இலங்கை-புலிகள் போர் பற்றி ஒரு இலங்கை ராணுவ தளத்தின் கட்டுரை கண்ணில் பட்டது. அதிலிருந்து ஒரு excerpt:
A day before the Dravida Munnettra Kazhagam (DMK) supremo and Tamil Nadu Chief Minister M Karunanidhi went on a fast on April 27, 2009 at the Anna Memorial in Chennai protesting against the SLAF offensive against the LTTE, Menon called me on my cell phone at 4.30 pm. The Indian team wanted to visit Colombo for urgent talks. I went straight to the President’s office and got his sanction and called Menon back within five minutes. Within six hours of Karunanidhi going on fast we could defuse the crisis in Tamil Nadu by issuing a statement announcing the end of combat operations and shelling inside the ‘No Fire Zone’, which led to the Tamil Nadu Chief Minister ending his fast. This was a classic example of quiet, corrective diplomacy between two officially designated government teams.
நீ அடிக்கிறாப்போல அடி, நான் அழறாப்போல அழறேன் என்கிற மாதிரி இருக்கிறது!
தொகுக்கப்பட்ட பக்கம்: ஈழம்
தொடர்புடைய சுட்டி: முழு கட்டுரை
37.523851
-122.047324
இன்றைக்கு ஒரு cross-reference. மலர்மன்னன் தி.மு.க. உருவானது ஏன் என்று ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அவரது தியரிப்படி அண்ணா எவ்வளவோ அனுசரித்துப் போனாலும், ஈ.வே.ரா.வுக்கும் அவருக்கும் ஆளுமையில் எக்கச்சக்க வித்தியாசம். கருப்புச் சட்டை போட்டுக் கொள்ள வேண்டும் என்று ஈ.வே.ரா. வற்புறுத்தியது, சுதந்திர தினத்தை துக்க நாளாக நினைக்க வேண்டும் என்று ஈ.வே.ரா. சொன்னது, மனியம்மையோடு திருமணம் ஆகிய மூன்றும் இந்த வித்தியாசங்களை அதிகப்படுத்தி அண்ணாவை விலகச் செய்ததாம். விரிவான விமர்சனம் சிலிகான் ஷெல்ஃபில்.
பாலாஜி என்பவர் தமிழ் ஹிந்து தளத்தில் “மிதவாத முஸ்லீம்கள் எங்கே? ” என்று ஒரு பதிவு சீரிஸ் எழுதி இருக்கிறார். நல்ல சீரிஸ். நான்கு பகுதிகள் உள்ளன. (பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4)
குறிப்பாக மூன்றாம் பகுதி என் போன்றவர்களுக்கு இஸ்லாம் மீது இருக்கும் திருப்தியான பதில் இல்லாத கேள்விகளை தொகுத்திருக்கிறது. படித்துப் பாருங்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு
37.523851
-122.047324
கலிஃபோர்னியா சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் அமைந்துள்ள க்ரியா நாடக் குழுவும், பாரதி தமிழ்ச் சங்கமும் இணைந்து வரும் நவம்பர் மாதம் 6ம் தேதி ”தனிமை” மேடை நாடகத்தினை அளிக்க இருக்கிறார்கள்.
தீபா ராமானுஜம், ராமானுஜம் தம்பதியினர், மற்றும் அவர்களின் நண்பர் நவீன் நாதனால் 2001ம் ஆண்டு கலிஃபோர்னியாவின் சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் துவக்கப்பட்ட க்ரியா நாடகக் குழு, இன்று விரிகுடாப் பகுதி மட்டுமல்லாமல், வட அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் பிரபலமான ஒன்று. 9 முழு நீள நாடகங்களை அமெரிக்காவிலும், இந்தியாவிலும் அரங்கேற்றி தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்திய பாரம்பரிய நாடகக் கலையின் செழுமையை அடித்தளமாகக் கொண்டு தரமான, அனைவரும் ரசிக்கக் கூடிய நாடகங்களை வழங்கி வருகிறார்கள்.
பாரதி தமிழ்ச் சங்கம் சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வரும் ஒரு தமிழ் கலாச்சார அமைப்பாகும். பாரதி தமிழ்ச் சங்கம் சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதி வாழ் தமிழ் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கலைத்திறனை ஊக்கப் படுத்தி அவர்கள் திறமைகளை வளர்கும் பொருட்டு கடந்த நான்கு வருடங்களாக கலை, இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.
இந்த வருடம் பாரதி தமிழ்ச் சங்கத்தின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு க்ரியா நாடக நிறுவனத்துடன் இணைந்து க்ரியாவின் தனிமை மேடை நாடகத்தை அரங்கேற்ற ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
எழுத்தாளர் ஆனந்த் ராகவ் எழுதி, தீபா ராமானுஜத்தின் இயக்கத்தில் உருவான தனிமை அதன் முதல் அரங்கேற்றம் முதல் இன்று வரை கலிஃபோர்னியா, ஹ்யூஸ்டன் டெக்சாஸ், சென்னை ஆகிய இடங்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக பெரும் வரவேற்பை பெற்ற ஒரு நாடகமாகும். கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி முதல் 25 வரை சென்னை நகரின் பல்வேறு புகழ் பெற்ற சபாக்களில் தினமும் அரங்கு நிறைந்த காட்சிகளாக நடை பெற்று சென்னை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெரும் பாராட்டினையும் பெற்றது.
சென்னையில் இருந்து பிரபல நாடகக் குழுவினர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வந்து நாடகங்கள் போட்டு இங்குள்ள தமிழர்கள் ரசித்த நிலை மாறி இன்று அமெரிக்காவில் இருந்து ஒரு நாடகக் குழு சென்னை சென்று தமிழ் நாட்டு ரசிகர்களுக்கு தொழில்நுட்பமும், இயற்கையான நடிப்பும் கூடிய அருமையான ஒரு நாடக அனுபவத்தை அளித்து பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள் தீபா ராமானுஜம் குழுவினர்.
க்ரியா குழு மட்டுமே 2005லிருந்து தொடர்ந்து வருடாவருடம் அமெரிக்காவிலிருந்து இந்தியா சென்று நாடகங்களை மேடையேற்றுகிறது என்று அதன் நிர்வாக இயக்குனர் தீபா ராமானுஜம் கூறினார்.
தனிமை நாடகத்தின் கதையமைப்பும், நடிகர்களின் இயல்பான சிறப்பான நடிப்பும், கூர்மையான கலகலப்பான வசனங்களும், தீபா ராமானுஜத்தின் இயக்கமும், ஆனந்த் ராகவ்வின் எழுத்தும் விகடன், கல்கி, தி ஹிந்து போன்ற அனைத்து தமிழகப் பத்திரிகைகளாலும் பெரிதும் பாரட்டப்பட்டுள்ளது. பத்திரிகைகள் மட்டுமன்றி, சென்னை வாழ் தமிழர்கள், தமிழ் நாட்டு நாடக, சினிமா கலைஞர்கள், இயக்குனர்கள் என்று அனைத்துத் தரப்பினரையும் வெகுவாகக் கவர்ந்து அனைவரது சிறப்பான பாராட்டினையும் பெற்று சாதனை படைத்துள்ளது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இமெயில், ஃபேஸ்புக் போன்ற அனைத்து ஊடகங்கள் மூலமாகவும் சமீப காலத்தில் வேறு எந்தவொரு நாடகமும் பெறாத புகழையும், கவனிப்பையும், பெற்ற நாடகம் தனிமை என்று கூறினால் அது மிகையாகாது.
எங்கள் நாடகங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் எங்களது நடிகர்கள். அவர்கள் தங்களது பொருட்செலவில் இந்தியா வந்து, ஆர்வத்துடன் நடிக்கிறார்கள். அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம் என்று புன்முறுவலுடன் கூறினார், தீபா.
இந்த நாடகத்தினை இந்தியாவில் மேடையேற்றிய போது, அதன் இயல்பான கதையமைப்பிலும், நடிப்பிலும் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள் பலரும் இதை தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே உணர்ந்து ஒன்றி விட்டனர். தமிழ் நாட்டில் வாழும் வயதான பெற்றோர்களின் வாழ்க்கையையும் அமெரிக்காவில் புலம் பெயர்ந்து பிரிந்து வாழ நேரும் அவர்கள் பிள்ளைகளின் நிலைகளையும், தவிப்பினையும், குடும்பம், உறவு, பிரிவு ஆகிய நுட்பமான வாழ்க்கைக் கூறுகளையும் மிக அழகாகவும், நகைச்சுவை மிளிரவும் சித்தரிக்கின்ற ஒரு நாடகம் தனிமை. சென்னை மக்கள் போலவே விரிகுடாப்பகுதி மக்களும் இந்த நாடகத்தினை ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று க்ரியா குழுவினர் மிகுந்த ஆர்வத்துடன் கூறினர்.
சென்னை நகரில் அரங்கு நிறைந்து வெற்றி நடை போட்ட புகழ் பெற்ற தனிமை நாடகம் சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதி ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் ஃப்ரீமாண்ட் நகரில் வரும் நவம்பர் 6ம் தேதி அரங்கேறவுள்ளது. சென்னை ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவையும், பாராட்டினையும், ரசிகர்களின் அரங்கு நிரம்பிய கூட்டத்தினையும் பெற்ற நாடகத்தை கண்டு ரசிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதி தமிழர்களுக்கு கிட்டியுள்ளது. ஏமாற்றத்தைத் தவிர்க்க முன்பதிவு செய்தல் நலம். முன்பதிவு செய்து கொள்ளவும் மேலதிக விபரங்களுக்கும் கீழ்க்கண்ட முகவரிகளில் தொடர்பு கொள்ளவும். மதியம் 2 மணிக்கு ஒரு காட்சியும், மாலை 6 மணிக்கு ஒரு காட்சியும் ஃப்ரீமாண்ட் ஓலோன் கல்லூரி கலையரங்கில் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக. இந்தியாவில் இருந்து பெற்றோர்கள் வருகை தந்திருந்தால் அவர்களையும் கட்டாயம் அழைத்து வரவும.
க்ரியா இணைய தளம்
பாரதி தமிழ்ச் சங்கம்
க்ரியா: 510 371 KREA
வாசுதேவன் : 510 868 0510
திருமுடி : 510 684 9019
மின்னஞ்சல்: krea.thanimai@gmail.com
அனுமதிக் கட்டணம்: $15 (அக்டோபர் 5 க்கு முன்பாக பதிவு செய்பவர்களுக்கு $12)
நாடகம் நடக்கும் இடம்: ஜாக்சன் தியேட்டர்ஸ்
ஓலோன் காலேஜ்
43600 மிஷன் புலிவார்ட்
ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா
இந்த தளத்தைப் படிக்கும் லோகல் தமிழர்கள் யாராவது இருந்தால் அங்கே சந்தித்து ஒரு காஃபி குடிப்போமே!
தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு
தொடர்புடைய சுட்டிகள்:
க்ரியா இணைய தளம்
பாரதி தமிழ்ச் சங்கம்
37.523851
-122.047324
அயோத்தி தீர்ப்பை படிக்க வேண்டும் என்றுதான் பார்க்கிறேன், ஆனால் பல ஆயிரம் பக்கத்தில் இருக்கிறதாம். இதை டவுன்லோட் செய்வதற்குள்ளேயே தாவு தீர்ந்துவிடும், படிப்பது எப்போது? ஒரு மாறுதலுக்காக இந்த பதிவு…
டிஸ்க்ளைமர்: ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் பேரக்குழந்தைகள் இருக்கிறார்களா என்று கூட தெரியாது. சங்கநிதி என் கற்பனைப் பாத்திரம் மட்டுமே. இந்த டுமீல் செய்திகளை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொண்டு குழந்தைகளை கிண்டல் செய்கிறாயா பாதகா என்று கிளம்பிவிடாதீர்கள்!
துக்ளக்கும் அவர்கள் ஸ்டைலை காப்பி அடிப்பதற்காக என்னை மன்னிக்கட்டும்!
ஜெய் ஹோ ஃபிலிம்ஸ்
நேற்று கலைஞரின் கொள்ளுப்பேரனும் ஸ்டாலினின் பேரனும் ஆன சங்கநிதி ஜெய் ஹோ ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த விழாவுக்கு கலைஞரின் குடும்பத்தினரும் சினிமாத் துறையினரும் பெருவாரியாக வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சங்கநிதிக்கு வயது பத்துதான் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம். முதல் படத்துக்கு கலைஞரே கதை வசனம் எழுதுவதாக இருந்ததாம். ஆனால் சங்கநிதி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள மறுத்துவிட்டதால் இப்போது நிகழ்ச்சிக்கு வந்திருந்த இயக்குனர் கே.எஸ். ரவிகுமார், கவுதம் மேனன், ஷங்கர் ஆகியோர் தாங்கள் அண்ணன் சங்கநிதியிடம் கதை சொல்வதற்காக ஸ்லாட் கேட்டிருப்பதாக தெரிவித்தனர். அனேகமாக ரவிகுமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என்று தெரிகிறது.
கலை நிகழ்ச்சி:
நமீதா, முமைத் கான், ரகசியா ஆகியோரின் ஆட்டம், பாட்டு, கவிஞர் வாலி தலைமை தாங்கிய கவி அரங்கம், சங்கநிதியிடம் உயர்ந்து விளங்குவது ஸ்டாலினின் திறமையா இல்லை கலைஞரின் பெருமையா என்ற பட்டி மன்றம் என்று பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வாலியின் கவிதையிலிருந்து ஒரு சிறு பகுதியை இங்கே கொடுத்திருக்கிறோம்.
முகத்திலே பரு
முளைக்காத சிறு உரு
ஆனாலும் கருவிலே திரு
அதற்கு காரணம் -
கலைஞர் என்ற கற்பகத் தரு
சளைக்காமல் போட்ட எரு!
உன்னிடம் சேர்ந்தாள் செந்திரு -
என்று பாற்கடலான் தொடுப்பான் செரு!
இந்த கவிதையை கேட்டதும் சங்கநிதி “What is செந்திரு? I don’t understand this Tamil!” என்று வாலியை வானளாவ புகழ்ந்தார்.
கலைஞர் கேள்வி பதில்:
கம்பெனிக்கு ஜெய் ஹோ ஃ பிலிம்ஸ் என்று ஏன் பேர் வைத்தீர்கள்?
ரெட் ஜெயன்ட், க்ளவுட் நைன் என்று ஆங்கிலத்தில் பெயர் இருக்கிறது என்று பலரும் குறை சொன்னார்கள். அவர்கள் முகத்தில் கரியைப் பூசவே இப்போது ஆங்கிலக் கலப்பில்லாமல் ஜெய் ஹோ ஃபிலிம்ஸ் என்று பேர் வைத்திருக்கிறோம். மேலும் இது ஏ. ஆர். ரஹ்மானின் புகழ் பெற்ற, ஆஸ்கார் விருது வென்ற, அன்னியர் பாராட்டும் பாட்டு. சிறுபான்மையினரிடம் இயக்கம் கொண்டுள்ள அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தவே இப்படி ஒரு பேர்.
பத்து வயதிலேயே சினிமா எடுக்கும் அளவுக்கு பணம் எப்படி வந்தது?
குறுமுனி என்று சொல்லப்பட்ட அகத்தியன் தமிழ் மொழிக்கு இலக்கணமே எழுதவில்லையா? உருவத்தையும் பருவத்தையும் பார்த்து புருவத்தை உயர்த்தாதீர்கள், துருவ நட்சத்திரமாய் இலங்கும் திறமையைப் பாருங்கள்.
பத்து வயது என்பது சட்டப்படி மைனர். மைனராக இருக்கும்போதே திரைப்படத் தயாரிப்பா?
சட்டப்படி மைனராக இருந்தால் தவறில்லை. இட்டப்படி பெண்களோடு சுற்றும் மைனராக இருந்தால்தான் தவறு.
இருந்தாலும் இந்த வயதில் படம் எடுக்கும் அளவுக்கு பணம் என்றால் உதைக்கிறதே?
கலைஞர் உதவியாளர் சண்முகநாதனிடம் ஏதோ பேசுகிறார். பிறகு: இந்த நல்ல சமயத்தில் அரசின் திட்டம் ஒன்றைப் பற்றியும் சொல்ல விரும்புகிறேன். பத்திரிகைகள்தான் நாட்டில் ஜனநாயகத்தை காக்கின்றன. ஆனால் பத்திரிகை நிருபர்களோ வறுமையில் தவிக்கிறார்கள். அவர்களுக்கு ஈ.சி.ஆர். ரோட்டில் இலவச வீடு வழங்கும் திட்டம் – சங்கநிதி திட்டம் – வகுத்திருக்கிறோம். சங்கநிதி திட்டம் பற்றி பத்திரிகையாளர் சங்கத்தில் பேசுவோம்.
கலைஞரின் அறிவிப்புக்கு பிறகு பத்து வயதில் சினிமா தயாரிப்பது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுமா, ஓசியில் கிடைக்கும் வீடு எத்தனை சதுர அடி, சங்கநிதிக்கு பிடித்த உணவு என்ன, பிடிக்காத உணவு என்ன, இரவு எத்தனை மணிக்கு தூங்குவார், காலை எத்தனை மணிக்கு எழுந்திருப்பார், ஹோம்வொர்க் செய்ய அப்பா உதவி செய்வாரா, அம்மாவா, இல்லை ஹோம்வொர்க் கொடுக்கும் வாத்தியாரே அதை செய்தும் தந்துவிடுவாரா என்ற டைப்பில் (மட்டுமே) பல கேள்விகள் எழுந்தன. இடம் இல்லாததால் எல்லாவற்றையும் பிரசுரிக்க முடியவில்லை.
ஜெயலலிதா கருத்து:
இதைப் பற்றி ஜெயலலிதாவின் கருத்தை அறிய முயன்றோம். அவர் கொடநாட்டில் படுக்கையை விட்டு எழுந்த பிறகு கருத்து சொல்வார் என்று ஓ.பி. பன்னீர்செல்வம் பயந்து பயந்து பணிவோடு கருத்து தெரிவித்தார்.
விஜயகாந்த் பேட்டி:
இப்படி தன குடும்பமே கண்ணாக இருப்பவர் நாட்டுக்கு முதல்வராக இருக்க அருகதை அற்றவர் என்று விஜயகாந்த் கூறினார். நீங்களும் உங்கள் குடும்பத்தவரைத்தானே முக்கிய பதவியில் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அது ஒரு குறையில்லை, கலைஞரும் என் குடும்பத்தவருக்கு முக்கிய பதவி அளித்தால் நான் அவரையும் குறை சொல்ல மாட்டேன் என்று கருத்து சொன்னார். தமிழகத்தில் கூட்டணி மாறுகிறது என்று திமுகவினரும், பெட்டி மாறுகிறது என்று அதிமுகவினரும் காரசாரமாக மேடையில் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.
ராமதாஸ் கருத்து:
கூட்டணி வைத்த பிறகுதான் கருத்து சொல்ல முடியும் என்று ராமதாஸ் திட்டவட்டமாக சொல்லிவிட்டார். திமுகவுடன் கூட்டணி வைத்தால் இந்த இளம் வயதிலேயே சாதனை புரிந்த சங்கநிதிக்கு வாழ்த்து சொல்வோம்; இல்லையேல் வாரிசுகளைக் கொண்டு கலை உலகை கைப்பற்றும் முயற்சிகளை கண்டிப்போம், இதைக் கூடவா சொல்ல வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் நிருபர்களை செல்லமாக கடிந்துகொண்டார்.
சத்தியமூர்த்தி பவனில் கூட்டம்:
இது குறித்து சத்தியமூர்த்தி பவனில் கூடிய கூட்டம் எந்த கோஷ்டிக்கு எத்தனை ப்ரிவ்யூ டிக்கெட் என்ற சண்டை முற்றி அன்போடு கலைந்தது என்று தெரியவருகிறது.
துக்ளக் தலையங்கம்:
குடும்பமே கட்சி என்ற நிலையிலிருந்து இன்று குடும்பமே சினிமா என்ற நிலைக்கு தமிழ் நாடு வந்து கொண்டிருக்கிறது. இது நாட்டுக்கும் நல்லதில்லை, கலைஞர் வீட்டுக்கும் நல்லதில்லை. வாரிசு போர்கள் இன்னும் பெரிதாகப் போகிறது.
கலைஞர் மீதும் குறைப்படுவதற்கில்லை. வயதாக ஆக குடும்பத்தினர் மீது பாசம் பெருகிக் கொண்டேதான் போகும். இதனால்தான் குடும்பம் இல்லாத தலைவர்களையே நாம் ஆதரிக்க வேண்டும். காமராஜ் கட்டை பிரம்மச்சாரி. அவரை விட சிறந்த தலைவர் யார்? வாஜ்பேயி திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரை விட தேசபக்தி உள்ள பிரதமர் யார்? ஜெயலலிதாவும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனால் எல்லாரும் ஜெவுக்கே ஓட்டு போடுங்கள்!
டி. ராஜேந்தர் பேட்டி:
வாரிசுகள் இப்படி சினிமாவில் நுழைவது நல்லதில்லை என்று டி.ஆர். பேட்டி அளித்தார். உங்கள் வாரிசு திரை உலகில் முன்னணி ஹீரோவாச்சே என்று கேட்டதற்கு சிங்கண்டா சிம்பு, வச்சுக்காதே வம்பு என்று எச்சரித்தார்.
ஜூவியில் கழுகு ரிப்போர்ட்:
சங்கநிதி எலிமெண்டரி ஸ்கூல் முடித்து ஹைஸ்கூல் சேர்வதற்கு முன் தாத்தாவிடம் ஆசி வாங்க வந்தாராம். தாத்தா நான் பாஸாயிட்டேன் என்று ஆசையோடு ஓடி வந்த அவரிடம் கலைஞர் நீ பெரியவனாகி என்ன பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறாய் என்று கேட்டாராம். பெரியவனாகி என்ன செய்ய வேண்டும் என்பதை விடுங்கள், இப்போது யூத் படங்கள் எதுவுமே நன்றாக இல்லை, ஒரு நல்ல யூத் படம் எடுக்க வேண்டும் என்று சங்கநிதி சொன்னாராம். ஜெய் ஹோ என்று கலைஞர் ஆசீர்வதிக்க, அதையே கம்பெனி பெயராக வைத்து சினிமா தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்!
அழகிரி குமுறல்:
என் பேரன் எல்கேஜி முடித்து யுகேஜி போனானே அவனை வைத்து சினிமா வேண்டாம் ஒரு டிவி சீரியல், அது கூட வேண்டாம் ஒரு விளம்பரப் படம் கூட தயாரிக்கவில்லையே என்று அழகிரி குமுறுகிறாராம். அவரை சமாதானப்படுத்த ஃபோன் செய்த தயாளு அம்மையாரிடம் தேர்தலுக்கு மாங்கு மாங்கென்ற வேலை செய்ய மட்டும் நான், ஆனால் சினிமா கம்பெனி ஸ்டாலின் பேரனுக்கு மட்டும்தானா என்று ஆவேசமாக கேட்டாராம். ஜெய் ஹோ கம்பெனியிலிருந்து வரும் எந்த படமும் மதுரைக்கு தெற்கே ரிலீஸ் ஆகாது என்று சூளுரைத்தாராம். கலைஞர் நிலைமையை சமாளிக்க அழகிரி பேரனுக்கு விஜய் ஹோ ஃபிலிம்ஸ் என்று கம்பெனி ஆரம்பிக்கலாமா என்று ஆலோசித்து வருகிறாராம். என்ன ஆகுமோ என்று அரசியல் வட்டாரங்கள் கவலையோடு நிலையை கவனித்து வருகின்றன.
கொசுறு செய்தி:
ஸ்டாலின், அழகிரி குடும்பத்திலிருந்து இப்படி சினிமா தயாரிப்பாளர்கள் கிளம்புவதை சன் குழுமம் கவலையோடு பார்த்து வருகிறதாம். தங்கள் இமேஜை உயர்த்த இனி மேல் கலாநிதி மாறன் தயாரிக்கும் என்று போட்டால் மட்டும் போதாது, ஓபனிங் சாங்கில் ஹீரோவுக்கு பதிலாக கலாநிதியையே வைத்து எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறதாம். கலாநிதிக்கு நடனம் கற்றுக் கொள்ள நேரமில்லை என்பதால் மாண்டேஜாக எடுத்து விடலாம் என்று யோசிக்கிறார்களாம். என் பேரு படையப்பா மெட்டில் என் பேரு கலாநிதி, சன் டிவி உங்க தலைவிதி, மிச்ச சினிமாவை எல்லாம் தூக்கிப் போட்டு மிதி மிதி மிதி மிதி மிதி மிதி மிதி மிதி என்று வாலி எழுதிய பாட்டு ஒன்று இப்போது கோடம்பாக்கம் வட்டாரத்தில் ரவுண்ட்ஸ் வந்துகொண்டிருக்கிறது.
தொகுக்கப்பட்ட பக்கம்: அரசியல்
தொடர்புடைய பதிவுகள்:
ஒண்ணரை பக்க நாளேடு: அழகிரி vs. ஸ்டாலின்
ஒண்ணரை பக்க நாளேடு – 2009 நாடாளுமன்றத் தேர்தல்
சுப்பிரமணிய சாமி – 2009 நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 5
டி. ராஜேந்தர் – 2009 நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 4
சரத்குமார் – 2009 நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 3
ஆர்.எம். வீரப்பனின் எம்ஜிஆர் கழகம் – 2009 நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 2
கார்த்திக் கட்சி – 2009 நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 1
தமிழ் நாட்டு கட்சிகள்