பல மாதங்களுக்கு முன்னால் சுப்ரமணிய சாமி மீது நீதிமன்றத்தில் முட்டை வீசப்பட்டது ஒரே பரபரப்பாக இருந்தது. முட்டை வீச்சுக்கு காரணம் ம.க.இ.க.வினர் என்றுதான் நினைக்கிறேன். நடந்து பல நாளாகிவிட்டது, என் நினைவு தவறாக இருக்கலாம். நீதிமன்றத்தில் வழக்கு பதிய வந்தவர் மேல் நீதிபதிகளுக்கு முன்னாலேயே தாக்குதலா என்று பலரும் வெறுத்துப் போனோம். ம.க.இ.க.வின் இணைய வடிவமான வினவு குழுவினர் அப்படி முட்டை வீசுவது தங்கள் ஜனநாயக உரிமை என்று கேனத்தனமாக வாதித்தனர். அதன் பின் விளைவாக நீதிமன்றத்திலேயே போலீஸ்-வக்கீல் தகராறு, வக்கீல்களுக்கு அடி, போலீஸ் ஸ்டேஷன் எரிப்பு என்று பலவும் நடந்தன. அதற்குப் பிறகு ஒரு விசாரணை நடந்தது, அதன் முடிவுகள் எனக்கு இப்போது நினைவில்லை. சில போலீஸ்காரர்களை தண்டிக்க வேண்டும் என்று சொன்னது போலத் தெரிகிறது.
ஒரு வாரம் முன்னால் அதே நீதிமன்றத்தில் கலைஞர் தனக்கு பிடித்த பொழுதுபோக்கான சிலை திறப்பு விழா நடத்தி இருக்கிறார். அங்கே ம.க.இ.க.வினர் கறுப்புக் கொடி காட்டி இருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு கலைஞர் முன்னாலேயே அடி விழுந்திருக்கிறது. அடித்தவர்கள் போலீஸ்காரர்கள் இல்லை என்று நிச்சயமாகத் தெரிகிறது. போலீஸ் பார்த்துக் கொண்டிருந்ததாம். பத்திரிகையாளர்களுக்கும் அடி விழுந்திருக்கிறது. (படித்தது ஜூவியா இல்லை வேறு ஏதாவது ரிப்போர்ட்டா என்று ஞாபகம் வரவில்லை.)
அதே நீதிமன்றம்; முட்டை வீசுவதை விட மோசமான வன்முறை; போன முறை நீதிபதிகள் கண்ணெதிரில், இந்த முறை முதல்வர்/போலீஸ் கண்ணெதிரில். இணையத்தில் பதிவர்கள் யாரும் இப்படி செய்யலாமா என்று சொன்ன மாதிரி தெரியவில்லையே! இல்லை நான் இணையத்தில் மேய்வது மிகவும் குறைந்து போனதால் என் கண்ணில்தான் படவில்லையா? இதைப் பற்றி டோண்டு ஒருவர்தான் குறிப்பிட்டிருக்கிறார். அவர் “தப்புதான், ஆனால் வேணுங்கட்டிக்கு வேணும்” என்ற மாதிரி எழுதி இருக்கிறார். அவருடைய கடுப்பை புரிந்து கொள்ள முடிந்தாலும் (டோண்டுவை வினவு தளத்தில் கண்டபடி திட்டுவார்கள்) இது கண்டிக்க வேண்டிய விஷயம்தான். நிச்சயமாக வினவு குழுவினர் எழுதி இருப்பார்கள், ஆனால் அவர்கள் அணுகுமுறை நன்றாகத் தெரிந்துவிட்டதால் இதைப் பற்றி அங்கே போய் படிக்கவும் வேண்டுமா என்று அலுப்பாக இருக்கிறது.
வினவு குழுவினர் மேல் எனக்கு நிறைய கடுப்பு உண்டு. இரட்டை நிலை உடையவர்கள். எல்லாவற்றையும் நம்மவர்/மற்றவர் என்று ஃபில்டர் வைத்துப் பார்ப்பவர்கள். ஆனால் குற்றவாளிகளுக்கே உரிமை உள்ள இந்த உலகத்தில் இவர்களுக்கு கறுப்புக் கொடி காட்ட, கோஷம் எழுப்பக் கூட உரிமை இல்லையா? இது ஜனநாயக முறை எதிர்ப்புதானே? இதை கண்டிக்க வேண்டாமா? அதுவும் போலீஸ் அடித்திருந்தாலாவது சட்டம் ஒழுங்கு பிரச்சினை, கலவரம் என்று ஏதாவது சப்பைக்கட்டு கட்டலாம். அடித்தவர்களை போலீஸ் பார்த்துக் கொண்டிருக்கிறது! முதல்வர் ஒன்றுமே நடக்காதது மாதிரி பேசிக் கொண்டே போகிறார்! அவர் கண்ணசைத்தால் அடிதடி நின்றிருக்கும். போலீஸ் முறைத்திருந்தால் வந்திருந்த ரவுடி கும்பல் அடங்கி இருக்கும்.
நமக்கெல்லாம் அநியாயங்கள் இத்தனை மரத்துப் போகக் கூடாது.
தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு
தொடர்புடைய பதிவுகள்:
வினவு தளத்துடன் தகராறு
வினவு தளத்துக்கு வாழ்த்துக்கள்
மே 4, 2010 at 7:08 முப
ஒரே சிரிப்புத்தான் போங்க இந்த நிகழ்வு பற்றி படித்த போது.
அவன்களுக்கெல்லாம் அடி ஒண்ணூதாங்க புரியும். தன் வினை தன்னைச் சுடும்
என் பதிவின் இணைப்பைத் தந்ததற்கு நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மே 4, 2010 at 7:26 முப
peoples who belongs to bramin never change:never mind: we will raise up!
stop ringing the (small) temple bell!
work hard to earn ur daily bread!
மே 4, 2010 at 6:48 பிப
உங்களுக்கு திட்ட வேண்டுமென்றால் ஐயர், பர்ப்பணர் என்று திட்டுங்கள். ”பிராமின்” என்று சொல்லி திட்டாதீர்கள். அப்படி கண்ணுக்கெட்டியவரை ஒருவரும் இல்லை. மேலும் வார்த்தைகளை பிரயோகிக்கிகும் பொழுது அதன் அர்த்தத்தை தெரிந்துக் கொண்டு உபயோகிக்கவும். பிராமின் என்ற வார்த்தை மிகப் புனிதமானது. அதை துஷ்பிரயோகம் செய்ய எவருக்கும் உரிமையில்லை.
மே 4, 2010 at 11:45 பிப
ஹலோ, ஒரு குறிப்பிட்ட ஜாதியை திட்டறதானா, இவங்களை திட்டுங்கன்னு ஐயர்களை என் கைகாட்டி விடறீங்க? அப்போ ஐயங்கார், மத்வர்கள், சோழ தேசத்து வடமன்கள், இவங்கல்லாம் எஸ்கேப்பா? திட்டறவங்களை குலம் கோத்திரமெல்லாம் கேட்டு திட்ட சொல்லுங்கப்பா- கண்டமேனிக்கு “பார்ப்பனர்களைத் திட்ட விரும்புபவர்கள் ஐயர் என்ற சொல்லை உபயோகிக்க வேண்டும்,” என்ற உங்க தீர்ப்பை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அறிவியல்பூர்வமா இது தப்பு- ஜீனோடைப் மாறுதில்ல!
மே 5, 2010 at 11:04 முப
அது என்ன புனிதமான வார்த்தை ? கொஞ்சம் பிராமின் என்ற வார்த்தையின் புனிதத்தை விளக்குங்களேன், நான் தெரிந்துகொள்கிறேன்.
மே 6, 2010 at 7:18 பிப
பல் இடங்களில் விளக்கியுள்ளேன். பொறுமையுடன் படித்து தெரிந்து கொள்ளுங்கள்
மே 4, 2010 at 8:10 முப
உங்களுக்கு இதை கண்டனம் செய்யும் எண்ணம் இருப்பதாக தெரியவில்லையே ? உள்ளூர மகிழ்வது போலத்தானே தெரிகிறது ?
போண்டாமாதவனும் பின்னூட்டத்தில் அந்த உணர்வையே பதிவு செய்திருக்கிறாரே ?
இதைத்தான் பார்ப்பணக்குசும்பு என்பதோ ? உங்களை ஒரு மருத்துவர் ஜெனோடைப் பார்ப்பான் என்று சொன்னபோது ஏன் இப்படி சொன்னார் என்று நினைத்தேன். இப்பத்தானே புரிகிறது ?
மே 4, 2010 at 6:53 பிப
இதில் என்ன சார் பார்ப்பணக் குசும்பு? கஷ்டப் பட்டு ஜாதியை இழுக்கிறீர்களே! ஆர்வி செட்டியாராகவோ இல்லை நாடாராகவோ இல்லை நாவிதராகவோ இருந்தால்கூட இதை தான் சொல்லியிருப்பான். காட்சி பிழையா அல்லது பார்வை பிழையா? பார்வை பிழையாக இருந்தால் காட்சி பிழையாகவே தோன்றும்.
மே 5, 2010 at 11:06 முப
பார்வை பிழையாக இருந்தால் காட்சி பிழையாகவே தோன்றும்—–&&&
நல்ல பதில். நீங்க ஆர்வி சாருக்குத்தானே இதை சொல்றீங்க ? நன்றி.
மே 6, 2010 at 7:14 பிப
உங்கள் எழுத்துகளில் ஒரு விளையாட்டு தான் இருக்கிறது. எனக்கு உங்களிடம் விளையாடுவதற்கு நேரமில்லை. அது சரி, கருந்தழல் கவி உங்களுடைய இன்னொரு லாகின்னா?
மே 4, 2010 at 3:50 பிப
கை தட்ட நாலு முட்டாள் இருந்தா நானும் கூட அறிவாளிதான்.
கூட்டம் சேத்தணும்- அதுதாங்க மேட்டர்.
மே 4, 2010 at 5:26 பிப
ஆர் வி
கருணாநிதிக்கு யார் கருப்புக் கொடி காட்டினாலும் எப்பொழுதுமே மரண அடிதான் தரப்படும். 90ல் அவர் ஆட்சி கலைக்கப் படும் முன் மதுரைப் பல்கலைக்கு வந்தார். அவருக்கு அன்று அதிமுகவினர் கருப்புக் கொடி காட்ட முடிவு செய்திருந்தனர். அதனால் அவர் பின்னால் நூற்றுக்கணக்கான கார்களில் ரவுடிகள் கைகளில் பெரிய பெரிய அருவாள்களுடனும் கம்புகளுடனும் வந்தார்கள். அதையும் மீதி கருப்புக் கொடி காண்பிக்க முயன்ற ஒரு சிலர் மீது போலீசார் கண் முன்பாகவே கடுமையான தாக்குதல் நிகழ்ந்தது. அன்று அந்த அடி வெட்டு வாங்கிய யாருமே பிழைத்திருக்க நியாயமில்லை. கடுமையான வன்முறை முதல்வர், போலீஸ் கண் முன்னால் நடைபெற்றது. அவர்களில் ஒரு சிலர் பின்னர் மரணமடைந்து விட்டதாகச் சொன்னார்கள் அது ஒரு செய்தியாக எங்குமே வரவில்லை. அதாவது கருப்புக் கொடி காட்டியவர்கள் கொலை செய்யப் பட்டார்கள். ஆனால் இவர்கள் கருப்புக் கொடி காட்டலாம் மண்டையை உடைக்கலாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம். இந்திரா காந்தி மீது கல்லை விட்டு எறிந்து அவரைக் கொலை செய்ய முயன்றதும் இதே தி மு க தான். அப்பொழுது அவருக்கு ரத்தம் வந்து விட்டது என்று நெடுமாறன் சொன்ன பொழுது இந்திராவுக்கு “அடியில் ரத்தமா?” “அடியில் ரத்தமா?” என்று ஆபாசமாகக் கிண்டல் செய்ததும் இதே தமிழீனத் தலைவன் தான். இவர்கள் பிறருக்குச் செய்வதை இவர்களுக்கு யாரேனும் செய்தால் கொலைதான். ம க இ க வினர் அன்று உயிர் பிழைத்தது அவர்கள் நம்பாத அந்தக் கடவுளின் கருணையினால் மட்டுமே. அப்படி மக இகவினர் வெறும் அடியுடன் மட்டுமே தப்பித்தது குறித்து எனக்குக் கடும் வருத்தம் என்பது வேறு விஷயம் 🙂 இவர்கள் அடி வாங்கிச் செத்தால் அதனால் நாட்டுக்கு நன்மையே ஒன்றும் ஏதும் கெட்டுப் போகாது. வினை(வு) விதைத்தவன் வினை அறுப்பான், நீங்கள் ஏன் வீணாக வருத்தப் படுகிறீர்கள்? ஓரமாக உட்கார்ந்து காட்சியை ரசியுங்கள்.
அன்புடன்
ராஜன்
மே 4, 2010 at 9:32 பிப
டோண்டு, நீங்கள் ஒருவர்தான் எனக்குத் தெரிந்து இதைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள். சின்ன ரவுடியை பெரிய ரவுடி அடித்தான் என்று சந்தோஷப்படுவது போல இருக்கிறது. அதை இன்று கண்டிக்காவிட்டால் பெரிய ரவுடியிடமிருந்து நம்மை யார் காப்பாற்றுவது? 🙂
கே. பதி, பரோட்டாவுக்கு நல்ல சைட் டிஷ் சால்னாதான் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன? பின்ன என்னங்க, தொடர்பில்லாமல் பிராமணர்களை பற்றி நீங்கள் மறுமொழி எழுதும்போது, நான் பரோட்டாவைப் பற்றி உங்களுக்கு மறுமொழி எழுதக் கூடாதா?
செந்தழல் ரவி, // உங்களுக்கு இதை கண்டனம்… // ஒன்று நான் சரியாக எழுதவில்லை, இல்லை நீங்கள் சரியாகப் படிக்கவில்லை. மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தேன், நான் சரியாகத்தான் எழுதி இருக்கிறேன். மிச்ச கேனத்தனமான கமேன்ட்களுக்கேல்லாம் பதில் எழுதி என் நேரத்தை வீணடிக்க முடியாது.
பாஸ்கர், // கூட்டம் சேத்தணும்- அதுதாங்க மேட்டர் // சரியாகச் சொன்னீர்கள்.
ராஜன், இவர் முதல்வராக இருப்பவருக்கு வேண்டிய அடிப்படைத் தகுதிகள் இல்லாதவர். ஆனால் அழகிரி போன்றவர்கள் இவரையே உத்தமர் என நினைக்க வைத்துவிடப் போகிறார்கள் என்றுதான் பயமாக இருக்கிறது…
மே 5, 2010 at 1:18 பிப
நமது சாதிப் பற்று, கொள்கைப் பற்று, இனப்பற்று இதையெல்லாம் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இந்த வன்முறை- இது மட்டுமல்ல, கருத்து சுதந்திரத்துக்கு எதிரான எந்த வன்முறையும்- நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.
இந்த விஷயத்தில் Martin Niemöller http://en.wikipedia.org/wiki/First_they_came… சொன்னது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று- .
முதலில் அவர்கள் கம்யூனிஸ்டுகளுக்கு ஆப்பு வைத்தார்கள்,
நான் குரல் கொடுக்கவில்லை, நான் கம்யூனிஸ்டாய் இல்லாத காரணத்தால்.
அடுத்து அவர்கள் யூதர்களுக்கு ஆப்பு வைத்தார்கள்,
நான் குரல் கொடுக்கவில்லை, நான் யூதனாய் இல்லாத காரணத்தால்.
அடுத்து அவர்கள் தொழிற்சங்கங்களுக்கு ஆப்பு வைத்தார்கள்,
நான் குரல் கொடுக்கவில்லை, நான் தொழிற்சங்கவாதியாய் இல்லாத காரணத்தால்.
கடைசியில் அவர்கள் எனக்கு ஆப்பு வைத்தர்ர்கள்,
அப்போது எனக்காக குரல் கொடுக்க
எவரும் மிச்சம் இருக்கவில்லை.
என்ன கொடுமை சரவணன்!னு தோணுதில்லை?
எந்த காரணத்துக்காக மக இகவினர் தாக்கப்பட்டிருந்தாலும் அது தவறுதான்- அதை நீங்கள் சொன்னதற்கு (மகஇகவினர் இதே மாதிரி சுவாமியைத் தாக்கியதையும் அதை வினவு நியாயப்படுத்தியதையும் நீங்கள் சொல்லிக்காட்டியதை தவிர்த்திருக்கலாம்),- இது ஜீனோடைப் செய்கிற வேலை என்று மரபணுக்களைப் பிய்த்துப் பிராண்டி உள்ளர்த்தம் கண்டுபிடித்து நமக்குள்ளேயே ஒருத்தரை ஒருத்தர் தாக்கிக் கொண்டிருப்பதைவிட அபத்தம் வேறு ஒன்று இல்லை.
எவருடைய கருத்து சுதந்திரத்தை அச்சுறுத்துகிற வகையில் வன்முறை நிகழ்த்தப்பட்டாலும் அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் உங்களுக்கும் வினவுக்கும் கருத்து வேற்றுமை இருக்க வாய்ப்பில்லை.
என்று நம்புகிறேன்.
(எனக்கும் இது குறித்து வலையுலகில் அதிகம் கண்டனம் செய்யப்படாதது ஆச்சரியாமாக இருக்கிறது. மக இகவினர்தானே என்று அலட்சியமாக விட்டுவிட்டார்களோ? அப்படி செய்திருந்தால் அது வருத்தப்பட வேண்டிய ஒன்று).
நீங்கள் சொன்ன மாதிரி, நமக்கெல்லாம் அநியாயங்கள் இத்தனை மரத்துப் போகக் கூடாது.“, அல்லது இவ்வளவு அற்ப காரணங்களுக்காக நியாயமாகத் தெரியக் கூடாது.
மே 5, 2010 at 11:08 முப
அப்படி மக இகவினர் வெறும் அடியுடன் மட்டுமே தப்பித்தது குறித்து எனக்குக் கடும் வருத்தம் என்பது வேறு விஷயம் &&&&&&///////
ஒ ? நீங்கள் நம்பும் கடவுள் & மதம் உங்களுக்கு அடுத்தவன் செத்தால் இன்பம் காணும் கலையை சொல்லித்தந்துள்ளதோ ? ஆச்சர்யம்தான்…என்ன ஒரு மனிதநேயம்..
மே 5, 2010 at 6:10 முப
//சின்ன ரவுடியை பெரிய ரவுடி அடித்தான் என்று சந்தோஷப்படுவது போல இருக்கிறது. அதை இன்று கண்டிக்காவிட்டால் பெரிய ரவுடியிடமிருந்து நம்மை யார் காப்பாற்றுவது?//
‘இன்று’ தான் கண்டிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதா?
மே 5, 2010 at 8:30 முப
பேசாமல் எல்லா ரவுடிகளையும் இந்த ஒரே பெரிய ரவுடி அடித்துத் துரத்தட்டும்.
பின்னர் இந்த ஒரே பெரிய ரவுடியை போட்டுத் தள்ளிவிடலாம். மேட்டர் ஓவர்.
மே 5, 2010 at 12:46 பிப
அன்பான நண்பர் திரு ஆர்வி,
நல்ல கட்டுரை!
ஆனால் எனக்கு சில மாற்று கருத்துகள் இருக்கிறது!
ஜனநாயகமும், சட்டங்களும், மரபுகளும் இருக்கும் ஒரு நாட்டில் இந்த மாதிரி வன்முறையை, அதுவும் ஒரு முதல்வரின் முன் கட்டவிழ்த்து விடுவது மிக்க அநியாயம்! அதை போலீசாரும் மற்றும் பலரும் வேடிக்கை பார்ப்பதுபோல தோற்றம் அளிப்பது அதைவிட அநியாயம். ஆனால் இதுதான் நடந்ததா என்பதை ஆராய்ந்து சொன்னவர் யார்? முதலில் எல்லோரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்! அதாவது தமிழ் பதிவு உலகத்தில் திரு வினவு மற்றும் அவர்கள் சார்ந்த கோஷ்டியினர் சத்தத்துடன் உலவினாலும், அவர்கள் visibility கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், பொது உலகத்தில் இவர்கள் ஒன்றும் இல்லாதவர்கள் அதாவது சுத்தமான non entities. ஒரு நாலு பேர்கள் யார் என்று சொன்னாலும் தெரியாது! சொல்லவும் ஆள் கிடையாது! அதே சமயம் கூடத்திற்கு தலைமை தாங்கியவர் ஒரு மாநிலத்தின் தலைவர், CEO. அவர் தலைமையேற்கும் ஒரு கூட்டத்தில் ஒரு சிறு சலசலப்பு ஏற்ப்பட்டால், அது ஒரு மிக சிறிய law and ஆர்டர் problem ஆக பார்க்கப்பட்டு ஒதுக்கி தள்ளப்படும்! யாரோ நால்வர் கத்திய பின்னர் அது என்ன ஆனது என்று follow உப செய்து பார்ப்பதர்க்கேல்லாம்
முதல்வருக்கோ மற்றவர்களுக்கோ ஆர்வம் வராது! தமிழ் பதிவுலகில் வேண்டுமானாலும் திரு வினவு கும்பலின் ஆகாத்திய கூச்சலுக்கு ஒரு audience மற்றும் புரிதல் இருக்கலாம்! வெளியே ஹூம் ஹூம்! தொந்தரவு செய்தார்கள், விரட்டப்பட்டார்கள். அவ்வளவே!! இதில் முதல்வர் தலை இட ஒன்றும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
சரி, அதுவும் நடந்து விட்டது. ஆனால் தமிழ் வலை உலகத்தில் ஏன் இதைப்பற்றி யாரும் எழுதவில்லை என்பதற்கு பதில் உங்களுக்கு தெரியாதா?? உங்களுக்கு தெரியும், இருந்தாலும் சொல்லுகிறேன்; அதாவது இந்த தமிழ் மணத்தில் serious ஆக வலம் வந்து கருத்து சொல்லும் ஒரு நூறு பேர் soft target கிடைத்தால் அடிப்பவர்கள் மட்டுமே! வினவு கூடத்தை ஒருவேளை ஆதி முக ஆட்கள் அடித்திருந்தால் அல்லது வலது சாரி ஆட்கள் அடித்திருந்தால் காச்சு மூச்சு என்று பின்னூட்டம் போடுவார்கள், கருத்து சொல்லுவார்கள். அதாவது ஆதிமூக ஆட்சியில் இல்லையென்றால்! வலது சரி பற்றி கவலை இல்லை, ஏனென்றால் அவர்கள் இந்த பதிவு உலக ஆட்டத்திற்கு வருவது இல்லை! ஆதலால் எப்படி போட்டு தாக்கினாலும் பிரச்சனை இல்லை!
So தடுப்பது ஒன்றே ஒன்றுதான்! அது பயம்!!!
Maybe, திரு டோண்டு போன்றவர்கள், தன்னை திரு வினவு மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கண்டபடி வசை பாடியதால் (அதை பல பதிவர்கள் உளுக்குள் மகிழ்ச்சியாக கொண்டாடியதால்) கடுப்பாகி எழுதினார் என்று நினைக்கிறேன்!
மற்றபடி, திரு வினவு கும்பலின் வழிமுறைகளை யார் பின்பற்றினாலும் அது கண்டிக்கபடவேண்டியதுதான்! அது அவர்களுக்கு பாதகமாகி அவர்களே அடி வாங்கினாலும் அது தவறுதான்! செய்தவர்கள் கண்டிக்கபடவேண்டியவர்கள், தண்டிக்கபடவேண்டியவர்களே! ஆனால் இதில் முக்கியமான ஒன்று, அங்கு நடந்தது என்ன என்பதை தெரிந்து கொண்டு கருத்து சொல்ல வேண்டும்! முதல்வருக்கு கருப்பு கொடி காட்ட வேண்டும் என்றால், அதுவும் அவர் உட்கார்ந்திருந்து தலைமை ஏற்கும் கூட்டத்தில், அதை அறிவித்துதான் செய்ய வேண்டும்! அவர் வாகனத்தில் போகும்பொழுது தள்ளி நின்று கருப்பு கோடி காட்டுவது வேறு. அவர் இருக்கும் ஒரு இடத்தில் திடீரென்று எழுந்து கத்துவது வேறு! முதல்வர் போன்ற நிலையில் இருப்பவர்களுக்கு threats மிக அதிகம்! அவரின் பாதுகாப்புதான் முதல்! அதற்க்கு சிறு பங்கம் வந்தாலும் அதை அனுமதிக்ககூடாது, அது கலைஞாரானாலும் சரி, ஜெயலலிதா ஆனாலும் சரி!
அதையும் மீறி செய்பவர்கள் விளைவுகள் இப்படிதான் இருக்கவேண்டும் என்று பொங்குவது அறிவற்ற தன்மை! ஜனநாயக முறையில் எதிர்ப்பு காட்டுவதற்கு கூட சில மரபுகள் இருக்கிறது. அதை கடைபிடிப்பதே எல்லோருக்கும் நல்லது!
நன்றி
– இதில் நண்பர் திரு செந்தழில் இரவியின் இடைசொருகல்தான் மிக்க தமாஷு! இந்த பகுத்தறிவு பகலவன் ஏதோ மதங்களை பற்றி பேசுகிறார், சம்மந்தமே இல்லாமல்! இப்படிதான் ஒரு முறை ஹுசைன் வரைந்த ஓவியங்கள் சரி என்று சொன்ன மருத்துவர் ஒருவரை விமர்சனம் செய்து எழுதிய மற்றொருவரை சாடி கண்டபடி ஒரு பதிவை போட்டார்! அதில் இவர் பாரம்பரியத்தின்படி இந்து மதத்தை திட்டினார்! நான் ஒரு பதில் அவருக்கு போட்டேன்! அதாவது, இவர் சில காலம் முன்னர் இவரின் கடவுளை (இவர் இந்து அல்ல) ஒருவர் திட்டி எழுதியதற்கு இவர் எழுதிய கோபமான பதில்அது! அதாவது”புனிதரை திட்டாதே” மற்றும் “இது வேண்டாத பதிவு ” என்று!
இதை நான் சொல்லி காண்பித்ததும் இவர் சொன்னது, நான் இப்பொழுது முழு நாத்திகன், திருந்திவிட்டேன் என்று! எப்படி கதை! இவரு வேற்று மதத்துக்காரர், இவர் இப்பொழுது நாத்திகராம், அதனால் இந்து மதத்தை திட்டுவாராம்!
இதுதான் நாம் தமிழ்மணத்தில் காணும் பல பிரபல பதிவர்களின் நேர்மை மற்றும் லட்ச்சணம்! இவர்களிடம் போயி நீங்கள் ஞாயம் நேர்மை பற்றி பேசினால்…..சிரிப்புதான் வருகிறது!
மே 5, 2010 at 2:22 பிப
//அதாவது இந்த தமிழ் மணத்தில் serious ஆக வலம் வந்து கருத்து சொல்லும் ஒரு நூறு பேர் soft target கிடைத்தால் அடிப்பவர்கள் மட்டுமே! வினவு கூடத்தை ஒருவேளை ஆதி முக ஆட்கள் அடித்திருந்தால் அல்லது வலது சாரி ஆட்கள் அடித்திருந்தால் காச்சு மூச்சு என்று பின்னூட்டம் போடுவார்கள்//
Absolutely correct.
//முதல்வருக்கு கருப்பு கொடி காட்ட வேண்டும் என்றால், அதுவும் அவர் உட்கார்ந்திருந்து தலைமை ஏற்கும் கூட்டத்தில், அதை அறிவித்துதான் செய்ய வேண்டும்!//
அதற்கு அனுமதி கிடைத்தால் பரவாயில்லை. திமுக தான் கொடுக்காதே. அவர்கள் மட்டும் தான் கறுப்பு கொடி காட்டுவார்கள்.
மே 5, 2010 at 4:13 பிப
பாஸ்கர், மார்ட்டின் நிமோல்லர் சொல்லி இருப்பது அருமை. மொத்த மறுமொழியுமே நன்றாக இருக்கிறது.
// மகஇகவினர் இதே மாதிரி சுவாமியைத் தாக்கியதையும் அதை வினவு நியாயப்படுத்தியதையும் நீங்கள் சொல்லிக்காட்டியதை தவிர்த்திருக்கலாம் // இல்லை, சு. சாமி மேல் முட்டை வீசப்பட்டபோது கூப்பாடு போட்ட பதிவுலகம், ஊடகங்கள் இப்போது வாய் மூடி இருக்கிறது என்பது எனக்கு முக்கியமான விஷயம். வினவு குழுவினரைப் பற்றி என் நிலையை நான் மீண்டும் ஒரு முறை சொல்லாவிட்டால் படிப்பவர்கள் என்ன இவன் வினவு ஆதரவாளனாக மாறிவிட்டானா என்று குழம்ப வாய்ப்பிருக்கிறது என்று நினைத்தேன்…
// எவருடைய கருத்து சுதந்திரத்தை அச்சுறுத்துகிற வகையில் வன்முறை நிகழ்த்தப்பட்டாலும் அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் உங்களுக்கும் வினவுக்கும் கருத்து வேற்றுமை இருக்க வாய்ப்பில்லை. // இருக்கிறது. அதுதான் தகராறே. ஆனால் வினவு குழு தன் “எதிரிகளின்” கருத்து சுதந்திரத்தை ஒடுக்க நினைக்கிறது என்பதற்காக வினவின் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படக் கூடாது.
சீனு, // ‘இன்று’ தான் கண்டிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதா? // “இன்றுதான்” இல்லை, “இன்று கூட”.
நோ, சிறப்பான மறுமொழி எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
// தமிழ் பதிவு உலகத்தில் திரு வினவு மற்றும் அவர்கள் சார்ந்த கோஷ்டியினர்… //, மற்றும் // முதல்வர் போன்ற நிலையில் இருப்பவர்களுக்கு threats மிக அதிகம்! அவரின் பாதுகாப்புதான் முதல்! // போலீஸ் அடித்திருந்தால் அது சிறிய லா அண்ட் ஆர்டர் பிரச்சினை என்று சொல்லலாம். பதிவில் எழுதிய மாதிரி அது சப்பைக்கட்டுதான் என்று நம் எல்லாருக்கும் புரியும், ஆனால் அப்படி சொன்னால் அதை மறுத்துப் பேச முடியாது. பாதுக்காப்பு போலீசாரின் பொறுப்பு, கூட்டத்துக்கு வரும் மற்றவர்களின் பொறுப்பு இல்லை. இவர்களை அடிக்கும் சாக்கில், கவனம் திசை திரும்பி இருக்கும்போது, யாராவது முதல்வரைத் தாக்கவே வாய்ப்பு இருக்கிறது. உடனடியாக நிறுத்தப்பட வேண்டிய விஷயத்தை, யாரோ அடிப்பதை போலீஸ் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறது!
அடித்தவர்கள் யாரென்று நம்மாலேயே யூகிக்க முடிந்தாலும், அது யாரென்று போலீசுக்கு இன்னும் தெரியவில்லையாம். அந்த கணத்தில் முதல்வருக்கு தெரியவில்லை என்றாலும் அடுத்த நாள் கூடத் தெரியாதா? அவர் என் கண் முன்னால் அடித்திருக்கிறார்கள், போலீஸ் அடித்தவர்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று ஒரு கண்துடைப்பு உத்தரவாவது போட வேண்டாமா?
// செந்தழில் இரவியின் இடைசொருகல்தான்… // செந்தழல் ரவியைப் பற்றிய விவரங்களுக்கு நன்றி!
மே 6, 2010 at 7:06 முப
பதிலுக்கு நன்றி திரு RV
//அவர் என் கண் முன்னால் அடித்திருக்கிறார்கள், போலீஸ் அடித்தவர்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று ஒரு கண்துடைப்பு உத்தரவாவது போட வேண்டாமா?//
நான் முன்பே சொன்னது போல, இது ஒரு பெரிய விடயமே அல்ல என்பதால் யாரும் ரொம்ப கவலைப்படவில்லை! அவ்வளவுதான் விடயம். ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி சார்ந்த சிலர் இந்த மாதிரி அடி வாங்கியிருந்தால் ஒரு வேளை விசாரணை கமிஷன் போன்று ஏதாவது வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்! மேலும், நீங்கள் நினைப்பது போல நடந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அதாவது போலீசாருக்கு இது முன்னமே அரசால் புரசலாக தெரிந்திருக்கலாம். Maybe ஒரு வார்னிங் கூட அவர்கள் முன்னரே கொடுத்திர்ப்பார்களோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது! அதையும் மீறி நீங்கள் எதாவது செய்தால் நடப்பவைக்கு நாங்கள் பொறுப்பு அல்ல என்றும் போலிசு சொல்லி இருக்கக்கூடும்! இது என் யூகம் மட்டுமே. ஏன் இப்படி சொல்லுகிறேன் என்றால், சிலர் கூடி முடிவெடுக்கும் இதை போன்ற ஒரு செயல், அதாவது கருப்பு கொடி காட்டும் செயல், அதுவும் முதல்வருக்கு எதிராக செய்யலாம் எனும் திட்டம் ஒரு சதி வெலை போல திட்டமிடப்பட்டிருக்காது என்ற ஒரு அனுமானம்தான்! இது பரவலாக பேசப்பட்டு பின்பு முடிவெடுக்கப்பட்ட செயலாக இருக்கக்கூடம்! ஆதலால் விடயம் வெளியே கசிந்து போலிசுக்கு மிக சுலபமாக தெரிந்து போயிருக்கும்! அப்படி ஆன பட்சத்தில், போலிசின் நிலை இதை அமுக்குவதில்தான் முனையும்! நாங்கள் ஒன்றும் செய்யவில்லை, முதல்வர் முன்னிலையில் தகராறு செய்த சிலர் ஆளும் கட்சி காரர்கள்களால் விரட்டபட்டார்கள். நாங்கள் முனைவதற்குள் போய் விட்டார்கள், case closed என்று முடித்துவிட்டார்கள்! மறுபடியும் சொல்லுகிறேன், இது என் யூகம்தான், அனால் இப்படி நடப்பதர்க்குதான் நிறைய வைப்பு இருக்கிறது, ஏனென்றால், போலீஸ், அதாவது முதல் பாதுகாப்பு விடயத்தில், ஏனோ தானோ என்று செயல்படமாட்டார்கள்! மேலும் போலீஸ் மடையர்கள் இல்லை! அவர்களுக்கு தெரியாமல் இந்த மாதிரி விடயங்கள் எதுவும் நடக்காது!
நன்றி
மே 6, 2010 at 8:34 பிப
நோ, நான் உங்களிடமிருந்து வேறுபடுகிறேன். முதல்வர்தான் கறுப்புக்கொடி காட்டியவர்களைப் பற்றி, கறுப்புக்கொடி தான் காட்டியதைப் பற்றி, அடுத்த நாள் விலாவாரியாக மலரும் நினைவுகள் போல பேசி இருக்கிறாரே? அவர் கண்டுகொள்ளாமல் விட்டது ஒன்றே ஒன்றுதான் – அடித்தது யார், போலீஸ் ஏன் பார்த்துக்கொண்டு நின்றது?
மே 7, 2010 at 4:39 முப
என்னமோ போங்கோ…நேக்கு ஒண்ணும் புரியலை.
ஆனா நேக்கு ஒண்ணே ஒண்ணு வெளங்கறது , நான் பிசி….நீங்கல்லாம் வேலையில்லாம இருக்கேள். நான் வரட்டா?
மே 9, 2010 at 1:42 முப
பதில் சொல்லின்னு ஒரு பேரா! என் அப்பிடி ஒரு பேரு வெச்சிக்கிட்டீங்க? (நீங்க இதுக்கு பதில் சொல்லுவீங்களான்னு பாக்கத்தான் இந்த கேள்வி: நமக்கு வேற வேல வெட்டி இல்லீங்ணா! 🙂 )
மே 7, 2010 at 12:12 பிப
இணையத்தில் பெரிதாக கண்டு கொள்ளப் படாமல் போகும் விஷயங்கள் பல.
ஹுசைன் விவகாரம் குறித்து பதிவு மேல் பதிவு போட்டு தனது நடு நிலையை காட்டிக் கொண்டு இருக்கும் அதே நேரத்தில் கர்நாடகத்தில் தஸ்லீமாவின் எதோ ஒரு கட்டுரை பங்களாதேஷில் வெளி வந்ததை மெனக்கெட்டு மொழி பெயர்த்து வெளியிடும் வேலையை ஒரு பத்திரிக்கை செய்து விட கர்நாடகாவில் பல இடங்கள் பற்றி எரிந்தது. 2 பேர் கொல்லப் பட்டனர். 3 நாட்கள் ஊரடங்கு உத்தரவு என்று ஏகக் களேபரம்.
இந்த நடு நிலைவாதிகள் யாரவது கருத்து சொன்னார்களா?
இப்போது கூட வன்முறை பற்றி பேசும் போது அதிலும் பிராமணனை வம்புக்கு இழுத்துக் கொண்டு இருக்கிறார்கள்
மே 7, 2010 at 7:19 பிப
விருட்சம், நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். ஆனால் ஒரே மாதிரி இரண்டு அநியாயங்கள். சு. சாமி விஷயத்தில் பலர் பொங்கினார்கள், இதை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. ஏன் என்று தோன்றாதா?
மே 8, 2010 at 11:43 முப
இந்த இணையதளத்தில் சு.சாமிக்கு ஆதரவாக யாரும் பொங்கி இருக்க வாய்ப்பில்லை என்று தான் நினைக்கிறேன் .
இந்த இணையத்தில் வன்முறையையை எதிர்த்து பதிவுகள் வருவது மாதிரி எனக்கு தெரியவில்லை. பலரும் ஆதரவாகவே எழுதுகிறார்கள்.
சட்ட கல்லூரி வன்முறையை ஆதரித்து நிறைய எழுதப்பட்டது.
வெளிப்டையான வன்முறை படித்த மட்டத்தில் இருந்தே வருவது இப்போதெல்லாம் சாதாரணமாகி விட்டதால் பழகி கூட விட்டது. இதைத் தான் எதிர்பார்க்கலாம் வேறு எதிர்பார்ப்புகள் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று நடிகர் விஜய் வெளிப்படையாக தனது படங்களுக்கு சொல்லிவிடுவது போன்று expectations are set என்று கூட நினைக்க தோன்றுகிறது
மேலும் இங்கு உண்மையை எழுதுபவர்கள் மிகக் குறைவே