கலைஞரின் என்டிடிவி பெட்டியை பற்றியும் பின்னால் ஜகா வாங்கியதை பற்றியும் எழுத நினைத்திருந்தேன். எழுத்தாளர் பா. ராகவன் நான் நினைத்ததை ஏறக்குறைய அப்படியே எழுதி இருக்கிறார். இந்த சருக்கலைப் பற்றி மட்டும் அல்லாமல் பல பின் புல செய்திகளையும் தொகுத்திருக்கிறார். என்னை விட அவர் மிக நன்றாக எழுதக் கூடியவர், அதனால் நீங்கள் எல்லாம் தப்பித்தீர்கள்!

கலைஞரை பற்றி நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது. தன் பேச்சு, எழுத்து திறமையால் பல ஜெனரேஷன்களை கவர்ந்தவர், அதே திறமையால் கட்சிக்கு ஒரு பலமான தொண்டர் தளத்தை உருவாக்கியவர், இப்போதெல்லாம் வீணாக ராமர் படித்த எஞ்சினியரிங் காலேஜ், அவாள் விடும் சவால், சட்டக் கல்லூரி கலவரத்தை தூண்டிவிடும் ஜெயலலிதா, என் நண்பன் பிரபாகரன் என்றெல்லாம் சொல்லி மாட்டிக் கொள்வது பாவமாக இருக்கிறது. Like watching a once great cricket player hanging on well past his prime. எங்கேயோ இருக்க வேண்டியவரால் சில பலவீனங்களை தவிர்க்க முடியவில்லை என்பது சோகம்தான். நவீன திருதராஷ்டிரன் வேறு!