சந்திரசேகரேந்திர சரஸ்வதி பதிவு சில நண்பர்கள் மனதை புண்படுத்திவிட்டது. அதனால் நினைவு இருக்கும்போதே ஜாக்கிரதையாக ஒரு Disclaimer கொடுத்துவிடுகிறேன். இது எவர் மனதையும் புண்படுத்த எழுதப்பட்டதில்லை. பழைய ஏற்பாட்டை (Old Testament) தெய்வத்தின் வரலாறாக மதிப்பவர்களுக்கு இது irreverent ஆகத் தெரியலாம். எனக்கு பழைய ஏற்பாடு இலக்கியம்+வரலாறு+legend மட்டுமே என்பதை முடிந்தால் நினைவு வைத்துக் கொள்ளுங்கள்.
பழைய ஏற்பாடு மிக சுவாரசியமான புத்தகம். யூத, கிருஸ்துவ, இஸ்லாமியர்களின் புராணங்கள் என்று சொல்லலாம். இஸ்லாமியர்களின் version சில வேறுபாடுகள் உடையது.
நான் பழைய ஏற்பாட்டை முதல் முறையாக படித்தபோது எனக்கு ஒரு பதினாறு வயது இருக்கலாம். எனக்கு எப்போதுமே இந்த புராணம், இதிகாசம் எல்லாம் படிப்பதில் விருப்பம் உண்டு. மகாபாரதத்தில் பெரிய பித்தே உண்டு. ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் படித்தேன். ஆங்கில புத்தகத்தில் begat என்ற வார்த்தையை முதல் முறையாக பார்த்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது.
நான் புதிய ஏற்பாட்டை முழுமையாக படித்தத்தில்லை. ஆனால் பழைய ஏற்பாட்டின் கடவுளுக்கும் (ஜெஹோவா), புதிய ஏற்பாட்டின் கடவுளுக்கும் எக்கச்சக்க வித்தியாசம்! புதிய ஏற்பாட்டில் தேவ குமாரன் ஏசு ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்கிறார்; ஆனால் பழைய ஏற்பாட்டின் ஜெஹோவாவிடம் (ஏசுவின் அப்பா என்று வைத்துக் கொள்ளுங்களேன்) இந்த பாச்சா எல்லாம் பலிக்காது. அவர் மிக கடுமையானவர். அவரிடம் வைத்துக் கொண்டால் தீர்த்துவிடுவார். தன்னை வழிபடும் யூதர்களை எகிப்திலிருந்து மீட்க ஒவ்வொரு எகிப்தியனின் முதல் ஆண் குழந்தையை கொல்லத் தயங்கவே மாட்டார். சிறு குழந்தைகள் என்ன பாவம் செய்தன, ஜெஹோவாவின் வலிமையை காண்பிக்க அப்பாவி குழந்தைகளை கொல்வது சரியா என்று யாரும் கேட்கக் கூடாது. அவருக்கு நான்-வெஜ்தான் பிடிக்கும் போல, அதனால் ஏபல் ஆட்டை பலி கொடுப்பதை ஏற்றுக் கொள்வார், ஆனால் உழவன் கெய்னின் படையலை ஏற்க மாட்டார். கெய்ன் கடுப்பாகி தம்பி ஏபலை கொன்றுவிடுவான். எனக்கென்னவோ கொலையில் ஜெஹோவாவுக்கு பங்கிருப்பதாகத்தான் தோன்றுகிறது!
அவருடைய முடிவுகள் ஏன் எடுக்கப்படுகின்றன என்று அவரை வழிபடுபவர்களுக்கு புரிய வைக்க வேண்டிய அவசியமே இல்லை. சும்மா போகிற போக்கில் ஆபிரகாமின் சந்ததியினர் மட்டுமே தமக்கு பிடித்தமானவர் என்று சொல்வார். அப்புறம் யூதர்கள் என்ன தவறு செய்தாலும் மன்னித்து விட்டுவிடுவார். மிச்ச பேர் எல்லாம் ஏன் பிறப்பிலேயே பாபாத்மாவா? அப்படி பிறவியிலேயே பாபாத்மாக்களை ஏன் படைத்தார்? (நம்மூர் ஜாதி மாதிரி இல்லை?) ஜெஹோவா என்னை துதியுங்கள், என்னை துதியுங்கள் என்று எப்போதும் யூதர்கள் பின்னாலேயே மட்டும் ஓடுவார், மற்ற மனிதர்கள் “போலிக்” கடவுள்களை கும்பிட்டால் அவருக்கு அதைப் பற்றி அக்கறை இல்லை. அல்லா காஃபிர்களை படைக்கவும் படைக்கிறார், அப்புறம் காஃபிர்களுக்கு நரகத்தையும் விதிக்கிறார்போல!
நம்மூரில் சுடலைமாடன் பயமுறுத்துவார், எனக்கு படையல் வைக்காவிட்டால் கிராமத்தை அழித்துவிடுவேன், மழை பெய்யாது, ஊரில் வியாதி வரும் என்றெல்லாம் பூசாரி மேல் ஏறி சொல்வார். ஜெஹோவாவும் அந்த மாதிரிதான். ஒரே ஒரு வித்தியாசம் – மாடன் அடுத்த தெய்வங்களுக்கு படையல் வைப்பதை தடுப்பதில்லை. ஜெஹோவா எனக்கு மட்டும்தான் படையல் என்று பிடிவாதம் பிடிக்கிறார்!
தொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி
ஓகஸ்ட் 10, 2010 at 5:04 முப
ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.(பைபிள் புதிய ஏற்பாடு மத்தேயு 5 : 39)
** ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு…??? ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா? **
இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா? என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது.**
புதிய ஏற்பாடு பைபிள்: யோவான்:18 : 22 – 23. ல் இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்..
இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.**
ஒரு போலி மாயையை ஏற்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி இயேசு இப்படி போதித்தார் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.
“க்ளிக்” செய்து படியுங்கள்.
கிறிஸ்துவ போலிமாயைக்கு சவால்?
மதம்மாற்றம் செய்ய தில்லுமுல்லு மொள்ளமாரித்தனம்.
ஓகஸ்ட் 10, 2010 at 9:36 முப
நீங்கள் ஜெஹோவாவை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதே என் எண்ணம்.
ஜெஹோவா யூதர்கள் பின்னாடி ஓடுபவர் அல்ல. யூதர்கள் மட்டுமே ஜெஹோவாவை வழிபடக் கடமைப்பட்டவர்கள் என்பதை பழைய ஏற்பாட்டில் சொல்லியிருப்பார்கள். மற்றவர்கள் அவரை வழிப்படத் தேவையில்லை. kafir என்பது kfer என்று பழைய ஏற்பாட்டில் இருக்கும். அதில் ஜெஹோவாவை வழிபடாத யூதர்கள் தான் காஃபிர்கள். யூதர் அல்லாத வேறு ஒருவர் ஜெஹோவாவை வழிபடாதவர் என்றால் அவருக்கு பெயர் goy (gentile என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்).
பழைய ஏற்பாடு என்பது யூதர்களுக்கான புஸ்தகம். அவ்வளவே.
எனக்கும் நீங்கள் கூறியது போல் ஜெஹோவா ஒரு கிராமதேவதை போல் தான் இருப்பவர் என்று தோன்றியது உண்டு. ஆனால் செமிட்டிக் மதங்களை இந்திய மரபுப் படி பார்ப்பது இயலாத காரியம்.
சில ஆராய்ச்சியாளர்கள் ஜெஹோவாவுக்கு மனைவி எல்லாம் இருந்தது. பெட்ரா (petra இன்று ஜோர்டனில் உள்ளது) வில் உள்ள கோவிலில் ஜெஹோவாவின் சிலையெல்லாம் இருந்ததாகச் சொல்கிறார்கள்.
ஓகஸ்ட் 10, 2010 at 1:53 பிப
இந்த பழைய/புதிய ஏற்பாடுகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. பள்ளியில் படிக்கும் காலங்களில் ரொம்ப பாவமா (பார்க்க அப்படித்தான் தோன்றும்) சில பெண்கள் வழி மறித்து கடவுளை (ஏசுவா, எஹோவாவா என்பது புரியும் வயது இல்லை. காதில் கழுத்தில் ஒற்றும் இல்லாமல் மூளியாய் இருப்பார்கள் என்பதால் பெந்தெகொஸ்தே வகையாக இருக்க வேண்டும் என்று பின்னாளில் ஊகிக்க முடிந்தது ) ஜெபித்து விட்டு புத்தகத்தை திறந்தால் மறு நாள் தேர்வில் வரப்போகும் கேள்வி சரியாக நம் கண்ணில் படும் என்பது மாதிரியான அற்புதங்களை போதித்து செல்வார்கள்.
சுடலை மாடன் எங்கள் தெருவில் காவல் தெய்வம். வெளியூர் செல்லும் போதெல்லாம் அம்மா தேங்காய் உடைத்து, உண்டியலில் காசு போட்டுத் தான் இப்போதும் செல்வார்கள். அம்மாவுக்காக நாங்களும் செய்தாக வேண்டும். சிலர் கிராமங்களில் இருந்து வந்து அங்கே பலி கொடுப்பதை பார்த்து இருக்கிறேன். ஆனால் பலி கேட்கும் சாமி என்பது எனக்கு புது தகவல். இப்படி எங்கும் எழுதி வைக்கப் பட்டுள்ளதா என்ன? இது சிலரின் பாரம்பரியப் பழக்கம் மட்டுமே என்று நினைக்கிறேன்.
ஓகஸ்ட் 12, 2010 at 1:05 முப
விருட்சம், பலி கொடுப்பவர்கள் சாமி பலி கேட்குது என்றுதானே சொல்வார்கள்?
வஜ்ரா, பழைய ஏற்பாட்டில் பார்த்தால் அவ்வப்போது யூதர்கள் ஜெஹோவாவை மறந்துவிடுவார்கள். ஜெஹோவா அவர்களை தன்னை வழிபட வைக்க ஏதாவது செய்வார். அதைத்தான் அப்படி எழுதி இருக்கிறேன்.
ராஜ், நீங்கள் சொல்லும் நிகழ்ச்சி நினைவில்லை. ஆனால் அவர் அப்படி சொல்வதாக புதிய ஏற்பாட்டில் நிச்சயமாக சொல்லப்படுகிறது.
ஓகஸ்ட் 12, 2010 at 3:33 முப
சாமியே பலி கேட்பதற்கும்( எழுதி வைக்கப் பட்ட ஆதாரங்கள்) சாமிக்கு பலி கொடுக்க சிலர் காரணம் கற்பிப்பதற்கும் ஆன அடிப்படை வித்யாசங்கள் இருக்கு இல்லையா?
ஓகஸ்ட் 12, 2010 at 4:15 பிப
அக்காலகட்டகத்தில் எல்லா மதத்தினரும் காட்டுமிராண்டிகளாகவே இருந்தனர். அடுத்து எந்த இலக்கியத்தை எடுத்து இதுபோன்றொரு ஆராய்ச்சி செய்வீர்கள் என்று எதிர்பார்த்திருக்கிறேன்
ஓகஸ்ட் 12, 2010 at 5:27 பிப
நண்பர்களே,உலகமுழுதும் வியாபித்திருக்கும் ஒரு மார்க்கத்தை இத்தனை சிறுமைப்படுத்த உங்களால் மட்டுமே முடியும்;எல்லாவற்றுக்கும் நன்றி.
Psa 50:7 என் ஜனமே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாய்ச் சாட்சியிடுவேன்; நானே தேவன், உன் தேவனாயிருக்கிறேன்.
Psa 50:8 உன் பலிகளினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளேன்; உன் தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.
Psa 50:9 உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை.
Psa 50:10 சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.
Psa 50:11 மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.
Psa 50:12 நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.
Psa 50:13 நான் எருதுகளின் மாம்சம்புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?
Psa 50:14 நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி;
Psa 50:15 ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
ஓகஸ்ட் 16, 2010 at 2:11 முப
சில்சாம், இந்த quotes எல்லாம் எதற்காக கொடுத்திருக்கிறீர்கள் என்று புரியவில்லை. நான் எழுதி இருப்பது அனைத்தும் பழைய ஏற்பாட்டில் உள்ளவை. அதில் தவறு இருந்தால் சொல்லுங்கள், திருத்திக் கொள்கிறேன். பழைய ஏற்பாட்டில் உள்ளவை உங்கள் கண்ணில் “உலகமுழுதும் வியாபித்திருக்கும் ஒரு மார்க்கத்தை சிறுமைப்படுத்துவதாக” இருந்தால் உங்கள் பிரச்சினை பழைய ஏற்பாட்டுடன், யூத/கிருஸ்துவ/இஸ்லாம் அமைப்புகளுடன் சென்று பேசுங்கள்!
செயின்ட் தாமஸ் ஃபேபில்ஸ், மறுமொழிக்கு நன்றி!
வேல், நான் மத அறிஞன் இல்லை. எனக்கு ஓரளவு தெரிந்தது ஹிந்து மதமும்; கொஞ்சம் குறைவாகத் தெரிந்தது கிருஸ்துவ மதம். அவ்வளவுதான். 🙂
ஓகஸ்ட் 16, 2010 at 1:19 முப
//உலகமுழுதும் வியாபித்திருக்கும் ஒரு மார்க்கத்தை இத்தனை சிறுமைப்படுத்த//
இங்கு சிறுமைப்படுத்த முயற்சியே இல்லை. உண்மை, அந்த புனையப்பட்டுள்ள கதைகளில் அந்த இஸ்ரேலின் சின்ன எல்லை சிறு தெய்வம் யவ கேட்டதைத் தான் கூறுகிறார்.
சில்சாம் தனக்கு வசதியான வசனகளைத் தந்துள்ளார்.
ஆனால் யவ கொடுத்த அருவெறுப்பு நிறந்த சட்டங்களை ஒரு ஆப்பிரிக்க பாதிர்யான கணிதப் பேராசிரியர் தொகுத்துக் கூறுவது.
a Christian Convert African Maths Professor- “that local god wanted The Jerusalem Temple’s Priest must eat 88 Pigeons every day and that god wanted killing of 400- 1600 Goats every minute every day.”
ஓகஸ்ட் 16, 2010 at 5:42 முப
RV நல்லவர், வல்லவர், நடுநிலையாளர் …
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=37614049
இந்த மாதிரி வழியில் மடக்கி, அல்லது பஸ் ல் அருகே வந்து அமர்ந்து அல்லது நட்பாக பழகிக் கொண்டு இருக்கும் போதே திடீரென்று பிரசாரத்தில் இறங்கும் அல்லது ஜெபக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் அல்லது நமக்காக ஜெபிக்கவே ஆரம்பித்து விடும் மனிதர்களை எந்த ரகத்தில் சேர்ப்பது என்ற என் குழப்பத்தை நீங்களும் சில்சமும் தீர்த்து வைத்து விட்டீர்கள்.
போனில் கிரெடி கார்டு, பேங்க் லோன் அழைப்பு விடும் பிரதிநிதிகள், eurekha phobes , ஆம்வே பிரதிநிதிகள் போல் …. அவர்களை விட மோசமா ? …
நல்லா ரசிச்சேன். பாராட்ட முடியலை. விற்பனை பிரதிநிதியும் மத மாற்றியும் ….
ஓகஸ்ட் 23, 2010 at 3:53 பிப
hmm, i too agree with virutcham. Chennaiyil thideernu bus or train namakku pothikka arampichuduranga. Neenga try panni parunga neenga nenachathu nadakkumnu. ulloor josiyar mathiri irukku.
Virutcham sonna mathiri sambavangal enakku nerayathadavai nadanthu irukku. Konjam mokatha sokama vachu iruntha pothum.
Kadavulai koovi virka vendiya avasiyam En endruthan enakku purivathey illai?
ஓகஸ்ட் 23, 2010 at 5:50 பிப
அலமேலு, மறுமொழிக்கு நன்றி!
ஓகஸ்ட் 24, 2010 at 8:17 முப
சிலதை பகிர்ந்து உண்போம்;
சிலதை இணைந்து உண்போம்;
தம்மைக் குறித்து,”ஜீவ அப்பம் நானே,
மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் திருப்தியாவான்”என்றார் இயேசு..!
யாகத் தீயிலிருந்து அந்த பசுவின் மாம்சத்தைப் புசித்தாலே ஒரு பிராமணனின் யாகம் பூர்த்தியடையுமாம்;
ஆனால் இயேசுவின் திருப்பலியை மட்டும் மனுக்குலம் ஏற்கிறதில்லை..!
ஏற்கும் வரை போதிப்போம்;
பூஜைக்கு சென்று வருவோர் தமது கையிலிருக்கும் பிரசாதத்தைப் பகிர்ந்துக் கொள்வதில்லையா அதுபோன்றதே இயேசுவாகிய திருவார்த்தையைப் பிட்டுத் தருவதும்;
தெளிந்துணர்க..!
ஓகஸ்ட் 24, 2010 at 11:02 முப
//அவருக்கு நான்-வெஜ்தான் பிடிக்கும் போல, அதனால் ஏபல்ஆட்டை பலி கொடுப்பதை ஏற்றுக் கொள்வார், ஆனால் உழவன் கெய்னின்படையலை ஏற்க மாட்டார். கெய்ன் கடுப்பாகி தம்பி ஏபலை கொன்றுவிடுவான். எனக்கென்னவோ கொலையில் ஜெஹோவாவுக்கு பங்கிருப்பதாகத்தான் தோன்றுகிறது!// காயின் நல்லவன் அல்ல. எனவே அவன் பலி அங்கீகரிக்கப்படவில்லை. இங்கே பலி அல்ல, பலி கொடுத்தவனின் மனசு தான் முக்கியம்.
//அப்புறம் யூதர்கள் என்ன தவறு செய்தாலும் மன்னித்து விட்டுவிடுவார்.//
தவறு. யுதர்கள் உள்ளிட்ட இஸ்ரவேலர்கள் (Isrealites) தவறு செய்தபோதெல்லாம் தண்டித்திருக்கிறார்.
//மிச்ச பேர் எல்லாம் ஏன் பிறப்பிலேயே பாபாத்மாவா? அப்படி பிறவியிலேயே பாபாத்மாக்களை ஏன் படைத்தார்?//
மிச்சபேர் எல்லாம் படைத்தவரை வணங்கவில்லை, படைப்புகளை வணங்கினர். அப்போ பாவம் செய்தது யார்?
பலி கொடுக்கும் வழக்கம் வேத காலத்திலேயே இருந்துள்ளது. சுடலை மாடனுக்கு மட்டுமல்ல, வேதகாலக் கடவுள்களுக்கும் பலி கொடுக்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 24, 2010 at 5:46 பிப
என்னங்க சில்சாம், சம்பந்தம் இல்லாமல் மறுமொழி எழுதுவது என்று ஏதாவது விரதமா?
ராபின், // Now Abel became a shepherd of a flock, but Cain cultivated the land. 3In the course of time Cain presented some of the land’s produce as an offering to the LORD. 4And Abel also presented [an offering][32] — some of the firstborn of his flock and their fat portions.[33] The Lord had regard for Abel and his offering, 5but He did not have regard for Cain and his offering. Cain was furious, and he was downcast.[34] 6Then the LORD said to Cain, “Why are you furious? And why are you downcast?[35] 7If you do right, won’t you be accepted? But if you do not do right, sin is crouching at the door. Its desire is for you, but you must master it.” 8Cain said to his brother Abel, “Let’s go out to the field.”[36] And while they were in the field, Cain attacked his brother Abel and killed him. // ஏபலின் படையல் ஏற்கப்பட்டு தன படையல் மறுக்கப்பட்ட பிறகே கெயின் “கெட்டவனாக” மாறுகிறான். அப்படி இருவருக்கும் நடுவில் ஆரம்பத்திலிருந்தே பாரபட்சம் காட்டப்படுவது ஏன் என்று விளக்கப்படுவதில்லை.
// யுதர்கள் உள்ளிட்ட இஸ்ரவேலர்கள் (Isrealites) தவறு செய்தபோதெல்லாம் தண்டித்திருக்கிறார். // எப்போது தண்டித்தாலும் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்கு என்று சொல்லி மீண்டும் அவர்களை ரட்சிப்பார். பழைய ஏற்பாட்டை மேலோட்டமாக புரட்டினால் கூட இது தெரியும்.
// மிச்சபேர் எல்லாம் படைத்தவரை வணங்கவில்லை, படைப்புகளை வணங்கினர். அப்போ பாவம் செய்தது யார்? // பழைய ஏற்பாட்டில் அடிக்கடி வருவது யூதர்கள் பால் என்ற கடவுளை வணங்க ஆரம்பித்து ஜெஹோவாவை மறந்துவிடுவது. மோசசுக்கு 10 கட்டளைகள் கிடைக்கும்போது கூட யூதர்கள் தங்கக் கன்றுக்குட்டியை வணங்கிக் கொண்டிருந்தார்கள். உங்கள் வாதப்படி படைப்புகளை வணங்கினார்கள் என்று விட்டுவிட வேண்டியதுதானே? ஏன் மீண்டும் மீண்டும் குருமார்களை அனுப்பி அவர்களை “நல்ல வழிக்கு” திருப்புகிறார்? அப்படிப்பட்ட குருமார்கள் ஏன் யூதர்கள் தவிர்த்தவர்களுக்கு அனுப்பப்படவில்லை? லாஜிக் உதைக்கிறதே? மிச்ச பேர் எல்லாம் இரண்டாம் கிளாஸ் மனிதர்களா? அது என்ன ஆப்ரஹாமுக்கு மட்டும் உன் சந்ததியினரை உயர்த்துவேன் என்று வாக்கு? ஆபிரகாமுக்கு பின் பிறக்கப்போகும் கணக்கில்லாத மற்ற சந்ததியினர் பிறப்பதற்கு முன்பே, எந்த தவறும் செய்வதற்கு முன்பே, அவர்களை ஒதுக்குவது ஏன்?
ராபின், இதெல்லாம் நம்பிக்கை. லாஜிக்கை வைத்து நம்பிக்கையை நிருபிக்க முடியாது.
// பலி கொடுக்கும் வழக்கம் வேத காலத்திலேயே இருந்துள்ளது. // சரி. அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
ஓகஸ்ட் 25, 2010 at 4:21 முப
// ஏபலின் படையல் ஏற்கப்பட்டு தன படையல் மறுக்கப்பட்ட பிறகே கெயின் “கெட்டவனாக” மாறுகிறான். அப்படி இருவருக்கும் நடுவில் ஆரம்பத்திலிருந்தே பாரபட்சம் காட்டப்படுவது ஏன் என்று விளக்கப்படுவதில்லை//
5. காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது.
6. அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?
7. நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்;
ஆதியாகமம் 4- அதிகாரம் (Genesis, Chapter 4)
http://www.tamil-bible.com/lookup.php?Book=Genesis&Chapter=4
காயீன் ஆபேலை கொள்வதற்கு முன்பே கடவுள் அவன் நல்லவன் அல்ல என்கிறார் பாருங்கள். இதனால்தான் அவனுடைய காணிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
ஓகஸ்ட் 25, 2010 at 4:58 முப
யூதர்கள் என்போர் இஸ்ரவேலர்களில் ஒரு பிரிவினர். பின்னர் யூத மார்க்கத்தில் மற்றவர்களில் பலர் இணைந்தாலும், இன்னும் பல இஸ்ரவேலர்கள் உலகின் மற்ற பகுதிளில் பரவியுள்ளதாக சொல்லப்படுகிறது.
http://en.wikipedia.org/wiki/Israelites#.22Israelites.22_in_modern_Judaism
நீங்கள் நினைப்பதுபோல இஸ்ரவேலர்களுக்கு இறைவனின் ஆதரவு என்பது எப்போதும் சாதகமாக இருக்கவில்லை. நான் முன்பே குறிப்பிட்டதுபோல தவறு செய்யும்போதெல்லாம் கடுமையாக தண்டிக்கப்பட்டிருக்கின்றனர்.
6. கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போன எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்த புருஷரான யாவரும் மாளுமட்டும், இஸ்ரவேல் புத்திரர் நாற்பது வருஷம் வனாந்தரத்தில் நடந்து திரிந்தார்கள்; கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கும்படி அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை அவர்கள் காண்பதில்லை என்று கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தார்.
யோசுவா, 5 அதிகாரம்
ஓகஸ்ட் 25, 2010 at 5:03 பிப
Alamelu சொல்கிறார்:
ஆகஸ்ட் 23, 2010 at 3:53 பிற்பகல்
hmm, i too agree with virutcham. Chennaiyil thideernu bus or train namakku pothikka arampichuduranga. Neenga try panni parunga neenga nenachathu nadakkumnu. ulloor josiyar mathiri irukku.
Virutcham sonna mathiri sambavangal enakku nerayathadavai nadanthu irukku. Konjam mokatha sokama vachu iruntha pothum.
Kadavulai koovi virka vendiya avasiyam En endruthan enakku purivathey ilலை?
அன்பர் RV அவர்களுக்கு,
மேற்கண்ட கருத்துக்கு பதிலாகவே என்னுடைய பின்னூட்டம் அமைந்துள்ளது; இன்னும் ஐயமிருந்தால் விளக்க ஆயத்தமாக இருக்கிறேன்;
எப்படியிருப்பினும் இஸ்ராயேல் மக்கள் பெயரைச் சொல்லவே அஞ்சும் ஒரு பரிசுத்த தேவனை நீங்கள் நம்ம ஊர் சுடலை மாடனுடன் ஒப்பிட்டது மாபாவம்..!
ஓகஸ்ட் 25, 2010 at 8:04 பிப
சில்சாம், context -ஐ தெளிவாக விளக்குவது நலம். அலமேலுவும் விருட்சமும் அதை செய்திருக்கிறார்கள். நீங்கள் விட்டுவிட்டீர்கள்.
// எப்படியிருப்பினும் இஸ்ராயேல் மக்கள் பெயரைச் சொல்லவே அஞ்சும் ஒரு பரிசுத்த தேவனை நீங்கள் நம்ம ஊர் சுடலை மாடனுடன் ஒப்பிட்டது மாபாவம்..! // ஜெஹோவா ஒஸ்தி, மாடன் மட்டம் என்கிறீர்கள். உங்கள கருத்து உங்களுக்கு…
ராபின்,
கேய்நைப் பற்றிதானே நானும் ஆங்கிலத்தில் கொடுத்திருக்கிறேன்? தெளிவாக பாருங்கள், படையல் மறுக்கப்படுவதுதான் முதலில் வருகிறது. மறுப்பதற்கு முன் என்ன தவறு செய்தான் என்று ஒரு வார்த்தை கூட இல்லை.
// நீங்கள் நினைப்பதுபோல இஸ்ரவேலர்களுக்கு இறைவனின் ஆதரவு என்பது எப்போதும் சாதகமாக இருக்கவில்லை. நான் முன்பே குறிப்பிட்டதுபோல தவறு செய்யும்போதெல்லாம் கடுமையாக தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். // ஆனால் அப்புறம் அவர்களுக்கும் அவர்கள் சந்ததியினருக்கும் மாப்பு கொடுத்துக்கொண்டே இருப்பார். மிச்ச பேர் எல்லாம் பிறப்பதற்கு முன்னாலேயே பாவிகள்.
// கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போன எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்த புருஷரான யாவரும் மாளுமட்டும், இஸ்ரவேல் புத்திரர் நாற்பது வருஷம் வனாந்தரத்தில் நடந்து திரிந்தார்கள்; கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கும்படி அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை அவர்கள் காண்பதில்லை என்று கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தார். // என்னங்க ஜோஷுவா அங்கிருந்து வந்தவர்தானே? கன்றுக்குட்டிக்கு பூஜை செய்த ஆரனுக்கே பாலஸ்தீனத்தை காணும் பாக்கியம் கிடைக்கவில்லையா? தண்டனை மோசசுக்கு மட்டும்தான்.
மீண்டும் சொல்கிறேன் ராபின், இதெல்லாம் நம்பிக்கை. இதை எல்லாம் லாஜிகலாக நிறுவ முயற்சி செய்வது வெட்டி வேலை. ஜாப் கேட்டது போல ஏன் நல்லவர்கள் கஷ்டப்பட வேண்டும் என்ற கேள்விக்கு எந்த மதத்திலும் பதில் கிடையாது.
ஓகஸ்ட் 26, 2010 at 9:26 முப
ஆர்.வி.,
நான் குறிப்பிட்ட வசனங்களை மீண்டும் ஒருமுறை படியுங்கள். காயின் எரிச்சல் அடைந்தவுடன் கடவுள் “நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ?” என்று கேட்பதற்கு அர்த்தம் என்ன? காயின் ஏதோ தவறு செய்திருக்கிறான் என்பதுதானே.
//கன்றுக்குட்டிக்கு பூஜை செய்த ஆரனுக்கே பாலஸ்தீனத்தை காணும் பாக்கியம் கிடைக்கவில்லையா? // கிடைக்கவில்லை.
எல்லா மதங்களுக்கும் நம்பிக்கைதான் அடிப்படை என்பதுதான் என் கருத்தும். ஆனால் நீங்கள் எழுதியதில் சில தகவல் பிழைகள் இருந்தன. அவற்றை சுட்டிக்காட்ட விரும்பினேன். அவ்வளவுதான்.
ஓகஸ்ட் 25, 2010 at 9:36 பிப
ஐயா RV ,
தேவனுக்கு ஆபேல் தன்னுடைய ஆடுகளின் முதற்ப்பலனை கொடுத்தார். Abel gave FIRST preference to GOD. காயின் அப்படி செய்யவில்லை. அதனால்தான், தேவன் ஆபேலின் காணிக்கையை ஏற்றுக்கொண்டார். காணிக்கையைவிட கொடுப்பவரின் மனமே முக்கியம். Hope you understand that GOD is not biased here.
அசோக்
ஓகஸ்ட் 26, 2010 at 1:59 முப
திரு அசோக் குமார்,
நீங்கள் கூறும் விளக்கத்தை விவிலியத்திற்கு விளக்கம் தந்தவர்களில் பழங்காலத்தவர் யாரேனும் இருந்தால் ஏற்போம். மேலும், நீங்கள் கூறுவது படி,
// காணிக்கையைவிட கொடுப்பவரின் மனமே முக்கியம். //
என்று ஜெஹோவா நிரூபிக்க நினைத்திருந்தால், காயின் கொடுத்த பழங்களையும் காய்கறிகளையும் தின்றிருக்க வேண்டும். அப்படி இல்லாமல், மாம்சத்தை விரும்பி ஆபில் பலியிட்ட ஆட்டு இறைச்சியைத் தின்றார் என்று பழைய ஏற்பாடு கூறுகிறது.
பழைய ஏற்பாட்டில் பல சந்தர்ப்பங்களில் ஜெஹோவாவை உகப்பிக்க மக்கள் ஆடு-மாடு-கோழிகளைக் கொன்று மாம்சத்தை வறுத்து ஜெஹோவாவிற்கு இட்டனர் என்றும் வருகிறது (உதாரணம், Exodus:20.24, Genesis:15.9-10). ஒரு இடத்தில் கூட, “காய்கறி பழங்களை நைவேத்யம் செய்தனர்” என்று வரவில்லை. இதிலிருந்து, ஜெஹோவா ஒரு மாம்சம் தின்னும் காட்டுமிராண்டிக் கடவுள் என்பதே விளங்குகிறது.
எம்பெருமான் கீதையில் “இலை, பூ, பழம், தண்ணீர் முதலியவற்றுள் தன்னால் இயன்றை ஒன்றை ஒரு பக்தன் எனக்குச் சமர்ப்பித்தால், அதைப் பரிபூரணமாக ஏற்றுக்கொள்வேன்” (கீதை, 9.26) என்று கூறுவதிலிருந்து, ஹிந்துக் கடவுளுக்கும் ஜெஹோவாவுக்கும் உள்ள வித்தியாசம் தெரியும்.
நிற்க. பழைய ஏற்பாட்டின் ஜெஹோவா ஒரு மனிதநேயமற்ற ரவுடி என்பதை மறைக்கப் பார்க்கிறீர்கள். எகிப்தியர்கள் மேல் கோபித்துக் கொண்டு, அவர்களுடைய முதல் சிசுக்களைக் கொல்கிறார் ஜெஹோவா (Exodus:11.7). அமலேகைத்தில் உள்ள அப்பாவிக் குழந்தைகளையும், பெண்களையும், ஆடு மாடுகளையும், கர்பிணிகளையும் கொன்று குவிக்குமாறு ‘இஸ்ரவேல்’ நாட்டுக்காரர்களுக்கு ஆணையிடுகிறார் (1Sam: 15.2-3). டேவிட்-ஐப் பழிவாங்க, டேவிடுடைய மனைவியரைப் பட்டபகலில் அனைவரும் காணும்படி கற்பழிக்கச் செய்கிறார்; இந்த இழிசெயலைப் புரிய டேவிடின் மகனையே உந்துகிறார் (2Sam: 12.11-12,16.22).
நீங்கள் எங்கள் நூலிலிருந்து அலசித் தேடி, ஹிந்துக் கடவுளரை மட்டம் தட்டி விட்டு, உங்கள் தெய்வத்தை நல்லவராகச் சித்தரிக்க முயல்வதற்குத் தக்க பதிலடி இது.
ஓகஸ்ட் 30, 2010 at 12:40 பிப
நச். நல்லா மூக்குலேயே குத்துங்க. மவனே ரத்தம் இங்கிருந்து ஜெஹோவா வாய் வரைக்கும் தெரிக்கணும்.
ஓகஸ்ட் 30, 2010 at 2:20 பிப
திரு anonymous அவர்களே,
இந்துக் கடவுளரை மட்டம் தட்டும் பிறமத விஷநரிகளுக்குத் தக்க பதிலடியாக நாம் இந்த பழைய ஏற்பாட்டு மேற்கோள்களைத் தயாராக வைத்திருப்பது உதவட்டும். இதை எல்லாம் நன்றாகப் பிரச்சாரம் செய்வோம். இது சராசரிக் கிறித்தவர்களின் மீது காழ்ப்புணர்ச்சியைக் கிளப்புவதற்கு அல்ல, அவர்களுள் சிலர் கூறும் உளரல்களுக்கும் பொய்களுக்கும் தக்க பதிலாக இருக்கட்டும்.
பழைய ஏற்பாடு என்னும் முழு பூசணியைச் சோற்றில் மறைத்துக் கொண்டு நம்மவர்களுடைய கலாச்சாரத்தையும் வழிபாட்டையும் கேள்வி கேட்பதற்கும் மட்டம் தட்டுவதற்கும் என்ன அநியாயம்?
நன்றி http://www.skepticsannotatedbible.com/
ஓகஸ்ட் 26, 2010 at 3:43 முப
RV சொல்கிறார்:
ஆகஸ்ட் 25, 2010 at 8:04 பிற்பகல்
// சில்சாம், context -ஐ தெளிவாக விளக்குவது நலம். அலமேலுவும் விருட்சமும் அதை செய்திருக்கிறார்கள். நீங்கள் விட்டுவிட்டீர்கள்.//
நண்பர் RV அவர்களே,நான் சில வருடங்களாகவே பின்னூட்டமிடுவதில் பயிற்சி பெற்றுள்ளேன்; இங்கே- இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளை யாரும் கடைபிடிப்பதில்லை;
ஆனாலும் எனது செய்தி சென்று சேரவேண்டிய இடத்தைச் சேரும் என்ற நம்பிக்கையுடனே பதிக்கிறேன்;அது அப்படியே ஆகும்;
விடயம் என்னவென்றால் கிறித்தவர்கள் மதப் பிரச்சாரம் செய்வதைக் குறித்து “விருட்சம்” மற்றும் “அலமேலு” தரக் குறைவாகக் குறிப்பிட்டிருந்தார்கள்; அதனை விலாவாரியாக விளக்காமல் நான் நேரடியாக எனது பதிலை பதித்துள்ளேன்;
“ஜெஹோவா” மற்றும் “இயேசு” ஆகியோருக்கான தங்கள் ஒப்பீடு சிறுபிள்ளைத்தனமாகவும் எமது மனதைப் புண்படுத்துவதாகவும் உள்ளது;
நாங்கள் ராமனையும் கிருஷ்ணனையும் குறித்து இதுபோன்று அபாண்டமாக அல்லது உண்மைக்கு மாறாக எதையும் எழுதிவிட முடியாது;
இருப்பதை எழுதினாலே திருப்பி அடிக்கிறார்கள்; மகா மட்டரகமான அருவருப்பான செக்ஸ் வர்ணனைகள் நிரம்பிய வேதங்களின் கதாநாயகர்களை சிலைகளாக நிறுத்தி தெய்வமாகத் தொழுகிறார்கள்;அதையெல்லாம் குறித்து யாரும் எதுவும் உணர்வடைகிறதில்லை;
இங்கே உங்களைப் போன்றோர் மிகவும் டெக்னிகலாகவும் மேம்போக்காகவும் பரிசுத்த தெய்வத்தை (JEHOVAH- the CREATOR GOD & JESUS CHRIST-the Son of GOD and the REDEEMER thars all) சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்;
வாழ்க,வளமுடன்..!
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=37546748&page=1&sort=newestFirst
ஓகஸ்ட் 26, 2010 at 4:55 முப
சில்சாம்,
// நான் சில வருடங்களாகவே பின்னூட்டமிடுவதில் பயிற்சி பெற்றுள்ளேன்; இங்கே- இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளை யாரும் கடைபிடிப்பதில்லை; // இதற்கெல்லாம் என்ன தனியாக பயிற்சி? சரி அப்படியே பயிற்சி பெற்றீர்கள் – பதிவுக்கு தொடர்பு இல்லாமல் பதில் எழுத வேண்டும் என்று நினைத்தால் context -ஐ விளக்குவது நல்லது என்று கூட இத்தனை வருஷ பயிற்சியில் நீங்கள் கற்கவில்லையா? விருட்சமும் அலமேலுவும் இந்த பதிவுக்கு நேரடியாக தொடர்பில்லாத விஷயங்களை எழுதி இருக்கிறார்கள், என்ன context என்று விளக்கியும் இருக்கிறார்கள், அதையாவது நீங்கள் பார்த்திருக்கலாம். குறைந்தபட்சம் அலமேலுவுக்கு பதிலாக போட்டிருக்கலாம். உங்கள் பயிற்சியில் தெரிந்திருக்கும் – அலமேலுவின் மறுமொழிக்கு கீழே பதில் என்று ஒரு லிங்க் இருக்கும், அதை க்ளிக் செய்தால் ungaL மறுமொழி அலமேலுவின் மறுமொழியின் கீழே indent செய்து வரும். இப்போது இந்த மறுமொழி உங்கள் மறுமொழிக்கு கீழே indent ஆவதைப் போல.
// “ஜெஹோவா” மற்றும் “இயேசு” ஆகியோருக்கான தங்கள் ஒப்பீடு சிறுபிள்ளைத்தனமாகவும் எமது மனதைப் புண்படுத்துவதாகவும் உள்ளது; // தகவல் பிழை. ஏசுவைப் பற்றி நான் என்ன எழுதி இருக்கிறேன்?
உங்களுக்காக இந்த பதிவின் முதல் பாராவிலிருந்து சில வரிகளை திருப்பித் தருகிறேன். // இது எவர் மனதையும் புண்படுத்த எழுதப்பட்டதில்லை. பழைய ஏற்பாட்டை (Old Testament) தெய்வத்தின் வரலாறாக மதிப்பவர்களுக்கு இது irreverent ஆகத் தெரியலாம். எனக்கு பழைய ஏற்பாடு இலக்கியம்+வரலாறு+legend மட்டுமே என்பதை முடிந்தால் நினைவு வைத்துக் கொள்ளுங்கள். //
// நாங்கள் ராமனையும் கிருஷ்ணனையும் குறித்து இதுபோன்று அபாண்டமாக அல்லது உண்மைக்கு மாறாக எதையும் எழுதிவிட முடியாது; // உண்மைக்கு மாறாக என்ன எழுதி இருக்கிறேன் என்று சொன்னால் பேசலாம். நான் எழுதியவை பழைய ஏற்பாட்டில் இல்லை, உண்மைக்கு மாறாக எழுதி இருக்கிறேன் என்று நினைத்தால் அதை தெளிவாக சொல்லுங்கள். இந்த பதிவில் உண்மைக்கு மாறாக என்ன இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டினால் நல்லது. அப்படி எதுவும் இல்லாதபோது இந்த மாதிரி எழுதுவதுதான் அபாண்டம் + உண்மைக்கு புறம்பானது.
அப்புறம் ஜெஹோவா ஒசத்தி, மாடன் மட்டம் என்று பொருள் வரும்படி நீங்கள்தான் எழுதி இருக்கிறீர்கள். ஏன், இந்த பாராவுக்கு அடுத்த வரியில் // மகா மட்டரகமான அருவருப்பான செக்ஸ் வர்ணனைகள் நிரம்பிய வேதங்களின் கதாநாயகர்களை சிலைகளாக நிறுத்தி தெய்வமாகத் தொழுகிறார்கள் // என்று எழுதுகிறீர்கள். பழைய ஏற்பாட்டில் உள்ள விஷயத்தை நான் எழுதினால் ungaL மனம் புண்படுகிறது என்று கூப்பாடு போட்டுக்கொண்டே, ஹிந்து கடவுள்களைப் பற்றி நான் இப்படி எழுதிவிட முடியாது என்று குறைப்பட்டுக்கொண்டே அடுத்த வரியில் இப்படி எழுதுகிறீர்கள். உங்கள் பேச்சில் உள்ள முரண்பாடு எதுவும் உங்களுக்கு தெரியவே இல்லையா? Disclaimer: நான் வேதம் படித்தவன் இல்லை, ஆனால் எனக்கு தெரிந்த வரைக்கும் வேதத்தில் செக்ஸ் வர்ணனைகள் கிடையாது. நீங்கள் நான் படித்திருக்கிறேன், எனக்கு தெரியும் என்று சொன்னால் கேட்டுக் கொள்கிறேன்.
// உங்களைப் போன்றோர் மிகவும் டெக்னிகலாகவும் மேம்போக்காகவும் பரிசுத்த தெய்வத்தை … சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்; // பழைய ஏற்பாட்டில் உள்ள விஷயங்கள் ஜெஹோவாவை சிறுமைப்படுத்துகின்றன என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் பேச வேண்டியது என்னிடம் இல்லை; வாடிகன், யூத, இஸ்லாமிய, மற்ற கிருஸ்துவ குருமார்களிடம். இதை முன்னமும் சொல்லி இருக்கிறேன்.
அசோக் குமார் // தேவனுக்கு ஆபேல் தன்னுடைய ஆடுகளின் முதற்ப்பலனை கொடுத்தார். Abel gave FIRST preference to GOD. // இப்படி பழைய ஏற்பாட்டில் இல்லை. ஏன் இங்கே நான் கட் பேஸ்ட் செய்திருக்கும் வசனங்களிலும் இல்லை. நான் படித்த version-இல் குறைகள் இருக்கலாம். நீங்கள் இணையத்தில் எங்காவது தன படையல் நிராகரிக்கப்படுவதற்கு முன் கெய்ன் தவறு செய்ததாக எங்காவது பழைய ஏற்பாடு வசனங்களை காட்டினால் திருத்திக் கொள்கிறேன்.
கந்தர்வன், // ஜெஹோவா ஒரு மாம்சம் தின்னும் காட்டுமிராண்டிக் கடவுள்…// மாமிசம் தின்பவர் எல்லாம் காட்டுமிராண்டி என்றால் பெரும்பாலான ஹிந்துக்களும் காட்டுமிராண்டிகள்தான் என்பதை மறந்துவிட்டு பேசுகிறீர்கள். மாமிசம் தின்பதில் என்ன தவறு? நீங்கள் சைவ உணவு உண்பவராக இருக்கலாம்; அதனால் அசைவம் உண்பவர் எல்லாம் காட்டுமிராண்டி ஆகிவிடுவார்களா? அகத்தியர் ஆடு வடிவத்தில் வந்த வாதாபியை தின்று வாதாபி ஜீர்னோ பவ என்று சொன்னதாக ஹிந்து கதைகள் சொல்கின்றன. அகத்தியரும் உங்கள் பார்வையில் காட்டுமிராண்டிதானோ?
எல்லாருக்கும் ஒன்று. இங்கே ஒரு மதத்தை தாழ்த்தி இன்னொரு மதத்தை உயர்த்திப் பேசும் எண்ணம் இல்லை. ஹிந்துக் கடவுள்கள் செய்த அநியாயங்கள் என்று கூட ஒரு பெரிய லிஸ்டே போடலாம். அப்படி போட்டால் அது மத நம்பிக்கையை தாக்கும் முயற்சியாக, எந்த கடவுளையும் மட்டம் தட்டும் முயற்சியாக இருக்காது, இதிகாசங்கள் பற்றி, legends பற்றி அலசும் முயற்சியாகவே இருக்கும். மதங்களின் சமூக aspect-ஐ பற்றி தாரளாமாக பேசலாம். ஆனால் காழ்ப்புணர்ச்சியோடு அடுத்த மதத்தை தாக்கும் முயற்சி வேண்டாம்.
ஓகஸ்ட் 26, 2010 at 5:53 முப
நண்பரே,
குழப்பம் வேண்டாம் என்று நீங்கள் திரு.ராபினுக்கு பதில் அளிக்கையில் உபயோகப்படுத்திய அதே வசனங்களை நான் இங்கே வைக்கிறேன். நீங்கள் கவனித்து பார்த்தால், ஆபேல் தன் மந்தையின் தலையீற்றுகளையும், கொழுத்தவைகளையும் காணிக்கையாகினான் என்று உள்ளது. ஆபேல் ஒரு மேய்ப்பன், அவன் நிலையில் இருந்து பாருங்கள். ஒரு ஆடு அதிகபட்சம் மூன்று குட்டிகள் ஒரு பிரசவத்தில் போடும். பல சமயம் ஒன்றுதான் போடும். பொதுவாக தலையீற்று குட்டிதான் சிறந்ததாக இருக்கும். ஆக, ஆபேல் காணிக்கையாக கொடுத்தவைகள் அனைத்தும் சிறப்பானவை. அப்படி கொடுக்க “மனது” வேண்டும், தியாகம் வேண்டும். அதனால் அது அங்கீகரிக்கப்பட்டது.
காயினின் காணிக்கையை பற்றி ஒன்றும் பெரியதாக சொல்லப்படவில்லை. தன் நிலத்தில் விளைந்ததில் கொஞ்சம் கொடுத்தான், ஏதோ பெயருக்கு தர்மம் என்பது போல் கொடுத்தான். அதனால் அது அங்கிகரிக்கப்படவில்லை.
புரிந்ததா?
அசோக்
//Now Abel became a shepherd of a flock, but Cain cultivated the land. 3In the course of time Cain presented some of the land’s produce as an offering to the LORD. 4And Abel also presented [an offering][32] — some of the firstborn of his flock and their fat portions.//
ஓகஸ்ட் 26, 2010 at 6:20 முப
அஷோக் குமார், இதெல்லாம் சும்மா. // Cain presented some of the land’s produce // என்பதை நீங்கள் ஏதோ பேருக்கு கொடுத்தான் என்று பொருள் கொள்ள நினைத்தால் உங்கள் விருப்பம். நல்ல தானியத்தை படைக்கவில்லை என்று இருந்தால்தான் அவன் செய்தது தவறு. // some of the firstborn of his flock and their fat portions // என்றால் முதல் குட்டி நன்றாக கொழு கொழு என்று இருக்கும், என்று நீங்கள் உங்கள் விருப்பம் போல sub-text பார்ப்பது உங்கள் விருப்பம். எனக்கு அப்படி பொருள் கொள்வதற்கில்லை. அதுதான் உண்மை என்றால் அப்படியே எழுதி இருக்கலாமே!
ஓகஸ்ட் 26, 2010 at 6:42 முப
Mr.RV,
For a sheperd, the first borns and the fat lambs are the best ones to offer anyone, and Abel offered the same to GOD and the bible also says the same. Don’t you agree with this??? Things are very straight here, what is the difficulty to agree on this?
Ashok
ஓகஸ்ட் 26, 2010 at 7:19 முப
ஆர் வீ சார்,
நான் எழுதியது மாம்ச ஆகாரம் உண்பவர்களைக் காட்டுமிராண்டி என்று கூறுவதற்கு அல்ல (மற்றபடி சாத்வீக வாழ்க்கைக்கும், ஆன்ம முன்னேற்றத்திற்கும் புலால் உண்ணாமை இன்றியமையாதது என்பது வேறு கருத்து). ஜெஹோவா மாம்சம் தின்பதற்காக காட்டுமிராண்டித்தனமாக நடந்துக்கொண்டதையே எழுதினேன். ‘எல்லாம் வல்ல’ இறைவன் ஏன் மாம்சத்தை விரும்பி அலையவேண்டும்?
// அகத்தியர் ஆடு வடிவத்தில் வந்த வாதாபியை தின்று வாதாபி ஜீர்னோ பவ என்று சொன்னதாக ஹிந்து கதைகள் சொல்கின்றன. அகத்தியரும் உங்கள் பார்வையில் காட்டுமிராண்டிதானோ? //
அகத்தியர் ஒரு அரக்கனைக் கொல்வதற்காக ஆடு வடிவில் வந்த அரக்கனை ஜீரணித்துக் கொன்றார். அவ்வளவு தான். கத்தியால் குத்திக் கொன்றால் என்ன? வேறு விதமாகக் கொன்றால் என்ன? துஷ்டனை கொன்றார். அவ்வளவே. இந்தப் புராணக் கதையில் there is no advocacy of eating meat. மற்றபடி புராணக் கதைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். தரும சாஸ்திரங்கள் இறைவனுக்குப் படைக்கப்பட்ட சாத்வீகமான பிரசாதத்தை உண்ணுவதைத் தான் advocate செய்கின்றன. இதற்காக மாம்சம் உண்பவர்களை வெறுக்க வேண்டும் என்பதில்லை. ஆபிரகாமிய மதங்கள் விதிக்கும் ஷரியா முதலிய சட்டங்களுக்கும், ஹிந்து தர்மசாச்திரங்களுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் இது. புராணங்களில் ஒரு சில வியக்திகள் செய்திருப்பதைப் பற்றி வரும் செய்திகளை விட, தரும சாஸ்திரங்களுக்கும், ரிஷி வாக்கியங்களுக்குமே அதிகப்படியான பலம். அதை வைத்தே ஆத்திகர்கள் எது தருமம்/அதருமம் என்று நிர்ணயிப்பது.
ஓகஸ்ட் 26, 2010 at 7:24 முப
// ஹிந்துக் கடவுள்கள் செய்த அநியாயங்கள் என்று கூட ஒரு பெரிய லிஸ்டே போடலாம். //
:-)) I see what your point is. It is also clear from your background that I just read (Jeyamohan etc). You can bring it on, if I have the time I can try and defend the traditional position on Puranas logically and scientifically.
ஓகஸ்ட் 26, 2010 at 7:32 முப
Mr. Ashok Kumar Ganesan and Chillsam,
//
Mr.RV,
For a sheperd, the first borns and the fat lambs are the best ones to offer anyone, and Abel offered the same to GOD and the bible also says the same. Don’t you agree with this??? Things are very straight here, what is the difficulty to agree on this?
Ashok
//
All that I get from the Cain/Abel story is this… that either Jehovah is not pleased by simpler offerings (fruits and vegetables as opposed to meat) or that the only kind of offering he accepts is burnt flesh. (This is also clear from Exodus:20.24, Genesis:15.9-10). I don’t see where the message you are trying to convey is given…
In any case, how you interpret these stories (and those involving killings of innocent Egyptian and Amalekite infants, ‘God’ ordaining the rape of David’s wives in broad daylight for no fault of the wives but for what David did, etc.) is up to you. But you should give us the freedom to interpret OUR puranic stories. If you try to portray our Hindu God/Devatas in bad light and justify it by saying “these are all there in your Puranic stories”, we can do the same with your Jehovah. The quotations that I gave are *from the Old Testament itself* as Shri RV also quotes. Here they are: Exodus:11.7, 1Sam: 15.2-3, 2Sam: 12.11-12,16.22. It is YOUR OWN BOOK that portrays your ‘God’ as a malevolent bully.
ஓகஸ்ட் 26, 2010 at 2:35 பிப
கந்தர்வன்,
நாகரீகமில்லாமல், நான் அடுத்தவருடன்(RV ) பேசும்போது குறுக்கே பாயகூடாது. நான் சொன்ன விஷயம் திரு.RV க்கு. உங்களுக்கு அல்ல. உங்கள் இந்த செயலுக்கு பெயர்தான் காழ்ப்புணர்ச்சி. நான் கூறிய உங்கள் ராமன், விஷ்ணு, ஐயப்பன் பிறப்பு போன்ற விஷயங்களுக்கு எந்த ஒரு இந்துவும் விளக்கம் தரவில்லை. மேலும் நான் எனக்கு சொல்லப்பட்ட புராண கதைகளில் எனக்கு தோன்றிய கேள்விகளை கேட்டேன், கேள்விகளை மாத்திரமே கேட்டேன் யாரையும் குறை சொல்லவில்லை.
நீங்களும், பைபிளில் இருந்து கேள்வி கேட்கலாம், பதில் தரப்படும் (உங்களை போல காழ்புணர்ச்சி கொண்டு தூற்றி திரியமாட்டோம்).
அசோக்
ஓகஸ்ட் 26, 2010 at 2:48 பிப
// ஜெஹோவா மாம்சம் தின்பதற்காக காட்டுமிராண்டித்தனமாக நடந்துக்கொண்டதையே எழுதினேன். ‘எல்லாம் வல்ல’ இறைவன் ஏன் மாம்சத்தை விரும்பி அலையவேண்டும்?
//
Mr.Gandharvan,
Can you please show a single bible verse, where Jehovah ATE flesh. When you are accusing please provide proofs. We can have a very friendly discussion. Probably Mr.RV also would prefer a friendly discussion here, rathar than hurting each other. The discussion should be our combined effort to know the TRUTH, rather than “some how” prooving a point.
Thanks,
Ashok
ஓகஸ்ட் 26, 2010 at 3:13 பிப
அசோக் குமார்,
நீங்கள் கண்டபடிக் கண்ணனையும் இராமனையும் தூற்றுவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. இப்படி ஒருவர் பொதுத்தளத்தில் (public forum-இல்) உரையாற்றினால் அவரைக் கண்டித்தல் ஹிந்துக்களுடைய கடமை.
உங்கள் கேள்விகளுக்கு பதில்:
(1) இராமன் சீதையைக் காட்டுக்குத் துறத்தவில்லை. சீதை தான் தன்னைக் காட்டுக்கு அனுப்புமாறு இராமனிடம் கேட்கிறாள் (உத்தர காண்டம்). சீதை காட்டில் கஷ்டப்பட்டதற்குக் காரணம்– பாகவத அபசாரத்தின் கொடிய விளைவைக் காட்டுவது. [இராமன் மாயமானைப் பிடிக்கச் சென்ற போது சீதை லக்ஷ்மணனை இராமனை மீட்டு வருமாறு ஆணையிடுகிறாள். லக்ஷ்மணன் “மன்னிக்கவும், என் அண்ணன் உமக்குப் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று என்னை நியமித்திருக்கிறார். ஆகையால் செல்ல மாட்டோம்” என்று விடையளித்தார். அப்பொழுது சீதை லக்ஷ்மணனை இகழ்கிறார்.] இந்த விளக்கங்களை நானாக இட்டுக்கட்டவில்லை. பெரியவாச்சான்பிள்ளை, கோவிந்தராஜர் என்னும் சம்பிரதாய வைணவ ஆச்சாரியார் உரை இது. இராமாயணத்தையும் அதன் உரைகளையும் நடுநிலை நின்று படித்தால் உமக்கு இது புரியும். ஹிந்துக் கடவுளைத் தூற்றுவதையே நோக்கமாகக் கொண்ட சுவிசெஷ சூழ்ச்சியர்கள் அடிக்கும் பிட் நோட்டீஸையே படிப்பவர்களுக்கு இது புரியாது.
(2) நீங்கள் கூறும் விஷ்ணு-துளஸி கதை, ஐயப்பன் பிறப்புக் கதை — இவை பதினெட்டுப் புராணங்களில் அங்கீகரிக்கப்படாதவை. ஆதி சங்கரர் முதலிய ஆச்சாரியார்களால் எடுத்தாளப்படவில்லை. ஒரு சில கட்டுக்கதைகளை அவ்வப்போது அவரவர் புனைகின்றனர். அவை authentic புராணம் ஆகிவிடாது. உதாரணமாக, மோஹினி கதை பாகவத புராணத்தில் உள்ளது. அதில் எங்கும் விஷ்ணுவுடன் சிவன் புணர்ந்து ஐயப்பனைப் பெற்றெடுத்ததாக வரவில்லை.
சரி, நான் பைபிளைப் பற்றிச் சில கேள்விகள் கேட்கிறேன். நானாகக் கேட்கவில்லை. பைபிளில் உள்ளதைத் தான் கேட்கிறேன்:
(1) Exodus:11.7 கர்த்தர் ஏன் பாரோ மேல் உள்ள கோபத்திற்கு எகிப்திய மக்களின் அப்பாவிக் குழந்தைகளை ஏன் கொல்கிறார்?
(2) Exodus:20.24, Genesis:15.9-10 கர்த்தர் ஏன் ஆபிரகாமிடம் தன்னை உகப்பிக்க ஆடு, மாடு, கோழிகளை வெட்டச் சொல்கிறார்? நீங்கள் சொல்வதைப்போல அவருக்குக் “கொடுப்பவர் மனநிலை தான் முக்கியம்” என்று இருந்தால் ஆபிரகாமிடம் பூ, பழம் கேட்கலாமே?
(3) 1Sam: 15.2-3: அமலேகைத்தில் உள்ள அப்பாவிக் குழந்தைகளையும், பெண்களையும், ஆடு மாடுகளையும், கர்பிணிகளையும் கொன்று குவிக்குமாறு ‘இஸ்ரவேல்’ நாட்டுக்காரர்களுக்கு ஆணையிடுகிறார், ஏன்? இஸ்ரவேல் நாட்டுக் காரர்களை இனப்படுகொலைச் செய்யச் சொன்னவர் “அனைவரையும் பாரபட்சமில்லாமல் விரும்பும் கடவுள்” என்று எப்படிக் கூறயியலும்?
(4) 2Sam: 12.11-12,16.22: டேவிட்-ஐ தண்டிக்க, டேவிடுடைய மனைவியரைப் பட்டபகலில் அனைவரும் காணும்படி கற்பழிக்கச் செய்கிறார்; இந்த செயலைப் புரிய டேவிடின் மகனையே உந்துகிறார் . இதிலிருந்து நீங்கள் கூறும் “just and fair” கர்த்தர் பழைய ஏற்பாட்டில் “just and fair” ஆகவே நடந்துக்கொள்ளவில்லை என்பது புரியவில்லையா?
இந்த round of questions-க்குத் தக்க பதிலளித்தால் உமது ஆட்சேபங்களை மேலும் முன்வைக்கலாம். டாடா.
ஓகஸ்ட் 26, 2010 at 6:50 பிப
//2) Exodus:20.24, Genesis:15.9-10 கர்த்தர் ஏன் ஆபிரகாமிடம் தன்னை உகப்பிக்க ஆடு, மாடு, கோழிகளை வெட்டச் சொல்கிறார்? நீங்கள் சொல்வதைப்போல அவருக்குக் “கொடுப்பவர் மனநிலை தான் முக்கியம்” என்று இருந்தால் ஆபிரகாமிடம் பூ, பழம் கேட்கலாமே?//
I am not blaming you for any of these questions, because I myself got these questions. But, I searched and GOD showed me answers too.
Please Refer Leviticus 1 from the verse one onwards. Here they offer grains. In many places they offer flour, bread, etc.,
There are various types offerings in the Old testament for various reasons.
Thanks,
Ashok
ஓகஸ்ட் 26, 2010 at 3:28 பிப
Mr. Ashok Kumar,
// Can you please show a single bible verse, where Jehovah
ATE flesh. //
Fine, he didn’t actually ‘eat’ the flesh. It does not matter as to what he does with it after it was offered. He “accepts” such offerings, that’s all I wanted to say. The point is Jehovah wants animals to be killed and burnt flesh to be offered in order to be pleased. In no instance in the Old Testament has Jehovah been pleased by simple offerings such as fruit, flowers, or water. I have already provided the references for that: Exodus:20.24, Genesis:15.9-10 Kindly explain these.
// We can have a very friendly discussion. Probably Mr.RV also would prefer a friendly discussion here, rathar than hurting each other.//
Sure, but you should stop asking questions with the intention of
// The discussion should be our combined effort to know the TRUTH, rather than “some how” prooving a point. //
(Apart from that, your call for TRUTH is funny… for such a long time in history, Christian Missionaries have been studying Hindu scriptures only to find some place where they can put in their crooked interpretations and interpolations so as to make us look like a cannibalistic animistic cult. The fact is that we are not, and this is widely acknowledge by neutral people. I do not blame you, as you have been utterly brainwashed by Xtian propaganda.)
In any case, if you want to discuss further, we should stick to a proper protocol, like quoting authoritatively from Gita, Upanishads, 18 Puranas, etc. (rather than from missionary pamphlets or 5-rupee railway stand bhajana books). We can carry on this discussion offline. You can contact me at prahladadasa@gmail.com and we can keep these discussions offline, as they may not be interesting to RV. If you agree that your questions will be focused and agreeing to the protocol of quoting from authentic works, I will proceed.
ஓகஸ்ட் 26, 2010 at 6:13 பிப
Gandharvan,
I prefer that the discussion to be in the forum, so that more people will come to know the TRUTH. If you feel that Mr.RV will not be interested in this. Probably, we can open a new discussion for this in Bro.Chillsam’s forum. He would more than interested to host this discussion.
And you need not worry a lot about me defaming your gods. I don’t have any interest in that. And I have answers for your questions too. Only thing, the answers are little bigger and needs more explanations.
ஓகஸ்ட் 26, 2010 at 4:16 பிப
@Robin, gantharvan
சிவன் விஷ்ணு வின் குழந்தையாக ஐயப்பன் இருப்பதில் ஆபாசம் என்ன இருக்கிறது?
கடவுளுக்கு ஆண் பால் பெண்பால் திருநங்கை பால், மனித உரு என்று எல்லாம் கிடையாது. அவதாரங்கள் ஒவ்வொன்றும் ஒரு அம்சத்தைக் குறிக்கும் அவ்வளவே.
அதாவது எந்த ரூபத்தில் ராக்ஷச சக்தி வந்தாலும் எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் இறை சக்தி அழிக்க வல்லது. இது தான் அடிப்படை.
ராமன் பிறப்பிலும், கண்ணன் பிறப்பிலும் ஒரு குறையும் இல்லை.
ஓகஸ்ட் 26, 2010 at 5:33 பிப
ஐயா,
உங்கள் கடவுளுக்கு ஆண்பால், பெண்பால் போன்றவை இல்லை என்றால். எதற்க்காக புராணங்களில், ஆண் தெய்வம், பெண் தெய்வம், கல்யாணம், பிள்ளை குட்டி, லிங்கம், யோனி, காமம், கற்பு, போன்றவை வருகிறது? ராமன், கண்ணன் போன்றவர்களின் பிறப்பு பற்றி யாரும் ஒன்றும் கேட்கவில்லையே. மேலும், பஸ்மாசுரனை வதம் செய்த கதையில், சிவன் மோகினியின் மேல் ஆசை கொள்ளவில்லையா?
கவனிக்க, நான் கேள்விகளைத்தான் கேட்கிறேன். நான் இந்துவாக இருந்தபோது, நான் கேட்ட புராண கதைகளில் வந்த விஷயங்களை கேட்கிறேன். பதில் அளிப்பவர் நாகரீகமாக பதில் அளிக்கவும்.
அசோக்
ஓகஸ்ட் 26, 2010 at 10:05 பிப
நிறைய பதில் வந்திருக்கிறது. என் கண்ணில் பட்ட கருத்துகளுக்கு என் கருத்துகள்:
// கர்த்தர் ஏன் ஆபிரகாமிடம் தன்னை உகப்பிக்க ஆடு, மாடு, கோழிகளை வெட்டச் சொல்கிறார்? // வெட்டச் சொன்னால் என்ன தவறு? மாடனுக்கு பலி தருவதும் தவறுதானா?
// ‘எல்லாம் வல்ல’ இறைவன் ஏன் மாம்சத்தை விரும்பி அலையவேண்டும்? // “எல்லாம் வல்ல” இறைவன் பழங்களை மட்டும் ஏன் விரும்ப வேண்டும்? ஏன் இப்படி மாமிசம் மாமிசம் என்று திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்று புரியவில்லை.
// சீதை தான் தன்னைக் காட்டுக்கு அனுப்புமாறு இராமனிடம் கேட்கிறாள் // அய்யா இதைத்தான் எங்கள் ஊரில் “உட்டாம் பாரு கிரிகிரி” என்பார்கள். காட்டிலே லட்சுமணன் விட்டுவிட்டு வரும்போதுதான் சீதைக்கு நிலைமை தெரிகிறது. ராமன் நான் வழிபடும் கடவுள். அதற்காக ராமன் என்ற பாத்திரம் செய்த எல்லாவற்றையும் நியாயப்படுத்த வேண்டியதில்லை. வாலிவதம், அக்னி பிரவேசம், சீதையை காட்டுக்கு அனுப்பியது எல்லாம் அந்த பாத்திரத்தின் மீது உள்ள குறைகளே. ராமன் என்ற கடவுள் ராமன் என்ற பாத்திரத்தை கடந்த ஒரு நிலை. என் தாத்தா பாட்டி படத்தை எங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்திருந்தால் அதற்காக அவர்கள் தவறே செய்யாத உத்தமர்கள் என்றோ, அதற்கெல்லாம் நான் சப்பைக்கட்டு கட்ட வேண்டும் என்றோ அர்த்தம் இல்லை.
// விஷ்ணு-துளஸி கதை, ஐயப்பன் பிறப்புக் கதை — இவை பதினெட்டுப் புராணங்களில் அங்கீகரிக்கப்படாதவை // சுடலை மாடன் பற்றி கூடத்தான் எந்த புராணத்திலும் இல்லை. அதனால் மாடன் வழிபாடு ஹிந்து மதத்தின் ஒரு பகுதி இல்லையா என்ன? பதினெட்டு புரானனகளே எல்லா ஹிந்துக்களும் அன்கீகரிப்பவை இல்லை. துளசி, ஐயப்பன் வழிபாடும் ஐதீகங்களும் ஹிந்து மதத்தின் ஒரு பகுதியே.
// சிவன் விஷ்ணு வின் குழந்தையாக ஐயப்பன் இருப்பதில் ஆபாசம் என்ன இருக்கிறது? // எனக்கும் தெரியவில்லை.
// நான் அடுத்தவருடன்(RV ) பேசும்போது குறுக்கே பாயகூடாது. // இது open forum. யார் வேண்டுமானாலும் அவர்கள் கருத்தை வைக்கலாம். பதிவுக்கு தொடர்பில்லாமல் இருந்தால் context-ஐ தெளிவாக விளக்கினால் நல்லது.
// கடவுள் “நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ?” என்று கேட்பதற்கு அர்த்தம் என்ன? // இது ஓரளவு ஏற்றுக் கொள்ளக்கூடிய வாதமே. ஆனாலும் பழைய ஏற்பாட்டில் உள்ளபடி கெயின் கெட்டவனாக மாறுவதின் மூல காரணம் படையல் நிராகரிக்கப்படுவதே என்றுதான் பொருள் கொள்ள வேண்டி இருக்கிறது. படையலை நிராகரித்துவிட்டு, கடுப்பாக இருக்கும் கேய்னிடம் ஏன் கோபப்படுகிறாய் என்று கேட்பது மேலும் சீண்டுவது போலத்தான் எனக்கு தோன்றுகிறது.
ஆரன் பாலஸ்தீனத்தை அடைந்தார் என்று நான் எழுதி இருந்தது தவறு என்று சுட்டிக் காட்டிய ராபினுக்கு நன்றி.
ஓகஸ்ட் 27, 2010 at 4:32 முப
அனைவருக்கும்,
(1) “ஹிந்து மதம்” என்று தனிப்பட்ட கடவுட்கொள்கையோ வழிபாட்டுக்கொள்கையோ கிடையாது. “ஹிந்து கலாச்சாரம்” என்பதே சரியான பிரயோகம். “Hinduism” என்பதற்கு இந்தியாவில் உள்ள indigenous வழிபாட்டு முறைகளை எல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் குறிக்கிறது. இதில் ஒரு சில குழுவினருக்கு ஒரு சில சித்தாந்தக் கோட்பாடுகளும் வழிபாட்டுச் சடங்குகளும் இருக்கும். ஒரு குழுவினருடைய கோட்பாடு இன்னொரு குழுவினருடையதுடன் முரண்பட்டிருக்கலாம் (உதாரணமாகப் பாஞ்சராத்ர-வைணவமும், பாசுபத-சைவமும் சற்றும் ஒவ்வாத கோட்பாடுகள்). அதைப் போலவே, இந்த இந்த பிரிவினருக்கு இந்த இந்த நூல்கள் பிரமான நூல்கள் (authority) ஆகும். உதாரணமாக வைணவர்களுக்கு சைவ புராணங்கள் “தாமச” வகையைச் சேர்ந்தவை, ஆகையால் அவை அவர்களுக்குப் பிரமாணம் ஆகாது. சைவ சித்தாந்திகள் கீதையைப் பிரமாணமாக எடுக்க மாட்டார் என்பது மெய்க்கண்ட தேசிகருடைய சீடரான அருணந்தி சிவாச்சாரியார் “சிவா ஞான சித்தியர்” என்னும் நூலில் விளக்கியுள்ளார். இந்து மதத்திலும் நவீன வாதிகள், புரட்சி வாதிகள், reformists உண்டு. அவர்கள் பௌத்தம் ஜைனம் சைவம் சாக்தம் பாசுபதம் முதலிய எல்லாவற்றிலும் இருந்து synthesize செய்து ஒரு இயக்கத்தை உண்டுபன்னியுள்ளனர். இன்றைக்கு ஸ்மார்த்தர்களும் இத்தகைய கொள்கையையே கடைபிடிக்கின்றனர்.
(2) வேதத்தில் “கர்ம காண்டம்”, “பிரம்ம காண்டம்” என்று இரண்டு பகுதிகள் உண்டு. கர்ம காண்டத்தில் “காம்ய கர்மாக்களும்” உண்டு. “காம்ய கர்மா” என்பது செல்வம், பிள்ளைக்குட்டி, வீடு, பதவி உயர்வு முதலிய தாழ்ந்த பலன்களை வேண்டிச் செய்யப்படுபவை. முழுமையான பற்றின்மை வராதவர்கள் இந்த கர்ம காண்டத்தில் கூருபவற்றைச் செய்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுவர். மேலும் காம்ய கர்மாக்களில் துதிக்கப்படும் தெய்வங்கள் பரம்பொருளை விடத் தாழ்ந்த, பரம்பொருளுக்கு அடங்கிய இந்திரன், வருணன், மித்திரன், வாயு, சூரியன், சந்திரன் முதலிய தெய்வங்கள். (இந்த விஷயத்தை ஆதி சங்கரர் முதல் வைதீகர் அனைவரும் ஒத்துக் கொண்டுள்ளனர்).
(3) இந்தியாவில் இப்போது நடத்தப்படும் மிருகபலி வேதத்தில் எங்குமே கூறப்படவில்லை. ஒரு சில யாகங்களில் ஆட்டின் கொழுப்பை யாகத்தில் த்ரவ்யப்போருளாக உபயோகிப்பது கூறப்படுகிறது. அஸ்வமேத யாகமும் உண்டு. ஆனால், இந்த யாகங்கள் எல்லாம் மேற்கூறிய “காம்ய கர்மாவைச்” சேர்ந்தவை, சம்சாரத்தில் ஆன்மாவை மென்மேலும் ஆழ்த்துபவை என்று வேதமே கூறுகிறது. ஆன்மீக முன்னேற்றத்திற்கு அம்மாதிரி யாகங்களைத் துறப்பதே சரி. இதையும் பல ஆச்சாரியார்களும் விளக்கியுள்ளனர். கீதையில் ஏழாம் ஒன்பதாம் அத்தியாயத்தில் கண்ணனும் கூறுகிறான்.
(4) ஒரு சிலர் அவ்வப்போது சில புதிய தெய்வ வடிவனலை உருவாக்கி வழிபாடு நடத்துகின்றனர். சிலர் கிராமீய தெய்வங்களுக்கு பலி, கள்ளு முதலியவற்றைப் படைக்கின்றனர். இதெல்லாம் அவரவர் மதச் சுதந்திரம். அவர்களுக்கு அவர்கள் இஷ்டப்படி வழிபட உரிமை உண்டு என்பதற்காகவோ, வைதீகர்கள் சிலர் அம்மாதிரி வழிபாடுகளில் சில சமயம் ஈடுபடுவதாலோ, அவை எல்லாம் வைதீகம் ஆகி விடாது. ஐயப்பன், மாரியம்மன், காளி, சுடலைமாடன் வழிபாடு இவை எல்லாம் அவ்வகையைச் சேர்ந்தவை.
(5) இந்து மதப் பிரிவுகளுள் எது உண்மையான சித்தாந்தம் என்பதை அவரவர் மனப் பக்குவத்தின் படியோ குடும்ப வழக்கத்தின் படியோ தேர்ந்தெடுத்துக் கொள்வர். நம்மாழ்வாரும் “அவரவர் தமதமது அறிவறி வகைவகை அவரவர் இறையவர் குறைவலர் இறையவர்” என்று இந்த விஷயத்தைப் பாடலாகப் பாடியுள்ளார். Personally என்னைப் பொறுத்தவரையில் ஸ்ரீ ராமானுஜர் முதலியோர் காட்டிய பக்தி-சரணாகதி மார்க்கமே பரம வைதீகமானதும் உண்மையானதும். ஆனால், இதை வைத்து மற்ற ஹிந்து தேவதைகளை (சிவபெருமான், விநாயகர், முருகர், உமாதேவியார் முதலானோரை) இகழ்வதோ அவமதிப்பதோ சரி இல்லை, அவர்களுடைய வழிபாட்டுச் சுதந்திரத்தை அழிக்க முயற்சி செய்வதும் தவறு என்பதே இராமானுஜர் முதலான ஆச்சாரியார்களின் உபதேசம். மற்றவர்கள் வைஷ்ணவத்துக்கு மதம் மாற வேண்டும் என்று நாம் பிரச்சாரம் செய்வதில்லை. ஆசை இருந்தால் அவர்களே வருவார்கள், ஆசை உள்ளவர்களுக்கு எல்லாம் போதுமான அளவுக்கும் மேலாக accessibility, resources எல்லாம் வைணவத்தில் உண்டு.
(6) நான் பெற்ற உபதேசத்தின் படி, விஷ்ணு புராணம், பாகவதம், மகாபாரதம், இராமாயணம், கீதை முதலிய நூல்களே சாத்வீக நூல்கள். அவையே வேதத்திற்கு (வேதம் என்றால் சம்ஹிதம், பிராம்மணம், ஆரண்யகம், உபநிஷத் ஆகிய நான்கு பிரிவுகளும் அடங்கியவை) முரணற்றதும் என்பதை நிரூபிக்க முடியும் (நாராயநோபநிஷத், தைத்திரீய உபநிஷத், புருஷ சூக்தம், விஷ்ணு சூக்தம், etc.) ஆழ்வார் பாடல்களையும் நடுநிலை நின்று ஆராய்ந்தால் ஆழ்வார் கூறும் ஏகாந்த பக்தி-சரணாகதி மார்க்கமே வேதம் கூறும் அனைத்திலும் உயர்ந்த நெறி என்பதை உணர முடியும். கீதையும் ஏழாம் அத்தியாயம் முதல் பதினெட்டாம் அத்தியாயம் அறுபத்து ஆறாம் சுலோகம் வரை (“சர்வ தரமான் பரித்யஜ்ய” என்று தொடங்கும் சுலோகம்) இந்த பக்தி-சரணாகதி மார்கத்தை உபதேசிக்கிறது.
நான் மேற்கூறியவை யாருடைய மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல. நான் கண்ட உணமி இவ்வளவே. இதைச் சொல்லத் தான் எழுதினேன்.
ஓகஸ்ட் 27, 2010 at 5:03 முப
ஆர் வீ சார்,
// “எல்லாம் வல்ல” இறைவன் பழங்களை மட்டும் ஏன் விரும்ப வேண்டும்? //
வேதத்தில் “எல்லாம் வல்ல” இறைவனுக்கு எதுவும் தேவை இல்லை தான். நாம் விஷ்ணுவுக்குப் பண்ணும் நைவேத்யத்தைப் “படையல்” என்றோ “பலி” என்றோ கூறுவதில்லை. அதைக் “கண்டருளால்” என்றே கூறுகிறோம். பரமன் கண்டு அருளிய பிரசாதத்தை உண்பதால் சாத்வீக குணம் நமக்கு வளரும் என்பதே நம்பிக்கை. நைவேத்யம் செய்வது நமக்குத் தான் நல்லது, விஷ்ணுவுக்கு எந்த தேவையும் இல்லை. விஷ்ணுவுக்குப் பசி உண்டு என்று எந்த வைதீகரும் கூற மாட்டார்.மேலும், நான் கூறவந்தது என்னவென்றால் பழைய ஏற்பாட்டில் Jehovah சில இடங்களில் தனக்குப் பலி இடுமாறு demand செய்கிறார். இது பரம்பொருளுக்கு உரிய லக்ஷணமா என்பது தான் எனது கேள்வி.
// அய்யா இதைத்தான் எங்கள் ஊரில் “உட்டாம் பாரு கிரிகிரி” என்பார்கள். //
ஐயா, நீங்கள் செய்வது வாதம் அல்ல. விதண்டாவாதம். மேலும், நான் கூறியது இராமன் அயோத்தியிலிருந்து சீதையை *இரண்டாவது முறை* காட்டுக்கு அனுப்பியது பற்றி. இது பட்டாபிஷேகம் முடிந்து சீதை கர்ப்பம் தரித்த பிறகு நடந்தது. நான் “இப்படி இராமாயணத்தில் இருக்கிறது” என்று சொன்னால் நீங்கள் அதற்கு மறுப்பாக “நான் அலசிப் பார்த்து விட்டேன், அப்படி எல்லாம் இல்லை” என்று நீங்கள் கூறியிருந்தால் அது நேர்மையான வாதம். உத்தர காண்டத்தில் நான் கூறியபடி தான் உள்ளது என்று எனக்குத் தெரிந்த உபந்யாசகர்கள் கூறியுள்ளனர். எனக்குத் தெரிந்த வரை இவவுபன்யாசகர் கூறியவற்றில் அனைத்தையும் நான் verify பண்ணிப் பார்த்துள்ளேன். ஒரு இடத்தில் கூட அவர்கள் நீங்கள் கூறுவது போல திரித்துக் கூறியிருப்பதாகவோ பொய் சொல்லியிருப்பதாகவோ நான் கண்டதில்லை. என்னிடம் உத்தர காண்ட நூல் இல்லை. ஆனால் எனக்கு உபதேசிக்கப்பட்டது இது: சீதா பிராட்டி நெடுநாள் கழித்து (லவ, குசர்களை) கர்ப்பம் தரிக்கிறார். இராமன் சீதையைப் பார்த்து “உனக்கு ஏதாவது ஆசை இருந்தால் சொல். நான் உனக்கு அதைப் பூர்த்தி பண்ணுகிறேன்” என்றார். அப்போது சீதை, “நான் தவ ரிஷிகளைக் காட்டில் மீண்டும் ஒரு முறை தரிசித்து அவர்களை வணங்க விரும்புகிறேன். எனக்கு இந்த அரசியல், நாடு எல்லாம் அலுத்துப் போய்விட்டது” என்று கூறுகிறார். அப்போது இராமன், “உன்னுடைய வேண்டுகோளை இப்படிப் பூர்த்தி செய்தால் மக்கள் உன் மேல் கோபிக்கக் கூடும். அதை நான் தாங்கிக் கொள்ள மாட்டேன். ஆகையால், ஒரு சலவைக்காறனைப் பொய் சொல்ல வைத்து பழியை என் மேலேயே போட்டுக் கொள்கிறேன்” என்று இராமன் கூறுகிறார். அதன் பின்னே அயோத்தியில் ஒரு சலவைக் காரன் சீதையைப் பற்றிக் casual-ஆக ஒரு புரளியைக் கிளப்ப, அது இராமன் காதுக்கு எட்ட, சீதையைக் காட்டுக்கு அனுப்புகிறார். இதைப் பெரியவாச்சான்பிள்ளை என்னும் வைணவ உரையாசிரியர் விளக்கியுள்ளார். “அவரும் புரடா இடுகிறார்” என்று நீங்கள் கூறுவீர்களானால் அதை நிரூபியுங்கள்.
// ராமன் நான் வழிபடும் கடவுள். அதற்காக ராமன் என்ற பாத்திரம் செய்த எல்லாவற்றையும் நியாயப்படுத்த வேண்டியதில்லை. வாலிவதம், அக்னி பிரவேசம், சீதையை காட்டுக்கு அனுப்பியது எல்லாம் அந்த பாத்திரத்தின் மீது உள்ள குறைகளே. //
நீங்கள் வால்மீகி இராமாயணத்தையோ கம்ப ராமாயணத்தையோ இவ்விடத்தில் வருபவற்றைப் படித்திருந்தால் இதைச் சொல்லியிருக்க மாட்டீர்கள். வாலி முதலில் “இராமா நீ இப்படிச் செய்திருக்கலாமா” என்று கேட்கிறான். பிறகு இராமன் தக்க பதில்களை உரைக்கிறான். அதற்குப் பிறகு வாலி இறக்கும் முன்பு “இராமா, நீ செய்தது சரியே” என்று கூறுகிறான். வாலியே ஒத்துக் கொண்ட முடிவு இது. மேலும் சீதை யார் என்பதை நீங்கள் முழுமையாகப் புரிந்துக் கொள்ளாமல் எழுதுகிறீர்கள். ஜகன்மாதாவாகிய லக்குமிப் பிராட்டி எடுத்த ஒரு அவதாரம். பரமனோ, ஜகன்மாதாவோ அவதாரம் எடுக்கும் பொழுது அந்தந்த வேளையில் அந்தந்த குறிப்பிட்ட உருவங்களில் பிரிந்து இருந்திருக்கலாம். ஆனால், உண்மையில் பரமன் வைகுண்டத்தில் நித்யமாக இருக்கிறான். ஜகன்மாதாவான லக்குமிப் பிராட்டியும் அவன் திருமார்பில் நித்யம் வாசம் செய்கிறாள். “வைகுண்டத்தை விட்டு பூமிக்கு வந்தான்” என்று கூறுவது ஒரு அனுபவ பூர்வமான விளக்கமே ஒழிய, தர்க்க ரீதியான உண்மை அதுவல்ல. Simultaneous-ஆக பகவான் கண்ணனாகவும், இராமனாகவும், பாற்கடலில் பள்ளிகொண்டவனாகவும், வைகுண்டத்தில் அமர்ந்த கோலத்தில் இருப்பவனாகவும் எழுந்தருளும் வல்லமை படைத்தவன்.
// ராமன் என்ற கடவுள் ராமன் என்ற பாத்திரத்தை கடந்த ஒரு நிலை. //
நீங்கள் கூறுவதைப் பார்த்தால் இராமன் என்று ஒரு மனிதனைப் பற்றி வால்மீகி எழுத, பிற்காலத்தில் வந்தவர்கள் அவரைக் கடவுளாக உயர்த்தினார் என்று சொல்வது போல உள்ளது. வால்மீகி இராமாயணத்தில் இப்படி எழுதவில்லை. பால காண்டத்திலும், யுத்த காண்டத்திலும் பரமனாகிய திருமாலே இராமனாக அவதரித்தான் என்று உள்ளது. வால்மீகி இதைத் தெளிவாகவே விளக்கியுள்ளார். கம்பரும் இதை நன்றாகவே விளக்கியுள்ளார். குலசேகர ஆழ்வாரும் விளக்கியுள்ளார். ஏன், சர்வஞாத்மன், மதுசூதனர், ராமதீர்த்தர், நரசிம்மாச்ராமர் முதலிய பிராசீன அத்வைத பண்டிதர்களும் இப்படியே விளக்கியுள்ளனர்.
ஓகஸ்ட் 27, 2010 at 5:06 முப
விருட்சம் அவர்களே,
// சிவன் விஷ்ணு வின் குழந்தையாக ஐயப்பன் இருப்பதில் ஆபாசம் என்ன இருக்கிறது? //
நான் “ஆபாசமாக இருக்கிறது” என்று எழுதவில்லை. அவரவர் விருப்பப்படி விரும்பிய கடவுளை வணங்குவது என்பது இயற்கை. இதற்கு யாரும் தடை விதிக்கவில்லை. ஆனால், வைதீகத்தில் ஐயப்பன் கதை எல்லாம் authentic அல்ல. வேத-இதிகாச-சாத்வீகபுரான நூல்களை வைத்தே எது authentic என்று வைதீகத்தில் கொள்ள வேண்டும்.
ஓகஸ்ட் 27, 2010 at 2:37 பிப
துளசி பற்றிய ஒரு சிறு விளக்கம்: விஷ்ணு-துளசி தொடர்பையும் துளசி வழிபாடையும் நான் நிராகரிக்கவில்லை. முழுமையும் அங்கீகரிக்கிறேன். ஆனால், ஜாலந்தரன் என்னும் அசுரனுடன் துளசி முதலில் இருந்தாள், விஷ்ணு அபகரித்துக் கொண்டு போனார் என்பதெல்லாம் ஆதாரப்பூர்வமான நூல்களில் கிடையாது. எந்த பிராசீன ஆச்சாரியார்களும் இக்கதையைத் தம் விளக்கங்களில் கையாண்டதில்லை.
ஓகஸ்ட் 27, 2010 at 4:24 பிப
கந்தர்வன், // ஹிந்து மதம் என்பது தனிப்பட்ட கடவுட்கொள்கையோ வழிபாட்டுக்கொள்கையோ கிடையாது //, மேலும் // இந்து மதப் பிரிவுகளுள் எது உண்மையான சித்தாந்தம் என்பதை அவரவர் மனப் பக்குவத்தின் படியோ குடும்ப வழக்கத்தின் படியோ தேர்ந்தெடுத்துக் கொள்வர். // என்று சொல்கிறீர்கள். // சிலர் கிராமீய தெய்வங்களுக்கு பலி, கள்ளு முதலியவற்றைப் படைக்கின்றனர். இதெல்லாம் அவரவர் மதச் சுதந்திரம். // என்றும் // நான் பெற்ற உபதேசத்தின் படி, விஷ்ணு புராணம், பாகவதம், மகாபாரதம், இராமாயணம், கீதை முதலிய நூல்களே சாத்வீக நூல்கள். // என்று எழுதுகிறீர்கள். நீங்கள் “வைதீக” ஹிந்து மத கோட்பாடுகளை பின்பற்றுபவர், அவரவர் இஷ்டத்துக்கு ஏற்ற மாதிரி வேறு கோட்பாடுகளை பின்பற்றலாம் என்று சுருக்கமாக சொல்லலாம். அப்புறம் ஜெஹோவா மாமிசம் படைக்குமாறு சொன்னால் அதில் என்ன தவறு? தட்சன் யாகத்துக்கு தன்னையும், தன கணவனையும் அழைக்கவில்லை என்று “அவமான உணர்ச்சி” கொண்டது தாட்சாயனிக்கு அழகா என்று கேட்பீர்களா? சரி நீங்கள் ராமாயணத்தை ஒரு கிரந்தமாக மதிப்பவர். கடவுளின் மனைவியை ஒருவன் தூக்கிப் போய்விட்டான், யார், எங்கே என்று தெரியாமல் கடவுளான ராமன் கண்ணீர் வடித்தான் என்றால் “எல்லா வல்ல இறைவனுக்கு” இது கூடவா தெரியவில்லை என்று கேட்பீர்களா?
// அயோத்தியில் ஒரு சலவைக் காரன் சீதையைப் பற்றிக் casual-ஆக ஒரு புரளியைக் கிளப்ப, அது இராமன் காதுக்கு எட்ட, சீதையைக் காட்டுக்கு அனுப்புகிறார். // ஏங்க, கொஞ்சமாவது நம்பறபடி இருக்க வேண்டாமா? சரி நீங்கள் சொல்வதையே எடுத்துக் கொள்வோம் – சீதை நான் இனி மேல் உங்களைப் பிரிந்து காட்டில் மட்டுமே வாழ ஆசைப்படுகிறேன், அயோத்திக்கு திரும்ப வரவே கூடாது என்று ராமனிடம் சொல்லவில்லையே? அப்புறம் ஏன் சீதைக்கு அந்த நிலை? பழைய ஏற்பாட்டை படித்தால் தெரியும் – யூதர்கள் அபூர்வமாகவே அரசியல் அதிகாரத்தோடு இருப்பார்கள். எகிப்து, சுமேரிய அரசுகளில் அடிமைகளாக பல காலம் வாழ்ந்தார்கள். என்னடா, யூதர்கள் ஜெஹோவாவுக்கு ஸ்பெஷல் ஆயிற்றே, ஏன் இப்படி ஒரு நிலை என்று கேட்டால் என்ன செய்வது? அதனால் முக்கால்வாசி நேரம் ஜெஹோவா யூதர்களிடம் கோபமாக இருப்பார், நீங்கள் பாலை வழிபடுகிறீர்கள், நல்லவர்களாக இல்லை, அதனால் உங்களை தண்டிக்கிறேன், ஆனால் உங்களை கைவிடமாட்டேன், ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்கு, என்று ஒரு தீம் அடிக்கடி வரும். இது சரித்திரத்தில் யூதர்களின் அரசியல் அதிகாரம் அற்ற நிலையை சக்தி வாய்ந்த ஜெஹோவா என்ற தெய்வத்துடன் ஒட்ட வைக்கும் முயற்சி என்பது தெளிவு. அதே போலத்தான் பெரியவாச்சான் பிள்ளை எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன்.
அப்புறம் முடிந்தால் உத்தர காண்டத்தை படித்து பாருங்கள். லக்ஷ்மணன் சீதையை காட்டிற்கு கூட்டிபோகும்போது சீதை சந்தோஷமாக தன முதல் வனவாசத்தை நினைவு கூர்வதும், லக்ஷமணன் இரண்டாவது வனவாசம் ஆரம்பிக்கப் போகிறதே என்று கலங்குவதும், உண்மை தெரிந்து சீதை கலங்குவதும் அதில் உள்ள காட்சிகளே.
// வாலியே ஒத்துக் கொண்ட முடிவு இது. // வாலி ஒத்துக்கொண்டால் நான் ஒத்துக் கொள்ள வேண்டுமா? பைபிள், ஜெஹோவா, யூதர்களின் அரசியல் அதிகாரம் பற்றி எழுதி இருப்பதை படித்துப் பாருங்கள். சரி, நானும் ஒரு விளக்கம் சொல்கிறேன். பையனும் மனைவியுமாவது பிழைக்க வேண்டும் என்றுதான் வாலி அப்படி சொல்கிறான்.
// வால்மீகி இராமாயணத்தில் இப்படி எழுதவில்லை. // வால்மீகி அப்படி எழுதினர் என்று நானும் சொல்லவில்லை. என் கருத்தில் ராமன் கதை நடந்திருக்க வேண்டும். ராமன் மீதிருந்த மதிப்பு அவரை காலப்போக்கில் கடவுளாக மாற்றி இருக்க வேண்டும். வால்மீகி அந்த மனநிலையில்தான் ராமாயணத்தை எழுதி இருக்க வேண்டும்.
// சிவன் விஷ்ணுவின் குழந்தையாக ஐயப்பன் இருப்பதில் ஆபாசம் என்ன இருக்கிறது? // எனக்கும் (விருட்சத்துக்கும்) எந்த பிரச்சினையும் தெரியவில்லை என்ற கமென்ட் ஐயப்பன் பிறப்பு பற்றி எந்த ஹிந்துவும் பதில் தருவதில்லை என்று அசோக் குமார் எழுதியதற்காக எழுதப்பட்டது.
// ஜாலந்தரன் என்னும் அசுரனுடன் துளசி முதலில் இருந்தாள், , விஷ்ணு அபகரித்துக் கொண்டு போனார் என்பதெல்லாம் ஆதாரப்பூர்வமான நூல்களில் கிடையாது // எது ஆதாரபூர்வமான நூல்? நீங்கள் ஆதாரம் என்று கருதும் நூல்களில் இல்லை என்று எழுதினால் பொருத்தமாக இருக்கும். ஆனால் அவையும் ஹிந்து மதத்தின் ஒரு பகுதியே என்பதையும் நீங்களே ஒரு நீளமான மறுமொழியில் விளக்கி இருக்கிறீர்கள்.
ஓகஸ்ட் 29, 2010 at 3:01 முப
ஆர் வீ அவர்களே,
விரிவாக எழுதியதற்கு மன்னிக்கவும். எனக்குத் தெரிந்தவரை கூறுகிறேன் —
எல்லாம் வல்லவர் (ஜெஹோவாவைப் போல) ஆடு, கோழியையோ, தேங்காய் பழம் கற்பூரத்தையோ (நம்மவர்கள் சிலர் கருதும்படி) demand செய்தால் அது பரம்பொருளுக்கு லக்ஷணமா என்றே கேட்கிறேன்.
// தட்சன் யாகத்துக்கு தன்னையும், தன கணவனையும் அழைக்கவில்லை என்று “அவமான உணர்ச்சி” கொண்டது தாட்சாயனிக்கு அழகா என்று கேட்பீர்களா? //
அழகு இல்லை தான். என்னைப் பொறுத்தவரையில் தாட்சாயணி-சிவபெருமான் மிகப்பெரிய ஞானிகள், ஆனாலும் முக்குணங்களுக்கு ஆட்பட்டிருப்பதால் சிலவற்றைச் செய்கின்றனர்.
// கடவுளின் மனைவியை ஒருவன் தூக்கிப் போய்விட்டான், யார், எங்கே என்று தெரியாமல் கடவுளான ராமன் கண்ணீர் வடித்தான் என்றால் “எல்லா வல்ல இறைவனுக்கு” இது கூடவா தெரியவில்லை என்று கேட்பீர்களா? //
இராமன் மனிதனாகவே நடித்தான். ஆகையால் மனைவியைக் கைவிட்டுப் பிரிந்ததால் கண்ணீர் விட்டது, தேடியது எல்லாம் நாடகமே. ஏன் இப்படி நாடகம் ஆட வேண்டும் என்றால், அதற்கும் ஒரு சமாதானம் உண்டு. இராவணன் சிவனிடம் “தேவன், மிருகம், யக்ஷன், ராக்ஷஸன், கந்தருவன், இயற்கையின் சீற்றம், நோய் இவைகளில் எதனாலும் எனக்கு மரணம் ஏற்படக்கூடாது” என்று வரம் கேட்டிருந்தான். பட்டியலில் மனிதனை (அறியாமையாலோ அல்லது overconfidence-ஆலோ) விட்டு விட்டான். இன்னொரு இடத்தில் பிருகு “நீ மனித யோநிகளில் பிறந்து உன் மனைவியை இழந்து துன்புறுவாய்” என்று சாபம் இடுகிறார். எல்லாம் வல்லவருக்கு சாபம் எல்லாம் பலிக்காது, மேலும் மற்றவர்கள் கொடுத்த வரங்களைத் தாராளமாகத் தூக்கி எறிந்து அவர் பாட்டுக்கு ஸ்வதந்த்ரமாகச் செய்திருக்கலாம். ஆனால், சிவன், பிருகு முதலானோர் வாக்கை மதித்து நடக்கவே அப்படிச் செய்தார் இறைவன். “அப்படி மதிக்கவில்லை என்றால், மானுடர் பலர் பிரம்மா, சிவன், ரிஷிகள் முதலானோர் மீது உள்ள மரியாதை குறைந்துவிடுமோ” என்று இறைவன் கருதினார். Let us say that there is somebody (King, minister, etc.) who is not required by the law to abide by traffic regulations. The king/minister still chooses to follow the rules purely because he does not want others to go astray. இராமாவதாரம் அநுஷ்டானத்திற்காகச் செய்யப்பட்டிருப்பதால் இப்படி.
இவ்விளக்கத்தை நான் இட்டுக்கட்டவில்லை. அத்வைத ஆசாரியார் ஸர்வஞாத்ம முனி ஸம்க்ஷேப சாரீரகத்தில் (2-182) இதை விளக்கியுள்ளார். அதற்கு அனுபாஷ்யம் எழுதிய இராமதீர்த்தர், மதுசூதனர், நிருசிம்மாச்ரமர் ஆகியோர் இதை விளக்கியுள்ளனர். அப்பைய தீட்சிதர் சித்தாந்தலேசசங்க்ரகத்தில் இதைக் கூறியுள்ளார். ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை தத்வ த்ரயத்தில் விளக்கியுள்ளதாகக் கேள்விப்படுகிறேன்.
ஆனால், நாடகமாக இராமாவதாரத்தைச் செய்தாலும், நாடகம் என்ற பெயரில் யாருக்கும் அநியாயமோ தீங்கையோ அதர்மமோ இறைவனான அவர் செய்யவில்லை.
(1) வாலி வதம் பற்றி:
வாலி ஒரு மிகப் பெரிய nuisance ஆகி விட்டான். சொந்த மனைவி தாரை அறிவுறுத்தியும் கேட்டுக் கொள்ளாத வாலி, யார் சொன்னாலும் எதையும் கேட்டிருக்கப் போவதில்லை. சுக்ரீவனை எப்படியாவது தீர்த்துக்கட்டி விடவேண்டும் என்பதே அவனுடைய ஒரே நோக்கமாக இருந்தது. அத்துடன், அவனை அநியாயமாக நாட்டை விட்டுத் துரத்தியதோடு மாத்திரம் அல்லாமல், அவன் உயிருடன் இருக்கும்பொழுது அவனுடைய மனைவியை பலாத்காரமாகக் கைப்பற்றியதும் ஒரு பெருங்குற்றமே. இதற்குத் தக்க தண்டனை மரண தண்டனையே என்பது தரும சாச்திரம் கூறுவதாக இராமன் கூறினான். ஆகவே, இராமன் செய்தது தரும சாச்திரங்களுக்கு உடன்பட்ட ஒன்றே. அப்பேர்ப்பட்ட ஒரு criminal nuisance, threat to life of others, threat to others’ property, rapist -ஐ ஒரு trap வைத்து ஒளிந்துக்கொண்டு பிடித்துத் தக்க தண்டனை தருவதில் எந்த ஒரு குற்றமும் இல்லை. மேலும், இக்ஷ்வாகு குல மன்னர் பாரதம் முழுவதற்குமே சக்ரவர்த்தி என்பது அந்நாளைய வழக்கம்.
வால்மீகி ராமாயணத்தில் இராமன் வாலிக்குக் கூறும் பதிலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இது:
http://www.valmikiramayan.net/kishkindha/sarga18/kishkindha_18_frame.htm
(2) உத்தர காண்டத்தில் கண்டிப்பாக நீங்கள் கூறும் இடங்களுக்குக் கண்டிப்பாக பெரியவாச்சான்பிள்ளை/கோவிந்தராஜர் பாஷ்யத்தில் ஒரு சமாதானம் இருக்கும் என்று நம்புகிறேன். அவகாசம் இருந்தால் தேடித் தருகிறேன். இப்போதைக்குக் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. மன்னிக்கவும். நீங்களும் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய வித்வான்களைக் கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
// எது ஆதாரபூர்வமான நூல்? //
வைதீகர்கள் (அத்வைதி-த்வைதி-விசிஷ்டாத்வைதி அனைவரும்) தொன்றுதொட்டு வழங்கி வரும் நூல்களைச் சொன்னேன். அவர்கள் கையாண்ட வேதம், இதிகாச புராண வாக்யங்கள், ஸ்மிருதி வாக்கியங்கள், முதலியவை.
ஓகஸ்ட் 29, 2010 at 3:07 முப
ஆர் வீ சார்,
// சீதை நான் இனி மேல் உங்களைப் பிரிந்து காட்டில் மட்டுமே வாழ ஆசைப்படுகிறேன், அயோத்திக்கு திரும்ப வரவே கூடாது என்று ராமனிடம் சொல்லவில்லையே? அப்புறம் ஏன் சீதைக்கு அந்த நிலை? //
நீங்கள் மேற்கண்டதில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. சீதையின் எந்த “நிலை”-யைப் பற்றிப் பேசுகிறீர்கள்? முடிந்தால் விவரிக்கவும்.
ஓகஸ்ட் 29, 2010 at 5:32 முப
// // சீதை நான் இனி மேல் உங்களைப் பிரிந்து காட்டில் மட்டுமே வாழ ஆசைப்படுகிறேன், அயோத்திக்கு திரும்ப வரவே கூடாது என்று ராமனிடம் சொல்லவில்லையே? அப்புறம் ஏன் சீதைக்கு அந்த நிலை? //
நீங்கள் மேற்கண்டதில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. சீதையின் எந்த “நிலை”-யைப் பற்றிப் பேசுகிறீர்கள்? முடிந்தால் விவரிக்கவும். // காட்டிலேயே வாழ வேண்டிய, அயோத்திக்கு திரும்ப முடியாத நிலையைத்தான் சொல்கிறேன்.
// இராமன் மனிதனாகவே நடித்தான்… // விஷ்ணு மட்டுமே கடவுள் என்று சொல்லும் வீர வைஷ்ணவர் போலிருக்கிறது. அதனால்தான் மற்றவர் கொடுத்த வரத்தை தூக்கி எரிந்திருக்கலாம் என்கிறீர்கள் போல. ஜெஹோவாவின் “மாமிச ஆசைக்கு” நானும் ஒரு சமாதானம் சொல்கிறேன். பாலஸ்தீன பகுதிகளில் மாமிசமே உயர்ந்த, சுவை மிக்க உணவாக கருதப்பட்டது, கருதப்படுகிறது. பக்தன் கடவுளுக்கு தனக்கு பிடித்த சுவையான உணவை கடவுளுக்கு படைப்பானா என்று சோதனை செய்கிறார். சமாதானத்துக்கா பஞ்சம்?
கிருஷ்ணன் செய்த “மோசடிகள்” என் என்றால் அதை அவன் விளையாட்டு என்று சொல்வீர்களா? துளசி/ஜலந்திரன் என்றால் அது பாகவதத்தில் இல்லை என்பீர்களா? சவுகரியமான விளக்கம்!
// வாலி ஒரு மிகப் பெரிய nuisance ஆகி விட்டான். // இது மறைந்திருந்து கொள்வதை எந்த விதத்திலும் நியாயப்படுத்தாது. இப்படி எல்லாம் போனால் ஃபாரோ மிகப் பெரிய nuisance, அதனால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூட சொல்லலாம்.
ஓகஸ்ட் 30, 2010 at 1:37 முப
// காட்டிலேயே வாழ வேண்டிய, அயோத்திக்கு திரும்ப முடியாத நிலையைத்தான் சொல்கிறேன். //
இதற்கு இரண்டு விளக்கங்கள் ஏற்கனவே கொடுத்துவிட்டேன். சுருக்கமாக, (1) சீதை தான் காட்டுக்குச் சென்று ரிஷிகளுடன் தங்கி இருக்க ஆசை படுகிறாள். (2) வனவாசத்தில் லக்ஷ்மணனைக் கடும் சொற்களால் கண்டித்தார். இந்த பாகவத அபசார விஷயத்தால் விளையும் தண்டனையைக் காட்டுவதற்காக.
// விஷ்ணு மட்டுமே கடவுள் //
என்ன செய்வது? சகல வேதங்களும் ஒருவனையே பரமாத்மா என்றும், பிரமன் அவனிடமிருந்து பிறந்தான் என்றும், சிவன் பிரமநிடமிருந்து பிறந்தார் என்றும் கூறுகின்றனவே? ஆதி சங்கரர், ராமானுஜர், மத்வர் மூவரும் இவர் ஒருவரைத் தான் பரமாத்மா என்று பாஷ்ய நூல்களில் ஒப்புக் கொண்டுள்ளனர். வேதாந்தத்தில் பரமாத்மா இருவர் இருக்க முடியாது. மற்ற கடவுளர் விஷ்ணுவால் படைத்து நியமிக்கப்படுபவரே என்று வேதம் கூறுகிறது.
// வீர வைஷ்ணவர் போலிருக்கிறது. //
வைஷ்ணவத்தில் வீர வைஷ்ணவர், வீரமில்லாத வைஷ்ணவர் என்றெல்லாம் இல்லை. விஷ்ணுவை ஒரே பரம்பொருளாக நம்புபவன் வைஷ்ணவன். மற்ற தேவதைகளை விஷ்ணுவுக்குச் சமமாகவோ, அவனை விட உயர்ந்தவனாகவோ கருதுபவன் வைஷ்ணவன் அல்லன்.
// பக்தன் கடவுளுக்கு தனக்கு பிடித்த சுவையான உணவை கடவுளுக்கு படைப்பானா என்று சோதனை செய்கிறார். //
What an egotistic ‘God’!! Christians would take offence at your explanation.
// கிருஷ்ணன் செய்த “மோசடிகள்” என் என்றால் அதை அவன் விளையாட்டு என்று சொல்வீர்களா? //
என்ன மோசடி செய்தார்? துர்யோதனனையும் கர்ணனையும் பாண்டவர்களை வைத்துக் கொன்றதா? ஹிட்லரையும் போல்பாட்டையும் ஒருவர் விஷம் வைத்துக் கொன்றால் மோசடியா?
// துளசி/ஜலந்திரன் என்றால் அது பாகவதத்தில் இல்லை என்பீர்களா? சவுகரியமான விளக்கம்! //
பத்து பைசா பிட் நோட்டீஸ்சில் வரும் கதைகளை நம்ப வேண்டும் என்று கூறுகிறீர்கள். நாளைக்கே இன்னொருவர் சிவனும் விஷ்ணுவும் வேளாங்கன்னியில் அப்பம் வைத்து இயேசுவைக் கும்பிட்டனர் என்று பத்து பைசா பஜனை புத்தகம் ஒன்றை விற்றால் அதையும் “ஹிந்துமதம்” என்று ஏற்பீர்கள் போலும். இந்தத் தலைவலி உங்களுக்குத் தான். எமக்கு வேதம், உபநிஷத், இராமாயணம், மகாபாரதம், பாஷ்யம் இடப்பட்டுள்ள புராணங்கள் இவற்றை வைத்து நிம்மதியாக இருப்போம்.
// இது மறைந்திருந்து கொள்வதை எந்த விதத்திலும் நியாயப்படுத்தாது. //
ஹிட்லரை ஒருவன் வஞ்சகமாக விஷம் வைத்துக் கொன்றால் அதை அநியாயம் என்பீர்களா? தரும சாஸ்திரத்தின் படி தகுந்த தண்டனையைத் தான் விநியோகம் செய்தார் எம்பெருமான். போலீசார் டெசர், துப்பாக்கி உபயோகிப்பதில்லையா? மறைந்திருந்து speed limit check பண்ணுவதில்லையா? “இதென்ன அநியாயம்? ஒருவனை arrest பண்ண வேண்டும் என்றால் முதலில் அவனுடன் நேருக்கு நேர் சந்தித்து நிராயுதமாக மல்யுத்தம் பண்ணி ஜெயிக்க வேண்டும்” என்று கூறுவீர்களா? சரி, இராமன் என்ன செய்திருக்க வேண்டும் என்று கூறுங்கள் பார்ப்போம்.
// ஃபாரோ மிகப் பெரிய nuisance, அதனால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூட சொல்லலாம். //
ஒருவர் வாலி செய்ததற்கு வாலியை மட்டும் தண்டித்து விட்டு, அவனுடைய மகனாகிய அங்கதனுக்கு வாழ்வு தருகிறார். இன்னொருவர் ஒரு ராஜா செய்த குற்றத்திற்காக அந்நாட்டில் உள்ள அப்பாவிக் குடிமக்களின் அப்பாவி சிசுக்களைக் கொள்கிறார். Please, ஜெஹோவாஹ் and Lord Rama don’t even come anywhere close.
முடிவாக, எவ்வளவு பக்கம் பக்கமாக விளக்கம் தந்தாலும் குதர்க்கமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். மேன்மேலும் நீங்கள் பகவத்-பாகவத அபசாரத்தைச் செய்துக் கொண்டே இருப்பீர்கள் என்று தெரிகிறது. ஆகையால், இத்துடன் நிறுத்துவதே உமக்கும் எனக்கும் நல்லது.
ஓகஸ்ட் 29, 2010 at 5:36 முப
@ RV, gandarvan, chilsam, Ashok, Robin
நரனாகப் பிறந்த ராமன் செய்த தவறுகளைப் பட்டியலிட்டு விவாதிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.
எனக்கு இந்த இதிகாசங்கள் ஒரு பிரம்மாண்டம்.
பிரமிக்க வைக்கும் களம், சிக்கலான கதாபாத்திரங்கள், முடிச்சுகள், வித விதமான மனிதர்கள், பிற உயிரினங்கள், இயற்கை, கீழ் நிலை குணங்கள் முதற்கொண்டு தெய்வீக நிலை, தெய்வத்தையே பக்தியில் கட்டிவிடும் சாதாரண உயிர்கள், எல்லாம் பிண்ணிப் பிணைந்து, கால மாற்றம், இயற்கை மாற்றம் , வரலாறு, பூகோளம், உளவியல், அறிவியல், போர்க்கலைகள் , வான சாஸ்திரம், கட்டடவியல், விளையாட்டு என்று 64 கலைகளும் ஆய கலைகள், பூமிக்கு வெளியிலான உலகங்கள், அதில் வாழும் உயிர்கள், கோள்கள், ,பிறப்பு, இறப்பு, இறப்பு தாண்டி யோசித்தால், பிறப்புக்கு முந்தைய நிலையை சிந்தித்தல், உடற் கூறு இயக்கங்களை அவதானித்தல், பஞ்ச பூதங்களை கையாளுதல், வான ஊர்தியை கண்டுபிடித்தல் , நீரில் பயணித்தல், இரு கரைக்கு கடலிலும் பாலம் அமைத்தல் என்று அழகாக இயற்கை அழிவுகளுக்குப் பின் மறுபடி ஒரு புதிய உயிர் இயக்கம், அதன் வாழ்வாதாரம் என்று இயற்கையும் உயிரினங்களும் தோன்றி அழிந்து தோன்றி என்று விஞ்ஞானம் சொல்ல பல ஆராய்சிகள் பல கால அவகாசம் எடுத்துக் கொள்வதை இங்கே கதையில் களத்தில் உள்ளடக்கி செல்லுதல் என்று எத்தனை இருக்கிறது?
புத்த, சமண மதத்துக்குக் கூட இவை எல்லாம் பொதுவாக ( சில மாற்றங்களுடன் ) இருந்திருக்கும் வரலாறையும் யோசிக்க வேண்டும்.
இதில் காமத்தை தேடித் பார்த்து அது தான் இந்து மதமா என்னும் மனிதர்களுக்கு அவர்கள் எதைப் பார்க்கிறார்களோ அது மட்டுமே தெரிகிறது. அவ்வளவே.
ஓகஸ்ட் 29, 2010 at 6:59 முப
உண்மையில் நான் இங்கு ஆர்.வி.யைத் தவிர வேறு யாருடனுடும் விவாதிக்க விரும்பவில்லை.
ஆனால் என் பெயரையும் நீங்கள் குறிப்பிட்டுள்ளதால் ஒரு சில கருத்துகள்.
இங்கே கந்தர்வன் என்பவர் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்கள் செய்த தவறுகளுக்கும் கடவுள்தான் காரணம் என்கிறார். ஒருவர் உண்மையிலேயே விஷயங்களை அறியவேண்டி கேட்டால் பதிலளிக்கலாம். ஆனால் ‘எப்படியாவது’ குறை சொல்லவேண்டும் என்று திரித்து பேசி அநாகரீகமாக நடப்பவர்களுக்கு மவுனம்தான் சிறந்த பதிலாக இருக்கும். இவரைப் போன்றவர்கள் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல்லெறிபவர்கள்.
என்னைப் பொறுத்தவரை இந்து மதம் என்பது நமது வசதிக்காக சொல்லும் வார்த்தைதானே தவிர அப்படி ஒரு தனி மதம் கிடையாது. இங்கே இந்து மதம் என்பது பல்வேறு மதங்களின் கூட்டு. சைவம், வைணவம், நாட்டார் தெய்வ வழிபாடு, என்று பல்வேறு மதங்களை உள்ளடக்கியது. இதனால்தான் இந்து மதம் என்றால் என்ன என்று கேட்டால் பண்டிதர்கள்கூட கலாச்சாரம் அது இது என்று சமாளிப்பார்களே தவிர சரியான பதிலை யாராலும் தர இயலாது.
உங்களுக்கு ராமன் மனிதனாகத் தெரியும்போது வடநாட்டவர்களுக்கு அவர் ஒரு கடவுள். ஆனால் கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் இயேசு கிறிஸ்து என்பவர் இறைமகன்தான். இது எல்லாமே நம்பிக்கை சார்ந்த விஷயம்தான். இதனால்தான் நான் எந்த இந்துமதம் சார்ந்த பதிவுளிலும் சென்று ராமன் கடவுளா, கிருஷ்ணன் கடவுளா என்றெல்லாம் கேட்பதில்லை. ஆனால் ஒருவர் இயேசு கடவுளா என்று கேட்டால் நீங்கள் வழிபடும் கடவுள்கள் எப்படி என்று கேட்க வேண்டியதாகி விடுகிறது.
ஒக்ரோபர் 24, 2012 at 7:14 முப
இந்து மதம் எல்லாத்தையும் அரவணித்து வளரக்கூடியது உங்களை மாதிரி அடுத்தவரின் அடையாளங்கள் அழித்து வளரவில்லை. .. உங்களுக்கு சொந்த கடவுள் கூட கிடையாது… எங்க கிருஷ்ணன் னை நீங்க கிறிஸ்து வகை சொல்லி கும்புடுறீங்க.. ஏன்பா கடவுள எல்லாம் கடன் வாங்குறீங்க…. 🙂
ஓகஸ்ட் 29, 2010 at 7:33 முப
இந்து மதம் மதங்களின் கூட்டணி என்பதற்கு அடிப்படைகள் தெரியும் தானே. ராமன் மனித அவதாரம் என்று தான் சொன்னேன். சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.
இயேசு கடவுள் தூதன் இல்லையா? கடவுளா? சரி அந்த விவாதம் வேண்டாம்.
RV என்பவரோடு நீங்கள் தனித்து விவாதிக்க chat தான் உபயோகிக்கனும்.
எங்களுக்கு கடவுள் எங்கோ இல்லை. நம்மைச் சுற்றிய ஒவ்வொன்றிலும் இன்னும் கொஞ்சம் தெளியும் போது நம்மிலும். அவ்வளவே.
கண்ணாடி வீடு இல்லை. பிரம்மாண்டம். அருகில் சுற்று வெளியில் உள்ளில் எல்லாம்.
ஓகஸ்ட் 29, 2010 at 7:45 முப
@Robin
உங்கள் பெயரை குறிப்பிட்டது தவறு தான் என்று தோன்றுகிறது. நீங்கள் RV யின் குறிப்புகளில் பழைய ஏற்பாடு குறித்த உங்கள் கருத்துக்களை மட்டுமே சொல்லி இருக்கிறீரக்ள். Sorry
ஓகஸ்ட் 29, 2010 at 4:36 பிப
விருட்சம், நீங்கள் இதிகாசங்கள் பற்றி சொல்வதை நான் முழுமையாக ஆமோதிக்கிறேன். மகாபாரதமே உலகின் சிறந்த இலக்கியம் என்பது என் அசைக்க முடியாத கருத்து. அதை விட அற்புதமான ஒரு படைப்பு எதுவும் இல்லை. ராமாயணம் அடுத்தபடி.
ராபின், இது ஒரு open forum. இங்கே நீங்கள் மறுமொழி எழுதினால் அதற்கு மறுமொழி வருவது நீங்கள் எதிர்பார்க்க வேண்டிய ஒன்று. என்ன, நீங்கள் அந்த மறுமொழிக்கு மறுமொழி அளிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. 🙂
// இந்து மதம் என்பது நமது வசதிக்காக சொல்லும் வார்த்தைதானே…// இது பல நூறாண்டுகளுக்கு முன் உண்மைதான். ஆனால் இன்று ஹிந்து மதம் என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது.
// உங்களுக்கு ராமன் மனிதனாகத் தெரியும்போது வடநாட்டவர்களுக்கு அவர் ஒரு கடவுள். // விருட்சம் பற்றி தெரியாது, ஆனால் எனக்கு ராமன் கடவுளே. தென்னாட்டவர் ராமனை கடவுளை நினைப்பதில்லை என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. மு.மு. இஸ்மாயில் அப்படி நினைப்பதில்லை என்றால் புரிந்து கொள்ளலாம்.
ஓகஸ்ட் 30, 2010 at 4:28 முப
திரு ராபின் அவர்களே,
// ஒருவர் உண்மையிலேயே விஷயங்களை அறியவேண்டி கேட்டால் பதிலளிக்கலாம். ஆனால் ‘எப்படியாவது’ குறை சொல்லவேண்டும் என்று திரித்து பேசி அநாகரீகமாக நடப்பவர்களுக்கு மவுனம்தான் சிறந்த பதிலாக இருக்கும். இவரைப் போன்றவர்கள் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல்லெறிபவர்கள்.//
நீங்கள் கூறுவதை முதன்முதலில் செய்தது ஹிந்து கலாச்சாரத்தையும், வேதத்தையும் அவதூறாகப் பேசி மதமாற்றம் செய்ய முயற்சித்த மிஷனரிக்களே. ஆகையால், இந்த உபதேசத்தை முதலில் நீங்கள் அவர்களுக்குக் கூறுங்கள். எத்தனை “ஜெபக் கூட்டங்களில்” விஷ்ணுவையும் சிவனையும் விநாயகரையும் முருகனையும் “சாத்தானின் வடிவம்” என்று பாதிரிகளும்/எவன்கேளிஸ்ட்-களும் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது உமக்குத் தெரியும். சனாதன தருமத்தை எத்தனை மிஷனரிக்கள் “அனிமிசம், பாகனிய வழிபாடு, சாத்தான் வழிபாடு” என்று கூறியுள்ளனர் என்பதும் உங்களுக்குத் தெரியும். I do not have any particular intention to make you return to Hinduism/Vedic religion. I just gave a taste of your own medicine to the likes of Ashok Kumar, Chillsam etc. who have written defamatory nonsense about Hindu deities in their pages. We have no problem if you want to talk about the greatness of Jesus publicly. We will only appreciate the fact that there are indeed some people in some cultures who said good things, and carry on with what we like to do.
// இங்கே கந்தர்வன் என்பவர் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்கள் செய்த தவறுகளுக்கும் கடவுள்தான் காரணம் என்கிறார். //
நான் எங்கு இப்படிச் சொன்னேன்? பழைய ஏற்பாட்டில் ஜெஹோவா எகிப்திய சிசுக்களைக் கொல்லவில்லை என்று சொல்கிறீர்களா? அமேலகைத்தில் பெண், சிசு, சிறுவன், ஆடு, மாடு, கோழி என்று வித்தியாசம் பார்க்காமல் அனைவரையும் கொல்ல வேண்டும் என்று ஜெஹோவா இசுரேளியர்களுக்கு ஆணை தரவில்லை என்கிறீர்களா? டேவிட் செய்த குற்றத்துக்காக அவன் மனைவியரைக் கற்பழிக்கச் செய்வேன் என்று ஜெஹோவா கூறவில்லையா? பாரபக்ஷம் பாராதவராக இருந்திருந்தால், ஜெஹோவா குற்றம் செய்தவரை மாத்திரம் தண்டிக்கச் சொல்லியிருக்க வேண்டுமே? அல்லது, பைபிளில் சில பகுதிகள் கட்டுக்கதைகள் என்றும், சில பகுதிகளே உண்மை என்றும் கூறுகிறீர்களா? இதைத் தான் கேட்டேன்.
இதற்கு நீங்கள் என்ன சமாதானம்/சப்பைக்கட்டு வேண்டுமானாலும் கூறிக்கொள்ளலாம். எங்களுக்கு அதன் மேல் இஷ்டம் இல்லை. உங்களுக்கு முழு சுதந்திரத்தைக் கொடுக்கத் தயார். Just for the record: I wish the miscreants who burned churches and raped nuns in Orissa and elsewhere are put to death and undergo due suffering in hell for that. இதை அக்னி மேல் சத்தியம் செய்து சொல்கிறேன். ஆனால், நீங்கள் “ஹிந்துக் கடவுள் ஒரு அயோக்கியன், இயேசு தான் உண்மைக் கடவுள்” என்று பொது ஊடகங்களில் கூறினால் அதற்கான (ஆதாரப்பூர்வமான) கண்டனங்கள் வருவதை எதிர்பார்க்கத் தான் வேணும்.
மற்றபடி ஹிந்துக்கலாச்சாரம் பற்றி நீங்கள் கூறுவது சரியே. அது தவிர, கிறித்தவம் இசுலாம் யூதம் எல்லாம் தோன்றுவதற்கு முன்பாகவே, முன்னொரு காலத்தில் இந்நாட்டு சனாதன தரும வைதிக பண்டிதர்கள் அனைவரும் இறைவன், பிரபஞ்சம், ஆன்மா பற்றிய பரவலான, பொதுவான கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்தனர். மிகவும் சீரிய வைதீகக் கலாச்சாரமாக இருந்து வந்தது, பரம சாத்வீகமான பெரியோர்கள் எங்கும் இருந்தனர். பரம்பொருள் மீதான பக்தி பரவி இருந்தது. இந்த நிலை துரதிஷ்டவசமாக மாறிவிட்டாலும், இன்றும் அப்படிச் சிலர் உள்ளனர். இந்நிலையில், எரியும் புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல பிட் நோட்டீசில் பகவத் த்வேஷி ஒருவர் எழுதிய கதையை வைத்து “இந்தக் கதை உங்கள் வேதத்தில் உள்ளது” என்றும் “விஷ்ணுவைப் பற்றிய கதைகள் ஆபாசமானவை” என்று அசோக் குமார் எழுதியது கடுப்பைத் தான் உண்டுபண்ணியது. அப்படி இருந்தும், அவர் கேட்டதுக்கு நேருக்கு நேராக பழைய ஏற்பாட்டிலிருந்தே கேட்டேன். நானாக எந்த ஒரு கதையையும் இட்டுக்கட்டவில்லை. இதில் நியாயம் இருப்பதை நீங்கள் மதாபிமானமற்ற நடுநிலையானவராக இருந்தால் கண்டுக் கொள்வீர்கள்.
ஓகஸ்ட் 30, 2010 at 5:18 முப
கந்தர்வன், // சுருக்கமாக, (1) சீதை தான் காட்டுக்குச் சென்று ரிஷிகளுடன் தங்கி இருக்க ஆசை படுகிறாள். (2) வனவாசத்தில் லக்ஷ்மணனைக் கடும் சொற்களால் கண்டித்தார். //
ungaL வார்த்தைகளில் சீதை காட்டுக்கு சென்று ரிஷிகளுடன் தங்கி இருக்க ஆசைப்படுகிறாள். அயோத்திக்கு திரும்ப வரவே கூடாது என்று ஆசைப்படுவதாக் நீங்கள் எழுதவில்லையே? ராமனைப் பிரிந்து இருக்க வேண்டும் என்று ஆசைப்படவில்லையே? அப்புறம் என் இந்த நிலை என்று கேட்டிருந்தேன். உங்களுக்கு புரியவில்லையா இல்லை புரிந்து கொள்ள இஷடமில்லையா என்று தெரியவில்லை.
// என்ன செய்வது? சகல வேதங்களும் ஒருவனையே பரமாத்மா என்றும், பிரமன் அவனிடமிருந்து பிறந்தான் என்றும், சிவன் பிரமநிடமிருந்து பிறந்தார் … மற்ற தேவதைகளை விஷ்ணுவுக்குச் சமமாகவோ, அவனை விட உயர்ந்தவனாகவோ கருதுபவன் வைஷ்ணவன் அல்லன். //
இதற்கும் ஜெஹோவா மட்டுமே கடவுள் என்று நிலைக்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை.
// என்ன மோசடி செய்தார்? துர்யோதனனையும் கர்ணனையும் பாண்டவர்களை வைத்துக் கொன்றதா? ஹிட்லரையும் போல்பாட்டையும் ஒருவர் விஷம் வைத்துக் கொன்றால் மோசடியா? //
பொய்யும் ஏமாற்றுவதும் உங்களைப் பொறுத்த வரை மோசடி இல்லை என்றால் சரி, உங்கள் கருத்து உங்களுக்கு.
// பத்து பைசா பிட் நோட்டீஸ்சில் வரும் கதைகளை நம்ப வேண்டும் என்று கூறுகிறீர்கள். நாளைக்கே இன்னொருவர் சிவனும் விஷ்ணுவும் வேளாங்கன்னியில் அப்பம் வைத்து இயேசுவைக் கும்பிட்டனர் என்று பத்து பைசா பஜனை புத்தகம் ஒன்றை விற்றால் அதையும் “ஹிந்துமதம்” என்று ஏற்பீர்கள் போலும். இந்தத் தலைவலி உங்களுக்குத் தான். எமக்கு வேதம், உபநிஷத், இராமாயணம், மகாபாரதம், பாஷ்யம் இடப்பட்டுள்ள புராணங்கள் இவற்றை வைத்து நிம்மதியாக இருப்போம். // neengal எழுதி இருந்ததை வைத்து நீங்கள் “வைதீக” கூறுகளை நம்புபவர், ஆனால் சுடலை மாடன், ஐயப்பன் மாதிரி மற்ற கூறுகளும் ஹிந்து மதத்தின் ஒரு பகுதி என்று ஏற்பவர் என்று நினைத்தேன். “வைதீக” மதம் மட்டுமே ஹிந்து மதம் என்று நீங்கள் நினைப்பவரானால் சரி, உங்கள் கருத்து உங்களுக்கு. இல்லை என்றால் ஜலந்திரன் கதையும் ஹிந்து மதத்தின் ஒரு கூறுதானே!
// சரி, இராமன் என்ன செய்திருக்க வேண்டும் என்று கூறுங்கள் பார்ப்போம். //
இதில் என்ன சந்தேகம்? வாலியை சுக்ரீவனுக்கு உரிய “பங்கை” கொடு, இல்லை என்றால் போருக்கு வா என்று அழைத்திருக்க வேண்டும்.
// ஒருவர் வாலி செய்ததற்கு வாலியை மட்டும் தண்டித்து விட்டு, அவனுடைய மகனாகிய அங்கதனுக்கு வாழ்வு தருகிறார். இன்னொருவர் ஒரு ராஜா செய்த குற்றத்திற்காக அந்நாட்டில் உள்ள அப்பாவிக் குடிமக்களின் அப்பாவி சிசுக்களைக் கொள்கிறார். Please, ஜெஹோவா and Lord Rama don’t even come anywhere close. //
மதம் என்பது பர்சனல் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றும் கடவுள்கள் பற்றிய ஆய்வுகள் உண்மையில் செமி-சரித்திர/இலக்கிய/மனித குல ஆய்வுகள் மட்டுமே என்றுமே நினைப்பவன் நான். நான் ராமனை வணங்குகிறேன், ஜெஹோவாவை வணங்குவதில்லை என்றால் அது என் பர்சனல் சாய்ஸ் மட்டுமே. அதனால் நான் ஜெஹோவா மட்டம், ராமன் உயர்வு என்று கொள்கிறேன் என்று அர்த்தம் இல்லை. உங்கள் நம்பிக்கை உங்களுக்கு.
// முடிவாக, எவ்வளவு பக்கம் பக்கமாக விளக்கம் தந்தாலும் குதர்க்கமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். மேன்மேலும் நீங்கள் பகவத்-பாகவத அபசாரத்தைச் செய்துக் கொண்டே இருப்பீர்கள் என்று தெரிகிறது. ஆகையால், இத்துடன் நிறுத்துவதே உமக்கும் எனக்கும் நல்லது. //
உங்கள் இஷ்டம், சவுகரியம்.
ஓகஸ்ட் 30, 2010 at 7:47 முப
// அயோத்திக்கு திரும்ப வரவே கூடாது என்று ஆசைப்படுவதாக் நீங்கள் எழுதவில்லையே? ராமனைப் பிரிந்து இருக்க வேண்டும் என்று ஆசைப்படவில்லையே? அப்புறம் என் இந்த நிலை என்று கேட்டிருந்தேன். //
பாகவத அபசாரம் புரிந்தவர் யாராகிலும் தண்டனை உண்டு என்று காட்டுவதற்காக.
சீதைக்கு ஏதோ அநியாயம் நிகழ்ந்து விட்டது என்பது போல எழுதுகிறீர். சீதை யார் என்பதைப் பின்வருமாறு மனப்பூர்வமாக ஒத்துக் கொள்பவர்களுக்கு இதெல்லாம் ஒரு சர்ச்சையே இல்லை: சீதை யார் என்று இராமன் உண்மையில் அறிந்தவனே. இராமன் யார் என்று சீதை உண்மையில் அறிந்தவளே. எங்கும் நிறைந்தவனோடு எப்பொழுதும் வசிப்பவள். திருப்பார்கடளிலும் வைகுண்டத்திலும் நித்யமாக லக்ஷ்மீ-நாராயணர்கள் சேர்ந்து வசித்து வருகிறார்கள். இராமன்-சீதை அவதாரங்கள் அவர்கள் simultaneous-ஆக எடுத்துக் கொண்ட ரூபங்களே. ஆகையால், உண்மையில் சீதை இராமனை விட்டுப் பிரியவே இல்லை.
// இதற்கும் ஜெஹோவா மட்டுமே கடவுள் என்று நிலைக்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. //
நெடு வித்தியாசம் உண்டு. ஜெஹோவாவை வணங்காதவர் நரகத்திற்கு நிரந்தரமாகத் தள்ளப்படுபவர். வைணவர் அல்லாதவர் முருகன், துர்க்கை, சிவன் முதலானோரை வழிபட்டுப் படிப்படியாக சிவபெருமானிடம் ஞானம் விஷ்ணுபக்தி பெற்று அடுத்த பிறவியிலோ, அதே பிறவியிலோ வைணவர்களாகி உயர்கதி பெறுவார் என்பது வைணவர் நம்பிக்கை. ஜெஹோவாவை வணங்குபவர்கள் மற்ற கடவுளரைச் “சாத்தான் வழிபாடு” என்று கூறுவார். வைணவர்கள் சிவபெருமான், துர்க்கை முதலியோரை “பரம வைணவர், பரம பக்தர்” என்று கூறுவார். “ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே சஹஸ்ரநாம தத் துல்யம் ராம நாம வரானனே” என்று சிவன் பார்வதியிடம் கூறவில்லையா?
// ஆனால் சுடலை மாடன், ஐயப்பன் மாதிரி மற்ற கூறுகளும் ஹிந்து மதத்தின் ஒரு பகுதி என்று ஏற்பவர் என்று நினைத்தேன். //
ஹிந்து என்பது ஒரு மதம் அல்ல. பாரதத்தில் உள்ள பல மதங்களை ஒன்று சேர்த்துக் கூறுவது. அவரவர்க்கு மதச் சுதந்திரமும் பேச்சுச் சுதந்திரமும் உண்டு என்பதே. ஒன்றை ஏற்பது என்றால் அதை உண்மை என்று நம்புகிறேன் என்று அர்த்தம் அல்ல. அந்த நிலையில் தான் ஐயப்பன் கதை, ஜலந்தரன் கதை, அடி முடி தேடிய கதை, சரபேஸ்வரர் கதை முதலானவை. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் புளுகலாம். ஆனால், அந்தப் புளுகல் எல்லாம் வைதீகம் ஆகி விடாது. “ஹிந்து மதம்” என்பதில் ஒரு அங்கமாக இருக்கலாம், ஆனால் அது எல்லா ஹிந்துக்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் என்று அவசியம் இல்லை.
// இல்லை என்றால் ஜலந்திரன் கதையும் ஹிந்து மதத்தின் ஒரு கூறுதானே! //
மீண்டும் கேட்கிறேன்… புதிதாக ஒரு நபர் கல்கியின் ‘ஆன்மீக மலர்’-இல் ‘இந்து-கிறித்தவ சமரசம்’ என்று தலைப்பு இட்டு “சிவனும் விஷ்ணுவும் வேளாங்கன்னியில் ஏசுவுக்கு அப்பம் வைத்துக் கும்பிட்டனர்” என்று தலபுராணம் ஒன்றை உண்டுபடுத்தினால் அதையும் நீங்கள் “இந்து மதத்தின் ஒரு அங்கம்” என்று ஏற்பீர்களா? உங்கள் சுதந்திரம் உங்களுக்கு, அதற்காக ஒரு எல்லையே இல்லாமல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன், அவ்வளவே.
// இதில் என்ன சந்தேகம்? வாலியை சுக்ரீவனுக்கு உரிய “பங்கை” கொடு, இல்லை என்றால் போருக்கு வா என்று அழைத்திருக்க வேண்டும். //
சற்று யோசித்தீர்களா? சுக்ரீவன் மனைவியை பலாத்காரமாகக் கொண்டதற்கும், சுக்ரீவனை life-threatening grievious injury செய்ததற்கும், நாட்டை அபகரித்ததற்கும் வாலி தண்டனை அனுபவித்திருக்க வேண்டுமே? இதற்கெல்லாம் தரும சாஸ்திரத்தில் என்ன தண்டனை உண்டோ அதைத் தான் இராமன் வாலிக்கு விநியோகித்தான். வாலி வதத்திற்குப் பின்பு இராம-லக்ஷுமனர்களுக்கு இடையே நடந்த வாதத்தை வால்மீகி வாக்கிலிருந்தோ, கம்பர் வாக்கிலிருந்தோ சற்று படித்துப் பாருங்கள், அப்போது தெளியும்.
// அதனால் நான் ஜெஹோவா மட்டம், ராமன் உயர்வு என்று கொள்கிறேன் என்று அர்த்தம் இல்லை. உங்கள் நம்பிக்கை உங்களுக்கு. //
இன்னொருவரை “திருமால் தான் உண்மையான கடவுள், ஜெஹோவ அல்ல” என்று நம்ப வைப்பது எனக்கு உள்ள நோக்கம் அல்ல. நீங்கள் வாலியைக் கொன்றதையும் எகிப்திய சிசுக்கள் கொலையையும் ஒப்பிட்டுப் பார்த்தீர்கள். அந்த ஒப்பீடு செல்லாது என்பதை உணர்த்தவே எழுதினேன்.
ஓகஸ்ட் 30, 2010 at 10:45 முப
// ஹிந்து மதம் என்பது தனிப்பட்ட கடவுட்கொள்கையோ வழிபாட்டுக்கொள்கையோ கிடையாது //,
கந்தவர்வன்!
இதை எந்த ஆதாரத்தை வைத்து சொல்கிறீர்கள்?
முதலில் ஹிந்து மதம் என்ற சொல்லே கிடையாது என்றும் அது ஐரோப்பியரால் புனையப்பட்ட சொல்லென்றும்தான் குறிப்பிடுகிறார்கள்.
சிந்து சமவெளியில் உதித்த வாழ்க்கை முறையும் இறை வழிபாடும் சனாதன மதமென்றுதானே குறிப்பிடப்படுகின்றது?
வேதங்களுக்கு அப்புறம்தானே அவ்வாழ்க்கை முறை தோன்றியது, அல்லது அவ்வாழ்க்கை முறையை அவைகள் பறைகின்றன? அவற்றை எழுதியோருக்கு இந்திய துணைக்கண்டத்தின் நிலப்பரப்பு என்னவென்றாவது தெரிந்திருக்குமா? கடைகோடியில் தமிழர்கள், வேறுகோடியில் நாகர்கள் as examples வாழ்கின்றார்கள் என்று தெரிந்திருக்குமா?
எனவே இந்தியாவிலுள்ள அனைத்து சமய வழிபாடுகள் எப்படி இந்து மதமாகும்?
நம்மாழ்வார் சொன்னதாக ஒரு பாட்டைப்போட்டு என்ன சொல்ல வருகிறீர்கள்? நம்மாழ்வார அனைத்து வழிபாடுகளையும் ஏற்றுக்கொண்டாரென்றா?
அவர் திருவாய்மொழியில் தொடக்கத்தில் சொன்னார். ஆனால் உள்ளே அவர் திருமாலே ஒரே தெய்வம் என்றும் அப்படி இல்லாமல் ‘பர தெய்வங்களைத்’ தொழுவோருக்கு மோட்சம் (வைகுண்டம்) கிடையாதென்றும் சொல்கிறாரே?
இப்படியிருக்க, எப்படி அனைத்து வழிபாடுகளையும் ஏற்றுக்கொள்ளமுடியும்?
இந்து மதம் அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறது என்பதும், அத இந்து மதம் என்பதும், எல்லாம் தவறாகும்.
இந்து மதம் என்ற ஒன்று இல்லை. இந்தியாவில பலமக்கள் பலபல தெய்வவழிபாடுகள் செய்தனர். அதில் ஒன்றூதான் நீங்கள் ஏற்றுக்கொண்ட வைதீக மதமாகும்.
ஓகஸ்ட் 30, 2010 at 11:24 முப
@Jo
இந்து மதம் மதங்களின் கூட்டணி என்பதை விட பல வழிபாட்டு முறைகளின் கூட்டணி என்று சொல்லலாம். அதற்குரிய அடிப்படை இருக்கிறது.
சைவத்தில் சக்தியாக இருப்பவளே சாக்தத்தில் சக்தி. வைணவத்தில் முழுமுதல் கடவுளான திருமாலே சைவத்தில் காக்கும் சக்தி. குமாரத்தின் குமரனே சைவத்தின் முருகன். வைதீகத்தின் வழிபாடுகளின் ஒன்னொரு நிலை தான் நாட்டார் வழிபாடுகள். முறைகளில் மாற்றங்கள் இருந்தாலும் இயற்கை வழிபாடு, இறைவன் படைப்புகளிலும் இரைவனையேக் காணுதல் என்ற பொது அம்சங்கள் எல்லாம் கொண்டு தன் அது ஒரு மத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. சும்மாஇல்லை
அந்நிய மதங்களுக்கும் இந்த வழிபாட்டு முறைகளுக்கும் உண்டான அடிப்படை வித்தியாசங்களைப் புரிந்து கொள்ள இந்த ஒருங்கிணைப்பு உதவியது.
ஓகஸ்ட் 30, 2010 at 12:12 பிப
ஜோ,
இந்து மதம் என்று இஸ்லாம், கிருத்தவம் போன்ற ஒரு புத்தகம், ஒரு வழிகாட்டி, ஒரே கடவுள் என்று சொல்லும் மதம் ஒன்று இல்லவே இல்லை தான்.
வைதீக மதம் தான் இந்து மதம் மற்றவை இந்து மதம் அல்ல என்பது வெள்ளைக்காரன் சொல்லிவிட்டுப் போன அண்டப்புழுகு. காலணிய கருத்தாக்கம். அவ்வளவே.
நாட்டார் வழிபாடும் வைதீக மதமும் ஒன்றோடொன்று பினிப்பிணைந்து சுடலைமாடனை சிவனாகப் பார்க்கும் கண்ணோட்டம், சுடலை மாடன் படையலையும், புளியோதரையையும் அதே பக்தியுடன் பிரசாதமாக ஏற்கும் மனப்பக்குவம், அதை வளர்க்கும் கோயில் விஷேசங்கள் கொண்ட ஒரு வாழ்கை முறையை இந்து மதம் என்று இன்று சொன்னால் உங்களுக்கு ஏன் மூக்கில் வியர்த்துவிடுகிறது ?
ஒவ்வொரு முறையும் நாட்டார் வழிபாட்டையும் வைதீக முறை வழிபாட்டு முறையும் முற்றிலும் வெவ்வேறானது, ஒன்றுக்கொன்று தொடர்பற்றது, வைதீக மதம் என்பது திணிக்கப்பட்ட ஒன்று என்ற அடிப்படையிலேயே உங்கள் விவாதங்கள் அனைத்தும் இருப்பதற்கு என்ன அர்த்தம் ? அது முற்றிலும் தவறாக காலணிய கருத்தாக்கம் என்பது தெரிந்தும் இதை நீங்கள் மறுபடியும் மறுபடியும் சொல்லிக்கொண்டு பல தளங்களில் விவாதிப்பதன் உள்நோக்கம் என்ன ?
ஓகஸ்ட் 30, 2010 at 12:40 பிப
ஜோ,
// வேதங்களுக்கு அப்புறம்தானே அவ்வாழ்க்கை முறை தோன்றியது, அல்லது அவ்வாழ்க்கை முறையை அவைகள் பறைகின்றன? அவற்றை எழுதியோருக்கு இந்திய துணைக்கண்டத்தின் நிலப்பரப்பு என்னவென்றாவது தெரிந்திருக்குமா? கடைகோடியில் தமிழர்கள், வேறுகோடியில் நாகர்கள் as examples வாழ்கின்றார்கள் என்று தெரிந்திருக்குமா? //
வேதம் என்றால் என்ன என்பதைச் சரியாகப் புரிந்துக் கொள்ளாமல் ஏதேதோ உளறுகிறீர்கள். வேதமானது யாராலும் (கடவுளாலும் கூட) ஒரு காலத்தில் எழுதப்படவில்லை. என்றுமே சாச்வதமாக உள்ளது. “வேதத்துக்கு முன்பு, வேதத்துக்குப் பின்பு” என்று கூறுவதற்கெல்லாம் இடமில்லை.
// சிந்து சமவெளியில் உதித்த வாழ்க்கை முறையும் இறை வழிபாடும் சனாதன மதமென்றுதானே குறிப்பிடப்படுகின்றது? //
சனாதன தருமம் ஒரு இடத்திலோ காலத்திலோ உதிக்கவில்லை. என்றைக்குமே சாச்வதமாக உள்ளதால் தான் அதைச் “சனாதன தருமம்” என்று அழைக்கிறோம்.
மேலும், சங்ககாலத் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்தால் (பரிபாடல், புரனானூறு, திருக்குரள், முதலியவை) சனாதன தருமம் தமிழ் நாட்டில் மேலோங்கி இருந்தது தெளியும். சங்கநூலில் எங்குமே பௌத்தம், ஜைனம் முதலிய மதங்கள் காணப்படவில்லை. இதிலிருந்தே, தமிழகத்தில் தொன்று தொட்டு இருந்த மதமே சனாதன தருமம் என்று தெரிய வருகிறது. நீங்கள் கூறுவதுபோல “திராவிட” மதம் வேறாக இருந்தால் தமிழ் சங்க இலக்கியங்களில் திருமால், இந்திரன், வருணன், முருகன், சிவன் முதலிய “ஆரிய” தெய்வங்களுக்குப் பதிலாக கிராமீய தெய்வங்களே வந்திருக்க வேண்டும்.
// நம்மாழ்வார் சொன்னதாக ஒரு பாட்டைப்போட்டு என்ன சொல்ல வருகிறீர்கள்? நம்மாழ்வார அனைத்து வழிபாடுகளையும் ஏற்றுக்கொண்டாரென்றா? //
நான் நம்மாழ்வார் பெயரை இங்கு எடுக்கவே இல்லை. நீங்கள் தான் இக்கட்டுரையில் முதன்முதலில் இவரை முன்வைக்கிறீர். எதற்கு நம்மாழ்வாரைப் பற்றிக் கூற வருகிறீர்கள் என்று தெரியவில்லை.
// நம்மாழ்வார அனைத்து வழிபாடுகளையும் ஏற்றுக்கொண்டாரென்றா? //
நம்மாழ்வார் அனைத்து வழிபாடுகளையும் ஏற்றுக்கொண்டார் என்று யார் சொன்னது? அவர் ஏற்காவிடிலும், மற்றவர்களுடைய மதச் சுதந்திரத்தைக் குலைக்குமாறு யாரிடமும் ஆணையிடவில்லை; மற்ற தெய்வங்களைச் “சாத்தான்” என்றெல்லாம் அவமதிக்கவில்லை.
// ஆனால் உள்ளே அவர் திருமாலே ஒரே தெய்வம் என்றும் அப்படி இல்லாமல் ‘பர தெய்வங்களைத்’ தொழுவோருக்கு மோட்சம் (வைகுண்டம்) கிடையாதென்றும் சொல்கிறாரே? //
திருமாலே ஒப்பற்ற பரம்பொருள், மற்ற தெய்வங்களைத் தொழுவதை விட்டுத் திருமாலை மாத்திரம் ஏகாந்தமாகச் சரணாகதி புத்தியுடன் வழிபடுவதைப் பரிந்துரைக்கிறார்; அப்படிச் செய்பவர்களுக்கு வீடுபேறு கிட்டும் என்கிறார். எனக்குத் தெரிந்த அளவில் நம்மாழ்வார் “பர தெய்வங்களைத் தொழுவோர்க்கு மோட்சம் கண்டிப்பாக இல்லை” என்றெல்லாம் கூறவில்லை.
எந்த ஒரு வைணவரும் “இவருக்கோ அவருக்கோ கண்டிப்பாக மோட்சம் கிடையாது” என்றெல்லாம் சொல்ல மாட்டார். மோட்சம் எல்லாம் இறைவனின் முழு அருளாலே மாத்திரம் கிடைக்கிறது, நாம் ஒன்றைச் செய்வதால் அல்ல. இந்த சரணாகதி நிலையைப் புரிய வைப்பதற்கு இந்த மறுமொழி போதாது.
“இந்து மதம்” என்ற பெயரை ஐரோப்பியர்களுக்கு முன் யாரும் முன்வைக்கவில்லை, ஒத்துக் கொள்கிறேன். நான் அதையே தான் சொல்லி வந்தேன். சரியாகப் படித்துப் பாருங்கள். நீங்கள் நான் எழுதியவற்றைத் தவறாகப் புரிந்துக் கொண்டுள்ளீர்கள்.
// அதில் ஒன்றூதான் நீங்கள் ஏற்றுக்கொண்ட வைதீக மதமாகும். //
கண்டிப்பாக. வைதீக மதம் என்று ஒரு மதத்தைத் தான் சொல்ல முடியும். எந்த மதம் முரண்பாடற்ற பரம வைதீக மதம் என்பதில் கருத்து வேறுபாடு இருக்கலாம். அவ்வளவே.
ஓகஸ்ட் 30, 2010 at 12:41 பிப
ஜோ,
“கிராமீய தெய்வங்களுக்கும் சனாதன தருமத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை” என்பதற்கு எதிராகப் பல சான்றுகள் உள்ளன. வீரபத்ரர், மகாபைரவி, முதலிய ருத்ர கணங்களும், ஏழு மாத்ரிகைகள், பதினாறு மாத்ருகணங்கள் முதலிய துர்க்கையின் கணங்களும் வைதீக நூல்களிலேயே உள்ளன (மார்க்கண்டேய புராணம், விஷ்ணு புராணம், பாகவதம், முதலியவற்றில்). இந்த ருத்ரகணங்களுள் சில சுடலைமாடன் முதலிய கிராமீய தெய்வங்களாகக் காலப்போக்கில் மாறியிருக்கலாம், அவை ஒரு குறிப்பிட்ட cult-ஆக மாறியிருக்கலாம். தாந்திரீக பௌத்த மதத்திலிருந்து சில வழிபாடுகள் தமிழ் நாட்டில் வந்தடைந்திருப்பதற்கும் சான்று உள்ளது. இவை எல்லாம் நடந்தது நீங்கள் கூறும் “வேத காலத்திற்குப்” பிறகே.
ஓகஸ்ட் 30, 2010 at 1:17 பிப
கந்தர்வன்!
திருமாலே ஒரே பரம்பொருள் என்றால், மற்ற தெய்வங்கள் பொய் என்றுதான் பொருள். அத்தெய்வங்களைச்சாத்தான்கள் என்று ஓப்பனாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
மோடம், வீடுபேறு என்ற சொற்களுக்கு வெவ்வேறு பொருட்கள் என்றால், வீடுபேறு என்றே எடுத்துக்கொள்ளுங்கள்.
ஆழ்வார்கள் பிறமதங்களைத் திட்டவில்லையென்று எவர் சொன்னார்?
தொண்டரிப்பொடியாழ்வார், பிறமதத்தவரின் தலையைக் கொய்து விடுவேன் என்கிறார். பிறதெய்வங்களின் பெயர்களைக் குழந்தகளுக்குச் சூட்டுகிறார்களே என வருந்துகிறார் பெரியாழ்வார். சிவன், பிரமன் எல்லாரையும் திருமாலே படைத்தார் என்று திருமழிசையாழ்வார் aggressive ஆக எழுதுகிறார். தன் சொல்லைக்கேட்க (ஒரே தெய்வம் திருமாலே) கேட்காமல் போகிறார்களே என நம்மாழ்வார் விரக்தியடைகிறார் (சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்வென் கேண்மினோ)
இவையெல்லாம் என்ன?
“மோட்சம் எல்லாம் இறைவனின் முழு அருளாலே மாத்திரம் கிடைக்கிறது, நாம் ஒன்றைச் செய்வதால் அல்ல. இந்த சரணாகதி நிலையைப் புரிய வைப்பதற்கு இந்த மறுமொழி போதாது.”
கிடைக்கட்டும். நாம் அதைப்பற்றியா பேசுகிறோம். நீங்கள் எவ்வளவுதான் நல்லவராயிருப்பினும், திருமாலைத் தொழாமல் பர தெய்வங்களை (சிவனும் அடக்கம்) தொழுதால், you are out, according to Azvaars and also, today Srivaishnavas.
ஓகஸ்ட் 30, 2010 at 1:28 பிப
”வேதம் என்றால் என்ன என்பதைச் சரியாகப் புரிந்துக் கொள்ளாமல் ஏதேதோ உளறுகிறீர்கள். வேதமானது யாராலும் (கடவுளாலும் கூட) ஒரு காலத்தில் எழுதப்படவில்லை. என்றுமே சாச்வதமாக உள்ளது. “வேதத்துக்கு முன்பு, வேதத்துக்குப் பின்பு” என்று கூறுவதற்கெல்லாம் இடமில்லை.”
ரிக்கு, யஜீர், சாம, அதர்வண வேதங்கள் நான்மறை என்றாவது உண்டா இல்லையா?
அவைகள் எப்போது யாரால் உருவாக்கப்பட்டன?
அதை உருவாக்கிய்வர்களுக்கு இங்கே கொட்டாம்பட்டியில் ஒரு கூட்டம் அய்யனாரைக்கும்பிடுகிறது என்றி தெரியுமா?
தெரியாது.
அவ்வேதங்கள் எல்லா வழிபாட்டையும் ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள்ளட்டுமே?
இங்கே உள்ளவர்களுக்கு அவ்வேதங்கள் சொல்வதற்கு என்ன கனெக்சன்.
எடுத்துக்காட்டாக, நான் ஒரு கடவுளைக்கும்பிடுகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். அது நானோ எனக்கு வேண்டியவர்களோ சொல்லிக்கொடுத்து நம்பி வணங்குகிறோம். That is to say, I worship the God (as told and explained to me, by way of an elaborate theolgoy etc) இப்படியிருக்கையில்,
எங்கோயிருந்து அல்லது உலகின் கடைக்கோடியில் இருந்து ஒருவன் வருகிறான். சொல்கிறான்: ‘அட உங்கள் சமயம் என் சமயம்தான்” என்கிறான்.
உடனே நான்: ‘அது எப்படி?’
அவன்” ‘எங்கள் சமயத்தலைவர்கள் எவரும் எதையும் எப்படியும் வணங்கினாலும், அது ஒரே கடவுள், அதாவது நாம் வணங்கும் கடவுளைத்தான் குறிக்கும். எனவே அவர்களை நம்மவர்களாக ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்கிறான்
அது அவனுக்குச் சரி. எனக்கு?
இதே இதே.
உங்களுக்கு இந்த புலமாடன் சரி. ஏற்றுக்கொள்கிறீர்கள்.
அவர்கள் உடனே உங்கள் தியாலஜியை ஏற்றுக்கொள்ளவேண்டுமா?
ஓகஸ்ட் 30, 2010 at 1:40 பிப
ஆழ்வார்களின் சித்தாந்தத்தை ஏற்று வழிவந்த சமயம் சிர்வைணவம் ஆகும்.
அவர்கள் உங்கள் சிவன், பார்வதி, முருகன், மாரியம்மன், பிள்ளையார்களை ஏற்றுக்கொள்வதைல்லை. அப்படியே புராணங்களினால் அவற்றைத் தெய்வங்களாகக்கொண்டாலும் (வணங்க அல்ல சாமி, குறிச்சுக்கோங்க!) அவை திருமாலே படைத்தாரென்றும், திருமால் இட்டக்கட்டளைகள நிறைவேற்றுவதே அவைகளின் பணியென்றும், திருமால அவைகள் கட்டங்களின் சிக்கினால் காப்பாற்றுவாரென்றும் நம்புவது இம்மதம்.
இதிகாசங்களையும் 5, 6வது வேதங்கள எனச்சொல்லும்.
வேதங்கள் திருமாலின் பரத்துவத்தைப்பற்றி உலகோற்குசொல்லவே எழுந்தன என்றுதான் அவற்றை ஏற்கிறார்கள்.
எல்லாமே இந்து மதம் என்று சொல்லிக்கொண்டு இங்கே வந்தீர்களானால், ‘இந்து மதத்தை விட்டே வெளியேறுவோம்’ என்றும் இவர்கள் சொல்லுவார்கள்.
இன்னும் எவ்வள்வோ இருக்கு சார்.
ஓகஸ்ட் 30, 2010 at 2:09 பிப
திரு ஜோ,
// திருமாலே ஒரே பரம்பொருள் என்றால், மற்ற தெய்வங்கள் பொய் என்றுதான் பொருள். //
உங்கள் அறிவுக்கு எட்டியது இவ்வளவு தான். வைணவத்தின்படி 33கோடி தேவர்களும், பிரமனும், சிவனும் திருமாலால் படைக்கப்பட்டு நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் யாரும் “பொய்யானவர்கள்” அல்லர்.
// ஆழ்வார்கள் பிறமதங்களைத் திட்டவில்லையென்று எவர் சொன்னார்? //
எவர் சொன்னார்? நானும் சொல்லவில்லை. மெய்யான மதம் ஒன்றே, மற்றவையெல்லாம் பாஹ்ய (புறம்பான)/குத்ருஷ்டி (முரண்பாடான) மதங்கள் என்றே அவர்கள் கூறியுள்ளனர்.
// நீங்கள் எவ்வளவுதான் நல்லவராயிருப்பினும், திருமாலைத் தொழாமல் பர தெய்வங்களை (சிவனும் அடக்கம்) தொழுதால், you are out, according to Azvaars and also, today Srivaishnavas.//
Show me one place where any Azhvar or Acharya says that “no matter how good you are, if you don’t worship Vishnu, you cannot be liberated.” அயோத்தியில் உள்ள புல், பூண்டு, ஆடு, மாடு, கோழி, பாமரர்கள் இவர்களை எல்லாம் இராமன் மோட்சத்திற்கு அழைத்துச் செல்கிறான். இவர்கள் அனைவரும் என்ன ஸ்ரீ்வைஷ்ணவர்களாகவா இருந்தார்கள், அல்லது இராமாயணத்தை ஸ்ரீ்வைஷ்ணவர்கள் ஏற்கவில்லை என்று சொல்கிறீர்களா?
வேதத்தில் எங்குமே “எதை எப்படி வழிபட்டாலும் அது வேதமதம் தான்” என்றெல்லாம் இல்லை.
மற்றபடி இதற்குப்பின் எழுதியுள்ளவைகளில் ஏதேதோ பிதற்றியுள்ளீர்கள். ஸ்ரீ்வைஷ்ணவத்தின்படி தேவதாந்தர வழிபாடு முமுட்சுக்களுக்கு (மோட்சத்தை விரும்புமவர்களுக்குக்) கூடாது தான். சில சம்சாரிகளுக்கு மோட்சத்தில் ஆசை இல்லாமை இயற்கையே. ஏனெனில், இகலோக பலன்களின்மேல் உள்ள கொஞ்ச-நஞ்ச ஆசையையும் அறுப்பதற்காகக் கண்ணன் “மோட்சத்திற்குச் செல்பவனுடைய செல்வத்தையெல்லாம் அபகரிப்பேன்” என்று கூறியுள்ளான். மோட்சத்தில் ஆசை இல்லாமல் இகலோக பலன்களின் மேல் ஆசை வைப்பவர்களுக்கு சிவன், பிரம்மா, பிள்ளையார், முருகன் முதலிய தெய்வங்கள் உண்டு. ஆனால் அவை எல்லாம் பரதெய்வம் அல்ல.
ஆழ்வார்கள் மற்ற மதங்களைக் கண்டித்தது உயர்ந்த ஸ்ரீ்வைஷ்ணவ வழியைக் காட்டவே. அதற்காவ அவர்கள் “சிவனே இல்லை, பிரம்மா இல்லை. இவை எல்லாம் பொய்யான தெய்வங்கள்” என்று கூறவில்லை. ஸ்ரீ்வைஷ்ணவத்தின்படி சிவபெருமான் உண்மையானவர், பரம வைணவர் (மேற்கோள்: பாகவத புராணம்). அத்ற்காக வேதத்திற்கு அவப்பொருள் கூறுவதாகிய (ஸ்ரீ்வைஷ்ணவர்களால் கருதப்படும் ) சைவமதம் உண்மையாகாது.
ஒருவர் திருமாலையே பரதெய்வமாகக் கருதலாம், அப்படிக் கருதியும் இகலோக பலன்களுக்காக சிவனை அவர் வழிபடலாம். சிவனை வழிபடுகிறார் என்பதற்காக மாத்திரம் ஒருவர் சைவ சித்தாந்தி ஆகிவிட மாட்டார்.
ஓகஸ்ட் 30, 2010 at 2:11 பிப
மேலும்,
// இதிகாசங்களையும் 5, 6வது வேதங்கள எனச்சொல்லும். //
இது ஸ்ரீ்வைஷ்ணவர்களுக்கு மாத்திரம் அல்ல. பல உபநிடதங்களில் (இவையும் வேதப் பகுதிகள் தான்) “இதிகாச புராணங்கள் ஐந்தாம் வேதம்” என்று வருகிறது.
ஓகஸ்ட் 30, 2010 at 5:01 பிப
Gandharvan!
You may stick to only the nomenclature, Srivaishnavism. Because it is that which I am referring to, not Vaishnavism.
The Vaishnavism you are referring to say all that you say. Not Srivaishnavism. It accepts one and only God who is Thirumaal for them. Please quote from Azvaars only or from the Srivaishanvite acharyaars to indicate your points.
Srivaishnavites are forbidden to worship Sivan, his wife and children.
Instead of arguing with me, you may carry your point to any Srivaishnavites, or a teacher of Srivaishnavism in Madras Vaishnava Dept; and if he says to you that a Srivaishnavite can worship any God, then, I make profuse apologies to you using RV forum.
Azvaars bemoan worship of any God, even if it is Sivan. Since Srivaishnavism also bases itself upon the dharmashastras or Vedas, they include all gods and goddesses their respecive places in Hindu pantheon; but NEVER AS EQUAL TO THIRUMAL. According to Azvaars, Sivan and Brahma were created by Mahavishnu. If you need a pasuram, I will quote here.
I am referring to Srivaishanvism, not the variety Mahatma Gandhi or any the common Hindu like you follow. All of you worship Vishnu, go on pilgrimage to Divya Deshams and pray. You, as a common Hindu, go with religious fervor and devotion to Kalahasti, and with equal fervor and devotion to Tirupathi, a 30 miles away. But a Srivaishanvite does not go to Kalahasti. Because his religion forbids him to go.
Bottomline is: Vaishnavism and Srivaishnavism has own differences. The former is all India based. The latter is TN based. Its roots are firmly in Tamil soil. All azvaars and achaaryaas were Tamilian. They were all born here, not even in neighboring AP or Karnataka,except Kulasekara azvaar who was a Malayalee.
You cant be a Srivaishnavite, unless and until you discard the worship of all other Gods and Goddesses and worship only Thirumaal. But you can be a VAISHANVITE and worship, without any hindrance, any gods and goddesses.
ஓகஸ்ட் 30, 2010 at 5:09 பிப
//ஆழ்வார்கள் மற்ற மதங்களைக் கண்டித்தது உயர்ந்த ஸ்ரீ்வைஷ்ணவ வழியைக் காட்டவே//
LOL.
Then, why do you decry if evangelists or muslims condemn other religions?
They may be using bitterer, bitterest, or obsence words against the religion. Azvaars dont.
Difference in degree, not in kind.
What is your answer to my point that Thondarippodiyaazvaar wanted to cut off the heads of Buddhists, Jains, and Atheists?
Ditto with Muslims who want to behead kafirs.
You want the paasuram from Thirumaalai.
ஓகஸ்ட் 30, 2010 at 5:20 பிப
திருமாலே ஒரே பரம்பொருள் என்றால், மற்ற தெய்வங்கள் பொய் என்றுதான் பொருள். //
உங்கள் அறிவுக்கு எட்டியது இவ்வளவு தான். வைணவத்தின்படி 33கோடி தேவர்களும், பிரமனும், சிவனும் திருமாலால் படைக்கப்பட்டு நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் யாரும் “பொய்யானவர்கள்” அல்லர்
Mr Gandharvan!
You may like to say that. But it does not follow from my quote.
Excuse me for the following example.
You are standing before me. Right in front of your nose, glaring at you, I declare:
I AM THE ONE AND ONLY WISE MAN.
It implies that you are a fool. It is my intention, although out of civil conduct, I dont say openly that.
Similarly, if azvaars declare that only Thiurmal is the God, it means all other Gods and goddesses are false.
Exactly like fanatical muslims and chritian evangelists declare. They wont say: Your god is false, for fear of losing their lives. Rather, they say, Only Jesus is the real God, or only Allah is the real God.
If my understanding is skewed, I wonder what others except you, or people like you, think on the statement of Azvaars.
ஓகஸ்ட் 30, 2010 at 5:26 பிப
//// ஆழ்வார்கள் பிறமதங்களைத் திட்டவில்லையென்று எவர் சொன்னார்? //
எவர் சொன்னார்? நானும் சொல்லவில்லை. மெய்யான மதம் ஒன்றே, மற்றவையெல்லாம் பாஹ்ய (புறம்பான)/குத்ருஷ்டி (முரண்பாடான) மதங்கள் என்றே அவர்கள் கூறியுள்ளனர்
No Sir No.
They were not soft as you said. They were harsh too. As in the case of Thonardippodi and Thirumazhiyisai alvaars.
You want paasurams?
செப்ரெம்பர் 1, 2010 at 8:00 பிப
Dear Jo,
Can you please give those Paasurams?
மேலும் திருஞானசம்பந்தரும் சமணர்களை கொல்லவும், சமண பெண்களை கற்பழிக்க சொல்லியும் உள்ளதாக கேள்வி பட்டேன். கந்தர்வன்,
அறியாமல்தான் கேற்க்கிறேன், அது உண்மைதானா?
Ashok
ஓகஸ்ட் 30, 2010 at 5:42 பிப
//Show me one place where any Azhvar or Acharya says that “no matter how good you are, if you don’t worship Vishnu, you cannot be liberated.” அயோத்தியில் உள்ள புல், பூண்டு, ஆடு, மாடு, கோழி, பாமரர்கள் இவர்களை எல்லாம் இராமன் மோட்சத்திற்கு அழைத்துச் செல்கிறான். இவர்கள் அனைவரும் என்ன ஸ்ரீ்வைஷ்ணவர்களாகவா இருந்தார்கள், அல்லது இராமாயணத்தை ஸ்ரீ்வைஷ்ணவர்கள் ஏற்கவில்லை என்று சொல்கிறீர்களா?//
From my rejoinders to you, an impression will be mistakenly created that a Srivaishanvite is a harsh person. They have five criteria and if a person abide by all of them, like 5 duties to muslims, scrupulously in his life, he is a Srivaishnava.
A Srivaishnava can be anyone if he fulfils the five criteria and worship only Thirumaal. There is another view: worship of Thirumaal will automatically make you absrob these five criteria. That is, you will be a good human. So, worship of Thirumall is compulsory. Like for a Christian, except Unitarian, acceptance of Jesus as a son of God is compulsory.
worship of Thirumaal without these criteria wont make you a Srivaishnava. In other words, such worship is a show.
Liberation and moksha are not to be discussed. The azvaars themselves lived by the example of worshipping Thirumal without any expectation. One even rejects the benefit of sowargam for the sake of just worshipping Thirumal on earth.
pachaimaamalai bol meni pavalavaai kamalchengan
achuthaa, amarar ere, ennum ichchuvai thavira
yaan poi indralogam aazum assuvai perinum
vendaam arangamaanakarilunaanee
So, I beg you not to misunderstand.
Worship of Thirumal is necessary therefore for it exceeds everything: assuvai perinum veendam…You will be a good person if you worship Thirumal, but only Thirumal, rejecting all God.
In other words, monotheism, with slight difference. The Thirumall is to be worshippied along with his Consort Sri as she will help you take your representations to Him.
Otherwise, this monotheism is akin to Islam.
ஓகஸ்ட் 31, 2010 at 12:25 முப
Jo, I do not understand what you are saying. You do not seem to be focused in my responses to you.
In all Vaishnavism, Thirumaal is the only Paramaatma, and Brahma, Sivan, Murugan, Parvati etc. are all jivatma subject to karma.
I never said that a Srivaishnavite can worship anybody. If he does so, he ceases to be a Srivaishnavite. However, someone can firmly believe that Narayana is supreme and all the other gods are subservient, and still worship other devas owing to his/her attachment to worldly objects.
I have told many times in my own responses that Brahma, Sivan etc. are created by Narayana during the beginning of the kalpa. You seem to think that somehow I do not accept this. “Naanmuganai Naaraayanan padaiththaan, naanmuganum thaanmugamaaych chankaranaip padaiththaan”. Not only aazhvaar, all the Vedas say this: “Narayanat Brahma Jayate, Narayanat Rudro Jayate”, “Eko ha vai narayana aaseet. Na brahma na isanah”, “prajapatih eva pushkarena sambhavet”, etc. and many other itihasa/purana statements that confirm these.
I am not a “common hindu” as you term me, since I believe firmly that Narayana alone is supreme.
According to Srivaishnavites (and me), Srivaishnavism is THE original religion of the Vedas. If you read sangam age Tamil literature, they too accepted that Narayana is supreme (paripadal) and nowhere other devas are sung as supreme. Later on, Azhvars sang prabandham because new things started cropping up (Buddhism, Jainism, Pasupata religion, etc.)
// What is your answer to my point that Thondarippodiyaazvaar wanted to cut off the heads of Buddhists, Jains, and Atheists?
Ditto with Muslims who want to behead kafirs.
You want the paasuram from Thirumaalai. //
I know the paasuram from thirumaalai — so, no thanks. The point Tondaradippodi Azhvar was making there is not a threat/instruction to others to chop off the heads of heretics, but the point driven there is that they make so much of bhagavat apacharam that may be chopping their heads is a kind thing to do to them (as they will not be able to commit those sins).
No Srivaishnava in history ever chopped a Buddhist’s, Jain’s or Saiva’s head. Your comparison with Islamists is therefore in bad taste.
Azhvars did not say “false gods”. They only said others are “lesser gods”. Your issue seems to be with the use of the term “God/gods”. If you want to have it this way, God is Thirumaal only, Nithya sooris are archangels, and Brahma, Siva, etc. are other angels who are subject to karma. That is perfectly correct.
// From my rejoinders to you, an impression will be mistakenly created that a Srivaishanvite is a harsh person. //
Good! You seem to have a decent understanding of Srivaishnavism than many Srivaishnavas do (I do not know what exactly you are… from your name I guess you are Catholic).
// Otherwise, this monotheism is akin to Islam. //
Monotheism is monotheism. Why ‘akin to Islam’ in particular?
ஓகஸ்ட் 31, 2010 at 1:34 முப
// Then, why do you decry if evangelists or muslims condemn other religions? //
Because evangelists’ and muslims’ condemnation of other religions is based on lies, false propaganda, name-calling, distortion of others’ scriptures, and other such dishonest means.
ஓகஸ்ட் 31, 2010 at 7:10 முப
கந்தர்வன், சீதைக்கு இரண்டாம் வனவாசம் நேர சீதையே ஆசைப்பட்டாள், மேலும் பாகவத அபசாரம் என்று சொன்னீர்கள். சீதை ரிஷிகளை பார்க்க ஆசைப்பட்டாளா, இல்லை ராமனை பிரிந்து வாழ ஆசைப்பட்டாளா என்று கேட்டதும் சீதையே ஆசைப்பட்டாள் என்பதை விட்டிருகிரீர்கள். நல்லது. பாகவத அபசாரம் என்று வால்மீகி சொன்னாரா இல்லை பெரியவாச்சான் பிள்ளை மட்டுமே எழுதிய விளக்கமா? அப்படி பாகவத அபசாரம் என்று இருந்தால் அதை ராமாயணத்திலேயே ஏன் சொல்லவில்லை? சீதைக்கு நடந்தது நியாயமே என்று நீங்கள் நினைத்தால் நமக்குள் விவாதிக்க ஒன்றுமில்லை.
நீங்கள் ஏற்றுக் கொள்ளும் வைதீக ஹிந்து மதத்தைத் தவிர்த்த மற்ற ஹிந்து மதக் கூறுகள், குறிப்பாக விஷ்ணுவை விட ஒரு கடவுளை உயர்வாக காட்டுபவை எல்லாம் புளுகுகள் என்பதுதான் உங்கள் வாதம் என்றால் அப்புறம் பேச ஒன்றுமில்லை. அப்புறம் உங்கள் அணுகுமுறையைக் கையாளும் ஆபிரகாமிய மதத்து பிரசாரகரிடம் நீங்கள் என்ன குறை காண்கிறீர்கள்? அவர்களுக்கும் இதே ஆங்கிள்தான் – ஏசுவைத் தவிர்த்த மற்ற கடவுள்கள், மதங்கள் எல்லாம் புளுகுகள்.
வாலி வதமே புளுகு என்று சொல்லாமல் விட்டதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். வாலிக்கு தண்டனை கொடுக்க வேண்டுமென்றால் அதை மறைந்திருந்துதான் கொடுக்க வேண்டும் என்று ஏதாவது ரூலா? அந்த தண்டனையை நேருக்கு நேராக நின்றும் கொடுத்திருக்கலாம், கொடுத்திருக்க வேண்டும்.
// சங்ககாலத் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்தால் (பரிபாடல், புரனானூறு, திருக்குரள், முதலியவை) சனாதன தருமம் தமிழ் நாட்டில் மேலோங்கி இருந்தது தெளியும். சங்கநூலில் எங்குமே பௌத்தம், ஜைனம் முதலிய மதங்கள் காணப்படவில்லை. / நான் தமிழ் அறிஞன் இல்லை. ஆனால் சிலப்பதிகாரத்தில் நாட்டார் தெய்வங்கள், வைணவம், பவுத்தம் எல்லாம் இருக்கிறது என்று தெரியும்.
// இந்த ருத்ரகணங்களுள் சில சுடலைமாடன் முதலிய கிராமீய தெய்வங்களாகக் காலப்போக்கில் மாறியிருக்கலாம் // மாடன்தான் முதலில் வந்ததாகவும், அவனை கிளாசிகல் ஹிந்து மதத்தில் இணைக்க ருத்ர கணங்களில் ஒருவன் என்று ஒட்டிவிட்டதாகவும் அம்பேத்கார், கோசாம்பி உட்பட்ட பல அறிஞர்கள் கருதுகின்றனர். ருத்ர கணம் மாடனாக மாறியதாக யாரும் சொல்லி கேட்டதில்லை.
ஜோ, தமிழில் எழுத முயற்சி செய்யுங்களேன்!
ஓகஸ்ட் 31, 2010 at 3:32 முப
RV
நீங்க டோண்டு வின் சிஷ்யன் ஆகிட்டீங்க போல. டோண்டு வின் வலைப்பூவில் தான் பின்னூட்டங்கள் இப்படி பின்னி எடுக்கும்.
அது இருக்கட்டும். பாலகுமாரனின் வணிக எழுத்து பற்றி ஜெமோ எழுதியதுக்கு எதிர்வினை என் வலைப்பூவில். நேரமிருந்தா பாருங்க.
ஓகஸ்ட் 31, 2010 at 10:01 முப
நாராயண இந்த கத்தோலிக்கக் கொசுத் தொல்லை தாங்க முடியலடா.
ஜோ,
மலம்.உனக்கு ஒழுங்கான உண்மையான வைணவன் வைக்கிறான்யா ஆப்பு. வாங்கிக்க. எல்லாமே ஒனக்குத் தான்.
ஐயா, கந்தர்வன்,
நீங்க யாரா இருந்தாலும் எங்கன இருந்தாலு சீரும் சிறப்புமா வாழனும்யா. நல்லா வைங்கய்யா பயிண்டுக்குப் பாயிண்டு நச்சு நச்சுன்னு வைங்கய்யா.
இந்த கத்தோலிக்கப் பாதிரிப் பய. 5 ரூ புத்தகத்தை வாசிச்சுட்டு கன்னா பின்னான்னு கண்ட இடத்துல வைணவத்தைப் பத்து எழுதிவைக்கிறான். ரொம்ப டேஞ்சரான ஆளு அவன்.
உள்நோக்கத்தோட தான் எல்லா உரயாடல்லையும் கலந்துக்குவான்.
ஓகஸ்ட் 31, 2010 at 9:07 பிப
// ஜோ,
மலம். //அனானிமஸ், இங்கே வந்து கீழ்த்தரமான பாணியில் அடுத்தவரை பேசுவதை விட்டுவிடுங்கள். இல்லாவிட்டால் வராதீர்கள். அப்புறம் அது என்ன எழவு அனானிமஸ், பேர் சொல்லக் கூட தைரியம் கிடையாதா?
ஓகஸ்ட் 31, 2010 at 12:45 பிப
திரு ஆர். வீ. அவர்களே,
// நான் தமிழ் அறிஞன் இல்லை. ஆனால் சிலப்பதிகாரத்தில் நாட்டார் தெய்வங்கள், வைணவம், பவுத்தம் எல்லாம் இருக்கிறது என்று தெரியும். //
சிலப்பதிகாரம் சங்ககாலத்திற்குப் பிற்பட்டது. கிராமீய தெய்வம் இருப்பதாகப் பாடப்பட்டிருந்தாலும், “மாமுது மறையோன்” என்று மதுரைக் காண்டத்தில் உள்ள வரிகளில் “வேதம் ஓதும் அந்தணன் ஒருவன் ஸ்ரீ்ரங்கத்தையும் திருப்பதியையும் தரிசனம் செய்ய வந்திருக்கிறான்” என்று வருகிறது. அக்கால வைதிகர்கள் “திருமாலே பரமன், அவனையே ஏகாந்தமாக வழிபடுவது” என்று இருந்தமைக்கு இது சான்று.
பல தெய்வங்கள் உண்டு என்பதைச் சங்கப் புலவர்களும் ஆதரித்துள்ளனர். ஆனால், அந்த பல தெய்வங்களுள் யார் பரம்பொருள், யார் அனைவரைவிடவும் உயர்ந்தவர் என்பதை மதாபிமானம், அரசியல்வாத பற்று இவையெல்லாம் இல்லாமல் ஆராய்ந்தோமானால், பின்வருபவை விளங்கும்:
(1) சங்க இலக்கியங்களில் திருமாலுடன் முருகன் சிவன் பிரமன் இந்திரன் முதலான தெய்வங்கள் பாடப்பட்டுள்ளனர் என்று இருந்தாலும், உபநிடதங்களின் படி பரம்பொருளுக்கு இலக்கணமாகிய
அ. ஜகத்காரணமாக இருத்தல்,
ஆ. கர்மவசப்படாமல் இருத்தல்,
இ. எங்கும் வியாபித்து அந்தர்யாமியாய் இருத்தல்,
ஈ. பொய்யாமறையாகிய வேதத்தின் விழுப்பொருளாகச் சொல்லப்பட்டிருத்தல்
உ. மோட்சம் அளிக்கவல்லவனாக இருத்தல்
முதலியவை திருமாலைத் தவிர வேறு தெய்வங்களுக்குப் பேசப்படவில்லை.
(2) பரம்பொருளாகிய திருமாலே ஜகத்துக்கு உபாதான காரணமாகவும் நிமித்த காரணமாகவும் இருக்கிறான் என்னும் விசிஷ்டாத்வைத ஸ்ரீ்வைஷ்ணவ வேதாந்தக் கொள்கையே காணப்படுகிறது. எங்குமே “உலகம் பொய், பரமாத்மாவைத் தவிர வேறு ஆத்மா இல்லை.” என்னும் அத்வைதக் கொள்கையோ, “சிவபெருமானே திருமாலை விட உயர்ந்தவர்” என்னும் சைவக் கொள்கையோ, பௌத்த-சமணக் கொள்கைகளோ இடம்பெறவில்லை.
(3) திருமாலுடைய மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, திரிவிக்ரம, கிருஷ்ண, ஹம்ஸ அவதாரப்பெருமைகள் பல கூறப்பட்டுள்ளன. ‘திருமால் பிறப்புடையவனாக இருப்பதால் திருமால் பரம்பொருளல்ல’ முதலிய சைவசமயக் கொள்கைகள் அறவே காணப்படவில்லை.
(4) சிவபெருமான் திரிபுரம் எரித்த கதை, தட்சனுடைய யாகத்தை அழித்த கதை, ஆலாகல விஷமுண்ட கதை, காமனை எரித்த கதை முதலியவை உண்டு. பரிபாடலில் முருகன் பிறந்த கதையும், தேவர்களுடைய சேனாபதியான கதையும், சூரபத்மன் வீரபாஹு முதலிய அரக்கர்களை அழித்த கதையும் உண்டு. ஆனால், திருமாலுக்குத் தாழ்வைக் கற்பித்துச் சிவபெருமானுக்கு/முருகனுக்கு பரத்துவம் கூறும் நாயன்மார்களுடைய கற்பனைக் கதைகளாகிய
அ. திருமாலும் பிரமனும் அடி முடி தேடிய கதை
ஆ. திருமால் கண்ணைப் பிடுங்கி அர்ச்சனை செய்த கதை
இ. மத்ஸ்ய அவதாரத்தைச் சிவபெருமான் அழித்த கதை
ஈ. கூர்மத்தின் ஓட்டைச் சிவபெருமான் பிரித்த கதை
உ. வராகத்தின் கொம்பை ஒடித்த கதை
ஊ. நரசிம்மரைச் சரபமாக வந்து அழித்த கதை
எ. திரிவிக்ரமன் தோலை உரித்து சட்டையாக அணிந்த ‘சட்டைநாதர்’ கதை
ஏ. இராமன் இராவணனைக் கொன்றதற்காக ‘பிரம்ம ஹத்தி தோஷம் நீங்குவதற்காக’ சிவபெருமானை இராமேசுரத்தில் வழிபட்ட கதை (இந்த கதை இன்றளவும் வால்மீகி ராமாயணப் பதிப்புகளிலோ, ஆதெண்டிக்கான கம்பராமாயணப் பதிப்புகளிலோ இல்லை)
ஐ. பிரமன் ஓங்காரப் பொருளை மறந்ததனால் முருகன் பிரமனைச் சிறையில் அடைத்ததும் சிவபெருமானுக்கே உபதேசம் செய்ததும்
முதலிய மேற்கூறப்பட்ட கதைகளைச் சங்கப் புலவர்கள் மட்டும் அல்ல; எந்தப் பழைய அத்வைத ஆச்சாரியார்களின் பாஷ்ய நூலிலும் இடம்பெறவில்லை. சிவபக்தராகிய காளிதாசனும் எங்குமே இக்கதைகளைக் கூறவில்லை.
(உண்மையில் பழங்கால அத்வைதிகள் ஸ்ரீ்வைஷ்ணவர்களைப் போல ‘விஷ்ணு ஒருவனே பரம்பொருள்; அவனைத் தவிர மற்ற தெய்வங்களிடம் பக்தி பண்ணுவது உகந்ததன்று’ என்னும் கொள்கையுடன் இருந்தனர். இதை வேதாந்த தேசிகர் தாத்பர்ய சந்திரிகையில் கீதை 18.66-க்கு பாஷ்யம் இடும்பொழுது குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆதி சங்கரர் பஸ்மம் அணியத பராம ஏகாந்த விஷ்ணுபக்தர் என்பதுவும், பிற்காலத்தில் வந்த சிலர் விசிஷ்டாத்வைதத்தையும் த்வைதத்தையும் எதிர்க்க சைவ-சாக்தர்களுடன் ஒன்று கூடி ஆதி சங்கரருக்கு விபூதி பூசி விட்டு, சிருங்கேரி முதலிய மடங்களை நிறுவி, அவர் தலை மீது ‘சிவாநந்த லஹரி’, ‘சௌந்தர்ய லஹரி’ போன்ற பல தோத்திர நூல்களைச் சுமத்தியிருப்பதும் நடுநிலை நின்று பாஷ்ய நூல்களை ஆராய்ந்தால் விளங்கும்).
// அம்பேத்கார், கோசாம்பி உட்பட்ட பல அறிஞர்கள் கருதுகின்றனர் //
கூறினால் கூறட்டும். அம்பேத்காருடைய உளரல்களில் ஒன்றாக இருக்கக் கூடும். ஆதாரங்களைப் பார்க்காமல் நான் எந்த ஆராய்ச்சியாளனையும் அரசியல்வாதியையும் நம்புவதில்லை.
நம் நாட்டில் (முக்கியமாகத் தமிழ்நாட்டில்) மதத்துறையில் பல பொய்கள் பரவி வருகின்றன இதற்குச் சான்றுகள்:
(1) காமகோடி பீடம் ஆதி சங்கரர் கி. மு. ஐந்தாம் நூற்றாண்டில் பிறந்தார் என்று கூறுகிறார்கள் என்ன அப்பட்டமான பொய் ஆனால் அதைப் பல மாமா-மாமிக்களும் ரெடியாக ஏற்கிறார்கள்.
(2) வேத-மகாபாரத-விஷ்ணுபுராண-பாகவத முதலிய நூல்களில் மிகவும் தெள்ளத் தெளிவாகக் கூறப்பட்டுள்ள கதைகள்
அ. சிவன் பிரமனிடமிருந்து பிறந்த கதை
ஆ. விஷ்ணுவின் பாதக் கட்டைவிரலில் இருந்து கங்கை தோன்றிய கதை, விஷ்ணு பாத சம்பந்தம் உள்ளதால் பரம பக்தராகிய சிவபெருமான் அதை விரும்பித் தம் தலையில் தரித்தது
முதலியவை தற்போது சிருங்கேரி-காமகோடி பீடங்களால் மறைக்கப்பட்டு வருகின்றன.
(2) உபநிடதங்களையே மாற்றுவது. “ஸ ப்ரம்மா ஸ சிவஸ் ஸேந்த்ர” என்ற நாராயண ஸூக்த பாடத்தை மாற்றி “ஸ ப்ரம்மா ஸ சிவஸ் ஸ ஹரி ஸேந்த்ர” என்று கற்பித்துள்ளது. பழைய நூல்களில் எங்கும் “ஸ ஹரி” என்று இல்லை.
(3) பிராசீனர்கள் யாருமே தொடாத, சிவபெருமானுக்குப் பரத்துவம் கூறி, விஷ்ணுவின் பரத்துவத்தை மறைக்கும் புதிய கற்பனைகளை “சரபோபநிஷத்”, “பஸ்ம ஜாபால உபநிஷத்”, “காலாக்னி ருத்ர உபநிஷத்” என்று பாமரர்கள் நம்புமாறு அச்சிடுகின்றனர். பண்டைய சைவர் “ஹரதத்தர்” என்று ஒருவர் இருந்தார். இவர் “ச்ருதி சூக்தி மாலை” என்னும் சமஸ்கிருத நூலில் ஆதெண்டிக் உபநிடதங்களை வைத்து மிகவும் சிரமப்பட்டு சிவ பரத்துவத்தை நிரூபிக்க முயன்றிருக்கிறார். இந்த “பஸ்ம ஜாபால உபநிடதம்”, “சரபோபநிடதம்” அந்நாளில் இருந்திருந்தால் அவர் இதிலிருந்து ஒரு வாக்கியத்தையாவது எடுத்திருக்க வேண்டும். அப்படி இல்லை. இதிலிருந்தே இவை புதுக் கற்பனை என்று விளங்கும்.
இப்படி எல்லாம் இருக்கையில் ஆபிரகாமிய மதங்களின் தாக்கம், பகுத்தறிவுப் பகலவர்கள் தாக்கம் எல்லாம் வேறு. இதைச் சொல்லிக் குற்றம் இல்லை. வீட்டை ஒழுங்காக சுத்தமாக வைக்காமல் இருந்தோமானால் எலி கரப்பு எல்லாம் உள்ளே வரத்தான் வரும்.
இதெல்லாம் புத்தூர் அக்கிரகாரத்தில் இருந்த ஸ்ரீ் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் (சுதர்சனர்) என்பவர் தமது “சாதி மத ஆராய்ச்சி”, “கல்கியைக் குறித்துச் சில கேள்விகள்”, “சங்கரரும் வைணவமும்”, “விஷ்ணுசித்த விஜயம்”, “சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்” முதலிய எளிய நடை தமிழ் நூல்களில் விவரித்துள்ளார். இவர் “சங்கரரும் வைணவும்” நூலில் கூறிய சிலவற்றிற்கான சான்றுகளையும், அதை மேலும் வலுப்படுத்தும் பல சான்றுகளையும் அத்வைத பாஷ்ய நூல்களில் பல நான் கண்டுள்ளேன். என்னுடைய ஆஙில வலைப்பூவில் சில சான்றுகளைக் காணலாம், ஆனால் அந்த வலைப்பூவின் நோக்கம் பக்தி சம்பந்தமான விஷயமே தவிர விவாதம் பற்றி அல்ல.
நீங்கள் மேற்கூறுவதை நம்புகிறீர்களோ இல்லையோ, உங்களிடம் உள்ள ஒரு விஷயம் என்னிடம் பிடித்திருக்கிறது. இதை ஒரு ஓப்பன் போரமாக வைத்து, உங்களுக்குப் பிடிக்காதவையாக இருந்தாலும் அனைவருடைய கருத்துக்களையும் மட்டுறுத்தாமல் பதிப்பதே அது. இதற்குப் பல்லாண்டு பாடுகிறேன்.
ஓகஸ்ட் 31, 2010 at 12:55 பிப
இன்னொன்று, நான் கூறியது அனைத்தும் நான் சொந்தமாக நூற்களிலிருந்து கற்றவை. எனக்கு சைவர்கள் மீதோ, தற்கால அத்வைதிகள் மீதோ, தற்கால “எல்லா தேவதைகளும் பரம்பொருள் தான்” என்று கூறும் தற்கால ‘சமரச’ நவீன வேதாந்த வாதிகள் மீதோ எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. சிலருக்குக் கருத்து வேறுபாடு இருப்பதை முழுதும் respect செய்கிறேன்.
ஆனால், அனைவரும் உள்ளதை உள்ளபடி அறிய வேண்டும் என்பதே என் நோக்கம். நான் கூறியதில் factual accuracy இல்லை என்றாலோ, அல்லது கூறியவைக்கு எதிராக சான்றுகள் இருந்தாலோ அதை முன்வைக்கலாம். நட்புடன் விவாதிக்கலாம்.
ஓகஸ்ட் 31, 2010 at 1:00 பிப
திரு anonymous,
உங்கள் ஈரச் சொற்களுக்கு நன்றி. நம்மவர்களுக்கு நம் சனாதன தருமத்தின் உண்மையான பலமும் பரமபுருடன் மீது உண்மையான அன்பும் இல்லாவிடில், ஜோ, சில்சாம், அசோக் குமார் முதலான வந்தேறி மதத்தைச் சேர்ந்த கூட்டம் கூறும் பொய்களுக்குத் தக்க பதில் கூற முடியாது என்பது என்னுடைய ஆழ்ந்த நம்பிக்கை.
ஓகஸ்ட் 31, 2010 at 9:05 பிப
கந்தர்வன், வாலி வதம், உத்தர காண்டம் ஆகியவற்றை விட்டுவிட்டு அடுத்த டாபிக்கு வந்திருக்கிறீர்கள். சரி பேசுவோம்.
// சிலப்பதிகாரம் சங்ககாலத்திற்குப் பிற்பட்டது. // தமிழ் தெரிந்தவர் போலிருக்கிறது, நீங்கள் சொன்னால் சரிதான்.
சங்க நூல்களில் // “சிவபெருமானே திருமாலை விட உயர்ந்தவர்” என்னும் சைவக் கொள்கையோ // இடம் பெறவில்லை என்று எழுதி இருந்தீர்கள். திருமாலே சிவனை விட உயர்ந்தவர் என்ற வைணவக் கொள்கை இடம் பெற்றிருக்கிறதா? எந்த நூலில்? உங்களை சந்தேகப்பட்டு கேட்கவில்லை, தெரிந்து கொள்ள கேட்கிறேன்.
// ஆதாரங்களைப் பார்க்காமல் நான் எந்த ஆராய்ச்சியாளனையும் அரசியல்வாதியையும் நம்புவதில்லை. // நல்ல, பின்பற்றப்பட வேண்டிய அணுகுமுறை. ஒரு ருத்ர கனத்தை மாடனாக வழிபட ஆரம்பித்தார்கள் என்று எழுதி இருந்தீர்கள். ஆதாரங்களை காட்டினால் நாங்களும் பார்ப்போம்.
// நான் கூறியதில் factual accuracy இல்லை என்றாலோ… // உங்களிடம் factual accuracy என்பதை எப்படி நிறுவுவது? இந்த நாலு புராண, இதிகாச, வேதங்களிலிருந்துதான் பேச வேண்டும், மிச்ச எல்லாம் ஆதாரம் இல்லை என்று சுலபமாக கழன்று கொள்கிறீர்கள். நீங்கள் சொல்லும் புராணங்கள் எல்லாமே விஷ்ணுவின் புகழ் பாடும் புராணமாக இருக்கிறது. 🙂 விஷ்ணுவின் புகழ் பாடும் புராணத்தில் எனக்கு சிவனை ஏற்றிப் பேசும் நாலு வரியைக் காட்டு என்றால் எங்கே போவது? 🙂 சிவனின் புகழ் பாடும் புராணத்திலிருந் உங்களால் விஷ்ணுவை ஏற்றிப் பேசும் நாலு வரியை காண்பிக்க முடியுமா என்ன?
சரி நீங்கள் ஏற்றுக் கொள்ளும் வேதங்கள் – குறிப்பாக் ரிக் வேதம் – விஷ்ணு, சிவன் போன்ற கடவுள்களை பேசினாலும் அவர்களை விட இந்திரன், வருணன் போன்ற பிற்காலத்தில் முக்கியத்துவம் குறைந்து போன கடவுள்களைத்தான் அதிகமாக புகழ் பாடுகின்றன என்று கேள்வி. இது பற்றி ஏதாவது?
செப்ரெம்பர் 1, 2010 at 6:24 முப
ஜெஹோவாவை வீட்டிற்குள் வைத்துக்கொண்டு சிவனும், விஷ்னுவும் மோதிக்கொண்டிருந்தால் குடும்பம் குட்டிச்சுவராகிவிடும்.
ஜெஹோவாவை முதலில் இஸ்ரேலுக்கும், ஜெஹோவாவின் அரபி மொழிபெயர்ப்பை அரேபியாவுக்கும் அனுப்பிவிட்டு நீங்கள் ஹரி பெரியவரா, ஹரன் பெரியவரா என்று விவாதிக்கலாம்.
ஓகஸ்ட் 31, 2010 at 10:31 பிப
//
கந்தர்வன், வாலி வதம், உத்தர காண்டம் ஆகியவற்றை விட்டுவிட்டு அடுத்த டாபிக்கு வந்திருக்கிறீர்கள். சரி பேசுவோம். //
முடிந்ததைச் சொல்லி விட்டேன். இதற்கு மேல் சொல்லுவதற்கு ஏதும் இல்லை.
// திருமாலே சிவனை விட உயர்ந்தவர் என்ற வைணவக் கொள்கை இடம் பெற்றிருக்கிறதா? எந்த நூலில்? உங்களை சந்தேகப்பட்டு கேட்கவில்லை, தெரிந்து கொள்ள கேட்கிறேன். //
“ஐந்தலை உயரிய அணங்குடை அருந்திறல் மைந்துடை ஒருவனும் மடங்கலும் நீ” – பரிபாடல். பரிமேலழகர் உரை = இதன் அர்த்தம் “சிவன் செய்யும் ஸம்ஹாரத் தொழிலையும் நீயே சிவனுக்கு அந்தர்யாமியாய் இருந்து செய்து வருகிறாய்”.
// ஒரு ருத்ர கனத்தை மாடனாக வழிபட ஆரம்பித்தார்கள் என்று எழுதி இருந்தீர்கள்.//
‘கனம்’ அன்று, ‘கணம்’. நான் கூறியது ஊகமே. சுடுகாடு சம்பந்தம் இருப்பதால் ருத்ர கணமாக இருக்கக் கூடும் என்றே.
// உங்களிடம் factual accuracy என்பதை எப்படி நிறுவுவது? //
பழங்காலத்து வைதிகர்கள் (அத்வைதி, த்வைதி, விசிஷ்டாத்வைதி) யாராவது “விஷ்ணுவை விட சிவன் உயர்ந்தவர்” என்றோ, சிவனுக்கு பரத்துவம் கூறும் அடிமுடி தேடிய கதை முதலியவற்றையோ, ஜலந்தரன் கதையையோ, ஆதரித்திருந்தால் காட்டுங்கள். இது fact ஆகும்.
நான் கூறிய நூல்களுக்கு மிகப் பிராசீனமாக பாஷ்யங்கள் இருந்து வருகின்றன. விஷ்ணுபுராணத்திற்கும் பாகவதத்திற்கும் பல பிராசீன அத்வைத ஆச்சாரியார்கள் கூட பாஷ்யம் இட்டுள்ளனர். சிவ புராணத்திற்கெல்லாம் அவர்கள் பாஷ்யம் இடவில்லை, ஆகையால் ஆங்காங்கு இடைச்செருக சிலருக்கு மிகவும் சௌகரியமாக இருந்தது.
// சிவனின் புகழ் பாடும் புராணத்திலிருந் உங்களால் விஷ்ணுவை ஏற்றிப் பேசும் நாலு வரியை காண்பிக்க முடியுமா என்ன? //
கேட்டீர்கள் பாருங்கள் கேள்வி ஒன்றை! நெத்தியடி. மத்வருடைய பிரம்ம சூத்ர பாஷ்யத்தில் “சிவனையும் பிரம்மாவையும் பேச வந்த சிவபுராணங்களிலும் ஆங்காங்கு விஷ்ணு பரத்வம் தெளிவாக உள்ளது” என்று கூறி ஸ்கந்த புராணத்திலிருந்தும் பிரம்ம புராணத்திலிருந்தும் சில புராண வசனங்களை இடுகிறார்:
ஸ்கந்த புராணம் — “அழிவற்றவனே! ஒரு கணமாகிலும் நீ சினந்துக் கொண்டு பிரமனையோ சிவனையோ ஏனையோரையோ கடாக்ஷிக்காமல் உன் பார்வையை அவர்களிடமிருந்து நீக்கினால் அவர்கள் பல அல்லல்களுக்கு ஆட்படுவர்”
பிரம்ம வைவர்த்த புராணம் — “நானோ சிவனோ அச்சுதனுடைய ஆற்றலிலிருந்து ஒரு துணுக்கையும் எங்களுடையதாகக் கருத இயலாது. ஒரு குழந்தை பொம்மைகளுடன் விளையாடுவதைப் போல எங்களை அவன் ஆள்கிறான்”.
இந்த வசனங்கள் தற்போதுள்ள ஸ்கந்த புராணத்தில் இல்லை. இதிலிருந்தே ஸ்கந்த, சிவ புராணங்களில் பலர் இடைச்செருகியும் நீக்கியும் இருக்கின்றனர் என்று விளங்குகிறதே?
// குறிப்பாக் ரிக் வேதம் – விஷ்ணு, சிவன் போன்ற கடவுள்களை பேசினாலும் அவர்களை விட இந்திரன், வருணன் போன்ற பிற்காலத்தில் முக்கியத்துவம் குறைந்து போன கடவுள்களைத்தான் அதிகமாக புகழ் பாடுகின்றன என்று கேள்வி. இது பற்றி ஏதாவது? //
ரிக்வேதத்தில் தெள்ளத் தெளிவாக விஷ்ணு பரத்வம் உள்ளது. மேலும், இந்திரன், வருணன் முதலியவை எல்லாம் பெயர்களே. அந்த பெயர்களும் ஆகுபெயர்களாக விஷ்ணுவுக்குப் பொருந்தும். நான் கூறுவதற்கு எதிராக, “நாராயணன், விஷ்ணு, வாசுதேவன் முதலிய பெயர்கள் ஆகுபெயர்களாகி விடாதா?” என்று நீங்கள் கேட்கக் கூடும். இதற்குப் பாணிணி இலக்கணம் தடை விதிக்கிறது. “நாராயண” என்ற பெயரை ஆகுபெயராக எடுக்கவே முடியாது. இம்மாதிரிச் சொற்களுக்கு “ஸம்ஞை” என்று சமஸ்கிருதத்தில் பெயர். “நாராயணனிடமிருந்து பிரமன் பிறக்கிறான், நாராயணனிடமிருந்து சிவன் பிறக்கிறான், நாராயணனிடமிருந்து இந்திரன் பிறக்கிறான். இவர்கள் அனைவரும் நாராயணனிடமிருந்து பிறக்கின்றனர், நாராயணனிடத்தே போஷிக்கப்படுகின்றனர், நாராயணனிடத்தே லயிக்கின்றனர்” — இது ரிக்வேதம், இங்கு நாராயண பரத்வம் தெளிவாக உள்ளது. இங்கு நாராயண பதம் உள்ளதால், அதை ஆகுபெயராக எடுக்க முடியாது. இது வைதிகர் அனைவரும் இசைந்தது.
இன்னும் பல இடங்களில் ரிக்வேதத்தில் விஷ்ணு பரத்வம் உள்ளது — விஷ்ணு ஸூக்தம், புருஷ ஸூக்தம், விச்வகர்மா ஸூக்தம் முதலான இடங்களில்.
செப்ரெம்பர் 1, 2010 at 10:10 பிப
கந்தர்வன், உங்கள் பதில்களைப் பார்க்கும்போதெல்லாம் கொஞ்சம் புன்னகை வருகிறது. 🙂 அடித்து பேசும் கலை உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது.
உங்கள் வாத முறையை இப்படி சொல்லலாம். உங்களுக்கு எதிர்வாதாடுபவர் (ஹிந்து மதத்தின்) எந்த நூல்களை ஆதாரமாக பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள்தான் நிர்ணயிப்பீர்கள். உங்கள் வைஷ்ணவ மனநிலைக்கு எதிராக – விஷ்ணுவை “தாழ்த்தி”, மற்ற தெய்வங்களை “உயர்த்திப்” பேசும் ஹிந்து மதக் கூறுகள் புளுகுகள், இடைச்செருகல்கள். நீங்கள் சொல்லும் நூல்களிலேயே – வேதங்களில் – வருணனும் இந்திரனும் விஷ்ணுவை விட அதிகமாக கொண்டாடப்படுகிரார்களாமே என்று கேட்டால் வருணனும் இந்திரனும் விஷ்ணுவின் ஒரு அம்சம்தான் என்கிறீர்கள். வாலி வாதத்தை வாலியே ஒத்துக்கொண்டான் என்று வால்மீகியே எழுதி இருக்கிறார் என்பீர்கள், சீதை காட்டுக்கு போக ஆசைப்பட்டதாலும், லக்ஷ்மணனை ஏசியதாலும் வனவாசம் நேர்ந்தது என்று வால்மீகி சொல்லவில்லையே என்றால் பெரியவாச்சான் பிள்ளை சொல்கிறார் என்பீர்கள். (எல்லாம் தெரிந்த பரம்பொருள் லக்ஷ்மணனை ஏன் ஏசி பாகவத அபசாரத்துக்கு உட்பட வேண்டும் என்பது வேறு ஒரு கதை)
தமிழும் ஹிந்து பாரம்பரியமும் நன்றாக அறிந்தவர் என்று தெரிகிறது. உங்கள் வாதங்கள் படிக்க ஜாலியாக இருந்தாலும் உங்கள் வாத முறையை நான் ஏற்றுக் கொள்வதற்கில்லை. ஹிந்து மதம் பன்முகத்தன்மை கொண்டது; எந்த தெய்வத்தை வணங்குகிறோம் என்பது ஒரு விஷயமே இல்லை; எந்த மதத்தின் legends-களில் நீங்கள் தோண்டினாலும் முரண்பாடுகள் உங்களுக்கு கிடைக்கத்தான் கிடைக்கும் என்றே நான் உறுதியாக கருதுகிறேன்.
செப்ரெம்பர் 2, 2010 at 4:26 முப
ஆர் வீ சார்,
நீங்கள் கேட்டதேர்கேல்லாம் ஆதாரம் கூறினேன். அதற்கு நீங்கள் எந்த பதிலும் தரவில்லையே? சங்கரர், சுரேஸ்வரர், முதலிய பண்டைய அத்வைதிகளும் வேதாந்தத்தில் அத்வைதியாக இருந்தாலும் கடவுட் கொள்கையில் வைணவராகவே இருந்தார் என்றும், அதற்குப் பின் வந்தவர்கள் இதை மாற்ற முயற்சித்துக் காஞ்சி மேடம் முதலியவற்றைச் செய்துள்ளனர் என்று கூறினேன். அதற்கும் பதிலைக் காணோம். மாறாக, ரயில்வே ஸ்டாண்டு பிட் நோட்டீசில் வருவதை எல்லாம் authentic என்று நம்பச் சொல்லுகிறீர்கள். புராணங்களில் பல இடைச்செருகல் உள்ளன, ஓரிரு எழுத்து அச்சில் வித்தியாசம் தவிர இடைச்செருகலே இல்லாத புராணம் விஷ்ணு புராணம், பாகவத புராணம், என்று பல ஆராய்ச்சியாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதற்கும் நீங்கள் மறுப்புத் தெரிவிக்கிறீர்கள்.
// நீங்கள் சொல்லும் நூல்களிலேயே – வேதங்களில் – வருணனும் இந்திரனும் விஷ்ணுவை விட அதிகமாக கொண்டாடப்படுகிரார்களாமே என்று கேட்டால் வருணனும் இந்திரனும் விஷ்ணுவின் ஒரு அம்சம்தான் என்கிறீர்கள்.//
இதை நான் சொல்லவில்லை, சங்கரர் பிரம்ம சூத்திர பாஷ்யத்தில் சொல்கிறார். மதுசூதனர் என்னும் அத்வைதி கீதா பாஷ்யத்தில் சொல்கிறார். தயவு செய்து சங்கரருடைய கீதா பாஷ்யத்தைப் படித்துப் பாருங்கள். Internet-இல் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். அந்நாளைய வைதிகர்களின் கடவுட்கொள்கை என்னவென்பதைத் தெளிவாகப் படம்பிடித்திருக்கிறார். வேண்டுமென்றால் அத்தியாயம் எண், சுலோகம் எண் தரத் தயார். சங்கரர் பிரம்மசூத்திர-உபநிஷத் பாஷ்ய நூல்களில் நாராயணனைத் தவிர வேறு யாரையும் பரம்பொருளாகக் கூறவில்லை. பரம்பொருள் இரண்டு தெய்வங்கள் அல்ல என்றும் தெளிவாக கீதா பாஷ்யத்தில் கூறியுள்ளார்.
// எல்லாம் தெரிந்த பரம்பொருள் லக்ஷ்மணனை ஏன் ஏசி பாகவத அபசாரத்துக்கு உட்பட வேண்டும் என்பது வேறு ஒரு கதை //
லக்ஷ்மி பரம்பொருள் அல்ல, பரம்பொருளிடம் நித்யம் வசிப்பவள். அவளும் ஒரு ஜீவாத்மா தான். ஆனால் கர்ம பந்தம் இல்லை.
// எந்த தெய்வத்தை வணங்குகிறோம் என்பது ஒரு விஷயமே இல்லை //
அண்மைக் காலம் வரை (சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்) இப்படி சங்கரரோ எந்த சமயப் பெரியவரும் கூறியதில்லை.
செப்ரெம்பர் 2, 2010 at 6:26 பிப
கந்தர்வன், // நீங்கள் எந்த பதிலும் தரவில்லையே // உங்கள் வாத முறை தரும் சலிப்புதான். சங்கரர் விஷ்ணுவையே முழு முதல் கடவுளாக ஏற்றார் என்று சொல்வதற்கு எனக்கு தெரிந்த அளவில் எந்த ஆதாரமும் இல்லை. விஷ்ணுவை உயர்வாக பேசும் எந்த புராணத்திலும் எந்த விதமான திரிபு, இடைச்செருகல் இல்லை, ஆனால் விஷ்ணுவை தாழ்வாக பேசினால் அது புளுகு, இடைச்செருகல் என்று பேசுபவரிடம் விவாதிப்பதில் உள்ள அர்த்தமற்ற தன்மைதான்.
// லக்ஷ்மி பரம்பொருள் அல்ல, // ராமனாவது பரம்பொருளா இல்லை அவனும் இல்லையா?
செப்ரெம்பர் 1, 2010 at 7:05 முப
திரு anonymous அவர்களே,
// ஜெஹோவாவை வீட்டிற்குள் வைத்துக்கொண்டு சிவனும், விஷ்னுவும் மோதிக்கொண்டிருந்தால் குடும்பம் குட்டிச்சுவராகிவிடும். //
நீங்கள் சொல்வதில் நியாயமிருக்கிறது. சைவத்தையும் வைணவத்தையும் ஒன்றோடு ஒன்று குழப்பிக் கொள்ளாமல் அவரவர் மதத்தை அவரவர் பின்பற்றினால் நன்று. அது தான் சனாதன தருமத்திற்கு பலம், அப்போது தான் பொய்ப்பிரச்சார மதமாற்றிகளை விரட்டி அடிக்க முடியும். அதை விட்டு, “ஹிந்து மதம்” என்று புதிதாக ஒன்றைச் சமைத்திருப்பது நமக்குப் பெரும் கேட்டினை விளைவிக்கிறது. சைவர்கள் கூறும் கதைகளில் விஷ்ணுவுக்குத் தாழ்ச்சியைக் கூறுவதையும், வைணவர்கள் கூறும் கதைகளில் சிவனுக்குத் தாழ்ச்சியைக் கூறும் கதைகளையும் “இரண்டுமே உங்களுக்கு ஏற்புடையது தானே? இதிலிருந்தே நீங்கள் கூறும் சிவனும் விஷ்ணுவும் தாழ்ந்தவர்கள் என்று ஆகிவிடுகிறதே? ஒரு நாள் ஒருவர் பெரியவராகிறார், இன்னொரு நாள் அவரே இன்னொருவரிடம் தோற்றுப் போகிறார். இதெல்லாம் கடவுளா?” என்று மிஷனரிக்கள் நம்மிடம் கேட்கிறார்கள். இக்கேள்விக்கு “அரியும் சிவனும் ஒன்று” என்று கூறும் தற்கால “சமரச” வாதிகளால் எந்த பதிலும் கூற முடிவதில்லை, அல்லது புராணக் கதைகளைக் ‘கட்டுக்கதைகள்’ என்று கூறுகிறார்கள். இறைவனின் அருஞ்செயல்களைக் கட்டுக்கதை ஆக்கிவிட்டால் எப்படி ஆன்மிகம் வளரும்?
அது மட்டுமா? நம்மவரில் மூடர் ஒருவர் இடைச்செருக்கிய ஜலந்தரன்-துளசி கதையை நம்பியே ஆகவேண்டும் என்பது போல கூறுகிறார் ஆர்.வீ. ‘துளசியின் தோற்றம்’ பற்றிக் கூறும் இக்கதையைத் துளசியை ஆராதிக்கும் எந்த பண்டைய ஆசிரியரும் கையாளாமல் இருந்ததிலிருந்தே இது இடைச்செருகல் என்று தெரிகிறது. நம்மவர்களோ, “இதை ஏற்றே தீர வேண்டும்” என்கிறார். “இது தான் சான்ஸ்” என்று கிறித்தவ மதமாற்றி ஒருவர் இக்கதையைக் காட்டி “உங்கள் விஷ்ணு ஆபாசமான செயல்களைச் செய்துள்ளாரே” என்கிறார் விஷ்ணுபக்தர்களிடம். என்ன கொடுமை!
“இதில் ஆபாசம் என்ன இருக்கிறது? தாட்சாயணி தீக்குளிக்கவில்லையா?” முதலான கேள்விகளை ஆர் வீ எழுப்பியதால் விஷ்ணு பரத்துவத்தைப் பற்றிப் பேச நேர்ந்தது.
எனினும் ஜெஹோவா முதலிய அருவருக்கத்தக்க செயல்களை விரும்பிச் செய்த கடவுளை வழிபடுவதை விட, தட்சினாமூர்த்தியான ஞானம் தரும் பரம விஷ்ணுபக்தரான சிவனை வழிபடுவது எவ்வளவோ மேல் என்று எல்லா வைணவர்களும் இசைந்தது.
செப்ரெம்பர் 1, 2010 at 8:51 பிப
பொய் பிரசார மதமாற்றிகளை விரட்டி அடியுங்கள். அவர்களால் யாதொரு பிரயோஜனமும் இல்லை. ஆனால் கிறிஸ்த்துவ ஊழியர்கள் அனைவரும் பொய் பிரசார்களோ, மதமாற்றிகளோ அல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
கிருஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள், கிருஸ்துவை விரும்பியே ஏற்கிறார்களே ஒழிய, உங்கள் புராண கதைகள் பிடிக்காததால் அல்ல. இந்துத்துவம் பிடிக்காவிட்டால், நாத்திகறாவதுதானே, எதற்கு கிருச்துவனாகிறான்? யோசியுங்கள்.
உங்கள் கேவலமான புராண கதைகள் எல்லாம் பல ஆண்டுகளாய் இந்தியாவில் இருந்தவைதானே, ஏதோ, கிருஸ்துவர்கள் அந்த கதைகளை எழுதியதை போல பேசுகிறீர்கள். (உங்கள் அனைத்து புராணங்களையும் மோசம் என்று சொல்லவில்லை )
இப்போது உங்களுக்கு வசதியானது மட்டும் Authentic என்கிறீர்கள், மற்றவை எல்லாம் இடைசெருகலா? செம ஆளுப்பா…
வைணவ பிரச்சாரம் சரி, கிருஸ்துவ பிரச்சாரம் தப்பா???
யோசிங்க சார்.
அசோக்
செப்ரெம்பர் 1, 2010 at 10:48 பிப
அசோக் குமார்,
சமணர்கள் சம்பந்தரிடம் வாதத்தில் தோற்றதால் கழு ஏறினார்கள் (ஏற்றப்படவில்லை) என்று ஒரு legend இருப்பது உண்மைதான். ஆனால் இதற்கு சரித்திரத்தில் எந்த ஆதாரமும் இல்லை. குறிப்பாக சமணர்கள் இதை மறுக்கிறார்களாம். சமணர்கள் எல்லாவற்றையும் ஆவணப்படுத்தும் பழக்கம் உடையவர்கள்.
மத மாற்ற பிரசாரகர்கள் எல்லாரும் அயோக்கியர்கள் இல்லைதான். ஆனால் பணத்தாசை, ஏமாற்று வேலை நிறைய நடக்கத்தான் செய்கிறது. என் நெருங்கிய நண்பன் ஒருவன் curiosity-ஆல் ஒரு பிரச்சாரகரிடம் ஒரு முறை பேசினான். அதற்குப் பிறகு ஆறு மாதங்களுக்கு மேலாக அவனை துரத்தி துரத்தி வந்தார்கள். அவன் கொஞ்சம் மரியாதை எல்லாம் பார்ப்பவன், அதனால் அய்யா எனக்கு விருப்பமில்லை, என்னை விட்டுவிடுங்கள் என்று திருப்பி திருப்பி சொல்லிப் பார்த்தான், ஒன்றும் நடக்கவில்லை. இரண்டு நாளைக்கு ஒரு முறை அவனைப் பிடித்து பிரயின்வாஷ் செய்யப் பார்த்தார்கள். ஹாஸ்டலில் இருந்த மற்ற நண்பர்கள் எல்லாம் ஒரு நாள் எகிறிய பிறகுதான் அவர்கள் வருவது நின்றது.
அவர்கள் பிரச்சினை தெளிவாக புரிகிறது. எத்தனை பேரை மத மாற்றம் செய்கிறீர்களோ அத்தனைக்கத்தனை உங்களுக்கு ஊதியம், பதவி உயர்வு என்று சொன்னால் அவர்களும் என்ன செய்வார்கள்? இன்றைக்கு ஃபோனில் கிரெடிட் கார்டு விற்பவர்கள் போலத்தான்.
பொதுவாக கிருஸ்துவர்கள் இப்படி ஒரு பிரச்சினை இருப்பதை ஒத்துக் கொள்வதில்லை. நீங்கள் எப்படி?
செப்ரெம்பர் 2, 2010 at 7:36 முப
ஏசுகுமார்,
வைணவப்பிரச்சாரம் தப்பில்லை ஆனால் எவாஞ்சலிக்கப்பிரச்சாரம் தப்பு. அதுக்கு என்ன இப்ப?
ஐரோப்பாவுக்குப் போய் வைணவப்பிரச்சாரம் செய்து அதுக்கு வெள்ளைக்காரனை சப்போர்ட்டுக்கு அழைத்துப்பாருங்கள். அப்ப தெரியும்.
இது இந்தியா. இங்கே சிவனும் விஷ்னுவும் அடித்தாலும் புடித்தாலும் அண்ணன் தம்பி மாதிரி. ஜெஹோவா ஒரு பரதேசிக்கடவுள். பரதேசத்தில் இருந்து வரும் கடவுள். ஆகவே அவனைப்போற்றும் பிரச்சாரம் தப்பு தான். அதுவும், ஜெஹோவாவின் நாட்டில் மற்ற கடவுள்களுக்கு இடமில்லை என்னும் போது மற்ற கடவுள்கள் மட்டும் இளிச்சவாயாட்டம் ஜெஹோவாவின் பிரச்சாரத்தை அனுமதிக்கனும் என்பது மொள்ளமாரித்தனம்.
செப்ரெம்பர் 2, 2010 at 4:20 பிப
நண்பர் RV ,
உங்களை போல மற்றவர்களும் சற்று மரியாதையாக எழுத கற்றுக்கொண்டால் நலமாயிருக்கும். சிலருக்கு பிறவி குணம் மாறுவதில்லை.
நீங்கள் சொல்லுவதை போன்ற மதமாற்றிகள் நிறையப்பேர் உள்ளனர். பெரும்பாலான கிருஸ்துவ ஊழியர்கள் அப்படி செய்கிறார்கள். அதை நான் மறுக்கப்போவதில்லை.
ஆனால் நீங்கள் சொல்லும், மதமாற்றத்தினால் வரும் பணம் பதவி incentive போன்றவை நான் கேள்விபட்டது இல்லை.
பெயரில்லாதவரே,
உங்களுக்கு பெயர் மட்டும்தான் இல்லை என்று நினைத்தேன்.
மற்றபடி, என்னை ஏசுகுமார் என்று கூப்பிட்டதற்கு என் நன்றி. ஐரோப்பா பற்றி தெரியவில்லை, ஆனால் நான் இருக்கும் அமெரிக்காவில் வெள்ளையன் சப்போர்டில் வைணவ பிரச்சாரம் அமோகமாக உள்ளது.
நன்றி,
அசோக்
செப்ரெம்பர் 1, 2010 at 5:49 பிப
// ஜெஹோவா முதலிய அருவருக்கத்தக்க செயல்களை விரும்பிச் செய்த கடவுளை வழிபடுவதை விட …//
ஏதோ பெரியவங்க பேசிண்டிருக்காளே என அமர்ந்திருந்தேன்;ஆமா,எதை அருவருக்கத்தக்க செயல்கள் என்கிறீர்,நேக்கு புரியலயே மாமா…சோமபானம் அருந்திண்டு யாகத்தீயில் வெந்துக் கொண்டிருக்கும் பசுவின் இறைச்சியை ருசிபார்த்ததையா சொல்லுகிறீர்..?
செப்ரெம்பர் 2, 2010 at 7:41 முப
ஹலோ சில்லிசிக்கன்,
சோமபாணம் அருந்துவதும் மாட்டுக்கறி தின்பதும் தன் தந்தையின் மனைவியை அனுபவிப்பதைவிட அருவருக்கத்தக்க செயல் அல்ல. ஒம்ம கடவுளைப் பிரச்சாரம் செய்ய மட்டும் தான் சட்டத்தில் (சட்டத்தில் மட்டும் தான்) அனுமதி உள்ளது, மற்ற கடவுளை நிந்தித்தால் தக்க பதிலடி விழும்.
செப்ரெம்பர் 2, 2010 at 6:47 முப
சில்சாம்,
சோமபானம் பற்றி உங்களுக்கு ஏதும் புரியவில்லை என்று தெரிகிறது. சோமபானம் பற்றி வரும் உண்மை பின்வருமாறு
(நன்றி: ramanuja.org)
//
Soma has to be differentiated from SurA
(physically intoxiating alcohol ) made from
grapes or grains). Soma is a CONCEPTUAL
beverage of Gods , which is described as
Truth (Sathyam), Auspiciousness( Sri:) ,
light /radiance (Jyothi:) . SurA in contrast
is untruth (anrutham), misery (Paapmaa) and
darkness ( tama:). SomA leads to Jn~Anam
(enlightenment ) and Anandham ( bliss):
“sathyam vai SrI: JyOthi: SOma:
anrutha paapmA tama: SuraithE ”
–Satapatha BrahmaNam: VI.1.3.10
SomA is not produced by crushing and filtering
a Creeper with the name of SomA. The creeeper is
also a conceptual creeper , the juice of which is
presented in a RITUALISTIC manner in Soma Yaagams .
//
சரி நீங்கள் கூறுவதே உண்மை என்று வைத்துக் கொள்வோம். அமேலகைத்திய அப்பாவிகளை இனப்படுகொலை செய்யச் சொல்லும் ஜெஹோவாவை விட, மது அருந்திக் கொண்டு பசு இறைச்சி தின்பது (இதெல்லாம் கத்தோலிக்கர்கள் பண்ணவில்லை, ஹிந்துக்கள் தான் செய்கிறார்கள் 😦 ) எவ்வளவோ மேல்.
அசோக் குமார்,
// பொய் பிரசார மதமாற்றிகளை விரட்டி அடியுங்கள். //
அப்படியானால் இப்பொழுது உள்ள பொய்யாண்டி போப்பை முதலில் விரட்டி அடியுங்கள்:
http://www.hafsite.org/index.php?q=issues/interfaith&q=/media/pr/20050421_pope_benedict
// ஆனால் கிறிஸ்த்துவ ஊழியர்கள் அனைவரும் பொய் பிரசார்களோ, மதமாற்றிகளோ அல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள். //
பூதக்கண்ணாடி போட்டுத் தான் நீங்கள் கூறும் “உண்மையான கிறித்தவ ஊழியர்களை” நம் தமிழ்நாட்டில் பார்க்க முடியும்.
// இந்துத்துவம் பிடிக்காவிட்டால், நாத்திகறாவதுதானே, எதற்கு கிருச்துவனாகிறான்? யோசியுங்கள். //
ஒரு வேலையும் செய்யாமல் மதப் பிரச்சாரம் செய்தால் பணம் வரும் என்று கூறினால் எந்த கயவனும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு வருவான்.
// உங்கள் கேவலமான புராண கதைகள் எல்லாம் பல ஆண்டுகளாய் இந்தியாவில்
இருந்தவைதானே, ஏதோ, கிருஸ்துவர்கள் அந்த கதைகளை எழுதியதை போல //
ஜலந்தரன் கதை எல்லாம் “பல ஆண்டுகளாய்” இந்தியாவில் இருந்ததற்குச் சான்றே இல்லை. கிறித்தவர்கள் அந்தக் கதைகளை எழுதியதாக நான் கூறவில்லை. வைஷ்ணவத்தையும் விஷ்ணு பரத்வத்தையும் போறாத சிலர் அக்கதைகளை எழுதியுள்ளனர் என்றே சொன்னேன். மேலும், மூல நூலாகிய வேதத்திற்கு எதிராக உள்ள எந்த ஸ்மிருதி-புராணக் கதைகளையும் புறக்கணிக்க வேண்டும் என்று ரிஷிகள் கூறியுள்ளனர்.
// வைணவ பிரச்சாரம் சரி, கிருஸ்துவ பிரச்சாரம் தப்பா??? //
மற்ற சித்தாந்தங்களைப் பற்றிப் பொய் கூறியும், போலி மாயாஜாலம் செய்தும், நரக பீதியை மக்களிடம் உண்டுபடுத்தியும் செய்யும் பிரச்சாரம் எல்லாம் காறித் துப்பவேண்டியவையே.
// கந்தர்வன், அறியாமல்தான் கேற்க்கிறேன், அது உண்மைதானா? //
அசோக், உம்மாதிரி திருத்த முடியாத கேசுகளை “இவனைத் திருத்த எனக்கு வழியே தெரியவில்லை” என்று எரிச்சலால் ஆழ்வார் அப்படிப் பாடினார் அதுவும் “நான் அறுப்பேன்” என்று தான் பாடினார் “வைணவர்களே, அவர்கள் தலையை அறுத்து விடுங்கள்” என்று பாடவில்லை. அவர் சொன்னதை வைத்து யாரும் யார் தலையையும் அறுக்கவில்லை. உங்களுடைய கத்தோலிக்க சர்ச்சு யூதர்களுக்கு எதிரான காழ்ப்பை வளர்த்ததுக்கும், யூதர்களைப் பிற்படுத்தியதற்கும், ஹிட்லருடன் கொஞ்சிக் குலாவியதற்கும், குரூசெடுகள் நடத்தியதற்கும், இன்குவிசிஷன் நடத்தியதற்கும் இணையாக சைவத்திலோ வைனவத்திலோ கிடையாது. எந்த ஆதீனத்தின் தலைவரும் ஜீயரும் சிறு பிள்ளைகளைக் கற்பழிப்பதைக் கண்கூடாகக் கண்டு அதை மறைக்க முயன்றதில்லை.
வைதீக ரிஷிகள்-ஆச்சாரியார்கள் காட்டிய வழியின் மேன்மையாகிய உண்மையையும், பழைய ஏற்பாட்டில் மெய்யாக உள்ள காட்டுமிராண்டித் தனத்தையும் கண்ணெதிரே வைத்தாலும் சில்சாம், அசோக் முதலானோர்க்கு அகங்காரமும் மதாபிமானமும் கண் மறைக்கிறது, இந்த உண்மைகளை ஏற்கத் தடையாக உள்ளது.
செப்ரெம்பர் 3, 2010 at 4:17 முப
//அப்படியானால் இப்பொழுது உள்ள பொய்யாண்டி போப்பை முதலில் விரட்டி அடியுங்கள்//
போப் எங்க வீட்டுல உக்கார்ந்து இருக்கிறமாதிரி பேசறீங்க. எனக்கு இந்த போப், கந்தர்வன், இங்கே அசிங்கமாக எழுதும் பெயரில்லாதவர், எல்லாரும் ஒன்றுதான். உங்களுக்கு பிடிக்கலைனா நீங்க போய் விரட்டுங்க.
//பூதக்கண்ணாடி போட்டுத் தான் நீங்கள் கூறும் “உண்மையான கிறித்தவ ஊழியர்களை” நம் தமிழ்நாட்டில் பார்க்க முடியும்.//
நானும் அதைதான் சொல்கிறேன். அவர்கள் சிலரே, ஆனால் இருக்கிறார்கள்.
//ஒரு வேலையும் செய்யாமல் மதப் பிரச்சாரம் செய்தால் பணம் வரும் என்று கூறினால் எந்த கயவனும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு வருவான்.//
முதலில் பணம் எங்கிருந்து வரும்? மேலும் இந்த வேளையில் உழைப்பு மிக அதிகம். அர்ப்பணிப்புடன் வேதம் படித்து, முரடர்களுடனும், மூடர்களுடனும், நோயாளிகளுடனும், மேலும் பலருடனும் அன்புடனும், பொறுமையுடனும், அர்ப்பணிப்புடனும், தியாகத்துடனும் பழகனும். அடிப்படை வசதியில்லாது, காடுகளிலும், கிராமங்களிலும், ஏழை எளிய மக்களிடம் சென்று ஊழியம் செய்கிறார்கள். இதில் பலர் முரடர்களால் கொல்லப்படுவதும், ஊனப்படுவதும் உண்டு. பல ஊழியர்கள் இன்னும் வறுமையில்தான் தியாகத்துடன் வாழ்கிறார்கள் (ஆனால் உண்மையுடன் வாழ்கிறார்கள்).
//அமேலகைத்திய அப்பாவிகளை இனப்படுகொலை செய்யச் சொல்லும் ஜெஹோவாவை விட//
அமலேக்கியர்கள் அப்பாவிகளா? ஏதோ அமலேக்கியர்கள் வீட்டுல போய் தங்கிட்டு வந்த மாதிரி பேசறீங்க.
Ashok
செப்ரெம்பர் 2, 2010 at 11:57 முப
கந்தர்வன் அவர்களது வாதத்தில் அதிக விஷயமும் விசால மனதும் நேர்மையும் தெரிகிறது; இது நிச்சயமாகவே கிறித்தவர்கள் கற்றுக் கொள்ளவேண்டிய காரியமே;முன்னாள் இந்து என்ற முறையில் கந்தர்வன் என்னை கவர்கிறார்;
காட்டுமிராண்டி கடவுள் யெகோவா எனில் நவீன காலக் கடவுளர் இந்து கடவுளர் என்றாகிறதே;காட்டுமிராண்டி மார்க்கத்திலிருந்து ஆபிரகாமியரைப் பிரித்தெடுத்தார் என்று தானே பைபிளும் சான்று பகருகிறது;
அப்படியானால் இந்துத்துவாக்களுக்கும் முந்தைய யுகத்தின் காட்டுமிராண்டிகள் யார்?
அலகுகுத்தி.. தீமிதித்து.. ஆட்டை வெட்டி பச்சை இரத்தத்தை அப்படியே உறிஞ்சி குடித்து.. பயங்கரங்களை இன்றும் நிகழ்த்திக் கொண்டிருப்போர் யார்?
கொஞ்சம் யோசியுங்களேன்…!
(((அப்புறம் இந்த “அனானி” கொசுத்தொல்லைத் தாங்கமுடியல…எதாவது செய்ங்க சாமி…!)))
செப்ரெம்பர் 2, 2010 at 1:08 பிப
சில்லிசிக்கன்,
சொந்தமா யோசிச்சு எழுதுய்யா….
கத்தோலிக்க கொசுத்தொல்லைன்னு நான் எழுதுனதே எழுதுறியே. திட்டுறதக்கூட சொந்தமா யோசிக்கத் தெரியல்ல. நீயெல்லாம் என்ன போ…
மதம் மாறினா மூளையும் மழுங்கிருமா இல்லை மூளை மழுங்கின பிறகு மதம் மாறுவீங்களா ?
செப்ரெம்பர் 3, 2010 at 12:24 முப
பெயரில்லாதவரே,
நண்பர் சில்சாம் பாவம்ங்க, அவருக்கு அடுத்தவங்களை திட்டி பழக்கம் இல்லை, அதனால் உங்கள் வார்த்தையையே கையாண்டுவிட்டார்.
ஆனால், நீங்கள் எல்லாம் சொந்தமா எழுதற மாதிரி பேசறீங்களே. கவுண்டமணியை எங்களுக்கும் தெரியும் 🙂
Ashok
செப்ரெம்பர் 2, 2010 at 1:23 பிப
//
அலகுகுத்தி.. தீமிதித்து.. ஆட்டை வெட்டி பச்சை இரத்தத்தை அப்படியே உறிஞ்சி குடித்து.. பயங்கரங்களை இன்றும் நிகழ்த்திக் கொண்டிருப்போர் யார்?
//
Flagellant என்று அடிக்கடி கேள்விப் பட்டிருக்கிறேன். அதுவும் கத்தோலிக்கத்தில் இது ரொம்பவும் பிரபலம் எனவும் படித்திருக்கிறேன்.
டாவிஞ்சி கோட் படத்தில் காட்டினார்களாம். சொன்னார்கள்.
அப்படின்னா என்னன்னு கொஞ்சம் வெளக்குங்க சில்லிசிக்கன்.
செப்ரெம்பர் 2, 2010 at 4:31 பிப
கத்தோலிக்கத்தில் பிரபலம் என்றால் அவர்களை கேளுங்க சார். நாங்க கத்தோலிகர் அல்ல.
அசோக்
செப்ரெம்பர் 2, 2010 at 5:47 பிப
ஏசு குமாரரே,
கத்தோலிக்கமோ, புராடெஸ்டெண்டோ, பெந்தகோஸோ, இல்லை செவந்த் டே அட்வெண்டிஸ்டோ, எல்லாரும் கடைசியில் ஜெஹோவாவைத் தானே வழிபடுகிறீர்கள் ?
உங்கள் சொந்த மூதாதயரின் கதையை மறந்து அவர்களையெல்லாம் நித்திய நரகத்தில் தள்ளிவிட்டு யூதப்பழங்குடிக் கதையைத் தானே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் ? (வெக்கமில்லாமல்!)
ஆகவே எல்லாரும் ஒண்ணு தான்.
நாங்கள் எல்லாம் சாத்தானை வழிபடுபவர்கள் என்றால் நீங்கள் எல்லோரும் பாலைவனப்பிசாசை வழிபடுவபர்கள் தான்.
செப்ரெம்பர் 3, 2010 at 4:03 பிப
//நாங்கள் எல்லாம் சாத்தானை வழிபடுபவர்கள் என்றால் //
உங்களை பிசாசை வழிபடுபவர் என்று சொல்லவில்லை. பிசாசினால் வஞ்சிக்கப்பட்டு உண்மை பரப்ரம்மத்தை வழிபடாதவர் என்றே சொல்கிறோம். நன்றாக கவனித்து பாருங்கள், இந்த கந்தர்வனும் அதைதான் சொல்கிறார். ஆனால், அவர் சொல்லும் பரப்ரம்மம் விஷ்ணு.
//உங்கள் சொந்த மூதாதயரின் கதையை மறந்து அவர்களையெல்லாம் நித்திய நரகத்தில் தள்ளிவிட்டு //
நம் மூதாதையர் கல்வி கற்கவில்லை என்பதற்காய் நாம் கற்காமல் விட்டோமா? நாமாவது படிப்போம் என்று படிக்கவில்லையா கல்லூரி செல்லவில்லையா? அப்படித்தான். என் மூதாதயர்தான் நரகம் சென்றுவிட்டனர், நாமாவது இறைவனை அடைவோமே என்றுதான். அவர்கள் இறைவனை அடையவில்லை என்பது வருந்தப்படவேண்டிய விஷயம், வழிதொடரப்படவேண்டியது அல்ல.
உங்களைபோன்றவர்களை பற்றி என் வேதம் சொல்லி இருக்கிறது.
செப்ரெம்பர் 2, 2010 at 1:45 பிப
சில்சாம்,
// அப்படியானால் இந்துத்துவாக்களுக்கும் முந்தைய யுகத்தின் காட்டுமிராண்டிகள் யார்? //
“வைதீக சனாதன தர்மம் காலவரையற்றது. சனாதன என்னும் பதத்திற்கு அது தான் அர்த்தம். பிரபஞ்சத்தின் தோற்ற-முடிவு சுழற்சியையும் தாண்டியது (ரிக், யஜு, சாம, அதர்வ) வேதங்கள்.” வேத மதத்தில் இப்படித் தான்.
// அலகுகுத்தி.. தீமிதித்து.. ஆட்டை வெட்டி பச்சை இரத்தத்தை அப்படியே உறிஞ்சி குடித்து.. பயங்கரங்களை இன்றும் நிகழ்த்திக் கொண்டிருப்போர் யார்? //
இதெல்லாம் அவரவர் சுதந்திரம். அவரவர்களுடைய பிறவி வாசனையைப் பொறுத்து ஏதோ ஒரு மதத்தைப் பின்பற்றுகின்றனர். ஆனால், அறிவுடையோர் இதை எல்லாம் ஏற்கத் தகாததே. மயானபூமி, எலும்பு, மாமிசம் இதை எல்லாம் கண்டாலே பல தடவை குளிக்க வேண்டும் என்று பரம தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. “இதை எல்லாம் எதிர்த்து ஏன் நீங்கள் பிரச்சாரம் செய்யவில்லை?” என்று நீங்கள் கேட்கலாம். அப்படி உள்ளவர்கள் அவர்கள் உள்ள நிலையை வெறுத்து இன்னொன்றுக்கு ஜம்ப் அடிப்பதை விட, அந்த இன்னொன்றின் மேல் உண்மையான காதல் ஏற்பட்டு அதற்கு வருவதே சாஸ்வதமாக இருக்கும். ஆர்வமும் ஆசையும் உள்ள எவருக்கும் எந்நாளும் விஷயம் அறிந்துக் கொள்ள வாய்ப்புகள் உள்ளன.
// கந்தர்வன் அவர்களது வாதத்தில் அதிக விஷயமும் விசால மனதும் நேர்மையும் தெரிகிறது //
புரிதலுக்கு நன்றி, இனியாவது இவ்விரண்டை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்:
(1) ஹிந்து கடவுளர்களை மட்டரகமாகக் காண்பிக்க முயற்சி செய்தால், அதே யுக்தியைக் கொண்டு உங்கள் புத்தகங்களிலேயே ஜெஹோவா, ஆபிரகம், நோவாஹ், மோசச் முதலானோரை மட்டரகமாகக் காட்ட இயலும். அமெரிக்காவில் இது தான் தற்போது நடந்து வருகிறது.
(2) அதே போல, நீங்கள் உங்கள் புத்தகத்தையும் வழிபடும் தெய்வத்தையும் எவ்வளவுக்கு எவ்வளவு உயர்ந்ததாகக் காட்ட முடியுமோ, அதற்குப் பன்மடங்கு அதிகமாக எங்களால் செய்ய முடியும்.
// முன்னாள் இந்து என்ற முறையில் கந்தர்வன் என்னை கவர்கிறார்; //
“இரு கரங்களைத் தூக்கிக் கொண்டு கூறுவேன்: (ரிக், யஜுர், சாம, அதர்வ) வேதமாகிய சாஸ்திரத்தினை விட சிறந்த சாஸ்திரம் உலகத்தில் எங்குமே கிடையாது” என்று வியாசர் கூற்றின்படி, அனாதியான, அபௌருஷேயமான, உலகனைத்தும் பேணிப் போற்றக்கூடியது வேத மதம். சங்கத் தமிழ்ச் சான்றோர்களும் புலவர்களும் வள்ளுவரும் போற்றிய மதம். இதனைச் சரியாகப் புரிந்துக் கொள்ள முயற்சி செய்யாமல், வைதீகத்தை எதிர்க்கும் ஒரு பாஹ்ய மதத்தின் மாயைக்குள் சிக்கி அதற்கு பஞ்ஜீ ஜம்ப் அடித்து விட்டீர்கள். பாலூட்டி வளர்த்த தாயை விட்டு காசை அள்ளி வீசும் வியாபாரியிடம் சென்று விட்டீர்கள்.
இந்துக்கள் மீதுள்ள உங்கள் மதிப்பீடு சற்று மாறியிருக்கலாம் என்று தெரிகிறது. உங்களுக்குப் பரமன் அருள் புரிந்தால் இன்னும் மாறிக்கொண்டே போகும். இருந்தாலும் சனாதன தர்மத்தை மீண்டும் முழுதும் ஏற்க உங்களுக்குத் தடை இருக்கலாம். (சிலர் கிறித்தவத்திலிருந்து இந்து மதத்திற்குத் திரும்பியுள்ளனர். பார்க்கவும் – http://www.dajoseph.com).
ஒன்றை மாத்திரம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்: ஆங்காங்கு சிலர் கயமைத்தனமாகவும் சிலர் சிறுபிள்ளைத்தனமாகவும் நடந்துக் கொண்டாலும் (பொய்ப்பிரச்சாரத்தை நிறுத்தினாலேயே இதுவும் நின்றுவிடும்), தெற்கு ஆசியாவில் கிறித்தவத்தை மதச் சுதந்திரத்துடன் நீங்கள் பின்பற்ற வழிவகுத்த ஒரே நாடு இந்திய நாடு. வரலாற்றில் பார்த்தால் கூட, ஈரான் நாட்டைச் சூறையாடிய அரபு காட்டுமிராண்டிகளிடமிருந்து தப்பிக்க இடம் தந்த நாடு இந்தியா. அதற்கும் முன்பு persecution காரணமாக ஓடி வந்த syrian orthodox christians-க்கும் யூதர்களுக்கும் அடைக்கலம் தந்தவள் பாரத மாதா தான்.
சரி, குறைந்தபட்சம் இனியாவது வேதங்களையும் இதிஹாசங்களையும் புராணங்களையும் இழிவுபடுத்தாமலாவது இருங்கள். உங்கள் சக கிறித்தவர்கள் ஆதாரமற்ற துஷ்பிரச்சாரம் செய்தால் அதை எதிர்த்து அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள்.
உங்கள் மனதில் இந்துக்கள் மீதான பார்வை சற்று மாற்றம் அடைந்திருந்தால் அதற்குப் பரமன் மீது உங்களுக்கு இருக்கும் மிச்ச மீது அன்பு தான் காரணம்.
செப்ரெம்பர் 2, 2010 at 1:47 பிப
// உங்கள் மனதில் இந்துக்கள் மீதான பார்வை சற்று மாற்றம் அடைந்திருந்தால் அதற்குப் பரமன் மீது உங்களுக்கு இருக்கும் மிச்ச மீது அன்பு தான் காரணம். //
இப்படித் திருத்திக் கொள்ளவும்:
// உங்கள் மனதில் இந்துக்கள் மீதான பார்வை சற்று மாற்றம் அடைந்திருந்தால் அதற்குப் பரமன் உங்கள் மீது கொண்டுள்ள மிச்ச மீது அன்பு தான் காரணம். //
செப்ரெம்பர் 2, 2010 at 2:06 பிப
ஆர் வீ சார்,
செஞ்சுரி அடித்து விட்டீர்கள், வாழ்த்துக்கள் 🙂
திரு anonymous அவர்களே,
// இது இந்தியா. இங்கே சிவனும் விஷ்னுவும் அடித்தாலும் புடித்தாலும் அண்ணன் தம்பி மாதிரி. //
மிக அழகாகச் சொன்னீர். சண்டை சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் கூட இல்லை, அவர்களைப் பின்பற்றுபவர்களுக்கு. எனினும் ஜகத்குருவாகிய சிவனிடம் பக்தி செலுத்துவது கண்டிப்பாக மிக உயர்ந்த நிலை என்பதில் எந்த வைணவருக்கும் சந்தேகமில்லை.
// ஜெஹோவாவின் நாட்டில் மற்ற கடவுள்களுக்கு இடமில்லை என்னும் போது மற்ற கடவுள்கள் மட்டும் இளிச்சவாயாட்டம் ஜெஹோவாவின் பிரச்சாரத்தை அனுமதிக்கனும் என்பது மொள்ளமாரித்தனம். //
நன்றாகச் சொன்னீர்! அந்நாளில் ஜெஹோவாவுக்கு எதிராக எதையாவது தூக்கத்தில் உளரினாலும் எரித்து சாம்பலாகப் பொசுக்கிக் கொண்டிருந்தனர். நம் நாட்டைப் போல வைணவ-அத்வைத-சைவ-சமண-பௌத்த வாதத்திற்கெல்லாம் இடமே இல்லை.
இன்னொரு விஷயம்…
மேற்கத்திய நாடுகளில் எப்படி எப்படியோ இருந்தவர்கள் இன்று சிகையும், கோபி சந்தனமும், வேட்டியும், ஹரே கிருஷ்ணா ஹரே ராமா என்று வாய் வலிக்க நாம சங்கீர்த்தனமும் கீர்த்தனமும் செய்து பரம வைதீக நெறிகளையும் பாகவத தர்மத்தையும் கடைப்பிடித்து வருகின்ரனர்… இதெல்லாம் நடந்து வருகையில் “உலகம் முழுதும் வியாபிக்கும் ஒரே மதம்” என்று சில்சாம் கத்தோலிக்க மதத்தைக் கூறி வருகிறார்.
செப்ரெம்பர் 2, 2010 at 6:08 பிப
முதலாவதாக, நண்பர் சில்சாம் கத்தொளிக்கதிற்க்காக பேசுகிறார் என்பதே தவறு. அவர் பேசுவது கிரிச்துவதிர்க்காக.
மேலும், ஒரு மதத்தை சேர்ந்த மனிதனின் தவறுக்கு கடவுள் (ஜெஹோவா) எப்படி பொறுப்பு? அப்படி பார்த்தால், காஞ்சிபுர அர்ச்சகர் செய்ததற்கு நீங்களும் உங்கள் தெய்வங்குளும் பொறுப்பா?
அதைவிட, இங்கு வார்த்தை உபயோகம், சபை நடத்தை போன்றவற்றை பாருங்கள். நானோ, நண்பர்கள் ஜோ, சில்சாம் போன்றவர்கள் இடுகைகளுக்கும், உங்கள் இடுகைகளுக்கும் உள்ள வித்தியாசம் தெரியும். யார் காழ்ப்புணர்ச்சி கொண்டு பேசுகிறார்களென்று.
Ashok
செப்ரெம்பர் 2, 2010 at 6:46 பிப
நண்பர் அசோக் அவர்களின் கருத்தினை நான் வழிமொழிகிறேன்; நாங்கள் கத்தோலிக்க மார்க்கத்தைச் சேர்ந்தவர்களல்ல;
நாங்கள் இந்து வேதங்களைக் கற்றுத் தேர்ந்தவர்களிடம் பயின்று அதன்படி எங்களைச் சுற்றிலும் எதுவுமில்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து மெய்ப்பொருளைத் தேடியலைந்து அண்டிக்கொண்டவர்கள்; எங்களை யாரும் மதம் மாற்றவில்லை;
நாங்கள் மாதாவின் சிலையின் முன்பு மண்டியிடுவதாக இருந்தால் எங்கள் குலதெய்வமான புவனேஸ்வரியை விட்டு ஏன் வரவேண்டும்;
கந்தர்வன் அவர்களே ஒரு கண்ணிலே வெண்ணெயும் ஒரு கண்ணிலே சுண்ணாம்பும் என்பார்களே அதுபோல என்னை வரவேற்பது போல வரவேற்று அடுத்த பின்னூட்டத்திலேயே தாக்குகிறீர்களே,இது நியாயமா?
எங்களைக் கவர்ந்ததும் வேதமே;நான்கு வேதங்களிலும் உபநிஷத்துகளிலும் புராணங்களிலும் இருந்து அடையாத மனநிம்மதியை பைபிளின் சங்கீதம் எனும் புத்தகத்திலிருந்து அடைந்தோம்;
எங்களுக்கு பைபிள் முழுவதும் தெரியாது;ஆனாலும் 150 திருப்பாடல்களடங்கிய அந்த ஒரு பகுதி எங்கள் நிலைமையை அப்படியே இறைவனுக்கு எடுத்துச் சொல்வது போலிருந்து மனநிம்மதியைத் தரும்;
இதுபோன்ற நேரடியான அனுபவமே மனமாற்றமடையக் காரணமாக இருந்ததே தவிர தத்துவங்களோ பணமோ அல்ல;
கத்தோலிக்கர்கள் இதுபோல ஒருபோதும் வேதத்தை மேன்மைப்படுத்தி பேசமாட்டார்கள் என்பதை தயவுகூர்ந்து புரிந்துக்கொள்ளுங்கள்.
செப்ரெம்பர் 2, 2010 at 11:10 பிப
ஆர். வீ. சார்,
// சங்கரர் விஷ்ணுவையே முழு முதல் கடவுளாக ஏற்றார் என்று சொல்வதற்கு எனக்கு தெரிந்த அளவில் எந்த ஆதாரமும் இல்லை. //
கீதா பாஷ்யம் படித்துப் பாருங்கள். குறிப்பாக, (1) பாஷ்யத்துக்கு சங்கரர் இடும் அவதாரிகை, (2) சுலோகம் 11.37-43 (3) சுலோகம் 13.10, (4) சுலோகம் 6.47, (5) சுலோகம் 9.22-9.25, (6) சுலோகம் 7.20-7.23
உங்கள் வேலையை சுலபமாக்குவதற்கு, இதற்கான சுட்டிகளையும் தருகிறேன்:
(1) http://www.archive.org/stream/bhagavadgitawith00maharich#page/2/mode/1up
(2) http://www.archive.org/stream/bhagavadgitawith00maharich#page/258/mode/1up
(3) http://www.archive.org/stream/bhagavadgitawith00maharich#page/303/mode/1up
(4) http://www.archive.org/stream/bhagavadgitawith00maharich#page/187/mode/1up
(5) http://www.archive.org/stream/bhagavadgitawith00maharich#page/227/mode/1up
(6) http://www.archive.org/stream/bhagavadgitawith00maharich#page/196/mode/1up
குறிப்பாக, 11.43-இல் “இரண்டு தெய்வங்கள் பரம்பொருளாக இருக்க முடியாது, அப்படி இருந்தால் லோக நிர்வாகம் கெட்டுப் போய் விடும். ஆகையால், உனக்குச் (கண்ணனுக்குச்) சமமான தெய்வம் வேறு கிடையாது, அப்படி இருக்க அவனை விட உயர்ந்தவன் எப்படி இருக்க முடியும்?” என்று கூறுகிறார் பாருங்கள்.
13.10-இல் “வாசுதேவனை விட வேறுபட்டவன் அவனை விட உயர்ந்தவன் அல்லன், ஆகையால் வாசுதேவன் ஒருவனே நமக்கு அடைக்கலம்” என்கிறார்.
அது தவிர,
(1) பிருகதாரண்யக உபநிஷத் பாஷ்யம் 3.7.3 “நம் அனைவரையும் உள்ளிருந்து வியாபித்து ஆளும் கடவுளுக்குப் பெயர் நாராயணன். அவனே உனக்கும், எனக்கும், அனைவர்க்கும் அந்தர்யாமி.”
(2) பிருகதாரண்யக உபநிஷத் பாஷ்யம் 1.4.10 “பசுபதியாகிய உருத்திரன் பிரம்மத்தால் படைக்கப்படுகிறார்”,
(3) கடோபநிஷத் பாஷ்யம் 1.3.9 “ஸர்வ வ்யாபியாகிய வாசுதேவனாகிய பரமாத்மாவாகிய ப்ரம்மத்தின் உயர்ந்த இடமாகிய பரமபதம் (மோட்சம் அடைந்தவர்கள் அடையும் இடம்)”
(4) முண்டகோபநிஷத் பாஷ்யம் 2.1.4,
(5) பிரம்ம சூத்ர பாஷ்யம் 2.1.1 “கேளுங்கள் இந்த சுருக்கமான உண்மையை! நாராயணனே அனைத்தையும் சிருஷ்டிக்கிறான், அனைத்தையும் ஸம்ஹார காலத்தில் உள்வாங்கிக் கொள்கிறான். அவனைத் தவிர உயர்ந்த தத்துவம் இல்லை”
(6) பிரம்ம சூத்ர பாஷ்யம் 2.2.42
(7) இது தவிர விஷ்ணு ஸஹஸ்ரநமத்தில் பல இடங்களில்
வேறு எந்த தெய்வத்தையும் சங்கரர் இப்படி பாஷ்ய நூல்களில் கொண்டாடவில்லை, கொண்டாடியிருக்கவும் முடியாது என்று இதிலிருந்து புரியும் என்று நினைக்கிறேன்.
இதற்கெல்லாம் மேலாக, நாராயணபட்டர் நாராயணீயத்தில், சிவன் பிரம்மா முதலானோரை விட விஷ்ணுவே பரம்பொருள் என்று நிர்ணயிக்கும் இடத்தில், “சங்கரர் விஷ்ணு ஒருவரையே பரம்பொருளாக பாஷ்ய நூலில் கூறியுள்ளார். கடைசிக் காலத்தில் விஷ்ணுவையே துதி பாடினார், சிவன் முதலியவர்களைப் பாடவில்லை” என்று அறிவிக்கிறார் (தசகம் 90, சுலோகம் 5)
இப்போது என்ன சொல்கிறீர்கள்?
செப்ரெம்பர் 3, 2010 at 12:26 முப
கந்தர்வன் வார்த்தைகளில் நேர்மையும் தெரியவில்லை, விசாலமும் தெரியவில்லை, ஞானமும் தெரியவில்லை. தான் யாரை திட்டுகிறோம் என்று கூட தெரியாமல், கண்ணா பின்னாவென்று, மாற்று கருத்து உள்ளவர்களை திட்டுகிறார். கிறிஸ்த்துவம் வேறு கத்தோலிக்கம் வேறு என்று கூட தெரியாமலே காட்டு கூச்சல் போடுகிறார்.
ஒரு விஷயத்தை தர்க்கம் செய்யும்போது சில discipline தேவை நண்பரே. உங்கள் முன் ஒரு கேள்வி வைத்தால், பதில் சொல்லுங்கள், இல்லை விட்டும்விடலாம். ஆனால் சண்டைக்கு வருகிறீரே. நான் கேக்கறது தப்பா RV சார்?
அசோக்
செப்ரெம்பர் 3, 2010 at 1:26 முப
அசோக்,
நான் உங்களையோ சில்சாமையோ திட்டவில்லை. பழைய ஏற்பாட்டில் உள்ளதைத் தான் சொன்னேன். நீங்கள் இந்து தருமத்தைக் கீழ்த்தனமாகக் காட்ட எடுக்கும் யுக்தியையே பயன்படுத்தினேன்.
மேலும், நான் பழைய ஏற்பாட்டில் காட்டியவைக்கு எந்த பதிலும் நீங்கள் கூறாமல் என்னை அநாகரீகமானவன் என்று திட்டுவது நீங்கள் தான்.
// ஒரு விஷயத்தை தர்க்கம் செய்யும்போது சில discipline தேவை நண்பரே. //
ஆதாரமே இல்லாமல் “புராணங்களில் ஆபாசம், வேதத்தில் ஆபாசம்” என்று துஷ்பிரச்சாரம் பண்ணுகிறீர்களே, இது நாகரீகமா? இதோ சில்சாம் கீழே கூறியுள்ளார்:
// மகா மட்டரகமான அருவருப்பான செக்ஸ் வர்ணனைகள் நிரம்பிய வேதங்களின் கதாநாயகர்களை சிலைகளாக நிறுத்தி தெய்வமாகத் தொழுகிறார்கள்; //
நீங்கள் கூட சில்சாமின் தளத்தில் இப்படிக் கூறியுள்ளீர்கள்:
// விஷ்ணுவிற்கு துளசி பூஜை செய்கிற ஒவ்வொருத்தரும், ஒரு கற்பழிப்பை கொண்டாடுகிறார்கள்.
முருகனை வழிபடும் பெண்கள், ஒரு குறத்தியுடன் தங்கள் கணவனை பங்குபோட முன்வருவார்களா?
பிள்ளையார் ஆத்தங்கரையில் அமர்ந்திருப்பது சைட் அடிக்கத்தான் என்று அவர்கள் புராணங்களே சொல்கிறது. ஆனால், தெருவில் குட்டிச்சுவர்மேல் அமர்ந்திருப்பவனை பொறுக்கி என்கிறோம். //
இது தான் நீங்கள் கூறும் நாகரீகமா? நீங்கள் ஒருபக்கம் இப்படி எழுதி விட்டு, மறுபக்கம் “நாகரீகம் வேண்டும்” என்று double action செய்கிறீர்கள்! இது என்ன நியாயம்? இதற்குத் தான் பதிலடி கூறினேன், அதுவும் மறுக்க முடியாத பழைய ஏற்பாட்டுப் புத்தககங்களிலிருந்து.
// கிறிஸ்த்துவம் வேறு கத்தோலிக்கம் வேறு என்று கூட தெரியாமலே காட்டு கூச்சல் போடுகிறார். //
உங்கள் இஷ்டம். ஒரே ஒரு கேள்வி- “மாதாவை வழிபடுபவர்கள்” புரோடஸ்டண்டுகளா? பெந்தகோஸ்தர்களா? மார்மானா? எந்தப் பிரிவு?
சில்சாம்,
யாருடைய சுதந்திரத்திற்கும் தீங்கு விளைவிப்பது என் எண்ணம் அல்ல. எல்லாருக்கும் நற்கதி கிட்ட வேண்டும், அது வைதீக சனாதன தருமத்தைத் திட்டினால் கிடைக்காது. இதைச் சொல்லத்தான் வருகிறேன். நான் தாக்குவது நபர்களை அல்ல. நபர்களின் கருத்துக்களையும் விமர்சனங்களையும். நாளைக்கே நான் உங்களையோ அசோக்கையோ காபி டே-இல் சந்தித்தால் கை குலுக்கிச் சேர்ந்து காபி சாப்பிடத் தயர்.
செப்ரெம்பர் 3, 2010 at 3:46 முப
கந்தர்வன்,
நான் ஒரு சாதாரண இந்து குடும்பத்தில் பிறந்தவன்தான். நான் உங்களைபோல வைதீக பாடமெல்லாம் பயின்றவன் அல்ல. ஆனால், சிறுவயதில் இருந்தே ஆன்மீக நாட்டமுள்ளவன். ராமகிருஷ்ண மடத்தில் படித்தவன். அங்கு பல சன்னியாசிகளிடம் பல புராணகதைகளை கேட்டறிந்துகொண்டேன். அதில் பல கதைகள் பல கேள்விகளை எழுப்பியது. உங்களை தூஷிக்க நான் அதை சொல்லவில்லை. அவையனைத்தும் எனக்கு தோன்றிய கேள்விகள். இந்த கேள்விகளை பல பெரியவர்கள் காதில் போட்டுக்கொள்ளவுமில்லை, என் வயது மக்களுக்கு பதில் சொல்லவும் தெரியவில்லை. நீங்கள் இந்த கதைகள் பொய் என்கிறீர்கள், ஆனால் எண்ணற்ற இந்துக்கள் இதை உண்மை என்கிறார்கள், நம்புகிறார்கள். இந்த கதைகளில் வரும் செயல்கள், மோசம்தானே? அந்த மோசத்தை செய்பவனை வணங்குதல், அதை அங்கிகரிக்கும் செயல்தானே? அதைதான் நான் கேட்டேன். தக்க பதில் யாரும் சொல்லவில்லை, மாறாக ஏசுகிறார்கள்.
நீங்கள், உங்கள் கருத்தை வைப்பதற்கு பதிலாய் உங்கள் வார்த்தைகளில் விஷத்தை கொட்டியபிறகே, அது அநாகரீகமாய் இருப்பதால் அப்படி கூறினேன். நன்றாக என் அனைத்து பின்னூட்டங்களையும் பாருங்கள். உங்களுக்கே புரியும்.
//மேலும், நான் பழைய ஏற்பாட்டில் காட்டியவைக்கு எந்த பதிலும் நீங்கள் கூறாமல் என்னை அநாகரீகமானவன் என்று திட்டுவது நீங்கள் தான்.//
பழைய ஏற்பாட்டில், யேகோவா எகிப்தில் செய்த சங்காரத்தை விளக்க எனக்கு நிறைய எழுதவேண்டி உள்ளது. சுருக்கமாக சொல்கிறேன்.
தன் பலத்தை காட்ட யேகோவா குழந்தைகளை கொல்லவேண்டியதில்லை. அவர், தன் மக்களை விடுதலை பண்ண பலமுறை தாழ்மையாக ஒரு தூதனை (மோசேஸ்) அனுப்பினார். ஒன்பது முறை அற்ப்புதங்கள் மூலம் அவர்களுடன் பேசுவது தேவன்தான் என்று காட்டினார். ஆனால் அவர்கள் அதை மதிக்கவில்லை. மந்தமான, இறுமாப்பு நிறைந்த அவர்கள் இருதயத்தில் உறைக்கத்தான், இப்படி ஒவ்வொரு குடும்பத்திலும், மூத்தபிள்ளையை, சங்காரம் செய்தார்.
புரிந்ததா? இன்னும் புரியாவிட்டாலும், கேளுங்கள், இன்னும் விளக்கி சொல்கிறேன்.
//ஒரே ஒரு கேள்வி- “மாதாவை வழிபடுபவர்கள்” புரோடஸ்டண்டுகளா? பெந்தகோஸ்தர்களா? மார்மானா? எந்தப் பிரிவு?//
மாதாவை வழிபடுபவர்கள் கத்தோலிக்கர்.
செப்ரெம்பர் 3, 2010 at 4:15 முப
அசோக்,
சரி, இந்த முறை நியாயமான விவாதம் புரிவதற்கு வாய்ப்பளிக்கிறேன். எப்படிப் போகிறது என்று பார்க்கலாம்.
// ராமகிருஷ்ண மடத்தில் படித்தவன். அங்கு பல சன்னியாசிகளிடம் பல புராணகதைகளை கேட்டறிந்துகொண்டேன். //
With all due respect, சமூக சேவையில் பல நல்ல காரியங்களைச் செய்திருந்தும், ஆன்மீக விஷயத்தில் ராமகிருஷ்ண மிஷன் ஒரு ஞான சூன்யம். இராமாயணத்திலோ, மகாபாரதத்திலோ, இதிகாசங்களிலோ உங்களுக்குச் சந்தேகமும், அதைப் போக்கிக் கொள்ள உண்மையான ஆர்வமும் இருந்திருந்தால், வேறு சிலரைப் பற்றிக் கேட்டிருக்கலாம். மிக அருமையாக விளக்கமும் சமாதானமும் கூறியுருப்பார். அல்லது ராமானுஜர், சங்கரர், மத்வர் முதலானோருடைய பாஷ்ய நூல்களைப் படித்திருக்கலாம். பிறவிக் கிறித்தவர் D A Joseph எப்படி வைதீக சனாதன தருமத்திற்கு வந்தார் என்பதை அவருடைய தளத்திலிருந்து படித்துப் பாருங்கள்: http://www.dajoseph.com
// நீங்கள் இந்த கதைகள் பொய் என்கிறீர்கள், ஆனால் எண்ணற்ற இந்துக்கள் இதை உண்மை என்கிறார்கள், நம்புகிறார்கள். //
ஆயிரம் பேர் நம்பிவிட்டால் பிட் நோட்டீஸும், ரயில்வே ஸ்டாண்ட் கவர்ச்சிப் புத்தகமும், இடைச்செருகலும் உண்மையாகிவிடாது.
// அவர், தன் மக்களை விடுதலை பண்ண பலமுறை தாழ்மையாக ஒரு தூதனை (மோசேஸ்) அனுப்பினார். //
1) “வேண்டுதல் வேண்டாமை இல்லாத” இறைவனுக்கு எப்படி “தன் மக்கள்” என்று ஒரு குழுவினரை மாத்திரம் சொந்தம் கொண்டாட முடியும்?
// இந்த கதைகளில் வரும் செயல்கள், மோசம்தானே? அந்த மோசத்தை செய்பவனை வணங்குதல், அதை அங்கிகரிக்கும் செயல்தானே? அதைதான் நான் கேட்டேன்.//
நீங்கள் உண்மையிலேயே நியாயமான, நடுநிலையானவராக இருந்தால் பழைய ஏற்பாட்டில் ஜெஹோவா செய்யும்/செய்விக்கும் கொலைகளையும் கற்பழிப்புகளையும் (டேவிட் மேல் கோபம் கொண்டு அவனுடைய மனைவியரை மகனை வைத்தே செய்தது) பற்றி இதே கேள்வி கேட்டிருப்பீர்கள். எதற்கோ மயங்கி இதை எல்லாம் ஓரம் தள்ளிவிட்டீர்கள்.
நிற்க, சில தெய்வங்கள் சில புராணக்கதைகளில் imperfect-ஆக இருக்கலாம் (மீண்டும் கூறுகிறேன் — விஷ்ணுவுக்குத் தாழ்வைக் கற்பிக்கும் புராணங்களை எந்த வைதிகரும் அண்மைக்காலம் வரை ஏற்றுக் கொண்டதில்லை). ஆனால், அவர்கள் அனைவரும் வணக்கத்திற்குரியவர். அப்படி அவர்களுக்கு வணக்கம் செலுத்துவது எந்த விதத்திலும் அவர்கள் ராஜச-தாமச குணத்தின் காரணமாகச் செய்ததை அங்கீகரித்ததாகிவிடாது.
// மந்தமான, இறுமாப்பு நிறைந்த அவர்கள் இருதயத்தில் உறைக்கத்தான், இப்படி ஒவ்வொரு குடும்பத்திலும், மூத்தபிள்ளையை, சங்காரம் செய்தார். //
2. அ) முதலில், பாரோ செய்த தப்புக்கு அவனுடைய நாட்டில் உள்ளவர்கள் ஏன் பிள்ளையை இழந்து அவதிப்பட வேண்டும்?
2. ஆ) இரண்டாவதாக, அந்த பிள்ளைகள் என்ன பாவம் செய்தன? இறுமாப்பு நிறைந்த கப்பனைப்/பெற்றோர்களைக் கொன்றிருக்கக் கூடாதா? அதற்கு எதுக்கு அவர்கள் பிள்ளைகளைப் பழி வாங்க வேண்டும்?
ஒரு உதாரணம் பாருங்கள் — உங்களுடைய பக்கத்து வீட்டுக்காரர் உங்களுக்குப் பயங்கரமாகத் தொந்தரவு கொடுக்கிறார். அதற்காக அவர்கள் வீட்டில் உள்ள மூத்த பிள்ளையைக் கடத்திக் கொலை செய்து விடுகிறீர். இது தான் நியாயமா?
// மாதாவை வழிபடுபவர்கள் கத்தோலிக்கர். //
சில்சாமும் நீங்களும் மாதா வழிபாட்டை அங்கீகரித்ததாகச் சில்சாமின் தளத்தில் படித்த ஞாபகம். நீங்களோ, கத்தோலிக்கர் இல்லை என்று கூறுகிறீர்கள். எப்படியோ, உங்கள் இஷ்டம்.
செப்ரெம்பர் 3, 2010 at 4:37 முப
அசோக், சில்சாமுக்கு மேலும் கேள்விகள்:
3) அமெலகைத்தில் உள்ள புல், பூண்டு, சிசு, பெண்களைக் கொலை செய்ய வைத்தது எதற்கு? இவர்கள் எல்லாம் அப்பாவிகள் இல்லையா? குற்றம் செய்தவரை மாத்திரம் தண்டித்திருக்கலாமே?
4) எதற்கு டேவிட் செய்த குற்றத்திற்கு அவனுடைய மனைவியரை அவன் மகனையே வைத்துப் பட்டப்பகலில் அனைவரும் காணும்படிக் கற்பழிக்க வைக்கிறார்?
5) அநாதியாக சும்மா இருந்த ஜெஹோவா திடீர் என்று எதற்கு உலகத்தை எல்லாம் படைக்கிறான்? அவனுக்கு எதாவது குறை இருந்ததா? குறை உள்ளவன் இறைவனா?
6) சரி, அப்படிப் படைக்கத் தான் படைக்கிறான், ஏஞ்ஜல்களைப் போல பாபமே செய்யாதவர்களைப் படைக்கக் கூடாதா? பாவம் செய்பவர்களைப் படைத்து, படைக்கும்போதே அவர்கள் பாபம் செய்பவர்கள் என்று அறிந்தும் அவர்களைப் படைத்துக் கஷ்டப்பட வைப்பானேன்? சிலர் நரகத்துக்குப் போவர் என்று தெரிந்தும் அவர்களைப் படைத்துக் கஷ்டப்பட வைப்பானேன்?
7) ஏவாள் என்ற ஒரே ஒரு பெண் ஒருத்தி செய்த (ஞானத்தைத் தேடிச் சென்ற) குற்றத்திற்காக ஏன் “இனி எல்லாப் பெண்களும் குழந்தை பெறும் பொழுது கஷ்டப்படட்டும்” என்று தாய்க்குலத்தையே சபிக்கிறார் ஜெஹோவா?
8) உங்கள் கர்த்தர் சிருஷ்டி செய்து முடித்ததாகப் படிக்கின்றோமே, ஏன் இன்னும் குழந்தைகளை சிருஷ்டி செய்துக் கொண்டே இருக்கிறார்? இதனால் அவருக்கு என்ன பயன்?
9) பாவம் செய்வதால் தான் கஷ்டம் வருகிறது என்றால், பாபங்கள் இல்லாத, பிறக்கும் குழந்தைகளில் சில ஏன் பிறந்த முதல் நாள் அன்றிலிருந்தே கஷ்டப்படுகின்றன? பிறப்பதற்கு முன் அவை என்ன பாவம் செய்தன? அல்லது ஆதாம் செய்த பாபத்திற்காகக் கஷ்டப்படுகின்றனவா? இப்படியும் கருணை உள்ள ஒரு இறைவன் எப்படிச் செய்ய முடியும்?
10) சில குழந்தைகள் பிறந்தவுடன் இறந்துவிடுகின்றனவே? அக்குழந்தைகளின் கதி என்ன?
10. அ.) அவை சுவர்க்கத்திற்குப் போகின்றன என்றால், நம்மையும் பிறந்தவுடன் இறக்குமாறு செய்திருக்கலாமே? ஏன் அந்த குழந்தைகளுக்கு மாத்திரம் எளியதாகச் சுவர்க்கம் போக வழி வகுக்கிறார்? இது பாரபட்சம் இல்லையா?
10. ஆ.) அவை நரகத்துக்குப் போகின்றன என்றால், கேட்கவே வேண்டாம் ஜெஹோவாவின் “கருணையைப்” பற்றி.
11) பிறக்கும் குழந்தைக்குப் பாவமே இல்லை என்றால், பிறந்தவுடன் பெற்றோர்கள் கொன்று விட வேண்டியது தானே? பாவமே செய்ய வாய்ப்பு இல்லாததனால் நேராக ஸ்வர்க்கத்திற்குச் சென்று விடுமே? அப்படிச் செய்யும் பெற்றோர்களை “ஆஹா, என்ன கருணை, என்ன கருணை” என்று கொண்டாடுவீர்களா?
செப்ரெம்பர் 3, 2010 at 4:46 முப
அசோக்,
// அமலேக்கியர்கள் அப்பாவிகளா? ஏதோ அமலேக்கியர்கள் வீட்டுல போய் தங்கிட்டு வந்த மாதிரி பேசறீங்க. //
பெண்டு, சிசு, ஆடு, மாடு, புல் பூண்டு எல்லாம் அப்பாவிகள் இல்லையா? இனப்படுகொலையை ஆதரிக்கிறீர், பேஷ்!
செப்ரெம்பர் 3, 2010 at 5:05 முப
// அதைப் போக்கிக் கொள்ள உண்மையான ஆர்வமும் இருந்திருந்தால், வேறு சிலரைப் பற்றிக் கேட்டிருக்கலாம். மிக அருமையாக விளக்கமும் சமாதானமும் கூறியுருப்பார். //
ஐயா,
நீங்கள் ஆயிரக்கணக்கில் ஆன்மீக(???) புத்தகங்கள் வைத்து இருப்பீர்கள். ஆனால், எது உண்மை எது போலி என்ற சர்ச்சை உங்களுக்குள்ளேயே இருக்கும். கோடிக்கணக்கில் தெய்வங்கள்(???) வைத்து இருப்பீர்கள், அதிலும் எது உண்மை என்று சர்ச்சை. இதுதான் இப்போது இந்தியாவில் நாம் காணும் இந்துமதம். இதில் யார், எங்கு சென்று உண்மையை அறிந்து கொள்வது.
//ஆயிரம் பேர் நம்பிவிட்டால் பிட் நோட்டீஸும், ரயில்வே ஸ்டாண்ட் கவர்ச்சிப் புத்தகமும், இடைச்செருகலும் உண்மையாகிவிடாது.//
மொத்த உலகமும் நம்பினாலும், நீங்களும் நானும் நம்பினாலும், இடைச்செருகல் உண்மையாகாது. உண்மை பொய்யாகாது.
ஆனால், எது இடைச்செருகல் என்பதே கேள்வி.
////
த1) “வேண்டுதல் வேண்டாமை இல்லாத” இறைவனுக்கு எப்படி “தன் மக்கள்” என்று ஒரு குழுவினரை மாத்திரம் சொந்தம் கொண்டாட முடியும்?ன் மக்கள் என்று தேவன் இனம்பிரிக்கவில்லை. பிரித்தது மக்களே. நான் உன் பிள்ளை அல்ல, நான் உன்னை சேவிக்காமல், மற்றவற்றை சேவிப்பேன் என்று பிரிந்து போனவர்கள்தான் மற்றவர்கள். யேகோவாவை தன் தேவனாக ஏற்றவர்கள் அவர் மக்களானார்கள்.
தன் மக்காளாய் இருந்தாலும், அவர்கள் தவறு செய்யும்போது அவர்களுக்கு அடிமைத்தனத்தையும், தோல்விகளையுமே தேவன் அவர்களுக்கு அனுமதித்தார். அவர் நீதியுள்ள நியாயாதிபதி.
//சில்சாமும் நீங்களும் மாதா வழிபாட்டை அங்கீகரித்ததாகச் சில்சாமின் தளத்தில் படித்த ஞாபகம். நீங்களோ, கத்தோலிக்கர் இல்லை என்று கூறுகிறீர்கள். எப்படியோ, உங்கள் இஷ்டம்.//
இப்படிதான், ஒருவர் மீது தப்பான அபிப்பிராயம் வந்துவிட்டால், அவர்கள் செய்யாததும் செய்ததுபோல் தோன்றுமாம்.
மற்ற கேள்விகளுக்கு விரிவா பதில் சொல்லறேன். இப்போ எனக்கு தூக்கம் தூக்கமா வருது. குட் நைட்.
அசோக்
செப்ரெம்பர் 3, 2010 at 8:47 முப
அசோக் குமார்,
//
இதில் யார், எங்கு சென்று உண்மையை அறிந்து கொள்வது.
//
இதிலிருந்து உங்களுடைய மதமாற்றம் அறிவுப்பூர்வமான/ஆராய்ச்சிபூர்வமான/தத்துவரீதியான/தர்க்கரீதியான ஒரு முடிவு இல்லை, சௌகர்யத்தைத் தேடி எடுத்த முடிவு என்று தெரிய வருகிறது. இதை வெளியிட்டதற்கு நன்றி.
நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால், “மேலோட்டமாகப் பார்த்தால் புரிய எளியதாக இருக்கிறதே” என்ற முட்டாள்தனமான காரணத்திற்காகப் பலர் சென்று விடுகிறார்கள் போலிருக்கிறது.
“Differential calculus, analytical geometry, partial differential equations இதெல்லாம் புரிவதற்குக் கடினமாக உள்ளது. ஆதலால் இரண்டாம் கிளாஸ் கணிதத்தை வைத்துக்கொண்டு ஏரோப்ளேன் டிசைன் செய்கிறேன்” என்று ஒருவர் கூறுகிறார். “அந்த இரண்டாம் கிளாஸ் கணித மேதை பண்ணும் ஏரோப்ளேன் தான் ஒசத்தி, முதுகலை கணிதம் கற்றவர் கட்டும் ஏரோப்ளேன் புரிவதற்குக் கடினமாய் இருப்பதால் தாழ்ந்தது” என்று கூறினால் நீங்கள் சிரிக்க மாட்டீர்களா?
சனாதன தருமம் மிகவும் complex-ஆன belief system. இதைச் சரியாகப் புரிந்துக் கொள்வதற்குப் பொறுமையும் நடுநிலைமையும் ஆன்ம முதிர்ச்சியும் வேண்டும்.
இந்த முயற்சியைச் செய்ய அவகாசம் இல்லாதவருக்கு (அல்லது) செய்யச் சோம்பேறித்தனப்படுபவர்களுக்கு “கர்த்தர் ஒரே கடவுள். ஜகத்தை ஜீ பூம் பா பண்ணி சிருஷ்டித்தார். சிலைகளைத் தொழாதே. ஞாயிறு தோறும் திருச்சபைக்கு வா” என்பது ஸிம்பிளாகத் தோன்றும். இது இருக்க ஏன் சில முட்டாள்கள் சிரமப்பட்டு பல வருடங்கள் ஆசார்யனிடம் பயின்று உபநிஷத்துக்களையும் கீதையையும் ஆழ்வார் பாசுரங்களையும் ஈட்டுரைகளையும் ஒருங்கேவிட ஆராய்கிறார்கள்?
கிறித்தவத்தையும் விட ஸிம்பிளான ஒன்றைச் சொல்லுகிறேன்: “கடவுள் என்ற ஒரு வஸ்து இல்லவே இல்லை. (அசோக் அவர்கள் கூறும் logic-ஐ எதிரொலித்து) பைபிள் கூறுவது உண்மையா இல்லை கட்டுக்கதையா என்று யார் எங்கு போய்ச் சென்று உண்மையை அறிந்துக் கொள்வது? என்ன வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் செய்துக் கொண்டு ஜாலியாக இரு.”
(தற்போது இதை நோக்கித் தான் தற்போதைய மேலை நாடுகள் சென்று கொண்டிருக்கின்றன.)
// மற்ற கேள்விகளுக்கு விரிவா பதில் சொல்லறேன். //
ஆவலுடன் அடுத்த ரவுண்டுக்குக் காத்திருக்கிறேன்.
செப்ரெம்பர் 3, 2010 at 9:50 முப
அட்ரா சக்க…
இந்து மதம் ஒரு கடல்.
கிருத்தவம், இசுலாம் எல்லாம் ஊரில் இருக்கும் கிணறு மாதிரி.
அதில் இருக்கும் தவளைகளுக்கு கடல் என்றால் என்ன தெரியும் ? தன் கிணரைவிட பெரியதா கடல் என்று கேட்க்கும். அப்படித் தான் ஏசுகுமாரின் கேள்விகள் உள்ளன.
செப்ரெம்பர் 3, 2010 at 7:36 பிப
இந்துமதம் கடல்தான், அதனால்தான் உண்மையான ஆன்மீக தாகத்திற்கு பயன்படாமல் இருக்கு.
செப்ரெம்பர் 4, 2010 at 7:15 முப
உப்புத் தண்ணிக் கெணத்துல இருந்துகிட்டு ஆன்மீக தாகம் தீருமா ?
கடலில் இருந்தாலாவது கரை ஒதுங்கலாம். ஏதாவது நல்ல தண்ணி ஊற்று இருக்கும் தீவை அடையலாம். குறைந்த பட்சம் நம்பிக்கையாவது இருக்கும்.
செப்ரெம்பர் 3, 2010 at 3:45 பிப
நாம சரியோ இல்லையோ, அடுத்தவனை தப்புன்னு சொல்லறதுக்கு நீங்கெல்லாம் அலையறது புரியுது. எனக்கு இந்துமதம் புரியலன்னா நான் நாத்திகனாகவோ, இஸ்லாமியனாகவோ, பௌத்தனாகவோ ஆகி இருக்கலாமே.
ஏன் கிறிஸ்த்துவத்தை தழுவ வேண்டும்? பேசுவதற்கு முன் யோசிக்கணும். அடுத்தவனை தாக்கினால் போதும் என்ற உங்கள் எண்ணம் நன்றாக தெரிகிறது.
கிறிஸ்த்துவத்தை பற்றிய உங்கள் ஞானம் இங்கு பலரும் அறிந்ததே. கிணற்று தவளை யார் என்று உங்களுக்கே தெரியும். கண்ணாடியை பாரும். கத்தோலிக்கம் என்பது என்ன என்று தெரியாமல் நாங்கள் கத்தோலிக்கத்தை ஆதரித்து பேசுகிறோம் என்று கூறியவர் நீர்தானே.
மேலும் இந்துமதம் எனக்கு புரியவில்லை என்று நான் சொல்லவில்லை. இந்துமதம் குழப்பமானது என்றும், இங்கே நிறைய பேருக்கு தெரியாது என்றும் சொல்கிறேன். (மேலும், உங்களுக்கு வக்காலத்து வாங்கும் ஒருவருக்கு தன் பெயரே எழுத தெரியவில்லை). இந்துமதம் மனிதனால் உண்டாக்கப்பட்டது என்றும் மெய்தேவனுக்கும் அதற்க்கும் சம்பந்தம் இல்லை என்றும் புரிந்துள்ளது. இதற்காக மீண்டும் என்னுடன் சண்டை கட்ட வேண்டாம். உங்களுக்கு கிறிஸ்த்துவம் புரியவில்லை என்று நாங்கள் உங்களுடன் சண்டை கட்டுகிறோமா என்ன.
ஒரு விஷயம் அதிமேதாவித்தனமாய், குழப்பமானதாய் இருப்பதால் மட்டும் அது உண்மையாகி விடாது.
கிறிஸ்த்துவம் சிம்பிள் தான். ஒரு தாயின் அன்பை புரிந்து கொள்ளவதை போன்றது. ஒரு குழந்தைகூட புரிந்துகொள்ளகூடியது. நீங்கள் சொல்கின்ற அந்த ஒன்றிரண்டு சட்டங்கள் கூட கிடையாது. வெறும் அன்பும் சத்தியமும்தான். தேவன் தன்னை நேசிக்கிறார் என்று புரிந்து கொண்டாலே பாதி கிறிஸ்துவம் புரிந்துவிடும். நமது உண்மை நிலையை புரிந்துகொண்டால் மீதியும் புரியும்.
இங்கே எழுதியுள்ள கிருஸ்துவர்களை பாருங்கள். யாரும், உங்களை கிருச்த்துவதிர்க்கு வா என்று கூப்பிடவில்லை. யோசித்துபாருங்கள், உண்மையை அறிந்து கொள்ளுங்கள் என்றே சொல்கிறார்கள். நீங்கள்தான் எங்களை, உங்கள் மார்க்கத்திற்கு (இந்துத்துவம்) வராவிட்டாலும் பரவாஇல்லை, கிறிஸ்த்துவத்தை விட்டு நாத்திகர்கலாவது ஆகிவிடுங்கள் என்கிறீர்கள்.
//ஆவலுடன் அடுத்த ரவுண்டுக்குக் காத்திருக்கிறேன்.//
என்ன சார், இங்க boxing match நடக்குதா என்ன? நான் உங்க கூட போட்டிபோடலை, என் புரிதலை உங்களுக்கு புரியவைக்கிறேன்.
Ashok
செப்ரெம்பர் 3, 2010 at 7:46 பிப
திரு CHILLSAM அவர்களே,
///நாங்கள் இந்து வேதங்களைக் கற்றுத் தேர்ந்தவர்களிடம் பயின்று அதன்படி எங்களைச் சுற்றிலும் எதுவுமில்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து மெய்ப்பொருளைத் தேடியலைந்து அண்டிக்கொண்டவர்கள்; எங்களை யாரும் மதம் மாற்றவில்லை///
மாயா,இன்கா போன்ற பல நாகரீகங்களை அழித்த,இன்னும் பல நாகரீகங்களை அழித்துக்கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களின் மதம் மாற்றும் செயலின் விளைவாக பல மொழிகளில் அச்சடிக்கப்பட்ட ஜெஹோவா மற்றும் இயேசு புராணமான பைபிளைப் படித்து நீங்கள் மதம் மாறவில்லை என்று கூறுகிறீர்களா???
செப்ரெம்பர் 3, 2010 at 8:02 பிப
இது open forum-தான். ஆனால் அடித்துக் கொள்ளவும் ஒரு லிமிட் வேண்டும்.
கந்தர்வனின் நிலை தெளிவு. விஷ்ணுவே பரம்பொருள். மற்ற ஹிந்து தெய்வங்களை ஏத்தி விஷ்ணுவை தாழ்த்தும் ஹிந்து மத legends எல்லாம் இடைச்செருகல்கள், புளுகுகள், திரிபுகள். ஹிந்து மதக் கடவுளருக்கே இந்த கதி என்றால் ஜெஹோவாவின் நிலை என்ன என்று சொல்ல வேண்டியதில்லை. . இதை அவர் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் பல விதங்களில் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் நிலையில் உள்ள முரண்பாடுகள் என்று நாம் சுட்டிக் காட்டும் எதையும் அவர் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. அவருடைய நம்பிக்கைக்கு அவர் நேர்மையாக இருக்கிறார்.
சில்சாம், அசோக் குமார் ஆகியோரின் நிலையம் தெளிவு. ஹிந்து மதத்தைப் பற்றி அறிந்த வரையில் அவர்களுக்கு திருப்தி இல்லை, மதம் மாறி இருக்கிறார்கள். அவ்வப்போது அவர்களே ஹிந்து மதக் கடவுள்களை தாழ்த்தி பேசினாலும் அடுத்த மதத்தினரை தாழ்த்தி பேசுவது சரி இல்லை என்று சொல்கிறார்கள்.
என் நிலையம் தெளிவு. ஒரு தெய்வத்தை ஏத்தி இன்னொரு தெய்வத்தை தாழ்த்துவதில் எனக்கு எந்த அர்த்தமும் தெரியவில்லை. எந்த மத legends -இல் தேடினாலும் முரண்பாடுகள் கிடைக்கும் என்று கருதுகிறேன்.
நம்பிக்கையைப் பற்றி அடித்துக் கொள்வதில் ஒரு பயனும் இல்லை. இத்தோடு நிறுத்திக் கொள்வோமே!
செப்ரெம்பர் 3, 2010 at 8:20 பிப
திரு அசோக் குமார் கணேசன் அவர்களே,
///இந்துமதம் குழப்பமானது என்றும், இங்கே நிறைய பேருக்கு தெரியாது என்றும் சொல்கிறேன்///
///கிறிஸ்த்துவம் சிம்பிள் தான். ஒரு தாயின் அன்பை புரிந்து கொள்ளவதை போன்றது. ஒரு குழந்தைகூட புரிந்துகொள்ளகூடியது. நீங்கள் சொல்கின்ற அந்த ஒன்றிரண்டு சட்டங்கள் கூட கிடையாது. வெறும் அன்பும் சத்தியமும்தான்.///
நல்லவன் கடவுளிடம் செல்கிறான்- இந்துமதம்,
தீயவனாக இருந்தாலும் ,இதுவரை தான் வணங்கி வந்த கடவுளை வணங்குவதை விட்டுவிட்டு,இயேசுவை மட்டும் கடவுளாக ஏற்று பாவமன்னிப்பு கேட்கிறவன்,கடவுளிடம் செல்கிறான் -(மத மாற்றிகள் கூறும்) கிருஸ்தவ மதம்.
எல்லா கடவுளும் ஒரே இறைவனின் வெவ்வேறுப் பெயர்களே,எல்லா வழிகளும் அந்த ஒரே இறைவனை அடைய உதவும் வெவ்வேறு பாதைகளே – இந்து மதம்.
என் கடவுள் மட்டுமே உண்மையான கடவுள்,என் மதத்தால் மட்டுமே கடவுளிடம் செல்ல முடியும்,மற்ற கடவுளை வணங்குபவர்கள்,மற்ற மதத்தவர்கள் எவ்வளவு நல்லவர்களாக,பிறர் துயர் துடைப்பவர்களாக இருந்தாலும்,ஒரு பாவமும் செய்யாத பிஞ்சுக் குழந்தையாக இருந்தாலும் அவர்கள் கடவுளை அடைய முடியாது ,நிரந்தர எரி நரகத்திற்கே செல்வர்,-(மத மாற்றிகள் கூறும்) கிருஸ்தவ மதம்.
செப்ரெம்பர் 8, 2010 at 7:31 பிப
தனபால்,
நண்பர் RV “போதும்” என்று சொல்லியபோதும் இங்கே இந்த உரையாடலை தொடர எனக்கு விருப்பம் இல்லை. மேலும், தாங்கள் தான் திருச்சிக்காரனோ என்ற சந்தேகம் எனக்கு நெடுநாளாய் உண்டு. உங்களுக்கு உண்மையிலேயே உங்கள் கேள்விகளுக்கு விடைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், நண்பர் சில்சாமின் தளத்தில் கேளுங்கள். உடனக்குடன் பதில் கொடுக்கிறேன். தாங்கள்தான் திருச்சிக்காரன் என்றால், நீங்கள் தயவு செய்து அங்கு வரவே வேண்டாம். I don’t encourage Hypocrites.
Ashok
செப்ரெம்பர் 3, 2010 at 8:54 பிப
My transliteration is not working. Sorry for the English response.
Shri RV
I have given quotes from authentic works (commentaries) of Sri Adi Sankara Bhagavatpada with links. I did not see any response for that either.
செப்ரெம்பர் 4, 2010 at 2:27 முப
கந்தர்வன், உங்களுடன் இந்த விஷயத்தில் பேசுவது வீண் என்ற முடிவுக்கு வந்தாயிற்று என்று பல முறை சொல்லிவிட்டேன். சங்கரரின் அத்வைதம் என்பது விஷ்ணுவை ஏத்தும் கோட்பாடு என்று நான் ஏற்றுக் கொள்வதற்கில்லை. நீங்கள் கொடுக்கும் சுட்டிகளின் நம்பகத்தன்மையை ஆராய எனக்கு இப்போது பொழுதும் இல்லை. நீங்கள் ஏற்றுக்கொண்ட ஹிந்து மதக் கூறுக்கு நீங்கள் நேர்மையாக இருக்கிறீர்கள் என்றும், ஹிந்து மதக் கோட்பாடுகளில் உங்களுக்கு நல்ல பரிச்சயம் இருக்கிறது என்றும் முழு மனதோடு சொல்வது மட்டுமே இப்போது முடியும்.
,
செப்ரெம்பர் 3, 2010 at 9:12 பிப
/// நம்பிக்கையைப் பற்றி அடித்துக் கொள்வதில் ஒரு பயனும் இல்லை. இத்தோடு நிறுத்திக் கொள்வோமே! ///
அதுக்குள்ளேவா…?
சாலமன் பாப்பையாவைப் பார்த்தா கொஞ்சம் வந்திட்டு போகச் சொல்லுங்கண்ணே..!
செப்ரெம்பர் 3, 2010 at 9:48 பிப
கந்தர்வன்,
அரைகுறை வெளிச்சத்தில் பார்த்தால், கயிறும் பாம்பாகத்தான் தெரியும். வேதத்தை அரைகுறையாக படித்தால், இப்படித்தான் தப்பும் தவறுமாக புரியும். நீர் சொன்ன வசனங்களுக்கு முந்தைய சில வசனங்களையும் வாசித்து பாரும்.
இந்த இடத்தில் நாத்தான் என்னும் தீர்க்கதரிசி அடுத்தவன் மனைவியை அபகரித்துக்கொண்ட தாவீதுக்கு சாபம் இடும் இடமே நீர் குறிப்பிடும் வசனம். ஏதோ, அந்த பெண்ணை கற்பழிக்க அவனை யெகோவாவே தூண்டியது போல் பேசுகிறீர்கள்.
அந்த கால கட்டத்தில் ஒருவன் கண்ணை நீ ஊனப்படுத்தினால், உமது கண் ஊனப்படுத்தப்படும். அதுவே தண்டனை. அடுத்தவன் பெண்டாட்டியை அபகரித்துகொண்ட தாவீதுக்கு, அவன் மனைவிகளில் ஒருத்தி அபகரிக்கபடுவதே தகுந்த தண்டனை.
மேலும், அது கற்பழிப்பு என குறிப்பிடப்படவில்லை. அவள் நல்லவளா என்றோ, அவள் விருப்பமின்றி அது நடந்ததா என்றோ குறிப்பிடப்படவில்லை.
செப்ரெம்பர் 4, 2010 at 4:44 முப
திரு ஆர். வீ சார்,
// நீங்கள் கொடுக்கும் சுட்டிகளின் நம்பகத்தன்மையை ஆராய எனக்கு இப்போது பொழுதும் இல்லை. //
நான் கொடுத்துள்ள சுட்டி 1930-களில் அல்லாடி மகாதேவ சாஸ்த்ரி அவர்களால் தொகுக்கப்பட்ட (இவர் வைணவர் இல்லை என்பது அவருடைய பெயரை வைத்தே தெரிந்துக்கொண்டுவிடலாம்) “Bhagavad Gita with the commentary of Adi Sankara” மைசூர் பல்கலைக்கழகப் பதிப்பின் scanned pages. ஆதி சங்கரர் கீதை பாஷ்யம் பண்ணியுள்ளதாக நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
// சங்கரரின் அத்வைதம் என்பது விஷ்ணுவை ஏத்தும் கோட்பாடு என்று நான் ஏற்றுக் கொள்வதற்கில்லை. //
எதை வைத்து இந்த முடிவுக்கு வந்தீர்கள் என்று தெரியவில்லை. சரி, அப்படியானால் சங்கரரின் அத்வைதம் எது? “கடவுள்களுக்குள் உயர்ந்தது தாழ்ந்தது இல்லை” என்ற கொள்கையா? இதற்கு நேர் எதிராக பாஷ்யத்தில் பல இடங்களில் சங்கரர் “பிரமன் முதல் புல் ஈறாக அனைத்தையும் ஆளும் சர்வேச்வரன்” என்று விஷ்ணுவைப் பற்றிக் கூறியுள்ளார்.
// நீங்கள் ஏற்றுக்கொண்ட ஹிந்து மதக் கூறுக்கு நீங்கள் நேர்மையாக இருக்கிறீர்கள் என்றும், ஹிந்து மதக் கோட்பாடுகளில் உங்களுக்கு நல்ல பரிச்சயம் இருக்கிறது என்றும் முழு மனதோடு சொல்வது மட்டுமே இப்போது முடியும். //
விவாதம் வேண்டாம் என்றால் உங்கள் இஷ்டம்…
செப்ரெம்பர் 4, 2010 at 5:11 முப
அசோக் குமார்,
முதலில்,
// அடுத்தவன் பெண்டாட்டியை அபகரித்துகொண்ட தாவீதுக்கு, அவன் மனைவிகளில் ஒருத்தி அபகரிக்கபடுவதே தகுந்த தண்டனை. //
மிக அருமையான நியாயம்… தகப்பன் செய்த தவறுக்காக பிள்ளையைக் கடத்திக் கொல்வதாம், கணவன் செய்த பாவத்திற்காக மனைவியைக் கற்பிழக்க வைப்பதாம். நீங்கள் கூறுவதை எல்லாம் ஆவணப்படுத்தவேண்டும்.
// ஏதோ, அந்த பெண்ணை கற்பழிக்க அவனை யெகோவாவே தூண்டியது போல் பேசுகிறீர்கள். //
யெகோவா தான் சொல்லி இருக்கிறார், சரியாகப் படித்துவிட்டு எழுதுங்கள்:
2Sam 12:11-12
King James Version:
// Thus saith the LORD, Behold, I will raise up evil against thee out of thine own house, and I will take thy wives before thine eyes, and give them unto thy neighbour, and he shall lie with thy wives in the sight of this sun.
12 For thou didst it secretly: but I will do this thing before all Israel, and before the sun. //
New International Version:
// 11 This is what the LORD says: ‘Out of your own household I am going to bring calamity upon you. Before your very eyes I will take your wives and give them to one who is close to you, and he will lie with your wives in broad daylight.
12 You did it in secret, but I will do this thing in broad daylight before all Israel.’ //
இரண்டு வர்சன்களிலும் “நான் செய்வேன், நான் உன் மனைவியரை அபகரிக்கப் போகிறேன்” என்று வருகிறது. இது யெகோவாவின் உந்துதல் இல்லாமல் வேறு என்ன?
// அவன் மனைவிகளில் ஒருத்தி //
“wifes” என்று மிகத் தெளிவாக plural-ஆக உள்ளது. பைபிளைச் சரியாகப் படித்து விட்டு எழுதுங்கள்.
// மேலும், அது கற்பழிப்பு என குறிப்பிடப்படவில்லை. அவள் நல்லவளா என்றோ, அவள் விருப்பமின்றி அது நடந்ததா என்றோ குறிப்பிடப்படவில்லை. //
முன்னுக்குப் பின் முரணாக எழுதுகிறீர்கள். முந்தின வரியில் “அபகரிக்கப்படுவதே தண்டனை” என்று எழுதிவிட்டு, “விருப்பமின்றி அது நடந்ததா” என்று கூறுகிறீர்கள். ஒருவரை “அபகரிப்பது” என்றால் அவர் விருப்பமின்றி கொண்டுப் போவது என்று தெளிவீராக. முதலில் காட்டிய இடத்திலேயே “i shall take your wives” என்று யெகோவா கூறுகிறார். நீங்கள் “அவளுடைய விருப்பமின்றி நடந்ததா என்று தெரியவில்லை” என்று எழுதுகிறீர்கள்.
செப்ரெம்பர் 4, 2010 at 9:03 முப
Sorry for not visiting here. I need to reply to him who wrote the following. It may make things clear to him as well as people like him.
“உனக்கு ஒழுங்கான உண்மையான வைணவன் வைக்கிறான்யா ஆப்பு. வாங்கிக்க. எல்லாமே ஒனக்குத் தான்.
ஐயா, கந்தர்வன்,
நீங்க யாரா இருந்தாலும் எங்கன இருந்தாலு சீரும் சிறப்புமா வாழனும்யா. நல்லா வைங்கய்யா பயிண்டுக்குப் பாயிண்டு நச்சு நச்சுன்னு வைங்கய்யா.
இந்த கத்தோலிக்கப் பாதிரிப் பய. 5 ரூ புத்தகத்தை வாசிச்சுட்டு கன்னா பின்னான்னு கண்ட இடத்துல வைணவத்தைப் பத்து எழுதிவைக்கிறான். ரொம்ப டேஞ்சரான ஆளு அவன்.
உள்நோக்கத்தோட தான் எல்லா உரயாடல்லையும் கலந்துக்குவான்.”
My reply:
என்னிடம் நாலாயிரத் திவ்ய ப்ரபந்தம் இருக்கிறது; விவிலயம் இருக்கிறது; குராணும் உண்டு.
அனைத்தும் நல்லிணக்க நண்பர்களால் என்குணமறிந்து வழங்கப்பட்டன.
ஆக, 5 ரூபாய் கூட நான் கொடுக்கவில்லை நாலாயிரத்துக்கு. அதற்கு விலையேது?
கந்தவ்ர்னைப்பற்றி நான் ஏற்கன்வே சொல்லிவிட்டேன். அவர் ‘உண்மை வைணவன்’ ஆக இருக்க்லாம். ஆனால், அவர் ‘சிரி வைணவன்’ இல்லை.
சிரிவைணவம் என்பது, வேதங்களையும் உபனிடதக்கருத்துகள் திருவாய்மொழிவாயிலாக தமக்கு வருவதாக எண்ணுபவர்கள். எனவே அப்பனுவலை, ‘திராவிட வேதம்’ என்றழைத்தார் இராமானுஜர்.
இவர்கள், சங்கரரின் ‘கீதா பாஷயத்தை’ படிப்பதில்லை. அதைப்ப்ற்றிப் பேசுவதுமில்லை. சிவனை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
வேதங்கள் மகாவிஷ்ணுவாலே எழுதவைக்கப்பட்டன என்றும், அல்லது, மகாவிஷ்ணுவின் பரத்துவத்தை மானுடருக்குச் சொல்லவே எழுந்தன என்றும் இவர்க்ள் எண்ணிவாழ்கிறார்கள்.
இவர்கள் கோயில்களில் சிவனுக்கோ, பார்வதிக்கோ, நவக்கிரகங்களுக்கோ, அம்மனுக்கோ (இதில் விஷ்ணுவின் மனைவி ‘பிராட்டி’யைச் சேர்க்கவில்லை. அவ்ர் தாயார் என அழைக்கப்பட்டு தாயார் சன்னதி உண்டு) சன்னதிகள் இருப்பதில்லை.
இவர்கள் மகாவிஸ்ணு, ம்ற்றும் விஸ்ணு அவதாரங்களையும், நித்திய சூரிகள் என அழைக்கப்படும் celestials களையும் (நித்திய சூரிகள் எனபவை வைகுண்டத்தில் எப்போதும் விஸ்ணுவைச்சுற்றியிருப்பவர்கள் – கருடன், ஆதிசேசன்) போன்று), ஆழ்வார்களில் – குறிப்பாக நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், மற்றும் ஆச்சாரியர்களில் – இராமானுஜர், தேசிகந் போன்று- மட்டுமே இவர்கள் கோயில்களின் சன்னதி உண்டு. – தமிழ்நாட்டிலிருந்தால். மற்றும் இராமானுஜரால் உருவாக்காப்ட்ட அண்டைமானிலக்கோயில்களாகயிருந்தால் – எ.டு. திருநாராயணபுரம், சிரிரங்கப்பட்டணம், ஹலபீடு சென்னக்கேசவா கோயில்)
இவர்கள் மதம் ஆழ்வார்கள் சித்தாந்தம் எனவும் இராமானுஜ தர்சனம் எனவும் வழங்கப்படும். இவர்களின் தத்துவம் இராமனுஜரால் சொல்ல்ப்பட்டு, தேசிகன் போன்ற ஆச்சாரியர்களால் வரையறைசெய்யப்பட்ட, விசிஸ்டாத்துவைதமாகும். இது சங்கரை மறுப்பது. சங்கரின் அதவைத்தைதை – மாயா வாதம் என இகழும்.
இதற்கு மாறாக, எவரும் தங்களை வைணவன் என்று சொல்லிக்கொண்டு சங்கரைப்பற்றி எழுதிக்கொண்டிருந்தால், அவர்கள் வெறும் வைணவன் என அழைத்துக்கொள்ளலாம். ஆனால் அவர்கள் இடத்திலேயே இருந்து கொளள்வேண்டும்.
ஆழ்வார்களும் நான் சொல்வதைத்தான் சொல்கிறார்கள் என்று சொல்ல்க்கூடாது.
சிரிவைணவம் வேறு; வைணவம் வேறு. இங்கு நுழைந்து இதுவும் அதுவும் ஒன்றுதான் என்பது சிரிவைணவத்துக்கும் ஆழ்வார்களுக்கும் ‘ஆப்பு’ வைக்கும் வேலையாகும்.
இப்போது ஆருக்கு ஆர் ஆப்பு வைக்கிறார்கள் அனானிமஸ்?
செப்ரெம்பர் 4, 2010 at 9:52 முப
ஜோ,
// கந்தவ்ர்னைப்பற்றி நான் ஏற்கன்வே சொல்லிவிட்டேன். அவர் ‘உண்மை வைணவன்’ ஆக இருக்க்லாம். ஆனால், அவர் ‘சிரி வைணவன்’ இல்லை. //
ஏதோ என்னை ரொம்பத் தெரிந்தது போல அடித்துச் சொல்கிறீர்கள்.
ஸ்ரீ்வைஷ்ணவம் பற்றி சரியாகப் புரிந்துக் கொள்ளாமல், ஏதேதோ ஆதாரமற்ற பிதற்றல்களை உளறுகிறீர்கள்.
// சிரிவைணவம் என்பது, வேதங்களையும் உபனிடதக்கருத்துகள் திருவாய்மொழிவாயிலாக தமக்கு வருவதாக எண்ணுபவர்கள் //
இப்படி எந்த ஸ்ரீ்வைஷ்ணவரும் சொன்னதில்லை. ஸ்ரீ்வைஷ்ணவர் உட்பட வைதிகர்கள் அனைவருக்கும் வேதம் வேதம் தான். அது அனாதி, எங்கிருந்தும் வருவதாக எண்ணுபவர்கள் அல்ல. நீங்கள் நம்மாழ்வாரை மோசஸ் மாதிரி எண்ணுகிறீர்கள் என்று தெரிகிறது.
// இவர்கள், சங்கரரின் ‘கீதா பாஷயத்தை’ படிப்பதில்லை. //
ஐயே… இராமானுஜர் தம் கீதா பாஷ்யத்திலும், வேதாந்த தேசிகர் சங்கரருடைய கீதா பாஷ்யத்தை எடுத்து “தாத்பர்ய சந்திரிகையில்” விமர்சிக்கிறார். இராமானுஜரும் வேதாந்த தேசிகர் சங்கரருடைய கீதா பாஷ்யத்தைப் படித்ததில்லை என்கிறீர்கள்.
// இவர்கள் கோயில்களில் சிவனுக்கோ, பார்வதிக்கோ, நவக்கிரகங்களுக்கோ, அம்மனுக்கோ சன்னதிகள் இருப்பதில்லை. //
சில திவ்ய தேசங்களில் சிவனுக்கும் சன்னிதி உண்டு. இந்த விஷயத்தை அறியாமல் எல்லாம் அறிந்தவர் போல் அடித்துச் சொல்லுகிறீர்.
//
வேதங்கள் மகாவிஷ்ணுவாலே எழுதவைக்கப்பட்டன என்றும், அல்லது, மகாவிஷ்ணுவின் பரத்துவத்தை மானுடருக்குச் சொல்லவே எழுந்தன என்றும் இவர்க்ள் எண்ணிவாழ்கிறார்கள்.
//
ஸ்ரீ்வைஷ்ணவ அறிஞரே, எந்த ஸ்ரீ்வைஷ்ணவரும் ‘வேதம் மகாவிஷ்ணுவாலே எழுதவைக்கப்படன’ என்று கூறுவதில்லை. வேதம் அனாதியாய் இருப்பதனால் அதை யாரும் எழுதியதாகச் சொல்ல முடியாது.
மேலும், வேதம் மகாவிஷ்ணுவின் பரத்வத்தைத் தெளிவாக காய்தல் உவத்தல் இல்லாமல் சொல்லுகின்றன என்றாலும், ‘கர்ம காண்டத்தில்’ காம்ய கர்மாவுக்காக (தாழ்ந்த பலன்களைச் சம்பாதிப்பதற்காக) மற்ற தேவதைகளைக் குறித்த துதியும் உண்டு. பிரமனையும் சிவனையும் துதிக்கும் ஹிரண்யகர்ப சூக்தம், ருத்ரம் சமகம், இதெல்லாம் வேதமில்லை என்று எந்த ஸ்ரீ்வைஷ்ணவரும் கூறியதில்லை. ஆகவே “வேதங்கள் மகாவிஷ்ணுவின் பரத்வத்தை மானிடனுக்குச் சொல்லவே எழுந்தன” என்று நீங்கள் ஏ-காரம் போட்டுக் கூறுவதில் உண்மை இல்லை.
// இது சங்கரை மறுப்பது. சங்கரின் அதவைத்தைதை – மாயா வாதம் என இகழும். //
வேதாந்த தேசிகர் தாத்பர்ய சந்திரிகையில் (18.66) கூறுகிறார்: “ஸ்ரீ்வைஷ்ணவ ஆச்சாரியார்கள் சங்கரருடைய அத்வைதத்தை மறுத்தார்களே ஒழிய, சங்கரர் முதலானோர் கூறுவது படி ‘நாராயணனே பரம தத்வம், பரம ப்ராப்யம், அவனை ஆச்ரயித்து நிற்பதே பரம தர்மம்’ என்பதை எல்லா ஆச்சார்யர்களும் ஒத்துக் கொள்கிறார்கள். இந்த சாரார்த்தத்தில் எங்களுக்கும் சங்கரருக்கும் எந்த வேறுபாடும் இல்லை” என்று கூறுகிறார்.
// இதற்கு மாறாக, எவரும் தங்களை வைணவன் என்று சொல்லிக்கொண்டு சங்கரைப்பற்றி எழுதிக்கொண்டிருந்தால், அவர்கள் வெறும் வைணவன் என அழைத்துக்கொள்ளலாம். ஆனால் அவர்கள் இடத்திலேயே இருந்து கொளள்வேண்டும்.//
அப்படியானால், வேதாந்த தேசிகர் ஸ்ரீ்வைஷ்ணவரில்லை என்று கூறுகிறீர்கள். ஸ்ரீ்ரங்கத்தில் புத்தூர் அக்ரகாரத்தில் பரம ஸ்ரீ்வைஷ்ணவராக வாழ்ந்து வரும் ஸ்ரீ் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் இருபதாம் நூற்றாண்டில் “சங்கரரும் வைணவமும்” என்ற நூல் எழுதி அதில் சங்கரரைப் புகழ்ந்துள்ளார். அவரும் ஸ்ரீ்வைஷ்ணவர்கள் இல்லை போலும். ஸ்ரீ் உ. வே. வேளுக்குடி வரதாச்சாரியார், ஸ்ரீ் உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன், ஸ்ரீ் அநந்தபத்மனாபாசார்யார், ஸ்ரீ் முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார் முதலானோர் சங்கரரைப் புகழ்ந்துள்ளனர். இவர்களெல்லாம் ஸ்ரீ்வைஷ்ணவர் இல்லை போலும். சங்கரரைப் புகழ்வதனால் சங்கரரை முழுதும் ஏற்கின்றனர் என்று ஆகி விடாது. சங்கரருடைய உழைப்பையும், நடுநிலைமையையும், நேர்மையையும், சிறந்த விஷ்ணு பக்தியையும் புகழ்கின்றனரே ஒழிய, அத்வைத வாதத்தை (அதாவது ‘உலகம் பொய்’, ‘ஜீவனும் ப்ரம்மமும் ஒன்று’ என்பதை) ஏற்பதாகிவிடாது.
மாற்றுக் கருத்து உள்ளவர்களை “heathens”, “idolators”, “sorcerers” என்றெல்லாம் ஏசி, அவர்களை எரித்துச் சாம்பலாக்கிய மதத்தில் இருப்பவர்களுக்கு இந்த நடுநிலைமை புரியாது.
செப்ரெம்பர் 4, 2010 at 4:42 பிப
கடைசி பத்தி தேவையற்றது. இங்கு நான் பிறமதங்களைப்பற்றி எழுதவில்லை. சிரிவைணவத்தை நானறிந்தவரையில் சொல்கிறேன்.
நிற்க.
திவ்ய தேசங்கள் என்பவை ஆழ்வார்களில் ஒருவரோ அல்லது பலராலேயோ பாடப்பட்டவை அல்லது மங்களாசாசனம் செய்யப்பட்டவை. அவை தமிழ்நாட்டில் மட்டுமல்ல், இந்தியாவிலும் நேப்பாளத்திலும் (நைமிசாரம் – திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டவை). இக்கோயில்களெல்லாம் தமிழ்நாட்டு சிரிவைணவரால் கண்ணும்கருத்துமாகப் பேணப்பட்டவையல்ல. எனவே இங்கு தமிழ்நாட்டு வைணவசம்பிரதாயப்படி வழிபாடு நடக்காது. ஏன் அங்கு போகவேண்டும்? கேரளாவுக்கே போனால், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் (நம்மாழ்வாரால் ‘கோவிந்தனாரே என்ற்ழைக்கப்பட்டு 10 பாசுரங்கள்) தமிழ்நாட்டு முறைப்படி வழிபாடு கிடையாது. தமிழ்நாட்டுக்குள்ளேயே, திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோயில் (நம்மாழ்வாரின் ஒரு பாசுரம்) தமிழ்முறைப்படியல்ல. இங்கெல்லாம் எச்சன்னதியும் இருக்கலாம்.
நான் சொல்வது தமிழ்நாட்டிலுள்ள திவ்ய தேசங்களைப்பற்றி மட்டுமே.
திருக்குறுங்குடி நம்பி கோயில் திவ்யதேசம். நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம். திருமங்கையாழ்வார் ‘திருநாடு அலங்கரித்த தலம். இங்கே சிவனுக்கு சன்னதியுண்டு. சிவன் ஒரு பக்தனாக. சிவனை ஒரு ஆபத்திலிருந்து நம்பி காப்பாற்றியத்ற்கு சிவன் நம்பியை பகதனாக வணங்கிக்கொண்டிருக்கிறார். A kind of insult. Sankarachariyaar tried to remove the sivan temple from there. The matter is now before Madras High Court. The man Thirukoottiyuur Madhavan who filed the case, was attacked by hired men sent by Sankarachaariyaar. A case has been filed against Jeyendrar for this also)
எனவே எந்த திவ்ய தேசத்தில் சிவனுக்கு சன்னதியென்று சொன்னால் நலம்.
ஓரிடத்தில் வினாயகருக்கு உண்டு. ஆனால் அதற்கும் ஒரு கதையுண்டு.
தொடர்கிறது…
செப்ரெம்பர் 4, 2010 at 4:48 பிப
நாலாயிரம் ‘திராவிட வேதம்’ என்றால், சிரிவைணவர்கள் வடமொழி வேதங்களையும் உபனிடத்துகளையும் புறந்த்ள்ளி விட்டார்கள் என்று பொருளல்ல.
நாலாயிரத்தை அவ்வேதங்களின் சாரமாகக்கொள்கிறார்கள் என்றே பொருள. வடகலையார் வடமொழி வேதங்களை முதலாகக்கொள்வர். தென்கலையார் நாலாயிரத்தை முதலாகக்கொள்வர்.
அவ்வளவுதான்.
வேதங்கள் எழுதப்பட்டன’ என்று நான் எழுதியதை டெக்னிக்கலாகப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
ஆர்.வி. முகவுரையில் சொன்னது போல நாம், அல்லது எங்களைப்போன்றவர்கள் கண்டதையும் கேட்டதையும்தான் எழுதுகிறோமே தவிர பண்டிதர்களாக எழுதவில்லை.
வேதங்கள் உண்டல்லவா? அது போதும் என்று விடுங்கள். அவை வந்தனவா? இல்லையா? அவற்றின் பொருளென்ன? என்பதெல்லாம் அதற்கென்றவிடத்தில் நீங்கள் பிறருக்குச்சொல்லலாம்.
செப்ரெம்பர் 4, 2010 at 5:08 பிப
சங்கரைத் தூற்றவில்லை. ஆனால் அவரின் மாயா வாத்த்தை இராமானுஜர் வழிவந்தோர் ஏற்றுக்கொள்ள்வில்லை.
விஸ்ணுவைப்பற்றி எவருமே பக்திப்பனுவல்களோ பாடல்களோ எழுத்லாம்.
குறையொன்றுமில்லை கண்ணா என்று இராசாசி எழுதினார். கண்ணனைப்பற்றி ஏகமாக எழுதினார் பாரதியார்.
எல்லாவற்றையுமே பஜனைப்பாடல்களாகப் படிக்கலாம். அதைப்போல சிலர் பஜ கோவிந்தத்தைப் படிக்கலாம். ஆனால் அதற்காக சங்கரரை சிரிவைணவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது திரிபு வாதம்.
வேள்விக்குடி, முக்கூர் நரசிம்மாச்சாரியார் – இவர்கள் சிரி வைணவர்களே. ஆயினும், ஆச்சாரியர்கள் இல்லை.
ஜீயர்களே ஆச்சாரியர்கள். அவர்களில் ஆரேனும் சிவனையோ அல்லது சங்கரைப்பற்றியோ வைணவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எங்காவது சொல்லியிருந்தால், இங்கு எடுத்துக்காட்டுங்கள்…நான் உடனேயே என் வைணவ சிறிய ஞானத்தை குப்பையில் தூக்கியெறிந்து விட்டுப்போய் விடுகின்றேன். ஆழ்வார்களின் பாசுரங்கள் என்னிடம் இருக்கும். ஆனால் அவற்றுக்கும் நுமக்கும் யாதொரு சம்பந்த்மில்லை என நினைத்துவிட்டுப்போகிறேன்.
நீங்கள் ஆரென்று சொல்ல்வைல்லை. சிரிவைணவாயிரு்ந்த்ால் சிவனைப்பற்றியெல்லாம் இப்படி எழுத்மாட்டீர்கள். எனவே ‘வைணவன்’என மட்டும் சொல்லிக்கொள்கிறீர்கள்?
If you call yourself simply a Vaishnavan, no problme.
This is not a personal question. It is very relevant to my argument, which is that,
a Srivaishnavan wont regard Sivan and Sankarar. He wont say anything insultingly; but never writes as you did.
All gods and goddesses are created by Mahavishnu and they serve Him in different capacities:
”நான்முகனை நாராயணன் படைத்தான்; நான்முகனும்
தான் முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான்:- யான் முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ்பொருளை;
சிந்தாமல் கொள்மின் நீர், தேர்ந்து”
– திருமழிசையாழ்வார்.
இதையேற்றுக்கொள்ளாதவன் சிரிவைணவனல்ல.
Therefore, your identity is crucial. Reveal yourself. Are your parents the descendants of followers of Sriramanujar?
செப்ரெம்பர் 4, 2010 at 5:29 பிப
”மாற்றுக் கருத்து உள்ளவர்களை “heathens”, “idolators”, “sorcerers” என்றெல்லாம் ஏசி, அவர்களை எரித்துச் சாம்பலாக்கிய மதத்தில் இருப்பவர்களுக்கு இந்த நடுநிலைமை புரியாது”
நடுநிலைமை என்பது கெட்டச் சொல். Very bad.
ஒன்று இங்கே அல்லது you are out என்பதுதான் சிரிவைணவத்தில் நிலை. A kind of religious fanaticism. But it is only in principle.
ஆனால் நீங்களோ நடுனிலமை. எனவே சிவனைப்பற்றி சிலாகித்து எழுதுகிறீர்கள்.
ஆழ்வார்கள் இல்லயேல், இராமானுஜர் தரிசனமில்லை. அஃதில்லையேல் சிரிவைணவமில்லை. ஆழ்வார்களை ஏற்றுக்கொண்டவனே சிரிவைணவன்.
இங்கே எப்படி வரும் நடுனிலைமை ? Because the position taken by Alvaars is extreme. Some may quote Puuthathtaalavaar saying Sivan and Vishnu are one and the same; but Srivaishnavites maintain Poothathaalvar intends to say that Sivan is ‘absorbed’ in Vishnu: hence, சிவனைந்த பெருமாள்.
This is an extreme postion, just like Muslims or certain sects of Christians.
You are either with us or you are a stranger to us.
If I were a Srivaishnavism, I would have nothing to do with you, and I would warn my children, as the mothers warned their chidren in Chicago when Vivekananda was putting up in the house opposite, ‘Dont go near that fellow. He is a heathen!”
For a Srivaishnavites, others are heathens. but as you wrote in the above quoted extracts, they dont abuse others, but only say as Nammaalvaars said, and you hve quoted in your first reply to me. அவ்ரவர் அறிவகை…
செப்ரெம்பர் 4, 2010 at 5:35 பிப
//இந்த கத்தோலிக்கப் பாதிரிப் பய. 5 ரூ புத்தகத்தை வாசிச்சுட்டு கன்னா பின்னான்னு கண்ட இடத்துல வைணவத்தைப் பத்து எழுதிவைக்கிறான். ரொம்ப டேஞ்சரான ஆளு அவன். //
அனானிமிஸ்
இன்று நான் ஜடாயுக்கு ஒரு பதில் எழ்தியுள்ளேன் தமிழ்.ஹிந்து.காமில். ‘ஆழ்வார் பாடல்கள்’ என்பது ஜடாயு பதிவின் தலைப்பு.
போய்படித்துக்கொள்ளுங்கள். Most welcome.
செப்ரெம்பர் 5, 2010 at 8:24 பிப
ஜோ,
உன் எண்ணம் என்ன என்று எல்லோருக்கும் தெரியும்.
வைணவமும் கிருத்தவமும் ஒன்று போல் தான் கொள்கைகள் கொண்டுள்ளன என்று நிறுவுவதே.
முடிவை எழுதிவிட்டு பின் ஆராய்ச்சி செய்வது தான் உங்கள் பழக்கம்.
ஒன்று தெரிந்து கொள். நீ 5 ரூ புஸ்தகம் படிச்சாலும் சரி, 50000 ரூ புஸ்தகம் படிச்சாலும் சரி. நீ சொல்லி வைணவத்தைப் பத்தி நான் தெரிஞ்சுக்கவேண்டிய அவசியம் எனக்கு இல்ல.
உம்ம மக்கள் மதத்தைப் பரப்ப ஏசுவுக்கு எயிட்ஸுன்னு கூட சொல்லுவீங்க. நீங்க செய்யுற பொழப்பு கூட்டிக்கொடுத்துப் பொழைப்பு நடத்துற மாமா வேலை பொழப்பு. இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு பிச்சை எடுத்து வாழலாம்.
செப்ரெம்பர் 6, 2010 at 12:28 முப
ஜோ,
// சங்கரரை சிரிவைணவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது திரிபு வாதம். //
சங்கரரை ஸ்ரீவைஷ்ணவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று நான் எங்கு எழுதினேன்? அவர் கூறியதில் ஸ்ரீவைஷ்ணவத்திற்கு விருத்தமில்லாத அம்சங்களைப் புகழ்ந்துள்ளனர் என்று தான் எழுதினேன். இதற்கும் “சங்கரரை ஏற்றுக்கொள்வதற்கும்” வித்தியாசம் உண்டு.
// ஜீயர்களே ஆச்சாரியர்கள்.//
கூரத்தாழ்வான், வேதாந்த தேசிகர் — இவர்கள் யாரும் ஜீயர் இல்லை. ஆனால் இவர்கள் ஆச்சாரியார்கள் தான். (விட்டால் “ஜீயர்களே ஸ்ரீவைஷ்ணவர்கள்” என்று எழுதுவீர் போலும்.) சரி, மறுபடியும் டெக்னிகலாகப் பிடிக்கிறேன் என்று எழுதுவீர்கள். சரி, வேதாந்த தேசிகர் சொன்னதையாவது ஏற்பீர்களா? தாத்பர்ய சந்திரிகையைப் பார்க்கவும். நான் ஏற்கனவே இதைச் சுட்டிக் காட்டியுள்ளேன்:
வேதாந்த தேசிகர் தாத்பர்ய சந்திரிகையில் (18.66) கூறுகிறார்: “ஸ்ரீ்வைஷ்ணவ ஆச்சாரியார்கள் சங்கரருடைய அத்வைதத்தை மறுத்தார்களே ஒழிய, சங்கரர் முதலானோர் கூறுவது படி ‘நாராயணனே பரம தத்வம், பரம ப்ராப்யம், அவனை ஆச்ரயித்து நிற்பதே பரம தர்மம்’ என்பதை எல்லா ஆச்சார்யர்களும் ஒத்துக் கொள்கிறார்கள். இந்த சாரார்த்தத்தில் எங்களுக்கும் சங்கரருக்கும் எந்த வேறுபாடும் இல்லை” என்று கூறுகிறார்.
//a Srivaishnavan wont regard Sivan and Sankarar. He wont say anything insultingly; but never writes as you did.//
மறுபடியும் கேட்கிறேன்… முக்கூர் நரசிம்மாச்சாரியார் ஸ்ரீவைஷ்ணவர் இல்லையா?
நான் சித்தாந்த விஷயத்திற்குச் சங்கரரை மேற்கோள் காட்டுவதில்லை. சங்கரரைப் பற்றிய விவாதத்திலும், அத்வைதிகளுடன் நடத்தும் விவாதத்திலும் தான் சங்கரரைப் பற்றி எழுதுகிறேன். அதைத் தவிர, சங்கரர் எங்கெங்கு பகவத் பக்தி பற்றியும் பகவத் பரத்வம் பற்றியும் எழுதியுள்ளதை நான் விரும்பிப் படிக்கிறேன் (இவற்றைச் சிலர் மறைக்கவும் மறுக்கவும் பார்க்கிறார்கள். இது வரை நான் விவாதித்தவர்களுள் ஆர் வீ மாத்திரம் தான் நேர்மையாக எழுதி வருகிறார்).
// ”நான்முகனை நாராயணன் படைத்தான்; நான்முகனும்
தான் முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான்:- யான் முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ்பொருளை;
சிந்தாமல் கொள்மின் நீர், தேர்ந்து”
– திருமழிசையாழ்வார்.
இதையேற்றுக்கொள்ளாதவன் சிரிவைணவனல்ல. //
இதை நான் ஏற்றுத் தான் உள்ளேன். எங்காவது நான் இந்த பாசுரத்திற்கு விரோதமாக எழுதியுள்ளேனா?
(இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைதிகனும் அல்ல. ஏனென்றால், “நாராயணாத் பிரம்மா ஜாயதே, நாராயணாத் ருத்ரோ ஜாயதே” என்ற வேத வாக்கியத்தையும், அதை ஒட்டி வியாசர் மகாபாரதத்தில் கூறிய “யத் தத் பத்மபூத் பூர்வம் தஸ்ய பிரம்மா வ்யஜாயாத, பிராம்மணச் சாபி சிவஸ் சம்பூத” என்ற வாக்கியத்தையும் ஒட்டித் தான் திருமழிசை ஆழ்வார் “நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான்” என்று பாடியுள்ளார். நாயன்மார்களைப் போல அல்லாமல், உள்ளதை மாத்திரம் தான் ஆழ்வார்கள் பாடியுள்ளனர்.)
// Therefore, your identity is crucial. Reveal yourself. Are your parents the descendants of followers of Sriramanujar? //
That ‘s none of your business, to put it very politely 🙂 Moreover, one’s parents need not be Srivaishnava for one to become Srivaishnava.
செப்ரெம்பர் 6, 2010 at 9:16 முப
கந்தர்வன், ஜோ – போதும்!
செப்ரெம்பர் 6, 2010 at 10:07 முப
Jo Amalan Rayen Fernando
அவர்கள் மிக நேர்த்தியாக எழுதி வருகிறார்கள்; உங்கள் வைணவ ஞானத்தினை சாதாரண பின்னூட்டத்தில் நிறுவிட இயலாது;
தாங்கள் விரும்பினால் எமது தளத்தில் இந்த காரியங்களைத் தொடராக எழுத அன்புடன் அழைக்கிறேன்;
http://chillsam.activeboard.com/
மேலும் தங்களது தொடர்பு மின்னஞ்சல் முகவரியையும் அளிக்க வேண்டுகிறேன்;
http://www.chillsam@yahoo.co.in
http://chillsam.wordpress.com/
சர்வவல்ல ஏகக்கடவுளான சிருஷ்டி கர்த்தாவும் பரம்பொருளும் ப்ரஜாபதியுமான சர்வேஸ்வரன் தாமே உமக்கு நீடித்த ஆயுளையும் நிறைந்த ஞானத்தையும் தந்தருள்வாராக.
பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்பது போல வைணவத்தைப் பற்றிய வாதத்தில் சம்பந்தமில்லாமல் இயேசுவை ஏன் இகழ்கிறது,அனானி கொசு..? திருடனுக்கு தேள் கொட்டியதோ..?
கந்தர்வன் இன்னும் கவர்கிறார்..!
செப்ரெம்பர் 6, 2010 at 3:29 பிப
சில்லிசிக்கன்,
ஏசுவை இகழ எந்த அவசியமும் எனக்கில்லை. ஏசுவை இகழ்ச்சிக்கு உட்படுத்துவது உம்மைப்போன்ற மதமாற்றிகள் செய்யும் சில்லுண்டித் தனம் தான்.
ta ta.
செப்ரெம்பர் 7, 2010 at 6:32 பிப
//ஒன்று தெரிந்து கொள். நீ 5 ரூ புஸ்தகம் படிச்சாலும் சரி, 50000 ரூ புஸ்தகம் படிச்சாலும் சரி. நீ சொல்லி வைணவத்தைப் பத்தி நான் தெரிஞ்சுக்கவேண்டிய அவசியம் எனக்கு இல்ல.
//
அனானிமஸ்!
நீயே தெரிந்து எனக்குச்சொல். நாலாயிரத்திவ்யபிரபந்தத்துக்கு 5 ரூபாய் விலைவைத்த நீயெல்லாம் இந்து எனச்சொல்லிக்கொள்கிறாய். என்ன கொடுமையிது!
//எயிட்ஸுன்னு கூட சொல்லுவீங்க. //
அப்படிச்சொல்ல உனக்கு ஆசை. அதை இப்படிச்சொல்லித் தீர்த்துக்கொள்கிறாய். உன்னைப்பற்றி எனக்குத்தெரியாதா?
இங்கு ‘ஏசுவை இகழ எந்த அவசியமும் எனக்கில்லை’ என்று மகா யோக்கியனாக எழுதி நடிக்கும் நீ, பல மன்றங்களில் அனானி பின்னூட்டங்கள் போட்டு ஏசுவையும் கிருத்துவமத நம்பிக்கைகளையும் திட்டித்தீர்க்கிறாய். இந்து.காமில் மன்னாருவாக வந்து கிருத்துவமத்ததை நீ திட்டிப் போட்டுக்கொண்டிருக்கும் வேசம் தெரியாதா? தமிழ்வலைபதிவுகளில், கவுண்டமணி தமிழில் எழுதிவரும் ஒரே ஆள் நீயாக இருப்பதனால், உன்னைக்கண்டு பிடிப்பது சுலபம்.
உன் மதத்தைப்பற்றி ஒருநல்ல வார்த்தை உன்னால் எழுத முடியவில்லை. ”எனக்குத் தெரியும்” என்று நொண்டிச்சாக்கு வேறு. இந்து மதம் என்றால் என்ன என்று கேட்டால் கட் அண்ட் பேஸ்டில் இறங்கி விடுகிறாய்.
ஒரு இந்துவுக்குத் தன்மதத்தில் ஆழமான புரிதலோடு பக்தி இருக்குமானால், மதமாற்றிகள் தன்னை மாற்றிவிடுவார்களோ என்ற பயம் இருக்காது. உனக்கு இருக்கிறது.
இல்லாவிட்டால், இங்கு எழுதும் இரு கிறுத்தவர்களப்போல, அல்லது ஒரு இந்து (கந்தர்வனைப்போல்) உன்னால் எழுத முடியுமா? முடியாது என்பதால்தான் அனானியாக வந்து அசிங்கமாகத் திட்டிவிட்டுப் போகிறாய்.
இந்துவோ, கிறுத்தவனோ, இசுலாமியனோ, பிறமதங்களைத் தூற்ற வேண்டிய அவசியமில்லை. அவரவர் மத்த்தை கடைபிடித்து நல்வாழ்க்கை வாழலாம். விரும்பினால், அவ்வாழ்க்கையைப்பற்றி சொல்லலாம்.
எல்லாமதங்களிலும் குறை நிறைகள் உண்டு. நிறைகளை எடுத்து குறைகளைத் தள்ளிக்கொண்டு அம்மத்த்தை ஏற்று நல்வாழ்க்கை வாழலாம்.
”யான் பெற்ற் இன்பம் இவ்வையம் பெறுவதைத் தவிர
யாமறியேன் ப்ராபரமே” என்று அவ்வாழ்க்கையப்பற்றி பிறருக்குச்சொல்லலாம். ‘Why I am a Christian?’, ‘Why I am a Hindu?’ ‘Why I am a Muslim?’ என்று வெளிப்படுத்தாலாம்.
இதெல்லாம் மதமாற்றச்செயல்கள் இல்லை.
In the final analysis, faith that is realised through a religion is a personal matter. Those who want religion to serve as their politics, can never be ‘religious’. The religious experience of truly religious life is beyond their capability.
The anonoymous mannaaru is a religious politician.
செப்ரெம்பர் 9, 2010 at 4:03 பிப
என் மார்க்கம் கிருஸ்துவே (கிறிஸ்துவம் அல்ல). கிறிஸ்துவில் குறை ஏதும் இல்லை.
செப்ரெம்பர் 7, 2010 at 6:55 பிப
”நீ சொல்லி வைணவத்தைப் பத்தி நான் தெரிஞ்சுக்கவேண்டிய அவசியம் எனக்கு இல்ல.
”
உனக்காக நான் எழுதவில்லை. பிறருக்காகவே எழுதுகிறேன். எங்கு உண்மைகள் – எனக்குத்தெரிந்த்படி – சிதைக்கப்படுகிறதோ, அங்கு எழுதிக்கொண்டு வருகிறேன். அது கண்டிப்பாக உனக்கல்ல. உனக்கு மதமேயில்லை.
இதன்படியே, தமிழ்.இந்து.காமில் வைணவ உரைகாரர்களைப்பற்றி எழுதினேன். ஏன் ஆழ்வார்களத் தமிழறிஞர்களாகப்பார்ப்பது வைணவமத்த்துக்குச் செய்யும் துரோகம் எனச்சொல்லியிருக்கிறேன்.
வைண்வப்பற்றித் தெரியாத உனக்கு எவன் என்ன சொன்னாலென்னெ என்று போய்க்கொண்டேயிருப்பான். தெரிந்தவர்கள் சும்மாயிருப்பார்களா?
அங்கு நீண்ட கட்டுரை இதே விடயத்தில் எழுதயிருக்கிறேன். ஆம் 5 ருபாய் என்று கிண்டல்டித்தாயே அதே நாலாயிரத் திவ்ய பிரப்ந்தத்தை அடிப்படியாக வைத்து!
செப்ரெம்பர் 7, 2010 at 7:31 பிப
திரு Jo Amalan Rayen பெர்னாண்டோ அவர்களே,
///இந்துவோ, கிறுத்தவனோ, இசுலாமியனோ, பிறமதங்களைத் தூற்ற வேண்டிய அவசியமில்லை. அவரவர் மத்த்தை கடைபிடித்து நல்வாழ்க்கை வாழலாம். விரும்பினால், அவ்வாழ்க்கையைப்பற்றி சொல்லலாம்///
நீங்கள் கூறிய இந்தக் கருத்து மிகவும் வரவேற்க்கத்தக்கது.ஆனால் உங்களிடம் ஒரு கேள்வி.யார் முதல் முதலில் இந்த தூற்றும் கலாச்சாரத்தை ஆரம்பித்தது?கிருஸ்தவர்களா? அல்லது இந்துக்களா?நான் சிறுவனாக இருக்கும் போது எங்கள் தெருவில் ,இரவிலும் கூட,கிருஸ்தவ மதப் பிரச்சாரர்கள் அடிக்கடி வாகனத்தில் வந்து ஸ்பீக்கர் மூலம் அதிக சத்தத்துடன் பாவிகளே,என்று அழைத்து எங்கள் கடவுள்களை சாத்தான்கள் என்றும் பூதங்கள் என்றும் கூறியதும்,எங்கள் தெருவில் உள்ளவர்கள் அந்தப் பிரச்சாரர்களிடம் வாக்குவாதம் செய்ததையும் எனக்கு மறக்க முடியாத நிகழ்வாகும்.
அனைத்து மதமும் அந்த ஒரே இறைவனிடம் செல்லும் வெவ்வேறு வழிகளே,அனைத்து கடவுளும் ஒரே இறைவனின் வெவ்வேறு பெயர்களே.இந்தக் கருத்தால் மட்டுமே மத நல்லிணக்கம் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது.ஆனால் என்மதம்,என் கடவுள் மட்டுமே உண்மை.மற்ற மதங்கள்,மற்ற கடவுள்கள் பொய் என்று கூறி மதம் மாற்ற நினைப்பவர்களால் எப்படி மத நல்லிணக்கம் ஏற்ப்படும்?????????
///எல்லாமதங்களிலும் குறை நிறைகள் உண்டு. நிறைகளை எடுத்து குறைகளைத் தள்ளிக்கொண்டு அம்மத்த்தை ஏற்று நல்வாழ்க்கை வாழலாம்///
மிகச் சிறந்த வரிகள் sir,.
செப்ரெம்பர் 8, 2010 at 9:32 பிப
//அனைத்து மதமும் அந்த ஒரே இறைவனிடம் செல்லும் வெவ்வேறு வழிகளே,அனைத்து கடவுளும் ஒரே இறைவனின் வெவ்வேறு பெயர்களே.இந்தக் கருத்தால் மட்டுமே மத நல்லிணக்கம் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது.//
தனபால்,
இந்த கருத்துக்களில் மதநல்லிணக்கம் இருக்கலாம். ஆனால் உண்மை உள்ளாதா?
உமது தெய்வத்தை மெய் என்று கூறுவது எனது வேதத்தை பொய் என்று சொல்வதற்கு சமமாயிற்றே. என்ன செய்யலாம்?
செப்ரெம்பர் 9, 2010 at 8:00 முப
திரு Ashok kumar Ganesan அவர்களே,
///இந்த கருத்துக்களில் மதநல்லிணக்கம் இருக்கலாம்.
ஆனால் உண்மை உள்ளாதா?///
அந்த ஒரே இறைவனையே நீங்கள் கர்த்தர் என்றும்,இஸ்லாமியர் அல்லாஹ் என்றும், இந்துக்கள் பிரம்மம் என்றும் அழைக்கின்றனர்.
இது உண்மையே என்று ஸ்ரீ ராமகிருஸ்னர் தன் அனுபவத்தில் unarnthu கூறுகிறார்.
///ஆனால் உண்மை உள்ளாதா?///
///உமது தெய்வத்தை மெய் என்று கூறுவது எனது வேதத்தை பொய் என்று சொல்வதற்கு சமமாயிற்றே. என்ன செய்யலாம்?///
மதங்கள் தோன்றியதே மக்கள் அன்போடும், நல்லவர்களாக ஒற்றுமையாக வாழ வழிகாட்டவே.அந்த மதமே ஒற்றுமையாக வாழ வழிகாட்டவில்லைஎன்றால் என்ன செய்யலாம்.???
எங்கள் வேதம் மதநல்லிணக்கம் ஏற்ப்பட வழிகாட்டுகிறது.எங்கள் வேத மதநல்லிணக்கக் கருத்தை உங்கள் வேதம் பொய் என்கிறது என்று கூறுகிறீர்கள் .என்ன செய்யலாம்???? மக்களுக்கு எது நல்லது???மத நல்லிணக்கமா??என் கடவுள், என் மதம் மட்டுமே உண்மை, மற்ற மதமும்,மற்ற மதக் கடவுளும் பொய் என்ற மத வெறுப்புக் கருத்தா???
செப்ரெம்பர் 9, 2010 at 3:38 பிப
//இது உண்மையே என்று ஸ்ரீ ராமகிருஸ்னர் தன் அனுபவத்தில் unarnthu கூறுகிறார்.//
ஐயா,
தேவனாய் இருந்து எனக்காக இப்பூவுலகில் பிறந்து, என் பாவங்களுக்காய் மரித்த என் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை கேட்பேனா? அல்லது, எங்கோ மந்திரதந்திரங்கள் செய்து கொண்டு, கான்செர் வந்து இறந்த ராமகிரிஷ்ணரின் வார்த்தைகளை கேட்பேனா?
//மதங்கள் தோன்றியதே மக்கள் அன்போடும், நல்லவர்களாக ஒற்றுமையாக வாழ வழிகாட்டவே.//
நீங்கள் கூறுவது பேனா என்பது முதுகு சொரியவே என்று சொல்வது போலாகும். ஆமாம், பேனாவினால் முதுகும் சொறியலாம். ஆனால் அதின் பிரதான பணி, எழுதுவது. எழுத உபயோக படாமல், முதுகு சொறியவே பயன்பட்டால், அது பேனாவுக்கு அழகா?
மதம், மார்க்கம் என்பது இறைவனை அடையும் வழியை போதிப்பது. ஒரு மார்க்கத்தின் பிரதான நோக்கம் அதுவாகத்தான் இருக்கவேண்டும்.
//மக்களுக்கு எது நல்லது???மத நல்லிணக்கமா??//
என் பேனாவை நான் எழுதவே
பயன்படுத்துவேன்.
செப்ரெம்பர் 8, 2010 at 5:20 முப
தனபால்!
மதப்பிரச்சாரம் (propogation and preachin)இந்திய அரசியலப்பில் தடை செய்யப்படவில்லை. எனவே எவரும் பிர்ச்சாரம் பொதுமேடைகளிலும் தெருசந்தியைல் மக்கள் கூடுமிடங்களிலும் செய்யலாம் அது பொது நிம்மதியைக்கெடுக்காதவரை. அதாவது, இரவில் அனைவரின் தூக்கத்தைக்கெடுக்கும்படி ஒலிப்பான்கள் அலறக்கூடாது.
இந்துக்களும் செய்கிறார்கள்: வினாயகர் ஊர்வலம், – 10 நாள் வினாயகர் சதுர்த்தி, துர்கா பூஜா, மார்கழி மாதம் ஒலிப்பனகளில் பாட்டு, ஊர்முழுக்க சுவரொட்டிகள் என்று.
உங்கள் கேள்வி: தூற்றுவது சரியா?
சட்டம் பிரச்சாரத்தை அனுமதிக்கிறது அமைதியான முறையிலும் பிறமத மக்களின் மனதைப்புண்படுத்தாதவரையிலும்.
இப்போது ஒரு மதத்தவன் மற்ற மதத்துக்கடவுளர்களைச் சாத்தான்கள் என நினைக்கிறான். அல்லது அவன் மதம் அவனுக்குச்சொல்கிறது. இதை அவன் பிறருக்குச்சொல்லி, அதாவ்து அச்சாத்தான்களை வழிபடுவதை விட்டுவிட்டு எம்கடவுளைத்தொழுங்கள் என சொல்ல ஆசைப்படுகிறான்.
இதை அவன் செய்யலாமா? செய்யலாம். எங்கே அவனே ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கே மக்களைக்கூட்டிச்செய்யலாம். அவன் அதை செய்யும்போது அது பொதுஅமைதுக்குப்பங்கம் விளைவிக்காது. இது தனிம்னித தாக்கம் இல்லை. ஒரு பொதுவான மதக்காருத்துகளே. Pentacostalists are doing that. Their preaching is done in Assemblieds of God.
Just as you have rama katha celebrations (10 day lecture by an eminent acharya on Ramayana done in public places is famous in North Indian towns), the Christians can hve சுவிசேச கூட்டங்கள்.
எடுத்துக்காட்டாக, சன் டிவியில் பார்த்திருப்பீர்கள். சாத்தான் வழிபாடு கேரளத்திலுண்டு. கோழிக்கோடு மாவட்டத்தில். இதை நீன்கள் அனுமதிப்பீர்களா உங்கள் குழந்தைகளுக்கு. மாட்டீர்கள். ஆனால், அங்கே போய் சொல்ல முடியாது.
இதைப்போலவே கிருத்துவமதப்பிரச்சாரமும்.
என் கருத்து யாதெனில்,
எந்த மதத்தைப்பற்றியும் எக்கருத்தும் கொள்ளலாம் எவரும். அதை தமக்குத் தெரிந்தோரிடம் சொல்லுமிடங்களில் சொல்லலாம்.
ஆனால் அம்மதத்தாரின் மனம்புண்படும்படி, அவர்கள் கேட்கும்படியோ, அல்லது பார்க்கும்ப்டியோ செய்யக்கூடாது. சட்டத்திற்குட்பட்டு கிருத்துவர்கள் செய்தால் என்ன பிரச்னை? அதைக்கேட்டு சிலர் அவர்கள் மதம் மாறினால் என்ன தடை?
செப்ரெம்பர் 8, 2010 at 5:26 முப
If a religion has a theology – for e.g Islam – that says all other gods and goddesses are false, only their God is true – and further asks its followers – for e.g Christianity – ‘Go and spread this Gospel” i.e Go and tell people not to worship such gods and goddesses which are nothing but satans –
Is it your case, Mr Danapal, that they should not have such a theology? Is it your case that they should say to others about their theology?
It can be the case in a theocracy where the religion of the State is the religion of everybody.
It cant be the case in a democracy like ours where any group can have any theology and they can say it to others. Only that it should not be done by force, by coercion, by inducements or by any other tricks.
It should be a plain exposition, elucidation and explantion of such theology. Maybe, songs and dances allowed as in pentacostals.
செப்ரெம்பர் 8, 2010 at 7:50 முப
(திருத்தப்பட்ட மறுமொழி)
//
அப்படிச்சொல்ல உனக்கு ஆசை. அதை இப்படிச்சொல்லித் தீர்த்துக்கொள்கிறாய். உன்னைப்பற்றி எனக்குத்தெரியாதா?
//
ஜோ, எந்த நேரத்தில் இப்படி சொன்னியோ அன்னைக்கே இப்படி செய்தி வெளியாகிவிட்டது.
http://www.hindustantimes.com/Jesus-was-HIV-positive-claims-pastor/Article1-596001.aspx
செப்ரெம்பர் 8, 2010 at 3:14 பிப
அனானிமஸ், உங்களிடம் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன், மீண்டும் அதே பாணியில் எழுதுகிறீர்கள். தனி மனித தாக்குதல்களுக்கு இங்கே இடமில்லை. உங்கள் மறுமொழி இந்த ஒரு முறை திருத்தப்படுகிறது. இப்படியே தொடர்ந்தால், மறுமொழிகள் நீக்கப்படும்.
பேரை சொல்லக் கூட தைரியம் இல்லாத நீங்கள்தான் வந்து ஹிந்து மதத்தைக் காப்பாற்றப் போகிறீர்கள்!
செப்ரெம்பர் 8, 2010 at 10:10 முப
மன்னாரு எனும் மலம் தேடி!
அப்படியானால், உன்னைமாதிரி இந்துக்களுக்கு ஏற்ற கிருத்துவர்கள் முசுலீம்கள் இருப்பான்கள்; ஒருவர் வீட்டை மற்றவ்ர்கள் கொழுத்திக் கொள்ளுங்கள்.
நல்லிணக்கம் கொண்ட எல்லாரும் ஒருவரோடொருவர் சமாதானாமாக அவரவர் மதங்களில் நின்று வாழ ஆசைப்படுகிறார்கள்.
மதத்தை வைத்து அரசியல் மலம் தேடும் நீ நல்லோர் வழியில் குறுக்கிடாதே.
நல்லிணக்கம் தமிழகத்தின் என்றும் தளைக்கும். உன் பருப்பு இங்கே வேகாது.
செப்ரெம்பர் 8, 2010 at 10:31 முப
ஒன்றை மட்டும் நினைவில் கொள்.
மதச்சண்டைகளும் உயிரழப்புக்களும் வருவதற்கு காரணம் உன்னைப்போன்றவர்களாலே. பிறர் மதத்தை எப்படி கிண்டலடித்து தூற்றி இன்பம் காணலாம் என்றலைபவர்களாலே.
இன்னொரு மதச்சண்டை வரவிருக்கிறது. குரான் ஆப்கானிஸ்தானத்தில் கொழுத்தப்பட்டதால். இப்போது ஹிலரி என்ன சொல்லி மன்னிப்புக்கேட்டாலென்ன? முதலிலேயே நிறுத்த முடியவில்லையே! Locking the stables after the horse has bolted!!
கார்ட்டூன் போட்ட டேனிஸ் ஓவியருக்கு இன்று பாராட்டு விழா. ஜெர்மன் அதிபர் வழங்குகிறார்.
இதெல்லாம் எங்கே கொண்டுபோய் முடியும்?
மசூதியில் மேலேறி உடைத்தீர்கள்? அதன் பிறகு என்னவாயிற்று? இந்தியாவில் குருதியாறுதானே ஓடிக்கொண்டிருக்கிறது?
ஏன் ஒருவர் மதநம்பிக்கைகளை மற்றவர்கள் சீண்டவேண்டும்?
குரானை எறிப்பதும், கிருத்துவ மத நம்பிக்கைகளை பகடி பண்ணுவதும், இப்படிச் செய்யும் சமூகத்துரோகிகளை எப்படி நிறுத்துவது?
பதிவு பதிவாகப்போய் ஏசுவைத்திட்டுவதில் உனக்கு என்ன அப்படி இன்பம்? உன் மதம் வளர்ந்து விடுமா? இல்லை கிருத்துவர்கள் எண்ணிக்கை குறைந்து விடுமா?
குரானை எறித்தால் முசுலிம்கள் கிருத்துவர்கள் ஆகி விடுவார்களா?
(The burning of Koran was done by Christian soldiers of US army, it is alleged)
திருந்தி நல்லவனாகி, உன் மதத்தின் நற்கருத்துகளை அனைவருக்கும் சொல் பண்பட்ட சொற்களில்.
செப்ரெம்பர் 8, 2010 at 11:46 முப
May I ask RV why he is allowing the Anonyous commentator here to call others with the names he chooses:
ஏசுகுமார்
சில்லி சிக்கன்
மலம்
ஆர்வி அனுமதி emboldens him to continue to abuse others personally.
He does the same in dondu blog too. But dondu allows others to retailate to him in the same style. Today Dondu’s blog is shunned by women and other who dont want to read such foul language.
Does RV want his blog a slang match between him and others?
I think that should not be. Indeed you have warned him; but your warning has fallen on his deaf ears. He lacks shame.
And he continues to write the same names taking advantage of your silence.
Please take care.
செப்ரெம்பர் 8, 2010 at 5:48 பிப
அன்பான நண்பர் ஜோ அவர்களுக்கு வாழ்த்துக்கள்;
தங்களது அழகான பெயருக்கு பொருத்தமில்லாமல் எழுதவேண்டாமே, எதிர்தரப்பு தங்களை எத்தனைதான் கோபப்படுத்தினாலும் நீங்கள் நீரோடையினைப் போல போய்க் கொண்டேயிருங்கள்;
ஏனெனில் நம்மை பதட்டப்படுத்தி நமது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி திசைதிருப்புவதும் ஒருவித தந்திரமே; இதனால் நான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறேன்; மேலும் தங்களது தொடர்பு விவரம் கேட்டிருந்தேன்;விரும்பினால் தரவும்.
செப்ரெம்பர் 8, 2010 at 9:27 பிப
திரு ஜோ அமலன் ராயன் பெர்னாண்டோ அவர்களே,
///உங்கள் கேள்வி: தூற்றுவது சரியா?
சட்டம் பிரச்சாரத்தை அனுமதிக்கிறது அமைதியான முறையிலும் பிறமத மக்களின் மனதைப்புண்படுத்தாதவரையிலும்.///
என்ன தான் சட்டம் ???? பிரச்சாரத்தை அனுமதித்தாலும் எங்கள் இந்து மதக் கடவுளை சாத்தான்கள் என்று கூறுவது எப்படி சரியாகும்.????
///இப்போது ஒரு மதத்தவன் மற்ற மதத்துக்கடவுளர்களைச் சாத்தான்கள் என நினைக்கிறான். அல்லது அவன் மதம் அவனுக்குச்சொல்கிறது. இதை அவன் பிறருக்குச்சொல்லி, அதாவ்து அச்சாத்தான்களை வழிபடுவதை விட்டுவிட்டு எம்கடவுளைத்தொழுங்கள் என சொல்ல ஆசைப்படுகிறான்///
இந்துக்கள் மற்றக் மதக் கடவுள்களை சாத்தான்கள் என்று நினைப்பதில்லை.எந்த இந்து மத நூலாவது அப்படிக் கூறியதுண்டா???கிருஸ்தவர்களும் ,இஸ்லாமியர்கலுமே பிற மதக் கடவுள்களை சாத்தான்கள் என்று கூறுகின்றனர்.
நான் கூறுவது என்னவென்றால் கிறிஸ்தவர்களே மத மாற்றத்திற்காக முதன் முதலில் இந்துக் கடவுளை தூற்றினார்கள்.இது உங்களுக்கும் நன்றாகவே தெரியும்.இந்த மத மாற்றத்திற்காக கிருஸ்தவர்கள் தொடர்ந்து செய்யும் தந்திரங்களும்,இந்து மதக் கடவுளை இகழ்வதும், இந்துக்களை மனம் கொதிப்படைய செய்கின்றன.அதன் விளைவே இப்பொழுது இணையத்திலும் கூட கிருஸ்தவ மதத்தை பற்றிய விமர்சனங்கள் எழுகின்றன.வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழி தான் இதற்குப் பொருத்தமாகப் படுகிறது.
///என் கருத்து யாதெனில்,
எந்த மதத்தைப்பற்றியும் எக்கருத்தும் கொள்ளலாம் எவரும். அதை தமக்குத் தெரிந்தோரிடம் சொல்லுமிடங்களில் சொல்லலாம்.
ஆனால் அம்மதத்தாரின் மனம்புண்படும்படி, அவர்கள் கேட்கும்படியோ, அல்லது பார்க்கும்ப்டியோ செய்யக்கூடாது. சட்டத்திற்குட்பட்டு கிருத்துவர்கள் செய்தால் என்ன பிரச்னை? அதைக்கேட்டு சிலர் அவர்கள் மதம் மாறினால் என்ன தடை?///
இந்து மதத்தையும்,இந்துக் கடவுள்களையும் இகழாமல்,விமர்சிக்காமல்,உங்களால் மத மாற்றம் செய்ய முடியுமா???
மெய்யான தெய்வத்தை வணங்கு என்று கூறும் நீங்கள் எங்களுக்கு காட்டிய மெய்யான தெய்வம் யார்??? கன்னி மேரியா??? யேசு கிறிஸ்துவா??? கர்த்தரா??? அல்லது இயேசு கிறிஸ்துவின் சீடர்களா???
எங்கள் பகுதியில் உண்மையான தெய்வம் என்று கூறி மதம் மாற்ற வந்த ஒருவரே கடவுளாகி விட்டார்.அவர் பெயர் இன்ஞாசியப்பர்.அவர் தான் அந்த சர்ச்சில் இருக்கிறார்.அவர் சிலை முன்பு தான் கிருஸ்தவர்கள் மண்டியிட்டு கைகூப்பி வணங்குகிறார்கள்.இவரா நீங்கள் கூறும் மெய்யான தேவன்.???
பின் புனித அந்தோனியார் தேவாலயம்,புனித செபஸ்தியான் தேவாலயம் போன்றவற்றில் இந்து மதத்திலிருந்து காப்பியடிக்கப் பட்ட 10 நாள் திருவிழா, கொடியேற்றுதல், தேர்த் திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது.
எல்லா இடங்களிலும் கன்னிமேரி,இயேசு கிறிஸ்து, இயேசுவின் சீடர்களான அந்தோனியார் ,செபஸ்தியான்,மற்றும் மதம் மாற்றம் செய்ய வந்த இன்ஞாசியப்பர் போன்றோர்களின் விக்கிரங்களின் முன் கிருஸ்தவர்கள் வணங்குகிறார்கள்.விக்கிரக வழிபாட்டை விமர்சித்து,மதம் மாற்றிய மக்கள் மீண்டும் விக்கிரக வழிபாடு தானே செய்கிறார்கள்???கேட்டால் நாங்கள் வேறு அவர்கள் வேறு என்று கூறுகிறீர்கள்.
சிலர் கர்த்தரே மெய்யான தேவன்,இயேசு கிறிஸ்து இறைத் தூதர் மட்டுமே என்கிறார்கள்,சிலர் இயேசு கிறிஸ்துவும் கர்த்தரும் ஒன்றே என்கிறார்கள்,சிலர் இயேசு கிறிஸ்துவைப் பெற்ற கன்னி மேரியே வணங்கத்தக்கவர் என்கின்றனர்.
முதலில் கிருஸ்தவ மதப் பிரிவுகளில் எது கர்த்தருடையது ?,எது சாத்தனுடைய்து என்று முதலில் நீங்கள் முடிவு செய்யுங்கள்.பைபிளை புனித நூலாகக் கொண்ட அனைத்து கிறிஸ்தவப் பிரிவினரும் ஒன்று சேருங்கள்.கன்னி மேரியா??? கர்த்தரா??? இயேசு கிறிஸ்துவா???முதலில் யார் மெய்யான தேவன் என்று நீங்கள் முடிவு செய்யுங்கள்.பின் பைபிளை படிக்கும் அனைவரும் அந்த ஒரே இறைவனையே வணங்குங்கள்.முதலில் கிருஸ்தவர்களிடம் சென்று பிரச்சாரம் செய்யுங்கள்.இது தான் இப்போதைய தேவை.இல்லையென்றால் மதப் பிரச்சாரர் இன்ஞாசியப்பர் கடவுலானதைப் போல உங்களையும் கடவுளாக்கி விடுவார்கள்.இந்த இன்ஞாசியப்பர் ஆலய திருவிழாவின் போது ,ஆலயத்தின் முன்பு கோழி,ஆடு, பன்றி கூட வெட்டி சமைத்து உண்ணப்படுகிறது,.இதைப் போன்ற செயல்களையெல்லாம் திருத்துங்கள்.
கிருஸ்தவர்கள் முதலில் உங்கள் மதத்தை சீர்படுத்துங்கள் என்று தான் கேட்டுக்கொள்கிறேன்.இல்லாவிட்டால் இந்தியாவில் கிறிஸ்தவம் பல பிரிவுகளாகப் பிரிக்கப் படுவது தவிர்க்க முடியாமல் போய் விடும்.
செப்ரெம்பர் 9, 2010 at 6:25 பிப
நண்பரே,
இங்கே நாங்கள் சொல்லும் வார்த்தைகள் பொதுவாக மனிதர்களுக்கு. தனியாக இந்து, முஸ்லிம், கிருஸ்துவன் என்று பிரிக்கவில்லை. யாராய் இருந்தாலும் ஒரே சத்தியத்தை தான் சொல்கிறோம்.
அசோக்
செப்ரெம்பர் 9, 2010 at 6:56 முப
நிறைய மாறுபட்ட கருத்துகளை ஒரே மடலில் எழுதிவிட்டீர்கள்:
உங்கள் கருத்துகள்:
1.கிருத்துவர்கள் இந்துக்கடவுளர்களை சாத்தான்கள் எனறு சொல்கிறார்கள். இந்து மதம் பிறகடவுளர்களை அப்படிச்சொல்வதில்லை.
சாத்தான்கள் என்று சொல்லியே மதம் வளர்க்கிறார்கள். இப்பிரச்சாரம் எங்களைப்புண்படுத்துகிறது.
2. கிருத்துவத்தில் பல பிரிவுகள் இருக்கின்றன. சிலர் கன்னிமேரி, ஜோசப், மற்றும் இன்னாசியார், சேவியர், அந்தோணியார் விக்கிரகங்களை வணங்குகிறார்கள். மற்றும் சிலரோ, மெய்யான தேவன் என்று சொல்லி ஒரே கடவுளை வணங்குகிறார்கள். எனவே இவர்களுக்குள்ளேயே ஒரு நிலைபாடில்லை. முதலில் இவர்கள் தங்களை ஒருமைப்படுத்தட்டும்.
2வதுக்கு:
எனக்குக் கத்தொலிக்க மதத்தில்தான் பரிச்சயம். ஆனாலும், ஏன் இப்பிரிவுகள் எனச்சொல்லலாம்.
ஒரு மதம் ஆரம்பித்தபின், அவைகளுக்குள் பிரிவுகள் பல்லாண்டுகள் கழித்து தோன்ற ஆரம்பிக்கின்றன. அம்மதம் அப்பிரிவுகளைக்கண்டுகொள்ளாமல், அதாவது, பிரிவினைசெய்வோரை கொல்லாமல் விட்டால், பிரிவுகள் தொடரும். கிருத்துவமதம் பிரிவினைகளைக்கண்டு கொள்வதில்லை. எல்லாப்பிரிவுகளும் தங்களுக்கு வெகுவான தொண்டர்களைச்சேர்த்துக்கொள்கிறது.
இது மனிதனின் சிந்தனை எப்போதும் ஒன்றாக இருக்காது என்னும் பொது உண்மையைக்காட்டுகிறது. அப்படித்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். You cant control the minds of human beings. Never.
நுப்பது கொடி முகமுடையாள்
ஆனால் சிந்தனை ஒன்றுடையாள் . This may be true in political or social thinking, like nationalism etc. But it wont be in matters of religion.
நீங்கள் ஒரு உண்மையை மறைக்கிறீர்கள்! இந்து மதத்திலும் ஒன்றல்ல நூற்றுக்கும் மேலான பிரிவுகள் எப்போதும் உண்டு. ஆனால் சண்டைகள் கிடையாது.
Can you give your advise to Hindus to worship one and only god and become a single people called Hinduism? No. It is impossible. The person living in far south does not know the style of worship in a remote village in far north.
Hindus also worship human beings: Shirdi Sai baba, for e.g.
கத்தோலிக்கர்கள் சில அபூர்வ மனிதர்களை அவர்களது இறப்புக்குப்பின் ‘புனிதர்களாக’ ஏற்று, விக்கிரகங்கள் செய்து வழிபடுகிறார்கள்.
But, the Saints – St Anthony, St Xavier, St Ignatius et al, and the parents of Jesus – are not Gods. நீங்கள் புரிந்து கொண்டது தவறு. அவர்களை கடவுளர்களாக எடுத்து வணங்குவது இல்லை கத்தோலிக்கர்கள். Then what?
The Saints are mediators between the God and the worshippers. Catholics believe that the mediators, by virtue of their holy life on earth, have the spiritual powers to take their prayers to the God.
எனவேதான், கத்தோலிக்கர்கள்:
‘மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்”
‘இரக்கமுள்ள மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்”
‘இன்னாசியாரே, எங்களுக்காக வேண்டுக்கொள்ளூம்”
என்று தொழுவார்கள். அதாவது புனிதர்கள் இவர்களுக்காக வேண்டும்போது அதன் பலன நிச்சயம் என நினைக்கிறார்கள். பித்ரு வணக்கம் செய்வதில்லையா? எப்படிபட்ட வாழ்க்கை வாழ்ந்து மடிந்தாலும், மரித்தொரை கேட்டால் பலனுண்டு என நினைப்பதில்லையா?
இது இந்து மதத்தில் புதிதல்ல. எனக்குத் தெரிந்தது சிரி வைணவம். Here, the only God is Thirumaal Even Lakshmi is a mediatrix. Celestials like Garudan, Adi Seshan et al are alos mediators. Later on, the Achaaryaars like Ramanujar, Desikar became idols for worship. They ahve the concept of ஆச்சாரியன் வணக்கம். Like Sikh worhsip of Gurus. The Gurus are not God. But mediators.
ஆழ்வார்களும் , குறிப்பாக நம்மாழ்வார், விக்கிரகங்களாக வைத்து வணங்கப்படுகின்றார்கள். ஆழ்வார்கள் அவதாரங்களாகவும் எடுத்து வணங்கபடுகிறார்கள். ஆண்டாள்.
So, no need to confuse yourselves thinking these saints are gods.
About Protestantism, the other two writers can elucidate perhaps.
Mr Dhanapal, It is their belief about which we cant have any different opinion please.
செப்ரெம்பர் 9, 2010 at 12:00 பிப
ஆழமான விவாதம்..எனக்கு ஒன்று புரியவில்லை..இந்த கிருத்துவர்கள் என்ன வானத்திலிருந்தா குதித்தார்கள்? நம் மூதாதயர்கள் தானே.? தாய் மதத்தை இழிவு படுத்துவது என்பது பெற்ற தாயை பழிப்பதாகாதா..? இவர்களின் கோபம் இவர்களை இழிவு படுத்திய மேல் ஜாதி இந்துக்கள் தானே? அது எப்படி கடவுளின் மேல் பாய்ந்தது? கடவுள் நேரடியாக இவர்களை இகழ்ந்ததாக சான்று உண்டா..? தேடிதேடி தீயவைகளைப் படிக்காதீர்கள்..வன்மத்தை வளர்க்காதீர்கள். பகவத் கீதையிலும்,நாலாயிர திவ்யபிரபந்ததிலும் சொல்லாதது எதுமில்லை..கிருத்துவ பெருமக்களே..உங்கள் யேசு பிரானா சொன்னார்..கண்ணனையும், ராமனையும் இகழுங்கள் என்று…வேண்டாம்..இனி வேண்டாம்..
செப்ரெம்பர் 9, 2010 at 3:22 பிப
ஐயா ராஜரிஷி,
கிருஸ்துவத்தை பற்றிய உங்கள் அடிப்படை ஞானமே தவறு. மேல்சாதி மக்களால் பாதிக்கப்பட்டு நாங்கள் கிருச்த்துவத்தை ஏற்க்கவில்லை. நிறைய கிருஸ்துவர்கள் முன்பு பிராமணர்களே. மேலும் கடவுள் நேரடியாக பல தெய்வ வழிபாட்டை குறித்து கூறியுள்ளார். பைபிளின் பத்து கட்டளைகளை பாரும். இதை ஏன் நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்??? இயேசு தன் சீடர்களுக்கு கொடுத்த ஒரு கட்டளையை பாரும் (உலகமெல்லாம் சென்று சீஷர்களை உருவாக்குங்கள்). யார் மீதும் எங்களுக்கு கோவம் இல்லை.
அசோக்
செப்ரெம்பர் 10, 2010 at 5:19 முப
மிஸ்டர் அசோக்,
நான் ஞானமில்லாதவனாகவே இருக்கட்டும். உங்கள் யேசு இட்டதாகச் சொல்லப்படும் 10 கட்டளைகளில் எந்த கட்டளையில் அடுத்த மதத்தை இகழச் சொல்கிறார்..? உலகமெல்லாம் பொய்யையும், புனசுருட்டையும் சொல்லி தன் மதத்துக்கு இழுத்து வரச் சொல்லி யேசு சொன்னாரா?..
பிராமணர்கள் தங்கள் மதத்தைத்தேடி வந்ததாகச் சொல்கிறீர்கள்..இந்த இடச் செருகல் எதற்கு? உங்கள் தாத்தாவுக்கு தாத்தா இருந்த மதம் இந்து மதம், அதில் ஏதும் உங்களுக்கு அபிப்ராய பேதமில்லையே.. அந்த மதக்கடவுள் சொன்னது எல்லாவற்றையும் – எல்லா கட்டளைகளையும் முடித்து விட்டு – மற்றதற்கு வாருங்கள்
செப்ரெம்பர் 10, 2010 at 3:47 பிப
ராஜரிஷி,
உங்களை ஞானமில்லாதவன் என்று சொல்லுவில்லை. கிருஸ்துவத்தை பற்றிய ஞானமில்லாதவர் என்றே கூறினேன். பார்த்தீர்களா, ஒரு சாதாரண வாக்கியத்தை எவ்வளவு தவறாக எடுத்துகொண்டீர்கள். இதைபோல்தான் நிறையே பேர் நிறைய விஷயங்களை தவறாக எடுத்துக்கொள்கிறார்கள்.
பத்து கட்டளைகளை இயேசு இட்டார் என்று கூறினேனா?
//பிராமணர்கள் தங்கள் மதத்தைத்தேடி வந்ததாகச் சொல்கிறீர்கள்..இந்த இடச் செருகல் எதற்கு?//
இப்படி எப்போது சொன்னேன்? பிராமணர்களும் கிருச்துவதிர்க்கு வருகிறார்கள் என்றே சொன்னேன். நான் கூறியதற்கும் நீங்கள் சொல்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இங்கே பின்னூட்டம் இடும் ஒரு கிருச்த்துவரும் முன்பு பிராமணரே.
//உங்கள் தாத்தாவுக்கு தாத்தா இருந்த மதம் இந்து மதம், அதில் ஏதும் உங்களுக்கு அபிப்ராய பேதமில்லையே.//
என் தாத்தாவுக்கு தாத்தா இந்தியாவில் இருந்தார், அதனால் இந்து மதத்தில் இருந்தார் என்று எப்படி கூற முடியும். அவர் நாத்திகராக இருந்திருக்கலாம் அல்லவா?
பல விஷயங்களை நீங்கள் வெறும் யூகத்தின் மூலம் முடிவு செய்வதை தவிருங்கள். ஆராய்ச்சி செய்யுங்கள். தேடுங்கள் அப்போது கண்டடைவீர்கள்.
கிருஸ்தவத்தை பற்றி நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு இணையதளத்தில் பதில்கள் உண்டு. மேலும் உங்களுக்கு தகவல் தேவை என்றால், நண்பர் சில்சாமின் தளத்தில் வந்து கேளுங்கள், விளக்கி சொல்கிறோம்.
அசோக்
செப்ரெம்பர் 10, 2010 at 4:05 பிப
ராஜரிஷி
உங்கள் வாதம் சந்தர்ப்ப வாதம்.
ஏனென்றால், இந்தியாவில் இந்துக்கள் ஒன்றுமே செய்ய்வைல்லை என்பது போல சொல்கிறீர்கள்.
நேற்று கரூரில் நான்கு கிருத்துவதேவாலயங்கள் கொழுத்தப்பட்டன. பதிலுக்கு கிறுத்துவர்கள் ஏதாவது செய்தார்களா?
ஆனால் தென்காசியில் முசுலீகளிடம் மோதியதற்கு ஏழு கொலைகள் விழ்ந்தன. இந்துக்கள் 4 முசுலீகள் 3. தமிழகரசு விஜயகுமாரை அனுப்பியது.
வலைபதிவுகள் இந்துக்கள் கிறுத்துவர்களோடும் முசுலீம்களோடும் மல்லுக்கு நிற்கிறார்கள். கி.வும், மு.உம் மோதுவதில்லை. thatstamil தளத்தைப்பார்க்கவும். ஆர்வி பிளாக்கில் மாடரேசன் இருக்கின்றபடியால் இங்கு இந்து என்று சொல்லிக்கொண்டு எவரும் அசிங்கமாக பிறமதங்களைத் திட்டவில்லை. ஒருவன் செய்தான். அவன் ஓடிவிட்டான்.
மதக்கலவரங்கள் அனைத்தும் இந்து vs. கிருத்துவர்கள் அல்லது இந்து vs முசுலீம்களே.
‘உங்கள் யேசு பிரானா சொன்னார்..கண்ணனையும், ராமனையும் இகழுங்கள் என்று…வேண்டாம்..இனி வேண்டாம்..”
இதையே நானும் கேட்கிறேன். ராமரா சொன்னார் மற்றம்தத்தினரின் வழிபாட்டு தலங்களை கொழுத்தச்சொல்லி?