சோவை பற்றி எழுதுவதாக முதலில் ஐடியா இல்லை. கொற்கை என்பவர் நான் ராஜாஜியை பற்றி எழுதியதும் அவர் “நீ பிராமணன், பிராமணன் பற்றிதான் எழுதுவாய்” என்ற ரேஞ்சில் ஒரு கமென்ட் விட்டார். அந்த கமென்ட் கிளப்பிய கடுப்பில்தான் – “பிராமணன் பற்றி எழுதுவது கொலைக் குற்றமா?” – இதை எழுதுகிறேன்.
சோவுக்கு பல முகங்கள் உண்டு. வக்கீல் (வெற்றி அடைந்தாரா தெரியாது), நாடக ஆசிரியர், நாடக, திரைப்பட நடிகர், அரசியல் இதழியலாளர் என்று.
வக்கீலாக என்ன செய்தாரோ எனக்கு தெரியாது.
அவர் அவ்வளவு நல்ல நடிகர் அல்லர். அவர் நன்றாக நடித்ததாக எனக்கு ஒரு திரைப்படம் கூட நினைவில்லை. ஆனால் கொஞ்ச நாள் அவர்தான் டாப் காமெடியன் ஆக இருந்தார். அவரது காமெடியும் வெகு சில படங்களிலேயே சோபித்தது. (வா வாத்யாரே ஊட்டாண்டே என்ன படம்? இடம் பெற்ற பொம்மலாட்டம், தேன் மழை) அரசியல் கலந்த காமெடி சில படங்களில் நன்றாக வந்தது (துக்ளக், அன்னபூரணி)
அவரது நாடகங்களை நான் பார்த்ததை விட படித்ததுதான் அதிகம். அவரது நாடகங்களில் நல்ல கதை அமைவது கஷ்டம். உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை, துக்ளக், சாத்திரம் சொன்னதில்லை மாதிரி சில நாடகங்களில்தான் கோர்வையான கதை அமைந்திருக்கும். அவரது நாடகங்களின் ஃபார்முலா ரொம்ப சிம்பிள். ஏதாவது ஒரு பிரச்சினை – ஜாதி, விபசாரம், உண்மை vs. பண பலம், லஞ்சம் என்று ஏதாவது ஒரு விஷயம் – அதை சுற்றி நிறைய அன்றைய அரசியல் பற்றிய அடிவெட்டுகள், கெக்கே பிக்கே ஜோக்குகள் இவற்றை வைத்து ஒரு நாடகம் பின்னி விடுவார். அவரது பாணி ஏறக்குறைய எம்.ஆர். ராதா பாணி. very topical comments. எழுத ரொம்ப அலட்டிக்கொள்வதில்லை. சில சமயம் Pygmalion, Tale of Two Cities போன்ற புகழ் பெற்ற இலக்கியங்களை தழுவியும் மனம் ஒரு குரங்கு, வந்தே மாதரம் போன்ற நாடகங்களை எழுதி இருக்கிறார். சில சமயம் ப்ளாட்டே இல்லாமல் சும்மா அரசியல் கமெண்ட்டுகளை வைத்து வாஷிங்டனில் நல்லதம்பி, கூவம் நதிக் கரையினிலே, சர்க்கார் புகுந்த வீடு, என்று தணியும் இந்த சுதந்திர தாகம் போன்ற நாவல்கள் மற்றும் நாடகங்களை எழுதி இருக்கிறார்.
அவரை கிரேக்க நாடக ஆசிரியரான அரிஸ்டோஃபனசுடன் ஒப்பிடலாம். அரசியல், சமூகம் பற்றிய கமெண்ட்கள்தான் அவருடைய ஸ்பெஷாலிடி. இருவரிடமும் ஒரே ப்ராப்ளம். அந்த கால கட்டத்தில் வாசிக்காதவர்களுக்கு அவர் எதை கிண்டல் செய்கிறார் என்று புரிவது கஷ்டம். அரிஸ்டோஃபனஸ் அன்றைய கிரேக்க அரசியல்வாதியான க்ளியானை கிண்டல் செய்வதை நாம் இன்று எப்படி முழுதாக புரிந்து கொள்ள முடியும்? சோவுக்கு உதாரணமாக ஒன்று – சர்க்கார் புகுந்த வீடு என்ற நாவலில் வரும் முக்கிய பாத்திரங்களான ரகுநாத ஐயர், கந்தசாமி இருவருக்கும் மளிகைக் கடையிலும் பால்காரரிடமும் கடன் தொந்தரவு. அவர்கள் நாராயணசாமி நாயுடுவிடம் ஆலோசனை கேட்கப் போவார்கள். அவர் “பொதுவா வாங்கின கடனை திருப்பி கொடுக்கக் கூடாது என்பதுதான் நம்ம கொள்கை” என்பார். இதற்கு நீங்கள் சிரித்தீர்கள் என்றால் எண்பதுகளில் நாயுடு நடத்திய போராட்டங்கள் உங்களுக்கு நினைவிருக்கிறது என்று அர்த்தம்.
அவர் ஷேக்ஸ்பியரோ, இப்சனோ இல்லை. ஆனால் அவருடைய எழுத்துக்கள் சிரிக்க வைப்பவை. சில சமயங்களில் நாடகம் அருமையாக வந்து விழுவதும் உண்டு. சாத்திரம் சொன்னதில்லை, துக்ளக், உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை, சர்க்கார் புகுந்த வீடு, கூவம் நதிக் கரையினிலே ஆகியவை படிக்க வேண்டியவை.
அவருடைய இதழியல் பணி குறிப்பிடப்பட வேண்டிய்து. துக்ளக் நடத்த முதல் ஐந்து ஆறு வருஷங்களாவது மிகுந்த துணிச்சல் வேண்டும். கலைஞர் அவருக்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்தினார். நெருக்கடி நிலையின் போது அவர் ஜெயிலுக்கு போய் அடி வாங்காதது ஆச்சரியம்தான். He made Thuglaq an institution! அவருக்கு பிறகு துக்ளக் வரப்போவதில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.
அவருடைய அபிப்ராயங்கள் சுலபமாக மாறுவதில்லை. காமராஜின் ஆட்சி பொற்காலம், மொரார்ஜி, சந்திரசேகர் போன்றவர்கள் அப்பழுக்கில்லாதவர்கள், வி.பி. சிங் ஒரு துரோகி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆகியோரை செலுத்துவது தேச பக்தியே, பெண் சுதந்திரம் என்பது பம்மாத்து, நரேந்திர மோடிதான் இன்றைய இந்தியாவின் சிறந்த தலைவர், புலிகள் அயோக்கியர்கள் இந்த மாதிரி பல. அவற்றை நல்ல நகைச்சுவையுடன் வெளிப்படுத்துவார். எழுபதுகளிலிருந்து தொண்ணூறுகள் வரை அவர் நடுநிலை தவறியதில்லை. நடுநிலை என்றால் எல்லா அரசியல் நிகழ்வுகளையும் ஒரே value system வைத்து பார்த்தார். அதனால் எம்ஜிஆர், கலைஞர், இந்திரா, ஜனதா கட்சி ஒருவரையும் விட்டதில்லை. மொரார்ஜி, காமராஜ் மீது அவருக்கு பெரும் மரியாதை இருந்தது, ஆனால் அவர்களது குறைகளையும் சொல்லுவார். ஒண்ணரை பக்க நாளேடுகள் சூப்பர்!
என்றைக்கு பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் சாத்தியக்கூறுகள் அதிகரிக்க ஆரம்பித்தனவோ, அன்றையிலிருந்து அவர் தனது நடுநிலையை தவற விட்டுவிட்டார். அவரது கண்ணோட்டத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நல்லது. அதனால் அவர் பா.ஜ.க.வின் முக்கிய குறையான முஸ்லீம் எதிர்ப்பு என்பதற்கு ஏதாவது சப்பைக்கட்டு கட்டுவார். நரேந்திர மோடி குஜராத்தை ஊழல் அற்ற மாநிலமாக மாற்றி இருக்கிறாராம். அங்கே வளர்ச்சி அதிகமாம். அவரை சாதாரண மனிதனும் சுலபமாக பார்க்கலாமாம். இவை எல்லாம் அங்கே நடந்த படுகொலைகளை நியாயபடுத்த முடியாது. அவரே ஒரு முறை சொன்ன மாதிரி, integrity is more important in a politician than efficiency.
அதே போல்தான் ஜெவும். கலைஞர் ஆட்சிக்கு வந்தால் புலிகளுக்கு ஆதரவு மறைமுகமாக தரப்படும், அது இந்தியாவுக்கு ஆபத்து என்று அவர் உறுதியாக நம்புகிறார். கலைஞருக்கு புலிகளை விட, தமிழர்களை விட பதவி முக்கியம் என்பது அவருக்கு புரியவில்லை. அதனால் ஜெ போன்ற ஒரு மோசமான சர்வாதிகாரி மேல் அவருக்கு ஒரு ஸாஃப்ட் கார்னர் இருக்கிறது.
அவர் நல்ல அறிவாளி. அரசியலில் ஒரு தீர்க்கதரிசி என்றே சொல்லலாம். புலிகளை பற்றி எண்பதுகளில் குறை சொன்ன ஒரே பத்திரிகையாளர் அவர்தான். புலிகள் ராஜீவ்-ஜெயவர்த்தனே உடன்பாட்டை நிறைவேற விடமாட்டார்கள் என்று சரியாக கணித்தார். வி.பி. சிங்கை ஆதரிப்பது ஜனதாவுக்கு தற்கொலைக்கு சமமானது என்று அவர் கணித்தது சரியாக அமைந்தது. சரண் சிங், ராஜ் நாராயண் ஆகியோர் மொரரஜியின் முதுகில் குத்தக்கூடும் என்று சந்தேகப்பட்டார். அப்படியே ஆயிற்று.
மொத்தத்தில் அவர் ஒரு நல்ல நாடக ஆசிரியர். தமிழில் நல்ல நாடக ஆசிரியர்கள் அபூர்வம். அதனால் அவரது நாடக பங்களிப்பு மிக பெரியதாக தெரிகிறது. அவரது நகைச்சுவை அற்புதமானது. கிட்டத்தட்ட இருபத்தைந்து வருஷங்கள் அவர் அரசியல், சமூகம் பற்றி பட்டையை கிளப்பும் நடுநிலையான கமெண்ட்களை போட்டு தாக்கி இருக்கிறார். ஆனால் ஒரு பத்து பதினைந்து வருஷங்களாக அவர் பா.ஜ.க. பக்கம் சாய்ந்துவிட்டார், அதனால் எல்லார் தவறுகளையும் போட்டு கிழிக்காமல், பா.ஜ.க.வுக்கு சப்பைக்கட்டு கட்ட ஆரம்பித்துவிட்டார். தான் நினைப்பதுதான் சரி என்று பிடிவாத குணமும், குதர்க்கம் பேசும் புத்தியும் அவருடைய குறைகள்தாம். அவர் நல்ல நடிகர் இல்லை. நகைச்சுவைக்காகவும், ஒரு நாடக ஆசிரியராகவும், தைரியமான, ஆனால் கடைசி நாட்களில் ஒரு பக்கம் சாய்ந்து விட்ட இதழியலாளர்/அரசியல் விமர்சகராகவும், நினைவு கூறப்பட வேண்டியவர்.
ஜனவரி 7, 2009 at 1:40 முப
I used to like CHO but now i dont hold him in the same respect as before. I think he is the only one in the whole of the universe who opposed the law “any one can become archakars”. I think he is becoming more caste conscious.
CHO is correct in feeling when MK comes terrorism booms in TN. Even though MK has great love for his power he is lax and even encourages tamil militancy by blabbering some seeds that would sprout tamil chauvinistic barbaric militancy. I think MK does this often to ward off criticism on his lousy corrupt govt. take for instance when the spectrum scam and the power problem were garnering the limelights of all newspapers he started the eelam issue. Now since sun tv has come back on to his fold and since the corruption issues have subsided he is not starting anything fresh and there is no protest even when kilinochi has been captured and 100 of thousands of tamils had to migrate out of kilinochi.
If he is not that caste conscious which he exhibited during the period when the all archakar law was passed i would rank CHO to be the greatest role model for all next only to Abdul kalam.
I like CHO’s acting in the movies. I think he is spontaeneous like RangaRao. You can feel how unlaboriously he can act out even the tough scenes unlike other actors including nagesh. I really find him a natural actor. you can feel he is not really acting but just blends as a normal person on the scene unlike sivaji and others.
ஜனவரி 7, 2009 at 5:20 பிப
I am surprised to hear that Cho opposed the law that allowed everyone to become an “archakar”. Doesn’t fit my image of Cho.
I am not a big fan of Sivaji’s trademark acting, though I think he is a very capable actor. If you look at our other blog – http://awardakodukkaranga.wordpress.com/ – you will find several people fighting with me for denigrating Sivaji’s acting in certain movies. My grouse against Cho is that he really plays only one role – whether he is Thuglaq, Ravutthar, that Telugu vakkeel in Unmaiye un vilai enna – nothing changes other than the costumes.
ஜனவரி 7, 2009 at 4:25 முப
சோ அவர்கள் பற்றி நான் எழுதியதை அதற்கான லேபல் கீழ் பார்க்கவும். http://dondu.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AF%8B
வக்கீலாகவும் அவர் வெற்றி பெற்றுள்ளார். இப்போது பெங்களூரிலிருந்து சென்னை திரும்பும் நேரம். ஆகவே அதிகமாக கூற இயலவில்லை. சென்னை வந்ததும் மேலே எழுதுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஜனவரி 7, 2009 at 5:13 பிப
டோண்டு அவர்களே,
சோ பற்றி நீங்கள் இவ்வளவு எழுதி இருப்பது தெரியாமல் போய்விட்டது. உங்கள் பழைய பதிவுகளை எப்போதாவது கொஞ்சம் நிதானமாக பார்க்க வேண்டும். நீங்கள் சோவின் முரட்டு பக்தர் போலிருக்கிறதே!
நான் அவரது அரசியல் பங்களிப்பு (மொரார்ஜிக்கு எம்ஜிஆரின் ஆதரவை பெற்று தந்தது, கலைஞர்+மூப்பனார்+ரஜினிகாந்த் கூட்டணியில் அவரது பங்கு, ஜெவுக்கு அவர் அளித்த ஆலோசனைகள் போன்றவை) பற்றி எதுவும் எழுத வில்லை. முழுதாக தெரியாத குறைதான்.
அவர் அவரது நாடகம் அல்லாத பல திரைப்படங்களுக்கு திரைக்கதை, கதை, வசனம் எழுதி இருக்கிறார் – எனக்கு ஞாபகம் இருப்பது நிறைகுடம் ஒன்றுதான். அதை பற்றியும் எனக்கு தெரியவில்லை.
உங்களுக்கு தெரிந்தால் ஒரு பதிவோ, இல்லை மறுமொழியிலோ எழுதுங்கள்.
உங்கள் பெங்களூர் பயணம் நல்லபடி அமைந்ததா?
ஜனவரி 7, 2009 at 9:53 முப
Whatever one may say about CHO, one just cannot wish him away. One cannot but admire his guts.
ஜனவரி 7, 2009 at 5:11 பிப
Krishnan,
He is indeed an exceptionally courageous person – his standing upto all political opponents, including the implementers of emergency is very admirable. But I don’t think Cho’s impact is great. He is very respected, but his circle is small.
ஜனவரி 7, 2009 at 1:30 பிப
good analysis about CHO. You have boldly critizised CHO’s soft corner for JJ, Modi and his blind support for BJP.
Nithil
ஜனவரி 7, 2009 at 5:09 பிப
Nilthil,
Thanks for the feedback. Appreciate it!
ஜனவரி 7, 2009 at 2:47 பிப
சோ அவர்கள் “துக்ளக்” பத்திரிக்கை ஆரம்பித்த சமயம் பல பிரபலங்களையும் அவர்கள் தன்னுடைய பத்திரிக்கை முயற்சியைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை ஒரு பேட்டியாக வெளியிட்டிருந்தார். சிவாஜி கணேசனுக்கு சோவினுடைய பத்திரிக்கை முயற்சியைப் பற்றி அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இல்லை. மதுவை நிரம்பக் குடித்த குரங்கை, தேள் கொட்டினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் துக்ளக் இதழும் இருக்கும் என்று வெளியிட்டிருந்ததை இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். தன்னை எவ்வளவு கீழ்த்தரமாக விமரிசனம் செய்தாலும், நிதானம் இழக்காமல், நகைச் சுவையோடு அதை எதிர் கொள்கிற பண்பு,
விமரிசனங்கள் அதிகம் எழுந்தால் தன்னுடைய நிலைபாட்டை அப்படியே உல்டா அடிக்கிற மனிதர்களிடையே தன்னுடைய கருத்தில் உறுதியாக இருக்கும் தைரியம், இப்படி சோ என்கிற மனிதரிடத்தில் நிறையவே அதிசயித்திருக்கிறேன். ஆனால் அதுவே உங்களுக்கு “தான் நினைப்பதுதான் சரி என்று பிடிவாத குணமும், குதர்க்கம் பேசும் புத்தியும் அவருடைய குறைகள்தாம்” என்று படுகிறது.
ஒரு நல்ல மனிதராக இருப்பவர், நல்ல நடிகனாகப் பெயர் எடுக்க வேண்டிய அவசியம் தான் என்ன? ஒரு நடிகர், வக்கீல், நாடக ஆசிரியர் என்பதை விட ஒரு தைரியமான பத்திரிக்கை ஆசிரியர் என்ற வகையிலேயே சோ அதிகம் அறியப்பட்டிருக்கிறார்; அதிகக் கல்லடியும், சொல்லடியும் பட்டிருக்கிறார். உங்கள் விமரிசனம் அவருடைய எந்த பரிமாணத்தைப் பற்றியதோ அதைப் பற்றியதாகவே இருந்தால், உடன்பாடோ, முரண்பாடோ சொல்ல முடியும். மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுபோட முயன்றிருப்பதாகவே எனக்குப் படுகிறது.
ஜனவரி 7, 2009 at 5:07 பிப
கிருஷ்ணமூர்த்தி அவர்களே,
தகவல்களுக்கும் மறுமொழிக்கும் நன்றி!
பிடிவாதத்துக்கும், உறுதிக்கும் ஒரு மயிரிழைதான் வித்தியாசம். உங்களுக்கு உறுதியாக படுவது எனக்கு பிடிவாதமாக படுகிறது, அவ்வளவுதான். குறிப்பாக அவர் பெண்கள் பற்றி எழுதுவதில் ஷாவினிசம் உண்டு, அதை அவர் பிடிவாதமாக மாற்றிக் கொள்ள மறுக்கிறார் என்பது என் கருத்து.
அவரது குதர்க்க புத்தி அவரே ஒத்துக் கொள்வது. உதாரணமாக அவர் தன் நாடகங்களுக்கு ஒரு காலத்தில் ஆங்கிலத்தில்தான் பெயர் வைப்பார் – ஒய் நாட் மட்டும்தான் இப்போது ஞாபகத்துக்கு வருகிறது. அப்படி ஆங்கில தலைப்பு உள்ள ஏதோ ஒரு நாடகத்துக்கு தலைமை தாங்க வந்த ஒரு பெரியவர் தலைப்பை ஆங்கிலத்தில் வைக்க வேண்டாமே என்று கேட்டுக் கொண்டார். உடனே சோ துள்ளி குதித்து வந்து நான் இவரது வேண்டுகோளை ஏற்கிறேன், என் அடுத்த நாடகத்தின் பேர் கோ வாடிஸ்? என்றார். (கோ வாடிஸ் என்பது லத்தீன். எங்கே போகிறாய் என்று அர்த்தம்)
// ஒரு நல்ல மனிதராக இருப்பவர், நல்ல நடிகனாகப் பெயர் எடுக்க வேண்டிய அவசியம் தான் என்ன? // ஒரு அவசியமும் இல்லை. ஆனால் அதுவும் அவரது ஆளுமையில் ஒரு பகுதி, அதனால் அதை பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன்.
// ஒரு நடிகர், வக்கீல், நாடக ஆசிரியர் என்பதை விட ஒரு தைரியமான பத்திரிக்கை ஆசிரியர் என்ற வகையிலேயே சோ அதிகம் அறியப்பட்டிருக்கிறார்; // மிகச் சரி. வார்த்தைகள் நன்றாக வந்து விழுந்திருக்கின்றன.
// உங்கள் விமரிசனம் அவருடைய எந்த பரிமாணத்தைப் பற்றியதோ அதைப் பற்றியதாகவே இருந்தால், உடன்பாடோ, முரண்பாடோ சொல்ல முடியும். // புரியவில்லை. அவரது இதழியல் பங்களிப்பை பற்றி இன்னும் நிறைய எழுதி இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா? நான் அவருடைய நாடக பங்களிப்பு அவ்வளவாக கண்டுகொள்ளப்படுவதில்லை என்று நினைக்கிறேன், அதனால் அதைப் பற்றி கொஞ்சம் விரிவாக எழுதி இருந்தேன்.
ஜனவரி 7, 2009 at 3:52 பிப
வா வாத்தியாரே வூட்டாண்ட இடம்பெற்ற படம் தேன்மழை அல்ல. பொம்மலாட்டம். இந்தப் படத்தில் மனோரமா சோவுக்கு கதாநாயகியாக நடித்திருந்தார்.
ஜனவரி 7, 2009 at 4:55 பிப
அனுராதா,
தகவலுக்கு நன்றி! போஸ்டை திருத்திவிட்டேன். வா வாத்யாரே இடம் பெற்ற படமும், தேன் மழையும் அவரது நல்ல காமெடி படங்கள் என்று எழுத நினைத்து ஏதோ குழப்பிவிட்டேன் போலிருக்கிறது.
ஜனவரி 10, 2009 at 10:59 முப
மறுபடியும் பின்னூட்டத்திற்கு ஒரு கோனார் தமிழ் உரை எழுத வைத்திருக்கிறீர்கள். மயிரிழைக்கு நீங்கள் வைத்திருக்கும் அளவுகோல் ஊரோடு ஒத்துப் போகிறதா இல்லையா என்பதை நீங்களே தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
சோ என்கிற மனிதரை எந்த அடிப்படையில், ஒரு வழக்கறிஞராக, நடிகராக, நாடக ஆசிரியராக, நாடக இயக்குனராக, அரசியல் விமரிசகராக, பத்திரிகையாளராக இதில் எந்தப்பரிமாணத்தை விமரிசனத்திற்கு எடுத்துக் கொள்கிறீர்களோ, அதைப்பற்றியதாகவே இருந்தால், பொருத்தமாக இருக்கும். நாடக ஆசிரியர் சோ எழுதியது எனக்குப் பிடிக்காது அதனால் துக்ளக்கில் அவர் எழுதும் அரசியல் விமரிசனங்களும் அப்படித்தான் என்கிற மாதிரி, ஒன்றை இன்னொன்றோடு முடிச்சுப் போடுவதைத் தான் மறுபடி சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
டோண்டு ராகவன் ஒரு லிங்க் கொடுத்திருக்கிறார்.அவருடைய வலைப் பதிவிற்குப் போனாலே சோ என்கிற தலைப்பில் 24 பதிவுகள் வகைப் படுத்தப் பட்டிருப்பதைப் பார்க்க முடியும். அதில் ஏதாவது ஒன்றைப் படித்திருந்தீர்களேயானால், சோ என்கிற மனிதரைப் பற்றிக் கொஞ்சம் கூடுதலாகத் தெரிந்து கொண்டிருக்க முடியும். இதைக் கூட, குறை சொல்வதற்காக அல்ல, ஒரு விஷயத்தைப் பற்றி விமரிசிக்கும் போது அதைப் பற்றி எவ்வளவு தெரிந்து கொள்ளமுடியுமோ அந்த அளவு தெரிந்து கொண்டு எழுதியிருந்தால், சிறப்பாக இருந்திருக்கும்.
Quo Vadis என்று அறிவித்தது, குறும்பாகப் படாமல் குதர்க்கமாகப் பட்டது சோ அவர்களுடைய குற்றம் அல்ல. தன்னையே கிண்டல் செய்து கொள்கிற தைரியம் இங்கு எவரிடத்திலும் நான் பார்த்ததில்லை. அவர் தன்னை குழப்பவாதி என்று கிண்டலாகச் சொல்லிக் கொள்வதை ரசிக்க முடியாதவர்களுக்கு உண்மையிலேயே அவர் ஒரு “குதர்க்கவாதி” “குழப்பவாதி” தான்!
ஜனவரி 10, 2009 at 7:46 பிப
கிருஷ்ணமூர்த்தி அவர்களே,
உங்கள் நீண்ட பதிவுக்கு – இல்லை இல்லை கோனார் உரைக்கு – நன்றி!
// மயிரிழைக்கு நீங்கள் வைத்திருக்கும் அளவுகோல் ஊரோடு ஒத்துப் போகிறதா இல்லையா என்பதை நீங்களே தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்.//
ஊரில் உள்ளவர்கள் சோவை பிடிவாதக்காரர் என்று சொல்கிறார்களா, இல்லை தைரியசாலி என்று சொல்கிறார்களா என்பது என் மதிப்பீட்டை பாதிக்கக்கூடாது அல்லவா? ஊர்க்காரர்கள் சொல்வதை திருப்பி சொல்லாமல் தன் சொந்த கருத்தை சொன்னதால்தான் உங்களுக்கும் சோவை பிடித்திருக்கிறது.
// சோ என்கிற மனிதரை எந்த அடிப்படையில், ஒரு வழக்கறிஞராக, நடிகராக, நாடக ஆசிரியராக, நாடக இயக்குனராக, அரசியல் விமரிசகராக, பத்திரிகையாளராக இதில் எந்தப்பரிமாணத்தை விமரிசனத்திற்கு எடுத்துக் கொள்கிறீர்களோ, அதைப்பற்றியதாகவே இருந்தால், பொருத்தமாக இருக்கும். // ஏதாவது வார்த்தைகள் மிஸ் ஆகிவிட்டனவா? என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லையே? எது எதை பற்றி இருந்தால் பொருத்தமாக இருக்கும்?
சோவின் பலதரப்பட்ட முகங்களை பற்றி சொல்லி இருக்கிறேன். அவரது வழக்கறிஞர் முகம் விமரிசனத்துக்கு உட்பட்டதா என்பதில் எனக்கு கொஞ்சம் சந்தேகம் உண்டு. நடிகர், நாடக ஆசிரியர், இயக்குனர், அரசியல் விமரிசகர், பத்திரிகையாளர் ஆகிய முகங்கள் விமர்சனத்துக்கு உட்பட்டவைதான்.
// நாடக ஆசிரியர் சோ எழுதியது எனக்குப் பிடிக்காது அதனால் துக்ளக்கில் அவர் எழுதும் அரசியல் விமரிசனங்களும் அப்படித்தான் என்கிற மாதிரி, ஒன்றை இன்னொன்றோடு முடிச்சுப் போடுவதைத் தான் மறுபடி சுட்டிக் காட்ட விரும்புகிறேன். //
எழுதியதை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தேன். அப்படி முடிச்சு போட்டதாக தெரியவில்லை. உங்களுக்கு எந்த வரிகள் அப்படி தோன்றுகிறது என்று சொன்னால் அதை இன்னும் விளக்கமாக எழுதிவிடலாம்.
// ஒரு விஷயத்தைப் பற்றி விமரிசிக்கும் போது அதைப் பற்றி எவ்வளவு தெரிந்து கொள்ளமுடியுமோ அந்த அளவு தெரிந்து கொண்டு எழுதியிருந்தால், சிறப்பாக இருந்திருக்கும். //
இல்லை, இது வரை எனக்கு தோன்றியதையே, என் ஞாபகத்திலிருந்தே, எழுத விரும்புகிறேன். ஏதாவது ரெஃபரன்சுக்கு வேண்டுமானால் நான் புத்தகங்களையோ, பதிவுகளையோ பார்க்கலாம். எம்ஜிஆர், கலைஞர், சோ போன்றவர்கள் நானும் பல வருஷமாக பார்த்து, படித்து ஒரு அபிப்ராயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். அந்த அபிப்ராயத்தையே இங்கே பதிக்க விரும்புகிறேன். In other words, I may look up facts – but the opinions I express are mine, and they have been formed over a period of years. My main goal is to record those opinions in these pages.
// Quo Vadis என்று அறிவித்தது, குறும்பாகப் படாமல் குதர்க்கமாகப் பட்டது சோ அவர்களுடைய குற்றம் அல்ல. //
குறும்புக்கும் குதர்க்கத்துக்கும் கூட ஒரு மயிரிழைதான் வித்தியாசம். 🙂
பிப்ரவரி 5, 2010 at 11:56 முப
கல்வித்துறை,காவல்த்துறை ஆகியவற்றில் எந்த மாற்றமும் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதும் ,லஞ்ச லாவண்ய அரசியல்வாதிகளைவிட வீ.பி சிங் மோசமானவர் என்று வாதம் செய்வதும் அவர் புத்திசாலிதனத்தை,நேர்மையை சந்தேகப்பட வைக்கிறது.விஜயன்.
பிப்ரவரி 5, 2010 at 5:33 பிப
விஜயன்,
சோவின் பிடிவாதம், ஒரு கருத்து உருவாகிவிட்டால் அதை மாற்றிக் கொள்ளாத மனம் ஆகியவை அவரே ஒத்துக் கொள்ளும் விஷயங்கள். வி.பி. சிங் அவருடைய ஆதர்சம் சந்திரசேகரின் rival என்பதாலேயே அவரை பற்றி நெகடிவ் கருத்து உருவாக்கிக் கொண்டாரோ என்று எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. கல்வி மற்றும் காவல் துறைகள் பற்றி எனக்கு தெரியவில்லை.
செப்ரெம்பர் 24, 2010 at 6:45 முப
comparison of stars and comedians – go thro Mr.R.P.Rajanayam blog. excellent and neutralized one
செப்ரெம்பர் 24, 2010 at 4:26 பிப
சோ அவர்களின் முரட்டு பக்தன் நான்,ஆனால் இலங்கை விசயத்தில் அவர் காட்டிய ஒரு தலைபட்சமான பார்வை என்னை போன்ற அவரது அறிவுக்கு தலை வணங்கிகளை கூட கொஞ்சம் மாற்றி விட்டது.
செப்ரெம்பர் 24, 2010 at 4:53 பிப
ரவிகுமார், இப்போதெலாம் ராஜநாயஹம் அவ்வளவாக எஹ்ழுதுவதில்லை என்பது கொஞ்சம் வருத்தமான விஷயம்தான்.
வல்லம் தமிழ், நானும் சோ போல என்பதுகளிளிருந்தே புலிகளைப் பற்றி நல்ல அபிப்ராயம் இல்லாதாவன். ஆனால் இப்போதெல்லாம் என்ன எழுதுகிறார் என்று தெரியாது.
செப்ரெம்பர் 25, 2010 at 5:52 முப
‘சோ’வைப்பொறுத்தவரை, எந்த ஆட்சியாளர்களானாலும் மக்களுக்கு இலவசங்களை வழங்குவதை கடுமையாக சாடினார். இலவசங்களைக்கொடுத்து மக்களை சோம்பேறிகளாக்குவதைவிட, எது ஒன்றையும் காசு கொடுத்தே வாங்க வேண்டும். அப்படி வாங்கும் அளவுக்கு அவர்கள் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதில் உறுதியானவர். இது நம் எல்லோருடைய (அல்லது நம்மில் பெரும்பாலோருடைய) கருத்துதான்.
ஜூனியர் விகடன், நக்கீரன் போன்ற ‘பரபரப்பு’ பத்திரிகைகள் வந்த பிறகு அவரது ‘துக்ளக்’ சர்குலேஷனில் ‘சற்று’ சரிவு கண்டது உண்மையே. அறிவுஜீவிகள் மட்டத்தில் குறையவில்லை. ஆனால் ‘பார்பர்-ஷாப்’ சர்குலேஷன்கள் சற்று இறங்கின.
செப்ரெம்பர் 25, 2010 at 7:11 பிப
சோ பற்றிய மறுமொழிக்கு நன்றி, சாரதா!
செப்ரெம்பர் 28, 2010 at 3:07 முப
தேவையில்லாத எல்லா விஷயங்களில் கூட தன மூக்கை நுழைக்கும் குணம் உடைய இவர்,தமிழ் நாட்டில் நிகழ்ந்த மிக முக்கியமான “சங்கராச்சாரியார் கைது” விஷயத்தில் மௌனம்
சாதித்தது இவர் மீது நான் வைத்திருந்த மதிப்பை பெரிதும் குறைத்தது.
இப்போ என் அபிப்பிராயம்….சோ ராமசாமியை விட traffic ராமசாமி சாதித்தது அதிகம்
செப்ரெம்பர் 28, 2010 at 8:21 பிப
கண்பத், சோ பற்றி எழுதிய மறுமொழிக்கு நன்றி!
ஜனவரி 18, 2013 at 7:30 பிப
தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டிருக்க மாட்டார் என்று எழுதிய சோ மவுனம் காத்தார் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?
செப்ரெம்பர் 29, 2010 at 5:24 முப
சோவின் புத்தகம் (சுயசரிதை?) “அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்” படித்துப்பாருங்கள். ரசிப்பீர்கள்.