மார்ச் 2011


ஏப்ரல் 18, 1859. குவாலியரிலிருந்து 75ந்து மைல் தொலைவிலுள்ள ஷிவ்புரி.
மாலை நான்கு மணி.
இடம் – தூக்குமேடை.

கைதி – நானா சாகிப்பின் தளபதி.

தளபதி புன்முறுவலுடன் தன் முகத்தில் கறுப்பு திரையை அணிவிக்க வந்த வீரர்களை தடுத்து நிறுத்தினான்.
”இதெல்லாம் எனக்கு தேவையில்லை” என்று சொல்லியவாறு தன் கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டிக் கொண்டு வீர மரணம் எய்தினான்.

தளபதியின் மரணத்திற்கு பிண்ணனி என்ன?

1857 ஆம் ஆண்டு இந்திய முதல் சுதந்திர போராட்டம் சூடுபிடித்துக் கொண்டிருந்தது. கிழக்கிந்திய  கம்பெனியிடம் ராஜியத்தை இழந்து ஒய்வூதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் கான்பூரின் அருகேயுள்ள பிரம்மவர்த்தா என்ற நகரில் தஞ்சம் அடைந்திருந்தார் இரண்டாம் பாஜி ராவ். டல்கௌசி பிரபு, பாஜி ராவின்  மகன் நானா சாகிபிற்கு ஓய்வூதியத்தை கொடுக்க மறுத்தார். ஏற்கனவே கம்பெனியின் அநீதிகளையும்  மக்களுக்கு விளைவித்த கொடுமைகளையும் பார்த்துக் கொதிப்படைந்த நானா சாகிபும், புரட்சி தளபதியும் இனியும் பொறுத்திறுக்க விரும்பவில்லை. அடிமை தனத்தை உடைத்து நாட்டை பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுவிக்க முடிவு செய்தனர்.

நானா சாகிபும், தளபதியும் மே 31 1857ல் ஒரு பெரும் புரட்சிக்கு திட்டம் வகுத்தனர் . குறித்த நேரத்தில் ஜான்சியை ராணி லெக்‌ஷ்மிபாயும், கான்பூர் பிரம்மவர்த்தா பகுதிகளை நம் தளபதியும் தாக்கினர்.வெற்றியும் பெற்றனர், நானா சாகிப் மன்னராக அறிவிக்கப்பட்டார். ஆனால் கான்பூரில் படையை பெருக்கிய பிரிட்டிஷ் அரசாங்கம் விரைவிலேயே கான்பூரை மீட்டது.

புரட்சி தளபதி, நானா சாகிபுடனும், படைகளுடனும் பின் வாங்கினான். பின்னர் தனித்தனியாக தலை மறைவாக இருந்து தாக்க திட்டமிட்டான். இதுவரை இணை பிரியாமலிருந்த நானாசாகிபும் புரட்சி வீரனும் விரைவிலேயே தங்கள் தேசத்தின் விடுதலைக்காக பிரிய நேர்ந்தது.

கொரில்லா போர்முறையில் வல்லவனான தளபதி, ஷிவராஜபுரம், கான்பூர் முதலிய இடங்களை வெற்றிகரமாக முற்றுகையிட்டான். பிரிட்டிஷ் படையினர் மின்னலென தாக்கும் தளபதியிடமும், அவனுடைய படையினிடமும் செய்வதறியாது திகைத்தனர். தளபதி விரைவில் கல்பி என்னும் நகரை முற்றுகையிட்டான். கல்பியை ஆயுதம் தயாரிக்கும் ராணுவகிடங்காக மற்றினான். குவாலியரில் கிளர்ச்சியைத் தூண்டினான்.

அதன் பின்னர் பிரிட்டிஷிடம் சிறை பிடிக்கப் பட்ட தன் தோழியான லக்‌ஷ்மிபாயை மீட்க ஜான்சியை நோக்கி தன் படையுடன் முன்னேறினான். ஆனால் தளபதியின் ஆவேசமான தாக்குதலில் கலங்கியிருந்த பிரிட்டிஷ் படை இம்முறை நன்கு திட்டம் தீட்டியிருந்தது. தளபதியை சிறைபிடிக்க ஜான்சியில் காத்திருந்தது, அடுத்து அடுத்து வெற்றிகளைப் பார்த்து வந்த தளபதியின் படை சற்றே அசட்டையுடன் ஜான்சியை அணுகியது. அதனால் தளபதி வீரமாக போரிட்டாலும், அவன் படை பிரிட்டிஷ் படையின் தாக்குதலை எதிர் கொள்ள முடியாமல் சின்னா பின்னமாகியது. தளபதி மட்டும் தப்பி ஓடினான். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் அவன் சென்று தஞ்சம் அடையக் கூடிய நண்பன் மான் சிங்கை வளைத்து கையூட்டுக் கொடுத்தது. கையூட்டில மயங்கிய மான் சிங் அவனிடம் வந்த தளபதியை காட்டிக் கொடுத்தான்.

அந்த தளபதி தாந்தியா தோப்பே.

For ItsDiff Radio

Archives of this programs are available here

 

 

ItsDiff Radio Show -

A Special Program

by Rajan and Balaji

with Sri on March 23 2011

7:30 AM PST (INDIAN TIME 8:00 PM)

Title – Tamilnadu Assembly Election Analysis

LIVE

ItsDiff Radio

Every Wednesday between 6AM to 9AM PST

(INDIAN TIME – 6:30PM to 9:30PM)

 

1925ஆம் வருடம். பர்தோலி தாலுகா. குஜராத் மாநிலம்.

பெருவெள்ளத்தினாலும் கடும் பஞ்சத்தினாலும் விவசாயிகள் அவதியுற்றுக் கொண்டிருக்கிறார்கள். இரக்கமற்ற ஆங்கிலேய அரசு இந்த ஏழை விவசாயிகள் மீது முப்பது சதவிகித வருமான வரியை உயர்த்தியது. விவசாயிகள் தவிக்கிறார்கள். அவர்கள் ஒரு மாபெரும் விடுதலை போராட்ட வீரரை அணுகினார்கள்.

“ஐயா, எங்களுடைய ஒரே நம்பிக்கை நீங்கள்தான். எங்களை இந்தக் கொடிய வரியிலிருந்து காப்பாற்றுங்கள்” என்று மன்றாடினார்கள்

“இதற்கு தீர்வு அரசாங்கத்தை எதிர்த்துப் போராடவேண்டும். அதனால் வரும் பின்விளைவுகள் நீங்கள் இப்பொழுது அனுபவிப்பதை காட்டிலும் கொடுமையானதாக இருக்கலாம். உங்கள் சொத்துக்க்களை இழக்க  நேரிடும். உங்கள் குடும்பத்தினர் பசியாலும், பஞ்சத்தினாலும் அவதிப்படுவார்கள். இதையெல்லாம் நீங்கள் சந்திக்கத் தயாரா?”என்றார் அந்தத் தலைவர்.

“நாங்கள் தயார், நாங்கள் அநீதிக்கு கட்டுப்படுவதைவிட உயிரை விடவும் தயார்”

விவசாயிகளின் இந்த உறுதியை உணர்ந்த தலைவர் அவர்களுக்காக போராட முன் வந்தார். முறையாக பம்பாய்  மாநில ஆளுனருக்கு பிரச்சனையை எடுத்துரைத்து வரியை ரத்து செய்ய வேண்டுகோள் விடுத்து ஒரு கடிதம் எழுதினார். அரசு தரப்பிலிருந்து அதற்கு எந்த பதிலும் வரவிலை. மாறாக வரி வசூலிப்பு நாளை அறிவித்தது அரசாங்கம்.

”என்ன இறுமாப்பு, நம் போராட்டத்தின் அடுத்த நடவடிக்கையை எடுக்க வேளை வந்துவிட்டது. அதன்படி ஒருவரும் வரி கொடுக்கக் கூடாது” என்று விவசாயிகளுக்கு அறிவித்தார் தலைவர். வரப்போகும் அபாயங்களுக்கு தங்களை தயார் செய்தார். பர்தோலியை பல பகுதிகளாக பிரித்து பகுதிக்கு ஒரு தலைவரையும் தொண்டர்களையும் நியமித்தார். ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு தகவல் சொல்ல ஏற்பாடுகள் செய்தார்.

அரசாங்கம் குண்டர்களை விவசாயிகளின் கிராமங்களுக்கு அனுப்பியது. அவர்கள் வீட்டில் புகுந்து விவசாயிகளை துன்புறுத்தினார்கள். பெண்களை இழிவு படுத்தினார்கள். வீட்டிலிருந்த பொருட்களையும், தானியங்களையும் சூறையாடினார்கள். ஆனால் விவசாயிகள் உறுதியுடன் இருந்தார்கள் இந்த வனமுறைகளை சமாளிக்க தலைவர் விவசாயிகளை கிராமங்களை விட்டு தலைமறைவாகச் சொன்னார். காலியாய் இருந்த கிராமங்களிலிருந்து வரி வசூலிக்க முடியாமல் அரசாங்கம் திணறியது.

முடிவில் ஆங்கிலேய அரசாங்கம் தோல்வி அடைந்தது. வரி ரத்து செய்யப்பட்டது. அரசாங்கம் அபகரித்திருந்த வீடுகளை மீட்டுக் கொடுத்தார் தலைவர். அவருடைய நாட்டுப் பணி தொடர்ந்தது. 600 பகுதிகளாக இருந்த நிலப்பரப்பை ஒருங்கிணைத்து இந்தியா என்ற ஒரு தேசத்தை உருவாக்கினார்.

அந்தத் தலைவர் சர்தார் வல்லபாய் படேல்.

நாடக வடிவம் – Bags

(For ItsDiff Radio)

ItsDiff Radio Show Archives by RV and Bags

ItsDiff Radio Show Archives

Mar 16 2011
Social NetworkingSocial Networking –  Blogs,
Twitter, Facebook, Orkut et all

Part 1

Part 2

Bags & RV

ItsDiff Radio Show by RV and Bags

with Sri on March 16 2011

7:30 AM PST (INDIAN TIME 8:00 PM)

Title – Social Networks and Blogs

LIVE

ItsDiff Radio

Every Wednesday between 6AM to 9AM PST

(INDIAN TIME – 6:30PM to 9:30PM)

ஏப்ரல் முதல் வாரம், 1908 – கல்கத்தா

ஒரு இல்லத்தில் ஜுகந்தர் குழு புரட்சி வீரர்களின் கூட்டம் நடைபெறுகிறது. அனறைய கடமை – வந்தே மாதரம் என்று கோஷமிட தயாராகிக் கொண்டிருந்த சுஷீல் குமார் சென் என்ற தேசிய கல்லூரி மாணவனை நிர்வாணப் படுத்தி கசையடிக் கொடுக்க உத்தரவிட்ட  Majistrate Kingsfordஐ கொல்வது பற்றி திட்டம் தீட்டுவது. முடிவில் 18 வயதே நிறைந்திருந்த ஒரு புரட்சி வீரனும் அவன் நண்பன் ப்ரொஃபுல்ல குமார் ஷாக்கியும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

பரவசமடைந்த புரட்சிக் காரனிடம் தலைவர் அந்த திட்டத்தின் அபாயத்தினைக் கூறி இதை சாதிக்க முடியுமா என்று கேட்டதற்கு, அவன் அமைதியாக ஆனால் உறுதியுடன் கூறுகிறான்: “நான் பிடிபட்டால் ஆங்கிலேயர்கள் என்னை தூக்கிலிடலாம். எனக்கு தந்தை, தாய் மற்றும் அனைவருமே என் பாரத மாதா தான். பாரதத்திற்க்காக என் உயிர் தியாகம் எனக்கு பெருமையானது. நான் நம் நாடு சுதந்திரம் அடையும் வரையில் மீண்டும் மீண்டும் பிறந்து வருவேன். மீண்டும் மீண்டும் தியாகம் செய்வேன்”.

அதைக் கேட்ட தலைவர் மிகவும் சந்தோஷமடைந்தார். வீரனுக்கும் ப்ரொஃபுல்ல குமாருக்கும் தலா ஒரு ரிவால்வர், வெடிகுண்டு மற்றும் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்.

ஏப்ரல் 30 1908 – Muzzaffarpur ஐரோப்பிய மன மகிழ் மன்றம் வாயிலில் புரட்சிக் காரனும் அவனது நண்பனும் கைத்துப்பாக்கிகளுடனும், வெடிகுண்டுகளுகடனும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தூரத்தில் குதிரை கோச் வண்டி வருவதைப் பார்க்கிறான் வீரன். கோச் நெருங்குகிறது. வீரன் தயாராகிறான். மிக அருகாமையில் வந்தவுடன், கையிலிருந்த வெடிகுண்டை கோச்சின் மீது எறிகிறான். வீரன் எறிந்த அந்த வெடிகுண்டு தான் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் எறியப்பட்ட முதல் வெடிகுண்டு. கோச் வெடித்துச் சிதறுகிறது. வெவ்வேறு திசைகளில் ஓடி மறைகிறார்கள் புரட்சிகாரர்கள் இருவரும்.

ஆனால் கோச்சின் உள்ளே Majistrate Kingsford இல்லை. அதிலிருந்த ஒரு நண்பரின் மகளும் வேலையாளும் இறையாகிறார்கள். செய்தியைக் கேட்ட Majistrate Kingsford மிகவும் பீதியடைந்து மேஜிஸ்திரேட் பதவியை துறந்தார்.

மறுநாள் காவலர்கள் புரட்சிக் காரனை  கைது செய்தனர். விரைவில் வழக்கு முடிவிற்கு வந்தது. மரண தண்டனை விதிக்கப் பட்ட புரட்சிக் காரன் நீதி மன்றத்தில் சொல்ல விரும்பிய கடைசி செய்தி “என் வருத்தமெல்லாம் Majistrate Kingsford தண்டனைப் பெறாமல் தப்பிவிட்டான் எனபதே”.

அந்தப் புரட்சிக் காரனின் பெயர் குதிராம் போஸ்.

நாடக வடிவம் – பக்ஸ்

(For ItsDiff Radio)

Mar 9
2011
Tamil/ Hindi
tunes
Tamil/ Hindi tunes – Tamil
& Hindi Films
Quick review of Tamil and
Hindi film songs that have
similar/ same tunes
Part 1

Part 2

Bags and Sri

RVயும் Bagsம் Itsdiff வானொலிக்காக ஸ்ரீயுடன் சேர்ந்து கொடுக்கவிருந்த நிகழ்ச்சி ஒரு சில தொழில்நுட்ப கோளாறினால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் ஒரு லைட் ப்ரொக்ராம் ஏற்பாடு ஆகியிருக்கிறது.

நிகழ்ச்சியின் பெயர்

இங்கும்-அங்கும்

(ஒரெ மெட்டில் ஹிந்தி தமிழ் பாடல்கள்)

March 9th 7. 30 am PST Very special program

Ingum/Angum

Hindi/ Tamil – Songs with similar tunes -Live

(இந்திய நேரப்படி புதன் இரவு – 8:30 )

Tune in and Enjoy the show

The archives of the below program are now available in ItsDiff.com

Date
Special Show/
Theme
Images
Additional Information
Archives
Presented

by

Feb 26
2011
Malaysia
Vasudevan
Special tribute to the
great singer Malaysia
Vasudevan – Tamil film
play back singer
Part 1Part 2

 

Ashok

________________________________________________

A Tribute to Malaysia Vasudevan  by It’s Diff Radio -LIVE

This Wednesday (Feb 23 1011) at 7:30 AM Pacific Standard Time and 9 PM Indian Standard Time

You can hear ItsDiff Radio from 6AM to 9 AM PST  (7:30 PM to 10:30 PM IST) every Wednesday

Date
Special Show/
Theme
Images/ picture
Additional Information
Archives
Presented by
Feb 26
2011
Malaysia
Vasudevan
Special tribute to the
great singer Malaysia
Vasudevan – Tamil film
play back singer
Part 1

Part 2

 

Ashok

(இதன் ஒரு பகுதி மீள்பதிவு)

சமீபத்தில் மலேசியா வாசுதேவன் மரணம் அடைந்தார். பெரும் பாடகர். சாதித்தவர். அவரை பற்றி பேசுவதற்கு நல்ல விஷயங்கள் தான் நமக்கு கிடைக்கிறது. யூலஜி ஒன்றும் யதார்தத்திற்கு புறம்பாக இருக்கப் போவதில்லை. ஆனால் யூலஜி என்பது புகழ்ந்து சொல்ல வேண்டிய ஒன்று என்ற ஒரே காரணத்திற்க்காக உண்மைக்கு புறம்மபான விஷயங்களை கூறுவது சந்தர்பத்தை பயன்படுத்தி  சமூகத்தை மூளைச் சலவை செய்வதற்கு ஒப்பான அறமற்ற செயல். அரசியல் ஆதாயங்களுக்காக அந்த காலத்திலிருந்து இன்று வரை கட்சிகள் யூலஜியை ஒரு கருவியாக உபயோகப் படுத்திக் கொண்டு வருகிறது.

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. முதலில் இங்கிருந்து துவங்கலாம். ஒரு செயலை எல்லோரும் நல்ல விஷயத்தில் துவங்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் தேர்தல் என்பதும் கெட்டவிஷயம். தேர்தல் முடிந்த பின்னரும் வரும் முடிவுகளும் கெட்ட சமபவம் தான். அடுத்த ஐந்து ஆண்டுகளும் கெட்ட சமபவங்கள் தான். நல்ல காலம், ஐந்து ஆண்டுகள் கெட்ட காலம் முடிந்து அடுத்த கெட்ட காலத்திற்கு உண்டான சமபவங்கள் துவங்கிவிடும். அதனால் மரணம் என்ற ஒரு சமபவத்தோடு தொடர்புடைய ஒன்று இந்த தேர்தல் களத்திற்கு பொருத்தமான ஒன்றே. (சில புரட்சிக் கட்சிகள் தேய்பிறை, வளர்பிறை, ஜாதகம்,  எல்லாம் பார்த்து பார்த்து முடிவுகள் எடுத்துக் கொண்டிருக்கின்றன. நாம் எதிர் திசையில் செல்வோம்)

கெட்ட சமபவங்களை நெருங்கிக் கொண்டிருக்கும் நாம், கொஞ்சம் துணிவுடன் தான் அதை எதிர்கொள்வோமே என்ற ஒரு எண்ணமே ஒழிய இதைப் படித்த பின்னர் நாமெல்லாம் கிளம்பி மக்களை மனம் திருத்தி மகாத்மா காந்திகளை சட்ட சபைக்கு அனுப்புவோம் என்ற நப்பாசையெல்லாம் கிடையாது.

இது ஜெயகாந்தன் அண்ணாவிற்கு அளித்த யூலஜி

(பை த வே, ஜெயகாந்தன் திமுகவையும், அண்ணாவையும் இங்கே குறிப்பிட்டிருந்ததால் மற்ற கட்சிகளும் தலைவர்களும் அப்படியில்லை என்று நம்பி விடவேண்டாம்.  காம்ராஜ் கூறியது போல் அனைத்துக் கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்)

ஓவர் டு ஜெயகாந்தன்

”இங்கே வந்திருக்கிற நீங்கள் அண்ணாதுரையின் மரணத்துக்குக் கூடிய கும்பலை ஒத்தவர்கள் அல்லர். நீங்கள் அங்கேயும் போயிருந்திருக்கலாம். எனினும், அந்தக் கும்பலில் நீங்கள் கரைந்து விடவில்லை. எனவேதான், நீங்கள் இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கிறீர்கள். கும்பல் என்பது கூடிக் கலைவது; கூட்டம் என்பது கூடி வாழ்வது. கும்பல் என்பது கூடி அழிப்பது, கூட்டம் என்பது கூடி உருவாக்குவது. வன்முறையையும் காலித்தனத்தையும் கும்பல் கைக்கொள்ளும்; ஆனால், சந்திக்காது. கூட்டம் என்பது அடக்குமுறையையும், சர்வாதிகாரத்தையும் நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும், சத்யாக்கிரகத்தாலும் சந்திக்கும்.

அண்ணாதுரையின் மரணத்துக்குக் கூடிய அந்தக் கும்பல் எவ்வளவு பெரிது எனினும் இந்தக் கூட்டம் அதனினும் வலிது. கலைகின்ற கும்பல் கரைந்த பிறகு அந்தக் கும்பலில் பங்கு கொண்ட, அந்தக் கும்பலால் பாதிக்கப்பட்ட மனிதர்களை ஒரு கூட்டமாகச் சந்திப்பதற்கு நான் இங்கு அழைக்கிறேன். இது எனது தனித்த குரலே ஆயினும் இது காலத்தின் குரல் என்பதனைக் கண்டு கொள்ளுங்கள். இந்தக் குரலுக்கு வந்து கூடுகின்ற இந்தக் கூட்டம், பதட்டமில்லாதது; நாகரிக மரபுகள் அறிந்தது; சிந்தனைத் தெளிவுடையது. இதற்கு ஒரு நோக்கமும், இலக்கும், குறியும், நெறியும், நிதானமும் உண்டு…

ஆனால் கும்பலுக்கு எல்லாமே ஒரு வேடிக்கை. மரணம் உட்பட. கூட்டம் இனிது கூடும்.; இனிது நிறைவேறும். கும்பல் எதற்கு என்று தெரியாமல் கூடும்; எப்படி என்று தெரியாது கலையும். கும்பல் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளூம் இருக்கிற அறியாமையின், பைத்தியக்காரத்தனத்தின் மொத்த உருவம்; அது ஒவ்வொரு மனிதனிலும் இருக்கின்ற மிருகங்கள் வெளிவந்து ஊளையிட்டு உறுமித் திரிகிற வேட்டைக் காடு. கும்பல் ஒரு பலமல்ல; அது பலவீனங்களின் தொகுப்பு. கோழை அங்கேதான் கொலை வெறியனாகிறான்; பேடி அங்கேதான் காமப்பிசாசாகிறான்…

காலஞ்சென்ற அண்ணாதுரையைப் பற்றி எனக்கு முன்னால் பல நண்பர்கள் பேசினார்கள். அவர்களது நல்உணர்ச்சிகளைப் புண்படுத்துகிற நோக்கம் எனக்கில்லை. ஆனாலும் அண்ணாதுரையைப் பற்றிய எனது சரியான உணர்ச்சிகளை இங்கே நான் சொல்ல வந்திருக்கிறேன்.

இறந்துபோன ஒருவரைப் பற்றி அவர் நமது எதிரியாக இருந்தாலும் நாலு வார்த்தை நல்லதாகச் சொல்ல வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அரசியல் நோக்கம் கருதி வரப்போகும் தேர்தலை மனத்துள் கொண்டு தமிழகத்தில் ஒரு மாயையை உருவாக்குகிற மாரீசத்தனத்தைத் தி.மு.க. தொடர்ந்து செய்வதற்கு அண்ணாதுரையின் பிணத்தையும், அந்தச் சமாதியையும் பயன்படுத்துவதை, பயன்படுத்தப் போவதை அனுமதிப்பது நாகரிகமும் அல்ல; நல்லதும் அல்ல. சமூக ரீதியாக, கலாசார ரீதியாக, அரசியல் ரீதியாக அண்ணாதுரை இருந்தாலும் எனக்கு எதிரிதான்; இறந்தாலும் எனக்கு எதிரிதான். தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு எதிரியும் அல்ல; நண்பரும் அல்ல. அவரைப் பற்றிய எனது முடிவுகளை ஒரு தனிமனிதனின் மரணத்தின் பொருட்டு நான் கைவிட முடியாது.

அண்ணாதுரையின் மறைவினால் அவர் இந்திய அரசியலில் பிரிட்டிஷ்காரர்களின் கையாளாக நமக்கு அறிமுகம் ஆனவர் என்ற உண்மை மறைந்துவிடுவதில்லை. நாத்திகம், சமூக சீர்திருத்தம் என்ற அசட்டுத்தனங்களில் சிக்கி நமது இலக்கியங்களையும், புராணங்களையும், ஹிந்து சமயத்தையும் பாமரத்தனமாக விமர்சனம் செய்து பாமரர் மத்தியில் புகழடைந்தார் என்கிற உண்மையும் மறைந்து விடாது. அவர் எழுதிய குப்பைப் புத்தகங்களெல்லாம் அவரது மரணத்தை எருவாகக் கொண்டு குருக்கத்திப் பூக்களாய் மலர்ந்துவிடப் போவதில்லை. அவர் சம்பந்தப்பட்ட எல்லாமே இரவல். இரவலே ஆயினும் அதை அவர் ஒப்புக் கொள்ளாததால் அது இலக்கியத் திருட்டு. அதற்கும்மேல் அவரது இரவல் சரக்குகள் எத்தகையது என்பதை அறிகிற பொழுது, அவரது தரம் மிகவும் தாழ்ந்தது என்கிற உண்மையையும் இந்த மரணம் வந்து மறைத்துவிடப் போவதில்லை.

அவரை அறிஞர் என்று மூடர்களே அழைக்கலாயினர். அவரைப் பேரறிஞர் என்றூ பெருமூடர்களே அழைக்கலாயினர். நகைச்சுவை எழுத்தாளர் என்று பெயரெடுத்திருந்த கல்கி அவர்கள் பத்திரிகையில் எழுதிய ஒரு நாடக விமர்சனத்தில் அண்ணாதுரையை பெர்னாட்ஷா என்று வஞ்சகப் புகழ்ச்சி செய்திருக்கிறார். தமிழர்களே! உங்களுடைய தற்காலத் தகுதிக்கு இவர்தான் பெர்னாட்ஷா என்பதாகவே அதை நான் புரிந்து கொண்டேன்.

பாமரத்தனமான நாடகங்களும், மெளடாகத்தனமான பகுத்தறிவு வாதங்களும், தமிழறிவில்லாத, ஆனால் தமிழார்வமுடைய மக்களின் மூடத் தமிழ்ப் பற்றினாலும் பார்ப்பன எதிர்ப்பு என்னும் ஓர் அநாகரிக நடைமுறையினாலும், காங்கிரஸ் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு என்னும் கொச்சை அரசியலினாலும் ஏதோ ஒரு ஜனக்கும்பலை வசீகரிக்கிற அண்ணாதுரை எனது கவனத்தைக் கூடத் தன்பால் இழுத்ததில்லை…

அரசியல்வாதிகள் – அதாவது ஓட்டு வாங்கி, பதவியைப் பிடித்து அதன் மூலம் தங்கள் கொள்கைப்படி தேசத்தை மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தோடு பல கொடிகளின் கீழ் லட்சியத்துக்காகப் பணியாற்றுகிறவர்கள் – அண்ணாதுரையின் தயவை நாடினார்கள். அதற்காக அண்ணாதுரையும், தி.மு.கழகமும் அவர்களோடு பேரம் நடத்தியதுண்டு.

‘எல்லாவிதமான பலவீனங்களையும் தனக்கும், தனது கழகத்துக்கும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு சமுதாய நாணயத்திலும், அரசியல் நாணயத்திலும் மிகவும் பலவீனப்பட்டுப் போன அண்ணாதுரையை தி.மு. கழகம் தனது தலைவராக வரித்துக் கொண்டதில் ஆச்சரியமில்லை…

கலைத்துறை, இலக்கியத்துறை, மொழித்துறை, பொருளாதாரத்துறை, எல்லாமும் சங்கமிக்கிற சமுதாயத்துறை ஆகிய எல்லாவற்றிலும் அண்ணாதுரை எடுத்துக் கொண்ட நிலைகள் தரம் குறைந்து தாழ்ந்து, மூடர்களையும் முரடர்களையும் மட்டுமே சார்ந்து இருந்ததை நான் எப்படி மறப்பேன் ?

அண்ணாதுரை, தான் கைக்கொண்ட எல்லாக் கொள்கைகளையும் ஒரு கட்டத்துக்குப் பிறகு கைகழுவிக் கொண்டுதானிருந்தார். அதற்காகவும் அவரைப் பாராட்ட முடியவில்லை.

ஏனெனில் ஒரு கருத்து தவறானதென்றல் அதைக் கைவிட்டு விடத்தான் வேண்டும்; இது பாமரர்க்கும் அறிஞர்க்கும் பொது. ஆனால் பாமரன் மறுபடியும் ஒரு புதிய தவறிலே சிக்குவான். அண்ணாதுரை தனது வாழ்க்கை முழுவதிலும் புதிய புதிய தவறுகளையே செய்து கொண்டிருந்தார். பொய்யையும் சாகசத்தையும் தமது அரசியலுக்கு மூலதனமாகக் கொண்டிருந்த அண்ணாதுரை, தன்னைப் பற்றிய உண்மைகளை ஒரு உயிலாகக் கூட எழுதி வைக்கவில்லை.

பண்டித ஜவஹர்லால் நேரு பத்தாண்டுகளுக்கு முன்னாலேயே தமது மரண சாசனத்தை எழுதி வைத்திருந்தார். தம்மை நாத்திகர்கள் என்று அழைத்து கொண்ட கார்ல் மார்க்சும் எங்கெல்சும் தங்களது மரண சாசனத்தை எழுதி வைத்திருந்தனர். மகாத்மா காந்தியடிகள் எழுதியதெல்லாம் அவரது வாழ்க்கையின் சாசனமே. இவர்களின் மீதெல்லாம் மரியாதை வைத்திருக்கிற நான், அண்ணாதுரைக்கும் அதே விதமான மரியாதையை எப்படித் தர முடியும் ?

எந்த ஒரு மரணமும் எப்படி எனக்கு வருத்தம் தருமோ, அதே போல அண்ணாதுரையின் மரணத்துக்கு மனிதாபிமானமும் மரியாதையும் மிகுந்த முறையில் எனக்கும் வருத்தம் உண்டு. எனது எதிரிகூட நீண்ட நாள் வாழ்ந்து என்னிடம் தோல்வியை அடைய வேண்டுமென்றே நான் விரும்புவேன். ஒரு மரணத்தின் மூலம் அவன் தப்பிச் செல்வது எனக்கு சம்மதமில்லை. எதிரிகளை வெல்ல வேண்டும். அழிப்பது கூடாது. கொடிய நோய்களினாலும், கோரமான விபத்துக்களினாலும் அவர்கள் அழிந்து படுவது கடவுள் சாட்சியாக எனக்குச் சம்மதமில்லை; அந்த அழிவில் லாபம் காண்பதும், மகிழ்ச்சியுறுவதும் காட்டுமிராண்டித்தனமானது….

என்னைப் போலவே இந்த உண்மைகளை உணர்ந்திருந்தும், பெருந்தன்மை கருதியோ அல்லது பேசமுடியாமலோ நீங்கள் மெளனமாயிருக்கிறீர்கள். அந்த மரணத்தையும் இந்த மெளனத்தையும் சமூகத்தின் எதிரிகள் பயன்படுத்துகிறார்கள். நான் ஆரம்பித்த பத்திரிகை கூட அண்ணாதுரைக்கு ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறது. எனக்கென்று ஒரு பத்திரிகை இல்லாத கொடுமையை நான் இப்போது அனுபவிக்கிறேன் ‘ – என்றெல்லாம் ஒரு மணி நேரத்துக்கு மேல் நான் அந்தக் கூட்டத்தில் பேசினேன்.”

- ஜெயகாந்தன்  (ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்)

(இட்லிவடை தளத்தில் வேறொரு காலகட்டத்தில் வெளியிடப்பட்டது. நன்றி)

வட ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு புரட்சிக்கு காரணம் 2009ல் நாமெல்லாம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது வகுக்கப்பட்ட ”இது”வாக இருக்கலாம் என்று நண்பர் ஒருவர் ஐயப் படுகிறார். அந்த “இது”  ஹில்லேரி கிளிண்டனின்  Civil Society 2.0

(ஒரு விளக்கம் – இங்கே நண்பர் என்று நான் குறிப்பிட்டது   – திரு.அருணகிரி . இவர் சொல்வனம்.காம் பத்திரிக்கையில் எழுதுபவர்.  திரு.அருணகிரி மிகவும் ஞானம் நிறந்தவர் என்பது நான் சொல்ல வேண்டியதில்லை. அவருடைய இது பற்றிய விளக்கமான கட்டுரை சொல்வனத்தில் விரைவில் வெளிவருகிறது.  சிவில் சொசைட்டி 2.0 பற்றி இந்த கோணத்தில் முதலில் பார்த்தவர் இவரே. )

 

5 மில்லியன் டாலர் பைலட் ப்ரொகிராமில் தொடங்கிய ”மாணியம்” (நம் ஊரில் இதற்கு ஒரு நல்ல பெயர் உண்டே? என்ன சார் அது?) அமோகமாக வேலை செய்கிறது.

பரவாயில்லை இரண்டு வருடத்தில் வேலை மும்மரமாகத் தான் நடந்திருக்கிறது.

முழுச் செய்தி

03 November 2009

State Department on Civil Society 2.0 Initiative

Initiative to help grassroots organizations use digital technology

(begin text)

U.S. DEPARTMENT OF STATE
Office of the Spokesman
For Immediate Release
November 3, 2009

MEDIA NOTE

Secretary Clinton Announces Civil Society 2.0 Initiative to Build Capacity of Grassroots Organizations

In her remarks today to the Forum for the Future, Secretary Clinton announced Civil Society 2.0, which will help grassroots organizations around the world use digital technology to tell their stories, build their memberships and support bases, and connect to their community of peers around the world.

Building the capacity of grassroots civil society organizations will enable them to do the work that, in the past, Western NGOs and governments have done. With increased capacity, communities are better able to initiate, administer and sustain their own programs and solutions to shared problems.

“Civil Society 2.0” includes the following components:

1. Deploying a team of experienced technologists to work with civil society organizations around the globe to provide training and support to build their digital capacity. The competencies developed in the trainings will include:

• How to build a website

• How to blog

• How to launch a text messaging campaign

• How to build an online community

• How to leverage social networks for a cause

2. Partnering these technologists with local civil society organizations and governments to develop and implement technology-based solutions to local problems.

3. Publishing interactive “how to” programs and curriculum online to help organizations that do not have access to in-person assistance.

4. Creating a curated open platform that allows any citizen or company to develop, share or suggest content for the curriculum.

5. Allocating $5 million in grant funds for pilot programs in the Middle East and North Africa that will bolster the new media and networking capabilities of civil society organizations and promote online learning in the region.

The United States is a strong supporter of civil society around the world. Civil society activists and organizations work to improve the quality of people’s lives and protect their rights, hold leaders accountable to their constituents, shine light on abuses in both the public and private sectors, and advance the rule of law and social justice. They are key partners for progress.

The Forum for the Future is a joint civil society initiative of the countries of the Broader Middle East and North Africa region (BMENA) and the Group of Eight (G8).  It brings together leaders from government, civil society and the private sector to exchange ideas and form partnerships to support progress, reform, and expanded opportunities for the people of the region.

Read more: http://www.america.gov/st/texttrans-english/2009/November/20091103065615bpuh0.054928.html#ixzz1FluIdF43

மார்ச் 29, 1857. மாலை நேரம். பராக்பூர் நகரம்.

34ஆவது Bengal Native Infantry ரெஜிமண்ட் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அதில் ஒரு வீரன் ரெஜிமண்ட்டின் காவலர்கள் அறையின் வாயிலில் தோட்டாக்கள் நிறைந்த துப்பாக்கியை வைத்து கொண்டு மேலும் கீழுமாக நடந்துக் கொண்டிருக்கிறான். அவன் முகமும் கண்களும் சிவந்திருக்கின்றன. மனதில் வெறுப்பு நிறைந்திருக்கிறது.

அவன் அனைவரையும் பார்த்து கர்ஜிக்கிறான் -

”வீரர்களே, நாம் இந்தியர்கள். நாம் நம் நாட்டிலேயே ஆங்கிலேயர்களுக்கு சேவை புரிந்துகொண்டு இன்னும் எத்தனை நாட்களுக்குதான் அடிமைகளாக இருப்பது? புனிதமான நாம் வணங்கும் பசுவின் கொழுப்பையும் நம் இஸ்லாமிய சகோதரர்களின் உணர்ச்சிகளை அவமதிக்கும் வகையில் பன்றியின் கொழுப்பையும் தோட்டாககளில் பிரயோகப் படுத்தினால் துப்பாக்கியை கையாள முடியாது என்று பல முறை எடுத்துரைத்தாலும் ஆங்கில அரசாங்கம் நம் வேண்டுகோளை ஏற்க மறுக்கிறார்கள். பல காரணங்களுக்காக வேண்டுமென்றே இதை செய்கிறார்கள். இன்னும் என்ன தயக்கம்? கொதித்து எழுங்கள்”

வீரர்கள் உணர்ச்சியுடன் அதை ஆமோதிக்கிறார்கள். மேலும் வீரன் “நான் முடிவிற்கு வந்துவிட்டேன். எந்த ஒரு ஐரோப்பியன் என் கண்ணில் படுகிறானோ அவன் இந்த துப்பாக்கியின் தோட்டாவுக்கு இறையாவான்” என்று முழங்குகிறான்.

ரெஜிமண்டின் லெஃப்டிணண்ட் போ அங்கே வருகிறான். வீரன் அங்கிருந்த பீரங்கியின் பின்னால் மறைந்து கொண்டு போவை நோக்கிச் சுடுகிறான். குறி தவறுகிறது. தோட்டா குதிரையை வீழ்த்துகிறது. இந்த நேரத்தில் மேஜர் ஹுயூஸன் அங்கு வருகிறான். அவன் ரெஜிமண்ட்டின் ஜெமதாருக்கு நம் வீரனை கைது செய்ய உத்தவு கொடுக்கிறான். ஜெமாதர் மறுக்கிறான். மற்ற வீரர்களும் மறுக்கிறார்கள்.

கோபமடைந்த ஹுயூஸன் தன் கட்டளைக்கு உட்படாத அனைவரையும் சுட்டு விடுவதாக அச்சுறுத்தியதில் சிப்பாய்களின் கொந்தளிப்பு கட்டுக்குள் அடங்குகிறது. சிறையில் அடைக்கப்பட்ட வீரனை ஆங்கிலேயர்கள் ஏப்ரல் 8, 1857 இல் தூக்கிலிடுகிறார்கள். வீரனின் தாக்குதல் இந்தியர்களின் எழுச்சிக்கு முன்னோடியாகப் பலராலும் பார்க்கப்படுகிறது. புரட்சி தோல்வியடைந்தாலும், இது இந்திய  வரலாற்றில் முதல் விடுதலை போராக பதிவு செய்யப்படுகிறது. வீரன் “தியாகி” எனப் பின்னால் கருதப்பட்டான்.

அந்த வீரன் மங்கள் பாண்டே!

(Dramatization by Bags For ItsDiff Radio)

Follow

Get every new post delivered to your Inbox.

Join 59 other followers