகியோரின் சம காலத்தவர் இந்த ராஜா) வட இந்தியாவை ஆண்டபோது சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த பௌத்தத் துறவி. அவர்தான் முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி இருக்கிறார் போலிருக்கிறது.

வரும் வழியில் காசாங் என்ற ஊரில் தங்கி இருக்கிறார். அந்த ஊரின் ராஜா மிகவும் இம்ப்ரஸ் ஆகி இவரை மேலே போக அனுமதிக்கவில்லையாம். இங்கேயே இருந்துவிடுங்கள் என்று சாம பேத தானம் எல்லாம் பயன்படுத்திப் பார்த்தானாம். இவருக்கோ இந்தியா போயே தீர வேண்டும், அதனால் மறுத்திருக்கிறார். கடைசியில் போக முடியாது என்று ராஜா தடுத்துவிட்டான். இவர் உண்ணாவிரதம் ஆரம்பித்திருக்கிறார். அவனும் பயந்துபோய் விட்டுவிட்டானாம். சுவாரசியமான இந்த தகவலை இங்கே படித்தேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு

தொடர்புடைய சுட்டிகள்:
ஹுவான் சுவாங்கின் சத்யாகிரஹம்
ஹுவான் சுவாங் பற்றிய விக்கி குறிப்பு