ஆகஸ்ட் 2009
மாதாந்திர தொகுப்பு
ஆகஸ்ட் 31, 2009
எழுத்தாளர் ஜெயமோகனின் அமெரிக்க சுற்றுபயணத்தின் நிறைவு பகுதி இந்த வாரம் தொடங்குகிறது. வருகிற சனிக்கிழமை அவர் ஃப்ரிமாண்ட் மெயின் நூலகத்தில் 2 PM முதல் 5PM வரை தனது பயணத்தின் நிறைவு சொற்பொழிவை ஆற்றுகிறார். இது சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழர்களுக்கு இவரை நேரில் சந்திக்க ஒரு அறிய வாய்ப்பு. இதனை சார்ந்த எங்களுக்கு வந்த ஃப்ளையரை இங்கே மீள்பதிவு செய்கிறேன்.
Details of writer Jeyamohan’s event in Bay Area, California
———————————————————————————————-
Illustrious Tamil writer, philosopher, highly lettered intellect and a powerful conversationalist currently visiting Bay Area, CA. We have immense pleasure in organizing a couple of interactive meetings with him in the Bay Area. Mr.Jeyamohan is a multifaceted creative artist whose thoughtful lectures and speeches on various topics and issues would create strong impressions and impacts among the listeners.
Mr.Jeyamohan is an accomplished writer of several best selling novels in Tamil. His modern Tamil writing has revolutionized the contemporary Tamil Literature. As a reputed writer, Jayamohan has enriched the modern Tamil literature through his post-modernist literature, essays, fictions, translation works, non-fictions, travelogues, dramas and philosophical works. His creative works are being made into movies, his sensational fiction Ezhavathu Ulagam was made into the Tamil movie “Naan Kadavul” . Being a multi lingual writer, Jayamohan has good scholarship in the ancient Indian classical language Sanskrit and attained masterly craft in creative writing in south Indian languages Tamil and Malayalam. He has translated several literary works from Malayalam to Tamil. His prime areas of interst includes History, Philosophy and arts.
Jeyamohan has written 8 novels, several of them are considered to be the classics in Tamil literature and one of the novels is adopted into a well-acclaimed Tamil movie too. He has authored 6 short story collections and one poetic novel. He has penned 8 books on non-fictions including essays ranging from ancient Tamil literature to Hindu philosophies. His essays include biographies, philosophies, literary criticisms, Indian classical arts and travels. He is a playwright too with one stage-play to his credit. He is considered as an important critic in Indian literary world. He has so far written 13 books on Indian literary and other fine arts of Indian and global creative works. He has authored one novel in another south Indian language Malayalam. His interviews, lectures and dialogues are compiled into 3 books. He has translated many classical literary works from Malayalam to Tamil. His translation works have been published in three volumes. He has written dialogues for several Tamil movies too. His eruditeness on Indian philosophies, Vedhas and Geetha has been transformed into several books. He shares his thoughts, his creative works, his travel experiences, his spiritual works etc in his web site www.Jayamohan.in , an immensely popular web site among tens of thousands of Tamil readers across the world. Through his online writings he is constantly reaching and enriching the knowledge of millions of Tamil readers across the world. He lives in Nagercoil, Tamil Nadu, India.
He has written screen plays and dialogues for the movies Kathuri Maan, Naan Kadavul, Angadhi Theru, Tamil version of Malayalam period movies Pazhasi Raja. Tamil film world and promising directors are showing keen interests in making his works into movies. He is engaged for writing screen plays and scripts for some more movies under production too. He is influenced by both atheistic political thinking and also his spiritual side is quite influential in his writings.Though his mother tongue is Malayalam, he claims that Tamil is a comfortable vehicle because of the richness of the language.
His acclaimed novel ‘Vishnupuram’ revolves around the ‘ spiritual quest through Indian philosophical schools and also around the great architectures of ancient India. It has a complex theme where it tries to capture the time where Hinduism and Buddhism are intersecting. The fusion and disillusionment created in the novel are well woven. His other great novels like Rubber, Pinthodarum Nizhalin Kural, Kaadu, Ezhavathu Ulagam etc created rave reviews among the Tamil readers and critics alike.
Please make use of this opportunity to listen to the speeches and to get your questions on myriad topics answered or to simply interact with one of the finest literary contributors of contemporary Tamil Literarture.
Two events with the author have been scheduled at the Bay Area,CA. An interactive chat with the author session has been scheduled on August 30th afternoon and a reception with introduction to his literary works and a speech by the author has been organized by Bharathi Tamil Sangam, a Bay Area cultural organization on the afternoon of Sep 5th. Please plan to attend both the scheduled meetings, please find the details of the events below:
Event: Meet the author –
(An interactive question and answers session with the Tamil author Mr.B.Jeyamohan)
Day: Sunday the August 30th
Time: 3 PM and 7 PM
Venue: India Harvest Restaurent
4161 Cushing Pkwy
(at E Northport Loop)
Fremont, CA 94538
Event: Reception and speech by writer B.Jeyamohan. This event is organized by Bharathi Tamil Sangam
Date: Saturday the 5th Sep, 2009
Time: 2PM and 5 PM
Venue: Fremont Library Hall
Fremont Library
Stevenson Blvd and Paseo Padre intersection
Fremont, CA
All are welcome and there is no admission fees.
ஆகஸ்ட் 24, 2009
(இது திரு.சேதுராமனின் இடுகையின் தொடர்ச்சி)
நாற்பதுகளில், சுதந்திரம் கிடைத்தற்கு முன்னரும், பின்னரும், காஞ்சி முனிவர் ஊர் ஊராகச் சென்று பல்வேறு விஷயங்களைப் பற்றிச் சொற்பொழிவாற்றி வந்தது வழக்கமாயிருந்தது. இந்த உத்திரமேரூர் தேர்தலைப் பற்றி அவர் நிறையவே பேசியிருக்கிறார் – தேர்தல் எப்படி நடைபெற்றது என்று பார்க்கும் முன்னர், காஞ்சி முனிவரின் சொற்பொழிவுகளிலிருந்து சில முக்கியமான பகுதிகள்:
*** பொது ஜனங்களுக்கும் ஆட்சியிலே பங்கு தருகிற ஜனநாயகம் என்பது மேல்நாட்டினர் சொல்லிக் கொடுத்துத் தான் நமக்குத் தெரிய வந்தது என்ற ஒரு பொது அபிப்பிராயம் இருந்து வருகிறது. ஆனால் உண்மையிலேயே வேத காலத்திலிருந்தே ஜனங்களின் அபிப்பிராயம் பிரதிபலிப்பதற்கு இடம் கொடுத்துத் தான் ராஜ்ய நிர்வாகம் நடந்து வந்திருக்கிறது. வேதத்திலே ‘ஸபா’, ‘ஸமிதி’, ‘விததா’ என்று இரண்டு மூன்று அமைப்புகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறது ***
*** விஜயாலயனுக்குப் பிறகு இரண்டாம் பட்டமாக ஆட்சி புரிந்த பராந்தக சோழன் காலத்தில்தான் இந்தத் தேர்தல்கள் நடந்தன என்பது உத்திரமேரூரில் இருக்கும் இரண்டு கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகின்றது.உத்திரமேரூர் காஞ்சிபுரத்துக்கு அருகே உள்ளது, இதற்குப் பேரூர் என்ற பெயரும் உண்டு.***
*** இந்த நாளில் ஊரை ‘வார்ட்’ என்று பல பிரிவுகளாகப் பிரித்திருக்கிற மாதிரி, அப்போது ஒவ்வொரு ஊரையும் பல ‘குடும்பு’களாகப் பிரித்திருக்கின்றனர். ஒரு குடும்புக்கு ஒரு பிரதி நிதியாக கிராம மஹாசபை அமைக்கப் பட்டது. பிரதி நிதிகள் எல்லோருமே தேர்தல் மூலம் பொறுக்கி எடுக்கப் பட்டு பதவிக்கு வந்தனர்–ஊராட்சி சபையின் ‘மெம்பர்ஷிப்’ பாரம்பர்யமாகவோ, அல்லது ராஜாங்க நியமனமாகவோ இல்லை – மணியம் மாதிரி அப்பா-பிள்ளை என்று தலைமுறை தத்துவமுமில்லை. Hereditary Appointment இல்லை, Nominated appointment இல்லை – எல்லாமே Elected Appointment தான்.***
*** தற்போது அரசியல் வாதிகளுக்கு வயதுக்கு மேல்வரம்பே இல்லை. முதல் கல்வெட்டில் வயது வரம்பு 30 முதல் 60 வரை என்றுதான் இருந்திருக்கிறது. அப்புறம் இன்னமும் ஆழமாகச் சிந்தித்து, இரண்டு வருஷங்கள் நடை முறையையும் பார்த்த பின்னர் முப்பதை முப்பத்தைந்து ஆக்கி, அறுபதை எழுபதாக்கியுள்ளார்கள். ***
*** எதிலே வயதான பெரியவர்கள் இல்லையோ அது ஸபையே ஆகாது – அவர்கள் அங்கம் வகிப்பதே முறையான ஸபை. உண்மையான விருத்தர்கள், தாங்கள் கற்றும் கேட்டும் தெரிந்து கொண்ட சத்ய, தர்மங்களை வாழ்க்கையில் நடத்திக் காட்டுபவர்களாகவும் இருப்பார்கள். ***
*** மேல் வரம்பு வைத்ததில் இன்னொரு சாரமான அம்சமும் இருக்கிறது. ஆரம்பத்திலே தியாகம் செய்தோ, மிக உயர்ந்ததான ஒரு திட்டம் போட்டோ, ஒரு இயக்கத்தை நடத்தியோ, ஜனங்களிடம் பிராபல்யம் பெற்று விட்டால் பிற்பாடு அவர் என்ன செய்தாலும் என்ன சொன்னாலும் அது சரி என்றே ‘ஆமாம் சாமி’ போட ஆரம்பித்து விடுவார்கள் மக்கள். இப்படிப்பட்ட ஒரு தலைவர் அதிகார ஸ்தானத்தைப் பிடித்து விட்டால் அவரைப் பதவியிலிருந்து இறக்கமுடியாமற் போனது எல்லா தேசங்களிலும் உண்டு. இது நேராமல் தடுக்க உத்திரமேரூர் சபை ‘ஒரு வருஷம் தேர்ந்தெடுக்கப் பட்டவர் அடுத்த மூன்று வருஷங்கள், தேர்தலுக்கு நிற்க முடியாது என்று விதித்திருந்தது. ***
வேட்பாளர் இல்லாத, வாக்காளர் இல்லாத தேர்தல் !!
தேர்தல் எப்படி நடந்தது? யார் நடத்தினார்கள்? முதலில் யார் நடத்தவில்லை என்று பார்ப்போமா? நடப்பிலிருக்கும் கிராம மஹாசபை அடுத்த சபைக்கான தேர்தலை நடத்தவில்லை!! ஏனெனில் முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லா சபை உறுப்பினர்களும் (வாரியத்தலைவர்கள் உட்பட) பதவி விலகிவிட வேண்டும். இதன் பின்னர் “தர்ம க்ருத்ய சபை” என்ற அமைப்பின் பொறுப்பிலேயே மத்யஸ்தர்களைக் கொண்டுதான் தேர்தல் நடத்த வேண்டும் என்று கல்வெட்டு சாசனம் கூறுகிறது. யார் இந்த தர்ம க்ருத்ய சபை?
கிராம மஹாசபை தவிர, அதன் முப்பது குடும்புகள் தவிர, அவரவர் ஸ்வதர்மப்படி கர்மா செய்விக்கிற நாட்டாண்மைகளின் கீழ் கிராமம் பன்னிரண்டு ‘சேரி’களாக பிரிக்கப் பட்டிருந்தது. அக்ரஹாரமும் ஒரு சேரி தான். இந்தப் பன்னிரண்டு நாட்டாண்மைகளும் சேர்ந்ததுதான் ‘தர்ம க்ருத்ய சபை’ என்று ஊகம் செய்து சொல்கிறார்கள் தொல்பொருளாராய்ச்சியாளர்கள். இது மொத்த சமூகமும் சேர்ந்ததுதான் என்பது நிதர்சனம்– ஏனெனில் ஒரு கிராமத்தில் ஒரு அக்கிரஹாரமே இருக்கக் கூடும்!
ஒவ்வொரு குடும்பிலும் மக்கள் மதிப்பு வைத்திருக்கிற பெரியவர்கள் எல்லோருக்குமே தெரிந்திருக்கும். ஒவ்வோன்றிலும் இது மாதிரி நிறையப் பேர்கள் இருக்கலாம். இவர்கள் ஒவ்வொருவர் பேரையும் ஒரு தனி ஓலையில் எழுதிக் கொள்வார்கள். போட்டியிடுகிற அத்தனை பேர்களுக்கும் தலா ஒரு ஒலை இருக்கும். ஒரு குடும்பின் வேட்பாளர்கள் எல்லோருடைய ஒலைகளும் ஒரு கட்டாகக் கட்டப்படும். இம்மாதிரி முப்பது ஓலைக்கட்டுகள் தயாரான பின் கிராம மக்கள் கூடுவர். அனேகமாக கிராமக் கோயிலின் வெளி மண்டபத்தில்தான் இது நடக்கும்.
முப்பது ஓலைக்கட்டுகளும் இங்கு கொண்டுவரப்படும் – அங்கே மேடை மத்தியிலே ஒவ்வொரு குடும்புக்கும் ஒரு குடம் வீதம் மேடையில் முப்பது குடங்கள் இருக்கும். ஓலைகள் குடத்திலிடப்பட்டு, பின்னர் தேர்ந்தெடுக்கப்படுவதாலேயே இது ‘குடவோலை’ என்று பெயர் பெறுகிறது.
கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் – அவர்களை நம்பிமார் என்றழைப்பர் – அவர்கள் முன்னிலையில்தான் இத்தேர்தல் நடக்கும் – நம்பிமார்கள் கடவுளின் பிரதிநிிதியாகக் கருதப்படுவர். முதல் குடும்பின் வேட்பாளர்களின் பேர்களைக் கொண்ட ஓலைக்கட்டை, அவையிலிருக்கும் வயதிலே பெரியவர் அப்படியே கட்டுப் பிரிக்காமல் குடத்துக்குள் போடுவார். பின்னர் நம்பிமார் மற்றக் கட்டுகளை ஒவ்வொன்றாக அவையோரெல்லாம் பார்க்கும்படி நன்றாகத் தூக்கிக் காட்டிய பின்னர் குடத்திலிடுவார். எல்லாக் கட்டுகளும் குடங்களில் இடப்பட்ட பின்னர், கூடியிருக்கும் குழந்தைகளில், ஒரு சின்னக் குழந்தையைக் கூப்பிட்டு, மேடைக்கு வரச் செய்து, குடத்துள் கைவிட்டு ஓலைக்கட்டிலிருந்து ஏதாவதொரு ஓலையை எடுத்து கொடுக்கச் சொல்லுவார். குழந்தை எடுத்துக் கொடுத்த ஓலையிலுள்ள் பேருக்குடையவரே அந்தக் குடும்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இத்தேர்தலில் ஒளிவு மறைவுக்கு இடமில்லை – தனி மனிதக் கவர்ச்சிகள் இல்லை – பெரும்பான்மை அடிப்படை இல்லை – இந்த விதத்தில் உத்திரமேரூர் தேர்தல் முறை ஒரு தனித்துவம் பெறுகிறது.
ஆதாரம்:
1. “தெய்வத்தின் குரல்” – நான்காம் பகுதி – ரா.கணபதியால் தொகுக்கப்பட்ட காஞ்சி மாமுனிவரின் சொற்பொழிவுகள் – வானதி பதிப்பகம் – சென்னை 1985)
ஆகஸ்ட் 24, 2009
(இது திரு.சேதுராமனின் இடுகை)
நல்ல படியாக ஐந்து தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடந்து முடிந்தது. முடிவுகள் எதிர்பார்த்தபடி இருந்தன. எல்லோருக்கும் மகிழ்ச்சி. அரசியல் கட்சிகளின் அடுத்த இலக்கு 2011ல் வரப்போகும் சட்டசபைத் தேர்தல்தான் இனி. அது வரை பொது மக்களுக்கு நிம்மதி!
ஜனநாயக ஆட்சி இல்லாத முடியரசு இருந்த காலத்திலேயும் நம் தமிழ் நாட்டில் தேர்தல்கள் நடைபெற்றன. ஆம், சோழ மன்னர்கள் காலத்திலே கிராமங்களை நிர்வகிக்க ஒரு சபை தேர்ந்தெடுக்கப் படுவது வழக்கமாக இருந்தது. இது பற்றிப் பேச ஆரம்பித்தவுடன் நமக்கு நினைவுக்கு வருவது “உத்திரமேரூர்” தான். இந்த ஊரில் நடை பெற்ற தேர்தல முறைகளைப் பற்றி முன்னோர்கள் விரிவாகவே கல்வெட்டுகளில் பதிந்து வைத்துள்ளனர்.
இக்கல்வெட்டுகளிலிருந்து, தேர்தலில் நிற்க ஒரு நபருக்குத் தகுதிகள் என்ன? யார் தேர்தலில் நிற்கலாம், யார் நிற்கக் கூடாது – என்பதையெல்லாம், தெளிவாகவே எழுதி வைத்துள்ளனர் ஆயிரத்து நூறு வருடங்களுக்கு முன்னதாக பராந்தக சோழன் ஆட்சியின் போது.
ஊர் முப்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒரு நபரைத் தேர்ந்தெடுத்தனர். தேர்தலுக்கு நிற்பவர் சில அடிப்படைத் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். அசையாச் சொத்து கொஞ்சமாவது இருக்க வேண்டும். புறம்போக்கு அல்லது பிறருடைய நிலத்திலோ வீடு கட்டிக் கொண்டிருப்பவராக இல்லாமல், தன்னுடைய சொந்த மனையில் வீடு கொண்டவராக இருக்க வேண்டும். இரண்டாவது, ஆனால் முக்கியமான தகுதி அவருடைய வயது முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலே இருக்க வேண்டும். இந்த வயதுக் காலதத்ிலேதான் அவருக்கு உலகானுபவம் இருக்கும் என்று நினைத்தனர் மக்கள். அடுத்த தகுதி (இந்தத் தகுதி மட்டும் இன்னாளில் இருந்தால், பாதிக்கு மேலே நம் அரசியல்வாதிகள் காலி!!) தேர்தலுக்கு நிற்பவர் வயது எழுபதிற்கு மேல் இருக்கக் கூடாது. நான்காவது, வேட்பாளர் ஒரு குறிப்பிட்ட அளவு கல்வி கற்றிருக்க வேண்டும். மற்ற தகுதிகள், செயல் புரிவதில் வல்லவனாகவும், ஒழுக்கமுடையவனாகவும், நேர் வழியில் சம்பாதித்த பொருளீட்டியவனாகவும், நல்ல மனமும் பண்புகளும் கொண்டவனாகவும் இருக்க வேண்டும்.
இன்னொரு மிக முக்கியமான விஷயம் – ஒரு இன்றியமையாத தகுதி முன்னமேயே ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்கக் கூடாது. இந்தத் தடை மூன்று தேர்தலகள் வரை செல்லும்.
இதனுடன் நிற்கவில்லை அந்தக் கல்வெட்டு – தகுதியற்றவர்கள் யார் என்று விவரிக்கிறது!
தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஒழுங்காகக் கணக்கு காட்டாமல் இருந்தாரானால் பின்னர் தம் வாழ்நாள் முழுதும் தேர்தலுக்கு நிற்க முடியாது! அவர் மட்டுமல்ல – அவரது மகன், பேரன், தந்தை வழி, தாய்வழி, மகனையோ மகளையோ சம்பந்தம் செய்து கொண்டவர்கள், மற்றும் எந்த விதமான உறவினர்களும் தேர்தலில் நிற்க முடியாது.
தான் கொள்ளை லாபம் சம்பாதித்து விட்டு தனது சொந்தம் யாரையும் சபையாட்சியில் அமர்த்தி விட முடியாது. இது மட்டுமல்ல – கள் சாராயம் அருந்துபவர்கள், பிறர் பொருளை அபகரித்தவர்கள், பிறர் மனைவியை அபகரித்தவர்கள், மேலே கண்ட மூவரையும் தூய்மையானவர்கள் என்று பேசுபவர்கள் – இக்குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வெளியே வந்தவர்கள், மக்களை ஏமாற்றுபவர்கள் – இவர்களும் தேர்தலுக்கு நிற்க முடியாது. கடைசியாக ஆனால் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது – லஞ்சம் அல்லது கையூட்டு! யாராவது லஞ்சம் வாங்கினால் ஏழு தலை முறைகளுக்கு நிற்க முடியாது. லஞ்சம் வாங்குகிறார் என்று தெரிந்தவுடன் ஒரே ஆண்டுக்குள் பதவியிலிருந்து நீக்கி விடுவர்!!
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்களால்தான் ஊர் சபை அமைக்கப்படுகிறது. இச்சபைகள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து கிராமப் பணிகளைக் கவனிப்பர். இச்சபைகள் “வாரியங்கள்’ என்றழைக்கப்பட்டன. (இப்பவும்தான், ஆனால் வாரியங்களின் தலைவர்கள் பல்வேறு காரணங்களுக்காக நியமிக்கப்படுகின்றனர்)
இளைஞர்களும், உடல் வ்லியுள்ளவர்களும் கடுமையான பணிகளையும் வயது முதிர்ந்தவர்களும் ஆற்றல் நிறைந்தவர்களும் மேற்பார்வைப் பணிகளையும் செய்து வந்தனர். (தொடரும்)
ஆதாரம்:
1. தமிழகத் தொல்பொருள் துறையின் இயக்குனராக இருந்த டாக்டர் ஆர். நாகசாமி எழுதியுள்ள “தவம் செய்த தவம்” என்ற கட்டுரைத் தொகுதி – பிருகதீஷ் பதிப்பகம், அடையாறு, சென்னை – 1994
2. ரா. கணபதி தொகுத்துள்ள காஞ்சி மாமுனிவர் சொற்பொழிவுகள் “தெய்வத்தின் குரல்” என்ற புத்தகம்
ஆகஸ்ட் 3, 2009
சிதம்பரம் கோவிலை பற்றி பெரும் விவாதம் நடக்கிறது. மகிழ்ச்சி. கொஞ்சம் பிசி, அதனால் கலந்து கொள்ள முடியவில்லை. மன்னிக்கவும். அதுதான் பதிவாகவே எழுதுகிறேன்.
மீண்டும் ரம்பம் போடுவதற்குள் எனக்கு தெரிந்த வரையில் நிலை என்ன என்பதை தெளிவாக சொல்லிவிடுகிறேன். என்னுடைய perception இதுதான் – சிதம்பரம் கோவில் நிர்வாகம் தீட்சிதர்கள் கையில் பரம்பரை பரம்பரையாக இருந்து வருகிறது. தமிழ் நாட்டில் இருக்கும் எல்லா க்ளாசிக் கோவில்களையும் போலத்தான் இங்கும் அர்ச்சனை சமஸ்கிருதத்தில் நடக்கிறது. ஆறுமுகசாமி என்ற ஒரு வயதானவர் பல வருஷங்களாக கோவில் வளாகத்தில் – ஆனால் கருவறைக்கு வெளியேதான் – தேவாரம் பாட முயற்சி செய்து வருகிறார். அவரை தீட்சிதர்கள் பாட விடாமல் தடுக்கிறார்கள், அதற்கு ஆகம விதிகளையும், சம்பிரதாயங்களையும் காரணமாக காட்டுகிறார்கள். கோர்ட்டில் கேஸ் ரொம்ப நாளாக நடக்கிறது. சமீபத்தில் ஒரு நீதிபதி கோவில் நிர்வாகத்தை அரசு ஏற்க வேண்டும் என்றும் தேவாரம் பாட தடை விதிக்கக் கூடாது என்றும் தீர்ப்பு வழங்கினார். தீட்சிதர்கள் இதை ஏற்க மறுத்து மேல் முறையீடு செய்திருக்கிறார்கள்.
இதற்கு மேல் என் யூகம் இது – தமிழில் பக்தர் விருப்பப்பட்டால் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று சட்டம் இருந்தாலும் கருவறைக்கு வெளியே பாடியதற்கே அடி உதை என்றால் இந்த தமிழ் அர்ச்சனை பிசினஸ் எல்லாம் இங்கே நடக்கப்போவதில்லை. இது யூகம்தான் என்பதை மீண்டும் வலியுறுத்தி சொல்கிறேன்.
என் perception தவறாக இருந்தால் என் முடிவுகளும் தவறாக இருக்கலாம். நிலை இது இல்லை என்றால் விஜயராவன், வித்தகன், அரை டிக்கெட், கரிகுலம் மற்றும் தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் எடுத்து சொல்லுங்கள்.
தமிழ் நாட்டு கோவிலில் (மசூதியில், சர்ச்சில்) பக்தன் விருப்பப்பட்டால் தமிழில் வழிபாடு நடத்தும் உரிமை வேண்டும். அவ்வளவுதான். அதனால் சமஸ்கிருதத்தில்(அரபிக்கில், லத்தீனில்) வழிபாடு செய்யக்கூடாது என்பதில்லை. அது கும்பிடுபவர் இஷ்டம். By default, தமிழில் நடக்கவில்லை என்றால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. நான் கேட்டால் தமிழில் நடக்க வேண்டும், அவ்வளவுதான். என் பெண்ணுக்கு தமிழ் ததிங்கினத்தோம், அவளுக்கு ஆங்கிலத்தில் வழிபட முடிந்தால் நன்றாக இருக்கும். என் கண்ணில் விஷயம் இவ்வளவுதான்.
சிதம்பரம் பாடல் பெற்ற ஸ்தலம். தேவாரமே அங்கேதான் இருந்ததாம். அங்கே தேவாரம் பாடுவது தவறு என்பது மிக distasteful ஆக இருக்கிறது.
சிதம்பரம் பெரிய கோவில். அங்கே வரும் பக்தர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. கடமை இருந்தால் நிர்வாக உரிமையும் அரசுடையதுதான். தீட்சிதர்களுக்கு நிர்வாகத்தில் பங்கு இருக்கத்தான் வேண்டும். அது அவர்களுக்கு மறுக்கப்படக்கூடாது. முக்கால்வாசி தீட்சிதர்களுக்கு கோவில் இல்லை என்றால் வாழ வேறு வழி இல்லாமல்தான் இருக்கும். புறம்போக்கு நிலத்தில் பத்து வருஷம் குடி இருந்தால் அரசு பட்டா போட்டு கொடுக்க வேண்டும் என்று சொல்வது எவ்வளவு சரியோ, அதை விட பல மடங்கு பல நூறு வருஷம் இந்த கோவிலை நிர்வகித்த தீட்சிதர்களுக்கு கோவில் நிர்வாகத்தில் பங்கு இருக்க வேண்டும் என்று சொல்வது சரி. ஆனால் கோவில் தீட்சிதர்கள் சொந்த சொத்து இல்லை என்பது அவர்களுக்கு தெளிவாக உணர்த்தப்பட வேண்டும்.
அப்புறம் நாத்திகர்கள் இதில் தலையிடக்கூடாது என்று சொல்வது எனக்கு புரியவே இல்லை. கேசை விசாரிக்கும் நீதிபதி நாத்திகராக இருந்தால் தீர்ப்பு தவறாகிவிடுமா? ஆத்திகராக இருந்தால் தீர்ப்பு சரியாகத்தான் இருக்கும் என்று காரண்டி உண்டா? தீட்சிதர்கள் தேவாரம் பாடக்கூடாது என்று எத்தனை ஆத்திகரை கேட்டு முடிவெடுத்தார்கள்? நந்தனார் உள்ளே வரலாமா கூடாதா என்று என்ன வாக்கெடுப்பா நடந்தது? இந்த கோவில் பொது சொத்து, அதனால் நாத்திகர், ஆத்திகர், முஸ்லிம், கிருஸ்துவர் எல்லாருக்கும் கருத்து சொல்ல உரிமை இருக்கிறது. கோவிலை நடத்த தீட்சிதர்கள், அரசு அதிகாரிகள், பொது மக்களின் பிரதிநிதிகள் எல்லாரும் சேர்ந்த ஒரு குழு ஏற்படுத்தி, அவர்கள் அரசியல் சட்டத்துக்குட்பட்டு முடிவெடுக்கட்டும். இந்த மாதிரி நாங்களே முடிவு செய்துகொள்வோம், “அந்நியர்கள்” தலையிடக்கூடாது என்றால் மீண்டும் அமிர்தசரஸ் தங்கக் கோவில் ஆயுதக் கிடங்காகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (இன்று அமிர்தசரஸ் நிர்வாகத்தில் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் இருக்கிறார்களா என்று தெரியாது என்பதையும் சொல்லி விடுகிறேன். அதை ஒரு உதாரணமாகத்தான் சொல்கிறேன்.) “அந்நியர்களான” ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்தபோதுதான் உடன்கட்டை சட்ட விரோதமானது, சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது. எங்கள் மத விஷயத்தில் தலையிடாதீர்கள் என்று அப்போதும் பலரும் கத்தத்தான் செய்தார்கள். தவறு நம் மேல் இருக்கும்போது “அந்நியர்” அதை எடுத்து சொன்னால் நாம் defensive mode-க்கு போக வேண்டியதில்லையே?
மறுமொழிகளில் எழுப்பப்பட்ட சில கருத்துகளுக்கு என் மறுமொழிகள் கீழே.
முரளி சொன்னதுபோல் ஓரளவு பழக்கம் உள்ள பதிவர்கள், மறுமொழி எழுதுபவர்கள் எழுதுவதை நான் by default, உண்மையாகவே கருதுபவன். எல்லாருக்கும் benefit of doubt உண்டு, பொய் சொல்கிறார்கள் என்று எனக்கு நிச்சயமாக தெரியாத வரை எழுதுபவர்கள் எல்லாரும் நேர்மையனாவர்கள்தான்.
விஜய் என்பவர் எழுதிய மறுமொழியில் தன் நண்பன் திருவாசகம் பாடியதை தானே பக்கத்தில் நின்று பார்த்ததாகவும் யாரும் ஒன்றும் சொல்லவில்லை என்றும் சொல்லி இருந்தார். ஆறுமுகசாமி அர்ச்சகர் பூஜை செய்யும்போது அவர்களை தொந்தரவு செய்யும் விதமாகவே பாடுவதாகவும் அதனால்தான் பிரச்சினை என்றும் எழுதி இருந்தார். அப்படி ஆறுமுகசாமி செய்வதாக இருந்தால் என் கேஸ் பாதி க்ளோஸ். அப்படி தொந்தரவு செய்வதற்கு ஆறுமுகசாமிக்கு எந்த உரிமையும் இல்லை. அப்புறம் தமிழ் அர்ச்சனை, கோவில் நிர்வாகம் இரண்டு மட்டும்தான் மிச்சம்.
விஜயராகவன் சாமிக்கு எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது theological problem என்று சொல்கிறார். அவர் சொல்வதில் எனக்கு இசைவில்லை, ஆனால் அது பக்தர்களின் பிரச்சினை என்றால் ஆறுமுகசாமி பக்தர்தானே? அவருக்கு நாத்திகர்கள் சப்போர்ட் செய்யும் நிலை வந்ததற்கு காரணம் தீட்சிதர்கள்தானே என்று தோன்றுகிறது.
கார்த்திக், மற்றும் சிலர் இஸ்லாம், கிருஸ்தவ மதங்களை கண்டு அரசு பம்முவதை பற்றி சொல்லி இருந்தார்கள். அதில் உண்மை இருக்கிறது. ஷா பானோவுக்கு இழைக்கப்பட்டது இந்த சிதம்பரம் விஷயத்தை விட பல மடங்கு பெரும் அநீதி. ம.க.இ.க., அரை டிக்கெட், பெரியார் உட்பட யாரும் மசூதியில் அரபி மட்டும் கூடாது, தமிழிலும் தொழுகை நடத்த உரிமை வேண்டும் என்று சொல்லி என் வாழ்க்கையில் நான் கேட்டதில்லைதான். ஆனால் இஸ்லாம் விஷயத்தில் அரசு தவறு செய்கிறது, அதனால் ஹிந்துக்கள் விஷயத்திலும் தவறு செய்ய வேண்டும் என்ற வாதம் எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. இதை திருத்த வேண்டும், ஆனால் அதை மறந்துவிடாதீர்கள் என்றல்லவா பேச வேண்டும்?
அரை டிக்கெட் தீட்சிதர்கள் கோவிலில் தண்ணி அடிக்கிறார்கள் என்றெல்லாம் சொல்கிறார். இதெல்லாம் பெரிய குற்றச்சாட்டு. ஆதாரம் இல்லாமல் பேசமாட்டார் என்று நம்புகிறேன்.
அப்புறம் அரை டிக்கெட் கருவறைக்குள் நுழைய முயன்றோம், தாக்கினார்கள் என்று எழுதி இருக்கிறார். கருவறைக்குள் அங்கே பணி புரியும் அர்ச்சகர்களை தவிர வேறு யாரும் நுழையக்கூடாது என்று தமிழ் நாட்டு கோவில்களில் விதி இருக்கிறது. இது பணி சார்ந்த விதி – ஜாதி சார்ந்த விதி இல்லை. பூணூல் போட்டிருந்தால் உள்ளே அழைத்து சென்றுவிடுவதில்லை. விதியை மீறினோம், தாக்கினார்கள் என்றால் முதல் தவறு அரை டிக்கெட் மேல்தான் இருக்கிறது. வட இந்திய கோவில்களில் கருவறைக்குள் செல்லலாம் என்று சொல்கிறார்கள். காசியில் கூட அப்படித்தானாம். அங்கும் நான் பார்த்த நகர்புறக் கோவில்களில் பூணூல் போட்டிருக்கிறானா, அப்போதுதான் கருவறைக்குள் வரலாம் என்று பார்ப்பதில்லை. சில விஷயங்களை கோவிலின் சம்பிரதாயம் என்று விட்டுவிட வேண்டும். ஏன் சிதம்பரம் கோவிலில் கடா வெட்டுவதில்லை, ஏன் ஸ்ரீரங்கம் கோவிலில் விபூதி கொடுப்பதில்லை என்றெல்லாம் கேட்பதில் அர்த்தமில்லை. கோவில் என்ன McDonald’s-ஆ, எல்லா கோவிலிலும் ஒரே மாதிரி இருக்க? பிறப்பால் வித்தியாசம் பார்க்கவில்லை என்றால் போதும்.
அப்புறம் கரிகுலம் Reformation பற்றி கொடுத்த தகவல் தவறு. விஜயராகவனும் இதை சுட்டி காட்டி இருக்கிறார்.
வித்தகன் கேரளாவில் சட்டையை கழற்றிவிட்டு கோவிலுக்கு வர வேண்டும் என்று சொல்வது பூணூல் இருக்கிறதா இல்லையா என்று பார்க்கத்தான் என்கிறார். இது எனக்கு கொஞ்சம் ஓவராக தெரிகிறது.
ஹரிஜன் என்றால் “ஹரிஜன்களுக்கு” patronizing ஆக இருக்கிறது, தலித் என்றால் அப்படி இல்லை, அதனால் தலித் என்று மாற்றி சொல்ல சொல்கிறார்கள். ஒரு காலத்தில் மால்கம் எக்ஸ் கூட நீக்ரோ என்றுதான் பேசினார். இன்று ஆஃப்ரிகன் அமெரிக்கன் என்று சொல்கிறோம். இது கேட்பவர்கள் மன நிலையை பொறுத்தது. அவ்வளவுதான், விஜயராகவன்! எனக்கு (இன்னும் பலருக்கும்) பார்ப்பனீயம் என்ற வார்த்தை தவறனாதகவும் offensive ஆகவும் தெரிகிறது. அதற்கு பதிலாக ஜாதீயம் என்று சொல்லலாம் என்று பல முறை சொல்லி பார்த்தேன். ஆனால் அதை வினவு குழுவினரும் அரை டிக்கெட்டும் விடுவதாக இல்லை, அதுதான் கொஞ்சம் சோகமாக இருக்கிறது.
கரிகுலம், தமிழில் எழுதுங்களேன்! தமிழ் பற்றி இவ்வளவு தூரம் பேசும் நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவது ironical ஆக இருக்கிறது. அப்புறம் நீங்கள் சொல்வது போல எல்லா இடங்களிலும் தாய்மொழி வழிபாடு வென்றுவிடவில்லை. யா இலாஹா இல்லல்லாஹா மொஹம்மதுல்லா சூலுல்லாஹி என்றுதான் சொல்கிறார்கள், யாரும் குரானை தமிழில், ஆங்கிலத்தில், சமஸ்கிருதத்தில் ஓதி கேட்டிருக்கிறீர்களா என்ன? தமிழில் வழிபட உரிமை மறுக்கப்படுகிறது என்பதற்காக எதிர் தரப்பை தவறாக ஏணியில் ஏற்றாதீர்கள்! சமஸ்கிருதத்தில் வழிபடுவது உங்களுக்கு அவமானமாக இருக்கலாம். எனக்கு நிச்சயமாக இல்லை. நானும் தமிழன்தான். என் கண்ணில் சமஸ்கிருதம் தேவ பாஷை இல்லை. தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது என் preference. சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்தால் நான் காதை மூடிக்கொள்ள மாட்டேன். Generalize செய்யாதீர்கள். அப்புறம் வாக்கெடுப்பு நடத்தினால் தமிழர்கள் சமஸ்கிருத வழிபாட்டையே விரும்புவார்கள் என்று எழுதி இருந்தீர்கள். நான் தமிழுக்கு வோட்டு போடுவேன், ஆனால் அது அவரவர் இஷ்டம். நான் விரும்பினால் தமிழில் வழிபாடு நடக்கும் என்ற நிலையை – என்ற நிலையை மட்டுமே – நான் வேண்டுகிறேன். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, உருது எல்லாம் வேண்டாம் – தமிழ் நாட்டில் விருப்பபட்டால் தமிழில் வழிபாடு என்பது கிடைத்தால் போதும். அப்புறம் சாதாரண மக்கள் ஒரு தவறான தலைவனால் வழி தவறுகிறார்கள் என்றால், அவர்களுக்கு சரியான கருத்தை எடுத்து சொல்லுங்கள்!
வித்தகன், சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள விரும்பி நான் ஒரு முறை ராமகிருஷ்ணா மடம் சென்றிருந்தேன். யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். வருபவர்கள் அனேகமாக வயதான ரிடையர் ஆன பார்ப்பனர்கள் மட்டுமே.
ஒரு காலத்தில் நீங்கள் சொல்வது உண்மையாக இருந்திருக்கலாம். அப்போது கூட வேதம் படிப்பதற்குத்தான் கட்டுப்பாடு இருந்தது என்று சொல்கிறார்கள், சமஸ்கிருதம் படிக்க இல்லை. வால்மீகி பார்ப்பனர் இல்லை என்பதை நினைவுபடுத்துகிறேன். அப்புறம் நீங்களே இப்படி உங்களுக்கு கலைஞர்தான் சரி, இதனால்தான் பிராமணர்கள் அமேரிக்கா சென்றுவிடுகிறார்கள் என்றெல்லாம் எழுதினால் நான் யாரை நொந்து கொள்வது?
தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு
தொடர்புடைய பதிவுகள்:
சிதம்பரம் கோவில் I
சுப்ரமணிய சாமியுடன் சிதம்பரம் கோவில் பற்றி விவாதம்
37.523851
-122.047324