அமெரிக்காவில் வீட்டை தினமும் பெருக்கி துடைப்பது என்பது முடியாத காரியம். அவ்வப்போது இரண்டு maids வந்து பெருக்கிக் கொடுத்துவிட்டுப் போவார்கள். அதற்கு அவர்களிடம் முன் கூட்டியே அப்பாயின்ட்மென்ட் வாங்க வேண்டும். கொஞ்சம் hassle.
என் மனைவி ஹேமாவுக்கு அவர்கள் நாளைக்கு வருகிறார்கள் என்றால் இன்றைக்கே டென்ஷன் ஆரம்பித்துவிடும். எனக்கு அது புரிந்ததே இல்லை. நாம் பணம் கொடுக்கிறோம், அவர்கள் வேலை செய்கிறார்கள், அப்பாயின்ட்மென்ட் கிடைத்துவிட்டால் இதில் என்ன டென்ஷன்?
போன முறை என் மனைவி சொன்னதைக் கேட்டதும்தான் ஓரளவு புரிய ஆரம்பித்திருக்கிறது – “நாளைக்கு maids வராங்க, இன்னிக்கு நமக்கு வேலை இருக்கு – வீட்டை கிளீன் பண்ணி வச்சிடணும்!”
தொகுக்கப்பட்ட பக்கம்: குடும்பம்
திசெம்பர் 21, 2010 at 1:07 பிப
http://simulationpadaippugal.blogspot.com/2010/03/blog-post_02.html
– சிமுலேஷன்
திசெம்பர் 22, 2010 at 6:40 பிப
அன்புள்ள சிமுலேஷன்,
கலக்கி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.
திசெம்பர் 24, 2010 at 6:05 முப
//“நாளைக்கு maids வராங்க, இன்னிக்கு நமக்கு வேலை இருக்கு – வீட்டை கிளீன் பண்ணி வச்சிடணும்!”//
இந்தக் கடைசி வரியைப்படித்ததும், நான் எழுதிய ஒரு பதிவின் கடைசி வரி நினவுக்கு வந்தது. இதோ அந்த சிறு பதிவு.. (முடிந்தால் தனிப்பதிவாகப்போடவும்).
கொக்கைப் பிடித்து………
—————–
எங்கள் மாமா இயல்பாகவே நகைச்சுவை உணர்வுள்ளவர். நகைச்சுவையை வருந்தி இழுத்துப்பேச மாட்டார். ஆனால் பேசும்போது தானாக வந்து விழும். அதனால் ரசிக்க முடியும்.
எங்களூரில் இருந்து மூன்று மைல் தூரத்தில் அவருக்கு பெரிய தென்ன்ந்தோப்பு இருந்தது. தினமும் அங்கே போவார். நாங்கள் எப்போதாவது குடும்பமாய்ப்போய் இளநீரை வேட்டுவிட்டு வருவதுண்டு. பஸ் கிடையாது, ரயிலில்தான் போகவேண்டும். காலை 7 மணி ரயிலில் போனால் மாலை இருட்டியபின் வரும் ரயிலில்தான் திரும்பி வரவேண்டும். அப்படி ஒருமுறை திரும்பி வருவதற்கு மாலை ஐந்து மணிக்கெல்லாம் கிராமத்து ரயிலடியில் வந்து உட்கார்ந்துவிட்டோம்.
பொழுதடையும் நேரம். ரயிலடி பெஞ்சில் நாங்கள் அமர்ந்திருந்தபோது, மாமா அவரது தோப்புக்காட்டில் குடியிருக்கும் குடியானவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ரயில் ட்ராக்கின் அந்தப்பகம் ஒரு ஐந்து பேர் ஒவ்வொருவரும் ஒரு கையில் நீளமான துப்பாக்கியும், மறு கையில் அவர்கள் சுட்டு வீழ்த்திய கொக்கு, குருவிகளையும் தூக்கிக்கொண்டு நடந்து போய்க்கொண்டிருந்தனர். ‘மாரிமுத்து, அவங்கள்ளாம் யாரு? எங்கேயிருந்து வர்ராங்க?’ என்று மாமா கேட்க, அதற்கு அந்தக்குடியானவர் ‘அவைய்ங்க எல்லாம் பக்கத்திலுள்ள அலையாத்திக்காட்டில் வேட்டைக்குப்போய் கொக்கு சுட்டு எடுத்துக்கிட்டு வர்ராய்ங்க’ என்று அவர் சொன்னதும், உடனே மாமா சொன்னார்…
“மாரிமுத்து, நம்ம வீட்டிலேயும் ஒரு பழைய துப்பாக்கி இருக்கு. நாமளும் ஒரு கொக்கை புடிச்சிக்கிட்டு வந்து சுடணும்”.
திசெம்பர் 28, 2010 at 10:45 பிப
ம்ம்ம்… பிழைக்கத்தெரிந்த R.V. 🙂
ஜனவரி 7, 2011 at 3:43 முப
Hi Subbu,
Manaswini’s 75th Stage performance was video shot by NDTV HINDU channel.
It was telecast yesterday . Please visit the link to have a look at the footage.The second segment of the news segment carries the dance clips.Please visit http://www.youtube.com/user/ndtvhindu#p/u/9/El02EdiQBjY
-chia