பெப்ரவரி 2010


கடுகு என்ற அகஸ்தியன் ஒரு காலத்தில் வாரப் பத்திரிகைகளில் பிரபலம். அவரது கமலா, தொச்சு காரக்டர்கள் இன்னும் பலருக்கு நினைவு இருக்கும். நினைவு இல்லாதவர்கள் அவரைப் பற்றி முன்னாள் குமுதம் உதவி ஆசிரியர் ரா.கி. ரங்கராஜன் எழுதியதை இங்கே காணலாம். அவர் தன்னைத் தானே அறிமுகப் படுத்திக் கொள்ளும் பத்தி ஒன்றை இங்கே காணலாம். இதை எல்லாம் அவர் இப்போது புதிதாக ஆரம்பித்திருக்கும் ப்ளாகில் பார்க்கலாம்.

கல்கியைப் பற்றி ஒரு பதிவு எழுதி இருக்கிறார். கல்கிதான் கடுகுவுக்கு ஆதர்ச எழுத்தாளர். இந்த உறவு எப்படி ஆரம்பித்தது என்று எழுதி இருக்கிறார். அதில் கல்கியின் மறைவு பற்றி எழுதி இருந்த வரிகள் உருக்கமாக இருந்தன.

கல்கிக்கு அஞ்சலிக் கூட்டங்களை பல அமைப்புகள் நடத்தின என்றாலும், அரண்மனைக்காரத் தெரு கோகலே ஹாலில் நடைபெற்ற கூட்டம் மறக்க முடியாதது. அதில் முத்தியால்பேட்டை இளஞர் சங்கத்தின் காரியதரிசி பேசியது இன்னும் என் நினைவில் பசுமையாக உள்ளது.
அவர் பேசியது: “கடந்த செப்டம்பர் மாதம் எங்கள் சங்கத்தின் சார்பில் மூன்று நாள் பாரதி விழாவை கல்கி அவர்களின் பரிபூர்ண ஆதரவுடன் பவழக்கார தெருவில் நடத்திக் கொண்டிருந்தோம். தெருவில் தான் மேடை பெரிய கூட்டம். மூன்றாம் நாள் மாலை மேடையில் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தபோது நான் வரவு செலவு கணக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட காசு தீர்ந்து போன நிலைமை. பலருக்கு பணம் பாக்கி. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தேன். மேடையில் உட்கார்ந்திருந்த கல்கி அவர்களிடம் சென்று, ரகசியமாக கவலையுடன் விஷயத்தைச் சொன்னேன். அவர் “தம்பி கவலைப்படாதே, இந்தா. என் வீட்டு மேஜை சாவி, வீட்டிற்குப் போய் என் மேஜை டிராயரைத் திறந்து, அதிலிருந்து தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு வா”என்று சொல்லி சாவியைக் கொடுத்தார். நான் போய் எடுத்து வந்தேன். இளைஞர்கள் மீது அவருக்குத்தான் எவ்வளவு நம்பிக்கை …..” என்று பேசிக்கொண்டே வந்த அந்த இளைஞர், துக்கம் தாளாமல் மேடை.யில் நின்றுக் கொண்டே, குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்து விட்டார். இவ்வளவு பெரிய கூட்டத்தில், மைக் முன்னால் நின்று அழுகிறோமே என்று அவருக்குத் தோன்றவே இல்லை.

விமர்சகர் சுப்புடுவைப் பற்றி, எழுத்தாளர் தேவன் பற்றி, பத்திரிகையாளர் சாவி பற்றி சுவாரசியமான பதிவுகளும் என் கண்ணில் பட்டன.

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு

தொடர்புடைய பதிவுகள்:
கல்கி – ஒரு மதிப்பீடு
கல்கி பற்றி எஸ்.எஸ். வாசன்
கல்கி, ராஜாஜி, மதுவிலக்கு

கடுகு தளம், கடுகு – சுய அறிமுகம், கடுகு பற்றி ரா.கி. ரங்கராஜன்
கடுகு கல்கியைப் பற்றி எழுதிய பதிவு
கடுகு சுப்புடு, சாவி, தேவன் பற்றி எழுதிய பதிவுகள்

கிட்டத்தட்ட 45 லட்சம் கார்களின் ஆக்ஸலரேட்டர்கள் அமுக்கியது அமுக்கிய படியாகவே இருந்துவிட்டால் எத்தனை விபத்துகள் நடந்திருக்கும்? இதுவரை ஆச்சரியமாகவும், அதிர்ஷ்டவசமாகவும் ஒரு விபத்தும் ஏற்படவில்லை என்பது செய்தி. ஆனாலும் பிரச்சனை மிகவும் அபாயகரமானது.

செய்தியை தொடராதவர்களுக்கு: டொயோட்டா கார்களின் ஆக்ஸிலரேட்டர்கள் காலை எடுத்தவுடன் மீண்டும் மேல் எழ மறுக்கிறது. மேலும் அது ஃப்ளோர்மேட் (Floormat) என சொல்லப்படும் காரின் தரைக் கம்பளத்தில் சிக்க வாய்ப்புள்ளது. இதனால் டிரைவர்கள் கரை நிறுத்த முயன்றாலும் நிறுத்த முடியாமல் போகலாம். இந்த தரம் குறைந்த ஆக்ஸிலரேட்டர்கள் 2005லிருந்து விற்க்கப்பட்ட 4.5 மில்லியன் டொயோட்டா கார்களில் பொருத்தப்பட்டுள்ளது. டொயொட்டா கம்பெனி ஜனவரி 21ஆம் தேதி 45 லட்சம் கார்களை “ரீகால்” செய்துள்ளது. அதுபோக ப்ரியஸ் என்னும் காரின் பிரேக்கிலும் இது போன்ற பிரச்சனை இருப்பதாகவும், அதன் ”க்ரூஸ்” கண்ட்ரோல் எலக்ட்ரானிக் சாதனத்திலும் பிரச்சனை உள்ளதாகவும் ஒத்துக்கொண்டுள்ளார்கள்.

இதில் பிரச்சனை என்னவென்றால் டொயோட்டா கம்பெனிக்கு இந்த விஷயங்கள் முன்னரே நன்றாகவே தெரியும் எனக்கூறப்படுகிறது. எனக்கும் அது நம்புவதற்க்குறியதாகத்தான் இருக்கிறது. இந்த ரீகாலின் மூலம் டொயோட்டா கம்பெனிக்கு 2 பில்லியன் டாலர்கள் நஷ்டம் எனக் கூறுகிறார்கள். டொயோட்டாவிற்கு இந்த விஷயம் முன்னரே தெரிந்திருக்கும் பட்சத்த்தில் முன்னரே (இரண்டு வருடங்களுக்கு முன்னரே) ரீகால் செய்திருந்தால் ஒரு 100 மில்லியனோ அல்லது 500 மில்லியன் டாலர் நஷ்டத்துடன் போயிருக்கும். நாகரீகமாகவும் இருந்திருக்கும். மனித உயிர்களின் மேல் டொயோட்டாவிற்கு உள்ள அக்கறையும் அதை வெளிப்பட்டிருக்கும். அதை செய்யாமல் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்த்திருப்பது போல தெரிகிறது. ஏதோ ரேடியோ பார்ட்ஸ் மட்டம் அல்லது சீட்டில் குஷன் மட்டம் என்றால் மறைத்திருக்கலாம். மனித உயிர்களைவிட தொழில் லாபம் பெரியதா? இல்லை கம்பெனியின் போட்டிமனப்பான்மை பெரியதா? இல்லை கம்பெனியின் பிம்பமத்திற்கு கேடு என்ற பயமா?

எப்படி பார்த்தாலும் டொயோட்டாவிற்கு நிலைமை இப்பொழுது அதை விட பல் மடங்கு மோசமாக உள்ளது.  மக்கள் இது தான் வாய்ப்பு என்று நஷ்டயீடு வழக்குகள் போட ஆரம்பித்துவிட்டார்கள். டொயோட்டாவிற்கு முடிவு நெருங்கிவிட்டதா? அல்லது ஒரு பாஸிங் கிளவ்டா? பங்கு சந்தையில் அந்தர் பல்டி அடித்த டொயோட்டா பங்குகள் வாங்க பலருக்கு வாய்ப்பா? காலம் பதில் சொல்லும்.

தொடர்புள்ள சுட்டிகள்

டொயோட்டா பிம்பத்திற்கு கலங்கம்

டொயோட்டா மன்னிப்பு கோருகிறது

ஒரு துக்ளக் அட்டைப்படம்

ஒரு துக்ளக் அட்டைப்படம்

இட்லிவடை தளத்தில் துக்ளக் ஆரம்பித்த கதையைப் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தார்கள். சோ தன் நண்பர்களிடம் தன்னாலும் ஒரு பத்திரிகை நடத்த முடியும் என்று ஐந்து ரூபாய் பெட் வைத்திருக்கிறார். அந்த ஐந்து ரூபாய் ஜெயிப்பதற்காக ஆரம்பித்த பத்திரிகைதான் துக்ளக்!

பத்திரிகை நடத்த அனுபவம் இல்லை, அதனால் சும்மா பேருக்கு ஒரு இதழைக் கொண்டு வந்துவிட்டு நிறுத்திவிடலாம் என்று நினைத்திருக்கிறார். ஆனந்தவிகடன் ஆசிரியர் எஸ். பாலசுப்ரமணியம் உதவி செய்து பத்திரிகை வெளி வந்திருக்கிறது.

சோ 1970 பொங்கல் அன்று பத்திரிகை வெளியே கொண்டு வரலாம் என்று சொல்லி இருக்கிறார். பாலன் நாலு வாரம்தானே இருக்கிறது, பத்திரிகையில் என்ன வர வேண்டும் என்று ஒன்றும் யோசிக்கவில்லையே மூன்று மாதம் டைம் எடுத்து யோசிக்கலாமே என்று சொன்னாராம். சோ மூன்று வாரத்தில் தோன்றாதது மூன்று மாதத்திலும் எனக்கு தோன்றாது என்று தன் துக்ளக் ஸ்டைலில் பதில் சொன்னாராம்!

சோவின் அதிர்ஷ்டம் அழைக்கிறது புத்தகத்தில் இதை எல்லாம் விவரமாக எழுதி இருக்கிறார். இட்லிவடை தளத்தில் பக்கங்களை ஸ்கான் செய்து போட்டிருக்கிறார்கள். பாருங்கள்!

இந்த பேட்டியையும் பாருங்கள். 1970 ஜனவரியில் துக்ளக் இன்னும் ஆரம்பிக்காதபோது சோவை விகடனில் எடுத்த பேட்டி. நன்றி, விகடன்!

பத்திரிகை ஆசிரியர் ஆகிறார் ‘சோ’!
நிருபர்: நீங்கள் பத்திரிகை ஆரம்பிக்கப் போவதாகப் பலர் சொல்கிறார்களே, உண்மையா?

சோ: யாரெல்லாம் சொன்னார்கள்?

நிருபர்: மன்னிக்கவும்! நான் உங்களைப் பேட்டி காண வந்திருக்கிறேனா அல்லது நீங்கள் என்னைப் பேட்டி காணப் போகிறீர்களா?

சோ: நான் உங்களைக் கேள்வி கேட்க ஆரம்பித்ததிலிருந்து நானும் ஒரு பத்திரிகைக்காரனாக மாறிக்கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லையா?

நிருபர்: உங்களுக்கு இந்த ஆசை எப்படி வந்தது?

சோ: அது தமிழ்நாட்டின் தலை விதி!

நிருபர்: உங்கள் பத்திரிகையின் ஆசிரியர் யார்?

சோ: ஒரு சகலகலா வல்லவர்!

நிருபர்: யார் அது?

சோ: நான்தான்.

நிருபர்: பத்திரிகை ஆரம்பிக்கும் நோக்கம், லட்சியம் என்ன?

சோ: மக்களுக்கு நல்வழி காட்டி ஒரு புதிய பாரதத்தை உண்டாக்க வேண்டும்; நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக எல்லா மக்களும் தோள் கொடுத்துச் செயலாற்றவேண்டும்; ஒவ்வொரு தமிழனும் தன் கடமையை உணர்ந்து தன்னைப் பெற்ற தாய்க்கும், தான் பிறந்த மண்ணிற்கும் பெருமை தேடித் தர வேண்டும்; இலக்கியம், பண்பாடு, இந்தியக் கலாசாரம் இவை ஓங்கி வளரவேண்டும். இந்த லட்சியங்களுக்காகத்தான் நான் பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறேன் என்று நீங்கள் எதிர்பார்த்தால், அது என் தவறல்ல! பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றியது; ஆரம்பிக்கப் போகிறேன். அவ்வளவுதான்!

நிருபர்: உங்கள் பத்திரிகை எப்போது வெளிவரும்?

சோ: பொங்கல் ரிலீஸ்!

நிருபர்: முதல் இதழில் உங்கள் பத்திரிகையில் என்னென்ன வரும் என்று சற்று விளக்கமாகக் கூற முடியுமா?

சோ: ஏன்? துக்ளக்கை யாரும் வாங்கக் கூடாது, உங்கள் ஆனந்த விகடனையே படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று பார்க்கிறீர்களா?

நிருபர்: சரி! உங்கள் பத்திரிகையின் அமைப்பைப் பற்றி ஏதாவது கூற முடியுமா?

சோ: எவற்றையெல்லாம் பார்த்து எனக்குச் சிரிப்பு வருகிறதோ அவற்றையெல்லம் பார்த்து மக்களையும் சிரிக்க வைக்க முயலப் போகிறேன். I am going to look around me and also make my readers look around themselves.

துக்ளக் தளத்தில் பழைய இதழ்களை படிக்கலாம். ரெஜிஸ்டர் செய்ய வேண்டும், கேள்வி பதில் படிக்க முடியாது.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்:
இட்லிவடை தளத்தில் துக்ளக் ஆரம்பித்த கதை பதிவு
சோ ராமசாமி – ஒரு மதிப்பீடு
சோவின் தைரியம் பற்றி நல்லதந்தி
துக்ளக் தளம்

This is my message to all you students as you find your future.

One, believe in yourself, and don’t let a GPA, performance review or promotion in a job define you. There is more to life than these things – your family, your friends, your internal desires and goals. And the grades you get in dealing with each of these areas will define you as a person.

Two, don’t judge others too quickly. It is great to get into IIT, but it is not the end of the world if you don’t. All of you should be proud to have the IIT tag, but never ever judge anyone who is not from this institute – that alone can define the greatness of this institute.

And lastly, don’t take yourself too seriously. Life is too short, enjoy yourself to the fullest. One of the best parts of campus life is the friends you make. And make sure you make them for life.

« முந்தைய பக்கம்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 59 other followers