இந்தத் தளத்தின் பதிவுகளில் இது மிகப் பிரபலமானது. இதை மேம்படுத்தி ஒரு சீரிசாகவே சிலிகன் ஷெல்ஃப் தளத்தில் மீள்பதித்திருக்கிறேன்.
சாண்டில்யன் பற்றிய பதிவில் சாண்டில்யன் பல தளங்களில் – கரிகால் சோழன் காலம், பிற்கால சோழர்கள், பாண்டியர்கள், ராஜஸ்தானம், பல்லவர்கள், கதம்பர்கள், மராத்தியர்கள், குப்தர்கள் – கதை எழுதியவர் என்று ஒரு நண்பர் சொல்லி இருந்தார். உண்மைதான். அது சாண்டில்யனின் ப்ளஸ் பாயின்ட்தான். அதனால்தானோ என்னவோ தமிழின் சரித்திர நாவல் என்றாலே சான்டில்யன்தான் என்று ஆகிவிட்டது. ஆனால் அவரது கதைகள் இரண்டாம் தரமானவைதான்.
தமிழில் முதல் தரமான சரித்திர நாவல் என்றால் பொன்னியின் செல்வன்தான். கதை பின்னல் என்றால் இந்த கதைதான். எத்தனை முடிச்சுகள், எத்தனை பலமான பாத்திரங்கள்? சிறு ரோல்களில் வரும் பார்த்திபேந்திரன், கந்த மாறன், சின்ன பழுவேட்டரையர், அநிருத்த பிரம்மராயர், ரவிதாசன், ஏன் குடந்தை ஜோதிடர் கூட மிக நுண்மையாக செதுக்கபட்டிருப்பார்கள். ஆழ்வார்க்கடியான், பூங்குழலி, சேந்தன் அமுதன், வானதி, மந்தாகினி, ஆதித்த கரிகாலன் போன்றவர்களை பற்றி சொல்லவே வேண்டாம். இதை விட சிறந்த சரித்திர நாவலை நான் படித்ததில்லை. விக்டர் ஹ்யூகோவின் லே மிசரபில்ஸ் இதற்கு சமமானது என்று சொல்லலாம். ஆனால் ஹ்யூகோ எழுதும்போது இது ஒரு சம காலத்திய நாவல் என்றுதான் சொல்ல வேண்டும்.
கல்கியின் சிவகாமியின் சபதம் பொ. செல்வனுக்கு அடுத்தபடி சொல்ல வேண்டிய நாவல். முதன் முதலாக படித்தபோது ஒரு வாரம் நாக நந்தி கனவில் வந்தார். தூக்கத்தில் திடீர் திடீரென்று எழுந்து உட்கார்ந்து கொள்வேன். ஆயனர், மகேந்திர வர்மர், புலிகேசி, பரஞ்சோதி, கண்ணபிரான், நரசிம்ம வர்மர் எல்லாம் மிக அற்புதமான பாத்திரங்கள். சிவகாமி அருமையான படைப்பு.
கல்கியின் பார்த்திபன் கனவு படிக்கக் கூடியதுதான். சாண்டில்யனின் பெஸ்ட் நாவல்களுக்கு இணையான தரம். கொஞ்சம் அமெச்சூர்தனம் தெரியும். கல்கியின் முதல் சரித்திர நாவல் இதுதான். இதை ப்ராக்டிசுக்காக அவர் எழுதி இருக்க வேண்டும்.
இந்த மூன்று நாவல்களையும் வைத்து சொல்கிறேன், கல்கிதான் தமிழின் மிக சிறந்த சரித்திர நாவலாசிரியர்.
சாண்டில்யனை இதற்கு அடுத்தபடி சொல்லலாம். அவரைப் பற்றிய பதிவுகள் இங்கே மற்றும் இங்கே.
ஞாபகம் வரும் வேறு சிலர்:
அகிலன் – கயல்விழி. மூன்றாம் தர நாவல். பேப்பருக்கு பிடித்த கேடு. இந்த நாவல் பிடிக்காததால், நான் வேங்கையின் மைந்தன், வெற்றி திருநகர் போன்றவற்றையும் படிக்கவில்லை.
நா. பார்த்தசாரதி: ராணி மங்கம்மாள், கபாடபுரம் இரண்டு படித்திருக்கிறேன். நா.பா.வின் நாவல்களில் எப்போதும் நிறைய உபதேசம் இருக்கும. ராணி மங்கம்மாளும் அப்படித்தான். நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம் இல்லை, ஆனால் ரொம்ப மோசமும் இல்லை. கபாடபுரம் பெரிய ப்ளேடு.
சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம்: படிக்கலாம், ஆனால் சூப்பர் டூப்பர் என்றெல்லாம் சொல்லமாட்டேன்.
கலைஞர்: பொன்னர் சங்கர் என்ற ஒரு புத்தகம் படித்திருக்கிறேன். இவரெல்லாம் எழுதாமலே இருந்திருக்கலாம்.
கோவி. மணிசேகரன்: குற்றாலக் குறிஞ்சி என்று ஒரு புத்தகம் படித்திருக்கிறேன். ஒவ்வொரு சாப்டர் ஆரம்பத்திலும் ஏதாவது ஒரு ராகம் பற்றி இருக்கும். அது மட்டும்தான் சுவாரசியமாக இருக்கும்.
கௌஸிகன்: பாமினிப் பாவை என்று ஒரு நாவல் சிறு வயதில் படித்திருக்கிறேன். நாஸ்டால்ஜியா, அதனால் அதையும் இங்கே சேர்த்திருக்கிறேன்.
படிக்க விரும்புபவை: யாரோ அனுஷா என்பவர் காவிரி மைந்தன் என்று பொ. செல்வனுக்கு ஒரு sequel எழுதி இருக்கிறாராம். பாலகுமாரனின் உடையார் என்ற புத்தகத்தை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இவை இரண்டையும் படிக்க விரும்புகிறேன்.
இவர்களைத் தவிர விக்ரமன், அரு. ராமநாதன், ஜெகசிற்பியன், கௌதம நீலாம்பரன், மு. மேத்தா, தாமரை மணாளன், ஸ்ரீவேணுகோபாலன் ஆகியோர் எழுதியதையும் அங்கும் இங்குமாக படித்திருக்கிறேன். எதுவும் என்னை இம்ப்ரஸ் செய்யவில்லை. கண்ணதாசனின் விருது பெற்ற சேரமான் காதலி என்ற புத்தகத்தில் என்னால் ஐம்பது பக்கத்தை தாண்டமுடியவில்லை.
தமிழில் சரித்திர நாவல் என்றால் ஆ! அவள் அங்கங்கள் தங்கமாக ஜொலிக்கிறதே! என்ற நடையில் எழுத வேண்டும் என்றும் நிறைய பேர் நினைக்கிறார்கள். ரொம்ப நாட்களுக்கு முன்னால் இவர்கள் நடையை கிண்டல் செய்து எழுதிய கோப்பெருந்தேவி எங்கே என்ற சிறுகதை ஞாபகம் வருகிறது. அந்த சிறுகதை ஒரு தொடர்கதையின் 35-ஆவது சாப்டர் போல எழுதப்பட்டிருக்கும். ஒரு நாலு பக்கத்துக்கு குதிரை மேல் போய்க்கொண்டே கோப்பெருந்தேவி எங்கே என்று யோசிப்பார் ஹீரோ. சிரித்து சிரித்து எனக்கு வயிறு புண்ணாகிவிட்டது. இந்த கதையை யாராவது படித்திருக்கிறீர்களா?
உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்! இந்த தளத்தில் நான் எழுதுவதே அடுத்தவர்கள் சொல்வதை கேட்கலாம் என்றுதான்…
ஜூன் 8, 2009 at 5:33 பிப
என்னை பொறுத்த வரை, பாலகுமாரனின் உடையார் தான் சிறந்த நாவலாக தோன்றுகிறது. காலத்தால் அழியாமல் இருக்க அனைத்து தகுதிகளையும் கொண்டு உள்ளது.
திசெம்பர் 31, 2012 at 12:15 பிப
In which website you have read udayar novel….
மார்ச் 21, 2013 at 4:23 பிப
ponniyin selvan navalthan pest
ஒக்ரோபர் 11, 2013 at 9:51 முப
பொன்னியின் செல்வன் தான் முதல் தரமான தமிழ் புத்தகம் இதற்கு மறுப்பு ஏதும் இல்லை
நவம்பர் 6, 2013 at 6:30 முப
ponniyin selvan is the best historical novel in tamil, udyaar is not at all a competitor for ponniyin selvan
ஒக்ரோபர் 24, 2020 at 10:37 முப
True. Nothing is comparable to Ponniyin Selvan. It is the best.
நவம்பர் 15, 2014 at 2:01 பிப
kandippaga balakumaran avarkalin udayar mika siranthathu, rajarajacholarin balavithamana kunathai udayar navalthan katti ullathu
ஜூன் 9, 2009 at 1:28 முப
அரு.ராமநாதனின் வீரபாண்டியன் மனைவி நீங்கள் அவசியம் படிக்கவேண்டிய சுவாரஸ்யமான நாவல்.
ஞாநி
ஏப்ரல் 6, 2011 at 12:25 பிப
entha pathipagam.
ஏப்ரல் 8, 2011 at 5:45 பிப
வீரபாண்டியன் மனைவி(3 பாகங்கள்)
http://www.udumalai.com/?prd=veerapandiyan%20manaivi%20(3%20paagangal)&page=products&id=5133
நவம்பர் 25, 2011 at 1:55 பிப
puthagam vaangivitten
ஜூன் 9, 2009 at 4:19 முப
ஞானி,
நீங்கள் இந்த பதிவை பார்த்தது ஒரு மகிழ்ச்சி என்றால் தேட இன்னொரு புத்தகம் கிடைத்துவிட்டது என்பது இன்னும் பெரிய மகிழ்ச்சி! இந்த நாவலை என் போன்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வையுங்களேன்!
நவம்பர் 13, 2011 at 12:46 பிப
vetri thirunagar (akilan) is very good novel – hero name visuvanatha nayakar, he was “pan vala” (vetrilai madithu kudupan) for the great krishna deva raja. pls if u will get chance read it.
vengain mainthan(akilan) – in ponniyen selvan , after aathiya karikala death vandiya devan met kariya thirumal in prison, that time he told some details for pandian property (magudam & sward), that are found in this book. the great vandhiya deva came in this novel (old man)
ஜூன் 9, 2009 at 4:49 முப
I think “கோப்பெருந்தேவி எங்கே” was written by ‘Nagupolian” (pseudonym). One the most hilarious spoofs on the Historical novel. It was published in Kanaiyazhi.
ஜூன் 9, 2009 at 6:11 முப
பாபு, உடையார் படிக்க வேண்டும் என்று திட்டம் இருக்கிறது. எப்போது நடக்கும் என்று சொல்லமுடியாது. உங்கள் பரிந்துரைக்கு நன்றி!
booksforlife, எனக்கு கோப்பெருந்தேவி யார எழுதியது என்று நினைவில்லை. அவ்வளவாக பிரபலம் ஆகாத ஒருவர். நீங்கள் சொல்வது போல் கணையாழி தொகுப்பில் எங்கோ படித்தேன். அருமையான spoof. இதை பற்றி நீங்கள் எழுதியது சந்தோஷமாக இருக்கிறது.
ஜூலை 15, 2009 at 10:45 முப
தஞ்சை பெரிய கோவிலை பற்றியும் ,ராஜராஜ சோழன் பற்றியும் அறிய ஆவல் உள்ளவர்கள் படிக்க வேண்டிய புத்தகம் உடையார்..மிக அருமையான படைப்பு..
ஜனவரி 22, 2010 at 9:45 முப
sandilyan in manjal aaru
ஜனவரி 22, 2010 at 9:49 முப
sandilyanin manjal aaru
நவம்பர் 13, 2011 at 1:23 பிப
best sandilyan novels (vanathi pathipagam)
kadal pura (based on kalingathu barani)-1,2,3
yavana rani – thirumavalavam(karikalan),irmbidarthaaliyan(karkalan’s uncle)-1,2
raja muththirai-1,2 (pandias)
jala deepan – “sarcale” kanoj angarey (sarcale means neavy caption)
raja perigai – sri rangam ranganathar eye theft – that period story
raja thilagam -2nd narasima pallava and his father parameswara pallavas story (please vesit kanjipuram after reading this book)
vijaya maga devi -sri langa story (bharathi pathipagam)
mannan magal – vengi nattu story(did u seen raja raja cholan fiim, vengi mannan vimalathithan ) rajandra chola period story
malai vasl – scanda gupta story
mogini vanam
nila mangai
normal stories
mogana silai
mon malar
naga deepam
naga devi
rana amir
neel vizhi
jala mogini
ilaya rani
pallava peedam (bharathi pathipagam)
worst novel
alai arasi
neera radhi (bharathi pathipagam)
jagasirpiyan’s best novel (vanathi pathi pagam)
pathini kottam-1,2
magarayal mangai
aalavai azhagan
nayagi nartchonai
nandhivarman kathali -(nandhi kalambagam story)
thiruchirtralampalam – kamal’s dasavatharam – kulothunga cholan story
akilan
vetri thiru naga
vengaiyen mainthan
kayal vizhi
metha
maguda nila
chola nila – vijayalaya cholan & aditha cholan
sorry time over meet again bye
பிப்ரவரி 25, 2010 at 3:22 முப
Nice details….
sadharana arivukku mayangum kadhaikal… we need to go next stage… thats spiritual books like… Mahabharadham, Vidhura Needhi, Ramayanam, Silapadhikaram, Kundalakesi, Manimekalai, so much books takes to you the next stage…….The final stage Silent… Meditation… Spiritual…. Silent is the book written by god… Please read that tooo…. no one is equal from that….
மார்ச் 1, 2010 at 7:58 முப
பிரகாஷ்,
சரித்திர நாவல்கள் பதிவுக்கு மறுமொழி இட்டதற்கு நன்றி!
ஜூன் 15, 2010 at 8:55 முப
hi RV,
if u like kalkis ponnien selvan means then u must read akilans vengaieyn maindhan. very nice one. don’t come to conculsion by reading any one novel of a writer
ஜூன் 16, 2010 at 1:58 முப
செந்தில்குமார், நீங்கள் சிபாரிசு செய்கிறீர்கள், அதனால் வேங்கையின் மைந்தன் கிடைத்தால் படித்து பார்க்கிறேன்.
ஜூன் 16, 2010 at 3:57 முப
thank u RV.
also try Udaiyar. This is also some what different.
ஜூன் 16, 2010 at 7:48 பிப
செந்தில்குமார், உடையார் படிக்க வேண்டிய லிஸ்டில் இருக்கிறது. வே. மைந்தன் மீதுதான் நம்பிக்கை இல்லை. 🙂 பார்ப்போம்.
நவம்பர் 8, 2016 at 2:15 பிப
Semma book vengayin mainthan…. ponniyin selvan ku aduthu enaku romba pudicha novel
ஜூன் 17, 2010 at 9:50 முப
கல்கி ராஜேந்திரனின் ரவி குல திலகன் முயற்சி செய்து பாருங்க. எளிமையாக விறுவிறுப்பாக இருக்கு.
பாலகுமாரனின் கடிகை , செப்புப் பட்டயம் ( இது தேவ தாசிகள் பற்றிய கதை ) படித்து இருகிறீர்களா ?
உடையார் என்னுடைய படிக்கும் பட்டியலில் இருக்கு. எப்போ அமையும்னு தெரியலை.
ஜூன் 17, 2010 at 11:16 பிப
விருட்சம், ரவிகுல திலகன் கேள்விப்பட்டது கூட இல்லை. சில பாலகுமாரன் புத்தகங்கள் கோவில் கல்வெட்டுகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவை. ஆனால் அவர் நூற்றுக்கணக்கில் எழுதித் தள்ளுகிறார், புத்தகம் பேரே நினைவு இருப்பதில்லை. 🙂
ஜூன் 18, 2010 at 5:17 முப
hello virutcham,
i had read “seppu pattayam and kadigai” of bala kumaran. i have no idea about ravi kula thilakan by kalki rajenthiran.
i am having most of the books of sandilyan and balakumaran.
ஜூன் 18, 2010 at 5:42 முப
ரவி குலத் திலகன் வானதி பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறார்கள். இது கைக்கு கிடைக்கும் முன் எனக்கும் இந்த புத்தகம் பற்றி எதுவும் தெரியாது.
கடிகை – இது பரசுராமரால் 64 கலைகளையும் அருளப்பட்ட அவர் சீடர்கள் (அந்தணர்கள்) அந்த கலைகளைக் கொண்டு சேர, பாண்டிய சோழ தேசம் என்று பயணித்து கலைகளை கற்றுக் கொடுத்ததும், ராஜ்யங்களின் முக்கிய முடிவுகளுக்கு காரணமாகியும், என்று இந்த பயணம் சீனத்தை நோக்கி என்று முடிகிறது கதை.
இதில் அந்தணர்கள் போரும் செய்கிறார்கள் ( உங்களது ஒரு பதிவில் நீங்கள் எழுப்பிய கேள்வியை அந்தணர்கள் போர் செய்யலாமா? என்றே கேள்வியை இங்கும் சில அந்தண மாணவர்கள் எழுப்புகிறார்கள் ) படித்துப் பாருங்கள்.
செப்புபட்டயம் என்னை மிகவும் கவர்ந்தது. தேவதாசிகள் குறித்த பொது ஜன பார்வையை மாற்றக் கூடிய கதை. உண்மை சம்பவத்தின் அடிப்படை என்கிறார் ஆசிரியர்
ஜூன் 18, 2010 at 5:44 முப
செந்தில்
பாலகுமாரனின் புத்தகங்களில் உங்கள் பரிந்துரை எது ?
ஜூன் 18, 2010 at 5:52 முப
மேலும் விவரம் வேண்டும் என்றால்
ரவி குலத் திலகன் ஒரு பார்வை என்று தேனம்மை எழுதிய பதிவு
http://honeylaksh.blogspot.com/2010/06/blog-post_14.html
ஜூன் 19, 2010 at 2:35 முப
விருட்சம், ரவிகுலதிலகன் பற்றிய சுட்டிக்கு நன்றி! இந்த பதிவை அப்டேட் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். 🙂
செந்தில் குமார், நினைவு வரும் பாலகுமாரன் கதைகள்: சுசீந்திரம் கோவிலில் ஒரு சிற்ப வேலை செய்பவன் பற்றிய ஒரு கதை, ஜெம்பை கோவில் கல்வெட்டை வைத்து ஒரு கதை, மயிலாப்பூரில் ஒரு “சின்னத்” தலைவன் பற்றி ஒரு கதை, ஒரு மறு ஜென்ம கதை – ராஜராஜ சோழனிடம் வேலை பார்த்த ஒரு இடங்கை கைக்கோள வீரன் மறு பிறவி எடுக்க, ராஜராஜனும் மற்றவர்களும் ஆவிகளாக வருவார்கள். அந்த மறு ஜென்ம கதை மிக நன்றாக இருந்தது. எந்தக் கதைக்கும் பேர் நினைவில்லை.
ஜூன் 25, 2012 at 2:56 பிப
சுசீந்திரம் கோவிலில் ஒரு சிற்ப வேலை செய்பவன் பற்றிய ஒரு கதை – “குன்றிமணி”, மயிலாப்பூரில் ஒரு “சின்னத்” தலைவன் பற்றி ஒரு கதை – “இனிய யட்சினி”, ஒரு மறு ஜென்ம கதை – ராஜராஜ சோழனிடம் வேலை பார்த்த ஒரு இடங்கை கைக்கோள வீரன் மறு பிறவி எடுக்க, ராஜராஜனும் மற்றவர்களும் ஆவிகளாக வருவார்கள் – “என்னருகில் நீ இருந்தால்”.
ஜூலை 27, 2010 at 6:24 முப
i’have read lot of tamil novels even if my best novel is
ponien selvan…
kalki is a famous writer in tamil.
i liked his sivagamien sapatham, parthipan kanavu…
second one is sandilyan
his novels are very intersting one i liked his novel of
yavana rani as well as kadal pura.
third one is kanadhasan
i liked his novel one that is
seraman kadhali
My best author kalki..best novel ponien selvan…
ஜூலை 27, 2010 at 7:19 பிப
செல்வராஜ், என்னால் சேரமான் காதலியை ஐம்பது பக்கத்துக்கு மேல் படிக்க முடியவில்லை. தாங்க முடியவில்லை. 😉 நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்ற நாவல்கள் சுவாரசியமானவையே.
சிவசுப்ரமணியம், வம்சதாரா, அனுஷா வெங்கடேஷ் மற்றும் திருமலைத் திருடன் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். படித்ததில்லை.
ஜூலை 27, 2010 at 7:35 முப
One must have time and patience to read Udayar becoz of its volumes.
A writer from Vizag, Mr Dhivakar, has written two historical novels. Vamsadhara and Thirumalaithirudan. Both are good.
Anusha venkatesh’s sequel to Ponniyin selvan was also a good attempt.
திசெம்பர் 6, 2012 at 6:20 பிப
சரியாகச் சொன்னீர்கள், சிவசுப்ரமனியன். ஆனால், உடையார் ஒரு வித்தியாசமான படைப்பு. பாலகுமாரன் ரொம்பவே மெனெக்கெட்டிருக்கிறார். அவர் முன்னுரையில் எழுதியிருப்பதைப் போல, உடையார் ஒரு சாதாரன சரித்திர நாவல் மட்டுமல்ல. அது ஒரு சமூக நாவலுமே. காவிரி ஆற்றின் கரையில் தோன்றி மலேசியா வரை தனது ஆதிக்கத்தைப் பரப்பிய நம் தமிழ் நாகரிகத்தின் சமுதாயத்தை முடிந்த வரை விளக்கியிருக்கிறார்.
இப்பொழுதும், அரசாங்கம் ஒரு இடத்தில் “Airport or any other important place” நிறுவினால், அந்தப் பகுதி முழுமையும் மிகப் பெரிய வளர்ச்சியடையும். அதேபோல், ராஜ ராஜன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலால், எப்படி ஒரு நாடே வளர்ச்சியடைந்தது என மிக அழகாக விளக்கியிருக்கிறார் பாலகுமாரன். என்ன ஒன்று? உடையாரில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களும், அடிக்கடித் தங்களது நிலைப்பட்டை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அவர்களும் சாதாரன மனிதர்கள்தானே!! இதை மட்டும் சிறிது அனுசரித்துப் படித்தால், “உடையார்”, பொன்னியின் செல்வனின் பொன்னான பாகம்.
சரி, மற்ற நாவல்களுக்கு வருவோம். எனக்குப் பிடித்த நாவல்களையும், அவற்றை நான் படித்த காலங்களையும் கீழே தொகுத்திருக்கிறேன்: (எனது விருப்பமான நாவல்களை தரவரிசைப்படுத்தி இருக்கிறேன்)
1. பொன்னியின் செல்வன் – இதுவரை இதன் 5 பாகங்களையும் 7 முறை படித்திருக்கிறேன். இருந்தும் இதன்மேலுள்ள தாகம் தீரவில்லை. முதல் முறையாக நான் இளங்கலை கணிதம் முதலாமாண்டு படிக்கும் போது படித்தேன். புத்தக உபயம் எங்கள் கல்லூரி (ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருப்பத்தூர்) நூலகம். தினமும் இரவெல்லாம் கண்விழித்து, பகலில் கிடைத்த நேரங்களில் எல்லாம் படிக்க, ஆறு நாட்களில் 5 பாகங்களையும் முடித்துவிட்டேன்.
(ஆனந்த விகடனின் வெளியீடு பாதுகாக்க வேண்டிய ஒன்று)
2. உடையார் – முதலிலேயே நிறைய சொல்லியிருந்தாலும், இதை நான் படித்த விவரம் மட்டும் இங்கே. நான் முதுகலைப் பட்டப் படிப்பிற்காக “project work” செய்து கொண்டிருந்தபோது என் நண்பன் ஒருவன் பாலகுமாரனை “நெல்லுச் சோற்றின்” வழியாக அறிமுகம் செய்து வைத்தான். அந்த “நெல்லுச் சோற்றின்” மணம் என்னை அவரின் மற்ற பதார்த்தங்களையும் தேட வைத்து விட்டது. அப்படிப் படித்ததுதான் உடையார். ராஜேஷ் குமார் நாவல்களை வெளியிடும் வாராந்திர குறு நாவல் பதிப்பகத்தார், உடையாரையும் ஒரு பாகத்தை 6 பகுதிகளாக்கி மொத்தம் 36 பகுதிகளாக வெளியிட்டிருக்கிறார்கள். மதுரையில் கோயிலின் தெற்கு வாசல் பகுதியில் ஏராளமான பழைய புத்தகக் கடைகள் இருக்கும். பாடம் சம்பந்தமாகட்டும், கதைகளாகட்டும், எந்தப் புத்தகத்தையும் 20%கு மேல் தள்ளுபடியுடன் வாங்கி விடலாம். உடையாரின் 36 பகுதிகளையும், கிட்டத்தட்ட 20 கடைகளில், இங்கு 2 அங்கு 4 பாகங்கள் என அலைந்து திரிந்து எல்லாப் பாகங்களையும் சேகரித்துப் படித்து முடித்தேன்.
3. யவன ராணி – சிலர் சாண்டில்யனின் சிறந்த நாவலாகக் “கடல் புறா”வைத்தான் குறிப்பிடுவார்கள். என்னைப் பொறுத்தவரை, “யவன ராணியே” சிறந்தவள். கடல் புறா சில நேரங்களில் மிக மெதுவாகப் பறக்கும் (அல்லது, சஞ்சரிக்கும்). யவன ராணியோ, எதிலுமே வேகம்தான். இதைப் படித்தது ஒரு சுவையான அனுபவம். இளங்கலை முதலாமாண்டு படிக்கும் போது, எனக்கு இதன் இரண்டாம் பாகம்தான் முதலில் கிடைத்தது. முதல் பாகத்தை நூலகத்திலிருந்து எவரோ முன்பே எடுத்திருந்து திருப்பிக் கொடுக்காமல் இருந்தார்கள். எனவே இரண்டாம் பாகத்தை முதலாமாண்டிலும், முதல் பாகத்தை இரண்டாம் ஆண்டிலும் படித்தேன். (மூன்று வருடத்திற்குப் பிறகு, நானே புத்தகம் வாங்கி இதனை முழுவதுமாக, முதலிலிருந்தே படித்துவிட்டேன்.)
4. சிவகாமியின் சபதம் – முதன் முதலில், இதன் நான்காம் பாகம் படித்தேன். அது நான் 12ம் வகுப்பு விடுமுறையில், பொறியியல் நுழைவுத் தேர்வு எழுதுவதற்காக சென்னை வந்திருந்த சமயம். என் சித்தப்பா வீட்டில் தங்கியிருந்தேன். அவர் ஒரு தமிழாசிரியர். உண்மையாக என்னால் ஒரு இருபது பக்கங்களைக் கூட தாண்டமுடியவில்லை. அதன் பிறகு, பொன்னியின் செல்வனைச் சந்தித்தவுடன், சிவகாமியின் சபதத்தையும் அறிந்து கொண்டேன்.
5. கடல் புறா – சாண்டில்யனின் மற்றுமொரு அருமையான படைப்பு. இதனை நான் இளங்கலை மூன்றாமாண்டு படிக்கும்போது படிக்க வாய்ப்புக் கிடைத்து. உபயம் கல்லூரி நூலகமே. தினமும் இரவில் மூன்று மணி வரை படிப்பேன். காலையில் எழுந்தும், கல்லூரிக்குக் கிளம்பும் நொடி வரை படிப்பேன். இதனால் இரண்டொரு முறை எனது பேருந்தையும் தவறவிட்டிருக்கிறேன்.
6. காவிரிச் சோழன் (புலவர் அ.தயானந்தம்) – இதுதான் நான் முதன் முதலில் படித்த வரலாற்று நாவல். நான் 12ம் வகுப்புப் பொதுத் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்த போது, இந்த நாவல் என் கைக்குக் கிடைத்தது. இதன் உபயம், எங்கள் உள்ளூர் நூலகம். அன்றைய மறுதினம் எனக்குக் கணிதப் பரீட்சை, கடைசிப் பரீட்சையுங்கூட. முதல் நாள் மாலை 5 மணிக்கு இந்த நாவலைப் படிக்க ஆரம்பித்து, அதிகாலை 4 மணிவரைப் படித்தேன். என் வீட்டில் எல்லோரும் நான் தேர்வுக்காகப் படிப்பதாக நினைத்துக் கொண்டிருக்க, நான் நாவல் படித்தேன். தேர்வையும் மறக்கடிக்கும் அளவுக்கு அவ்வளவு சுவாரசியமான நாவல். அப்படியும், கடைசி 50 பக்கங்களை என்னால் படித்து முடிக்க முடியவில்லை. இதன் நினைப்போடே தேர்வு எழுத, 200க்கு, 194 மதிப்பெண் மட்டுமே பெற்றேன். தேர்வு முடிந்து வீட்டுக்கு வந்ததுமே மீதிப் பக்கங்களைப் படித்து முடித்து விட்டேன். படித்த பிறகு, ஒரு வாரத்திற்கு என்னால் எதிலும் சரியாகக் கவனம் செலுத்த முடியவில்லை. பிறகுதான் நான் எல்லா சரித்திர நாவல்களையும் தேடித் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். என் சகோதரர் ஒருவருக்கும் இந்த நாவலைப் படிக்கக் கொடுத்தேன். நாவல் படிக்கும் பழக்கமே இல்லாத அவர், இன்று எல்லா நாவல்களையும் கேட்டுக் கேட்டுப் படிக்கிறார். எப்படியாவது இந்த நாவலை வாங்கிவிட வேண்டுமென்று தேடிக் கொண்டிருக்கிறோம்.
7. ஜலதீபம் – சாண்டில்யனின் மற்றுமொரு சிறந்த படைப்பு. இதன் உபயமும், கல்லூரி நூலகமே. மஹாராஷ்டிர கடற்படைத் தளபதி, கனோஜி ஆங்கரே பற்றியது. நான் அறிந்தவரை, ஒரே நாவலாசிரியர், அதிகமுறை ஒரு நபரைப் பற்றியே எழுதியிருப்பது, சாண்டில்யனே, கனோஜி ஆங்கரே பற்றி – ஜலதீபம், ஜலமோகினி மற்றும் கடல் ராணி. இவற்றில் ஜலதீபத்திலும், ஜலமோகினியிலும் தமிழர்களைக் கப்பலோட்ட விட்டிருப்பார். கடல் ராணியை, இந்த்ரஜித் அனந்த் என்னும் மஹாரஷ்டிரனையே விரட்ட விட்டிருப்பார். சாண்டில்யனின் கடல்போர் வருணனைகள் அபாரம்.
8. வம்சதாரா (திவாகர்) – இவர் சாண்டில்யனின் சீடரோ என என்னும் அளவிற்கு, இந்தக் கதை முழுக்க முழுக்க, சாண்டில்யன் பாணியிலேயே இருக்கும். கலிங்கப் போரை மையமாக வைத்து எழுதப்பட்டது. இதில் வரும் மணிமாறன் (இக்கதையை சுமார் 5 வருடங்களுக்கு முன் படித்தது. பெயர் மறந்திருக்க மாட்டேன் என நம்புகிறேன்.), சாண்டில்யன் கதைகளில் வரும் கதாநாயகர்கள் போலவே எல்லா சாகசங்களும் புரிவார். இது, திவாகரின் முதல் நாவல் என எண்ணுகிறேன். அப்படியெனில், அவரை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும், இப்படி ஒரு சுவாரசியமான நாவல் தந்ததிற்காக. இவரின் மற்ற நாவல்களையும் படிக்க வேண்டும்.
9. கொங்குத் திலகம் (கமல பிரியா – வானதி பதிப்பகம்) – தீரன் சின்னமலை பற்றிய மிகச் சிறந்த நாவல். அவர் திப்பு சுல்தானுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியது, திப்புவின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஆங்கிலேயருக்கு எதிரான போரட்டத்தைத் தானே முன்னின்று நடத்தியது என நாவல் மிக அருமையாகப் பிரயாணிக்கும். இதன் முடிவு எல்லோருக்கும் தெரிந்த்துதான் என்றாலும், கொஞ்சம் கூட சலிப்படைய விடாமல் நாவலைக் கொண்டு சென்றிருக்கிறார். கதையோட்டத்திற்காகச் சேர்க்கப் பட்டுள்ள, கதாநாயகி தவிர, மற்ற அனைவரும் சரித்திரப் பாத்திரங்களே. தீரன் சின்னமலை வரலாறு சுலபமாகக் கிடைக்கக் கூடியதுதான் என்றாலும், ஆசிரியையின் உழைப்பு பாராட்டப்படத் தக்கதே. தென்னிந்தியா முழுமையும் ஆங்கிலேயர்களுக்குக் கீழ் வந்தபிறகும், கொங்குச் சீமையைச் சுதந்திரமாக 5 வருடங்கள் ஆண்ட, ஆங்கிலேயர்களை மூன்று முறை ஓட ஓட விரட்டியடித்த தீரன் சின்னமலையின் வீரமும் விவேகமும் யாவருக்கும் சென்று சேர வேண்டிய ஒன்று.
10. நந்திபுரத்து நாயகி (கலைமாமணி விக்ரமன்) – பொன்னியின் செல்வனின் தொடர்ச்சி. பொன்னியின் செல்வனின் எல்லாக் கதாபாத்திரங்களும் இதிலும் வருவார்கள். வந்தியத் தேவர்-குந்தவையின் காதல் இதில் மிக அழகாக விளக்கப் பட்டிருக்கும். இதில் ஆசிரியர், பஞ்சவன் மாதேவியை அறிமுகம் செய்திருப்பார். வந்தியத் தேவர்-குந்தவை திருமணம் வரையிலான நிகழ்ச்சிகள் அழகாகத் தொகுக்கப்பட்டிருக்கும். வயலில் மாடு மேய்த்துக்கொண்டே படித்த நாவல் இது. ஒரு சுகமான அனுபவம்.
இவை தவிர, பின்வரும் நாவல்களும் சிறந்த நாவல்களே:
1. பார்த்திபன் கனவு (கல்கி)
2. மன்னன் மகள் (சாண்டில்யன்)
3. ராஜ திலகம் (சாண்டில்யன்)
4. வேங்கையின் மைந்தன் (அகிலன்)
5. ராஜ முத்திரை (சாண்டில்யன்)
6. கடல் ராணி (சாண்டில்யன்)
7. நீழ்விழி (சாண்டில்யன்)
8. பத்தினிக் கோட்டம் (ஜெக சிற்பியன்)
9. மண்ணுக்கு ஒரு முத்தம் (மதுரா)
10. வெற்றித் திருநகர் (அகிலன்)
11. பிரபஞ்சன் ஒரு நாவல் எழுதியிருப்பார். ப்ரெஞ்ச் கவர்னர் டூப்ளேயின் முதன்மைக் காரியதரிசி ஆனந்தரங்கம் பிள்ளை என்பவரின் டைரியில் கிடைத்த வரலாற்று உண்மைக் கதை இது. ராபர்ட் கிளைவ் பற்றியது. நாவலின் பெயர் மறந்து விட்டேன். கதையாகப் பார்த்தால் கொஞ்சம் சுமார்தான். வரலாற்று உண்மைகள் நிறைந்திருப்பதால் படிக்கலாம்.
இவை தவிர சாண்டில்யனின் மஞ்சள் ஆறு, ஜல மோகினி, ராஜ பேரிகை, பல்லவ திலகம், கன்னி மாடம், விஜய மஹாதேவி, ஸ்ரீ வேணுகோபாலனின் சில நாவல்கள், விக்ரமனின் உதய சந்திரன், வந்தியத் தேவன் வாள், கோவி. மணிசேகரனின் மயிலிறகு நா.ரா.வின் பாண்டி மாதேவி, கொத்தமங்கலம் சுப்புவின் பொன்னி வனத்துப் பூங்குயில் இவையெல்லாம் சுமாரான நாவல்கள்.
அனுஷா வெங்கடேஷின் காவிரி மைந்த்ன் நான் இன்னும் படிக்கவில்லை.
ஓகஸ்ட் 20, 2015 at 10:13 முப
NEENKAL NALLA NOVELKALAI SUTTIKATTIYATHARKU MIKKA NANRI
ஓகஸ்ட் 18, 2010 at 3:31 பிப
veerapandian manaivi super novel. where shall i get the book.
ஓகஸ்ட் 18, 2010 at 10:53 பிப
குணசேகரன், எனக்கும் தெரியவில்லை. anyindian.com முயற்சி செய்து பாருங்கள்.
ஓகஸ்ட் 23, 2010 at 3:24 முப
RV வணக்கம்,நீங்கள் குறிப்பிட்ட கோப்பெருந்தேவி எங்கே என்ற அங்கதம் 1966 கணையாழி-இல் நகுபோலியன் எழுதிய “மழநாட்டு மகுடம்” என்ற சரித்திர தொடரின் 300 வது அத்தியாயமாக வரும்.அதில்வரும் ஒரு பாரா, திருமழப்பாடியிலேதிரண்டேதிர்த்து வந்துநின்ற தண்டை நாட்டு தனிமன்னன் திருத்தக்கத் (தகிகிட)தாண்டவனை தேர்காலிலே கட்டி,அவன் தளபதி தடுமாறனை தெருதெருவாய் துரத்தி திண்ணனூர் வரை சென்று அங்கு அவன் தங்கை தீஞ்சுவைகோதையை திருமணம் கொண்டு திரும்பி “திண்ணை கடந்த தீன்சுவைகிழான்” என்னும் தீரவிருது பெற்றவனன்றோ இவன்! சும்மா கல்கியையும் ,சாண்டில்யனையும் போட்டு கிழி கிழின்னு கிழித்திருப்பார்.இன்று நினைத்தாலும் சிரிப்புத்தான்.
ஓகஸ்ட் 23, 2010 at 5:50 பிப
விஜயன், எனக்கு அது ஜெகசிர்பியனைத்தான் அதிகம் நினைவுபடுத்தியது. நகுபோலியன் வேறு ஏதாவது எழுதி இருக்கிறாரா?
நவம்பர் 7, 2010 at 11:31 முப
வீரபாண்டியன் மனைவி பிரேமா பிரசுரம் என்று நினைவில் இருக்கிறது
நவம்பர் 7, 2010 at 6:48 பிப
சரித்திர நாவல்கள் பதிவுக்கு மறுமொழிக்கு நன்றி, போகன்!
மார்ச் 17, 2011 at 3:20 பிப
u done a good job
ஏப்ரல் 15, 2011 at 7:06 பிப
கோப்பெருந்தேவி எங்கே ? — கணையாழி கதைகள் தொகுப்பிலிருந்து ஒரு வித்தியாசமான நகைச்சுவைக் கதை
மழநாட்டு மகுடம் – நகுபோலியன்
http://www.appusami.com/HTML/htmlv92/main/kanayali.asp
மே 25, 2011 at 10:35 முப
மிக அருமை உங்க விமர்சனம் ஆர்வி.. விருட்சிகம் என் சுட்டியைப் பகிர்ந்தமைக்கு நன்றி..:)
ஒக்ரோபர் 23, 2011 at 5:14 பிப
I am also happy to read those books, but their availability is not known to me, kindly inform the places where i will get them
நவம்பர் 14, 2011 at 6:27 முப
Please do not read kaviri mainthan by anusha venkatesh….One of the worst novel I have ever read.He has written 1300 pages of story only with what Kalki has given as mudivurai. Kalki in ponniyin selvan would have listed what happened to all characters at last. this book has only those things. Nothing new. Vijaya mahadevi by sandilyan was more better
நவம்பர் 16, 2011 at 1:10 பிப
Hi,
One of the best historical fictions is ‘Kalaimani’s “Ponnivanathu Poonguyil”, about the Maratha period of Tanjore. “Kalaimani” is “Kothamangalam Subbu”, author of the famous “Thillana Mohambal”. Also, Na Pa’s “Nithilavalli” is a good attempt, about the “Kalabras” period in Tamil history.
ஜனவரி 6, 2012 at 2:15 பிப
Hello,
Good list of History novels in tamil to read about. But Your listing is missing with one of the important / different style of writting – Naan Krishna Devarayan by Ra Ki Rangarajan. Excellant novel – definitly a must read. Try it…
ஜூலை 20, 2012 at 4:23 பிப
anaku sarithira novalgal andral pigavum pudikum nan kalkiyin ponniyin selvam sivagami sabatham matrum sandilyanin raja thilagam moongil koottai matrum avarudaiya pala siru noolgalaium padithirukiran analum anaku sarithira noval padika vandum andra arvam miga athigamaga ullathu annudaiya asaiyai theerka sirandha novalgalin payarai koorumaru katukolgiran
செப்ரெம்பர் 16, 2012 at 10:59 முப
MY BEST CHOICE IS KALKI’S PONNIYIN SELVAN. NO OTHER BOOK COMPETE DIS. NO WORDS 2 XPRESS ABT DIS HISTORICAL NOVEL NOW N DEN……
நவம்பர் 23, 2012 at 9:57 முப
super enakum padithathil pidicha books oda rating order 1.ponniyin selvan,2.sivagamiyin sabatham3.Parthiban kanavu
பிப்ரவரி 5, 2013 at 7:26 முப
கண்ணதாசனின் “சேரமான் காதலி” நாவல் தமிழ் வரலாற்று நாவல்களின் மையில் கல் என்றே நான் சொல்வேன் . காரணம் அவர் எழுத்தாழம் தான் . நாவலை முடிக்கும் வரை வேறு பெரிய சிந்தனை எனக்கு ஏனோ வரவேயில்லை . பாஸ்கர ரவி வர்மனும் – யூஜீயானவும் என் கனவில் வந்தாலும் வரலாம் . சலீமா நேரிலே வரலாம் . தம்பிரான் சுவாமிகள் பாத்திரப்படைப்பு அற்புதம் . அற்புதம் .குலசேகர ஆழ்வார் , வழி யான மார்க்கம்- துறவு விளக்கப்படுவாதாக என்னளவில் நினைக்கிறேன் . இக்கருத்துத்துக்கள் அனைத்தும் எதிர்வாதங்கள் அல்ல . என் அறிவுக்கு எட்டியவையே தவிர வேறில்லை .
பிப்ரவரி 5, 2013 at 7:29 முப
குலசேகர ஆழ்வார் வழி “ஞான மார்க்கம்” என்பதை மேலே தவறாக எழுதிவிட்டேன் மன்னிக்கவும் .
மே 2, 2013 at 11:27 முப
Buy Tamil historical novels Online @ http://www.myangadi.com/tamil-books/stories-novels/historical-novels
மே 23, 2013 at 1:52 பிப
எனக்கும் பொன்னியின் செல்வன்தான் மிகவும் பிடித்தது அதற்கு பிறகுதான் எந்த நாவலையுமே சொல்வேன் பொன்னியின் செல்வனுக்கு அடுத்து சாண்டில்யனின் கடல் புறா மிகவும் பிடிக்கும்… அகிலனின் வேங்கையின் மைந்தன் படிக்க வேண்டும் என்று ஆசை வந்தியத்தேவனுக்காக !! புத்தகம் கிடைக்கவில்லை
திசெம்பர் 11, 2013 at 9:24 முப
ponniyin selvan namadhu nattai pattriya varalaru mattum alladhu thani manidhargalin unarvugalaium azhagaga solkiradhu. arulmozhi yai kattilum vandhiya dhevane enaku migavum pidiththa kadha pathiram. intha novelil ellarume nallavargal endru than solla mudium. avargaludaiya sandharpangle karanamagum. kundhavai vandhiyadhevan eruvaraium marakkeve mudiyadhu. manimegalai yin nilain kangalil kannerai varavaiththadhu. nandhini kundhavai evargalai oppidum podhu kalki miga miga azhagaga solgirar. idhai paqdiththa pinbu enakkum novel ezhudha aasai varugiradhu. kalkiku salute.
ஜூன் 26, 2013 at 1:59 பிப
link for Sandilyan novels pdf free download
நவம்பர் 28, 2013 at 3:05 பிப
seramaan kathali;;;;படிக்க வேண்டும் பாஸ்கர ரவி வர்மனும் – யூஜீயானவும் என் கனவில் வந்தாலும் வரலாம் . சலீமா நேரிலே வரலாம் . தம்பிரான் சுவாமிகள் பாத்திரப்படைப்பு அற்புதம் . அற்புதம் .குலசேகர ஆழ்வார் , வழி யான மார்க்கம்- துறவு விளக்கப்படுவாதாக என்னளவில் நினைக்கிறேன் .superb………………….
நவம்பர் 29, 2013 at 12:54 பிப
ponniyin selvan can be first by all means, i think jala deepam by sandilyan shall be second, lots of verifiable facts and the hero is just like a common man love lust hate loyalty etc except the climax worth a good competition to ps . There is one elderly scholar called balu sir active in agathiyar yahoo group , his nick name is nagupolian
ஜனவரி 17, 2014 at 8:33 முப
None have pointed out CHERAR KOTTAI here. its a fabulous work from Gokul seshadri. Really an extensive historical research based novel. His other novels also have great depth in it!!.
Next Udayar!!
Now only I’m reading this novel but i’ll never say this is great at all!!. In PS kalki have maintainted tamilnadu map accuracy to great extent but in udayar he is really staggering!! Next is his shift towards over superstitious belief in the story!! I can take that kind of mentality would have been there in the tamil culture in those times but he insists them from his own strong personal beliefs in the story.
He misspells many names and charcterisations in the story!! But he narrates the real nature of the people that is commendable.
But i personally dont like his narration at all.
ஜனவரி 22, 2014 at 7:53 முப
jagasirpiyan novel aalavaipogan is very good and like a suspense storey.I like somach and it is about pandiy’s historical novel with high speed.Thanks to jaga sirpiyan
மார்ச் 2, 2014 at 2:50 பிப
Udayar always the best and top of all novels…
It is big like Tanjore Temple.
as the story shows some opposition to bramins, udayar was hided by the community
மார்ச் 3, 2014 at 10:21 முப
கல்கியின்பொன்னியின்செல்வன்சிறப்புதான்,ஆனாலும்சரித்திரநாவல் என்றாலே சிந்தனைக்கு வரும் முதல் பெயர் சாண்டில்யந்தான்
மார்ச் 6, 2014 at 9:42 முப
Ponniyyin Selvan is the best among all..No other novel can beat it so far..
மார்ச் 14, 2014 at 11:36 முப
Attempting to map the locations mentioned in ‘Ponniyin Selvan’ 😀 I’m reading it after a gap of ~20 years and the way characters are formed and more important still – without a bad word against anyone – is simply inspiring. In these days, when practically everyone is too eager to take offence, Ponniyin Selvan stands apart. http://goo.gl/05Uu0I BTW any suggestions on the map (corrections/mistakes) would be welcome.
மே 1, 2014 at 4:33 முப
hi friends… Recently i became a Tamil Book Reader. wow amazing. i love it dear.. “kalki” sir books are Great.
Pandian Parisu i read it first
Then “Ponnien Selvan” Excellent Book. What a story
Sometimes i cried while Reading the book of “Sivakami Sapatham”
Then Sandilayan ‘Kadal Pura’- nice one. & Some others book i read
Now i would like to read “Kaveri Cholan”. Anyone could help me.
my id:: selvamt21@gmail.com Ph.9677461801
Could you suggest me some other good books..?
ஓகஸ்ட் 14, 2014 at 10:43 முப
1)கல்கியின் பொன்னியின் செல்வன் ,சிவகாமியின் சபதம் 2)சாண்டில்யனின் கடல்புறா ,யவன ராணீ 3) பாலகுமாரனின் உடையார் 4)அரு.ராமநாதனின் வீரபாண்டியன் மனைவி 5)ஜெகசிற்பியனின் ஆலவாயழகன் இதனை மிஞ்சிட தமிழில் வேறூ சரித்திர நாவல் கிடையாது மற்றவை எல்லாம் இதற்கு பின் தான்
நவம்பர் 4, 2014 at 10:50 முப
nedumal pugazhenthi p
Jegasirpiyan- paththinikkottam can also be taken into account as a good historic novel.
ponniyin selvan can’t be compared with any strategic historical novels. kalki meendum eluthinal ippadi eluthamudiyuma endral santhegamthan
நவம்பர் 4, 2014 at 10:56 முப
sandilyan use to praise and comment more about women. It some times makes the reader get bored. but the war strategies in his novels are exceptional. in Yavana Rani ilanchezhiyans views in venniparnathalai is really super
Agilan’s vengayin mainthan is a good novel where vandiaythevan comes to entertain
திசெம்பர் 28, 2014 at 5:47 முப
Has anyone read “Maalavalliyin Thiyagam” by Ki. Ra. Gopalan? The story is about Adihtya Chola (son of Vijayalaya Chola). It is a decent novel.
ஜூன் 20, 2015 at 9:23 முப
yes. I have read. 50 years ago. very fine novel. Where it is available. If Known please tell me.
ஜூலை 19, 2016 at 11:01 பிப
No sir. Unfortunately I do not know the publisher. I borrowed a copy from Coimbatore Central Library.
ஒக்ரோபர் 2, 2016 at 8:50 முப
http://www.chennailibrary.com/
ஒக்ரோபர் 3, 2016 at 6:16 முப
Hi
It is available now in on line. http://www.chennailibrary.com/
திசெம்பர் 28, 2014 at 6:22 முப
Another one I forgot to add is: Marukkozhunthu Mangai by Ra. Su. Nallaperumal. Plot is based on Nandivarman II of later Pallavas. Main hero of this novel is Udayachandran (senapathi of Nandivarman).
திசெம்பர் 30, 2014 at 12:56 பிப
Oh, this is news to me that the well-known novelist ra su nallaperumal, who wrote such wonderful novels like “Kallukkul Eeram” and “Porattangal” – both serialised in ‘Kalki” mag, had written a historical novel too.
திசெம்பர் 30, 2014 at 5:50 பிப
Ramaswamy,
Yes, indeed. This novel came as thodarkadhai in Dhinamani Kathir. I believe the book was published by Meenakshi Padhippagam, Madurai. The novel is a delight to read!
திசெம்பர் 31, 2014 at 4:32 முப
Thanks for the info. Will try to get a copy and read it. I like the author. His Kallukkul Earam is a classic.
பிப்ரவரி 16, 2015 at 9:02 முப
Omg I had been searching fr people who read Tamil historic novels great I found this site. Too happy. Y nobody mentioned saandilyan’s raaja muththirai. I read 25 yes back. Not a single book can dual it. I just fell in love with hero for his war strategies and administration.Sydney Shelton, chetsn bagat, mum none can reach this calibre.wonderful book .favorite to me till this date. Only ponniyin selvan had equal influence as this book. Don’t miss it friends
பிப்ரவரி 17, 2015 at 7:24 பிப
I read pon.selvan is the best naval & I am also read sandilyan all novels kadal pura is the best of naval for sandilyan I want historical naval any body pl.send
ஏப்ரல் 16, 2015 at 11:14 முப
hi ..where can i buy Ra. Su. Nallaperumal novels?
ஜூலை 3, 2015 at 12:25 பிப
su.nallaperumal novels publised by vanathi pathipagam- t.nagar- chennai
மே 2, 2015 at 7:50 பிப
Ur comments are 3rd ggrade. Mooditu irru da panni payala
மே 2, 2015 at 7:52 பிப
Kavalama irruku unaoda review
ஜூன் 25, 2015 at 7:01 முப
hi…. “cherar kottai”by gokul seshadri is also good story revealed mystery of aditya karikalan’s murder good novel
ஓகஸ்ட் 20, 2015 at 10:09 முப
Pathinikottam and Alavai azahan by Jagasirpiyan, Manipallavam and pandimadevi by NA PA ,Nandhipurathu Nayaki by Vikrman, Yavana rani and Kadal pura by Sandilyan ,Rajakarjanai,Chembian selvi, Kudavayil Kottam by Kovi Manisekaran are notable historical novels of Tamil .
ஓகஸ்ட் 24, 2015 at 7:31 முப
நீங்கள் சொல்வதையெல்லாம் பார்த்தால் நான் இன்னும் படிக்கவே ஆரம்பிக்கவில்லை போலும்….
நான் படித்த முதல் நாவலே கோகுல் சேஷாத்ரி அவர்களுடைய “பைசாசம் “..மிக மிக அருமை அதன்பின் அவருடைய இராஜகேசரி, சேரர் கோட்டை ஆகிய நாவல்களையும் படித்துவிட்டேன், அருமை….பொன்னியின் செல்வன், உடையார் புதினம் படிக்க ஆசைதான் ஆனால் நேரம் அமையவில்லை….
செப்ரெம்பர் 20, 2015 at 2:13 முப
It is hard to write a historical novel but you eaaily criticize the sandiliyan novels and other writers.I bet u cannot write a short story containing 150 words
செப்ரெம்பர் 20, 2015 at 2:17 முப
Is there any soft copies of sandiliyan novels or other tamil novels.please notify me
செப்ரெம்பர் 20, 2015 at 6:09 பிப
நான் ஆங்கிலத்தில் இந்த threadil எழுதியதை ஒருவரும் படித்ததாக தெரியவில்லை. நா பார்த்தசாரதியின் ‘நித்திலவல்லி’ ஒரு நல்ல சரித்திர நாவல் ஆனந்த விகடனில் தொடராக வந்தது. கலைமணி கொத்தமங்கலம் சுப்புவின் போன்னிவனத்து பூங்குயில்’ தஞ்சை மராத்திய அரசை களமாக கொண்ட ஒரு மிக ரசிக்கத்தக்க நாவல் என்று எனது கருத்து.
ஜனவரி 22, 2016 at 4:23 பிப
Kalkiyin padaipugalil ” ponniyin selvanum” sandilyan in padaipugalil (Kadal pura, raja muthirai, yavana rani, Mannan Magal, Kanani madam, raja Perigai, raja Thilagam) Nalla padaipugal…. But I must read more novels U have mentioned above Thank You……..
ஜனவரி 24, 2016 at 3:37 பிப
Lot of you have asked about where to find novels –
http://ladyswings.com/community/tags.php?tag=online+tamil+novels
This site has all novels of Kalki,Sadilyan,vikraman, akilan, balakumaran and other’s also – almost all historic novels can be downloaded/
Enjoy reading
மார்ச் 12, 2016 at 5:53 பிப
Rajan has mentioned about kudavayil kottam by kovi manisekaran. Is the story about kulothunga cholan and karunagara thondaiman. I read a story about them 30 years ago. I liked it. I dont remember the name of the book author. The book impressed me a lot as a little girl. I want to read it again. Can any one help me. – Prem
மார்ச் 20, 2016 at 3:55 பிப
சாண்டில்யன் அளவுக்கு யாராவது ஒரு சந்தர்ப்பத்தை வர்ணிக்க முடியுமா???
எப்படி அவரின் நாவல்களை உங்களால் இரண்டாம் தரமானவை என கூற முடிகிறது! கல்கியை பாராட்டுவதோடு நிறுத்தி கொள்ளுங்கள். அவரை பற்றி பேசுவதை விடுங்கள்!
அப்படி பேசுபவர்கள் தமிழ் சரித்திர நாவல்களை படித்தவர்கள் அல்லர். வெத்து வேட்டுகள் அவ்வளவே!
ஒக்ரோபர் 3, 2016 at 6:18 முப
Malavalliyin thiyagam available in online. http://www.chennailibrary.com/
ஒக்ரோபர் 3, 2016 at 6:41 பிப
வணக்கம் நான் காவிரி மைந்தன் படித்திருக்கிறேன் கதை நன்று எனக்கு உடையார் நாவல் படிக்க ஆவல் அந்த நாவல் பற்றி அறிந்தவர்கள் தெரிவிக்கவும் நன்றி
ஒக்ரோபர் 11, 2016 at 1:46 பிப
என்னை பொறுத்த வரை ” பொன்னியின் செல்வன்ல”, “கடல் புரா”,
யவன ராணி, உடையார், போன்ற நாவல்கல் நன்றாக… இருக்கும்…
திசெம்பர் 27, 2016 at 3:11 முப
Just now completed Udayar. Wat a book wow. More spiritual. I am feeling a void after completing the book. Want to read gangai konda chozhan also by balakumaran. Have read ponniyin selvan sivakamiyin sabatham. Partiban kanavu vengayin maithan kadal Pura etc. Right now deeply in Udayar mood. The love for arunmozhi which started in ponniyin selvan is raging like fire after reading Udayar. Wow wat a book. Wat a king wat a great temple.
ஜூலை 6, 2017 at 6:01 முப
ponneyen slevan is best novel in tamil. brother nega sonathu pola nanum ethanai nal kadaporugum elangai gudanthai jothidar vedunu kanavil payanithu ulen thareuma. Balakumaran novel super udayar but nadula gonsa edagalil vala vala but novel is intresting. sujatha novels is super nanbare avarein novels ah padiga thani rasanai vendum, priya, golayethurgalam, odathe, nilungal rajave, is best novels in sujatha.
ஜூலை 6, 2017 at 6:03 முப
Nanum muthalil paditha novel parthiban kanavu its nice…. and sandilyanin yavana rani its good. ponniyen selvanai paditha piragu sevagami sapatham padithathal enavo athu avalavaga suvaiga vilai.
ஜூலை 6, 2017 at 6:05 முப
sandiyalyanin manan magal is always super novel.
ஜூலை 27, 2017 at 6:56 முப
நண்பரே, கங்கை கொண்ட சோழன் நாவல் pdf கிடைக்குமா?
இருக்குமெனில் sudhakarmech5694@gmail.com-ற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்…
நன்றி
ஒக்ரோபர் 14, 2017 at 4:39 பிப
Want to downlod historical novels
ஜனவரி 15, 2018 at 4:49 பிப
Heartening to find so many historic novel lovers. If any of you have come across an old writer AARVI’S works, who was Kalaimagal magazine writer but his wrote for the weekly Kalki also. His works are AADITHAN KAADAL, SENKAMALAVALLI and THENKOODU. He wrote from 1950’s to 1960’s I think. I am looking for his works in all possible libraries. Thanks in advance.
ஏப்ரல் 23, 2020 at 5:21 பிப
ponni inselvan by kalki. yavanarani by sandilyan.vankaiyin maindandan by akilan..
திசெம்பர் 23, 2020 at 3:12 பிப
அய்யா ஓன்று புரிந்து கொள்ளுங்கள்
வரலாற்று ஆசிரியர் கல்கி அவர்கள்
சாண்டில்யன் அவர்கள் காளிதாசன்
இரண்டுமே வேறு வேறு பாதை