கலைஞரின் என்டிடிவி பெட்டியை பற்றியும் பின்னால் ஜகா வாங்கியதை பற்றியும் எழுத நினைத்திருந்தேன். எழுத்தாளர் பா. ராகவன் நான் நினைத்ததை ஏறக்குறைய அப்படியே எழுதி இருக்கிறார். இந்த சருக்கலைப் பற்றி மட்டும் அல்லாமல் பல பின் புல செய்திகளையும் தொகுத்திருக்கிறார். என்னை விட அவர் மிக நன்றாக எழுதக் கூடியவர், அதனால் நீங்கள் எல்லாம் தப்பித்தீர்கள்!
கலைஞரை பற்றி நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது. தன் பேச்சு, எழுத்து திறமையால் பல ஜெனரேஷன்களை கவர்ந்தவர், அதே திறமையால் கட்சிக்கு ஒரு பலமான தொண்டர் தளத்தை உருவாக்கியவர், இப்போதெல்லாம் வீணாக ராமர் படித்த எஞ்சினியரிங் காலேஜ், அவாள் விடும் சவால், சட்டக் கல்லூரி கலவரத்தை தூண்டிவிடும் ஜெயலலிதா, என் நண்பன் பிரபாகரன் என்றெல்லாம் சொல்லி மாட்டிக் கொள்வது பாவமாக இருக்கிறது. Like watching a once great cricket player hanging on well past his prime. எங்கேயோ இருக்க வேண்டியவரால் சில பலவீனங்களை தவிர்க்க முடியவில்லை என்பது சோகம்தான். நவீன திருதராஷ்டிரன் வேறு!
ஏப்ரல் 22, 2009 at 5:57 பிப
RV,
பாரா காட்டும் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் கட்டுரையை நானும் படித்திருக்கிறேன். அவர் எழுதியதை அப்படியே பிரதிபலித்திருக்கிறார். ஆனால், கலைஞர் கருணாநிதியின் தற்போதைய “பிரபாகரன் என் நண்பர்” கூற்றும் பிறகு ஒர் சிறியளவிலான மறுப்பு அறிக்கையும் Media Stunt என்று நான் கருதுகிறேன். ஜெயலலிதாவை சமாளிக்க பிரபாகரனை நண்பர் என்பதும் சோனியாவை சமாளிக்க மறுப்பு அறிக்கையும், இவையெல்லாம் கலைஞருக்கே உரிய அபத்தங்கள்.
ஏப்ரல் 22, 2009 at 7:51 பிப
ரதி,
இது ஸ்டண்ட் என்பதில் என்ன சந்தேகம்? 🙂
எண்பதுகளின் நடுவில் நான் மாணவனாக இருந்தபோது எம்ஜிஆரும் கலைஞரும் உண்மையாகவே இலங்கைத் தமிழர்களை பற்றி கவலைபடுகிறார்கள், அவர்களைப் பற்றி அக்கறை உள்ளவர்கள் என்று நினைத்தோம். அப்போதும் இவர் ஸ்டண்ட் அடித்தாரோ என்று இப்போது தோன்றுகிறது, உறுதியாக சொல்ல முடியவில்லை.
ஏப்ரல் 23, 2009 at 1:00 பிப
RV,
//அப்போதும் இவர் ஸ்டண்ட் அடித்தாரோ என்று இப்போது தோன்றுகிறது, //
இது ஸ்டண்ட் என்பதில் என்ன சந்தேகம்?
ஏப்ரல் 24, 2009 at 4:48 பிப
ரதி,
// //அப்போதும் இவர் ஸ்டண்ட் அடித்தாரோ என்று இப்போது தோன்றுகிறது, //
இது ஸ்டண்ட் என்பதில் என்ன சந்தேகம்? //
🙂
ஏப்ரல் 25, 2009 at 2:36 பிப
RV,
இதில் சிரிக்கிறமாதிரி என்ன இருக்கிறது?
ஏப்ரல் 25, 2009 at 4:56 பிப
ரதி,
என்னங்க இது, நீங்க ஜோக் அடிக்கலையா? அப்பவும் ஸ்டண்ட்தான் அப்படின்றதை தமாஷா சொன்ன மாதிரிதானே இருந்தது?
ஏப்ரல் 26, 2009 at 7:48 முப
RV,
நீங்கள் சொன்ன பிறகு தான் படித்துப்பார்த்தேன். ஜோக் மாதிரிதான் இருக்கிறது. என் தவறான புரிதலால் அப்படி கேட்டு விட்டேன்.
பொதுவாகவே அரசியல், சினிமா, பிஸ்னஸ் இல் இருப்பவர்கள் இப்படி மீடியா ஸ்டண்ட் அடிப்பது வழக்கம்தானே. பல சமயங்களில் எரிச்சலாக இருக்கும். சில சமயங்களில் பயங்கர சிரிப்பாக இருக்கும்.
இன்னொரு விடயம். நீங்கள் விரும்பினால் cmr.fm என்ற இணையத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் (உங்களுக்கு புரிந்தால்) வானொலி நிகழ்ச்சிகளை கேட்கலாம். ஆர்வம் இருந்தால் கேட்டுப்பாருங்கள். கேட்டுவிட்டு உஙக்ள் கருத்தை சொல்லுங்கள், நேரம் இருந்தால்.