துரோணர் அவரது வாழ்நாளில் பல காலகட்டங்களில் பிராமண நியதிகளுக்குப் புறம்பாக வாழ்ந்திருப்பதாக படுகிறது. இதற்கு சான்றுகள் பல இருக்கிறது. இதை பற்றின ஆராய்ச்சி இது வரை நடந்திருக்கிறதா? நடந்திருக்காமல் இருக்காது என்று நம்புகிறேன். என்னால் அந்த தகவல்களை சேகரிக்க முடியவில்லை. யாருக்காவது தெரிந்திருந்தால் தெரிவிக்கவும். எனக்கு தோன்றியது கீழே.
முதலில் மீண்டும் ஒரு முறை பிராமணர் என்பவர் எப்படி வரையறுக்கப் படுகிறார் என்று எளிய வார்த்தைகளில் பார்ப்போம். மனு ஸ்மிருதி பிராமணர் என்பவர் யாசித்தே உண்ணவேண்டும் என்றும், நாட்டின் நலனுக்காக மன்னர்களுக்கும் மற்றவர்களுக்கும் வேதங்களையும் பிற கல்வி அமசங்களையும் பயிற்றுவிக்க வேண்டுமென்றும் கூறுகிறது. மேலும் பிராமணர் எனபவர் அமைதி, சுய கட்டுப்பாடு, பொறுமை, நேர்மை, அறிவு, விவேகம், சுத்தம், புனிதம் போன்ற தன்மைகளும் நிறைந்திருக்க வேண்டும்.
ஸமோ தமஸ் தப சௌகம்
க்சந்திர் அர்ஜவம் இவா கா
ஜ்னனம் விஜ்னனம் அஸ்திக்யம்
பிரஹ்ம கர்மா ஸ்வபவ ஜம்
(பகவத் கீதை – 18:42)
சரி. துராணாச்சாரியருக்கு வருவோம். எதனாலெல்லாம் இவர் பிராமணர் இல்லை என்று ஆகிறார்?
1) பாஞ்சால மன்னன் திரௌபதனிடம் ஏற்பட்ட அவமானங்களை அவரால் ஏற்றுக் கொள்ள முடியாமல் அவனிடம் கடைசி வரை பகை பாராட்டுகிறார். அதன் மூலம் ஒரு உளக் கொந்தளிப்பை கொண்டிருக்கிறார். இது அமைதி என்ற ஒரு பிராமணக் குணத்தை இழந்ததற்கு சாட்சி
2) அர்ஜுணனுக்கு தன்னை விட ஏகலைவன் வில் வித்தையில் திறமைசாலியாக வருவது வருத்தத்தை கொடுத்ததனால் துரோணர் அவனுடைய திறமையை இல்லாமல் ஆக்க சூழ்ச்சி செய்கிறார். இதன் மூலம் நேர்மையை இழக்கிறார்.
3) மேலும் தன்னை விடவே ஏகலைவன் சிறந்து விளங்கி விடுவானோ என்ற கவலை அவரிடம் இருந்தது. அதற்க்கும் சேர்த்தே சூழச்சி செய்கிறார். கட்டை விரலை குரு தட்சனையாக கேட்டு வாங்கிவிடுகிறார்.
4) பாண்டவர்களை வைத்து திரௌபதனை சங்கிலியால் கட்டி இழுத்து வந்து பழி தீர்த்துக் கொண்டார். மேலும் அவனிடம் பாதி ராஜ்யத்தை பிடுங்கிக் கொண்டு தான் (திரௌபதன் கொடுக்கவில்லை என்பதை நினவில் கொள்ளவும்) திரௌபத மன்னனுக்கு சமம் என்று நிருபித்தார். பழிவாங்குதல், அபகரித்தல், காழ்ப்புணர்ச்சி என்ற குணங்களை இதன் மூலம் வெளிப்படுத்துகிறார் துரோணர்.
5) குருஷேத்திரப் போரில கௌரவர்கள் பக்கம் சேர்ந்து இறுதி வரை போரிடுகிறார். போரிடுவது ஷத்திரிய தர்மமே ஒழிய பிராமண தர்மமில்லை.
6) அபிமன்யுவை போர் விதி முறைகளுக்கு புறம்பாக பலர் சேர்ந்து கொல்ல வைக்கிறார். மீண்டும் சூழ்ச்சி.
இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது துரோணாச்சாரியர் பிராமணனாக வாழ்ந்ததை விட ஷத்ரியனாகவே அதிகம் வாழ்ந்திருக்கிறார். துரோணரருக்கு சாதகமாக பல நியாங்கள் இருந்திருக்கின்றன். இருந்தாலும் துரோணர் பிராமணர் என்று வகைப்படுத்தபட வேண்டுமென்றால் அவற்றையெல்லாம் மீறி பிராமண வாழ்க்கையை கடை பிடித்திருக்க வேண்டுமல்லவா?
பிற்சேர்க்கை – நான் இங்கே, ஷத்ரியர்களின் தர்மத்தை குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களைப் போலவே போர் போர் என்று காலத்தை செலுத்தியதால் ”துரோணாச்சாரியர் பிராமணனாக வாழ்ந்ததை விட ஷத்ரியனாகவே அதிகம் வாழ்ந்திருக்கிறார்” என்று கூறினேன்
பிற்சேர்கையின் பின் பிற்சேர்க்கை – சிலர் குழப்பமடைந்ததால் இது :
“Brahmins” – i.e. Within Quotes – Not Brahmins
Brahmins – i.e without quotes – Brahmins/ Real Brahmins/Vedic Brahmins/Brahmin Varnam
மார்ச் 17, 2010 at 5:23 பிப
Dear Mr. RV,
I request your attention on a comment made by you on Dec 5, 2009 at this same blog!
//
RV said:
திருச்சிக்காரன், உங்கள் வரையறைப்படி இன்று பிராமணன் என்பவன் எங்குமே இல்லாமல் இருக்கலாம். ஆனால் அரசும் சமூகமும் உங்கள் வரையறையை பின்பற்றவில்லை. அரசும் சமூகமும் இன்று யாரை பிராமணன் என்று நினைக்கிறார்களோ, அவர்களுக்கு பூணூல் போட உரிமை உண்டா என்று எழுதப்பட்ட பதிவு இது.//
This was in reply to my comment made on Dec 3 at your Blog as follows!
//
Thiruchchikkaaran:
இங்கே பிராமணர்கள், என்று எல்லோரும் பேசிக் கொள்கிறார்களே, இங்கே யார் பிராமணர்? எப்படி இவர்கள் பிராமணர்கள்?
//“அந்தணர் என்பர் அறவோர், மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்”//
எல்லோருக்கும் நல்லது நினைக்கும் மனது இருக்கிறதா?
அத்வேஷ்டா (வெறுப்பிலாமல்),சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களிடமும் சிநேகமாக),கருண ஏவ ச (கருணையுடன் )”நிர்மமோ நிரஹங்கார (அகந்தையும், திமிரும் இல்லாதவனாக)ய மத் பக்த: ஸ மே ப்ரிய (எவன் என்னிடம் பக்தி உள்ளவனாக இருக்கிறானோ அவனே எனக்கு விருப்பமானவன்) ”
மனதிலே கருணை இருக்கிறதா?
எல்லோரையும் போல காலையிலே இட்டிலி , பொங்கல் தின்று விட்டு வேலைக்கு ஓடுகிறீர்கள். மாலையில் வீட்டில் வந்து அடைகிறீர்கள்.
உங்களுக்கும் மற்றவருக்கும் கிஞ்சித்தாவது வித்யாசம் உண்டா?
ஆன்மீக அறிவாவது இருக்கிறதா?
இன்றைக்கு இருக்கும் “பிராமணர்க”ளுக்கு, யார் சரியான ஆன்மீக வாதி என்று கண்டு பிடிக்கும் அளவுக்கு கூட ஆன்மீக அறிவும் கிடையாது, அதப் பற்றி அக்கரையும் இல்லை. இவர்கல் மதிப்பது, பணத்தை, பட்சணத்தை, பதவியை தான்.
மற்ற பிரிவினரை விட ஆன்மீகத்திலே அதிகம் ஏமாந்தவர்களாக , அசிங்கத்தை ஒண்ணுமே நடக்கலை என்று கூறி விட்டுப் போகும் அளவுக்கு இருக்கிறீர்கள்.
பிறகு என்னய்யா பிராமணன்?
தோல்தான் கொஞ்சம் வெள்ளை. அதுதான் பிராமணைக்கு அடையாளமா? உத்தர பிரதேசத்திலே இருக்கும் தலித் பிரிவினர் கூட அதிக வெள்ளையாக இருக்கிறார்கள். திருந்துங்கள் அய்யா, கொஞ்சம் அறிவை உபயோகப் படுத்தக் கூடாதா?//
When I listed the qulaities of the Bhramin, you told that அரசும் & சமூகமும் consider some persons as Bhramins, so they are Bhramins and eligible to wear Poonool!
Now you yourself are listing the qualities of a Bhramin and ask us to Judge whether Dhrona is a Bhramin.
So now what is your stance?
Do you mean that for Dhrona the qulaities are to be considered to decide whether he is a Bhramins,
anf for the present day “Bhramins” the அரசும் சமூகமும் shall decide they are Bhramins|?
Is this not a double standard Mr. RV?
Any way I have not much to support Mr. Dhronar. I neither hate him, nor like him.
மார்ச் 17, 2010 at 7:14 பிப
Thiruchchikkaaran,
First of all, this is my (Bags’) post. Not RV’s. RV doesn’t bear any responsibility to what I write.
Secondly, you missed the point. RV’s argument in your above said post was not who a Brahmin is. His point was if (society and Government recognized) “Brahmins” could wear “poonool”
Thirdly, you forgot about the subject and taking it on RV for what he didn’t say anything in this post.
Let me try to clarify:
1) I think you are confusing between Brahmins (Vedic Brahmins) and “Brahmins” (those who are called so by Society and Govt)
2) In today’s India 99.9% of the populace (including the Government) don’t know the real meaning of a Brahmin.
3) I don’t recognize “Brahmins” as Brahmins.
4) “Brahmins”, a misnomer, is a caste in the Vysya Varnam.
5) In other words, “Brahmins” are not the Brahmin in the Varnam hierarchy (Brahmin, Kshatriyas, Vysyas and Sutras)
Hope this is clear. Now let me know if you have opinions/answers for the question in the topic. 🙂
மார்ச் 17, 2010 at 8:07 பிப
//First of all, this is my (Bags’) post. Not RV’s. RV doesn’t bear any responsibility to what I write.//
அது சரி, இதை எல்லாம் பார்த்து கமெண்ட் எழுத வேண்டுமா? மூவர் செர்ந்து தளம் நடத்துககிறீரர்கள். கொள்கை வேறு பாடு இருக்க முடியுமா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால்
அவருடைய கொள்கைப் படி நீங்கள் எழுதியதை அவர் மறுக்க வேண்டும்.
//Secondly, you missed the point. RV’s argument in your above said post was not who a Brahmin is. His point was if (society and Government recognized) “Brahmins” could wear “poonool”//
ponit is correct only! My earlier comment asked clearly,
இங்கே யார் பிராமணர்? எப்படி இவர்கள் பிராமணர்கள்?
//1) I think you are confusing between Brahmins (Vedic Brahmins) and “Brahmins” (those who are called so by Society and Govt)//
Mr. Bags, I am not confusing. Bhramins are unique, Vedic period Bhramins or Present day Bhramins, as per their quality they can be considered as Bhramins.Those who acted as Bhramins in films can not be considered as Bhramins!
//2) In today’s India 99.9% of the populace (including the Government) don’t know the real meaning of a Brahmin.
3) I don’t recognize “Brahmins” as Brahmins.
4) “Brahmins”, a misnomer, is a caste in the Vysya Varnam.
5) In other words, “Brahmins” are not the Brahmin in the Varnam hierarchy (Brahmin, Kshatriyas, Vysyas and Sutras)//
Mr. Bags – this is really Confusing. You could have used Bold letters or italic to differentiate.
Or you can use ” Kanchipuram Devanathan” as one Bench mark and ” Sravan (Ramayana)” as another Bench mark instead of using ” Bhramins ” and Bhramins!
மார்ச் 17, 2010 at 8:25 பிப
Well thiruchchikkaaran,
Looks like you are online. So comments are instantaneously coming. Still you are not coming out this to answer the subject question.
Well. Lets go in your way.
>>>அது சரி, இதை எல்லாம் பார்த்து கமெண்ட் எழுத வேண்டுமா? மூவர் செர்ந்து தளம் நடத்துககிறீரர்கள். கொள்கை வேறு பாடு இருக்க முடியுமா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால்
அவருடைய கொள்கைப் படி நீங்கள் எழுதியதை அவர் மறுக்க வேண்டும்.
முதலில், நாங்கள் புறவயமாகத்தான் (அப்ஜெக்டீவ்) பேச நினைக்கிறோம். கொள்கைகள் வைத்துகொண்டு பேசுவதற்கு நாங்கள் கட்சியா நடத்துகிறோம்? 🙂
இரண்டாவது, மூவர் எழுதும் பொழுது வேறு வேறு கருத்துக்கள் இருப்பது சகஜமே. உங்களைப் போலவே RVயும், உப்பிலியும் இங்கே வந்து என் கருத்துக்கு மாற்று கருத்து தெரிவிக்கத்தான் செய்திருக்கிறார்கள். நானும் அவ்வாறு செய்தது உண்டு.
>>>Mr. Bags, I am not confusing. Bhramins are unique, Vedic period Bhramins or Present day Bhramins, as per their quality they can be considered as Bhramins.Those who acted as Bhramins in films can not be considered as Bhramins!
Like I said in point 2, 99.9% are not aware of the meaning of it. You are talking by being in the99.9% I would like you to be in the remaining proportion so that we can discuss this better.
>>> Mr. Bags – this is really Confusing. You could have used Bold letters or italic to differentiate.
“Brahmins” – i.e. Within Quotes – Not Brahmins
Brahmins – i.e without quotes – Real Brahmins
மார்ச் 17, 2010 at 9:42 பிப
திருச்சிக்காரன்,
இது எங்கள் கூட்டு முயற்சி. எங்களுக்குள் கருத்து வேறுபாடு இது வரை பெரிதாக இல்லை, அதனால்தான் கூட்டாக நடத்த முடிகிறது. சிறு வேறுபாடுகளும் இல்லாமல் இருக்க நாங்கள் என்ன cloneகளா?
எந்த முரண்பாடும் என் கண்ணுக்கு தெரியவில்லை. நான் இன்றைய சமூகத்தில் பிராமணர் என்று சொல்லப்படுபவரைப் பற்றி எழுதி இருந்தேன். நீங்கள் சந்தேகம் எழுப்பியதும் நான் யாரைப் பற்றி எழுதினேன் என்பதை தெளிவாக்கியும் இருக்கிறேன். பக்ஸ் “அந்தணர் என்பவர் அறவோர்” என்ற வர்ணாசிரம லட்சியத்தை கடைப்பிடிப்போரே பிராமணர் என்றால் துரோணர் அந்த லட்சியத்தை கடைப்பிடித்தாரா, அவர் “லட்சிய” பிராமணரா என்று கேள்வி கேட்டு இல்லை என்று தன முடிவையும் எழுதி இருக்கிறான். இதில் உங்களுக்கு என்ன குழப்பம்?
// அரசும் & சமூகமும் consider some persons as Bhramins, so they are Bhramins and eligible to wear Poonool! // தவறாக நினைவு கூர்கிறீர்கள். அரசும் சமூகமும் யாரை பிராமணன் என்று கருதுகிறார்களோ அவர்களை பற்றி எழுதப்பட்ட பதிவு அது. பிராமணர்களுக்கு பூணூல் போடா உரிமை உண்டு என்று எழுதவில்லை. யாருக்கு வேண்டுமானாலும் அவர்கள் உடலில் என்ன வேண்டுமானாலும் (தற்கொலை பெல்ட், குண்டு, மாதிரி சமாச்சாரங்களைத் தவிர) அணிந்து கொள்ளும் உரிமை உண்டு என்று எழுதி இருந்தேன். பிராமணர்கள் பூணூல் போட்டுக் கொள்ளும் உரிமையும் அதில் ஒரு (சிறு) பகுதி. தொப்புளில் வளையம் போட்டுக் கொள்வதும் அதில் ஒரு சிறு பகுதி. நாளைக்கு ஒரு முஸ்லிம் நான் பூணூல் போட்டுக் கொள்கிறேன் என்று கிளம்பினால் அதுவும் அவர் உரிமை. இது உடை, அணிமணிகள், அலங்காரம் தொடர்பான உரிமை. என் உடலில் என்ன இருக்கலாம் இருக்கக் கூடாது என்று நிறுவும் உரிமை யாருக்கும் இல்லை. அவ்வளவுதான். விழுந்து விழுந்து பதில் எழுதிய நீங்களே இப்படி தவறாக புரிந்து கொண்டீர்கள் என்றால் மற்றவர்கள் என்ன புரிந்து கொண்டார்களோ?
// Do you mean that for Dhrona the qulaities are to be considered to decide whether he is a Brahmins, and for the present day “Brahmins” the அரசும் சமூகமும் shall decide they are Brahmins? //
சந்தேகமே வேண்டாம். துரோணர் லட்சிய வரையறையை வைத்துப் பார்த்தால் பிராமணர் இல்லை. அவரது ஸ்வதர்மம் ஒரு க்ஷத்ரியன் அல்லது சூதனுடையது. விதுரர் மாதிரி அவரும் ஒரு அரசு அதிகாரி. அவர் மகன் அஸ்வத்தாமன் கேசில் இது இன்னும் தெளிவு. ஆனால் இந்த கால அரசு/சமூகம் என்ன, அந்த கால அரசு/சமூகத்தின் கண்களில் கூட அவரது பிறப்பே அவர் பிராமணர் என்று கருதப்பட்டாரா இல்லையா என்பதை முடிவு செய்தது. லட்சிய வரையறை என்பது அரசு/சமூகத்தின் கண்களில் எப்போதுமே ஏட்டு சுரைக்காயாகத்தான் இருந்து வருகிறது.
இப்படியே போனால் வியாபாரம் செய்யவில்லை, அதனால் நீ செட்டியார் இல்லை, மாடு வளர்க்காதவன் கோனார் இல்லை, எண்ணெய் செக்கு வைத்து தொழில் செய்யாதவன் வாணியன் இல்லை, பனை மரம் ஏறாதவன் சாணார் இல்லை என்றெல்லாம் சொல்வீர்கள் போலிருக்கிறது. ஜாக்கிரதை, இதை கள்ளர், போயர், ஒட்டர் ஜாதிக்கெல்லாம் சொல்லி விடாதீர்கள், அடிக்க வருவார்கள்!
மே 15, 2013 at 8:56 முப
போயர் (Boyar) என்றழைக்கப்படும் (Bedar) வேட்டுவ சாதி மக்கள்
இராமாயணம் ஒரு நாயகன்(Nayaka) = கிராத் (Kirat) = போய (Boya) = வேடர் (vedar) = பேட (Beda) சமூகத்தில் பிறந்த முனிவர் வால்மீகியால் எழுதப்பட்டது.
போயர்களின் சாதிய பெயர்கள் பின்வருமாறு அழைக்கப்படும்:-
வேடன் = வேடர் = கண்ணப்ப குல மக்கள், பேட அல்லது போய = போயர் = பேடர் = வால்மீகி. [2][3]
போயர்கள் (Bhoyar), கவரா (Kavara) மற்றும் கோஹர்யா என்பன கோழி (Kohli ) இனத்திலிருந்து பூர்வ வழியாக வந்த இனமாகும்.[4]
கோழி (kolis ) இனத்தவர்கள் மகாராஷ்டிரா முழுவதுமாக இருப்பிடமாக கொண்டுள்ளனர், இவர்கள் கிராத் (kirat) வம்சவளியினறவர்,மேலும் இவர்கள் கஹர்ஸ் (Kahars) என்றும் அழைக்கபடுவர்.[5]
கோழி (koli) இனத்தவர்களும் கிராத் (kirat) இனத்தவர்களான இராமாயணம் எழுதிய வால்மீகி முனிவரின் இனமும் ஒன்றே என்றும் மேலும் இவர்கள் சூரிய குலத்தினை சார்ந்தவர்கள் என்றும் புராணங்கள் கூறுகின்றன.[6]
கருநாடகாவில் பேடர் என்றும் வால்மீகி நாயக்கா என்றும் அழைப்பர் மேலும் தென் இந்தியாவில் போய டோரா எனும் வார்த்தை மருவி போயடுறு ஆக உருமாறி இறுதியில் போய எனும் சொல் வேடர்களை குறிக்க நிலைத்துவிட்டது.
போயர்கள், நாய்டு அல்லது நாயுடு, நாயக், டோரா (ராஜா) , டோரா பிட்டா (ராஜபுத்திரர்கள்) மற்றும் வால்மீகி என்று அழைக்கபடுவர். இதை Edgar Thurston அவர்கள் சென்னை மாகாணத்திற்கான மக்கள் துகை கணக்கெடுப்பின் பொழுது அரசுக்கு அறிக்கை அளித்த பொழுது பின்வருமாறு கூறியுள்ளார். The titles of the Boyas are said to be Naidu or Nayudu, Naik, Dora, Dorabidda (children of chieftains), and Valmiki.[7]
போய அல்லது போயர்கள் எனும் சொல் உயர்ந்த ராஜவம்சத்தை குறிக்கும் சொல்லாக கருதப்பட்டுவந்தது.இதனை சித்ரதுர்கா போய நாயக்கர்களின் வரலற்று சுவடுகளின் மூலம் அறியமுடிகின்றது, மேலும் இவ்விவரங்களினை தெரிந்து கொள்ள சித்ரதுர்கா மதகரி நாயக்கரின்வரலாற்றினை படிக்கவும்.
மகாராஷ்டிராவில் போயர்கள்
போயர்கள் மகாராஷ்டிராவில் போய் (bhoi) என்றும் ரமொஷி (Ramoshi) என்றும் அழைக்கபடுவர், போய் என்பது தெலுங்கு வார்த்தையான போயாவில் இருந்து மருவி வந்ததாகும், மேலும் போய் இரு வேறு பிரிவு மக்களாக பிரிதரியப்ப்பட்டனர் அவை முறையே பேஸ்த மற்றும் குன்லோடு என்பவையாகும்.தென்னிந்தியாவிற்கு புலம்பெயர்ந்த போய இனமக்கள் மகாபாரதத்தில் வரும் கங்கையின் புத்திரரான பீஷ்மரின் வம்சாவளியினராவர். இதில் உட்பிரிவினரான காஜலு (Kajale) மற்றும் கம்பளி (Kampale) இனத்தவர்கள் அடங்குவர்.[8]
மௌரிய (Maurya) அரச வம்சம் சூரிய (Solar or Sun Race) குலமாகும் வம்சாவளி ஆகும்.[26]
ஆட்சிக்கு உட்பட்ட இடங்கள் : பஞ்சாப், பாட்னா, ஒரிசா மற்றும் மைசூர் ஆகியன.
ஆட்சி செய்த இடங்கள்: கி.மு.322 ஆம் ஆண்டு முதல் 185 ஆம் ஆண்டு வரை
மொழி : சமஸ்கிருதம் மற்றும் பரகிரத் (Sanscrits and Prakirats)
மதம் : பிராமனிஷம், புத்திசம் மற்றும் ஜைனிசம்
ஆட்சி புரிந்த அரசர்கள் : சந்திரகுப்தா மௌரிய, பிந்துசார, அசோக பேரரசர், தசரத சக்ரவர்த்தி மற்றும் ப்ரிஹ்றதா ஆகியோர் ஆவர். (Chandragupta Maurya, Bindusara, Ashoka the great, Dasaratha, Satadhanvan, Brihadratha)[27][28]
ஆங்கில போயர் (Bhoyar) எனும் வார்த்தை போயர் (Bhoir) எனும் வார்த்தைக்கு சமமானது, இவர்களின் மேன்மை பொருந்திய பிற பெயர்கள் மகாஜன் (Mahajan), படேல் (Patel) எனவும் இது ராஜபுத்திரர்கள் வழி வந்த பன்வர் (Panwar) எனப்படும் சாதியிலிருந்து வந்த துணை சாதி பிரிவுகளாகும். போயர் (Bhoyar) என்பது Bhor என்று பொருள்படும் Bhor என்றல் சூரிய விடியல் என்று தமிழில் மொழிபெயர்க்கலாம் மற்றும் சூரிய குலம் என்றும் பொருள்படும்.
மார்ச் 18, 2010 at 2:56 முப
துரோணர் பிராமணராக – அல்லது பார்ப்பானாக – இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?
இந்த விவாதம் எல்லாம் கவைக்கு உதவாதது.
செத்த பிரேதத்தை மடியில் கட்டிக்கொண்டு
வேதாந்தம் பேசுவதில் என்ன பயன்?
ஆரோக்கியமான விஷயங்களைப் பற்றி எழுதுங்கள்; மாற்றுக் கருத்துக்களை நளினமாகத் தெரிவியுங்கள். கண்ணியம் படித்தவர்களின் ஆபரணம் என்று கேள்விப்ப்ட்டிருக்கிறேன்.
மார்ச் 18, 2010 at 3:22 முப
Dear Mr. RV,
//திருச்சிக்காரன், உங்கள் வரையறைப்படி இன்று பிராமணன் என்பவன் எங்குமே இல்லாமல் இருக்கலாம். ஆனால் அரசும் சமூகமும் உங்கள் வரையறையை பின்பற்றவில்லை. அரசும் சமூகமும் இன்று யாரை பிராமணன் என்று நினைக்கிறார்களோ, அவர்களுக்கு பூணூல் போட உரிமை உண்டா என்று எழுதப்பட்ட பதிவு இது.//
பூணூல் போடுவது எங்கள் விருப்பம் என்பதை சொல்லியிருந்தீர்கள். அதை நான் ஒன்றும் சொல்லவில்லை. பிராமணர் என்பவர் இப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதாக சொல்லப் பட்டதை எழுதிய போது அதை குறிப்பிட்டு அரசாங்கமும், சமூகமும் பிராமணர் என்று சொல்லுகிறதே (அது போதாதா என்பது போல) என்று தெளிவாக எழுதி இருக்கிறீர்கள். அந்த அளவை துரோணருக்கு அப்ளை ஆகாதா என்பதே எனது வினா! அதாவது அந்தக் கால மக்கள் குறிப்பிட்ட வறையரைக்குள் இருந்தால் தான் அவர்கள் பிராமணர், ஆனால் இந்தக் கால மக்கள் அரசாங்கம் சமூகம் சொன்னால போதும் பிராமணர் என்று வைத்துக் கொள்ள வேண்டுமா, இதுதான் அர்த்தம், புரிதல் சரியா? இது டபிள் ஸ்டாண்டர்ட் இல்லை எனவும் புரிதல் செய்ய வேண்டும், சரி தானே!
//இப்படியே போனால் வியாபாரம் செய்யவில்லை, அதனால் நீ செட்டியார் இல்லை, மாடு வளர்க்காதவன் கோனார் இல்லை, எண்ணெய் செக்கு வைத்து தொழில் செய்யாதவன் வாணியன் இல்லை, பனை மரம் ஏறாதவன் சாணார் இல்லை என்றெல்லாம் சொல்வீர்கள் போலிருக்கிறது.//
Dear Mr. RV,
It would have been appropriate if you have asked this question to Mr. Baksh , as Mr. Baksh has written;
5) குருஷேத்திரப் போரில கௌரவர்கள் பக்கம் சேர்ந்து இறுதி வரை போரிடுகிறார். போரிடுவது ஷத்திரிய தர்மமே ஒழிய பிராமண தர்மமில்லை.
Mr. Baksh,
I request your clarification on the below referred question by Mr. RV,
//இப்படியே போனால் வியாபாரம் செய்யவில்லை, அதனால் நீ செட்டியார் இல்லை, மாடு வளர்க்காதவன் கோனார் இல்லை, எண்ணெய் செக்கு வைத்து தொழில் செய்யாதவன் வாணியன் இல்லை, பனை மரம் ஏறாதவன் சாணார் இல்லை என்றெல்லாம் சொல்வீர்கள் போலிருக்கிறது.//
——
Dear Mr. RV,
//இதை கள்ளர், போயர், ஒட்டர் ஜாதிக்கெல்லாம் சொல்லி விடாதீர்கள், அடிக்க வருவார்கள்!//
ஆனால் துரோணர் அடிக்க வர மாட்டர், ஏனெனில் அவர் உயிருடன் இல்லை. அதனால் ஸ்வதர்ம ரூலை அவருக்கு அப்ளை செய்யலாம் என்பது சரியான புரிதல் தானே திரு. RV அவர்களே?
மார்ச் 18, 2010 at 4:42 முப
இது என்னமோ வெட்டிப்பேச்சு மாதிரி தோனுது.
மார்ச் 18, 2010 at 5:46 பிப
Dear Bags,
சுஜாதாவின் ‘கற்றதும் பெற்றதுமி’ லிருந்து ஒரு பகுதி….
மகாபாரதத்தின் பகுதியாக இருக்கும் பகவத்கீதை (இறைவனின் கீதம்) வருணாசிரமத்தை வலியுறுத்துகிறதா என்று பார்ப்போம்.
‘சதுர்வர்ணம் மயா ச்ருஷ்ட. குணா கர்ம சத்வ ரஜஸ் தமஸ்’ என்கிறார் பகவான். ‘நால்வர்ணப் பிரிவு என்னுடைய சிருஷ்டிதான். சாத்விக, ராஜஸ, தாமஸ குணங்களின், செயல்களின் கலவை’ என்கிறார்.
‘பிறக்கும்போது எல்லோரும் சூத்திரர்களே (ஜன்மனா ஜாயதே சூத்ரஹ) ! பண்பாடு, கல்வி, அறிவு இவை வந்தடையும்போதுதான் மானுடன் உயர்சாதியாகிறான்’ என்கிறது ரிக் வேதம்.
எனவே, இன்றைய சதுர்வர்ணத்தில் சிறந்தவர்களை ப்ரெயின் சர் ஜன்கள், சாப்ட்வேர் இஞ்சினீயர்கள், ராக்கெட் விஞ்ஞானிகள், சங்கீதக் கலைஞர்கள் இப்படித்தான் பிரிக்க முடியுமே தவிர, அய்யர், அய்யங்கார், பிள்ளைமார், நாயுடு எல்லாம் கீதையில் இல்லை. கீதையில் பகவான் தன்னைப் பற்றிச் சொல்லும்போது, சிறந்தவர்கள், சிறந்தவை எல்லாவற்றையும் பட்டியலிட்டு, அவையெல்லாம் நானே என்னும்போது, அந்தக் காலத்தில் ராக்கெட் விஞ்ஞானிகள் இருந்திருந்தால், ‘ராக்கெட்டும் நானே, ராக்கெட் விஞ்ஞானியும் நானே’ என்று சொல்லியிருப்பார்.
மார்ச் 18, 2010 at 7:04 பிப
வழிப்போக்கன் மற்றும் குடுகுடுப்பை, பதிவுகள் டீக்கடை முன்னால் உட்கார்ந்து அடிக்கும் அரட்டை போலதான்!
திருச்சிக்காரன், உங்கள் குழப்பம் எனக்கு சுத்தமாக புரியவில்லை. பிராமணர் என்ற வார்த்தைக்கு இன்றைய அரசு, சமூகம் (அன்றைக்கும் கூட) அதற்கு ஒரு பொருள் தருகிறது. அந்த அர்த்தத்தில்தான் நான் என் பதிவை எழுதினேன். நீங்கள் லட்சிய வரையறை பற்றி பேசியபோது நான் அதை எந்த அர்த்தத்தில் பயன்படுத்தினேன் என்று தெளிவாக்கினேன். பக்ஸ் தன பதிவில் என்ன அர்த்தத்தில் பயன்படுத்துகிறேன் என்று தெளிவாக் சொல்கிறான், பிறகு அந்த வரையறைபடி துரோணர் பிராமணர் இல்லை என்று வாதிடுகிறான். சாதாரணமாக பயன்படுத்தும் விதத்தில் இந்த வார்த்தையை பக்ஸ் பயன்படுத்தவில்லை, அதனால் அவனுக்கு அதை தெளிவாக முதலிலேயே சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. அந்த கால சமூகத்தின் கண்களில் துரோணர் பிராமணர்தான். உங்களுக்கு சந்தேகம் வேண்டாம் என்றுதான் உங்கள் வரையறைப்படி துரோணர் பிராமணர் இல்லை, அன்றைய சமூகத்தின் கண்களில் அவர் பிராமணரே என்று நான் போன மறுமொழியில் எழுதினேன். பக்ஸ் லட்சிய வரையறைப்படி இன்று யாரும் பிராமணர் இல்லை என்று அவன் மறுமொழியில் – முன்னமும் பல முறை சொன்ன மாதிரி – மீண்டும் சொல்லி இருக்கிறன். இதில் உங்களுக்கு என்ன குழப்பம்? இதில் என்ன டபிள் ஸ்டாண்டர்ட்? “அது போதாதா” என்று நீங்களே நான் சொல்லாததை எல்லாம் நினைத்துக் கொண்டு எழுதுகிறீர்கள்!
அப்புறம் பூணூல் போடுவது “எங்கள்” விருப்பம் இல்லை. அவரவர் விருப்பம். தொப்புள் வளையமும் அப்படித்தான். யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் – பூணூல் உட்பட – போட்டுக் கொள்ளலாம். அப்படி போட்டுக் கொள்ள அவர்களுக்கு உள்ள உரிமையை நான் வலியுறுத்துகிறேன்.
அப்புறம் அவனை bags என்று அழைப்போம், baksh இல்லை. நானே கொஞ்ச நேரம் யார் இந்த baksh என்று குழம்பிவிட்டேன்.
மார்ச் 18, 2010 at 7:12 பிப
வரதராஜன், ஹுசேனுக்கு என்று தனி சட்டம் போடா முடியாது. ஆனால் அவர் மேல் படம் வரைந்ததற்காக கேஸ் போடலாம் என்ற அளவுக்கு ஒரு சட்டம் இருக்கிறது, அது மாற்றப்பட வேண்டும். சட்டம் எக்கேடும் கெட்டுப் போகட்டும், ஹுசேனை அடிப்போம், ஓவியங்களை கிழிப்போம் என்று கிளம்பி இருக்கும் கூட்டம் தண்டிக்கப்பட வேண்டியது.
வழிப்போக்கன் மற்றும் குடுகுடுப்பை, பதிவுகள் டீக்கடை முன்னால் உட்கார்ந்து அடிக்கும் அரட்டை போலதான்!
திருச்சிக்காரன், உங்கள் குழப்பம் எனக்கு சுத்தமாக புரியவில்லை. பிராமணர் என்ற வார்த்தைக்கு இன்றைய அரசு, சமூகம் (அன்றைக்கும் கூட) அதற்கு ஒரு பொருள் தருகிறது. அந்த அர்த்தத்தில்தான் நான் என் பதிவை எழுதினேன். நீங்கள் லட்சிய வரையறை பற்றி பேசியபோது நான் அதை எந்த அர்த்தத்தில் பயன்படுத்தினேன் என்று தெளிவாக்கினேன். பக்ஸ் தன பதிவில் என்ன அர்த்தத்தில் பயன்படுத்துகிறேன் என்று தெளிவாக் சொல்கிறான், பிறகு அந்த வரையறைபடி துரோணர் பிராமணர் இல்லை என்று வாதிடுகிறான். சாதாரணமாக பயன்படுத்தும் விதத்தில் இந்த வார்த்தையை பக்ஸ் பயன்படுத்தவில்லை, அதனால் அவனுக்கு அதை தெளிவாக முதலிலேயே சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. அந்த கால சமூகத்தின் கண்களில் துரோணர் பிராமணர்தான். உங்களுக்கு சந்தேகம் வேண்டாம் என்றுதான் உங்கள் வரையறைப்படி துரோணர் பிராமணர் இல்லை, அன்றைய சமூகத்தின் கண்களில் அவர் பிராமணரே என்று நான் போன மறுமொழியில் எழுதினேன். பக்ஸ் லட்சிய வரையறைப்படி இன்று யாரும் பிராமணர் இல்லை என்று அவன் மறுமொழியில் – முன்னமும் பல முறை சொன்ன மாதிரி – மீண்டும் சொல்லி இருக்கிறன். இதில் உங்களுக்கு என்ன குழப்பம்? இதில் என்ன டபிள் ஸ்டாண்டர்ட்? “அது போதாதா” என்று நீங்களே நான் சொல்லாததை எல்லாம் நினைத்துக் கொண்டு எழுதுகிறீர்கள்!
அப்புறம் பூணூல் போடுவது “எங்கள்” விருப்பம் இல்லை. அவரவர் விருப்பம். தொப்புள் வளையமும் அப்படித்தான். யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் – பூணூல் உட்பட – போட்டுக் கொள்ளலாம். அப்படி போட்டுக் கொள்ள அவர்களுக்கு உள்ள உரிமையை நான் வலியுறுத்துகிறேன். நாளைக்கு சூப்பர்மன் மாத்ரி யாராவது பாண்டுக்கு வெளியே ஜட்டி போட்டு வந்தாலும் அவனுக்கு அந்த உரிமை இருக்கிறது என்பதுதான் உண்மை.
அப்புறம் அவனை bags என்று அழைப்போம், baksh இல்லை. நானே கொஞ்ச நேரம் யார் இந்த baksh என்று குழம்பிவிட்டேன்.
ஸ்ரீனிவாஸ், வர்ணம் வேறு, ஜாதி வேறு என்று வாதிடுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கீதை கண்ணனால் அர்ஜுனனுக்காக சொல்லப்பட்டது. அர்ஜுனன் கர்ணனை க்ஷத்ரியன் என்று நினைத்ததாகவோ, இல்லை கண்ணன் நீ கர்ணனை அப்படி மதிக்க வேண்டும் என்று சொன்னதாகவோ மகாபாரதத்தில் இல்லை. அதனால் இந்த மாதிரி விஷயம் எல்லாம் ஏட்டுச் சுரைக்காயாகத்தான் இருந்தது என்று நான் நினைக்கிறேன்.
மார்ச் 19, 2010 at 5:35 முப
//வரதராஜன், ஹுசேனுக்கு என்று தனி சட்டம் போடா முடியாது. ஆனால் அவர் மேல் படம் வரைந்ததற்காக கேஸ் போடலாம் என்ற அளவுக்கு ஒரு சட்டம் இருக்கிறது, அது மாற்றப்பட வேண்டும். சட்டம் எக்கேடும் கெட்டுப் போகட்டும், ஹுசேனை அடிப்போம், ஓவியங்களை கிழிப்போம் என்று கிளம்பி இருக்கும் கூட்டம் தண்டிக்கப்பட வேண்டியது.//
மத உணர்வுகளை கொச்சிப் படுத்தவோ, மதக் கலவரத்தை தூண்டவோ கூடாது என இந்தியாவில் சட்டம் இருக்கிறது. குண்டர் சட்டத்தை கூட உபயோகப் படுத்தலாம். ஒருவனின் அம்மாவை நிர்வாணமாக வரைந்து தெரூவில் வைத்தால் அவன் கோர்ட்டுக்கு போய்க் கொண்டு இருக்க மாட்டான்.
இசுலாமியர் உட்பட எல்லா மனிதருக்கும் முழுப் பாதுகாப்பு அவசியம். ஹுசென்னின் ஓவியங்களை கிழிப்பது சரி என்று நான் சொல்லவில்லை. ஹுசேனை தாக்கவும் கூடாது. ஆனால் ஹுசேனின் மத வெறி அம்பலப் படுத்தப் பட வேண்டும். அவருடைய மதக் காழ்ப்புணர்ச்சி எல்லோருக்கும் புரிய வைக்கப் பட வேண்டும். மத வெறி பிடித்து செயல் படுவது ஹுசேன் தான்.
ஏப்ரல் 14, 2010 at 11:32 பிப
(தெய்வத்தின் குரல் – இரண்டாம் பகுதி – தொகுப்பாசிரியர் ரா. கணபதி)
பரசுராமர், துரோணாச்சாரியார் இவர்கள் பிராம்மணராயினும் க்ஷத்ரிய குணத்தோடு இருந்தார்களே; தர்ம புத்ரர் க்ஷத்ரியராயினும் பிராம்மண குணத்தோடு இருந்தாரே; விஸ்வாமித்திரர் புஜ பல பராக்ரமத்தோடும் ராஜஸ குணத்தோடும் இருந்துவிட்டே அப்புறம் பிரம்மரிஷி ஆனாரே என்றால் — இதெல்லாம் கோடியில் ஒன்றாக இருந்த exception கள் (விதிவிலக்கு) தான். எந்த ரூலானாலும் ‘எக்ஸப்ஷன்’ உண்டோ இல்லியோ ? பொதுவாக வெளிப்பட வேறு குணம் தெரிந்தபோது கூட உள்ளுரப் பிறப்பாலான ஜாதித் தொழிலுக்கேற்ற குணந்தான் இருக்கும் என்ற அபிப்பிராயத்திலேயே பகவான் காரியம் பண்ணினதாகத் தெரிகிறது.
இந்த விஷயத்தை நான் சொல்வதைக் காட்டிலும் காந்தி சொன்னதை எடுத்துக் காட்டினால் சீர்திருத்தக்காரர்கள் ஒத்துக் கொள்வீர்கள். காந்தி இப்படிச் சொல்கிறார்:
“கீதையானது குணத்தையும் கர்மாவையும் பொறுத்தே ஒருத்தனின் வர்ணம் (ஜாதி) அமைகிறது என்றுதான் சொல்கிறது. (அதாவது பரம்பரையால், பிறப்பால் அமைகிறது என்று சொல்லவில்லை.) ஆனால் குணமும் கர்மாவும் பிறப்பின் மூலம் பாரம்பரியமாகப் பெறப்படுகிறவையே”
(“The Gita does talk of Varna being according to Guna and Karma, but Guna and Karma are inherited by birth” )
ஏப்ரல் 15, 2010 at 9:29 பிப
ஸ்ரீனிவாஸ், காஞ்சி சந்திரசேகரர் பிறப்பினால் ஜாதி என்பதில் நம்பிக்கை உடையவர் என்று நினைத்திருந்தேன். நீங்கள் கொடுத்திருக்கும் excerpt அதை உறுதிப்படுத்துகிறது.
ஏப்ரல் 16, 2010 at 5:29 பிப
ஸ்ரீனிவாஸ், யார் எதைச் சொன்னார்கள் என்று, எனக்கு குழப்பமாக இருக்கிறது. இந்த கட்டுரையை எழுதிய ரா.கணபதியா குணம் பிறப்பு சார்ந்த்து என்று கூறி காந்தியை சப்போர்ட்டுக்கு அழைப்பது?
>>>”ஆனால் குணமும் கர்மாவும் பிறப்பின் மூலம் பாரம்பரியமாகப் பெறப்படுகிறவையே”
காந்தி, எதை வைத்து இப்படி சொல்கிறார்?
இரண்டு குழந்தைகள் – (முதல் குழந்தை உதாரணத்திற்கு ஷத்ரியக் குழந்தையை எடுத்துக் கொள்வோம். ஷத்ரியக் குணமான வீரம், டிஸ்கஷனுக்கு உதவும் குழப்பமில்லாத குணம்; இரண்டாவது குழந்தைக்கு உதாரணமாக் வைசியக் குழந்தையை எடுத்துக் கொள்வோம்) இரண்டும் தவறுதலாக (மருத்துவமனை அஜாக்கிரதை போன்ற பிரச்சனையில் என்று வைத்துக் கொள்ளலாம்) முறையே வைசியக் குடுமபத்திலும், ஷத்திரியக் குடும்பத்திலும் எவரும் அறியாதவாறு சென்று அடைகிறது என்று வைத்துக் கொள்ளலாம். பிறப்பால் அந்த குணங்கள் இருந்தால் அவை வைசியவீட்டில் ஒரு வீரமான குழந்தையும், ஷத்ரிய குடும்பத்தில் ஒரு வீரமற்ற குழந்தையும் வளர்ந்து வரும் என்கிறாரா காந்தி? சாத்தியம் தான். ஒரு சோதனையாக, (காந்தி சோதனை செய்பவர் தானே 🙂 ) கற்பனையில் ஒரு நூறு குழந்தைகளை இப்படி ஆள் மாறாட்டம் செய்து பார்ப்போமே. பிராபபிலிட்டி என்ன? அனேக குழந்தைகள் சூழலின் படியே தங்கள் குணத்தை அடையும் என்று தான் தோன்றுகிறது. அதாவது நூற்றுக்கு தொண்ணூறு குழந்தைகள் வைசிய வீட்டில் வளர்ந்தால் வணிக குணங்களுடனே வளரும் என்றும் அரண்மனையில் வளர்ந்தால் வீரமாகவே வளரும் என்று தான் படுகிறது. இவ்வளவு ஏன்? இன்று நடை முறை வாழக்கையில் எத்தனை பேர் பிறப்பு அடிப்படையிலுள்ள குணங்களை வெளிப்படுத்துகிறார்கள்? இன்று எல்லோருக்கும் ஒரே குணம் – வைசிய குணம். இதற்கு சூழலும் அதனை சார்ந்து தான் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறையும் தான் காரணம். பிறப்பால் அல்ல என்பதைத் தான் என்னால் டெடுயூஸ் பண்ண முடிகிறது.
நான் சமுதாயத்தில் மேல் மட்டம் என்ற பிறப்பிலிருந்து வந்தவன். (கோட்டா சிஸ்டத்தில் எனக்கும் OC என்று சொல்லப்படும் அதே 32% தான்) ஆனால் என்னுடைய குணமெல்லாம் நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கையான “என் திறமையை எப்படி விற்பது, காசு சம்பாதிப்பது” என்ற ஒன்றை வைத்து தானே அமைகிறது. நானும் ஒரு வைசியன் தானே? என் பிறப்பு எதாக இருந்தால் என்ன? குணம் அதற்கு சம்பந்த பட்டதாக தெரியவில்லை. என் நண்பன் சமுதாயத்தால் கீழ் மட்டப் பிறப்பு என்ற சொல்லக்கூடிய இடத்திலிருந்து வந்தவன். அவனும் என்னைப் போலவே வாழ்க்கையை நடத்துகிறான். எங்கள் இருவர் குணங்களிலும் பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியவில்லை. பின் எப்படி குணம் பிறப்பு சார்ந்தது?
ஏப்ரல் 16, 2010 at 5:54 பிப
டியர் பக்ஸ்,
குழப்பத்திற்கு மன்னிக்கவும்.
இங்கு உள்ளது மஹா பெரியவரின் கருத்து. (ரா. கணபதி வெறும் தொகுப்பாசிரியர் தான்)
மஹா பெரியவர் காந்தியை உதாரணம் காட்டுகிறார்.
காந்தியோ கீதையை சப்போர்ட்டுக்கு அழைக்கிறார்.
என்னுடைய தனிப்பட்ட கருத்து: எனக்கு இதில் உடன்பாடில்லை — கீதையில் கீழ்கண்டவாறு சொல்லியிருந்தாலும்….
>>>”ஆனால் குணமும் கர்மாவும் பிறப்பின் மூலம் பாரம்பரியமாகப் பெறப்படுகிறவையே”
ஏப்ரல் 16, 2010 at 6:42 பிப
எந்த குலத்தில் பிறந்து இருந்தாலும் ஒருவருக்கு எல்லா குணங்களும் இருக்கும். எது அதிகமாக இருக்கிறது என்பதே அவரது குணத்தை வெளிப்படையாக காட்டுகிறது.
கர்ணனை உதாரணமாக எடுத்தால் அவர் தேரோட்டியின் மகனாக வளர்ந்தாலும் போய் சேருவது தனது பிறப்பு சார்ந்த அரச குலத்துக்கே.
sceintific reasons கொடுத்து heriditary என்று சொல்லும் போது ஏற்று கொள்ளும்
மனது ஆன்மிகம் என்று வரும் போது கொஞ்சம் யோசிக்கிறது.
பரம்பரை நோய் என்பது உடல் சார்ந்த நோய்க்கு மட்டும் தானா? சூழல் மாற்றி விட்டால் ஒருவரை அந்த பரம்பரை நோய் தாக்காது என்று சொல்லி விட முடியுமா?
வளரும் சூழல் நமக்கு தாக்கத்தை ஏற்படுத்தினாலும் பாரம்பரியம் தேவைப் படும் போது தலை காட்டும்.
இந்த விஷயத்த நாம ஒத்துக்கலைனாலும் பகுத்தறிவாதிகள் பார்ப்பனியத்துக்கு மட்டும் ஒத்துக் கொள்வார்கள்.
ஏப்ரல் 16, 2010 at 9:57 பிப
விருட்சம், hereditary என்பது ஜீன்கள், குரோமோசோம்கள் வழியாக பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வருவது. அது உடல் கூறுகள், சில நோய்கள் ஆகியவற்றுக்கு பொருந்துகிறது. பிராமண/க்ஷத்ரிய/வைசிய/சூத்திர/பஞ்சம குணங்கள், கருத்துகள், படிப்பு/விளையாட்டு/தொழில் திறமை போன்றவை ஜீன்கள் மூலம் வருவதில்லை – அட் லீஸ்ட், இன்றைய விஞ்ஞானம் அப்படி கருதவில்லை.
ஏப்ரல் 17, 2010 at 9:02 முப
உடற்கூறுகள் மட்டுமே விஞ்ஞானத்தால் நிருபிக்கப் பட்டு இருக்கிறது அல்லது சான்றுகள் தருகிறது என்று சொல்லுகிறீர்களா?
chromosome study இன்னும் முழுமை பெறவில்லை.
இன்றைய சாதி அடிப்படையிலான அரசியல் சட்டம் இந்த பாரம்பரிய குணம் பற்றிய கருத்தை
மறைமுகமாக அல்லது வெளிப்படையாகவே கூட ஏற்றுக் கொண்டு இருக்கிறது. இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப் படும் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று இது. இன்றும்creamy layer ஏற்றக் கொள்ளாமல் இருக்க முன் வைக்கப் படும் கருத்தில் இதுவும் அடக்கம்.
மூதாதையர் படித்தவர்களாக இருந்தால் பிள்ளைகளுக்கு இயல்பாக படிப்பு வந்து விடும் அதனால் high cutoff.
முந்தைய பரம்பரைக்கு படிப்பறிவு இல்லையென்றால் பிள்ளைகளுக்கு ஆர்வம் ஊட்டுதல், அறிவு ஊட்டுதலில் உள்ள நடைமுறை சிக்கல் என்பதில் இந்த பாரம்பரிய கருத்தும் அடக்கம். பொருளாதார அடிப்படையில் இதை கொண்டு செல்ல முயற்சி எடுக்காமல் இருப்பதற்கு வெளிப்படையாக சொல்லப் படும் காரணங்களில் இதுவும் ஒன்று( மறைமுக காரணங்கள் பல இருப்பினும் )
ஏப்ரல் 18, 2010 at 1:00 முப
விருட்சம், அறிவியல் இன்னும் முடிந்துவிடவில்லை, பல புதிய கண்டுபிடிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன என்பது உண்மைதான். அதனால் தொழில் திறமை, கருத்துகள், படிப்புத் திறமை போன்றவை நம் “ரத்தத்தில் ஊறி இருக்கின்றன” என்பது ஏற்றுக் கொள்ள முடியாத கருத்து. அண்மையில் கூட Outliers புத்தகத்தில் படித்த ஒன்று – The 10000 hour rule – ஒரு துறையில் நிபுணத்துவம் அடைய நீங்கள் பத்தாயிரம் மணி நேரமாவது பயிற்சி எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்!
ஏப்ரல் 17, 2010 at 9:22 முப
பதிவு கொஞ்சம் திசை மாறுவதால்,
துரோணர் வெறும் கீதை சொல்லும் அந்தணராக மட்டும் இருந்திருந்தால் அவரை பீஷ்மர் தன் வம்ச வாரிசுகளுக்கு வித்தை கற்றுக் கொடுக்க அழைத்தே இருக்க மாட்டார். இது பரசுராமருக்கும் பொருந்தும். பீஷ்மரோ கர்ணனோ இவரிடம் கற்று கொள்ள சென்று இருக்க மாட்டார்கள்.
வியாசரின் பிள்ளைகள் ஆனாலும் , அம்மா அரச குல பெண் என்றாலும் அரசகுல வாரிசுகளாக வளர்ந்த த்ரிதரார்ஷ்டனும், பாண்டுவும் வளர்ந்த சூழலுக்கு எந்த அளவு பொருந்தினார்கள்? விதுரர் வியாசரின் மகன் தானே. பணி பெண்ணின் மகனும் தான். இவர் வளர்ந்த சூழல் அரச சூழல் தானே. இவர் போர் புரிய மறுத்து தன் பதவியை துறந்ததாக படித்திருக்கிறேன். நல்ல அமைச்சராக, ஆலோசகராக, பாண்டுவின் புதல்வர்களை குறிப்பறிந்து காத்தவராக தான் இவர் இருந்து இருக்கிறார்.
கீதை சொல்லும் அந்தணன் ( அரசன், ஆண்டி, நாய், நாயை தின்பவன் என்று எல்லோரையும் சமமாக பாவிப்பவன் உண்மையான அந்தணன் ). இந்த வட்டத்தில் வியாசரின் மகன் சுகர் மட்டுமே எனக்கு தெரிந்து வருவார். இவர் தான் தானும் பிரம்மமாக இருந்து இவரை பார்க்கும் மற்றவரையும் இவரை பிரம்மமாகவே பார்க்கவைத்ததன் மூலம் மற்றவரின் அணுகுமுறையையும் மேம்படுத்தினார்.
ஏனைய ஆச்சார்யர்கள், முனிகள் எந்த குணத்தை அதிகம் கொண்டிருந்தார்கள் என்று தான் பார்க்க முடியுமே அன்றி அதன் மொத்த உருவமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றே தோன்றுகிறது
ஏப்ரல் 18, 2010 at 2:45 பிப
நான் மகாபாரதத்திலேயே சில உதாரணங்கள் கூறினேன். நீங்கள் அது பற்றி கருத்து சொல்லவில்லை. அரசியல் சமூக காரணங்கள் கூறினேன். நீங்கள் அது பற்றி கருத்து சொல்லவில்லை.
நான் நிபுணத்துவம் பற்றி எதுவும் சொல்லவில்லை. அந்த பாரம்பரிய வாசனை பற்றி மட்டுமே கூறினேன்.
நாம் இக்காலக் கட்டத்தில் பாரம்பரியத் தொழிலை விட வாய்ப்பு கிடைக்கும், லாபம் தரும் விஷயங்களிலேயே ஈடுபடுகிறோம். அப்படிப் பார்த்தால் உலகமே வைசியர்களால் நிறைந்து இருக்கிறது. யார் வெற்றி பெறுகிறார்கள், நீடித்து இருக்கிறார்கள் என்பதில் அவரது பாரம்பரிய வாசனை கொஞ்சம் பங்கு வகிக்கும் என்பதை மறுக்க முடியாது என்பது என்கணிப்பு
உங்களது பதிவு துரோணர் பிராமணரா என்றில்லாமல் அவர் மகன் அசுவத்தாமன் பிராமணரா என்று இருந்திருந்தால் பொருத்தமாக இருந்து இருக்கும் என்று தோன்றுகிறது. அவன் சரியாக அவன் பழக்க சூழலை உள்வாங்கிஇருந்தான்.
ஏப்ரல் 19, 2010 at 4:42 பிப
விருட்சம், சோம்பேறித்தனம்தான். 🙂 கூடிய விரைவில் பதிவாகவே எழுதுகிறேன்.
ஜூலை 19, 2010 at 3:32 பிப
சில நாட்கள் முன் பாலகுமாரனின் என் அன்பு மந்திரம் என்ற நாவல் படிக்கக் கிடைத்தது. படிக்க ஆரம்பித்தால் பாஞ்சாலங்குரிச்சி, , துரோணர், துருபதன் என்று கதை துவங்கியதும் ஆர்வமானேன். உடனே உங்கள்
தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை ஞாபகம் வந்தது.
அது குறித்த என் பதிவு இதோ,
http://www.virutcham.com/?p=2892
ஜூலை 21, 2010 at 11:56 பிப
இரண்டாவது பகுதியையும் சீக்கிரம் வெளியிடுங்கள், விருட்சம்!
ஜூலை 20, 2010 at 2:56 பிப
விடுங்கப்பா !!!. எந்தனை நாள் துரோணாச்சாரியார் பிராமணரா? சங்கராச்சாரியர் ஐயரா? சந்திரபாபு நாயுடு நாயுடுவா? என்று ஜல்லியடிப்பீர்கள்?.
கூலிக்கு மாரடிக்கும் அனைவரும் நாலாவது வர்ணம்தான் .
ஜூலை 21, 2010 at 11:57 பிப
டக்ஸ், நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஆனாலும் வெட்டி அரட்டைக்கு ஏதாவது டாபிக் வேண்டுமே!
ஜூலை 22, 2010 at 5:51 முப
ஓகே. நம் மத மற்றும் ஜாதி சார்பற்ற தன்மையை நிரூபிக்க following அரட்டைகளை சிபாரிசு செய்கிறேன்.
1 வ.ஒ.சி பிள்ளையா?
2 கட்டபொம்மன் தமிழனா?
3 சோனியா கிறிஸ்டியனா ?
4 ஒசாமா முஸ்லிமா?
5 மன்மோகன் சர்தார்ஜியா?
ஜூலை 22, 2010 at 6:18 முப
@Ducks
இந்த விளையாட்டுக்கு நான் இல்லப்பா
நான் இங்கே சொல்ல்வது மகாபாரதம் மட்டுமே.
ஜூலை 23, 2010 at 5:43 பிப
RV
இரெண்டாம் பகுதி ready
ஜூலை 25, 2010 at 2:36 பிப
என் கருத்துக்களை ஒரு வழியா ஒரு மாதிரி எழுதிட்டேன்.
http://www.virutcham.com/?p=2987
ஜூலை 26, 2010 at 7:55 பிப
சமீபத்தில் படித்தது…..
நான்கு வகை ஜாதி – உங்கள் சிந்தனைக்கு
=============================================
சமீபத்தில் ஒரு பெரியவருடன் பேசி கொண்டிருந்தேன். அவர் சொன்னார்:
” அலுவலகம், சமூகம் இப்படி எல்லாத்திலும் நான்கு வகை மனிதர்கள் இருக்கு தெரியுமா?”
நான் பேசாதிருக்க, என் பதிலை அவர் மீண்டும் கேட்டார். ” பிராமின், நான் பிராமின் …” என நான் இழுக்க,
” இல்லை. ஒரு அலுவலகத்தை எடுத்துக்குங்க. பியூன், செக்கியூரிட்டி போன்றவர்கள் இருப்பார்கள். இவர்களை அரசு அலுவலகத்தில் கிளாஸ் ஃபோர் ( Class IV ) என்பார்கள். இதே போல் கிளார்க் போன்றவர்கள் கிளாஸ் த்ரீ (Class III ) என்பார்கள். இந்த கிளார்க்குகளின் மேனஜரை கிளாஸ் டூ ( Class II) என்றும், அலுவலக தலைமை அதிகாரியை கிளாஸ் ஒன் என்றும் சொல்வார்கள்.
இப்படி மக்களை நான்காக பிரிக்காமல் வேலை செய்ய முடியுமா? எல்லோரும் ஒரே கிளாசில் இருக்க முடியுமா? நான் ஜாதி பத்தி பேசலை. ஒரு பிராமணன் பியூன் வேலை கூட செய்யலாம். நான் அங்கே போகலை. அலுவலகமும் சமூகமும் இப்படி நான்காக பிரிஞ்சு இருக்குன்னு மட்டும் தான் சொல்றேன்”
ஜூலை 27, 2010 at 7:17 பிப
ஸ்ரீனிவாஸ்,
ஏன் நாலோடு நிறுத்திவிட்டார்? அப்பர் டிவிஷன் கிளார்க், லோயர் டிவிஷன் கிளார்க் என்று ஆரம்பித்தால் நாற்பது வரைக்கும் போகலாமே? 🙂
ஜாதியின் பிரச்சினை மனிதர்கள் எல்லாரும் சமமான திறமை படைத்தவர்களா என்பது பற்றி இல்லை. அவர்களுக்கு இருக்கும் திறமை அவர்கள் பிறப்பினால் தீர்மானிக்கப்படுகிறது என்ற கருத்துதான்.
பிப்ரவரி 12, 2021 at 11:18 பிப
துரோணாச்சாரியார் ஸ்மர்த பிரமணன் கிடையாது தரோணச்சாரியார் தமிழ் விஸ்வபிரமணன் திருவிளையாடலஂ வரும் நக்கிரர் தமிழ் விஸ்வபிரம்ணர்
தருவி ஸ்மர்தபிரம்ணன் ஸ்மர்தர் இரு பிரப்பாளன் துரோணர் வில் செய்கின்ற வில் கொல்லர்
பரசுராமர் கேரளா சார்ந்தவர் அத்திரி மகரிசி
குமரி மாவட்டத்தை சார்ந்தவர்
பரசுராமர் அந்தணனுக்கு மட்டும் வில்வித்தை கற்று கெடுப்பவர்
துரோணாச்சாரியார் சத்திரியர்களுக்கு மட்டுமே கற்று கொடுத்து தன் இளமை கல நன்பன் செயஂத துரேகம்அவனை பழி வாங்க அர்சுனனை வில் செய்து வில் வித்தை கற்று கொடுத்தவர்
பரசுராமர் தாயின் தலை வெட்டியவர் வில் இன்றி அம்பு எய்யும் ஆற்றலைஅர்சுனன் தவிர மற்றவர்களுக்கு கறறு தருவதில்லை என்றுஉருதி கொடுத்தவர் மஹாபரத்தில்வரும் எந்த கதா பாத்திரமும் ஆரிய பிரமணண் கிடையாது இந்து மதத்திறகும்ஆரிய பிரமணனுக்கும் சம்பந்தம் கிடையாது
வால்மிகி மீணவர் வேதம் எழுதிய
வியசர் வேடர் அர்தசாஸ்திரம் எழு தியவர் காளிதசர் தச்சர்ஆசாரி அரிசந்திரன் ரமர் சூரிய வம்சம்
பீஸ்மர் வேளளர் பூணுல் கயத்ரி மந்திரம் சொன்னவர்
விஸ்வமித்ரன் கௌடில்யதோசத்தின் மன்னன் கௌடில்யன் விஸ்வாமித்ரன் கௌண்ட ர்