என் ஆறு வயதுப் பெண் (முதல் வகுப்பு) ஸ்கூலில் க்ரியாவுக்கு “Young Author” என்று ஒரு அசைன்மென்ட் உண்டு. அவளே யோசித்து ஏதாவது ஒரு கதை எழுத வேண்டும். அவள் எழுதிய கதை கீழே.
One day a girl named Kriya got the hiccups. And then skipping around the street, she found a haunted house. She was so scared. There were zombies, skeletons, and ghosts.
I saw a sign that said “Exit”. I climbed a few steps. But the stairs were broken. I thought and thought and thought. And I decided to build some stairs.
After I built them, I climbed them very carefully. Suddenly I realized my hiccups were gone! I cheered Hooray!
I love the way the story seamlessly changes from being in third person in the first paragraph and first person in the second paragraph. இதை தமிழில் எழுதினால் புரியுமா என்றே சந்தேகமாக இருக்கிறது – இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கிறேன். முதல் பத்தியில் படர்க்கையில் சொல்லப்படும் கதை இரண்டாம் பத்தியில் தன்னைப் பற்றி சொல்லப்படுவதாக மாறுவது எனக்கு மிகப் பிடித்திருக்கிறது.
இரண்டாம் பத்தியில் படிகள் உடைந்துவிட்டதால் அவளே படிகளை கட்டுவது அபாரம்! (சர்ரியலிசம்? ஃபான்டசி?)
கடைசியில் விக்கல் போய்விட்டதாக முடித்திருப்பது, ஆஹா!
எல்லாருக்கும் அவரவர் குழந்தை ஒஸ்திதான். ஆனால் இந்தக் கதை எனக்கு உண்மையிலேயே பிடித்திருக்கிறது.
தொகுக்கப்பட்ட பக்கம்: குடும்பம்
தொடர்புடைய பதிவுகள்:
அம்மாவிடம் திட்டு வாங்காமல் விஷமம் செய்வது எப்படி?
க்ரியாவின் அலுப்பு
நேற்று இன்று நாளை
க்ரியாவின் ஏமாற்றம்
பெரிய நம்பர்கள்
க்ரியாவுக்கு சொன்ன கதை
அக்கா vs சாக்லேட்
ஜூன் 14, 2010 at 5:33 முப
புலிக்குப்பிறந்ததாச்சே… பூனையாகப் போய்விடுமா என்ன.
ஜூன் 14, 2010 at 6:49 பிப
சந்தனமுல்லை, ராஜன், சாரதா, ராஜு க்ரியா பதிவுக்கு மறுமொழி இட்டதற்கு நன்றி!
சந்தனமுல்லை, பப்புவின் லீலைகள் பற்றி எதுவும் அப்டேட் இல்லையா?
ஜூன் 14, 2010 at 6:13 முப
ஆர் வி
அருமை. உங்களுக்கு ஒரு எழுத்துலக வாரிசு ரெடி. க்ரியாவுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்
அன்புடன்
ராஜன்
ஜூன் 14, 2010 at 7:12 முப
Kudos to Kriya! 🙂
thanks for sharing!
ஜூன் 14, 2010 at 1:39 பிப
RV
குழல் இனிது யாழ் இனிது என்பார் தம் மக்கள் மழலை சொல் கேளாதார் .
க்ரியாவின் மழலை எழுத்து நன்றாக உள்ளது .வாழ்த்துக்கள்
அன்புடன்
ராஜு-துபாய்
ஜூன் 15, 2010 at 3:08 முப
குல வித்தை கல்லாமல் பாகப்படும்ங்கிறது இதானா? என் வாழ்த்துக்களைச் சொல்லுங்க.
http://kgjawarlal.wordpress.com
ஜூன் 15, 2010 at 6:25 முப
நன்றி, ஜவஹர்! உங்கள் எல்லாருடைய வாழ்த்துகளையும் க்ரியாவிடம் சொன்னால் அவள் வெட்கப்பட்டுக்கொண்டு ஓடிவிட்டாள்!
ஜூன் 15, 2010 at 10:16 முப
க்ரியாவுக்கு எனது வாழ்த்துக்கள் . க்ரியா என்று பெயர் வைத்தது சரியாகி விட்டது இல்லையா ?
நம்மூரில் இந்த மாதிரி மொழியை கற்றுக் கொடுக்கும் முறையில் மாணவர்கள் சுயமமாக படைக்கும் வாய்ப்பை தருவதில்லை என்பதில் எனக்கு மிகுந்த ஆதங்கம்.
அதை ஒரு பதிவாகப் போட்டு விட்டு(http://www.virutcham.com/?p=2371) இங்கே வந்தால் 6 வயது குழந்தையின் படைப்பு அது பள்ளியின் பாடத் திட்டத்திலேயே அனுமதிக்கப் பட்டு இருப்பது கூடதல்மகிழ்ச்சி
ஜூன் 16, 2010 at 1:57 முப
விருட்சம், வாழ்த்துக்களுக்கு நன்றி! நம்மூரிலும் மாற்றங்கள் வர ஆரம்பித்துவிட்டன என்று கேள்விப்பட்டேன்..
ஜூன் 24, 2010 at 4:44 பிப
Dear RV,
Greetings.
கொஞ்சம் லேட் response தான். அதற்காக, ‘என்னது! இந்திரா காந்தியை சுட்டுட்டாங்களா?’ என்றெல்லாம் கேட்கக்கூடாது.
It seems that Kriya is really creative. Thanks for sharing.
அப்பாவைப் போல் புகழ் பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்…..
Cheers,
Srinivas
ஜூன் 25, 2010 at 4:25 முப
அப்பாவைப் போல புகழா? சரியாப் போச்சு!