ஜூலை 2011


(திரு ராமசாமியின் கட்டுரை – இரண்டாம் பாகம்)

விவரங்கள்  முழுமையாக  தெரியாத நிலையில்  அவை மூட நம்பிக்கைகளாக மதம் சார்ந்த  கோட்பாடுகளாக அமைகின்றன.
(உதாரணம்)   முன்னோர் திதி கழித்தல் :- இது  காலம் காலமாக இருந்து வரும் சடங்கு. முன்னோர் வாழ்த்து (ஆசி) பிள்ளைகளுக்கு  நல்லதொரு  வாழ்க்கையை அமைத்துத்தரும் என்ற நம்பிக்கை.  குறிப்பு;- அமாவாசை -மூன்று தலைமுறை  முன்னோரை நினைவு கூர்ந்து வழிபடுவது. இன்றும் இந்து பிராமணர்கள்  தொடர்ந்து செய்து வருவது -மஹாலய  அமாவாசை -அனைத்து இந்துக்களும் செய்வது
இந்த திதி கழித்தல் காசிக்கும் இராமேஸ்வரத்திற்கும் பாலமாக அமைகிறது அந்த இடங்களில்  திதி கழிப்பதை இந்துக்கள்  தலையாய கடமையாக எண்ணுகிறார்கள். மேலும்  கயாவில் திதி  கழிக்கும்போது –நம்  முன்னோர்களுக்கு மட்டுமல்ல – நமக்குததெரிந்த  தெரியாத  இறந்தவர்களுக்காக, விபத்தில் உயிர் இழந்தவர்களுக்காக, திதி கழிக்க இயலாதவர்களுக்காக,அனைத்து  மதம் சார்ந்தவர்களுக்காக ,வளர்ப்பு  பிராணிகளுக்காக பிரார்த்தனை செய்கிறோம், இது தான் இந்துத்துவத்தின் விரித்து பரந்த மனப்பாங்கு.
நடுகல் சடங்குகள்,கிராம தேவதைகள் ,அய்யனார் -இவையனைத்தும்  சமுதாய ஒற்றுமைக்கே.
ஆலயங்கள்,திருவிழாக்கள் -இவை மக்கள் ஓரிடத்தில் ஒன்று கூடி  ஒருவரையொருவர்  புரிந்து மனித நேயம்  வளர்வதற்கே. அதனால் தான் வந்த சொற்றொடர் “ஊர் கூடி தேர்  இழுத்தல்’. அனைத்து பிரிவினரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் சமூகம் ,கிராமம்,நகரம் நாடு ஆகியவை மேன்மையுறும்.
காது குத்துதல்,மெட்டி  அணிதல் -நம் உடலில் நிறைய நரம்பு முடிச்சுக்கள் உள்ளன இவையனைத்தும் மூளையுடன் தண்டுவடம் மூலம் தொடர்பு கொண்டவை. அதாவது  இன்றைய   “அகுபன்ச்சர  காதணி ,மூக்கில்  அணிவது,மெட்டி கொலுசு -ஆகியவை  வட்ட வடிவம் கொண்டவை நம் உடலுடன் சமச்சீரான முறையில் ஒட்டி உறவாடி நரம்பு மண்டலத்தையே செம்மையாக்குகின்றன.
மொட்டையடித்தல்:–நேர்த்திக்கடனாக மனிதன் மொட்டையடித்துக் கொள்கிறான். கொச்சையாக “உயிரைக் கொடுக்கிற சாமிக்கு மயிரைக்  ‘கொடுக்கிறான். சிகை என்பது மனிதனின் கௌரவச்  சின்னமாகும். அதை இழப்பது அவமானம் என கருதப் படுகிறது. மகா பாரதத்தில் அஸ்வத்தாமன் கொல்ல ப் படுவதில்லை.மாறா க  அவன் சிகை நீக்கப்படுகிறது. கௌரவம் அழிக்கப்படுகிறது. ஒருவனை மொட்டையடித்து வீதிகளில் ஊர்வலமாக அனுப்புதல் பெரிய தண்டனையாக கருதப்படுகிறது.அவமானம் என்பது மரணத்தை விட மோசமானது  . நேர்த்திக் கடனாக மொட்டையடித்துக் கொள்பவன் இறைவன் முன் சிகை நீக்கி ,தலை தாழ்த்தி அவமானத்
தை ஏற்று  தன  அடக்கத்தை வெளிப்படுத்துகிறான்.
நம் பெரியோர் சொன்னார்கள் என்பதனால் நாம் சடங்கைக் சடங்காக கண்மூடித்தனமாக பின்பற்றி வருகிறோம். அவற்றின் உட்பொருளைப்  புரிந்து  செயல்படாதது நம்மிடமுள்ள மிகப் பெரிய குறைபாடே. ஆனால் சடங்குகளைப் பற்றி விளக்கம் சொல்பவரும் பெருமளவில் இல்லை என்பதும்  நம்முடைய துரதிரூ ஷ்டமே. காலம்,தூரம் ,அறிவியல் முன்னேற்றம் என பலப்பல காரணம் காட்டி விலகி ஓடிவிடுகிறோம். ஆகவேதான் சடங்குகள் -  சில/பல இன்றைய காலகட்டத்திற்கு ஒவ்வாததாக இருதாலும்,பொருள் போதிந்தவையே ஆனாலும் அவை பொருளற்றவையாக வழக்கொழிந்தவையாக தோன்றுகின்றன

(தொடரும்)

தொடர்புடைய இடுகைகள்

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 3

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 2

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 1

(இந்தக் கட்டுரை திரு. ராமசாமி சுப்ரமணியம் அவர்களால் எழுதப்பட்டது.  திரு. ராமசாமி முதிர்ந்த வாசகர்.  காஞ்சி மடம் பற்றிய ஞானம் நிறைந்தவர். இந்த ப்ளாக்கின் சக ஆசிரியரான RVயின் தந்தையும் ஆவார். இவர்களின் குடும்ப நண்பன் என்ற வகையில் நான் அறிந்தது இது: தந்தையும் மகனும் இறை வழிபாட்டில் இரு துருவங்கள். திரு.ராமசாமி அவர்கள் இந்துச் சடங்குகளுக்கும், வழிபாடுகள், இந்து ஞானம், மடங்கள் முதலியவைகளுக்கும்  மடதிபதிகளான காஞ்சிப் பெரியவா சந்திரசேகர், ஜெயேந்திரர், விஜயேந்திரர் போன்றவர்களிடம் பக்தி மற்றும் மிகுந்த மரியாதை கொண்டவர். பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியர், மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் போன்ற பதவிகளிலிருந்து ஓய்வு பெற்றவர். RV (ப்ளாக் ஆசிரியர் மற்றும் என் நண்பன்) நவீன பொருளாதாரத்தில் வாழ்பவன். அவனுக்கு மேற்சொன்னவற்றில் முற்றிலும் வேறு காரணங்களுக்காக மதிப்பு இருந்தாலும் நிச்சயமாக பக்தி இல்லை.  அவனுக்கு “ரீசனிங்” (Reasoning)  என்பது முக்கியம். “நம்பிக்கை”யில் நம்பிக்கை ஓரளவே. அவனுடைய பழைய கட்டுரைகளை படித்து தந்தையின் கட்டுரைகளுடன் குழப்பிக் கொள்ளகூடாது எனபதனாலேயே இந்த தன்னிலை (அல்லது படற்கை விளக்கம்)

இது மூன்று பகுதிகளைக் கொண்டது. இது அவரின் எண்ணச் சிதறல்களின் முதல் பகுதி. ஓவர் டு திரு. ராமசாமி)

        இந்துத்துவம்

செய்தித்தாள்  தொலைக்காட்சி   எந்த ஊடகத்தைப்பார்த்தாலும்  கண்ணிலே அதிகமாகப்படும் முழக்கம்  இந்துத்துவம்  என்ற சொற்றொடரே! உடன் என் மனதில் தோன்றிய வினா ‘இந்துத்துவம்’ என்றால் என்ன? அதன் பதிலாகத்தோன்றிய  எண்ணச் சிதறல்களே இந்தத்தொகுப்பு.  மதம் என்பது வாழ்க்கை நெறிமுறை தானே? உச்சநீதிமன்றமும் இதைத்தானே உறுதி செய்கிறது. உண்மையும்  அதுதானே?அப்படி என்றால் இந்துத்துவம் என்பது இந்து மத பிரசார பீரங்கியா? ஒன்றுமே புரியவில்லை இருப்பினும் சிந்தனை விரிகிறது.

இந்து என்ற சொல்லே சிந்து என்பதன் மருவு தானே?அதேபோல் மாறுபட்டு வருகின்ற சமுதாயத்திலே மாற்றங்கள் ஏற்படும்போது இந்து என்ற சொல்லோடு மதமும் சேர்ந்து இந்து மதமாக மாறியதோ?அதன் தொடர்ச்சியாக இந்துத்துவமும் உருவாகியதோ?எது எப்படி இருந்தாலும் இந்து மற்றும் இந்துத்துவம் என்ற சொல் பெருமைக்குரியதுதானே! பிறர் அதை ஏன் குறைபடப் பேசுகிறார்கள்? நாம் ஏன் பொறுமை காக்கிறோம்? நாம் பெருமைப்படுவதும் இல்லை; சிறுமை கண்டு  பொங்குவதில்லை நம் பழக்க  வழக்கங்களையும்  சடங்குகளையும் -நம்மில் பலரும் இதில் பங்கு கொள்வோரே -எள்ளி நகையாடுகின்றனரே அவர்கள் ஆதியில் எந்த  மதத்தினைச்ச்சர்ந்ந்து இருந்தவர் என்பதை மறந்து விட்டனரே?அவர்கள் சார்ந்துள்ள இன்றைய மதத்தில்  சடங்குகள் கிடையாதா?
இதனை எதிர்கொள்ள இந்துத்துவம்  வலிமை பெற வேண்டாமா? நம்மைப்பற்றி  நாம் முதலில் தெரிந்துகொள்வோம், பெருமை கொள்வோம்.
இந்த சிந்தனை விரிந்தபோதுதான் திரு.அருணகிரி அவர்களின் இந்துத்துவம் -மூவகைப்பாகுபாடு என்ற கட்டுரையைக் காண நேர்ந்தது.முரண்பட்ட கருத்துக்களும் ஒற்றுமையை உருவாக்கும் என்பதை உணரமுடிந்தது அவர் பாகுபடுத்தியது.  என் எண்ணங்களை  வலுவாக்கியது.அவர் கண்ட  பகுப்பு பின்வருமாறு
சடங்கு  இந்துத்துவம் :-சடங்குகள் தோன்றிய காலம் எது?  வேத காலமாக இருக்கலாமா? வேதங்கள் என்ன கூறுகின்றன?
உருக்குவேதம்  கோட்பாடுகளை வரையறுக்கின்றது. இயற்கை  சீற்றத்தை எதிர்கொள்ள முடியாத நிலையில் இயற்கை சக்திகளெல்லாம் கடவுளாக உருவகப்படுத்தப்பட்டன. மனிதனது தேவைக்கேற்ப வேண்டுதல்கள்  வைக்கப்பட்டன. கேள்வி-பதில் என்ற முறையில் கல்வி குருகுலத்தில் கற்பிக்கப்பட்டது. வாய்மொழிப்பாடம் தான். ஏனெனில்  வேதங்கள் அனைத்தும் எழுதாக் கிலவிகள் தாமே.  “நேதி ,நேதி “-இது இல்லை,அது இல்லை இப்படி பல விஷயங்களைத் தவிர்த்து  கடைசியில் முடிவு எட்டப்பட்டது.
உருக்கு  வேதத்தில் சொல்லப்பட்ட கொள்கைகளை செயல்படுத்தும் வகையில்   யசுர்  வேதத்தில் செயல்பாடுகள் (சடங்குகள்) அறிமுகப்படுத்தப்பட்டன அனைத்து சமயங்களிலும் சடங்குகள் உண்டு  செயல்பாடுகளை எளிதில் நினைவு  கூறத்தக்க வகையில் சாமவேதம் இசையாக அமைந்தது. அதர்வ வேதம் தான்த்ரீக முறை அறிவியல் கோட்பாடுகள்  கொண்டது   அனைத்து வேதங்களுமே இறை வழிபாடே  யன்றி  வேறொன்றுமில்லை
சடங்குகளைச் செயல்படுத்தும்போது உயிர்ப்பலி  கூட  அவசியம் என ஏற்றுக்கொள்ளப்பட்டது  ஏனெனில் விவசாயம் அன்று முழு வளர்ச்சி பெறவில்லை  எளிதில்  கிடைத்த உணவு இறைச்சியும்  காய்கனிகளுமே இந்த சடங்குகளை எதிர்க்கும் வகையில் -முக்கியமாக பிராணி வதை  தடுக்கக்கோரி புதிய மதங்கள் -பௌத்தமும் சமணமும்  தோன்றின.
இன்று கூட இந்துத்துவத்தில் சடங்குகள் பின்பற்றப்பட்டு   வருகின்றன அவற்றுள் பல ஆழ்ந்த பொருள் பொதிந்தவையே. இவை சமுதாயக்கட்டமைப்பை உருவாக்குகின்றன  என்பது ஏற்கப்படவேண்டிய கருத்தே அவை தொடர்ந்து  பின்பற்றப்பட்டு வருவதும் உண்மையே ஆனால் அவை ஏன் பின்பற்றப்பட்டன  என்பதை விளக்கிச்சொல்வார் யாருமில்லை.

(தொடரும்)

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 3

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 2

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 1

ItsDiff Radio Show -

அபூர்வ ராகங்கள்

by Simulation Sundar

with Sri on July 20, 2011

7:30 AM PST (INDIAN TIME 8:00 PM)

அபூர்வ ராகங்கள் – கர்நாடக இசையில்

தமிழ் திரைப்பாடல்கள்

LIVE

ItsDiff Radio அல்லது Tamizhradio.com

Every Wednesday between 6AM to 9AM PST

(INDIAN TIME – 6:30PM to 9:30PM)

1919 ஆம் ஆண்டு. முதலாம் உலகப் போர் முடிந்திருந்தது.

அதன் முடிவுகள் துருக்கியில் ஆட்டோமேன் சாம்ராஜ்யம் நடத்தி வந்த காலிஃபட்டை பாதித்துக் கொண்டிருந்தது. காலிஃபெட் என்பது அரசாங்கம் இஸ்லாமிய சட்டங்களை அமல் படுத்தி அரசு நடத்தும் முறை. ஆட்டோமேன் சாம்ராஜ்யத்தின் சுல்தான் அப்போதைய காலிஃப்ஃபாக இருந்து வந்தார்.ஆட்டோமேன் பேரரசு பாதுகாத்து வந்த அகில இஸ்லாமிய பிரந்தியத்திலிருந்தும் காலிஃபேட்டிலிருந்தும் எகிப்து, சிரியா போன்ற பல நாடுகள் பிரிவதற்கு பிரிட்டிஷ் அரசு அனுமதித்திருந்தது. இதனால் இந்திய இஸ்லாமியத் தலைவர் ஒருவர் மனம் கலங்கினார். காலிஃபேட்டை காப்பாற்ற முயற்சி எடுத்தார்.

பிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்தஃபா கெமால் அட்டொடர்க் என்ற மேற்கத்திய சார்புள்ள துருக்கியர் மூலமாக துருக்கியில் மேற்கத்திய கொள்கை சீர்த்திருத்தங்களை புகுத்துவதை இஸ்லாமிய மத அரசியலில் தலையிடுவதாக அந்தத் தலைவர் எண்ணினார். மேலும் இந்தியாவின் விடுதலையில் பெரிதும் அக்கறை கொண்டிருந்தார். இந்தப் பிண்ணனியில் இந்தியாவில் பிற இஸ்லாமிய தலைவர்களுடன் சேர்ந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தினார். அதன் பெயர் கிலாஃபட் இயக்கம். இந்த இயக்கத்தின் மூலம் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் துருக்கிய தலையீட்டை எதிர்த்து போராட முடிவு செய்தார். இதற்காக லண்டனுக்கு 1919ல் பயணம் மேற்கொண்ட குழுவில் இடம்பெற்றார். பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முஸ்தாஃபா கெமாலை துருக்கிய சுல்டானுக்கு எதிராக செயல்படுவதை தடுக்க கோரிக்கை விடுத்தார். இந்தியா திரும்பியதும் போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்க முயன்றார்.

அப்பொழுது இந்திய சுதந்திரத்திற்க்காக இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் பல போராட்டங்கள் நடத்தி வந்தனர். கிலாஃபட் இயக்கத்திற்கும், இந்திய தேசிய காங்கிரஸிர்க்கும் பொதுவான பகைவராக இருந்து வந்தது பிர்ட்டிஷ் பேரரசு. தலைவருக்கு ஏற்கனவே இந்திய விடுதலையில் ஆர்வம் இருந்ததால் மகாத்மா காந்தியுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். அந்த உடன் படிக்கையின் படி கிலாஃபட் இயக்கமும் காங்கிரஸும் இணைந்து ஒத்துழையாமை போராட்டத்தை நடத்தியது. ஆனால் 1922ல் ஷவ்ரி ஷவ்ராவில் நடந்த வன்முறை போராட்டத்தினால் காந்தியடிகள் போராட்டத்தை கைவிட நேர்ந்தது. மேலும் தலைவர் நடத்திய போராட்டத்தை முதலிலிருந்தே தேசிய போரட்டமாக பார்க்க விரும்பாத சில காங்கிரஸ் தலைவர்களும் இந்து மஹாசபா தலைவர்களும் அவருடன் ஒத்துழைக்க மறுத்தனர். இதனால் தலைவர் பெருத்த ஏமாற்றம் அடைந்தார்.

இவருக்கு ஒரு கனவு இருந்து வந்தது. அதை அவர் இவ்வாறு கூறுகிறார் – ”ஒரு நாள் இந்தியாவின் அனைத்து மதங்களும் இணையும் என்பதே என் கனவு”.

ஆனாலும் அவருடைய போரட்டங்களை நிறுத்தவில்லை. முதலாம் வட்ட மேஜை மாநாட்டில் காந்தியடிகளுடன் கலந்து கொண்டார்.

இவர் 1931ல் காலமானார்.

அந்தத் தலைவர் மௌலானா முகமத் அலி.

ItsDiff Radio Show -

ஒலிச்சித்திரம்

by Bags

with Sri on July 13, 2011

7:30 AM PST (INDIAN TIME 8:00 PM)

Title – நினைவில் நிற்பவை

LIVE

ItsDiff Radio அல்லது Tamizhradio.com

Every Wednesday between 6AM to 9AM PST

(INDIAN TIME – 6:30PM to 9:30PM)

ஒரு மைசூர் சம்பவம்.

Jun 8, 2011
Human-elephant conflict turned fatal in Mysore as two wild tuskers  entered the
city. One of the elephants gored a security guard to death  before it was
subdued and taken away.

 

(Photos – Courtesy The Hindu)

ஜூன் 20, 1909.

லண்டனிலுள்ள இந்தியா ஹவுஸில் ஒரு திட்டம் ஒன்று உருவாகிக் கொண்டிருந்தது. இந்திய தேச விடுதலைக்காக ஒரு புரட்சி வீரன் அன்று ஒரு முக்கிய பணியை முன்னிட்டு  வீர் சாவர்க்கருடன் சில முடிவுகளை எடுத்துக் கொண்டிருந்தான். புரட்சி வீரன் அமைதியாக திட்டத்தை விவரித்துக் கொண்டிருந்தான். சாவர்க்காரின் சம்மதத்தைப் பெற்றான். இறுதியில் ஜூலை ஒன்றாம் நாள் அந்தப் திட்டத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. திட்டத்தின் படி அந்த புரட்சி வீரன் ஒரு ஆங்கிலேயரை கொலை செய்யும் கடமையை ஏற்றுக் கொண்டான்

இதன் பின்புலம் என்ன?

”இண்டியா ஹவுஸ்” என்பது வீர் சாவர்க்கரால் தேச பக்தியை ஒருங்கிணைப்பதற்கும், பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து போராடுவதற்க்காகவும் லண்டனில் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. இதில் அனேகமாக லண்டனுக்கு பல்வேறு துறைகளில் கல்வி பயில வந்த தேச பக்தி மிகுந்த மாணவர்கள் உறுப்பினர்களாக இருந்து வந்தார்கள். இதனால் இண்டியா ஹவுஸ் பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு ஒரு பெரிய அறைகூவலாகவே இருந்து வந்தது.

பிரிட்டிஷ் அரசும் தன் பங்குக்கு ஒரு அமைப்பை போற்றி வளர்த்து வந்தது. அது தேசிய இந்திய கூட்டமைப்பு என்ற பெயரில் லண்டனில் இயங்கி வந்தது. இதன் முக்கிய நோக்கங்களுள் ஒன்று லண்டனுக்கு கல்வி கற்க சென்ற இளைஞர்கள் இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபடுவார்களேயானால் மூளை சலவை செய்து அவர்களை தேசபக்தியற்றவர்களாக செய்வதாகும். அதன் செயலாளர் எம்மா ஜோசஃபின் என்னும் அம்மையார். பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தக் அமைப்பின் அங்கத்தினர்களை மூளை சலவை செய்வதற்க்காக மூவர் அடங்கிய ஒரு கமிட்டியை உருவாக்கியிருந்தது. அந்தக் கமிட்டியின் முக்கிய உறுப்பினர் சர் வில்லியம் கர்ஸன் வைலி. கர்ஸன் வைலியின் தந்திரத்தினால் பல இந்திய இளைஞர்கள் இதயத்தில் குடியிருந்த இந்திய விடுதலை போராட்டம் என்ற மாயை விலகி தேசபக்தியை கைவிட்டனர். இதனால் கொதிப்படைந்தது ”இண்டியா ஹவுஸ்”.

அன்று அந்தத் திட்டம் வகுக்கப்பட்டதன காரணம் இதுவே. புரட்சி வீரன் எம்மா அம்மையாரை நட்பு செய்து கொண்டான். பின்னர் அவருடைய அமைப்பில் முழு உறுப்பினரானான். பின்னர் ஜூலை 1, 1909ல் தேசிய இந்திய கூட்டமைப்பு வருடாந்திர தினத்தை கொண்டாடுவதற்க்காக இம்பீரியல் இன்ஸ்டிடுயூட் ஜெஹங்கீர் ஹாலிற்கு வந்த கர்ஸன் வைலியை சுட்டுக் கொன்றான்.

விரைவில் அவனுக்கு தூக்கு தண்டனை வழங்கியது பிரிட்டிஷ் அரசு. அவனும் அதையே விரும்பினான். காரணம், அப்பொழுதுதான் மேலும் பல இந்திய இளைஞர்கள் கொதிப்படைந்து தேச விடுதலைக்குப் போராட முன் வருவார்கள் என்பதே.

அந்த புரட்சி வீரன் மதன்லால் திங்க்ரா.

1905 ஆம் ஆண்டு.இந்திய தேசிய காங்கிரஸின் வளர்ச்சிக்கு அயாராது உழைத்து வந்த தலைவர் ஒருவர் அந்த ஆண்டில் அதன் பிரெசிடெண்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக 1889ஆம் ஆண்டு முதல் உறுப்பினராக இருந்து வந்த இவர் சமுதாய சீர்த்திருத்தத்திற்க்காக அயராது உழைத்து வந்தார். பால கங்காதர திலகர், லாலா லஜ்பட் ராய், தாதாபாய் நவ்ரோஜி, பிபின் சந்திர பால் முதலியோருடன் சேர்ந்து பல ஆண்டுகளாக இந்தியர்களுக்கு தங்கள் நாட்டு அரசாங்கத்தில் அதிகமான அரசியல் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று ஆங்கிலேயர்களுடன் போராடி வந்தார்.  சராசரி இந்தியர்களுக்கு பொது நல திட்டங்களில் முழு அதிகாரம் வேண்டும் என்பதும் அந்த போரட்டத்தின் கோரிக்கையாகும். ஆனால் ஆங்கிலேயர்கள் எதற்கும் செவி சாய்க்கவில்லை.

மிதவாத கொள்கைகளில் நம்பிக்கை வைத்திருந்த அவர், போராட்ட முறைகளில் கையாண்ட கருவிகள் வாதங்கள் மற்றும் தருக்கங்கள் ஆகும். இதனால் அவருக்கு ஆங்கிலேயர்களிடம் பெரு மதிப்பு இருந்தது. இந்தியர்களின் பல கோரிக்கைகள் நியாமானதாக ஆங்கிலேய அரசாங்கம் கருத காரணமானது இவரது அணுகுமுறை. ஆனால் அப்பொழுது அவருடன் இந்திய தேசிய காங்கிரஸில் வளர்ந்து வந்த திலகர் போன்ற தீவிர தேசியவாதிகளுடன் அவருக்கு எப்பொழுதும் ஒரு பிணக்கு இருந்து வந்தது. 1906ல் திலகரை காங்கிரஸிர்க்கு பிரெசிடண்டாக தேர்ந்தெடுப்பதை எதிர்த்தார். இதனால் பலரின் ஆதரவை இவர் இழக்க நேரிட்டது. ஆனாலும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் தன் போராட்டங்களை தொடர்ந்தார்.

இவரின் அரசாங்கத்தில் இந்தியர்களின் பிரதிநிதித்துவத்தை உயர்த்தவேண்டும், அரசாங்கத்தில் முழுச் சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கைகள் பரிசீலனைக்கு ஆங்கிலேயர்களால் உட்படுத்தப்பட்டன. பிட்டிஷ் பார்லிமெண்டில் ”இந்தியன் கவுன்சில்ஸ் ஆக்ட்” (Indian Countcils Act 1909) என்ற சீர்திருத்த மசோதா ஜான் மார்லி மற்றும் இந்திய கவர்னர் ஜெனரல் “The Earl of Minto”வாலும்  கொண்டு வரப்பட்டது. இந்தச் சீர்திருத்தங்களே மிண்ட்டோ-மார்லி சீர்திருத்தங்கள் என்று பிரபலமாக அழைக்கபட்டு வந்தது. இதன் விளைவாக இந்தியர்கள் அரசாங்கத்தில் அதிக அளவில் பங்கேற்க முடிந்தது. ஆனால் காங்கிரஸை பொறுத்த வரையில்  அது திருப்தி தராத ஏமாற்றமாகவே இருந்து வந்தது. முழுச் சுதந்திரம் வந்தால் தான் இந்தியர்களால் நிறைவு அடையமுடியும் என்று நம்பினார் அந்தத் தலைவர். என்றாலும் ஆங்கிலேயர்களுடன் சுமுகமான பேச்சுவார்த்தைகளை கைவிடவில்லை. இவருடைய ராஜீய நடைமுறைகள் மேலும் மேலும் ஆங்கிலேயர்களிடம் அவருக்கு நன்மதிப்பை பெற்று தந்தது.

இவரது மதிப்பினால் ஆங்கிலேய அரசாங்கத்திலும் பெரும் பதவிகள் வகித்தார். Imperial Legislative Council சேவைக்கு இவர் அழைக்கப்பட்டார். CIE என்று சொல்லப்படும்  Companion of the Order of the Indian Empire என்ற பதவியிலும் இருந்தார். மேலும் மகாத்மா காந்திக்கும் மொகமட் அலி ஜின்னாவிற்குமே இவர் நல்ல வழி நடத்துபவராக இருந்தார். தன் கலிவியினாலும், அறிவினாலும் இந்திய அரசியலில் பெரிதும் மதிக்கத் தக்க மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை ஆங்கிலேயர்களுக்கு உருவாக்கிய பெரும் பங்கு இவரைச் சேரும். 1915ல் தனது 49வது வயதில் உடல் நலம் குன்றி இயற்கை எய்தினார்.

அந்தத் தலைவர் கோபால கிருஷண் கோகலே.

(For ItsDiff Radio 06/29/2011)

ஆகஸ்ட் 9, 1925

மாலை சுமார் 7 மணி முப்பது நிமிடங்கள்.
ஆலம்நகர் நோக்கி சென்று கொண்டிருந்த 8ஆம் எண் புகைவண்டி கக்கோரி கிராமத்தை கடந்து கொண்டிருந்தது. கக்கோரி கிராமம் லக்நோவிலிருந்து சுமார் 14 மைல் தொலைவில் உள்ளது. புகை வண்டியில் பயணிகளாக இருந்த இந்தியர்களும், ஆங்கிலேயர்களும் தங்கள் இரவு சிற்றுண்டிக்கு தயாராகி கொண்டிருந்தனர். அதே தருணத்தில் அதே புகை வண்டியில் பத்து பேர் அடங்கிய புரட்சி குழு ஒன்று அன்றைய திட்டமிட்ட புரட்சிக்கு தங்களை தயார் செய்து கொண்டிருந்தது. அதன் தலைவன் ஒரு புரட்சிக் கவிஞன். தக்க சமயம் வந்தவுடன் புரட்சிக் குழுவின் உறுப்பினர்களை திட்டமிட்டபடி அவரவர்களுக்கு உரிய இடத்திற்கு பிரிந்து செல்ல உத்தரவு கொடுத்தான். அவர்களுடைய அன்றைய திட்டம் – ஆங்கிலேய அரசை எதிர்த்து நடத்தும் தங்கள் புரட்சி நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டும் பொருட்டு அந்த புகைவண்டியில் எடுத்துச் செல்லப்படும் அரசு நிதியை சூரையாடுவதாகும்.

நான்கு பேர் அடங்கிய குழு புகைவண்டியின் கார்ட் இருக்கும் எஞ்சின் பகுதிக்கு சென்றது. வண்டியை நிறுத்துமாறு அவருக்கு உத்தரவு கொடுத்தனர். வண்டி நின்றது. கொள்ளைகூட்டம் என்று கருதி பயணிகள் அமைதியாக இருந்தனர். திட்டமிட்டபடி எல்லாம் நடப்பதாக உணர்ந்த தலைவன் அடுத்த கட்ட நடவடிக்கையான ஆங்கிலேய அரசின் பணப் பெட்டியை அபகரிக்கும் பணியில் இறங்கினான். பணம் அடங்கிய ஒரு இரும்பு பெட்டியை கண்டு பிடித்தார்கள். அதனை உடைக்க பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. மிக உறுதியாக இருந்த அந்த பாதுகாப்பு பெட்டியை பெரிய சுத்தியல் கொண்டு பலமாக அடித்தனர். பெட்டி சற்றும் தளராவில்லை. திட்டமிட்ட நேரம் முடிந்து கொண்டிருந்தது. மிகுந்த பதட்டத்தில் இருந்த அந்த புரட்சிக் குழு என்ன செய்வதென்று திகைத்தனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக மேலும் ஒரு தடங்கல்.உருவாகியது. திடீரென்று டெஹ்ராடூன் செல்லும் விரைவு புகைவண்டி எதிர் திசையில் தோன்றியது. புரட்சிக் குழு உயிர் சேதமில்லாமல் தாங்கள் வந்த காரியத்தை முடிக்க வேண்டும் என்று விரும்பினர். ஆனால் எதிரில் வரும் புகைவண்டி வந்து மோதி தாங்கள் மட்டுமல்லாமல் அங்கிருக்கும் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களும் பலியாகிவிடுவார்களோ என்று செய்வதறியாது மிகவும் கவலையடைந்தான் தலைவன். ஆனால் அதிஷ்டவசமாக எதிரில் வந்த புகைவண்டி அருகிலிருந்த வேறோரு தடத்தில் வந்தது. அதன் கார்ட் 8ஆம் எண் புகைவண்டி நிற்பதைப் பார்த்து சந்தேகம் அடைந்து அவர் புகைவண்டியையும் நிறுத்தி உதவிக்கு வந்து விடுவாரோ என்று கவலை கொண்டான். அதிர்ஷடவசமாக அப்படி எதுவும் நடக்கவில்லை. பின்னர் அவர்கள் வெற்றிகரமாக பெட்டியிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாயினர். இந்தச் சம்பவம் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் கக்கோரி ரயில் கொள்ளை என்று வர்ணிக்கப்பட்டது.

ஆனால் மிக விரைவில் கொள்ளை கும்பல் கண்டுபிடிக்கப்பட்டது. தலைவன் தூக்கிலேற்றப்பட்டான். அன்று சிறைக்கு வந்திருந்த அவனுடைய தாய் அவனைப் பார்த்து கல்ங்கவில்லை. மாறாக அவனுடைய வீர நடவடிக்கைகளைப் பாராட்டினார். அவன் வந்தே மாதரம் என்று முழங்கி கொண்டே தூக்கு கயிற்றை தன் கழுத்தில் மாட்டிக் கொண்டான்.

அந்த புரட்சி கூட்டத்தின் தலைவன் ராம்பிரசாத் பிஸ்மில்.

(For ItsDiff Radio – 06/22/2011)

Follow

Get every new post delivered to your Inbox.

Join 59 other followers