பிரபாகரனின் குறைகள் என்னவென்றுதான் பல நாளாக கத்திக் கொண்டிருக்கிறேன். அதற்காக அவர் நிறைகளே இல்லாத மனிதர் இல்லை. புலிகளின் நோக்கங்களும் தவறானவை இல்லை.
எண்பதுகளில் பிரபாகரன் இந்தியாவுக்கு வந்தபோது அவருக்கு சில ஆயிரம் பேர் கொண்ட படை இருந்திருக்குமா என்பதே சந்தேகம்தான். லாஜிஸ்டிக்சுக்கு தமிழக ஆதரவு இன்றியமையாததாக இருந்தது. எம்ஜிஆரும், கலைஞரும், ராவும், இந்திராவும் ராஜீவும் அவர்கள் பின்னால் நின்றிராவிட்டால் கஷ்டம்தான்.
ஒரு பக்கம் பலம் வாய்ந்த ஒரு எதிரி; இன்னொரு பக்கம் தான் சொன்னபடி நடக்க வேண்டும் என்று மிரட்டும் அதிக பலம் வாய்ந்த “நண்பன்”. நண்பனின் ஆதரவுக்காக தன்னை போன்ற பலரிடம் பலத்த போட்டி. சுய பலம் கம்மி. பலம் என்று ஒன்றுதான் இருந்தது – தன் குறிக்கோளை எந்த சூழ்நிலையிலும் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளாத தன்மை. ஒரு நல்ல தலைவனுக்கு அது அவசியம்.
அந்த கனவுக்கு பின்னால் பல இலங்கை தமிழர்கள் வந்தார்கள். அவரை தலைவனாக ஏற்றுக் கொண்டார்கள். தான் பட்ட காயங்களுக்கு அவர் மட்டுமே பழி வாங்க முடியும் என்று நினைத்தார்கள். அவர் சொன்னால் உயிரையும் கொடுக்க சித்தமாக இருந்தார்கள் – கொடுத்தார்கள்.
இலங்கை தமிழர்கள் மட்டும் இல்லை, இந்தியத் தமிழர்களுக்கும் அவர் ஹீரோவாகத்தான் இருந்தார். ராஜீவ் கொலை வரைக்கும அவரை எதிர்த்து கருத்து சொல்லும் தமிழர்கள் மிக குறைவு. எனக்கு தெரிந்து சோ ராமசாமி ஒருவர்தான் அவரை எதிர்த்து கூப்பாடு போட்டார். சோவை சீரியஸாக எடுத்துக் கொள்பவர்கள் மிக குறைவு. யாரும் இதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. எம்ஜிஆரின் ஆதரவு அவருக்கு இருந்துகொண்டேதான் இருந்தது. கலைஞருக்கு நிச்சயமாக எம்ஜிஆர் ஆதரிக்கும் மனிதர் என்பது மனக்குறையாக இருந்திருக்கும் – ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ள முடியாத நிலை. அவரது வழக்கமான வாய்ச்சொல் வீரம் புலிகளுக்கு ஆதரவாக வெளிப்பட்டது. IPKF-ஐ எதிர்த்து ஸ்டேட்மென்ட் எல்லாம் விட்டார். பாண்டி பஜாரில் துப்பாக்கியால் சுட்டால் என்ன, பத்மநாபா செத்தால் என்ன, பிரபாகரனின் செல்வாக்கு தமிழ்நாட்டில் வளர்ந்துகொண்டேதான் போனது. (பகத் சிங் அபுல் கலாம் ஆசாத்தை கொன்றால் அவரை கொண்டாடுவோமா என்ன?) அவரை விட்டால் ஈழத் தமிழர்களுக்கு வேறு கதி இல்லை என்ற இமேஜ் வளர்ந்துகொண்டே போனது. அதில் உண்மை இல்லாமல் இல்லை.
அவருக்கு இந்தியாவிலிருந்து ஏற்பட்ட முதல் பின்னடைவு ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தம். அது நல்ல விஷயம் என்பது என் உறுதியான கருத்து. அந்த ஒப்பந்தம் உண்மையிலேயே நிறைவேறி இருந்தால் இன்றைக்கு அளவுக்கு விஷயம் மோசமாக போயிருக்காது. ஆனால் இலங்கை தமிழர்களும் புலிகளும் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்று காரண்டி கொடுக்க ராஜீவ் யார்? இந்தியா யார்? ராஜீவுக்கு நோபல் பரிசு கனவு இருந்திருக்க வேண்டும், ஜெயவர்த்தனாவுக்கு குஷியாக இருந்திருக்கும். அனுபவம் இல்லாத ராஜீவை ஜெயவர்த்தன மாட்டிவிட்டுவிட்டார்.
கொஞ்சம் விட்டுக்கொடுத்திருந்தால், தன் ஈகோவை மறந்து செயல்பட்டிருந்தால், பிரபாகரன்தான் இலங்கைக்கு உட்பட்ட ஈழத்தின் பெரும் தலைவரகா வந்திருப்பார். ஆனால் அப்போதே பிரபாகரனுக்கு தனி ஈழம்தான் ஒரே தீர்வு, இதெல்லாம் நடக்காத விஷயம் என்று உறுதியாக தோன்றி இருக்க வேண்டும். அவரது சிந்தனை தவறு என்று சொல்வதற்கில்லை, மிக ஆழமான காயங்களை சுமந்தவர் அவர். ஒப்பந்தம் நடக்க ஒரு சான்ஸ் கொடுத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று இப்போது நான் பெருமூச்சு விடலாம், ஆனால் காயங்களை நான் சுமக்கவில்லை. நெருப்பு எப்படி சுடும் என்று தீக்குளித்தவனுக்குத்தான் தெரியும். சிங்களர்களை நம்ப முடியாது என்று பிரபாகரன் நினைத்திருந்தால் அது ஆச்சரியம் இல்லை. ஒப்பந்தத்தால் இந்தியா பட்ட நஷ்டங்களுக்கு நான் ராஜீவைதான் பொறுப்பாக்குவேன், பிரபாகரனை அல்ல.
சக போராளிகளை கொல்வது பாட்டுக்கு நடந்துகொண்டேதான் இருந்தது. சிரிசபாரத்னம், பத்மநாபா, அமிர்தலிங்கம் என்று ஒரு பெரிய லிஸ்ட். அதை பற்றி எதிர்கருத்து தெரிவித்தவர்கள் மிக கம்மி. அந்த தைரியத்தில்தானோ என்னவோ, ராஜீவை கொல்ல ஆள் அனுப்பினார். அது பெரிய முட்டாள்தனம். கொஞ்சம் கூட அறிவில்லாத செயல். இந்திய தமிழர்களின் ஆதரவு ஒரே நாளில் முக்கால்வாசி கரைந்துவிட்டது. ஒரு தாக்குதலால் தன் இயக்கத்துக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கத் தெரிய வேண்டும். அது தெரியாத பிடிவாதக்காரரால் இயக்கத்தை காப்பாற்றுவது கஷ்டம்தான்.
ஆனால் காப்பாற்றினார். பெரும் அளவுக்கு இந்திய ஆதரவு கரைந்துபோனாலும், தாக்கு பிடித்தார். இலங்கை அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்தார். தனி ஈழம் என்று ஒரு நாடு உருவாகவில்லையே தவிர significant நிலப் பரப்பை தன் கண்ட்ரோலில் வைத்திருந்தார். ஆனால் சர்வ தேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டார். புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆதரவில், பணத்தில், இன்னும் தமிழ் நாட்டில் எஞ்சி இருந்த ஆதரவில் சமாளித்தார்.
அவர் மீது எனக்கு பலமான எதிர்ப்பு கருத்துகள் இருக்கின்றன. ஆனால் அவர் மறைவு ஈழத்தமிழர்களுக்கு நஷ்டம் என்றே கருதுகிறேன். அவர் உயிரோடு இருக்க மாட்டாரா என்ற நப்பாசை எனக்கு கொஞ்சம் இருந்தது, ஆனால் இப்போது புலிகளே சொல்லிவிட்டார்கள்.
பெரும் லட்சிய வேகம் உள்ளவர், வீரர், கொண்ட கொள்கையை எந்த சூழ்நிலையிலும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாதவர். ஆனால் எதிர்ப்பு காட்டும் ஒவ்வொருவரையும் வஞ்சம் வைத்து அழிக்கும் தன்மையும், சக போராளிகளை, சொந்த சகோதரர்களை அதிகாரத்துக்காக கொல்லும் கயமையும், எங்கேயோ இருக்க வேண்டிய ஒரு தலைவனை வீழ்த்திவிட்டன. அவர் சைமன் பொலிவர் போன்று, கரிபால்டி போன்று சரித்திரத்தில் இடம் பெற வேண்டியவர். இப்படி முடிந்தது பெரிய துரதிருஷ்டம். ஆனால் எத்தனையோ தவறுகள் செய்திருந்தாலும், பல ஈழத் தமிழர்களுக்கு இழப்பு ஏற்படுத்தி இருந்தாலும், அவர் ஈழத் தமிழர்களுக்கு ஹீரோதான். ஈழத் தமிழர்களுக்காக உண்மையிலேயே கடைசி வரை போராடியவர் என்பதை என்னை போன்ற எதிர்ப்பாளர்களும் மறுக்க முடியாது.
தொடர்புடைய மற்ற பதிவுகள்
ஈழ தமிழர்கள், புலிகள் பற்றிய பதிவுகளின் தொகுப்பு
ஜூன் 23, 2009 at 9:00 முப
//எனக்கு தெரிந்து சோ ராமசாமி ஒருவர்தான் அவரை எதிர்த்து கூப்பாடு போட்டார். சோவை சீரியஸாக எடுத்துக் கொள்பவர்கள் மிக குறைவு. யாரும் இதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.//
கடைசியில் சோ அவர்கள் சொன்னதுதான் நடந்தது. இம்மாதிரி பல நிகழ்வுகளில் நடந்துள்ளது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஜூன் 23, 2009 at 9:03 முப
பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்!
More Info: http://tamilspy.com/?p=521
ஜூன் 23, 2009 at 9:53 முப
intha katturail nan ninaithen, enakku enna thondrukirathu endrellam varukirathu. neenkal yaar?
ஜூன் 23, 2009 at 10:46 முப
At last I found a review on Prabhakaran which is honest and straightforward. I am 100% agreeing with this post. Keep it up.
ஜூன் 23, 2009 at 12:59 பிப
Well-balanced appraisal.
ஜூன் 23, 2009 at 1:05 பிப
இதுல, ஐரனி, என்னான்ன, புலிகள் வீரமரணம், தற்கொலை குண்டுவெடிப்பை ஒரு cult ஆன ஆக்கி வைத்திருந்தார்கள். தற்கொலை குண்டு வெடிப்பு முன்னாள், அவன்/அவள் கூட பிரபாகரன் சாப்புடிவாராம். மாவீரர் நாள் நவம்பர் 21. வீரர்கள் “தூங்குமிடம்” என நினைவு இடங்கள். 1000க் கணக்கான புலிகள் ஆண்களும், பெண்கலும் சயனைட் குடிச்சு செத்துள்ளார்கள், தற்கொலை குண்டாளிகளா இருந்துள்ளர்கள்.
ஆனால் பிரபாகரன், மே 18 தேதிக்கு இறந்த பிறகு, அதை நிரைய தமிழர்கள் ஒத்துக் கொள்ளவில்ல. அதனால் பிரபாகரன் நினைவாக ஒரு கூட்டம் கூட போட வில்லை.
புலிகள் புலி எதிரி தமிழர்களை கொலை செய்தது மட்டுமில்லாது, அவர்களின் நினைவு அஞ்சலி கூட்டங்களையும் மிரட்டி, வன்முறையால் ஆகாதபடி செய்து விட்டார்கள். இப்போது பிரபாகரனுக்கே நினவு அஞ்சலி ஒன்றுமில்லை.
இப்போ, புலிகள் பணம் வசூல் செய்யும் ஆர்கனைசேஷன் அவர்களோட vested interest வேற. பணம் வசூலிக்க பிரபாகரன் சாகக் கூடாது. புலம் பெயர்ந்த புலிகள் ஆதரவாளர்கள், தலைவர்கள் நடுவில் இப்பொ பெரிய சச்சரவு. சர்வதேச புலிகள் அமைப்புல ஒரு பக்கம், கேபி, இன்னொரு பக்கம் பொட்டு அம்மன் குழு, இன்னொரு பக்கம் கேஸ்ட்ரோ குழு. கேபி (கே.பத்மநாதன்) தான் இது வரை பிரபாகரன் மரணம் ஆகிவிட்டார், ஒரு மாதம் அஞ்சலி அணுஷ்டிக்க கோரினார். இது மத்தவங்களுக்கு பிடிக்கலை.
கடைசில “மா மா மா மா…மாவீர”ருக்கே இப்போ யாரும் அஞ்சலி செலுத்தவில்லை.
ஜூன் 23, 2009 at 2:53 பிப
//இப்போ, புலிகள் பணம் வசூல் செய்யும் ஆர்கனைசேஷன் அவர்களோட vested interest வேற. பணம் வசூலிக்க பிரபாகரன் சாகக் கூடாது. புலம் பெயர்ந்த புலிகள் ஆதரவாளர்கள், தலைவர்கள் நடுவில் இப்பொ பெரிய சச்சரவு. //
”பெரிய சச்சரவு” இதெல்லாம் உங்களைப்போன்றவர்கள் கிளப்பிவிடும் புரளி. ஈழத்தில் நாங்கள் இழந்ததை விடவும் இது ஒன்றும் பெரிசில்லை. ஈழத்தமிழனின் பிரச்சனை வேறாக இருக்க சில விஷமிகளின் பிரச்சனை இப்படி பணம் சம்பந்தப்பட்டதாகவே இருக்கு. பணத்தை விடவும் உயிர், மானம், விடுதலை தான் எங்களுக்கு பெரியது.
ஜூன் 23, 2009 at 4:01 பிப
>ஈழத்தமிழனின் பிரச்சனை வேறாக இருக்க சில விஷமிகளின் பிரச்சனை இப்படி பணம் சம்பந்தப்பட்டதாகவே இருக்கு
அது கரெக்ட்.
கேபி திரு.பி’யின் மரண அறிவிக்கை தந்ததால், அவரை துரோகி என சிலர் அழைத்தனர். அது சச்சரவு இல்லையா? புடை இருந்தால் நெருப்பு இருக்காதா. எங்கு பெரிய பண விஷயங்கள் இருக்கோ, அங்கு சச்சரவு இருக்காதா?
ஜூன் 24, 2009 at 4:13 முப
நான் தான் “ஈழத்தமிழன்” என்று தெளிவாக குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறேனே. நீங்கள் ஈழத்தமிழரா? அப்படியானால் விஷமிகள் என்று நான் யாரை குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்கு புரியவில்லயா?
//எங்கு பெரிய பண விஷயங்கள் இருக்கோ, அங்கு சச்சரவு இருக்காதா?//
இது நான் ஏற்கனவே எழுதிய பதில். “பணத்தை விடவும் உயிர், மானம், விடுதலை தான் எங்களுக்கு பெரியது.” பணப்பிரச்சனை உங்களுக்கு ஒரு பெரிய விடயம் என்றால் நீங்கள் தலையிட்டு அதை தீர்த்து வைக்கப்போகிறீர்களா?
சர்வதேச புலிகள் அமைப்புல ஒரு பக்கம், கேபி, இன்னொரு பக்கம் பொட்டு அம்மன் குழு, இன்னொரு பக்கம் கேஸ்ட்ரோ குழு//
ஈழத்தமிழர்கள் எங்களுக்கு தெரியாத “குழு” பற்றியெல்லாம் நீங்கள் தெரிந்து வைத்திருக்கிறீரகள். எங்களுக்குள் குழு பிரித்து பிறகு எங்களைப் பிரிக்கும் உங்களைப் போன்றவர்களின் முயற்சிக்கு என் வாழத்துகள். ஆனால், இந்த முயற்சியில் நீஙகள் தோற்று விடுவீர்கள். இப்பொழுது, நாங்கள் குழு பிரித்து சண்டையிட்டுகொண்டிருக்க நேரமில்லை. ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் அவர் செய்யவேண்டிய கடமைகள் நிறையவே இருக்கின்றன.
எங்களுக்கு உதவ முடியாவிட்டாலும் பரவாயில்லை. இந்த குழு பிரிப்பது, பணச்சச்சரவு இப்படியெல்லாம் வீண்புரளி கிளப்பி விடாதீர்கள்.
ஜூன் 23, 2009 at 1:41 பிப
ஆர்வி, ஒரு தலைவனை எப்படி எடை போட வேண்டும் என்றால், அவன் செத்தவுடன் மக்களோட நிலைமை அவர் போராட்டம் ஆரம்பத்திலேயிந்து சில படிகள் மேலே போயிருக்கா என்பது.
அப்படிப் பார்த்தால் பிரபாகரன் ஒரு மோசமான தலைவர். 1985 ஐயும் 2009 ஐயும் ஒப்பிட்டு பார்த்தால், ஈழத் தமிழர்கள் நிலை பல படி கீழே போயிருக்கு.
ஜூன் 23, 2009 at 2:26 பிப
RV,
இப்போதெல்லாம் யாரும் அண்ணையைப் பற்றி பேசினாலோ அல்லது எழுதினாலோ என்னிடமிருந்து வரும் முதல் பதில் கண்ணீர். அதையும் தாண்டி இதை எழுதுகிறேன்.
இந்த நாட்களில் பிரபாகரனை விமர்சிக்கிறோம் பேர்வழிகள் என்று சில இழிபிறப்புகள் அவர் மறைவிலும் சந்தோசம் அடையுதுகள்.
உங்களுக்கு பிரபாகரன் என்ற தனிமனிதரிடம் எவ்வளவு கருத்து வேறுபாடுகள், கோபங்கள் இருந்தாலும் இனமானமுள்ள ஈழத்தமிழர்களின் விடுதலைக்கு அவர்தான் உயிர்நாடி என்ற மிக சாதாரண உண்மையை உங்கள் வரிகளில் மிக தெளிவாக சொல்லியிருக்கிருக்கிறீர்கள். இந்த எளிய உண்மை கூட சில அறிவு ஜீவிகளுக்கு புரிவதில்லை.
தோற்றது பிரபாகரன் அல்ல, ஈழத்தமிழினம். வீழந்தது புலிகள் அல்ல, தமிழ் தேசியம். பின்னடைவு புலிகள் இயக்கத்திற்கல்ல. எங்கள் விடுதலை இன்னும் ஐம்பது வருடங்கள் பின்னோக்கிப் போய்விட்டது. புலிகள் தோற்றால் என்ன, ஈழத்தமிழன் வவுனியா வதைமுகாம்களில் உயிரையும் வாழ்வையும் இழந்தால் என்ன ராஜபக்க்ஷேக்களின் வெற்றியில் சந்தோசப்படும் ஈழத்தமிழர்கள் சிலபேர் கூட இருக்கிறார்கள்.
எங்கள் விடுதலைக்காக தலைவரும் அவரின் வழிகாட்டலில் புலிகளும் போராடினார்கள். இனிமேல், அவர்களின் கனவு நனவாகும் வரை ஒவ்வொரு இனமானமுள்ள ஈழத்தமிழனும் போராடுவான். புலிகளின் விடுதலைப்போராட்டத்தை இன்று மக்கள் போராட்டம் என்ற அடுத்த படிநிலைக்கு கொண்டு சென்ற பெருமை எங்கள் தேசியத்தலைவரையும் புலிகளையும் தான் சாரும்.உங்களைப்போன்றவர்களின் பகுத்தறிவுள்ள விமர்சனங்கள் எங்களின் வெற்றி தோல்விகளை பரிசீலிக்க மிகவும் அவசியம். தொடர்ந்து எழுதுங்கள். உங்களால் முடிந்தவரை எங்களுக்கு தோள்கொடுங்கள்.
நன்றிகள் பலவற்றுடன்,
ரதி.
ஜூன் 23, 2009 at 4:31 பிப
83-ல் இலங்கையில் இனப்பிரச்சனை வெடித்து தமிழர்கள் துயருக்கும், இன்னலுக்கும் ஆளாக்கப் பட்ட போது தமிழகம் கொந்தளித்தது. அதன் பிறகு விடுதலைப் புலிகள் மற்ற தமிழ் தலைவர்களைக் கொன்று குவித்த போது விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் மக்கள் ஆதரவு கொஞ்சம் மங்கினாலும், பெரிதாக பாதிப்பு இல்லை. ஆனால் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் படுகொலை செய்தவுடன், அவர்கள் தமிழகமக்களின் ஆதரவை சுத்தமாக இழந்ததுடன், தமிழக மக்களின் கடுமையான வெறுப்பிற்கும் ஆளானார்கள். அதன் பிறகு தமிழக அரசியல்வாதிகள் சிலர் மட்டுமே இலங்கைப் பிரச்சனை குறித்து பேசினார்களே தவிர தமிழக மக்கள் இலங்கைப் பிரச்சனையைப் பற்றி அலட்டிக் கொள்வதே இல்லை என்பதுதான் நிஜம். இப்படி இலங்கை மக்கள் தாய் தமிழக மக்களின் ஆதரவை இழந்ததற்கு முழு முதற்காரணமே விடுதலைப் புலிகள் தாம். பிரபாகரன் மறைந்த இந்தச் சூழ்நிலையிலாவது, இந்திய அரசு இலங்கை தமிழர்களின் துயர் துடைக்க முழுமனதுடன் முயற்சியில் இறங்க வேண்டும்.
ஜூன் 23, 2009 at 5:45 பிப
பிரபாகரன் பதிவுக்கு மறுமொழி எழுதிய அனைவருக்கும் நன்றி!
டோண்டு சார் சோ பற்றி சொல்வது மிகச் சரி. நானும் இதை பல முறை பார்த்திருக்கிறேன். அவர் சொல்வதை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை, ஆனால் பல சமயங்களில் அது சரியாக வரும். சில சமயங்களில் சரியாக வருவதில்லை என்பதும் உண்மைதான் – உதாரணமாக கலைஞர் ஆட்சிக்கு வந்தால் புலிகளை மறைமுகமாக ஆதரிப்பார் என்று 2006-இல் சொன்னார். கலைஞர் ஷோ மட்டுமே காட்டினார்.
தமிழ் ஸ்பை, ஜோசியப்படி பிரபாகரன் இறக்கவில்லை என்கிறீர்கள். 🙂 ஒன்றும் சொல்வதற்கில்லை.
மனோஜ், தலைப்பில் என் மதிப்பீடு என்று இருக்கிறது, அப்புறம் பதிவில் என் கருத்து வராமல் என்ன வரும? என்னை பற்றி சொல்லிக் கொள்ள பெரிதாக ஒன்றுமில்லை, வேண்டுமானால் அறிமுகம் பக்கத்தை படியுங்கள்.
ஜான் கிறிஸ்டி, கிருஷ்ணன், பாராட்டுகளுக்கு நன்றி!
விஜயராகவன், நீங்கள் சொன்ன மாதிரி ஒரு தலைவனை அவன் நோக்கங்கள் எந்த அளவு நிறைவேறி இருக்கின்றன என்பதை வைத்து மதிப்பிட வேண்டும்தான். மக்களின் நிலை எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறது என்பது முக்கியமான அளவுகோல்தான். நீங்கள் சொல்லும் பாயிண்டில் பிரபாகரன் தோல்வி அடைந்திருக்கிறார் என்பது சரிதான். இந்த முக்கியமான பாயிண்டை நான்தான் தெளிவாக எழுதவில்லை. ஆனால் பிரச்சினை சாதாரணமானது இல்லை. ஒரு அரசை எதிர்த்து போராடுவது சின்ன விஷயம் இல்லை. ஆனால் மேலும் ஒரு தலைவனின் தாக்கமும் முக்கியமானது என்று நினைக்கிறேன். பகத் சிங் என்ன வெற்றி அடைந்தார்? பிரபாகரனின் தாக்கம் மிக பெரியது. நான் பிரபாகரனை பொதுவாக எதிர்ப்பவன். நீங்கள் சொல்லும் மற்ற பிற விஷயங்களில் எனக்கு ஓரளவு இசைவு இருக்கிறது, ஓரளவு இல்லை. அதை பற்றி பல முறை பேசிவிட்டதால் இங்கே இன்னும் விவரிக்கவில்லை.
ரதி, உங்கள் வருகை வழக்கம் போல மகிழ்ச்சி தருகிறது. இது பின்னடைவுதான், ஆனால் ஐம்பது வருஷ பின்னடைவு இல்லை. நமது பெரும் இழப்புக்கு தீர்வு கிடைக்காமல் போகாது. அப்புறம் பிரபாகரன் என்ற தனி மனிதரிடம் எனக்கு என்ன கோபம்? என் விமர்சனம் எல்லாம் அவர் தலைமையை பற்றிதான்.
நல்லதந்தி, நீங்கள் சொல்வது போல ராஜீவ் கொலை புலிகள் வரலாற்றில் ஒரு திருப்பு முனைதான். பிரபாகரனின் ஹிமாலயத் தவறு.
ஜூன் 24, 2009 at 5:00 முப
ரதி,
எதற்காக இத்தனை கோபம்? விஜயராகவனின் பல கருத்துகளோடு எனக்கும் இசைவு இருக்கிறது. சில கருத்துகளோடு இசைவு இல்லை. அதற்காக அவரை விஷமி கிஷமி என்று அழைப்பது சரி இல்லை. அவர் நிச்சயமாக ஈழத் தமிழர்களை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை!
அப்புறம் பிரபாகரன் இறந்துவிட்டாரா இல்லையா என்று ஒரு சர்ச்சை இருந்தது நிஜம்தானே? நான் கூட உங்களையே ஒரு முறை கேட்டிருந்தேன், அவர் உயிரோடு இருக்க வாய்ப்பே இல்லையா என்று?
ஜூன் 24, 2009 at 5:33 முப
RV,
//விஜயராகவனின் பல கருத்துகளோடு எனக்கும் இசைவு இருக்கிறது. சில கருத்துகளோடு இசைவு இல்லை. அதற்காக அவரை விஷமி கிஷமி என்று அழைப்பது சரி இல்லை. அவர் நிச்சயமாக ஈழத் தமிழர்களை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை!//
உங்களுக்கு விஜயராகவனின் கருத்துகளோடு இசைவு இருந்தால் அது உங்களின் தனிப்பட்ட கருத்து. இதற்காக எனக்கும் அவரது கருத்துகளுடன் இசைவு இருக்கவேண்டுமா?
என் இனவிடுதலைக்காக போராடிய போராளிகளை கேவலமாக பேசும் ஒருவர், இல்லாத புரளிகளை சொல்லும் ஒருவரை நான் விஷமி என்று சொல்வதில் என்ன தப்பு? உங்கள் தளத்தில் “விஷமி” என்ற சொல்லை பயனபடுத்த கூடாது என்ற விதிமுறை ஏதுமிருந்து அதை நான் மீறியிருந்தால், அதற்காக மன்னிக்கவும். அவர் கூறும் கருத்துகளின் அடிப்படையில் தான் அவர் யார் என்று ஊகிக்க முடிகிறது. அவர் ஈழத்தமிழர்களை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் சொந்த கருத்து. அல்லது, அவரை நீங்கள் தனிப்பட்ட முறையில் ஈழத்தமிழர்கள் விடயத்தில் அறிந்து வைத்திருக்கறீர்களா?
உங்கள் இந்திய சகோதரர் ஒருவரை நான் விஷமி என்று சொன்னதால் உங்களுக்கு கோபம் என்றால், எனக்கு, புலிகளை இவர் கேவலப்படுத்துவதற்கு கோபம் வராதா? வரக்கூடாதா?
ஜூன் 24, 2009 at 9:32 முப
Why r u so upset Rathy? ‘As you sow , so you do reap’- Prabhaakaran sowed terrorism and he reaped his own fate.Those who live by SWORD WILL DIE BY IT” As already said it is BIG HIMAALAYN BLUNDER on the part of Prabhakaran having ordered execution of Rajiv Gandhi in a cowardish manner and subsequently dubbing it as A tragic occurence and thereby ignored the damage it had caused to the support of TAMIL EALAM.
ஜூன் 24, 2009 at 11:11 பிப
மம்முட்டி,
நான் upset ஆனதாக எதைவைத்த சொல்கிறீர்கள்? என்னை உண்மையில் அதிகம் upset செய்வது இந்தியா ஈழத்தமிழின படுகொலைக்கு துணைபோனது, இந்தியாவின் Proxy War தான். இந்த ஒன்றுமில்லாத விவாதங்கள் அல்ல.
ஜூன் 24, 2009 at 10:54 முப
//உதாரணமாக கலைஞர் ஆட்சிக்கு வந்தால் புலிகளை மறைமுகமாக ஆதரிப்பார் என்று 2006-இல் சொன்னார். கலைஞர் ஷோ மட்டுமே காட்டினார்.//
சோ சொன்னது போல கலைஞர் ஆதரித்ததாலேயே புலி ஆதரவாளர்கள் இத்தனை வெளிப்படையாக பேச முடிந்தது. ஜெ ஆட்சியில் இருந்திருந்தால் இது நடந்திராதுதானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஜூன் 24, 2009 at 1:51 பிப
ஆர்வி, ரதி
என் முதல் போஸ்ட் ரதியையோ, ஒருத்தரையோ வைத்து எழுதப்பட்டது அல்ல. அதனால் `விஷமி` என்பதை என்னை குறிக்கும் படியாக எடுக்கவில்லை.
புலிகளுக்குள்ள groupism எல்லருக்கும் தெரிந்த விஷயம் தான். அதனால்தான், பிராபகரன் மரணம் என்ற விஷயத்தையே, ஒவ்வொரு குரூப்பும் ஒவ்வொரு விதமாக பார்க்கிறது. அதலிருந்தே தெரியவில்லையா குரூபிசம் இருக்கு என்று. வைக்கோ, நெடுமாரன் போன்ற ஜோக்கர்கள், ஒரு குரூப்பை பின்பற்றி, பிரபாகரன் உயிருடன் இருக்கார், ஒரு நாள் திரும்பி வருவார் என பிரச்சாரம் செய்கிறார்கள்.
Unaccounted money, secrecy, groupism, racketeering, arms dealing, not accountable to anyone, இதெல்லம் எங்கே இருக்கின்றதோ, அங்கெல்லாம் நிறைய வன்முறைக்கு வாய்ப்பு உள்ளது. இன் ஃபேக்ட், இந்த பண விஷயங்களே இன்னும் குரூபிசத்தை வளர்க்கும். சிசிலியன் மாஃபியாவே அப்படித்தான் வாழராங்க, சாவராங்க
புலிகள் பண வசூல் ஆர்கனைசேஷன் வருடத்திற்கு 200-300 மில்லியன் $$$ வசூலிக்கற்து என்று Jane’s Defence weekly, மற்றும் இதர அரசாங்களுக்கு தெரிந்த விஷயம். இது உலகரிந்த விஷயம். பிரபாகரன், புலி ஹெட் ஆபீஸ் இருந்த வரை, ஒரு கண்ட்ரோல் இருந்தது. இப்பொழுது அதுவும் இல்லை என்கிறதால், குரூபிசம் அப்பட்டமாக வரும். இதுக்கு rocket science ஒன்றும் தேவையில்லை, common sense உடன் பார்த்தால் போதும்.
ரதி யார் என்று எனக்கு தெரியாது, தெரிந்த கொள்ளவும், கிஞ்சித்தும் ஆர்வம் இல்லை. அப்படி என் நேரத்தை வீண் செய்ய முடியாது. ஆனால் நான் சொன்னதை `ரதி` பெர்சனல் ஆக எடுத்துக் கொண்டது ஆச்சரியிமாக உள்ளது.
அது போகட்டும், ”புலிகளை இவர் கேவலப்படுத்துவதற்கு கோபம் வராதா?”….. ஊஊஊஉஊஉ வருத்தங்கள். உலகத்தில் எல்லா நாடுகளும் புலிகளை தடைசெய்து கேவலபடுத்தி விட்டர்கள், அதற்கு முன் நான் யார் புலிகளை கேவலப் படுத்துவதற்கு. அப்படியே இருந்தாலும், இலங்கை தமிழர்களை அதள பாதாளத்தில் தள்ளியவர்களுக்கு மதிப்பு ஏன் கொடுக்க வேண்டும்? ஜூரம் வந்தவனை குணப்படுத்துகிறேன் என சொல்லி அவன் கை, காலை வெட்டிய மருத்துவனை ஏன் மதிக்க வேண்டும்? நிச்சயமாக அப்படிப் பட்ட மருத்துவனை Profeச்sional Medical Association வெளியேற்றிவிடும்.
ஜூன் 24, 2009 at 2:31 பிப
/”புலிகளை இவர் கேவலப்படுத்துவதற்கு கோபம் வராதா?”….. ஊஊஊஉஊஉ வருத்தங்கள்//
என்ன நக்கலா?
/ரதி யார் என்று எனக்கு தெரியாது, தெரிந்த கொள்ளவும், கிஞ்சித்தும் ஆர்வம் இல்லை. அப்படி என் நேரத்தை வீண் செய்ய முடியாது. ஆனால் நான் சொன்னதை `ரதி` பெர்சனல் ஆக எடுத்துக் கொண்டது ஆச்சரியிமாக உள்ளது.//
நீங்க இப்படி சொன்னவுடன் எனக்கு அழுகை அழுகையா வருதுங்க :). :). ஐயா நீங்கள் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறீரகள் உங்களைப்பற்றி, நான் பெர்சனல் ஆக எடுத்துக்கொள்ள இந்த பதிவில் அல்லது உங்கள் பதிலில் அப்படி என்ன தான் இருக்கிறது. ரொம்ப கொடுமையாக இருக்கிறது உங்கள் கூற்று. உங்கள் தற்பெருமையை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள்.
//Unaccounted money, secrecy, groupism, racketeering, arms dealing, not accountable to anyone, இதெல்லம் எங்கே இருக்கின்றதோ, அங்கெல்லாம் நிறைய வன்முறைக்கு வாய்ப்பு உள்ளது. //
ஒருவேளை இப்படி இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியவன் ஈழத்தமிழன். ஆனாலும், நீங்கள் திருப்பி திருப்பி இதையெல்லாம் சொல்லச்சொல்ல, இதெல்லாம் எங்கே நடக்காமல் விட்டுவிடுமோ என்று நீங்கள் கவலைப்படுவது போல் தான் தெரிகிறது. இதெல்லாம் நடந்தால் சந்தோசப்படும் முதல் ஆள் நீங்கள் தான் என்று நினைக்கிறேன். ஆஹா, என்னா அக்கறை உங்களுக்கு ஈழத்தமிழன் மேல்.
ஜூன் 24, 2009 at 3:39 பிப
விஜயராகவன்,
//உலகத்தில் எல்லா நாடுகளும் புலிகளை தடைசெய்து கேவலபடுத்தி விட்டர்கள், அதற்கு முன் நான் யார் புலிகளை கேவலப் படுத்துவதற்கு//
உலகநாடுகள் எல்லாம் புலிகளை தடைசெய்தார்கள். ஏன்? அது அவர்களின் வசதிக்காக, செளகர்யத்திற்காக. அவர்களின் பூகோள, பிராந்திய, பொருளாதார சுயலாப நோக்கங்களுக்காக.
புலிகளைப்பற்றி சர்வதேச ஊடகங்களும், மேற்குலக தேசிய ஊடகங்களும் குறை சொல்வதற்கு காரணம் அவர்கள் தங்களின் பொய்முகங்களை மறைக்கவேண்டும் என்பதற்காக. செத்துப்போன பாம்பை அடித்து தங்கள் வீரத்தை காட்டுகிறார்கள். இவர்கள் புலிகளை குறைசொன்னால் தானே ராஜபக்க்ஷேக்கள் செய்வது நியாயம் என்று ஆகும். ராஜபக்க்ஷேக்கள் செய்வது நியாயம் என்றால்தானே வாய்கிழிய கிழிய “மனித உரிமைகள், மனிதாபிமானம்” மண்ணாங்கட்டி என்று பேசும் மேற்குலகம் சோம்பேறித்தனமாகவும் செளகர்யமாகவும் ஈழத்தில் நடந்தது “இனப்படுகொலை” இல்லை, அது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று வாழாதிருக்கலாம்.
மேற்குலக தேசிய ஊடகங்களும், சர்வதேச ஊடகங்களும் செய்யும் அதே பாணி பிரச்சாரத்தை தான் நீங்களும் செய்கிறீர்கள் அல்லது அப்படி செய்வதாக மார்தட்டிக்கொள்கிறீர்கள். ஆக, அவரவர் வசதிகேற்றவாறு புலிகளை கேவலப்படுத்துவதாக நினைத்து, ராஜபக்க்ஷேக்களுக்கு அங்கீகாரம் வழங்குகிறீர்கள். இதில் வவுனியா வதைமுகாம்களில் வதைபடும் ஈழத்தமிழன் வாயில்லாப்பூச்சியாக செத்துப்போவதும், சித்திரவதைப்படுவதும் மிகவும் வசதியாக மறைக்கப்படுகிறது, மறக்கப்படுகிறது. இந்த தார்மீகப்பணியைத்தான் மேற்குலக தேசிய ஊடகங்களும், சர்வதேச ஊடகங்களும் கண்ணும்கருத்துமாக செய்துகொண்டிருகின்றன. இதைத்தானா நீங்களும் செய்ய விரும்புகிறீர்கள்.
புலிகளை எதிர்ப்பதையே உங்கள் இலட்சியமாக கொண்டிருக்கும் உங்களிடம் வீண்வாதம் செய்து என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. உங்களுக்கும் உலகநாடுகளுக்கும் பயங்கரவாதிகளாக தெரியும் புலிகள் எங்களுக்கு விடுதலைப்போராளிகள். அவ்வளவே.
ஜூன் 24, 2009 at 10:57 பிப
Vijayaraghavan, புலிகளை பற்றி மிக நன்றாகவே அறிந்து வைத்துள்ளீர்கள். அதுவும் முக்கியமான புலிகளின் பண விடயத்தை நன்றாகவே அறிந்து வைத்துள்ளீர்கள். தமிழர் பிரச்சனைக்காக தொடங்கப்பட்டதாக சொல்லப்பட்ட யுத்தம் பின்பு பணம் கறப்பதிற்க்காகவே அப்பாவிகளை பலி கொடுத்து தொடரப்பட்டது.
ஜூன் 24, 2009 at 4:13 பிப
ரதி, இசைவு கருத்து இல்லை என்பதற்காக ஒருவரை விஷமி என்று அழைப்பது சரி ஆகுமா? உங்களுக்கும் எனக்கும் கூடத்தான் பல விஷயங்களில் இசைவு இல்லை. நானும் புலிகளை எதிர்த்தும், பிரபாகரனுக்கு எதிராகவும் பல கருத்துகளை எழுதி இருக்கிறேன். அதனால் நமக்குள் நட்பு இல்லையா என்ன? நீங்களே கூட சொல்லி இருக்கிறீர்கள், ஒத்த கருத்து உள்ளவர்கள் மட்டுமே நண்பர்கள் ஆக முடியும் என்றில்லை என்று.
மற்றபடி இந்த தளத்தில் எந்த விதிமுறையும் இல்லை. நீங்கள் தாராளமாக உங்கள் கருத்தை சொல்லலாம். நீங்கள் சொல்வது சரி இல்லை என்று நானும் சொல்லலாம். 🙂 நான் சொல்வது விஜயராகவன் இந்தியரா இல்லையா என்பதை பொறுத்தது இல்லை. இது groupism என்று நினைத்து தவறான முடிவுகளுக்கு வராதீர்கள்.
அப்புறம் உலக நாடுகள் புலிகளை தடை செய்வதற்கு காரணம் பிராந்திய வல்லரசு ஆசை மட்டும்தான் என்று நினைப்பது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வது.
மம்மூட்டி, பிரபாகரன் தீவிரவாதத்தை ஆரம்பித்து வைத்தார் என்பது தவறு. அதை ஆரம்பித்தது சிங்களர்கள். நான் பிற பதிவுகளில் எழுதிய மாதிரி புலிகள் பரங்கி மலை அளவு தவறு செய்தால் இலங்கை அரசும சிங்களர்களும் இமய மலை அளவு தவறு செய்திருக்கிறார்கள். விஜயராகவன் சொன்ன மாதிரி இது வெறும் ஜுரத்துக்கு பார்த்த வைத்தியம் இல்லை. கான்சருக்கு பார்த்தது என்று வைத்துக் கொள்ளலாம்.
டோண்டு சார், கலைஞரின் புலிகள் ஆதரவு சும்மா லுலுலாயி என்பதுதான் இந்த தேர்தலில் வெளிப்படையாக தெரிந்துவிட்டதே? இன்னுமா அவர் சோ பயப்பட்ட மாதிரி புலிகளை ஆதரிக்கிறார் என்று நம்புகிறீர்கள்?
விஜயராகவன், புலிகளிடம் பணம் இருப்பதில் என்ன ஆச்சரியம்? அவர்களை உண்மையாக ஆதரிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களும் வற்புறுத்தி பணம் செர்த்திருபபார்கள்தான். அவர்களை போன்று பெரிய தளத்தில் போராடியவர்களுக்கு பணம் அவசியம்தானே? நீங்கள் ஜேன்’ஸ் டிஃபன்ஸ் வீக்ளியிலிருந்து தந்த விவரங்களுக்கு நன்றி! அந்த அமவுண்ட் என்னை ஆச்சரியப்பட வைத்தது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
வைக்கோ, நெடுமாறன் போன்றவர்கள் பிரபாகரன் இறந்ததை ஒத்துக் கொள்ள விரும்பவில்லை. அது அவர்கள் துக்கத்தின் வெளிப்பாடு. அதை ஏன் தவறாக பேசுகிறீர்கள்?
ஜூன் 24, 2009 at 9:54 பிப
RV,
//உலக நாடுகள் புலிகளை தடை செய்வதற்கு காரணம் பிராந்திய வல்லரசு ஆசை மட்டும்தான் //
நீங்கள் பிராந்திய வல்லரசு என்று இந்தியாவை மனதில் வைத்துக்கொண்டு சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால், நான் இந்தியா உட்பட மற்றும் பல நாடுகளையும் சேர்த்து தான் சொல்கிறேன். இதற்கு பதிலளிக்க நான் ஜோர்ஜ் புஷ் இடமிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். ஆனால் அது வெட்டிவாதமாகத்தான் முடியும். இருந்தாலும், அவர் கண்டுபிடித்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர் விடுதலை இயக்கங்களுக்கும் பயங்கரவாதிகளுக்குமிடையில் உள்ள கோடு ஒன்றை அழித்துவிட்டதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஐக்கியநாடுகள் சபையின் ஜெனீவா கன்வென்சன் படி அடக்குமுறைக்கு உள்ளான ஒரு இனம் அதை எதிர்த்து தங்களின் சுதந்திரத்திற்காக போராடலாம் என்றால், வல்லரசு நாடுகளின் நலனகளை மட்டும் கவனத்தில் கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் எல்லா விடுதலை இயக்கங்களுமே பயங்கரவாத இயக்கமாகத்தான் கருதப்படவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
பயங்கரவாதத்திற்கு எதிரான் போர் என்று எப்படி ஈழத்தமிழன் இன்னல்படுகிறான் என்பதை Karen Parker, an attorney specializing in international humanitarian (armed conflict) law and human rights இப்படி சொல்கிறார்.
// Ms Karen Parker said that the terrorism / counter terrorism policy has eroded basic human rights and it has demonized Tamil people world wide, adding, “In my 27 years working on humanitarian law issues, I have never encountered a situation where an ethnic group that has been the victim of the most serious of human rights and humanitarian law violations becomes the culprit – and in ways that are overtly racist.”//
When US showed an interest in Trincomalee and was working out a deal with J.R. Jeyawardane, India entered into Indo-Sri Lanka accord of 1987 to prevent this, she said.
The Bush administration looked again at Trincomalee and there are suggestions that Palaly airfield was also under consideration. Both of these are in the Tamil areas, so in order for possible bases to be secure, the Tamil question would have to be resolved.
But instead of resolving the conflict, the Bush administration converted the armed conflict in “terrorism / counter terrorism”, Parker said.
The net result according to her is that it has prevented viewing the conflict under prevailing humanitarian law; it prolonged the conflict and has damaged the humanitarian law itself.//
_ Karen Parker, J.D., an attorney specializing in international humanitarian (armed conflict) law and human rights_
Source: Tamilnet, “Revise policies on Tamil struggle: Karen Parker tells U.S. Senate”, 26.02.09
ஆக, புலிகளை தடை செய்ததற்கு புலிகள் காரணமில்லை. இதை விட சிறப்பாக என்னால் இதை விளக்கியிருக்க முடியாது. மொத்தத்தில் யார் யாருக்கோ இதில் லாபம் இருக்க புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாக்கப்பட்டு, எங்களுக்கு எதிரான சிங்கள பேரினவாதிகளின் அடக்குமுறை நியாயமாக்கப்பட்டுள்ளது.
உலக மகா பொய்யர்களின் கூற்றை நம்பினால் அது உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வது போல் தான்.
ஜூலை 13, 2009 at 6:28 முப
இந்த யுத்தம் முழுக்க முழுக்க…ஆரியனுக்கும் திராவிடனுக்கும் நடந்த யுத்தம்தான்… இராமாயணம் ( நிஜம் என எடுத்துக் கொண்டாலும்) சொல்லறது போல ஆரியர்கள்(வடஇந்தியர்கள்) எல்லாம் தேவர்கள்… திராவிடர்கள் (தென் இந்தியர்கள்) குரங்குகள் ஈழத்தீவில் (ஈழம் தான் அதன் வரலாற்று பெயர்) இருந்த திராவிடர்கள் அரக்கர்கள்..( அப்போது கூட சிங்களன் இல்லை அங்க) ….அது போனற ஒரு யுத்தம் தான் அன்று தேவர்களா வந்தவங்க இப்போ நியாவாதிகளாகவும் குரங்குகளானவன் இன்று கோமாளியாகவும் அரக்கனாக சித்த்ரிக்கபட்டவன் இன்று புலியாகவும் இந்த ஆரிய அடிவருடிகளால் பரப்புரை செய்ய படுகிறார்கள்…..ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன்….அந்த இராமாயணக் கதையில் கூட இராவணந்தான் ஒழுக்கதில் சிறந்தவன் என கூறி யுள்ளது…
ஜூலை 16, 2009 at 11:35 பிப
ஒருவன்,
என்னங்க ஆரிய திராவிட யுத்தம் என்று பெனாத்திக்கிட்டு? சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் என்ன வித்தியாசம்? காஷ்மீரிகளுக்கும் தமிழர்களுக்கும் இருப்பதை விட குறைவுதான்!
ராமாயணக் கதையில் ராவணனின் சிறப்புகள் சொல்லப்படுவது வாஸ்தவம்தான். ஆனால் சீதையை தூக்கி போனதுதான் ராமாயணம், அதுவும் ராவணனின் சிறப்பு என்று சொல்ல மாட்டீர்களே?
ரதி, உங்களுக்கு இல்லாத ஆதரவா? :-))
ஜூன் 24, 2009 at 4:38 பிப
ஒரு பக்கம், புலிகளைப் பற்றி எண்ணும் போது.. 1950-களில் இருந்து, சிங்கள அரசுகள் தமிழர்களை நடத்திய விதங்களும், செய்த வன்முறைக் கொடுமைகளும் இம்மாதிரியான வன்முறையாளர்களுக்கு புலிகள்தான் தீர்வோ என்று எண்ணத் தொன்றுகிறது. மறு பக்கம் இந்த இனப் பிரச்சனை மிகவும் வெடித்தபோது, இந்திய அரசு தலையிட்டு பிரச்சனையைத் தீர்க்க ஆர்வம் காட்டிய காலத்தில் விடுதலைப் புலிகள் நடந்து கொண்ட விதம் அவர்களுக்கு அதிகாரத்தை கைப்பற்ற மட்டுமே ஆசை, தமிழர்களின் பிரச்சனையைத் தீர்க்க இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. எது எப்படி இருந்தாலும் இலங்கைப் பிரச்சனையை ஒரு செய்தியாகப் பார்க்கும் நமக்கும், அந்த வாழ்க்கையை வாழும் இலங்கைத் தமிழருக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. கொடுமையை அனுபவிப்பவர்களுக்குத்தான் அந்த வலி தெரியும். அதனால் இலங்கைப் பிரச்சனை எப்படித் தீர்க்கப் படவேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் இலங்கைத் தமிழர்களே அன்றி நாமல்ல!
ஜூன் 24, 2009 at 6:02 பிப
ஆர்வி “வைக்கோ, நெடுமாறன் போன்றவர்கள் பிரபாகரன் இறந்ததை ஒத்துக் கொள்ள விரும்பவில்லை. அது அவர்கள் துக்கத்தின் வெளிப்பாடு. அதை ஏன் தவறாக பேசுகிறீர்கள்?”
எவருக்குமே, அதுவும் முக்கியமாக, தலைவர்கள் என சொல்லிகொண்டு மக்களை பல வழிகளில் ஊக்குவித்து, பல மானுட மற்றும் பொருள் சேதங்களை செய்யும் அரசியல் வாதிகளான வைக்கோ போன்றவர்களுக்கு , குறைந்த பட்சம் பகுத்தறிவு தேவை. அவற்றில் ஒன்று, எல்லோருக்கும் சாவு அன்பது நிச்சயம். போர் புரிபவர்களுக்கு அது வாய்ப்புகள் அதிகம். அதுவும் எல்லா திசைகளிலும் ஆயுதவாதிகளால் சூழப்பட்ட பிரபாகரனின் மரணம் foregone conclusion. இறந்தவர்கள் மீது – அது யாராயிருந்தாலும்- அதுவும் புகழப்பட்ட ஒருவர் – மரனமடைந்த பிறகு, குறைந்தபட்சம் அஞ்சலியாவது செலுத்தி வாழ்க்கையை தொடரலாம். அதைத்தான் வைக்கோ போன்றவர்கள் செய்ய மறுக்கிறார்கள்.
இறப்பை மறுத்து, மறுபடியும் “அவர்” ஒரு நாள் திரும்புவர் என்பது ஒரு வித மத உணர்வு. அதைதான் கிறிஸ்துவர்கள் செய்கிறாற்கள். ஏசு சிலுவையில் இறக்க வில்லை, ஒரு second coming என்பதற்கு காத்துக் கொண்டுள்ளனர்.
இதைப் போல அரசியல் தூண்டப்படும் போலி மதங்கள் தேவையே இல்லை. அது கண்டிக்கத் தக்கது என்பேன்.
மற்ற நாடுகளில் இதெல்லாம் ஒரு விதமான காமெடி நாடகங்களுக்கு கச்சா பொருளைத்தரும்.
நீங்கள் அது அவர்கள் துக்கத்தின் வெளிப்பாடு என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. இவ்வளவு நாட்கள் they put all their bets on LTTE and Prabhakaran; and refuse to accept that they have lost the bet. அது அரசியல் கபட நாடகம்
ஜூன் 24, 2009 at 6:13 பிப
ரதி “புலிகளை தடைசெய்தார்கள். ஏன்? அது அவர்களின் வசதிக்காக, செளகர்யத்திற்காக. அவர்களின் பூகோள, பிராந்திய, பொருளாதார சுயலாப நோக்கங்களுக்காக. ”
நீங்கள் சொல்வது 100% கரெக்ட். உலகம் எப்பவுமே இப்படித்தான்.
ஒரு மக்களின் நலத்துக்காக, சுபிட்சத்துக்காக போராடும் தலைவன் என்பவன், இதையெல்லாம் மனதில் கொண்டு, சமாளித்து, உலக போக்குகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வான். தண்டமான தலைவர்கள், உலகத்தை சபித்துக் கொண்டு, உலகத்தை எதிரியாக்கி, தங்கள் நோக்கங்களில் தோல்வி பெறுவார்கள். இங்க நான் யார் பெயரையும் சொல்லவே வேண்டாம்.
ஜூன் 24, 2009 at 8:39 பிப
விஜயராகவன்,
ஈழத்தமிழர்கள் நாங்கள் வலியை அனுபவித்ததால் அதை உணர்ந்து பேசுபவர்கள். நீங்கள் ஈழத்தமிழனின் வலியின் வரைவிலக்கணத்தை புத்தகத்தில் படித்துவிட்டு கருத்து பதிகிறீர்கள். இதுதான் எங்களுக்கிடையில் உள்ள வேறுபாடு.
மற்றப்படி எங்களுக்குள் புலிகள் பற்றிய கருத்து உடன்பாட்டிற்கு இடமில்லை.
ஜூன் 24, 2009 at 6:22 பிப
ரதி அக்கா அவர்களுக்கு,1]ஒரு உண்மையை எனக்கு சொல்லுங்கள்.நடந்த போரில் இரண்டு லட்சம் தமிழர்கள் கொல்ல் பட்டதாக ,இன்று ஒரு இலங்கை தமிழர் [கண்டியை] சேர்ந்தவர் எனக்கு சொல்லிமிகப் பெரும் அதிர்ச்சியை அளித்தார். தமிழனாக கலங்கி தவிக்கிறேன்.அக்கா, என் தொப்புள் கொடி ஒறவுகள் மடிய கண்டு, வெஞ் சினம் கொண்டேன். 2]பிரபஞ்ச உண்மை ,எங்கெல்லாம் அதர்மம் தலை எடுகிறதோ அங்கெல்லாம் நான் அவதரிக்கிறேன்.தமிழ்ஈழதேசிய தலைவர் நிச்சயம் வருவார்.நூறு சதவிகித உறுதி.தமிழ் நாட்டில் பட்டாசு கொளுத்தி கொண்டாடுவோம். மஹிந்த ராஜா பக்செய் திருட்டு முழி முழிப்பதை உலக தமிழர்கள் பார்க்கத்தான் போகிறோம்.3]என் இனம் அழிந்த நாளை என் ஆழ் மனதில் பதிந்து வைத்திருக்கிறேன்.4]பொல்லாதவனாய் ,என்னை மாற்றியது இந்த மனித பேரவலமே.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
சரவணகுமார்.
ஜூன் 24, 2009 at 10:39 பிப
பொல்லாதவன்/சரவணகுமார்,
//ஒரு உண்மையை எனக்கு சொல்லுங்கள்.நடந்த போரில் இரண்டு லட்சம் தமிழர்கள் கொல்ல் பட்டதாக ,இன்று ஒரு இலங்கை தமிழர் [கண்டியை] சேர்ந்தவர் எனக்கு சொல்லிமிகப் பெரும் அதிர்ச்சியை அளித்தார். //
நான் படித்த செய்திகளின் படியும் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சம் என்பது சரி என்று தான் நினைக்கிறேன். ஆனால், ஏறக்குறைய ஐம்பதாயிரம் அப்பாவித்தமிழர்கள் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து மே மாதம் வரை மட்டும் படுகொல்லப்பட்டதாக தான் செய்திகள் சொல்லுகின்றன. மிகுதி தமிழர்கள் இலங்கை சுதந்திரம் (நன்றாக கவனியுங்கள், இலங்கை சுதந்திரம் அடைந்தது என்றுதான் சொல்கிறேன், ஈழத்தமிழனுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை)அடைந்த நாளிலிருந்து படுகொலை செய்யப்பட்டவர்கள்.
உங்களுக்கு ஆர்வம் இருந்தால் இந்த தளத்திற்கு சென்று பாருங்கள்.
ttp://www.warwithoutwitness.com//
என் இனம் அழிந்த நாளை என் ஆழ் மனதில் பதிந்து வைத்திருக்கிறேன்.4]பொல்லாதவனாய் ,என்னை மாற்றியது இந்த மனித பேரவலமே.//
சரவணகுமார், ஈழத்தில் நடந்த மனிதபேரவலத்திற்கு உலகம் நீதி வழங்கும் நாள் தான் எங்களுக்கு, ஈழத்தமிழனுக்கு சுதந்திரம் மலரும் நாள்.
நீங்கள் பொல்லாதவனாக மாறியதாக சொல்லியிருக்கிறீர்கள். அது என்னவென்று எனக்கு புரியவில்லை. ஆனாலும், எந்த ஒரு கஸ்டத்திற்கும் உங்களை ஆளாக்காதீர்கள். எல்லோரும் சேர்ந்து ஒரே குரலில் ஒரே அணியில் ஈழத்தமிழர்களுக்கு நியாயமான வழியில் போராடுவோம்.
ஜூன் 24, 2009 at 10:40 பிப
http://www.warwithoutwitness.com/
ஜூன் 24, 2009 at 11:18 பிப
வெளிநாடுகளில் புலிகள் பதுக்கி வைத்துள்ள கோடிக்கணக்கான பணத்தை அந்த நாட்டு அரசுகள் முலம் எடுத்து புலிகள் நடத்திய யுத்தத்தினால் சீரழிந்து அகதி முகாம்களில் பரிதவிக்கும் இலங்கை தமிழர்களுக்கு வழங்கி அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கவைக்கவேண்டியது புலியை முன்பு ஆதரித்தோரின் கடமையாகும்.
ஜூன் 25, 2009 at 2:38 முப
ரதி, உங்களுக்கு முதலில் நன்றி! இத்தனை மறுமொழிகளை எழுத பெரும் ஊக்கம் இருக்க வேண்டும்.
For the record, நம் இருவருக்கும் தெரிந்த கருத்து வேறுபாடுகளை இன்னும் ஒரு முறை பதிக்கிறேன். இது உங்களோடு வாதிட இல்லை, கருத்தகளை மீண்டும் நினைவுபடுத்த மட்டுமே. 🙂
இந்தியா இலங்கையில் இப்போது நடந்த படுகொலைக்கு உதவி செய்தது உண்மை என்று நான் கருதினாலும், அது பொருட்படுத்தக் கூடிய அளவுக்கு பெரிய உதவி இல்லை என்று நான் நினைக்கிறேன். Proxy war என்பது பெரிய விஷயம் – அந்த அளவுக்கெல்லாம் இந்தியா போகவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். India’s sins were/are mostly that of ommission, not commision.
50000 பேர் இறந்தார்கள் என்று கேட்க மிக துக்கமாக இருக்கிறது. இந்த இழப்புக்கு தீர்வு இல்லாமல் போகாது.
கேரன் பார்க்கர் ஈழ கவுன்சிலில் மெம்பராக இருக்கிறாரோ? ஆனால் ஜார்ஜ் புஷ் நிர்வாகம் திரிகோணமலையில் தளம் அமைக்க விரும்பிய ஒரே காரணத்துக்காக புலிகளை தீவிரவாத இயக்கமாக அறிவித்தது என்பது கொஞ்சம் டூ மச்சாக தெரிகிறது. அதுவும் ஒரு காரணம் என்று வேண்டுமானால் சொல்லுங்கள். புலிகள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டனர் என்பதை மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
விஜயராகவன், // அது அவர்கள் துக்கத்தின் வெளிப்பாடு என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. இவ்வளவு நாட்கள் they put all their bets on LTTE and Prabhakaran; and refuse to accept that they have lost the bet. அது அரசியல் கபட நாடகம் // கபட நாடகம் என்பதற்கு என்ன ஆதாரம்? இது என் கருத்து, அது உங்கள் கருத்து, அவ்வளவுதான். வைக்கோ, நெடுமாறன் (சோ கூட) தங்கள் அணுகுமுறையில் consistent ஆக இருக்கிறார்கள். அவர்கள் லாஜிக் எனக்கும் உங்களுக்கும் சோவுக்கும் தவறாக தெரியலாம். ஆனால் அவர்கள் உணர்வுகள் உண்மையானவை என்று நான் நினைக்கிறன்.
ஜூன் 25, 2009 at 1:57 பிப
RV,
//இத்தனை மறுமொழிகளை எழுத பெரும் ஊக்கம் இருக்க வேண்டும்.//
உங்கள் பாராட்டுக்கு நன்றி. ஆனால், இதை நான் பாராட்டுக்காகவோ அல்லது பொழுபோக்கிற்காகவோ செய்யவில்லை. உண்மை என்னவென்றால் இலங்கை அரசு இப்படி இணையத்தளங்களில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக பின்னூட்டமிடுவதற்கு பணம் கொடுத்து பலரை வைத்திருக்கிறார்கள். அவர்களும் அதையே அவர்கள் வேலையாக எங்களுக்கு எதிரான கருத்துகளை தாரளமாகவே தமிழ் (ஆமாங்க, தமிழர்களும் தான்) மற்றும் சர்வதேச ஊடகங்களில் பதிவார்கள். பெரும்பாலும் எல்லா இணைத்தளங்களிலும் ஈழத்தமிழர்கள் பற்றிய பதிவுகளுக்கு எங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு யாருமே நியாயமாக கருத்து பதிவதில்லை. சிங்கள தரப்பு செய்வது எல்லாமே நியாயம், தமிழர்களுக்கு எந்த கொடுமையும் நடக்கவில்லை என்றால் எப்படி? எங்களுக்கு நடந்த கொடுமைகளை நாங்களே சொல்லாவிட்டால் பிறகு யார்தான் சொல்வார்கள்? பொய்ப்பிரச்சாரங்களால் எங்களுக்கு நடக்கும் கொடுமையும், உண்மையும் மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க கூடாதல்லவா. பாதிக்கப்பட்டவர்கள் பேசினால் தானே நியாயம் கிடைக்கும். அதிலிருந்து ஆரம்பித்தது தான் இது. பெரும்பாலும் சர்வதேச ஊடகங்களில் தான் அதிகமாக கருத்து பதிவுகள் நடப்பதுண்டு. சில சமயங்களில் எத்தனையோ வேலைகளை புறக்கணித்து விட்டுத்தான் இதை செய்யவேண்டியுள்ளது. எங்கள் பக்கம் உள்ள நியாயம் ஒவ்வொரு ஈழத்தமிழனின் கருத்து மூலமும் மற்றவர்களை சென்றடைய வேண்டும். இது கருத்துப்போர்.
நிற்க, இந்தியாவை நேசிக்கும் RV , ஈழத்தையும் ஈழத்தமிழனையும், புலிகளையும் நேசிக்கும் ரதிக்கும் பெரும்பாலான விடயங்களில் கருத்து ஒற்றுமைக்கு இடமில்லை என்று தான் தோன்றிகிறது. 🙂
இன்னுமோர் விடயம், சீரியசாக விடயங்களை விவாதித்துக் கொண்டிருந்ததால் நீங்களும், விஜயராகவனும் சொன்ன ஜோக்கிற்கு சிரிக்க மறந்து விட்டேன். இப்போது கொஞ்சமாக சிரித்துக்கொள்கிறேனே,
விஜயராகவன்: //புலிகள் பண வசூல் ஆர்கனைசேஷன் வருடத்திற்கு 200-300 மில்லியன் $$$ வசூலிக்கற்து என்று Jane’s Defence weekly, மற்றும் இதர அரசாங்களுக்கு தெரிந்த விஷயம்.//
RV: //நீங்கள் ஜேன்’ஸ் டிஃபன்ஸ் வீக்ளியிலிருந்து தந்த விவரங்களுக்கு நன்றி! அந்த அமவுண்ட் என்னை ஆச்சரியப்பட வைத்தது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.//
இது உண்மையென்றால், புலிகள் ஏன் இவ்வளவு போராடி இருக்க வேண்டும்?
🙂 :)))))))))))))
ஜூன் 25, 2009 at 4:24 முப
Hello Rathy, I feel sorry that you are approaching everything emotionally. pirachinaikalai unarvu poorvamaka anuka venumeyallaathu unarchi poorvamaka anuka koodaathu.You say you are upset only with India’s proxy war and not by these ondrumillatha vivadhangal. wat do u mean by this ondrumillatha diacussions?
Secondly how do you expect the Indian Government to help LTTE who had assassinated their Past Prime minister in Indian soil and showed their brutal terror device unblemishingly. Prabhaakaran bit the Hand that fed him and lost the biggest support on earth for his movement for EALAM .As Vijayaraghavan had said India had not done any war against LTTE, but was apathetic to LTTE thereby Ealam movement.
ஜூன் 25, 2009 at 1:10 பிப
மம்மூட்டி,
நான் பிரச்சனைகளை உணர்ச்சி பூர்வமாக அணுகுவதாக என்னை Diagnose செய்யாமல், முதலில் இந்தியா ஈழத்திற்கும், ஈழத்தமிழனுக்கும் என்னென்ன துரோகங்கள் செய்தது என்று தெரியாமல் பேசுகிறீர்களா அல்லது தெரிந்தும் ஒரு இந்தியன் என்ற உணர்வோடு மட்டும் பேசுகிறீர்களா? உங்களை ஒருமுறை நீங்களே ஈழத்தமிழர் விடயத்தில் Diagnose செய்து பாருங்களேன்.
உங்கள் வீட்டில் நாலைந்து பேர் ராணுவத்தால் கொல்லப்பட்டும், உங்கள் வீட்டுப்பெண்கள் சிங்கள காடையர்களால் நாசமாக்கப்பட்டும், உங்கள் சகோதரர்கள் சித்திரவதை செய்து கொல்லப்பட்டோ அல்லது காணாமல் போனாலோ, நீங்கள் என்ன செய்வீர்கள்? உடகார்ந்து பிடில் வாசிப்பீர்களா?
ஐயா, உங்களைப்போன்றவர்களுக்கு இந்தியன் என்ற உணர்வு எங்களின் பிரச்சனைகளை அறிவு பூர்வமாக அணுக தடையாக இருக்கிறது. இந்தியன் என்ற உணர்வோடு கொஞ்சம் மனச்சாட்சியையும் சேர்த்து யோசித்துப்பாருங்கள். அப்பொழுதாவது, உங்களுக்கு எங்கள் பக்கம் உள்ள நியாயம் புரிகிறதா பார்க்கலாம். அதுவரை உங்களோடு வாதம், எதிர்வாதம் செய்ய எனக்கு நேரம் இல்லை. மன்னிக்கவும்.
ஜூன் 25, 2009 at 10:14 பிப
Rathy, thanks for calling me an Indian with feeling. How much Indians had lost for the sake of Srilankan tamils and LTTE by virtue of monetary support and mandays lost in bandhs and also loss of human lives in atrocious bombings in Tamilnadu ( Other than the innocent 20 people died in Rajiv assassination- one should not forget. Just because a ruthless terrorist leader had lost a war and died ignominously in a battle and therby lost the the onus of the m ovement, how u can expect Indian govt to support more than this? Do u still think that FEELINGS should only emanate from us Indians but not from you? Idhu enna NIYAYAM?
ஜூன் 25, 2009 at 5:58 பிப
//Secondly how do you expect the Indian Government to help LTTE who had assassinated their Past Prime minister in Indian soil and showed their brutal terror device unblemishingly.//
100% true.
ஜூன் 25, 2009 at 6:05 முப
எல்லோருக்கும் வணக்கம் என்ன என்று சொன்னால் இந்தியா சுதந்திரம் அடைய பலவழிகளில் பலர் போராடினர் அதில் குறிப்பாக வீர பாண்டியகட்டப்பொம்மன் மற்றும் நேத்தாஜி, கட்டப்பொம்மனையும்,நேத்தஜியையும் எடுத்துக்கொண்டால் தம்மக்களிட்கு தீங்கு செய்தவர்களை அவர்கள் மன்னிகவேயில்லை. அதே போல் தான் உங்கள் ராஜீவ் எங்களுக்கு செய்தவை எல்லாம் சரியா? நான் உங்களிடம் கேட்கிறேன் IPKF புலி புலி என்று சொல்லிக்கொன்று குமித்த இரண்டு வயதுக் குழந்தை முதல் எண்பது வயது முதியவர் வரை உள்ளவர்களின் உயிரை விட ராஜீவ் உயிர் பெரிதா? கருவிலையே இறந்த குஞ்சுகள் எல்லாம் ராஜீவ் மாதிரி வர மாட்டார்களா என்ன? ஒரு எறும்புக்கும் மனிதனுக்கும் உள்ள உயிரின் அளவு ஒன்று தான் அணுவளவு தான். உங்களிற்கு யார் சொன்னார்கள் எங்களை கொல்லச்சொல்லி எங்களை பாதுகாக்க என்று வந்திட்டு எத்தனை பேரை கதறக் கதற கெடுத்தது சரியா? சரி நான் தெரியாமல் தான் கேட்கிறன் உங்கட ராஜீவின் தலையில அடித்து வரவேற்பு கொடுத்த சிங்களவன் செய்தது சரியா? சரி இந்திராகாந்தியை கொண்ட சீக்கியர்கள் செய்தது சரி அப்படித்தனே அப்படி இல்லை என்றால் பொற்கோவிலில் வைத்து காந்தி வம்சத்தையே அழிப்போம் என்று சபதம் செய்த சீக்கியர் தானே இன்று இந்தியாவையே ஆழினம். comment எழுதிறது சுகம் எங்களைப் போல வாழ இடம் இல்லாமல் இருந்தால் தான் தெரியும் அதன் அருமை. தலை இடியும் வைற்றுக்குத்தும் தனக்குத் தனக்கு வந்தால் தான் தெரியும். தயவு செய்து சொல்லுறன் எங்கட இனம் தன்மானமாய் தலை நிமிந்து நிக்கணும் என்றால் குறை சொல்வதை விடுத்து நிறையை மட்டும் காணப்பழகுங்கள். அடிமையாய் வாழ்ந்தால் போதும் என்றால் அப்படியே இருங்கோ வரலாறு உங்களை மன்னிக்காது ஆனால் பிரபாகரனை நிட்சயம் வரலாறு போற்றும். இருந்து பாருங்கள்.
ஜூன் 25, 2009 at 8:58 முப
ஈழத்தமிழர்கள் என்றால் புலி ஆதரவாளர்கள் என்று விதண்டாவாதம் செய்பவர்கள் மனநோய் மருத்துவமனையில் இருக்க வேண்டியவர்கள். பிரபாகரனையும், புலிகளையும் ஈழத்தமிழர்கள் அனைவரும் எப்போதோ வெறுத்து ஒதுக்கி விட்டார்கள். அது தான் புலிகளின் தோல்வியின் முக்கியமான காரணம். இந்தியாவில் இருப்பவர்களுக்கு உண்மை தெரியாதது ஆச்சரியமாக உள்ளது.
ஈழத்தமிழர்களின் மனக்குமுறல்களை இங்கே வாசியுங்கள்:
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5903:2009-06-24-08-21-03&catid=277:2009
வன்னிமுகாமில் உள்ள இளம் பெண் ஒருவருடனான உரையாடலின் போது, அள்ளிக் கொட்டிய குமுறல் தான் “நாசமாகப் போவாங்கள், அறுவாங்கள்” என்று திட்ட வைத்தது. அடக்கி ஒடுங்கிக் கிடக்கும் கோபங்கள், போராட்டங்கள், இப்படித்தான் குமுறி வெடித்தெழுகின்றது. சமாதான காலத்தில் இதே பெண், தமிழீழம் மிக விரைவில் மலரும் என்றவர். அப்படியா என்ற போது, எம்மை எள்ளி நகையாடிக் கதைத்தவர்.
அந்தளவுக்கு நம்ப வைக்கப்பட்ட ஒரு பிரமையில் வாழ்ந்தவர்கள். புலிகளோ தங்கள் பாசிச சுய ரூபங்களை மூடிமறைத்து, தம்மைப் பற்றி ஏற்படுத்திய பிரமிப்பை யுத்தத்தின் போது தகர்த்தெறிந்தனர். எப்படிப்பட்ட பாசிட்டுக்கள் தாங்கள் என்பதை, மக்கள் முன் நிர்வாணமாகவே நிறுவினர்.
இவர் தன் குழந்தைக்காக வன்னியில் அங்கர் பால் பைக்கற் கொடுக்கும் நீண்ட கியூவில் நின்ற போது, புலிகள் அங்கு வாக்கிடோக்கியுடன் நின்று பேச, அந்த இடத்தில் குண்டு வீழ்ந்த போது ஏற்பட்டதே இந்தக் காயம். அதில் தம் குழந்தைகளுக்காக அங்கர் பால் பைக்கற்றைப் பெற வந்து நின்ற, 70 பொதுமக்கள் இறந்து போனார்கள். மக்களைக் கொல்லவேண்டும் என்ற குறிக்கோளுடன் இதை திட்டமிட்டு செய்த புலிகளை, அந்த வன்னி மக்கள் பாடையில் போவான்கள் என்று தூற்றாமல் வேறு என்னதான் செய்யமுடியும். இப்படி மக்கள் புலியை காறி உமிழ்வதில், நியாயங்கள் உண்டு. இவர்கள் மக்களையே பாடையில் அனுப்பியவர்கள் ஆயிற்றே.
மக்கள் இப்படித்தான் குமுறி வெடிக்கின்றனர். இப்படித்தான் போராடுகின்றனர். தமது ஆயுதமாக சொற்கள். இதன் மூலம் இந்த மனித அவலத்துக்கு காரணமான அனைவரையும் திட்டித்தீர்க்கும், உச்சத்தில் வன்னி மக்கள் உள்ளனர். தமக்கு நடந்த நடக்கின்ற கொடுமைகளை, கொடூரங்களைச் சொல்லி காறி உமிழ்கின்றனர். புலிகள் இனி அந்த மக்களை நெருங்கவே முடியாத அளவுக்கு, பாரிய கொடுமைகளை அவர்களுக்கு செய்திருக்கின்றனர். ஆண், பெண் பால் வேறுபாடு கடந்த எல்லைக்குள், புலிகள் அந்த மக்களை இழிவாகவும் மலிவாகவும் நடத்தினர்.
அந்த மக்களுக்கு எதிராக தூசணம் புலியின் மொழியாகியது. இப்படி தூசணம், மக்களுக்கு எதிரான, வன்முறை கொண்ட மொழியாக்கப்பட்டது இதுவல்ல முதன்முறை. பெண்களை அவர்களின் உறுப்பு சார்ந்து இழிவு செய்யும் தூசண மொழியால், ஆண் புலிகள் இதை தம் துப்பாக்கி முனையில் திட்டி தீர்த்து அடக்கினர். இனத்தினதும்;, பெண்ணினதும் மானம் வெட்கம் அனைத்தையும் இழக்க வைத்தனர். புலிகள் பலிகொடுக்க விரும்பிய இடத்தில், மக்களை கட்டாயப்படுத்தி அமரவைத்தனர். மறுத்தவர்களை பச்சை மட்டைகொண்டு விளாசினர். மக்கள் இராணுவத்தின் செல்லடியில் சாக வேண்டும் என்ற அடிப்படையில், துப்பாக்கி முனையில் படு தூசணங்கள் மூலம் வன்முறையை ஏவினர். இதன் மூலம் பலி மேடையில், பலியாடுகளாக மக்களைத் திணித்தனர். பச்சை மட்டை கொண்டு தாக்கப்பட்டனர்.
ஜூன் 25, 2009 at 12:57 பிப
ஆர்வி, நீங்கள் வைக்கோவிற்கு பிரபாகரன் இறந்தது தெரியும், ஆனால் அந்த துக்கத்தினால் வெளியே பேசுகிறபோது, `மறுபடியும் வருவார்` பாட்டு பாடுகிறர் என்கிறீர்கள். சரி அப்படியே இருக்கட்டும். எனக்கு தெரிந்து , எந்த அரசியல்வாதியும் மற்றொருவர் மரணத்தை பார்த்து, பொய் பேசும் அளவு துக்கம் அடைந்ததில்லை. பெரும்பாலும், பொய்யின் இலக்கு துக்கத்தின் மேல் அணைபோடுவதல்ல – அதுவும் அரசியல்வாதியின் பொய்கள்.மேலும் வைக்கோ புலிகள் சாதக பிரச்சாரத்திற்காக அவர்களிடம் லஞ்சம் வாங்கினார் என்ற செய்திகள் உள்ளன.
ஜூன் 25, 2009 at 5:25 பிப
//உங்களுக்கு ஆர்வம் இருந்தால் இந்த தளத்திற்கு சென்று பாருங்கள்.
ttp://www.warwithoutwitness.com//
ரதி அக்கா அவர்களுக்கு,மிக்க நன்றி.
//நீங்கள் பொல்லாதவனாக மாறியதாக சொல்லியிருக்கிறீர்கள். அது என்னவென்று எனக்கு புரியவில்லை.//
பேரன்பும் ,பெரும் கருணையும் எனக்கு உண்டு.
//எல்லோரும் சேர்ந்து ஒரே குரலில் ஒரே அணியில் ஈழத்தமிழர்களுக்கு நியாயமான வழியில் போராடுவோம்.//
நிச்சயமாக இரும்பு போன்ற உறுதியுடன்.
அக்கா ,ஒன்று சொல்ல கடமை பட்டுளேன்.தமிழ் நாட்டில்,ஈழத் தமிழர்கள் பற்றிய அனைத்து செய்திகளும் த்திட்டம் போட்டு மறைக்கப்பட்டு வருகிறது.சாதரண மக்களை சென்றடைவதே இல்லை.மிகவும் வெட்கமாக இருக்கிறது.
வேதனையுடன்,
சரவணகுமார்.
ஜூன் 28, 2009 at 3:41 பிப
சரவணகுமார்,
//தமிழ் நாட்டில்,ஈழத் தமிழர்கள் பற்றிய அனைத்து செய்திகளும் த்திட்டம் போட்டு மறைக்கப்பட்டு வருகிறது.சாதரண மக்களை சென்றடைவதே இல்லை.மிகவும் வெட்கமாக இருக்கிறது.//
வெட்கப்படவேண்டியது நீங்களல்ல. ஈழத்தமிழர்கள் உரிமைப்பிரச்சனையில் சுயலாபம் தேடும் அரசியல்வாதிகளும் சில ஊடகங்களும் தான்.
உங்கள் பேரன்புக்கும் கருணைக்கும் மிகவும் நன்றி சரவணகுமார்.
ஓரி ஈழத்தமிழ், புலம் பெயர்ந்த தமிழ் என்ற ரீதியில் என் அனுபவங்களை ஓர் தளத்தில் எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். இதன் மூலம் ஓரளவுக்கு என் மக்களின் போரியல் வாழ்வு அதன் சீரழிவுகள் இன்னல்களை சாதாரண மக்களிடம் கொண்டு செல்லலாம் என்று தோன்றுகிறது.
ஜூன் 27, 2009 at 8:28 முப
Rathy, Ellam sari. what is the mistake done by Our Amirthalingam? Why was he assassinated by LTTE. What made Prabhaakaran order his execution? Is it because of his growing prominence among Eala tamilians or I s it because he is a great contender for Tamil lesdership? My grandfather was a close friend of Amirthalingam and not a day had passed without his remembering Amirthalingam after his assassination. He had cried on many occassions about the unjust execution of our Tamil leader. How do you justify murder of Amirthalingam by Prabhaakaran?
ஜூன் 27, 2009 at 8:36 முப
You had asked me to use my conscience re: Prabhaakaran. Pl answer this using your conscience.Is this not AUTO GENOCIDE? OUR OWN MAN GOES ON RAMPAGE IN MASSACRING AND KILLING SO MANY TAMIL LEADERS MERCILESSLY AND YOU TRY TO BRAND HIM AS A BRAVE HEROand try to bully others as traitors who refuse to toe his lines.what a shame in killing our own people and boast on their corpses as Hero!
ஜூன் 28, 2009 at 3:27 பிப
மம்முட்டி,
//……Our Amirthalingam?//
நீங்களும் உங்கள் தாத்தாவும் அமிர்தலிங்கத்தின் இழப்பால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். அதற்காக வருந்துகிறேன். உங்கள் வருத்தம் தாத்தாவின் நண்பர் என்பதால் மட்டுமே. அது நட்பினால் விளைந்தது மட்டுமே என்று தான் எண்ணத்தோன்றுகிறது.
அமிர்தலிங்கம் போன்ற அரசியல் குழறுபடிகள் இருந்திருந்தால் எங்கள் ஈழத்தமிழர்களின் உரிமைகள் பற்றிய உண்மைகள் இலங்கையைவிட்டு வெளியே தெரிந்து இருக்காது. இவர் போன்ற அரசியல் சுயநலமிகள் எங்களை சிங்கள பேரினவாதிகளுக்கு விலை பேசி விற்றிருப்பார்கள்.
அமிர்தலிங்கம் பற்றிய உங்கள் கண்ணோட்டம் வேறு. என் போன்ற ஈழத்தமிழர்களின் கண்ணோட்டம் வேறு. இதைப்பற்றி இனிமேல் நான் விவாதிக்க தயாராக இல்லை.
//YOU TRY TO BRAND HIM AS A BRAVE HERO//
ஐயா, உங்களுக்கு பிரபாகரன் என்ற ஈழவிடுதலைப்போராளியை பிடிக்காது. அது உங்கள் தனிப்பட்ட கருத்து. ஆனால், பெரும்பானமையான ஈழத்தமிழர்களுக்கு எங்கள் தேசியதலைவர் பிரபாகரன் எங்களின் சொந்தம், எங்களின் உயிர், எங்களின் சொத்து. அவர்தான் விடுதலையை விரும்பும் ஈழத்தமிழர்களுக்கு எல்லாமாக இருந்தார். அவரை எப்படி போற்ற வேண்டும் என்பது எங்களின் இஸ்டம். அதற்கு நாங்கள் யாருடைய அனுமதியையும் கேட்க வேண்டியதில்லை. உங்களுக்கு “உங்களுடைய” அமிர்தலிங்கத்திடம் உள்ள அன்பைவிட பலநூறு மடங்கு அன்பை ஈழத்தமிழர்கள் பிரபாகரன் மீது வைத்திருக்கிறார்கள். ஆம், பிரபாகரன் ஓர் உன்னதமான, இணையில்லா, ஈடுசெய்யமுடியாத ஒரு விடுதலைப்போராளி.
இறுதியாக, ராஜீவ்காந்தி அவர்களின் ராணுவம் எங்களுக்கு இழைத்த கொடுமைகளை நினைத்துப்பார்த்தால், அவருடைய மரணம் ஈழத்தமிழர்களை பாதிப்பதில்லை. வலிகளை சுமக்கும் எங்களுக்கு தான் அதன் ரணம் தெரியும். நீங்கள் ஒரு ராஜீவ்காந்தியை இழந்தால், நாங்கள் ஏழாயிரம் உறவுகளை இழந்திருக்கிறோம். இன்னும் எத்தனையோ சொல்ல முடியாத துயரங்களை இந்திய ராணுவத்தால் (அமைதிப்படையல்ல) அடைந்திருக்கிறோம். இதைத்தான் உங்கள் மனச்சாட்சியை தொட்டு யோசிக்கச்சொல்கிறேன். பிரபாகரன் விடயத்தில் அல்ல. பிரபாகரன் விடயத்தை யோசிக்க நாங்கள் இருக்கிறோம்.
அன்று மட்டுமா? இன்றும் தான் இந்தியா ஈழத்தமிழனின் இனப்படுகொலைக்கு துணைபோனது முதல் ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசுக்கு சாதகமாக வாக்களித்தது வரை எங்களின் குரல்வளையை நெரிக்கிறது. 1948 முதல் உரிமைகள் முதற்கொண்டு உயிர், மானம், உறவுகள், வாழ்வாதாரங்கள், வாழ்விடங்கள், கல்வி என்று அத்தனையும் பறிக்கப்பட்டு அடிமைகளாக்கப்பட்டு நாதியற்றுக்கிடக்கும் ஈழத்தமிழனின் விடுதலையை இந்தியா சிங்களப்பேரினவாதிகளுடன் சேர்ந்து குழிதோண்டிப் புதைத்ததே, இதை நாங்கள் யாரிடம் முறையிடுவது? எங்களின் கருத்துகள் எங்களின் வலிகள். நோகாமல் கருத்து மட்டும் பதிபவர்களுக்கு அது புரியாது.
ஜூன் 28, 2009 at 4:09 பிப
Rathy u r escaping my conscience oriented question. If u say Amirthalingam’s daeth can be ignored by your saying “sorry” to me Ill say say Prabhaakaran’s ignominous death should be ignores by my saying “SORRY” TO you! Do you accept this?
Why do you justify the unjustified death OF my Tamil leader by an AUTO GENOCIDAL SCOUNDREL AND MURDERER? dONT U THINK U ARE A HYPOCRITE? NO YOU HAVE NO CONSCIENCE. My leader Amirthalingam is greater than Your BUTCHER SCOUNDREL PRABHAAKARAN.yow, nee enna Prabhaakarani thookki pidithaalum antha aall engal TAMILARKALAI KONDRU KUVITHATHU AYOKKIYATHANTHIN ELLAI THAANDNA VIDAYAM. I thank the person who had avenged the deaths of so many Tamil leaders like siri Sabaha., Uma maheswaran and Rajiv Gandhi! Ennal mudiyathathai seytha ”Antha naalu perkku nanri”
ஜூன் 28, 2009 at 4:11 பிப
hello engal valigalaiyum neengal purinthu kollavendum
ஜூன் 29, 2009 at 10:02 முப
உண்மை எப்போதுமே கசப்பாகத்தானிருக்கும் என்பார்கள்..அமிர்தலிங்கம் மட்டும் தானா? மற்றவர்களை ஏன் மறந்து விட்டீர்கள் – தர்மலிங்கம் — ஆலாலசுந்தரம் —
1990 சிறீ சபாரத்தினம், தம்பிமுத்து, கிருபாகரன், யோகசங்கரி, கே.பத்மனாபா, கே.கனகரத்தினம், 1997 கரவை கந்தசாமி, தங்கத்துரை– 1998 சரோஜினி யோகேஸ்வரன், ஷண்முகனாதன் – 1999 அற்புதராஜா
நாகலிங்கம், பொன்னுத்துரை சிவபாலன், நீலன்
திருச்செல்வன் — 2000 பேரின்ப நாயகம் —
2005 — பரராஜசிங்கம், லக்ஷ்மண் கதிர்காமர்
2006 கே.லோகனாதன், ஆர்.நடராஜா — இவர்களும் நான் குறிப்பிடாத நூற்றுக்கணக்கான மற்றவர்களும் தமிழர்கள் இல்லையா, அவர்களும் துரோகிகள் தானா? தன்னை நிலைப்படுத்திக் கொள்ள, உங்கள்
தலைவர் செய்த கொலைகள் இல்லையா இவைகள்?
ஆமாம், இந்த விஷயத்தில் “பிராமணன்” என்ற
வார்த்தை ஏன் எழுகிறது? (மாயோன்)
ஜூன் 29, 2009 at 11:17 பிப
RV,
It’s very strange, that you call a racist like Rathi as your friend. Don’t you know Rathi is a RACIST? How can you publish the comments from a racist? THE RACIST COMMENTS CAN’T BE ACCEPTED AS HUMAN RIGHTS.
ஜூலை 1, 2009 at 1:12 முப
மம்முட்டி, காலத்தின் பதில், பரம், விஜயராகவன், ரதி, பொல்லாதவன், சேதுராமன்,
பிரபாகரன் – என் மதிப்பீடு பதிவுக்கு உங்கள் எண்ணங்களை பதிவு செய்ததற்கு நன்றி!
என் கருத்தில் இலங்கை விஷயத்தில் உணர்வுகள் அதிகமாக பிரதிபலிக்கின்றன, லாஜிக் இல்லை. இது புரிந்து கொள்ளக் கூடிய விஷயம்தான், ஆனால் உணர்வுகள் வாதங்கள் நடப்பதை பாதித்து விடுகின்றன. இந்த பதிவு காரசாரமான விவாதத்தை வெளியே கொண்டு வந்திருப்பது நல்ல விஷயம் என்று நினைக்கிறேன். இசைவு ஏற்படுவது அப்புறம், முதலில் வாயை திறந்து பேசினால்தான் என்ன வேறுபாடு என்றாவது புரிந்து கொள்ள முடியும்.
மம்முட்டி, அமிர்தலிங்கம் என்ன, மற்றும் பல சக போராளிகளை புலிகள் கொன்றார்கள். ஆனால் இப்போது கடந்த கால கசப்புகளை – ராஜீவாகட்டும், அமிர்தலிங்கம் ஆகட்டும் – கடந்து செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.
காலத்தின் பதில், நான் கசப்புகளை மறக்க நினைக்கிறேன். ஆனால் உங்கள் வாதம் சரி இல்லை என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. நேதாஜி காந்தியை கொன்றிருந்தால் அவரை யாரும் கொண்டாடப் போவதில்லை. எட்டப்பன் கட்டபொம்மனை காட்டி கொடுத்ததால்தான் இன்றும் துரோகிகளை எட்டப்பன் என்று அழைக்கிறோம். பிரபாகரன் போராடியது அனேகமாக இந்தியர்கள் யாருக்கும் பிரச்சினை இல்லை. அப்புறம் இந்த சீக்கியர்கள் வாதத்தை கேட்டு அலுத்துவிட்டது. இந்த பதிவை பாருங்கள். https://koottanchoru.wordpress.com/2008/10/27/புரியாத-புதிர்/
பரம், புலிகள் = ஈழத் தமிழர்கள் என்ற மாயையை உருவாக்கியதில் தமிழ் ஊடகங்களுக்கு பெரிய பங்கு இருக்கிறது. அது புலிகளின் சதி மட்டும்தான் என்று சொல்வதற்கில்லை. பத்திரிகை விற்க sensationalism என்று தோன்றுகிறது.
ரதி, நீங்கள் இந்தியத் தமிழர் vs ஈழத் தமிழர் என்ற அணுகுமுறையை எல்லா வாதங்களுக்கும் பயன்படுத்துகிறீர்கள். மாற்று கருத்துகளுக்கு காரணம் indianness மட்டும் இல்லை.
ஜூலை 3, 2009 at 2:05 பிப
//ரதி, நீங்கள் இந்தியத் தமிழர் vs ஈழத் தமிழர் என்ற அணுகுமுறையை எல்லா வாதங்களுக்கும் பயன்படுத்துகிறீர்கள். மாற்று கருத்துகளுக்கு காரணம் indianness மட்டும் இல்லை//
I feel sorry for you RV. Still you are naive about Rathi. Only a RACIST argue like //இந்தியத் தமிழர் vs ஈழத் தமிழர்.//
ஜூலை 4, 2009 at 12:34 பிப
ரகுநாத்,
எது ரேசிசம் என்பது பற்றி நமக்குள் இசைவு இல்லை என்று தெரிகிறது. மேலே போவோமே?
ஜூலை 1, 2009 at 2:52 முப
Nanri Rv avargalae, naan eppothum Eala tamilargalukku aadharavaaga than irukkiren. aanaal Prabhaakaranai thevaiyillaamal thooki pidithukkondu antha aal ponaal ulagame azhindhu vidumenra reethiyil silar pakarvathai ennal jeeranikka mudiyavillai.In fact, Prabhaakaran is the main reason for the failure of Tamil Ealam movement.Antha aalai thavira veru yaaraka irunthaalum intha viduthalai iyakkathai siarppaka nadathi irupparkal.Indhiay aadharavai intha iyakkam izhandhadhu periya muttaal thanam. Atharku Prabhaakaran thaan kaaranam. Ini varum naatkalil naam anaivarum buddhisali thnamaka nadanthu kondu nam makkal nalamaka vaazha muyarchi edukka vendum. Naan atharku eppothum thayaar.
ஜூலை 1, 2009 at 5:15 பிப
மம்முட்டி,
பிராபகரனை பற்றி மாற்று கருத்துகள் இருப்பது ஆச்சரியம இல்லையே? அதிலும் இழப்பை சந்தித்தவர்கள் அவரை கொண்டாடுவதில் என்ன வியப்பு? பிரபாகரனை நானும் எதிர்ப்பவன்தான். ஆனால் ரதி போன்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி செய்வோமே!
எப்படியும் அவர் முடிந்து போன ஒரு சகாப்தம். நீங்கள் சொன்னது போல இது அடுத்தது என்ன என்று யோசிக்க வேண்டிய நேரம்.
ஜூலை 1, 2009 at 2:56 முப
Im cofident Rathy will not be able answer my conscience oriented question as s/he had lost the balance required for a neutral follower.
ஜூலை 6, 2009 at 5:40 முப
மம்முட்டி,
//s this not AUTO GENOCIDE? OUR OWN MAN GOES ON RAMPAGE IN MASSACRING AND KILLING SO MANY TAMIL LEADERS MERCILESSLY AND YOU TRY TO BRAND HIM AS A BRAVE HERO//
/Im cofident Rathy will not be able answer my conscience oriented question //
உங்களுக்கு தலைவர்களாக தெரிபவர்கள் எங்களுக்கு தேசத்துரோகிகள். அவ்வளவே. இதில் AUTO GENOCIDE கிடையாது. எங்களுக்கு யார் ஹீரோ என்பது பற்றி மற்றவர்கள் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கு பிரபாகரனைத்தான் பிடிக்கிறது. அதனால் நாங்கள் அவரைத்தான் எல்லாமாக கொண்டாடுகிறோம். இதில் உங்களுக்கு என்ன வலி என்றுதான் எனக்கு புரியவில்லை.
உங்களுக்கு யாரை பிடிக்கிறதோ அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுங்கள். அதில் எங்களுக்கு ஒன்றும் வருத்தம் இல்லை. அதேபோல், நாங்கள் யாரை கொண்டாட வேண்டும் என்று எங்களுக்கு பாடம் எடுக்க நீஙகள் யார்?
உங்கள் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றுதான் பேசாமல் இருந்தேன். தவிரவும் உங்களைப்போல் ஒரு சிலர் தான் ஈழத்தின் இனத்துரோகிகளுக்காக அழுகிறீர்கள். உங்கள் அளவுக்கு ஈழத்தமிழர்கள் யாரும் அழுவதில்லை.
இதற்கு மேல் உங்களோடு பேசுவதில் எனக்கு உடன்பாடும் இல்லை.
ஜூலை 6, 2009 at 5:05 பிப
ரதி,
பிரபாகரனை பற்றி நீங்கள் எழுதியதை படித்தேன். ஜான் டான் No man is an island என்று சொன்னார். அப்படி இருக்கும்போது ஒரு இயக்கம் தன்னை கொண்டாடுபவர்களை மட்டுமே கொண்டு செயல்படமுடியாது. மேலும் இது எனக்கு பிடிக்கிறது, நான் கொண்டாடுகிறேன் என்று சொல்லக் கூடிய மாதிரி தனி மனித ரசனை சார்ந்தது இல்லை. இது ஒரு சினிமாவோ, புத்தகமோ இல்லை.
பிரபாகரன் உங்களுக்கு எவ்வளவு பிடித்திருந்தாலும், அவர் தெய்வம் இல்லை, மனிதர்தான், ஒரு தனி மனிதனுக்கு உள்ள எல்லா ஆசாபாசங்களும், பலன்களும், பலவீனங்களும் அவருக்கும் இருந்தன. அவர் தவறே செய்யவில்லை என்று கண்மூடித்தனமாக மறுப்பது மேலே செல்வதை கடினமாக்கும்.
சிங்களர்களால் பாதிப்படைந்த நீங்கள் பிரபாகரனை தெய்வமாக கொண்டாடுவது புரிந்து கொள்ளக் கூடியது என்றால், பிரபாகரனால் பாதிப்படைந்தவர்கள் அவரை அரக்கனாக நினைப்பதும் புரிந்து கொள்ளக் கூடியதுதான். அவர்கள் உங்களிடம் வேண்டுவதெல்லாம் ஒரு acknowledgement-தான், புலிகள் செய்த தவறால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்வதுதான். அது அவர்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்கும். பிரபாகரனின் பக்கம் இருக்கும் நியாயங்களை சொன்னால் உங்களுக்கு ஒரு ஆறுதலாக இருப்பதில்லையா?
ஜூலை 7, 2009 at 2:27 முப
RV,
உண்மையில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. எனக்கு பிரபாகரனை பிடிக்கிறது. நான் அவரை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடுவேன். இதில் மற்றவர்களுக்கு என்ன வருத்தம். அவர் எனக்கு பிடித்த தலைவர். இதைத்தானே சொன்னேன்.
//அவர்கள் உங்களிடம் வேண்டுவதெல்லாம் ஒரு acknowledgement-தான், புலிகள் செய்த தவறால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்வதுதான். //
நான் யார் இதையெல்லாம் ஒப்புக்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும்? இதென்ன நியாயம்? நான் விடுதலைப்புலி இல்லையே.
//lastly branding everyone as Parpanan who opposes Prabhaakaran..note I am not a parpanan and I belong to the same clan of Prabhaakaran- i.e Pillai//
மம்முட்டி வேண்டுமென்றே என்னை வம்புக்கு இழுக்கிறார். நான் எப்போது ஜாதி பற்றியெல்லாம் பேசினேன்? தவிரவும் பிரபாகரனின் ஜாதி பற்றியெல்லாம் பேசுகிறார். மம்முட்டிக்கு பிரபாகரனின் குலம் கோத்திரம் பற்றி நிறைய தெரியுமோ? :). மம்முட்டி வல்வெட்டித்துறையை சேர்ந்தவரா?
ஜூலை 6, 2009 at 11:20 பிப
Hello this is the quality of hero-worshippers of Prabhaakaran.A typical mulish obsinancy, arrogance, non-repentence on part of their leader’s misdemenour, and ditching other Tamil leaders as Traitors and when unable to answer the pertinenet grilling question, escaping by saying “I wont talk with u in future” and lastly branding everyone as Parpanan who opposes Prabhaakaran.These people must realise that Prabhaakaran is uniformly hated outside Tamilnadu and throughout the world .FOR THEM ALL OPPONENTS TO PRABHAAKARN INCLUDING GEORGE BUSH AND GORDON ARE ALL PARPANANS! Pl.note I am not a parpanan and I belong to the same clan of Prabhaakaran- i.e Pillai
ஜூலை 8, 2009 at 5:30 முப
மம்முட்டி,
இந்த பதிவுக்கும் பார்ப்பனருக்கும் என்ன சம்பந்தம் என்று ரதி போலவே எனக்கும் புரியவில்லை. நீங்கள் நான் பிள்ளை, தேவர், தலித், அய்யர், முஸ்லிம், ஆண், பெண் என்று எந்த வித விளக்குமும் அளிக்க தேவை இல்லை.
ரதி, எல்லாரும் விழுந்து விழுந்து சிங்களர்களின் தவறு, புலிகளின் தவறு, தமிழர்களின் தவறு என்று எழுதுகிறோம். அப்படி இருக்கும்போது நான் புலி இல்லை, நான் எப்படி புலிகள் தவறு செய்தார்கள் என்று எழுத முடியும் என்று கேட்டால் என்ன சொல்வது? உங்களை புலிகளின் சார்பில் மன்னிப்பு கேட்க சொல்லவில்லை!
பிரபாகரனை நீங்கள் கொண்டாடுவது உங்கள் உரிமை என்று சொன்னால், பிரபாகரன் கொண்டாடப்பட வேண்டியவர் இல்லை என்று சொல்வது மம்முட்டியின் உரிமை. அதற்காக ஏன் நீங்கள் மம்முட்டியை பிடித்து காய்ச்சுகிறீர்கள்? 🙂
ஜூலை 8, 2009 at 8:58 முப
RV my caste rejoinder was as a prophylactic dose against any possible comment that can emanate from people like maayon(as I went through your old blogs ) and definitely on caste line. And it is not directed to Rathy.
My observation was only against escapism shown in her answer.
ஜூலை 13, 2009 at 7:13 முப
சகோதரி ரதிக்கு நாம் துணை நிற்க வேண்டும்….தூரத்தில் நின்று தூற்றக்கூடாது…. சகோதரி ரதிக்கு என் ஆதரவு என்றென்றும்
ஜூலை 13, 2009 at 4:50 பிப
ஒருவன்,
இந்த தளத்தில் ரதிக்கு ஓர் ஆதரவுக்குரலா? ஆச்சரியமாகவும் அதே நேரம் சந்தோசமாகவும் உள்ளது.
நன்றி சகோதரரே.
ஜூலை 19, 2009 at 12:06 முப
Hello, one point I wish to make it published here. Im the happiest person now as the greatest KILLER, GENOCIDER and RUTHLESS DICTATOR PRABHAAKARAN had been terminated for ever by unknown Sinhalese forces an act that cant be done by us avenging the death my great leader Amirthalingam and his other Tamil leaders.The irony is when a mosquitoe from LTTE died here people were writing hymns of condolences in Tamilnadu.BUT WHEN PRABHAKARAN DIES NO SYMPATHETIC MEETINGS OR ATLEAST AN IRANGAR PAA!WHAT A SHAME!!!
ஜூலை 20, 2009 at 5:28 முப
மம்முட்டி,
மீண்டும் சொல்கிறேன் – இது பழைய கசப்புகளை மறக்க வேண்டிய நேரம் என்பது என் உறுதியான கருத்து.
ஜூலை 21, 2009 at 9:12 முப
கிட்டத்தட்ட நான் முழுமையாக ஒப்புக் கொள்ளும் வகையில் உள்ள பிரபாகரன் குறித்த முதல் மதிப்பீடு இதுவாகத்தான் இருக்கும்.
தான் மட்டுமே ஈழத்தின் கடைசிப் பிரதிநிதி என்ற வகையில் பிரபாகரன் நடந்துகொண்டதற்கு பாலசிங்கம் போன்றவர்களின் ஆலோசனைகளும் ஒரு காரணமாக இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.
ஜூலை 21, 2009 at 8:11 பிப
வித்தகன்,
பிராபகரனை பற்றிய மறுமொழிக்கு நன்றி! எனக்கு பாலசிங்கத்தை பற்றி அதிகம் தெரியவில்லை, இருக்கலாம்.
ஜூலை 22, 2009 at 4:17 முப
DEAR MR.RV,Anton Balasingham was Prabhaakaran”s conscience keeper and political advisor and LTTE’s International spokes person. He was not a party for assassination of Rajiv Gandhi and other Tamil leaders. But when he realised the damage caused to the Ealam by Assassination of Rajiv. he pleaded (why, he even begged) the I ndian Govt to forget the past Forgive and help Ealam.He was the only leader who admitted Prabhakaran”s arrogance AND stupidity in this assassination executed by That Scoundrel Pottu Amman.(I have authentic news cutting abt Balasingam’s plea to Indian Govt pleding for help which I ve collected in my archive).But Prabhaakaran was spoiled by sycophants around him who portrayed him as an immortal hero of Tamils who will establish Tamil Ealam and TAMIL EMPIRE in world!
ஓகஸ்ட் 2, 2009 at 6:01 முப
இன்னும் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக சொல்லப்படும் நிலையில் அவரைப்பற்றிய கட்டுரைகள் வேதனை தருகிறது. மாபெரும் போராளி அவர்.
ஓகஸ்ட் 3, 2009 at 8:16 முப
மம்முட்டி, ஆண்டன் பாலசிங்கம் பற்றி விளக்கியதற்கு நன்றி!
ஷிசுசிதம்பரம், பிரபாகரன் இறந்தால்தான் அவரை மதிப்பிட வேண்டுமா என்ன? ஒன்றும் புரியவில்லையே?
ஓகஸ்ட் 3, 2009 at 4:16 பிப
T6hank u Mr.RV, Prabhaakaran is a scoundrel, which the entire world knows as this demon had destroyed so many Tamil leaders than than the idiotic Sinhalese soldiers. So I pronounce now that Prabhaakaran is a greater evil to Tamil community in the world than the stupid Sinhalese Bastards! But I thank these sinhalese kadayans FOR EXTERMINATING THESE LTTE Auto genocidal Killers which a follower of TRUE TAMIL LEADERS like Amirthalingam I could not accomplish! Jai Amirthalingam! Jai Rajiv Gandi sans Sonia!
ஓகஸ்ட் 26, 2009 at 7:54 பிப
Why some people are blaming Thalaivar Prabaa. He gave all his happiness for Tamizh Eezham and he is alive. If he is dead, why the Srilankan Govt. has not given the DNA report and PM report. Answer me guys.
செப்ரெம்பர் 2, 2009 at 4:30 பிப
hello vijay, your thalaivar Prabhakaran is nmot a selflessman. He is a scoundrel and idiot! u may not agree with me but the fact is he souldnt have ordered execution of Rajiv Gandhi! So we Tamilians have lost not only Battles , but also the war against Srilanka!
நவம்பர் 29, 2009 at 2:09 முப
பிரபாகரன் உயிரோடு இருப்பதாக சொல்லப்படும் s(or) no pl
நவம்பர் 29, 2009 at 6:44 முப
I’m certain that Prabhaakaran is killed in the battle and there is no second thought abt that.It is only the manner in which Prabhaakaran was terminated is doubtful but the killing is 101% true
நவம்பர் 29, 2009 at 6:09 பிப
திருப்பதி/மம்மூட்டி, பிரபாகரன் இறந்துவிட்டார் என்றுதான் தோன்றுகிறது
நவம்பர் 30, 2009 at 5:21 பிப
சுட்டி: https://koottanchoru.wordpress.com/2009/06/23/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%af%81/ இது புரியவில்லை ?
திசெம்பர் 1, 2009 at 6:15 முப
The people who claim Honourable Prabakharan is dead have not answered my questions so far. Why Srilankan Govt. has not submitted the DEATH CERTIFICATE to Indian Govt. And why did not the Indian Govt. close the Rajiv Gandhi assasination case. The Srilankan Govt. claims they have killed Pottu Amman also but they could not find out his dead body. It seems they had mask only for Thalaivars face. They forgot to create one for Pottu Amman. The third biggest army in the world, the Indian Army could not kill Thalaivar and Pottu Amman even after deploying 45000 troops in of Srilanka. Now the Srilankan Govt. says they have killed Thalivar. First they showed some one’s body and with the mask of Thalivar. And after media found and writeen on this, they showed one another body and after that they showed a body with a new, some what perfect mask. And above all, the comedy is that they claimed they finished the DNA test with in 2 hours. This drama is done by the Rajapaksa group, only to regain the power(to become president again) because Rajapaksa defeated Ranil only by a margin of 1.5 lakhs votes. And he is the one who became the president of Srilanka with this much lowest difference in votes. Rajapaksa wanted to gain the mejority Singales votes. The selected tool was to defeat LTTE. Thalaivar will come after he secures a favour international political environment.
RV criticizes Thalaivar. This is not cricket match like a man whos knows playing cricket can comment. This is war. Did RV talked with Thalaivar anytime. What does he know on Thalaivar which is authentic. Or else on what basis what he says is authentic. And by sitting in Tamil Nadu, without seeing even bullet of a gun, he says Thalaivar is dead. RV is a member of Indian RAW or is he an official of Indian Army? Prabakharn iranthu vittar yentru “THOUNTRUKIRATHAAM”.
திசெம்பர் 1, 2009 at 12:53 பிப
ethirkaala tamileelanthin nilai?
திசெம்பர் 8, 2009 at 10:23 முப
OK Mr Vijay, Pl. ensure the authenticity of the Thalaivar’s survival claim you have made now from any quarter, then we Raw Indians are ready to accept your claim in a Rawest manner! Till then why should you expect others to worship an illusionary ghost?
Mammutty