
Chidambaram Temple
இந்த பதிவு மேலெழுந்தவாரியாக படித்தால் சிதம்பரம் தீட்சிதர்களை புகழ்ந்து பேசுகிற மாதிரி இருக்கலாம். உண்மையில் ஒரு புத்தகத்தில் தீட்சிதர்கள் தங்கள் குழுவின் சட்ட திட்டங்கள் பற்றி எழுதியவை, ஒரு வழக்கு ஆகியவற்றை பற்றி விவரங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாம் பகுதியில் தீட்சிதர்கள் தந்த வாக்குமூலம் அவர்களுக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை என்பதையும் கவனியுங்கள். முன் பதிவுகளில் தீட்சிதர்களுக்கு கோவில் சொந்தம் இல்லை என்று எழுதிவிட்டு இப்போது இப்படி ஒரு பதிவு வருகிறதே என்று குழப்பம் அடையாமல் படியுங்கள்.
தீக்ஷிதர்களுக்கு எதிராகச் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்து விட்டது. அவர்கள் உச்ச நீதி மன்றம் செல்லலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அண்ணாமலைப் பல்கலைக் கழக பவள விழாவின் போது, “வரலாற்றில் சிதம்பரம் நடராஜர் கோயில்” என்றொரு புத்தகம் வெளியடப் பட்டிருக்கிறது. சிதம்பரம் மயில்வாகனன் தொகுத்துள்ள இப்புத்தகம் 2004ல் சிதம்பரம் மெய்யப்பன் பதிப்பகத்தின் வெளியீடு. இரண்டு பகுதிகள், நல்ல கட்டுரைகள் உள்ளன. இதிலிருக்கும் ஒரு கட்டுரை தீக்ஷிதர்களைப் பற்றியது. அதிலிருந்து சில பகுதிகளை இங்கு தருகின்றேன்!
*** கோயில் நிர்வாகம் — இக்கோயில் நிர்வாகம் தில்லை மூவாயிரவர் எனப்படும் தீக்ஷிதர்களின் நுணுக்க சட்ட திட்டங்களினால் நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது! ஆதி நாள் முதல் தீக்ஷிதர்களின் சமுதாயம் வேத சாஸ்திர சம்பிரதாயங்களுடன் இன்றியமையாச் சட்ட திட்டங்களை இயற்றிக் கோயில் பராமரிப்புடன் புராதனப் பழக்க வழக்கங்களில் வழுவாது நிலைக்கும் சிறப்பு தில்லையம்பதி சபைக்கே உரியது எனில் மிகையாகாது.அந்தணர் தீர்ப்புக் கூறும் கால் முறை பிசகாது யாவரும் ஒப்புக் கொள்ளும் வண்ணம் செய்த தீர்ப்பு ஈண்டு கூர்ந்து நோக்கத் தக்கது. இன்றும் அத்தகைய வழக்கம் நிலவி வருகிறது.
இராமாயணம் அரங்கேற்ற முதலில் தில்லையம்பதிக்குத்தான் கம்பர் வந்தார் என்பது தில்லை வாழ் அந்தணர் நிர்வாக நேர்மையுடையவர் என்பதைப் பறைசாற்றி நிற்கும் நிகழ்ச்சியாகும். அக்காலம் முதல் இக்காலம் வரை, இனி எக்காலத்திற்கும் ஏற்ற வண்ணம் அமைந்துள்ள சட்டங்கள், முறைகள், அமைப்பு முதலியனவும், வைதீக சம்பிரதாயம், பழக்க வழக்கங்கள் ஆகியவைகளும் இங்கு மட்டும்தான் கடைப் பிடிக்கப்பட்டு வருகின்றன.
இங்கு இப்போது தில்லைவாழ் அந்தண்ர்கள் சுமார் 300 பேர் இருக்கின்றனர். இவர்கள் ஸ்ரீ நடராஜரை அர்ச்சித்து பூஜை செய்பவர்கள், திருமணமானவர்கள். குழந்தைகள், தாய்மார்கள், பெண்கள் ஆகியோரை இதில் சேர்க்கவில்லை. தில்லை 3000 என்றல்லவா சொல்வர், 300 தானேயுள்ளது, மீதி எங்கே என்றால் குறைந்தவர் எல்லாம் ஸ்ரீ நடராஜரே என்று கொள்ள வேண்டும். ஏனெனில் முன் அந்தர்வேதியாகத்தில், ரித்விக்கில் ஒன்று குறைய, குறைந்த ஒன்று நானே என்றவர் நடராஜர். இந்த முன்னூறு பேரும் திருமணமாகிய பின்புதான் மூர்த்தியை அர்ச்சிகும் உரிமையுடன் கோயில் நிர்வாகப் பொறுப்பின் உரிமை உடையவர்களாகவும் கருதப்படுகின்றார்கள். உரிமைத் தகுதி வந்த தீக்ஷிதர் ஒரு ஓலையில் தன் பெயரை எழுதிக் கோயில் பொது சபையினர் முன்னர் கொடுத்து, தன்னை நிர்வாகத்துறையில் ஒரு பங்குதாரராக ஏற்றுக் கொண்டு ஏக மனதாய் உத்திரவு செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்த பிறகே சம உரிமை படைத்த தீக்ஷிதராக ஆகிறார். இவ்வாறு பங்குடையவர் வயது, கல்வி, திறமை, பொருளாதாரம் இவைகளினால் எந்த வேறுபாடும் உடையவராகக் கருதப்படமாட்டார் என்பதும் சட்டம்.
பொதுக் கூட்டத்தில் ஒரே மதிப்புடையவர் யாரும் கருத்துத் தெரிவிக்கலாம். வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பது இல்லை என்ற நிலை. சிறிய நாட்டுச் சபையே இது. இத்தகைய உரிமை தொடக்கம் முதல், தீக்ஷிதரின் இறுதி நாள் வரை தொடர்கிறது சாஸ்திர சம்பிரதாயங்களுடன் சேர்ந்த சட்டமாகும். திட்டமிட்ட ஒரு முறை தீக்ஷிதர்கள் எல்லோருக்கும் மூர்த்தியை அர்ச்சிக்க ஒரு சம வாய்ப்பு தருகின்றது. ஸ்ரீ நடராஜருக்கு ஒரு காணி நிலம் கூட இல்லை. அவ்வாறிருந்தும் எல்லாம் முறைப்படியே இங்கு நடைபெறுவதால் கோயில் வேறு, நாங்கள் வேறு என்று பாராமல், கோயில் நலமே எங்கள் நலம் என்ற எண்ணம் இங்கு என்றும் நிலைத்துள்ளது****
(புத்தகத்தின் முதற் பகுதியில் புலவர் வெ.வை.சிவசங்கர தீக்ஷிதர் எழுதியுள்ள ‘கோயில் அமைப்பும், பொது தீக்ஷிதர்கள் நிர்வாகமும்’ என்ற கட்டுரையிலிருந்து திரட்டப் பட்ட மேற்கோள்கள்)
மேற்கண்ட விவரங்கள் படிக்க நன்றாகவே இருந்தாலும், குறைகளும் இருந்தன என்பது தெரிய வருகின்றது.
பதினொன்றாம் நூற்றாண்டில் சென்னி குலோத்துங்கன் (1135-1146) திருமால் மூர்த்தத்தைக் கடலில் இட்டான் என்பது எல்லோரும் அறிந்த விஷயமே. ஆனால் சமீப காலத்திலும் கசக்கும் நிகழ்ச்சி ஒன்றிருந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கக் காரணமில்லை. இதே புத்தகத்திலுள்ள இன்னொரு கட்டுரை குறிப்பிடும் ஒரு ‘கறார் நாமா’ தீக்ஷிதர்களின் தகராறு ஒன்றை வெளிக் கொண்டு வருகிறது. இந்த ஒப்புதல் வாக்குமூலம், தீக்ஷிதர்கள் நடராஜர் கோயிலுள் இருக்கும் ‘ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோயிலை அக்கிரமமாய் 10 வருட காலம் மூடி வைத்ததும் மேற்படி கோயிலுடைய பூசை வகையறாக் கட்டுப்படுத்தி இருந்ததும்’ தெரிய வருகிறது. இந்த தகராறின் காரணங்களும் விவரங்களும் குறிப்பிடப் படவில்லை.
“அஜரத் முஹம்மது மோதீன் கான் சாயிப்பு அவர்கள் ஆமில் உத்தியோகமாயிருக்கும் காலத்தில், மேற்படி கோயிலைத் திறந்து விட்டு மாமூல் பிரகாரம் பூசை வகையறா ஆரம்பித்து சர்க்கார் நவுக்கிறல் பாரா ஜவானும் பாளையக்கிற் வகையறாகப் பியாதாக்களையும் (??) மேற்படி கோயில் வாசலில் வைத்திருந்ததை நாங்கள் அவர்களை ஜபர்த தாப் (?) அடித்ததும் அல்லாமல் கோயிலை இடித்துப் போடவும் எண்ணம் கொண்டதும் தவிர, மாமூலாய் இருக்கப்பட்ட பெருமாள் கோயில் பலிபீடம் என்று சொல்லப்பட்ட மேடையையும் துவஜத்தையும் இடித்து ஒடித்துப் போட்டோமே, இந்த தப்பிதத்தையெல்லாம் நாங்கள் ஒப்புக் கொண்டிருப்பதாலே , நாங்கள் கறார் செய்வது என்னவென்றால் மாமூலாய் நடந்து வருகிற பெருமாள் கோயில் பூசை, பஞ்ச பர்வ உற்சவம் வகையறாவையும், மேற்படி கோயில் தானீகாள் பரமானந்தம் என்று சொல்லப்பட்ட கிணத்திலிருந்து ஜலம் எடுக்கவும், நாங்கள் தடை செய்வதில்லை. மேற்படி கோயில் உற்சவங்களுக்கு மாமூலாய் இருக்கிற நூற்றுக்கால் மண்டபத்தை அவர்களுக்கு விட்டு விடுகின்றோம் என்று மேலும் பல ஒப்புதல்கள் அளிப்பதுடன் “இனி மேல் யாரொரு சச்சரவு முதலானது எங்களுக்குள்ளே நடந்தால் சர்க்காரில் தெரியப்படுத்தி அபராதம் போட வேண்டியதாயிருந்தால், அந்த அபராதத்தை சர்க்காருக்கு சேர்த்துக் கொண்டு வருவோமாகவும், இனிமேல் நாங்கள் கும்பலும் சேரமாட்டோம், சர்க்கார் உத்திரவுக்கு தலையாலே நடந்து கொள்கிறோம் – இது தப்பி நடந்தால் சர்க்காருக்கு “நோ தானாய்” (?) போவோம் — இப்படிக்கு — சிதம்பர நாத தீக்ஷிதர் முதலாய் 34 பேர்கள்” என்று தீக்ஷிதர்களும் மற்ற சிப்பந்திகளும் ஒப்புமூலம் கொடுத்துள்ளனர். (இதுவும் மேற்படி புத்தகத்தில், ஆய்வாளர் க.மங்களகௌரி எம்.ஏ.(அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வரலாற்றுத்துறை) எழுதியுள்ள ‘தில்லை திருச்சித்திரக்கூடம்’ என்ற கட்டுரையிலிருந்து திரட்டப்பட்ட மேற்கோள்கள்)
இந்த ஒப்புமூலம் 17-10-1976**அன்று கொடுக்கப் பட்டிருக்கிறது. பத்து வருஷமாய் கோயிலை மூடியிருந்தோம் என்றால், இத்தகராறு 1966ம் வருஷமே தொடங்கியிருக்க வேண்டும் என்று அனுமானிக்கலாம்! இந்தச் சம்பவத்தைப் பற்றி வைஷ்ணவ நண்பர்களிடம் விசாரித்தேன், அவர்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை. என்னவாயிருப்பினும், இது தீக்ஷிதர்களின் பெயருக்குக் களங்கமே!
** This appears to be a printer’s devil in the published book. The title clearly says 17-10-1976 but all enquiries locally with friends and interested parties brought out a negative result. The date must actually be 17-10-1796 and not 1976, as after a very thorough search I found the following statement in another article appearing in the same book. “In the last decade of the eighteenth century, there arose a renewed dispute between the two shrines, leading to the stoppage of worship in the Vishnu shrine for some years and even the walling up of its entrance. It was settled by the arbitration of the Nawab’s faujdar of the district, and confirmed by a parwana of Nawab Omdut-ul-Umarach Bahadur of the Carnatic, dated 1797, which defined the respective rights and claims of both the parties.”
After the establishment of the British rule over the district the disputes between the two shrines were fought out in the law courts, off and on, with varying fortunes. Now the main points of contention have been settled fairly amicably and the managers of the two shrines have agreed to work harmoniously, largely through the mediation efforts of the Rajah of Chettinad, who renovated the ruined mantapa in front of the Vishnu shrine, repaired the shrine itself, which was in a dilapidated condition, reconstructed the gopura and the vimana over the garbagraha, and reconstructed the sannidhi itself in the summer of 1934 — (Excerpts from the article “Vignettes from the History of the Chidambaram shrine – by Prof.C.S.Srinivasachari, M.A — page 542 of the same book earlier mentioned)
சிதம்பரநாத தீட்சிதரின் தமிழ் அங்கங்கே புரியவில்லை. புரிந்தவர்கள் விளக்குங்கள்!
தொடர்புடைய பதிவுகள்:
சிதம்பரம் கோவிலும் தமிழ் வழிபாடும் பகுதி 1, பகுதி 2
செப்டம்பர் 30, 2009 at 7:02 மு.பகல்
கடைசியா நீங்க என்ன தான் சொல்ல வர்றீங்க ?
தில்லை கோவில் தீட்சிதர்களுக்கு சொந்தமானதா இல்லையா ?
உங்கள் பதில் என்ன ?
அக்டோபர் 6, 2009 at 1:37 மு.பகல்
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், அறநிலையத்துறை சார்பில் தரிசன கட்டணம் வசூலிக்க, பொதுமக்களிடம் கருத்து கேட்டு அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் அரசுடமையாக்கப்பட்டதற்கு, தீட்சிதர்கள் மற்றும் இந்து ஆலய பாதுகாப்பு குழுவினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவிலில் அறநிலையத் துறை சார்பில் உண்டியல் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நவம்பர் மாதம் முதல், தரிசனக் கட்டணம் வசூலிக்கப் போவதாவும் அறநிலையத்துறை அறிவித்துள்ளது. கோவிலில் அர்ச்சனை செய்ய ஐந்து ரூபாய், நெய்தீபம் ஏற்ற இரண்டு ரூபாய், சிற்றம்பல மேடையில் ஏறி சிறப்பு தரிசனம் செய்ய 50 ரூபாய், விழாக்கால சிறப்பு தரிசனம் 100 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.
இந்த கட்டண விபரம் குறித்து கருத்துகூற விரும்பும் பக்தர்கள் வரும் 25ம் தேதி வரை கோவிலில் உள்ள செயல் அலுவலர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என்று, கோவிலில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. கோவிலில் உண்டியல் வைத்ததற்கே எதிர்ப்பை தெரிவித்து கைதான இந்து ஆலய பாதுகாப்பு குழுவினர், கட்டணம் வசூலிப்பதை அரசு கைவிட வேண்டும், பாரம்பரியமாக எந்த கோவிலிலும் இல்லாத அளவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வந்த நிலை மாறிவிடும் என கூறி, கடுமையான எதிர்ப்பை தெரிவித்து கோவில் வாயிலில் விளம்பர தட்டி வைத்துள்ளனர். இந்த விளம்பர தட்டியை அகற்ற, அறநிலையத் துறை சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
(Dinamalar Oct. 6, 2009)
அக்டோபர் 16, 2009 at 10:01 மு.பகல்
I dont accept to collect money form devoties becouse most of poor people will affect and same time I support to takeover of temple under govt control
December 3, 2009 at 12:32 பிற்பகல்
“ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோயிலை அக்கிரமமாய் 10 வருட காலம் மூடி வைத்ததும் மேற்படி கோயிலுடைய பூசை வகையறாக் கட்டுப்படுத்தி இருந்ததும்’ தெரிய வருகிறது.”
I would like to point out the incident of removing the Shiva idol from the Kallidaikurichi Nambi (Vishnu) temple. It still shows there is still a deep but invisible divide between the Saivism and Vaishnavism — one of the two oldest ‘religions’ of India I would say. Nothing directly directly related to this post though.
December 4, 2009 at 7:21 மு.பகல்
ராஜாராம், கள்ளிடைக்குரிச்சியில் சிவா விக்ரகம் அகற்றப்பட்டது என்பது தெரியாத விஷயம். இன்னும் சைவ வைஷ்ணவப் பூசல்கள் இருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.