சிதம்பரம் கோவிலை பற்றி வினவு தளம் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அது ஒரு விவாதத்தை கிளப்பி இருக்கிறது. கோவில் சம்பிரதாயங்களை மாற்றலாமா? மாற்றலாம் என்றால் யார் யார் மாற்றலாம்? யார் தலையிடக் கூடாது?
பழைய கோவில்கள் – சிதம்பரம், தஞ்சாவூர், ஸ்ரீரங்கம், திருப்பதி மாதிரி – எந்த ராஜாவோ கட்டி வைக்க, புகழ் பெற்று விளங்கும், பல ஊர்களிலிருந்து பக்தர்கள் வரும் கோவில்கள் எல்லாம் பொது சொத்து. இவற்றை கட்டுபடுத்த ஒரு அரசுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. சிதம்பரம் கோவிலுக்கு பராந்தக சோழன் பொன் கூரை வேய்ந்தான். யார் வீட்டு பணம்? தீட்சிதர்கள் பணமா? அதனால் அரசு அரசியல் சட்ட விதி தரும் வழிகாட்டுதல்படி கோவில் விதிகளை மாற்றலாம், தவறே இல்லை. மக்களுக்கு நல்லது என்று அதற்கு தோன்றுவதை, மதசார்பில்லாமல், அரசியல் சட்டத்துக்கு புறம்பாக போகாமல் கோவில்களில் கொண்டு வரலாம். தமிழில் பாடுவது தவறு என்று சொல்ல வேண்டுமானால் சிதம்பரம் கோவில் தீட்சிதர்களின் பிரைவேட் கிளப் ஆக இருக்க வேண்டும். ஒரு பொது அமைப்பில் இப்படி ஒரு வழிமுறையை தீட்சிதர்கள் கொண்டு வர முயற்சித்திருக்க கூடாது.
அதே நேரத்தில் எனக்கு தீட்சிதர்களின், அவர்களுக்கு ஆதரவாக பேசுபவர்களின், மன நிலை புரிகிறது. கோவில் போன்ற அமைப்புகளின் பலமே காலம் காலமாக வரும் சம்பிரதாயங்கள்தான். திருப்பதி வெங்கடாசலபதிக்கு முகம் மறையும்படிதான், மூக்கு வரை நாமம் போட வேண்டும். அவர் முகத்தை பக்தர்களுக்கு காட்டுகிறேன் என்று சின்ன நாமம் போட்டால் அவருக்கு இருக்கும் கெத்து குறைந்துதான் போகும். கேரளா கோவில்களுக்கு போனால் சட்டையை கழற்ற சொல்கிறார்கள், தவறு ஒன்றும் இல்லையே?
இந்த ஆதரவாளர்களுக்கு, இன்றைக்கு தமிழில் அர்ச்சனை, நாளைக்கு தண்ணி அடித்துவிட்டு வந்து அர்ச்சனை செய்வான், இன்னும் கொஞ்ச நாள் போனால் மாத விலக்கான பெண்கள் அர்ச்சனை செய்வார்கள் என்று பயம். என்னையே எடுத்துக் கொள்ளுங்கள், மாத விலக்கான பெண் அர்ச்சனை செய்தால் ஒரு தவறும் இல்லை என்று என் அறிவுக்கு தெரிகிறது, கடவுள் மாத விலக்கான பெண்களை ஒதுக்கினால் அவர் கடவுளே இல்லை. ஆனால் என் மனம் கூசத்தான் செய்கிறது. என் அறிவு சொல்வதை ஏற்றுக் கொள்வது என் மனதுக்கு கஷ்டம். இன்னும் மூன்று நான்கு ஜெனரேஷன் போனால் இது சாதாரண விஷயமாக தெரியலாம். தெரிய வேண்டும்.
நான் இப்படி யோசிப்பவர்களுக்கு சொல்வதெல்லாம் ஒன்றுதான். உடன்கட்டை, குழந்தை திருமணம், தலித்கள் கோவிலுக்குள் வரக்கூடாது எல்லாம் ஒரு காலத்தில் சரியாகத்தான் தெரிந்தன. அவை எல்லாம் தவறு என்று மாற்றும்போது அன்றும் மத விஷயங்களில் தலையிடுகிறார்களே என்று பலருக்கும் உறுத்தி இருக்கும். அன்றைய “முற்போக்காளர்கள்”, இது சரிதான், ஆனால் இதை அனுமதித்தால் இன்னும் என்னென்ன சீரழிவுகள் ஏற்படுமோ என்று பயந்திருப்பார்கள். என் முப்பாட்டன் காலத்தில் கிராப் வைத்தால் சீரழிவு. அதற்கு என்ன செய்வது? இப்போது நடப்பது உங்களுக்கு அறிவுபூர்வமாக சரியாக இருக்கிறதா என்று மட்டும் பாருங்கள். மனது உறுத்தினால் அதை புறந்தள்ளுங்கள். எல்லாம் சரியாகிவிடும்.
நாத்திகர்கள் ஆடு நனைகிறதே என்று ஏன் அழ வேண்டும் என்று விஜயராகவன் கேட்கிறார். இது முற்றிலும் தவறான வாதம். தவறை யார் வேண்டுமானாலும் தட்டி கேட்கலாம். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. அப்புறம் கிருத்துவ நீதிபதிகள் ஹிந்து குடும்ப சட்ட கேஸ்களை விசாரிக்கலாமா? ஹிந்து மெஜாரிட்டி சுப்ரீம் கோர்ட் ஷா பானோ மாதிரி முஸ்லிம் சிவில் கேஸ்களை விசாரிக்கலாமா? ரஞ்சியில் கூட விளையாடாத ஹர்ஷா போக்ளே கிரிக்கெட் பற்றி எப்படி பேசலாம்? மு.மு. இஸ்மாயில் எப்படி கம்ப ராமாயணத்தில் திளைக்கலாம்? இலங்கைக்கு டூர் கூட போகாத நான் எப்படி பிரபாகரனை பற்றி எழதலாம்? பெரியார் மிக சிறந்த தர்மகர்த்தாவாக விளங்கினார் என்பதை நினைவூட்டுகிறேன்.
இதில் பக்தர்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் வேறு வேறு வித ஓட்டுரிமை வேறு! இந்த ஜனநாயக முறையை வைத்துதான் நந்தனார் உள்ளே வரக்கூடாது என்று முடிவெடுத்தார்களா? எந்த stakeholder-ஐ கேட்டு இன்றைய “விதிகள்” அமைக்கப்பட்டுள்ளன? அப்புறம் தமிழில்தான் அர்ச்சனை என்பதில்லை, தமிழிலும் விருப்பப்பட்டால் அர்ச்சனை என்பதுதான் கேட்கப்படுகிறது. ஆறுமுகசாமி தேவாரம் பாட உரிமை வேண்டும் என்று கேட்கிறார்; எல்லாரும் தேவாரம் மட்டுமே பாட வேண்டும் என்று கேட்கவில்லை. என்னை பொறுத்தவரையில் உருதுவில் கூட அர்ச்சனை நடத்தலாம். எல்லாம் வல்ல தில்லை நடராஜனுக்கு மொழி தேவை இல்லை, பக்தர்களுக்குத்தான் மொழி தேவை. துலுக்க நாச்சியாரின் அன்பை பெருமாள் நிராகரித்துவிடவில்லையே?
பெரியார் போராடினார் என்பது வாஸ்தவம்தான். ராஜாஜி சட்டம் இயற்றினார் என்பதும் உண்மைதான். ஆனால் இன்னும் கண்டதேவி, கிண்டதேவி மாதிரி நிறைய நடக்கின்றன. இந்த stakeholders-ஐ கேட்டு எதுவும் நடப்பதாக தெரியவில்லை.
அதே நேரத்தில் வேலூரில் ஒரு தங்கக் கோவில் கட்டி இருப்பதாக கேள்விப்பட்டேன். அது ஒரு private enterprise போல தெரிகிறது. அது உண்மையிலேயே private enterprise ஆக இருந்தால், அந்த கோவிலுக்கு அரசு எந்த சலுகையும் காட்டாத பட்சத்தில், அங்கே போய் இப்படி செய்ய வேண்டும், அப்படி செய்யக் கூடாது என்று யாரும் தலையிட முடியாது. இந்த சலுகை என்பது கொஞ்சம் சிக்கலான விஷயம். கோவிலால் வேலூர் மாநகராட்சிக்கு நல்ல வருமானம் வருகிறது, அதனால் சலுகை தருவோம் என்று மாநகராட்சியோ, தமிழக அரசோ முன் வரலாம். அதில் எந்த தவறும் இல்லை. ஒரு லாபம் தரும், வரிப்பணம் தரும் தொழிலுக்கு சலுகை காட்டுவது போலத்தான் இதுவும். ஆனால் அது strictly business ஆக இருக்க வேண்டும்; மதச்சார்பு எங்கே ஆரம்பிக்கிறது, தொழில் எங்கே முடிகிறது என்று திட்டவட்டமாக வரையறுப்பது கொஞ்சம் கஷ்டம்.
நான் சொன்ன அத்தனையும் சர்ச்களுக்கும் மசூதிகளுக்கும் குருத்வாராக்களுக்கும் பொருந்தும். வேளாங்கண்ணி கோவில், சாந்தோம் சர்ச், டெல்லி ஜும்மா மசூதி, அமிர்தசரஸ் தங்கக் கோவில் எல்லாம் பொதுச்சொத்துதான். அரசு பிற மதங்களை கண்டு பம்முகிறது என்பதால் அரசுக்கு உரிமை இல்லை என்பதில்லை.
உரிமை மட்டுமில்லை, கடமையும் இருக்கிறது. கும்பகோணம் குளம் மகாமகத்துக்கு மகாமகமாவது அரசு செலவில் சுத்தம் செய்யப்பட வேண்டும். வந்து போகும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். பஸ் வசதி, குடிக்க தண்ணீர், ஓரளவாவது சுத்தமான கோவில் மற்றும் கோவிலை சுற்றிய இடங்கள், பாதுகாப்பு முதலிய அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். இதை அரசாங்கம் மறந்துவிடுவதுதான் பெரிய சோகம்.
பின் குறிப்பு: வைஷ்ணவ குரு பரம்பரை கதைகளும், சமீபத்தில் வந்த தசாவதாரம் படமும் ஒரு சோழ அரசன் கோவிந்தராஜ பெருமாள் சிலையை தூக்கி கடலில் எறிந்ததாக சொல்கின்றன. அதுவும் அரசு தலையீடுதான் என்பதை தீட்சிதர்கள் மறந்துவிடக் கூடாது.
தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு
தொடர்புடைய பக்கங்கள்:
இந்த கட்டுரையின் இரண்டாம் பகுதி
சுப்ரமணிய சாமியுடன் சிதம்பரம் கோவில் பற்றி விவாதம்
ஜூலை 23, 2009 at 8:07 மு.பகல்
//நான் இப்படி யோசிப்பவர்களுக்கு சொல்வதெல்லாம் ஒன்றுதான். உடன்கட்டை, குழந்தை திருமணம், தலித்கள் கோவிலுக்குள் வரக்கூடாது எல்லாம் ஒரு காலத்தில் சரியாகத்தான் தெரிந்தன.//
இதெல்லாம் எந்த காலத்திலும் சரியானது கிடையாது.
ஜூலை 23, 2009 at 12:30 பிற்பகல்
ஆனால் இது எல்லாமே நடந்திருக்கிறது, நூற்றாண்டுகளாக. எங்கள் ஊர் கோவிலில் மதில் சுவற்றில் சிறு சன்னல்கள் இன்னும் இருக்கின்றன. ஒரு காலத்தில் தாழ்ந்த சாதிக் காரர்கள் வெளியில் இருந்து மட்டுமே கடவுளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டதற்கு சான்றாக.
ஜூலை 26, 2009 at 2:13 மு.பகல்
வித்தகன்,
//ஒரு காலத்தில் தாழ்ந்த சாதிக் காரர்கள் வெளியில் …//
மனதில் பட்டதை சொல்கிறேன். மனிதப்பிறவியில் ஏது உயர்ந்த சாதி அல்லது தாழ்ந்த சாதி? சமூகத்தில் வசதி வாய்ப்புகளோடு இருந்தவர்கள், உயர்ந்த சாதி என்று தங்களை தாங்களே அடையாளப்படுத்தியவர்கள் மற்றவர்களை “தாழ்ந்த சாதி” என்று முத்திரை குத்தினார்கள் அவ்வளவுதான். அது “தாழ்த்தப்பட்ட மக்கள் அல்லது சமூகம்” என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது “தாழ்ந்த” என்பதை விட “தாழ்த்தப்பட்ட” என்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். யாருமே தாழ்ந்தவர்களாக பிறப்பதில்லை. இதை கருத்தில் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
ஜூலை 26, 2009 at 3:06 மு.பகல்
உண்மைதான். “தாழ்த்தப்பட்ட” என்ற பதம்தான் சரியாக இருக்கும். அதற்கு எதிர்ப்பதமாக “ஆதிக்க” என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்.
ஜூலை 23, 2009 at 1:11 பிற்பகல்
ஹலோ அர்.வி,
எனது கமெண்ட் ரொம்ப அரொகண்டா இருந்தா மன்னிக்கணும்
நீங்கள் சிதம்பரம் கோவிலுக்குப் போயிருக்கீங்களா? அங்கே தேவாரமோ திருவாசகமோ பாடியிருக்கீங்களா? யாராவது உங்களை தடுத்திருக்கிறார்களா??
நான் என் நண்பர்களுடன் 4 வருடங்களுக்கு முன் சிதம்பரம் கோயிலுக்குப் போயிருக்கேன். என்னுடைய ஒரு நண்பனுக்கு சில திருவாசகப் பதிகங்கள் தெரியும். அவன் உரக்கப் பாடினான். யாரும் ஒன்றும் சொல்லவில்லை.
சிதம்பரம் கோவிலும், தமிழகத்தின் கோவிலகளைப் போல யாரும் எந்த சுலோகமும் சொல்லி வழிபடலாம். ஆனால் அங்கே உச்சிகால பூஜை நடக்கும் போது அங்குள்ள அர்ச்சகர்கள் வேதம்சொல்லி பூஜை செய்கிறார்கள். இது அங்கு காலம் காலமாக நடந்து வரும் சடங்கு.
அப்போ போய் அவர்கள் ஓதும் வேதத்திற்கு தடையாக நானும் தேவாரம் திருவாசகம் பாடுவேன் என்றால் என்ன அர்த்தம். அவர்கள் செய்யும் பூஜை முடிந்து தீபாராதனை காட்டியபிறகு தாராளமாகப் பாடலாமே.
நடராஜர் சமிஸ்கிருத வேதம் ஓதினால் தான் காதில் போட்டுக் கொள்வேன் என்று சொல்கிறாரா என்று கேட்கலாம். வேதம் சொல்லி பூஜை செய்வது, அந்தக் கோவிலிலுள்ள ஐதீகம். அது சரியா தவறா என்று விவாதிக்க எனக்கு அறிவு போதாது. ஆனால் சிதம்பரம் கோவிலில் தேவாரம் திருவாசகம் பாடவே முடியாது என்னும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது.
ஜூலை 25, 2009 at 6:28 பிற்பகல்
விஜய், டீவியில் உங்கள் அர்ச்சகர்கள் எதையெல்லாம் தடுத்தனர் எப்படியெல்லாம் தடுத்தனர் என்று டீடெய்லாக படம் காமித்துவிட்டபடியால் தயவு செய்து விவரத்துடன் பேசவும்.
ஜூலை 23, 2009 at 2:07 பிற்பகல்
ஆர்.வி -
உங்களுடைய சமீபத்திய பதிவுகள் ஒன்றே ஒன்றைத் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது – நீங்கள் பதிவுகளில் படிப்பதை அப்படியே ஏற்றுக்கொள்கிறீர்கள்.
பலரும் பதிவுகளில் அரசியல் செய்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். பெரியாரிடம் காணாத இரட்டை நிலையா வினவிடம் கண்டீர்கள் ?
மேலும் இந்த பதிவில் என்ன நிருவ முயல்கிறீர்கள் என்பதும் சரியாக புரியவில்லை!
ஜூலை 23, 2009 at 3:19 பிற்பகல்
சிதம்பரம் கோவிலை பொருத்தவரை 2 இஷ்யூக்களை பலரும் குழப்பிக் கொண்டுள்ளனர். ஒன்று தீக்ஷிதர்கள்தான் அங்கு பூசை மற்றும் நிர்வாகத்தில் பங்கு வகிக்கணுமா? இரண்டாவது சில பூசைகள் சமஸ்கிருதத்தில்தான் நடக்க வேண்டுமா. ? தீவிர கம்யூனிஸ்டுகள், ஈவேராயிஸ்டுகள் இர்ண்டாவது விஷயத்தை முக்கியமாக முன்னிறுத்துகிறார்கள்.
சாமிக்கு ஒரு பூஜை எந்த பாஷையில் செய்தால் கேட்கும் என்பது theological problem. அது சமூக பிரச்சினை இல்லை, அரசியல் பிரச்சினை இல்லை, மனித உரிமை பிரச்சினை இல்லை. பசி, உணவு , உடுப்பு, சுகாதார அல்லது பொது ஜன ஆரோக்ய பிரச்சினை இல்லை. அதனால் அந்த கோவில் தெய்வத்தை நம்புபவர்கள் மட்டுமே தீர்மானம் செய்தால் போதும். அதனால்தான் stakeholder கருத்தை முன்வைத்தேன். அதனோட விவரங்கள் எப்படி இருக்க வேண்டும், voting system எப்படி இருக்க வேண்டும் கருத்து வேறுபாடு இருக்கலாம்.
தீக்ஷிதர்கள்தான் அக்கோவிலின் பூசை, நிர்வாகத்தில் இருக்க வேண்டுமா என்பதை அரசியல் சட்டம் மூலமாக தீர்ம்மனிக்க வேண்டியது. அதைத்தான் தமிழ்நாடு அரசும், தீக்ஷிதர்களும் பல வருடங்களாக நீதிமன்றத்தில் வாதிக்கிறனர். கடைசீ பொசிஷன் என்ன என்று எனக்கு தெரியாது.
தீக்ஷிதர்கள் , சரி எல்லா நேரத்திலும் தமிலேயே பூசை செய்கிரோம் என சொல்லியிருந்தால் , அரசியல் வாதிகளின் ஏகோபித்த எதிர்ப்பு இருக்காது, `அரசியல் வாதிகளே உங்கள் ஆசை , எங்கள் கட்டளை` என சொல்லியிருந்தால், அவர்கள் ‘மரபு நிர்வாக உரிமையை` பற்றி யாரும் பேசி இருக்க மாட்டர்கள். அப்படி இருந்தும், ஒரு கொள்கைக்காக , ஒரு நம்பிக்கைக்காக எல்லா அரசியல் வாதிகளின் எதிர்ப்பையும் சம்பாதித்து, தங்கள் பிழைப்புக்கே கேடு வந்தால் பரவாயில்லை என அஞ்சாமல் இருப்பதற்க்காக அவர்கள் நெஞ்சு உறுதியை பாராட்டுக்கிறேன்..
ஆர்வி “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்கிறார்; எனக்கு பழைய கால பழமொழிகளை கோட் செய்து, ஒரு இஷ்யூவை அதன் நன்மை, தீமையிலேயெ ஆய்வதை தவிர்ப்பது பிடிக்காது. அப்படி இருந்தும், வாதத்திற்க்காக அதை ஏற்றுக்கொண்டால் , மெய்ப்பொருள் என்பது யார் செய்வதும், எது நடப்பதும் சரி என மற்றவர்கள் என செய்வதை ஜஸ்டிபை செய்வது அல்ல. theological இஷ்யூ என்றால், அங்கு `நாத்திகர்` என சொல்லப் படுபவர்க்கு நிச்சயம் வேலை இல்லை. இதற்க்கும் ஆர்வி கொடுத்திருக்கும் உதாரணங்களுக்கும் தொடர்பில்லை. ஒரு நீதிபதி, அவருக்கும் முன்னால் வரும் எல்லா கேஸ்களையும் தீர்மானிக்க உரிமை உண்டு. ஆனால் சில கேஸ்களை , டிபன்ஸ் வக்கீல், ultra vires of the constitution என சொல்லி , கேஸை தள்ளுபடி செய்ய சொல்லலாம். அதை நீதிபதிகள் ஏற்று, சரி இந்த கேஸ் இங்க வரக்கூடாது என தீர்மானிக்கலாம். சட்டமே, எது சட்டப்பிரச்சினை , எது அல்ல என்று கூறுகிரது
ஒவ்வொரு பிரச்சினையும், அதனால் பாதிக்கப்பட்டவர் தான் தீவிரமாக எடுப்பது சரி. எந்த பிரச்சினையும் பொதுவாக 1) பிரச்சினை என்ன 2) யார் பாதிக்கப் படுகிறார்கள் 3) எப்படி சுமுகமாக அதை தீர்ப்பது என்ற வழியில் போகலாம். அதற்கு ஜனநாயக, சட்ட வழியில் செய்தால் சுமுகமாக தீர்வு காணலாம்.
விஜயராகவன்
ஜூலை 23, 2009 at 9:57 பிற்பகல்
RV
I agree with you most of the points you make. There should be no discrimination based on the Language,Caste,Gender or any other criteria in a public funded institution. Everybody has the same rights and responsibilities. But the point is the same yardstick is not being applied to all religions in India. The Churches and mosques are self governed and they have their own rules and regulations even though they do receive state grants. So some people will get mad when they are being singled out and discriminated unfairly. I believe the solution would be to relinquish the control of all the religious institution to the local people. Then it would be for that community to decide what kind of rules and regulations needs to be framed to manage that institution. It will be up to them to generate revenue and also run the temple. If they want to discriminate based on a language or anything else it is up to them to decide. If somebody doesn’t like their policies then they can stop going to that temple. The key here is to find the right mix of stakeholders in all different groups users and the guardians of the temple. This way the solution arrived will be based on the wishes of the majority of the temple users. The Government of TN or Vinavu or higher judiciary can’t impose their will against the majority. Even though you and I know those policies are discriminatory. And if most users of that temple find that is discriminatory then they can economically boycott the temple that would force them to change their policies.
ஜூலை 24, 2009 at 10:26 மு.பகல்
Stakeholder கருத்து நவீன நிர்வாகத்தில் எப்படி பயன்படுகிரது என்பதைப் பற்றி
http://en.wikipedia.org/wiki/Stakeholder_analysis
http://en.wikipedia.org/wiki/Stakeholder_engagement
http://en.wikipedia.org/wiki/Stakeholder_(corporate)
ஜூலை 25, 2009 at 6:31 பிற்பகல்
ஐயா விக்கிபீடியாவையெல்லாம் சுட்டியாக காட்ட வேண்டாம் அது நம்மைபோன்ற தனிநபர்கள் பங்களிப்புதானே, அது தவறாகவும் இருக்கலாமல்லவா
ஜூலை 25, 2009 at 6:52 பிற்பகல்
ஆங்கில விகிபீடியா நிச்சய்மாக ஒரு அறிவு பெட்டகம்தான். எல்லாமே அப்படி பார்த்தால் தனி மனித பங்களிப்புதான், எங்குமே தவறு வாய்ப்புகள் உள்ளன. மார்க்ஸ் கருத்துகள் கூட மார்க்ஸ் என்பவரின் தனி பங்களிப்புதான். ஒரு ஆய்வு படி ஆங்கில விகிபீடியா மற்ற எந்த என்சைக்ளோபீடியாவிற்கும் குறைந்ததல்ல. உங்களுக்கு எந்த சப்ஜெக்டுக்கும் முதல் துறைமுகம் (Port of Call) ஆங்கில விகியாக வைத்துக் கொள்ளலாம். இதற்கு நேர் எதிர் தமிழ் விகிபீடியா – ஒரு தனித்தமிழ் தலிபான் அதைக் கைப்பற்றி முளீயாகி விட்டார்கள். தமிழ் விகிபீடியா மக்களுக்கு அறிவு கொடுக்கும் தளம் அல்ல, சிலரின் தனித்தமிழ் தினவை சொறிந்து கொள்ளும் இடம்.
ஜூலை 25, 2009 at 6:56 பிற்பகல்
மார்க்ஸ் இயற்றினாறென்றால் அதற்கு அவரை பொருப்பாக்கலாம், ஆனால் இதில் பலரது கைகள் இருக்கிறதே, யாரும் திருத்தி எழுதலாமே, எழுதுபவரின் பின்ன்னி, பங்களிப்பெல்லாம் தெரிந்து கொள்ள இயலாதே…
ஜூலை 25, 2009 at 7:17 பிற்பகல்
எழுதுபவரின் பின்னணி தேவையே இல்லை. பொதுவாக விகிபீடியா தகவல்களுக்கு புறவய ஆதாரம் கொடுக்கணம். தனி மனிதர் அபிப்பிராயங்களை கொடுக்கக் கூடாது. நியூட்ரல் பார்வை ஆக இருக்க வேண்டும்.
ஜூலை 25, 2009 at 6:38 பிற்பகல்
இங்கே விவாதிக்கும் பலருக்கும் தில்லை கோவில் பிரச்சனை பற்றி ஒன்றும் தெரியவில்லை, தெரியாமலேயே மனம் போனபடி வாதாடுகிறார்கள்
தில்லை கோவில் பிரச்சனையை துவக்கம் முதலே கவனிப்பவனும் அந்த போராட்டத்தில் எனது பங்கையும் செலுத்தியுள்ளவன் என்ற முறையில் கீழ் கண்ட சுட்டிகளை படித்துவிட்டு விவாதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
http://www.vinavu.com/2009/02/02/thillai1/
http://www.vinavu.com/2009/02/06/thillai2/
http://www.vinavu.com/2009/06/24/thillai3/
ஜூலை 25, 2009 at 6:54 பிற்பகல்
//இன்றைக்கு தமிழில் அர்ச்சனை, நாளைக்கு தண்ணி அடித்துவிட்டு வந்து அர்ச்சனை செய்வான், இன்னும் கொஞ்ச நாள் போனால் மாத விலக்கான பெண்கள் அர்ச்சனை செய்வார்கள் என்று பயம்//
ஆர்.வி, தீட்சிதர்கள் கோவிலுக்குள்ளேயே மாமிசம், குடி, விபச்சாரம், திருட்டு, ரவுடித்தனம் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்தது ஆதாரத்தோடு நிரூபிக்க பட்டுள்ளது. அப்போதெல்லாம் இந்த ஆத்திக மனங்கள் புன்படவில்லையா?
உண்மையை சொன்னால் கடவுள் மறுப்பாளர்களான நாங்கள்தான் ஆத்திகர்களுக்காகவும் சேர்த்து போராடுகிறோம், இதை உணர்ந்துதான் இத்தனை ஆண்டுகளாக உள்ளூர் மக்கள் எங்கள் போராட்டத்தை ஆதரித்து வருகின்றனர். அவர்களின் நன்கொடையும் ஊக்கமும் இல்லையெனில் இதில் இந்த அளவு முன்னேற்றம் இருந்திருக்காது.
தில்லை மட்டுமல்ல் நாங்கள் இதற்கு முன்னர் திருவரங்கம் கருவரையிலும் நுழைந்துள்ளோம், அங்கேயும் பார்ப்பனர்களால் மிருகத்தனமாக தாக்கப்பட்டுள்ளோம். இந்த நேரம் தமிழகத்தில் எங்காவது ஒரு கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்ளே நுழைவதற்காக எங்கள் தோழர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருப்பார்கள்
நாத்திகனுக்கு உரிமையில்லை என்று பேசும் நா ஏன் சிவப்பழம் ஆறுமுகசாமிக்காக போராடவில்லை? ஏன் தீட்சிதர்களின் அநியாயங்களை தட்டிக்கேட்கவில்லை.
நீங்கள் குறிப்பிட்டுள்ள சமூக அவலங்களான உடன்கட்டை, குழந்தை திருமணம், தலித்கள் கோவிலுக்குள் வரக்கூடாது, தேவதாசி முறை இவைகளெல்லாம முற்போக்காளர்களின் போராட்டங்கள் மாற்றியவை, இன்றைக்கு தீட்சிதர்களுக்காக உருகும் ஆத்திக மனங்கள்தான் அன்றும் அந்த அநியாயங்களை காத்துவந்த்து.
இது ஏதோ இந்து மத துவேஷம் என கருதவேண்டாம் பிரஞ்சு புரட்சியில் முதலில் உருண்டது பாதிரியார் தலைகள் என்பது வரலாறு.
ஜூலை 25, 2009 at 7:54 பிற்பகல்
ஒருவர் மாமிசம் சாப்பிட்டார், குடித்தார், விபச்சாரியிடம் சென்றார்- இதுதான் கம்யூனிஸ்ட்-ஈவேராயிஸ்டின் பிரச்சினையாக இருந்தால் , இவர்களுக்கும் பாகிஸ்தான தலிபானுக்கும் வித்தியாசம் இல்லை. மேலும் மார்க்சிஸ்டுகள் பொதுவாக personal morality கவலையில்லை என நினைப்பவர்கள். Theological issue, Ritual issue, personal morality issue இவைதான் ஒரு குழுவின் ஆக்ரோஷத்தை தூண்டிவிடுபவை என்றால், அதற்கும் கம்யூனிசத்திற்க்கும், நாத்திகத்திற்கும் தொடர்பே இல்லை. இவை psuedo-secular, psuedo-communist குழுக்கள் ஆகும். இப்படிப்பட்ட போலித்தனத்தால்தான் இந்தியாவில் உண்மையான மாற்றங்கள் ஏற்படவில்லை.
ஜூலை 26, 2009 at 5:50 மு.பகல்
நான் மேலே சொன்னவையெல்லாம் சிதம்பரம் கோவிலுக்குள்ளேயே நடந்தது.
ஜூலை 26, 2009 at 5:57 மு.பகல்
விஜய ராகவன், நான் மேலே அளித்திருக்கும் சுட்டிகளை படித்துவிட்டு எதை நோக்கி போராட்டம் செல்கிறது என்பதை விளங்கி கொள்ளுங்கள். நாங்கள் போலிகள் அல்ல, இறைவன், சாதி, மதம் முதலியவற்றின் பெயரால் நடக்கும் போலித்தனங்களை ஆதரிக்கும் , எதிர்பவர்களை விமர்சனம் செய்யும் ஆத்திக மனங்கள்தான் போலியானவை!
ஜூலை 26, 2009 at 6:20 மு.பகல்
”சாமிக்கு ஒரு பூஜை எந்த பாஷையில் செய்தால் கேட்கும் என்பது theological problem. அது சமூக பிரச்சினை இல்லை, அரசியல் பிரச்சினை இல்லை, மனித உரிமை பிரச்சினை இல்லை. பசி, உணவு , உடுப்பு, சுகாதார அல்லது பொது ஜன ஆரோக்ய பிரச்சினை இல்லை. அதனால் அந்த கோவில் தெய்வத்தை நம்புபவர்கள் மட்டுமே தீர்மானம் செய்தால் போதும்.”
விஜயராகவன்!
This is a convenient argument. The question – where does a spiritual matter end and where it begins to corrupts itself into a social issue – is an ancient one. Societies need religion. The religious people exploit this desperate need. They exploit it more using your argument as a respectable cover..
A religious matter is not always a matter of spirit: it is not private at all. A religion is followed not by individuals only, but by social groups. If it is followed by individuals, no one has quarrel with the man whatever he does or does not in his personal life. Hindu religion, or any religion for that matter, is both private and a public one.
You can argue here, the public comprise only Hindus, who are the only stakeholders in it. Here, too, it is a slippery argument in the sense the Hindus live in society and their acts of worship affect the society as a whole. If in a temple, in the name of worship, women are asked to disrobe, it is the concern of all in the society.
In England, the controversy of which language, arose, during the 16th century. The Bible was only in Latin and the liturgy was fully in that language. Common masses could not participate in the worship heartily. The clergy interpreted the Bible as they liked it; the masses were taken for a ride. The political and the intellectual classes, the social reformers joined the movement for bringing the religion closer to people by changing everything in English.
The popish group argued like you. “You have no place in it; We will decide. Get lost!” The King interfered in favor of the people; and the pope excommunicated him from the religion. Finally, the State and the society won the day. It led to what is now called in history, the Reformation in England.
In Chidambaram, the temple does not belong to the priests. It is due to their cunningness they had appropriated the temple – a real estate – to them and their future generations. They liked nobody to question them. It is basically for their livelihood that they are waging the war now, against others. Everything else is a show! Your argument that only the believing public, not atheists, should question, was very convenient to them: because, common people never come forward to question. They may murmur; but never galvanise themselves into a movement or force. They will, if a leadership is offered. As Arai ticket says, the movement was born due to the athiests. You did not do it. All that you are doing is to pull them down for their work.
It is a spiritual issue, no doubt, but now has affected the whole society; and I think, even Tamil Muslim and Tamil christian should also interfere when they see innocent Hindus are cheated by the Hindu priests.
ஜூலை 26, 2009 at 10:18 மு.பகல்
கரிகுலம்
நீங்கள் எங்கிருந்து ஆங்கில சரித்திரத்தை கற்றுக் கொண்டீர்கள் என தெரியவில்லை – அது நிச்சயமாக எல்லோருக்கும் தெரிந்த வரலாரு இல்லை.
இங்கிலாந்து ரிபார்மேஷன் ராஜா (8 வது ஹென்ரி) மக்களுக்கு ஆகவோ , மொழி பற்றாலையோ செய்தது அல்ல. அது அவன் தன் சொந்த காம சுயநலத்திற்க்கு செய்தது. அவனுடைய பெண்டாட்டி அவனுக்கு ஆண் மகனை கொடுக்க வில்லை; பெண் பிள்ளையை பெற்றார். அதனால் ஹென்றி அவளை மணரத்து செய்து விட்டு , இன்னொரு பெண்ணை கல்யானம் செய்ய விரும்பினான். அதற்கு போப்பிடம் அனுமதி கோரினான். போப்பிடமிருந்து துரிதமாக அனுமதி வரவில்லை. அதனால் கோபம் அடைந்த ஹென்றி “யோவ் போப், உனக்கு என்ன தைரியம் , என் விருப்பத்தை நிறைவேற்றாததற்கு. இன்றிலிருந்து நீ என மதத் தலைவன் அல்ல. நானே என் தலைவன்; இங்கிலாந்து கிருஸ்தவர்கள் எல்லோருக்கும் நான் தான் தலைவன்” என முழக்கம் இட்டான். இதற்கு ஒப்புக்கொள்ளாதவர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப் பட்டனர். தன் ஆயுத வலுவினால் தன் தலைமையிலான ஆங்க்ளிகன் சர்சை இங்கிலாந்து மீது திணித்தான்.
இங்கிலாந்து Reformation இப்படித்தான் வந்தது. ராஜாவின் மதத் தலைமையை ஏற்றுக் கொள்ளாதவர்கள், போப் ஆதரவாளர்கள் லட்சக்கணக்கில் கொல்லப் பட்டனர்.
http://en.wikipedia.org/wiki/English_Reformation
தனி மனித அரசியல் அடிப்படையில் ரெபார்மேஷன் வந்தாலும், தேசீய வாதம், மொழிப்பற்று, பூர்ஷ்வா ஆதிக்கம் இவற்றால், அது சமூகத்தில் அஸ்திவாரம் போட்டது.
உங்கள் வாதம் “Hindus live in society and their acts of worship affect the society as a whole” என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. நீங்கள் பரீட்சையில் பாஸ் ஆக வேண்டும் என பூஜை செய்கிறீகள். நீங்கள் பாஸ் ஆகறீரகளோ இல்லையோ, உங்கள் பூஜை வேறு யாருக்கும் நல்லதோ, கெட்டாதோ செய்யப் போவது இல்லை. அதனால் கோவில் பூசைகள் சமூகத்தை பாதிக்கிரன என்பது ஆதரமற்றது.
”If in a temple, in the name of worship, women are asked to disrobe, it is the concern of all in the society.” மேலும் இதைப் போல extreme கற்பனா வாதங்களை கொண்டுவரவேண்டாம். பெண்கள் உடைகளை கடைச் சொன்னால், அது மனித உரிமைப் பிரச்சினை, theological issue இல்லை. மனித சுய மரியாதைகளை தாழ்த்தும் எந்த செயலையும், மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் மற்ற கோவில் பக்தர்களே அதை மனித உரிமை பிரச்சினையாக எடுத்துக் கொள்வர்.
By the way, இப்பொழுது எல்லா கோவில்களிலும் பக்தர்கள் செருப்பை கழற்றி விட வேண்டும், அது மனித உரிமை பிரச்சினையா. கேரளாவில், எல்லா ஆண்களும் மேல் துணீயை எடுத்து விட வேண்டும், அது மனித உரிமை பிரச்சினையா?
உங்கள் பார்வை , அதாவது அதீயிஸ்டுகளால்தான் , சமூக மாற்றங்கள் ஏற்படுகிறன என்பது உளரல், அது ஒரு elitist attitude. It is a hallucination by EVRists in Tamilnadu.
ஜூலை 26, 2009 at 11:02 மு.பகல்
“சாமிக்கு பூஜை எந்த பாஷையில் செய்தால் கேட்கும் என்பது theological problem. அது சமூக பிரச்சினை இல்லை”
தவறு. சமூக பிரச்சினைதான்.
ஒரு சிலருக்கு மட்டுமே புரியும், ஒரு சிலர் மட்டுமே கற்றுக் கொள்ளும் தகுதி உடையவர்களாய் இருக்கும் மொழியில் மட்டுமே வழிபாடு செய்யப் பட்டால் அந்த மொழி புரியாதவர்களுக்கும், அதைக் கற்கும் தகுதியில்லாதவர்களுக்கும் அந்த வழிபாட்டு முறை கைவசப் படாது போய்விடுகிறது. யார் வேண்டுமானாலும் சமஸ்கிருதம் கற்றுக் கொள்ளலாம் என்று சொல்லாதீர்கள். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அப்படி இல்லை. வடமொழி புரியாத, அதைக் கற்கும் தகுதியில்லாத “தாழ்ந்த” சாதியினர், தான் வணங்கும் சாமியை எப்படிக் கும்பிடுவது என்று முடிவெடுக்கக் கூடாதா? பக்தர்களுக்காக வழிபாடா, இல்லை வழிபாட்டுக்காக பக்தர்களா?
//கேரளாவில், எல்லா ஆண்களும் மேல் துணீயை எடுத்து விட வேண்டும், அது மனித உரிமை பிரச்சினையா?//
இதன் உண்மைக் காரணம் உள்ளே நுழைபவன் தோளில் பூணுல் இருக்கிறதா இல்லையா என்று பார்ப்பதுதான்.
சரி விஜயராகவன். ஒரு கேள்வி
ஒரு தலித் தமிழில் மந்திரம் ஓதி, தீபாராதனை காட்டி, துளசி தண்ணீர் தந்து, உங்கள் தலையில் சடாரி வைத்து, உங்கள் மனைவிக்கு குங்குமம் தந்தால் உங்கள் பூசனையின் வீரியம் போய் விடுமா?
ஜூலை 26, 2009 at 11:48 மு.பகல்
“பக்தர்களுக்காக வழிபாடா, இல்லை வழிபாட்டுக்காக பக்தர்களா?”
நிச்சயமாக பக்தர்களுக்கு தான், நாத்திகர்களுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் இல்லை. ஒரு கோவிலின் பக்தர்கள்தான் அதன் வழிபாட்டை தீர்மானிக்கணுமே தவிற, அரசாங்கமும், அரசியல்வாதிகளும், நிர்வாகத்தினரும் அல்ல.
நீங்கள் கேரள கோவில்களில் மேல் சட்டையை எடுக்க வேண்டும் என்பது பூணால் இருக்கா இல்லையா என பார்ப்பதற்கு என்பது disingenuous. அப்படிபார்த்தால், தமிழக கோவில்களில் செருப்பை கழட்ட சொல்கிறார்களே, அது பாதத்திலிருந்து ஜாதி பாகுபாடை சொல்பதற்கா? தமிழக கோவில் மட்டும் அல்ல, அண்ணாதுரை `சமாதி`யில் எல்லோரும் செருப்பை கழட்ட வேண்டும், அண்ணதுரை சமாதியில் செய்வது பகுத்தறிவா???
நான் பூசை பக்கம் போயே 35 வருடங்கள் ஆகிவிட்டன. அதனால் உங்கள் கேள்வி moot. என்ன செய்கிறீர்களோ, நீங்கள் செய்வது உங்களுக்கு `வீரியம்` தருகிரது என நம்பினால், மற்றவர்களை பாதிக்காத வகையில் அதை செய்யுங்கள்.
ஜூலை 26, 2009 at 12:30 பிற்பகல்
//ஒரு கோவிலின் பக்தர்கள்தான் அதன் வழிபாட்டை தீர்மானிக்கணுமே தவிற, அரசாங்கமும், அரசியல்வாதிகளும், நிர்வாகத்தினரும் அல்ல.//
ஆனால் பக்தர்களே யாரென்று நிர்வாகம் தீர்மானித்து வந்த காலத்தின் எச்சம்தான் ஆதிக்க சாதியினரின் மொழி வழிபாட்டு மொழியாக இருப்பதும். எனவே பக்தர்களின் மொழி வழிபாட்டு மொழியாக மாற்றப் படுவதை உண்மையான ஆத்திகர்களும், அவர்களுக்கு elitist mindset இல்லாத வரையில், வரவேற்கத்தான் வேண்டும்.
//நான் பூசை பக்கம் போயே 35 வருடங்கள் ஆகிவிட்டன.//
இதற்காக பூசை பற்றிப் பேச உங்களுக்குத் தகுதியில்லை என்று சொல்ல மாட்டேன்.
ஒரு believer என்ற வகையில், தலித் கையால் பிரசாதம் வாங்கிக் கொள்வீர்களா? அந்தப் பிரசாதத்திற்கு பிராமணர் கொடுக்கும் பிரசாதத்திற்கு உள்ள அளவு புனிதத் தன்மை இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? இந்தக் கேள்விகளுக்குக் கொஞ்சம் பதில் சொல்லலுங்களேன்.
ஜூலை 26, 2009 at 1:16 பிற்பகல்
எப்பொழுதும் ஆதிக்கம்,ஜாதி இரண்டையும் ஏன் ஒன்றாக வைத்து பேசுகிறீர்கள், ஆதிக்கம் பணம், அரசாங்க அதிகாரம், வன்மை சக்தி முதலியவற்றிலிருந்து வருகிறது. அதனால் தான் பக்தர்கள் மொழி அளவில் தீர்மானம் அரசங்க அதிகாரம், வன்முறை இவற்றிலிருந்து விடுதலையாக வேண்டும், அதற்கான system ஒன்றினை பின்பற்ற வேண்டும் என்கிறேன். சடங்குகள் என்ன செய்யப் படுகிறன, எப்படி செய்யப் படுகிறன என்பதற்க்கு பக்தர்கள்தான் கடைசி நீதிபதி.
நான் believe செய்வதற்கு, ஜாதி, இனம், மொழி, பால், தேசீயம், இவற்றிர்க்கு வேறுபாடு காண்பிப்பதில்லை. உதாரணமாக, மருத்துவர் என்ன ஜாதி, இனம், மொழி, பால், தேசீயம், சார்ந்திருந்தாலும், அவர் கையில் கொடுக்கும் injection ஐ மருப்பதில்லை. என் ஆரோக்யத்திற்கு ரத்தம் வேண்டுமென்றால் ஜாதி, இனம், மொழி, பால், தேசீயம்,போன்ற எந்த வித்தியாசத்தையும் பார்ப்பதில்லை.
ஜூலை 26, 2009 at 1:58 பிற்பகல்
“தலித் கையால் பிரசாதம் வாங்கிக் கொள்வேன், அவர் கொடுக்கும் பிரசாதத்தின் புனிதம் பிராமணர் கையால் கொடுப்பதற்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல” என்று (முடிந்தால்) நேரடியாகச் சொல்லிவிடுங்களேன்.
மருந்து வாங்குவதற்கும், பிரசாதம் வாங்குவதற்கும் வித்தியாசம் உள்ளது. உதாரணமாக யார் கொடுத்தாலும் insulin தன் வேலையைச் செய்யும். அதேபோல ஒரு தலித் கையில் இருந்து வரும் பிரசாதமும் புனிதம் மாறாமல் இருக்கும் என்று நீங்கள் மனப் பூர்வமாக நம்புகிறீர்களா?
ஜூலை 26, 2009 at 2:18 பிற்பகல்
நிச்சியமாக. பிரசாதத்தில் ஒரு புனிதம் இருக்கின்றது என நம்புபவர்களுக்கு, ஜாதி, இன, பால், தேசிய வேறுபாடுகள் செல்லுபடி ஆகாது. பிரசாதத்தை `தலித்` (ஏன் ஹிந்தி வார்த்தை போட்டு கொடுமை படுத்துகிறீர்கள்), அல்லது பெண், அல்லது சீனர், சிவப்பிந்தியர் அல்லது ஆப்பிரிக்கர், அல்லது வேறு எந்த பூசாரி கொடுத்தாலும் புனிதமாகத்தான் இருக்கும்.
ஜூலை 26, 2009 at 2:38 பிற்பகல்
நன்றி திரு. விஜயராகவன். நீங்கள் பிராமண ஜாதி பூசை நடத்துவதை அவர்கள் பிறப்புரிமையாகக் கருதுபவர் அல்லர் என்பதை நான் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. ஒரு வேளை நீங்கள் “பிராமணர் செய்தால்தான் அது பூசை” என்று சொல்லியிருந்தால் உங்கள் வாக்குவாதங்களை அந்த நிலைப்பாட்டில் புரிந்து கொண்டிருப்பேன்.
உங்களுக்குத் தெரிந்திருக்கும். இருந்தாலும் சொல்லிவிடுகிறேன். “தலித்” என்பது மராத்தி வார்த்தை. தாழ்த்தப் பட்டவர்கள் என்று பொருள். ஹரிஜன் என்பது இந்தக் காலத்திற்கு patronizing ஆக இருப்பதால் இந்த வார்த்தை தேவலாம் என்று கருதப் படுகிறது.
என் தரப்பில் இன்னும் ஒரு கருத்து. பிரசாதத்தில் புனிதம் எதுவும் இல்லை, அது எல்லாம் பம்மாத்து என்று நினைப்பவர்களிடமும் ஜாதி, இன, பால், தேசிய வேறுபாடுகள் செல்லுபடி ஆகாது.
ஜூலை 27, 2009 at 12:10 பிற்பகல்
வித்தகன்
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் என் கணிப்பில் பெரும்பான்மை – பிராமணர்களை பூசாரியாக வைப்பதில்லை.
ஹரிஜன் (கடவுளின் ஆட்கள்) எப்படி patronizing, ஆனால் தமிழர்களுக்கு `தாழ்த்தப்பட்டவர்` என்பதன் மராதி மூலம் `தலித்` என்பது patronizing இல்லை என புரியவில்லை. தமிழர்களை மராதியில் விவரிப்பது patronizing அல்லவா.?
ஜூலை 27, 2009 at 2:19 பிற்பகல்
காந்தியடிகள் “ஹரிஜன்” என்ற பதத்தைப் பிரயோகித்த காலத்திற்கு அது பொருத்தமானதே. ஆனால் இப்போது “கடவுளின் குழந்தைகள்” என்ற பதம் ஏதோ “பாவம் அவர்கள், பார்த்து நடந்து கொள்வோம்” என்ற தொனியில் “மேல் சாதி” மக்கள் இன்னமும் கூட உச்சுக் கொட்டிக் கொண்டு சொல்வது போல இருக்கிறது. அது மட்டுமல்லாமல் கடவுளால் மனிதர்கள் உருவாக்கப் பட்டவர்கள் என்ற கருத்தை அது மீண்டும் அடிக்கோடு இடுகிறது. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை தனியாக சர்ச்சை செய்வதற்கு பதில், கடவுள் இருக்கிறார் என்பதை taken for granted ஆக அப்பதம் எடுத்துக் கொள்கிறது. மேலும் இந்து மதம் தவிர்த்த பிற மதங்களிலும் இந்தப் பழக்கம் இருக்கும் போது “ஹரி” என்ற இந்துக் கடவுளின் குறியீடு குழப்பத்தையே தரும்.
ஆன்மீகத்தை அடிப்படையாகத் தன் போராட்டத்திற்கு காந்தி வைத்துக் கொண்டதால் அவருக்கு அது சரி. ஆனால் மக்களில் ஒரு சாரார் இன்னோரு சாராரை அடக்கி வைத்ததால் மட்டுமே உருவான இனத்தைப் பூசி மெழுகாமல் “தாழ்த்தப்பட்டவர்கள்” என்று நேரடியாக சொல்வதே சரி.
இந்திய தேசம் முழுவதும் ஒரே தேசிய அடையாளமாக, மொழி, மதம், மாநிலமெல்லாம் தாண்டி, அறியப்படும் சொல்லாக “தலித்” ஆகி விட்டபடியால் நானும் அப்பதத்தையே உபயோகிக்கிறேன். பிராமணர்கள், முஸ்லீம்கள், கிறித்துவர்கள், ஷத்ரியர்கள், யாதவர்கள், எல்லோரும் நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஒரே சொல்லாம் குறிக்கப் படுகிறார்கள். இத்தனை காலம் கழித்துதான் “தலித்” என்ற ஒரே அடையாளம் இவர்களுக்குக் கிட்டியுள்ளது.
ஜூலை 27, 2009 at 4:11 பிற்பகல்
““தாழ்த்தப்பட்டவர்கள்” என்று பிறப்பு மேலேயே சொன்னால், அது பழைய வகை சாதி, இன ஆதாரமான இழி சொற்களுக்கு சமானம் ஆகாதா? அதனால் அந்த பழைய இழிவு உணர்வுகளையே தூண்டி , அதை reinforce செய்யாதா? எந்தக் காலத்தில், எந்த நிலைமையில், எப்படித்தான் தான் ‘தாழ்த்தப் பட்டவர்` என்ற முத்திரையை கிழற்றி எறிவது?
ஜூலை 27, 2009 at 5:07 பிற்பகல்
//““தாழ்த்தப்பட்டவர்கள்” என்று பிறப்பு மேலேயே சொன்னால், அது பழைய வகை சாதி, இன ஆதாரமான இழி சொற்களுக்கு சமானம் ஆகாதா?//
ஆகாது. தாழ்ந்தவர்கள் என்ற பொருளில் சொன்னால்தான் அது இழி சொல்.
“தாழ்த்தப் பட்டவர்கள்” என்றால் தாழ்வுக்கு அவர்கள் பிறப்பு காரணமில்லை, வேறு சிலறால் தாழ்வுக்கு உள்ளாக்கப் பட்டவர்கள் என்பது தெளிவாகிறது. எனவே அது சரியான பதம்தான்.
//எந்தக் காலத்தில், எந்த நிலைமையில், எப்படித்தான் தான் ‘தாழ்த்தப் பட்டவர்` என்ற முத்திரையை கிழற்றி எறிவது?//
நீங்கள் ஒரு தலித்துக்கும் பிராமணனுக்கும் வித்தியாசம் பாராட்ட மாட்டேன் என்று சொன்னது போல அனைத்து ஆதிக்க சாதியினரும் மனப்பூர்வமான சொல்ல வேண்டும். நடந்து கொள்ள வேண்டும். சமூக, அரசியல், கலாசார, மத, அதிகார ரீதியாக ஏற்ற தாழ்வுகள் களையப் பட வேண்டும். இரண்டு தலைமுறைகள் அப்படி வாழ்ந்து விட்டால் மூன்றாம் தலைமுறையிலிருந்து எவனும் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று சாதி ரீதியாகப் பேச மாட்டான். என் வாழ்நாளில் இப்படி நடக்குமா என்று தெரியவில்லை. நடக்க வேண்டும்.
ஜூலை 28, 2009 at 8:02 மு.பகல்
” சமூக, அரசியல், கலாசார, மத, அதிகார ரீதியாக ஏற்ற தாழ்வுகள் களையப் பட வேண்டும்” என நீங்கள் சொல்வது ரொம்ப நல்ல ஐடியா; அதைப்போல் எந்த நாட்டில் எல்லோரும் பொதுவாக ஒத்துக் கொள்கிறார்போல இருக்கு? அந்த நாட்டைப்போல இந்தியாவும் ஆகவேண்டும் என்கிறீர்கள். அது வரை கணிசமான மக்கள்தொகை `தாழ்த்தப்பட்டவர்` என்ற முத்திரையோட இருக்க வேண்டும், அதுதானே?
ஜூலை 28, 2009 at 8:16 மு.பகல்
உங்களுக்கு உதவுவதற்க்கு 193 ஐக்கிய நாடு அங்கத்தினர் பட்டியல் இது.
http://en.wikipedia.org/wiki/United_Nations_member_states
நீங்கள் தீர அலசி தேடி, இந்த 193 நடுகளில் , எதில் `சமூக, அரசியல், கலாசார, மத, அதிகார ரீதியாக ஏற்ற தாழ்வுகள் களையப் பட வேண்டும்` என்ற உங்கள் விருப்பம் நிறைவேரிவிட்டது என சொல்லுங்கள்.
ஜூலை 28, 2009 at 10:44 மு.பகல்
என்ன வாதம் இது விஜயராகவன்?
கொலையே நடக்காத நாடு எங்குமே இல்லை. அதற்காக இந்தியாவில் கொலை செய்தால் தப்பு என்று சொல்லக் கூடாதா?
உங்களுக்கு உதவுவதற்கு அதே 193 ஐக்கிய நாடு அங்கத்தினர் பட்டியல் திருப்பி அனுப்புகிறேன்.
http://en.wikipedia.org/wiki/United_Nations_member_states
நீங்கள் தீர அலசி தேடி, இதில் எங்கெல்லாம் கொலையும் கற்பழிப்பும் இல்லை என்று சொல்லுங்கள். அதன் பின் இந்தியாவில் கொலை செய்தால், கற்பழிப்பு செய்தால் தண்டிக்க வேண்டுமா என்று முடிவு செய்வோம்.
புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். நான் எந்த நாட்டையும் போல இந்தியா இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. நமக்குள் வேறுபாடுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்கிறேன். இதில் உங்களுக்கு என்ன மாற்றுக் கருத்து என்று சொல்லுங்களேன்.
இன்னமும் மக்கள் பிறப்பால் தாழ்த்தப் படுகிறார்கள். தேநீர்க் கடைகளில் அவர்களுக்கு தனிக் குவளை வைக்கப் படுகிறது. கோவில் தேர் இழுக்கையில் அவர்களுக்கு ஓரமான இடம்தான் கிடைக்கிறது. அல்லது அந்த உரிமை மறுக்கப் படுகிறது. ஊர்க் கேணியில் தண்ணீர் இறைக்க முடியாது. வீட்டு வாசல் தாண்டி உள்ளே வர விடாமல் வாசலோடு அனுப்பப் படுகிறார்கள். “மேல் சாதி”, “கீழ் சாதி” யை அடித்தால் சட்ட ரீதியாக தண்டனை வாங்கிக் கொடுக்கக் கூட ஏராளமான தடைகள் உண்டு. போலீஸ் கேஸ் எழுதுவதற்குக் கூட இழுத்தடிக்கிறார்கள். வறுமை, அரசியல், பணம் சம்பந்தப் பட்ட குற்றங்கள் தவிர்த்துப் பார்த்தாலே பிறப்பால் நடத்தப் படும் அடக்கு முறைக் குற்றங்கள் ஏராளம். இவற்றை ஒழிக்க வேண்டும் என்ற ஆதங்கம் உங்களுக்கு வரவில்லையா? அலல்து இப்படியெல்லாம் நடக்க வில்லை என்கிறீர்களா?
ஜூலை 28, 2009 at 10:59 மு.பகல்
வித்தகன்
நான் ”இந்தியாவில் எந்த கொலை நடக்கும் வரை XYZ ஐ நாம் கடைப் பிடிக்க வேண்டும்” என சொல்லவில்லை. அதனால் உங்கள் சவால் சரியில்லை. ஆனால் நீங்கள் ”சமூக, அரசியல், கலாசார, மத, அதிகார ரீதியாக ஏற்ற தாழ்வுகள்” இந்தியாவில் இருக்கும் ABC இருக்க வேண்டும் என சொல்கிறீர்கள். அதனால் அப்படிப்பட்ட நிலையை நீங்கள்தான் என்ன என்று உதாரணங்கள் மூலம் விளக்க வேண்டும். The onus is on you to explain your position. Answering a question with another question is dodging the issue.
ஜூலை 28, 2009 at 11:19 மு.பகல்
நான் சொல்லாத போது நீங்களாகவே ஏன் இந்தியா வேறு ஒரு நாடு மாதிரி இருக்க வேண்டும் என்று நான் சொன்னதாக சொல்கிறீர்கள்? இதில் united nations link எல்லாம் எதற்கு அனுப்புகிறீர்கள்?
சரி. இப்போது point ற்கு வருகிறேன்.
உங்கள் கேள்வி: உலகில் எங்குதான் வேறுபாடுகள் இல்லை? அத்தகைய சமுதாயம் இங்கு மட்டும் உருவாகும் என் ஏன் காத்திருக்க வேண்டும்?
என் பதில்: உலகம் எப்படி இருக்கிறது என்று பார்த்து மட்டுமே நாம் வாழ முடியாது. இந்தியா வழிகாட்டியா இருந்தால் எந்தத் தவறும் இல்லை. நம்மிடம் பிறப்பால் வேறுபாடுகள் உள்ளன. முதலில் அவற்றைக் களைவோம். அதற்கு முன் அந்த வேறுபாடுகள் உள்ளன என்று acknowledge செய்தால்தான் சரி. பிரச்சினையைப் பற்றிப் பேசாமல் தீர்வு எங்கிருந்து வரும்?
என் கேள்வி மீண்டும்…
//இவற்றை ஒழிக்க வேண்டும் என்ற ஆதங்கம் உங்களுக்கு வரவில்லையா? அல்லது இப்படியெல்லாம் நடக்க வில்லை என்கிறீர்களா?//
ஜூலை 28, 2009 at 12:32 பிற்பகல்
வித்தகன்
நீங்கள் ஒரு சமுதாய நிலையை பற்றி பேசினால், அது எப்படி இருக்கும் என உதாரணங்களும் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், அது அர்த்தம் தராது. அதனால்தான் உலகில் எங்கு அதைப்போல நடக்கின்றது என பார்க்க வேண்டும்.
“ உலகில் எங்குதான் வேறுபாடுகள் இல்லை?” என்ற கேள்வியை நான் கேட்கவில்லை. அதனால் கேட்காத கேள்விக்கு பதிலளித்து பிரயோசனமில்லை.
எல்லோருக்கும் சம உரிமையும், வாய்ப்பும் தரும் நீதியும், அதனை அமுலாக்குதலும், இன்றியமையாதது. அதனால் , சமுதாயத்தில் ஒரு பங்கு மக்கள், அவர்கள் பிறப்பினால் `தாழ்த்தப்பட்டவர்` என்ற முத்திரையுடன் செல்வது சரியாகாது.
ஜூலை 28, 2009 at 1:25 பிற்பகல்
நீங்கள் கேள்வியை நேராகக் கேட்காமல் ஏதோ link மட்டும் கொடுத்தால் நானாகவே புரிந்து கொண்டுதான் பதிலளிக்க முடியும். குறை சொல்லிப் பயனில்லை.
இப்போது கேட்டிருக்கும் கேள்விக்கு நான் முதலில் கேட்ட கேள்விதான் பதில். கொலை செய்வது தப்பு என்று நான் சொன்னால், கொலை செய்யாத சமூகம் எப்படி இருக்கும் என்று உதாரணம் கொடுத்தால்தான் ஒப்புக் கொள்வீர்களா? அந்த சமுதாய நிலைக்கு என்னால் எடுத்துக்காட்டு தர முடியாது என்பதால் என் நிலைப்படு தவறாகி விடுமா?
அதே போல சமூக ஏற்ற தாழ்வுகள் பிறப்பால் நிர்ணயிக்கப் படாத நாடு எப்படி இருக்கும் என்று உதாரணம் கொடுத்தால்தான் அது நடை முறையில் சாத்தியம் என்று ஒப்புக் கொள்வீர்களா? அப்படி ஒரு நாடும் இல்லை. அதனால் என்ன? ஒரு வேளை அது நடை முறையில் சாத்தியம் இல்லை என்று யாரேனும் சொன்னாலும் அதற்குத் தொடர்ந்து முயற்சிப்பது தவறா? ஒரு கறுப்பரும் வெள்ளைக்காரரும் அமெரிக்காவில் சமமாக வாழவே முடியாது, அத்தகைய வாழ்க்கை முறைக்கு உலகில் வேறு உதாரணமே இல்லை என்று சென்ற நூற்றாண்டில் நினைத்திருந்தால் இப்போது அங்கு இருக்கும் (ஓரளவு) இன வேறுபாடற்ற சமூகம் வந்திருக்குமா?
//எல்லோருக்கும் சம உரிமையும், வாய்ப்பும் தரும் நீதியும், அதனை அமுலாக்குதலும், இன்றியமையாதது. அதனால் , சமுதாயத்தில் ஒரு பங்கு மக்கள், அவர்கள் பிறப்பினால் `தாழ்த்தப்பட்டவர்` என்ற முத்திரையுடன் செல்வது சரியாகாது//
உண்மைதான். ஆனால் ஒரு இன மக்கள் தொடர்ந்து தாழ்த்தப் படும் வரை அந்த முத்திரையையும் அழிக்க முடியாது. சாதி ரீதியான அநீதிகள் தொடரும் வரை, துரதிஷ்டவசமாக, இந்த அடையாளப் படுத்துதலும் தொடரத்தான் வேண்டும். இது பெருமைப் பட வேண்டிய விஷயமாக நான் கருதவில்லை. ஆனால் சமுதாய அநீதிகள் தொடரும் பொழுதே இந்தப் பதம் மறைக்கப் படுவது அந்தக் குற்றம் நடை பெறுவதை மூடி மறைப்பது போலாகிவிடும். உதாரணமாக பிச்சைத் தொழில் இருக்கும் வரை பிச்சைக்காரன் என்ற திட்டும் இருக்கும். பிச்சை எடுப்பதை ஒழிக்க வேண்டும் என்றால் பிச்சை எடுக்காத நாடு எது, எனவே அந்தப் பதத்தையே எடுக்க வேண்டும் என்று சொல்ல முடியாதல்லவா? அதே போலத்தான் தலித் என்ற பதமும்.
1947க்கு முன்னால் இருந்ததற்கு எவ்வளவோ முன்னேறி விட்டோம். சட்ட ரீதியாக தீண்டாமை ஒழிக்கப் பட்டு விட்டது. நடைமுறையிலும் குறைந்து வருகிறது. முழுமையாக அழியும் போது இந்தப் பதமும் அழியும். அதன் பிறகு nigger என்ற சொல் பொது வழக்கில் தலை காட்ட ஆரம்பித்திருப்பது போல் தலித் என்ற சொல்லின் கோபமான அடித்தளம் மழுங்கி சாதாரண விளிச் சொல்லாக மாறலாம். அதன் பின் மொத்தமாக காணாமல் போகலாம்.
ஜூலை 26, 2009 at 1:34 பிற்பகல்
“தனி மனித அரசியல் அடிப்படையில் ரெபார்மேஷன் வந்தாலும், தேசீய வாதம், மொழிப்பற்று, பூர்ஷ்வா ஆதிக்கம் இவற்றால், அது சமூகத்தில் அஸ்திவாரம் போட்டது.
உங்கள் வாதம் “Hindus live in society and their acts of worship affect the society as a whole” என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. நீங்கள் பரீட்சையில் பாஸ் ஆக வேண்டும் என பூஜை செய்கிறீகள். நீங்கள் பாஸ் ஆகறீரகளோ இல்லையோ, உங்கள் பூஜை வேறு யாருக்கும் நல்லதோ, கெட்டாதோ செய்யப் போவது இல்லை. அதனால் கோவில் பூசைகள் சமூகத்தை பாதிக்கிரன என்பது ஆதரமற்றது.
”If in a temple, in the name of worship, women are asked to disrobe, it is the concern of all in the society.” மேலும் இதைப் போல extreme கற்பனா வாதங்களை கொண்டுவரவேண்டாம். பெண்கள் உடைகளை கடைச் சொன்னால், அது மனித உரிமைப் பிரச்சினை, theological issue இல்லை. மனித சுய மரியாதைகளை தாழ்த்தும் எந்த செயலையும், மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் மற்ற கோவில் பக்தர்களே அதை மனித உரிமை பிரச்சினையாக எடுத்துக் கொள்வர்.”
Vijayaraaghavan!
Your wikipedia history is correct. Henry did it everything for his own interest. That is not the point for our debate. It is rather that the incidental effects of his act, which effected reformation in the religion, that are relevant, and that continued even after his death and uptil the separation from the Pope became complete and the religion came under the direct leadership of his daughter, Queen Elizabeth.
But our relevant point is the language and other religious issues during his reign and ther daughter’s.
The same issue that is facing us here: Tamil vs Sanskrit in Hindu worship. The battle is still going on; and there is no clear winner because the religious theology is written and administered by Tamil brahmins who are supported by people like you. If government intervenes, you cry foul accusing them of interference with your religion. When others do, you rubbishes them calling them atheists who have no business with your gods.
My point is: the controvery is universal; and eveywhere, they have resolved it: the mother-tongue has won. But here, in TN, Tamils could not win the battle for their mother-tongue. You are battling against us, on the side of Sanskrit – that is what I am saying here. All things are irrelevant here.
‘Affect’ does not contain always the negatige connotations. It can be either positive or negative, or a bit of both at the same time. The religious practices of Tamil Hindus can affect society both ways. Because, Tamil society has a huge majority of Hindus. The whole society gets affected therefore,
The controversy created by Chidambaram affects the society negatively: தமிழ்னாட்டில் தமிழருக்கு அவர்தம் மொழியில் பாடி வணங்க உரிமையில்லையா? என்பதே அது.
It is not a mere fact of pujaas and ceremonies. It goes beyond that, It is not a mere fact of a theological question. Every Tamilian is insulted. It thus spills out into society – the open society – where there are no question of any stakeholders; atheists, theistss, brahmins, or non-brahmins!
You are trying to narrow it down the issue into the confines of theology.
I quoted the example of the women disrobing. That is mischievous, according to you. Ok, then, why not take the example of peey virattal (exorcism) where women are chained and kept for months together, daily getting whip lashes in the name of exorcising the ghost and made to face hunger and starvation! Such examples can be given freely. All in the name of religion. Soceity cant sit and watch when you practise your religion harassing the innocents with such inhuman practices; or in the case of language controvery, with insult to the local people’s culture.
Forcing people – indirectly or directly – to accept that the worship in sanskrit alone is valid. Or, as a concession, they may get the service in Tamil ALSO. All this is, Mr Raagahavan, is not simple theology. But a harassment!
The genie has broken the cork and came out of the bottle. It is a social issue. Face it.
ஜூலை 27, 2009 at 9:55 மு.பகல்
கரிகுலம்
நேற்று நேரம் இல்லையாததால், இன்னும் சில மறுமொழிகள் கொடுக்கவில்லை. அவை:
1. “the controvery is universal; and eveywhere, they have resolved it: the mother-tongue has won” இந்த சர்ச்சை universal அல்ல. உதாரணமாக, எல்லா நாடுகளிலும் கத்தோலிக்கர்கள் லத்தீனிலும் மாஸ் செய்கின்றனர். உலகில் உள்ள 1.5 பில்லியன் முஸ்லிம்கள் உலகைன் எல்லா நாடுகளிலும் உள்ளனர் , அவர்கள் அரபு மொழியில் தொழுகை நடத்துகிறனர். இந்தியாவிலேயே சமஸ்கிருதம் பரவலாக பூஜையில், மற்ற இந்திய மொழிகளோடு- பயன்படுகிறது.
அதனால் சில தமிழ் நாட்டு கோவில்களில் சில பூசைகள் சமஸ்கிருதம் நடத்தப் படுவது, நீங்கள் சொல்வது போல உலகத்திலேயே அபூர்வம் இல்லை. அதுதான் உங்கள் வாதம் என்றாள் ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் உலகில் என்ன என்ன நடக்கின்றன என்பதை சரியாக புரிந்து கொள்ளவில்லை; இங்கிலாந்திலேயே, ஆங்கிலத்தில் முழுவதுமாக தொழுகை நடத்தப்படும் ஆங்க்ளிகன் சர்சில் செல்பரின் எண்ணிக்கை, அரபு மொழியிலேயே தொழுகை நடத்துபவரை விட குறைவாக இருக்கலாம், லத்தீனில் மாஸ் நடத்தும் கத்தோலிக்கரை விட எண்ணிக்கை குறைவு. மேலும் இங்கிலாந்தில் (அல்லது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, போன்ற நவீன நாடுகளில்) மத இடங்களில் என்ன மொழியில் தொழுகை நடக்கின்ரது என யாரும் கண்டுக் கொள்வதில்லை, ஆங்கிலம், அரபு, தமிழ், சமஸ்கிருதம் குஜராது, சீனம், கிரீக், ரஷ்யன், டட்சு போன்ற எல்லா மொழிகளிலும் தொழுகைகள் நடக்கின்றன.
2. உங்கள் பார்வையே paranoid ஆகவும், persecutory complex ஆகவும் உள்ளது. பாரநாய்ட் நபர், மற்றவர்கள் தங்களுக்கு செய்யாத தீமைகளை கற்பனை செய்து கொள்வான், அதனால் மற்றவர்கள் மேல் காரணமற்ற வெறுப்பை கொள்வான். உங்கள் சொல்லாடல்கள் இப்படிப்பட்ட மனப்பான்மையை காண்பிக்கிறன. உதாரணங்கள்: ”Forcing people… to ….worship in sanskrit ” . இங்கே யாரவது துப்பாக்கி/கத்தி முனையில் மக்களை சமஸ்கிருதத்தில் பூசை செய் என்கிறார்களா. சிதமபரம் கோவில் பூசாரிகள் மரபாக சில பூசைகள் சமஸ்கிருதத்தில் நடக்கின்றன என்கிறார்கள்.இங்கு எங்கே வலுக்கட்டாயம் உள்ளது.
மேலும் Every Tamilian is insulted என்பது பாராநாய்ட் மனப்பான்மையை காண்பிக்கிறது. முதலில் நீங்கள் எல்லா தமிழர்களுக்கும் Spokesman அல்ல. அதனால் உங்கள் அபிப்பிராயத்தை Every Tamilian என பொதுவாக சொல்ல முடியாது.
சிதம்பரம் கோவில் விவாதம் என்றால், அதற்காக பேய் ஒட்டும் பெயரில் சில பெண்கள் சங்கிலியால் பிணைக்கப் படுவதை எடுக்கிறீர்கள். அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு.
genie has broken the cork and came out of the bottle என்பதெல்லம் உங்கள் கற்பனை – நீதிமுறை, ஜனநாயகம் ஆகியவை இன்னும் இந்தியாவில், சிதம்பரத்தில் அழிந்துவிடவில்லை.
இதில் பெரிய joke and irony என்ன என்றால், தமிழில் சிதம்பரத்தில் பூசை செய்யாவிட்டால் insult என்கிறீர்கள், ஆனால் உங்கள் கருத்துகள் ஆங்கிலத்தில் தான் வருகின்றன.
ஜூலை 26, 2009 at 2:24 பிற்பகல்
கரிகுலம்
நீங்கள் “Tamil brahmins who are supported by people like you.” என்பதை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன்; நான் ஆதரவளிப்பது பிராமணர்களுக்கு அல்ல; நான் ஆதரவளிப்பது சுதந்திரத்திர்க்கு, நான் ஆதரவளிப்பது மதசார்பற்ற அரசாங்கத்திற்கு ( அதாவது அரசு வேலையும் மத வேலையும் பிரித்து வைக்க வேண்டும் என்பது), நான் ஆதரவளிப்பது பகுத்தறிவை உபயோகித்து, பிரச்சினைகளை தீர்ப்பது
ஜூலை 27, 2009 at 4:46 பிற்பகல்
இப்படி ஒரு பதிவ எழுதி , தல மறைவாகிட்டாரே நம்ம ஆர்.வீ ?
ஜூலை 28, 2009 at 7:17 மு.பகல்
இந்த வார இறுதியில் கொஞ்சம் எழுதுகிறேன்.
ஜூலை 28, 2009 at 8:53 பிற்பகல்
bmurali80,
நான் RV சார்ப்பாக பதில் எழுதலாம்தான். ஆனால் இதைப் பற்றி என்க்கு ஒன்றும் தெரியாது. உங்கள் அதிர்ஷ்டம் – அவனே பதில் எழுதுவதாக சொல்லியிருக்கிறான்.
ஜூலை 28, 2009 at 11:52 மு.பகல்
சிதம்பரம் கோவில் மற்றும் பல இந்து கோவில் விஷயங்களில் தலையிடும் முற்போக்காளர்கள் தமிழில் குரான் படிப்பதில்லை, வெள்ளி ஜூம்மா அன்று முஸ்லிம்களைத் தவிர மற்றவர் உள்ளே வரக்கூடாது என்ற பல இஸ்லாமிய சம்பிரதாயங்களில் தலையிடுவதில்லையே ஏன் ?
முற்போக்கு என்ன இந்து மத சொத்தா ? இல்லை இந்துக்களுக்கு மட்டும் தான் முற்போக்கு எண்ணம் உண்டா ? இஸ்லாமியர்களுக்கு இல்லையா ?
ஜூலை 28, 2009 at 8:50 பிற்பகல்
vakra panjar – யார் அப்படி கூறுகிறார்கள் என்று என்க்குப் புரியவில்லை
ஜூலை 29, 2009 at 11:03 மு.பகல்
vakra panjar… அரபி கற்றுக் கொள்பவர்கள் எல்லோருக்குமே குரான் புரியும். குரான் புரிய வேண்டும் என்பதற்காகவே அரபி கற்றுக் கொடுக்கவும் அவர்கள் தயார். அதே போல சமஸ்கிருதம் எல்லோருக்கும் கற்றுத்தர பிராமணர்கள் ஒப்புக் கொள்வார்களா? இத்தனை நூற்றாண்டுகளாக கற்றுக்கொள்ள அனுமதித்தார்களா? வட மொழியில் மட்டும்தான் வழிபாடு நடக்க வேண்டும்; அதோடு நாங்கள் மட்டும்தான் வட மொழி கற்றுக் கொள்ளலாம் என்று இத்தனை காலமாக சொன்னதற்கு என்ன பொருள்? மற்ற சாதிக்காரன் எவனும் வழிபாடு நடத்த முடியாது. நாங்கள்தான் நடத்துவோம் என்றுதானே அர்த்தம்? இந்த நிலைப் பாடு “வட மொழியில் மட்டுமே வழிபாடு, அந்தக் கல்வி எங்களுக்கே பாத்யதை” என்று பிராமணர்கள் தனக்குத்தானே கொடுத்துக் கொண்ட உயர் பீடம். அவர்கள் கீழே இறங்கத்தான் வேண்டும். அதோடு, முஸ்லீம்களைப் போய்க் கேளு என்று சின்னப் பிள்ளைத் தனமாக சொன்னால் எப்படி? அவர்கள் செய்தால் நீங்களும் செய்வீர்களா? உங்களைத் திருந்தச் சொன்னால் அவனையும் கேளு என்கிறீர்களே!
ஜூலை 29, 2009 at 11:16 மு.பகல்
நீங்கள் சொல்லுவது கரெக்ட். எல்லோருக்கும், அதாவது ஹிந்துக்கள், மற்றபடி விருப்பம் உள்ளவர்கள், சமஸ்கிருதத்தில் மதம் சம்பந்தம் அளவிலாவது பயிற்சி கொடுக்க வேண்டும். மதப் பயிற்சி ஜாதி, இனம், பால் பாராமல் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும், கிடைக்க வாய்ப்பு இருக்க வேண்டும். அதற்கு பொதுவாக எல்லா ஹிந்துமத `தலைவர்கள்` என அழைக்கப் படுபவர்கள் முன் வரவேண்டும்.
ஜூலை 29, 2009 at 12:26 பிற்பகல்
அவனைக்கேட்கவும்
ஜூலை 29, 2009 at 4:51 பிற்பகல்
வக்கிரா பஞ்சர்..
புட்டுப் புட்டு வச்சுமே சொன்னது புரியலயா?
ஜூலை 29, 2009 at 9:01 பிற்பகல்
ஆரோக்யமான ஒரு விவாதம் எல்லோருக்கும் நல்லது. பலதரப்பட்ட கருத்துக்கள் பரிமாரப்படும். ஆனால் தயவுசெய்து பெர்சனல் அட்டாக் வேண்டாம். நாங்கள் தலையிட்டு சென்சார் செய்யவேண்டியிருக்கும்.
ஜூலை 30, 2009 at 6:52 பிற்பகல்
Vijayaragahvan!
I reiterate my statement that ‘every tamilian is insulted’ in worship of his god in a language which he does not understand and his wish to worship in his own language, which will enhance his spiritual capacity, is thwarted by the anti-tamil lobby.
I can, of course, add here that ‘every Tamilian’ does not include those Tamilians who just clap with those paarppanars who insist that Sanskirt is alone the Deva paasha and Tamil is unfit to worship as it is a neesha paasha. I dont mean all paarppanars, but only ‘those’ There are many in TN.
All those paarppanars who insist thus, is excluded from my statement ‘Every Tamilian..”
The point is simple: My mother tongue is Tamil. If in a public Temple in my state, if I am to worship god in Sanskrit, not in my mother tongue, I am insulted. The rituals and ceremonies are in Sanskrit. My mother tongue is insulted. Got my point?
I said ‘universal’ to refer to victory for mother tongue where such victory is sought. If people did not see such victory in some country, as in the examples cited by you, as they are contented or conditioned to believe their mother tongue is unworthy for God worship, it does not mean that everywhere, everyone else should follow their example. You are hinting at that, arent you?
அதாவது அரசு வேலையும் மத வேலையும் பிரித்து வைக்க வேண்டும் என்பது – You.
Not possible. Read religious history. The State vs the Religious patriarchy was a frequent problem. Read Reformation? You will know that.
Bloody wars were fought – not by the State itself. But by the forces instigated by the religious patriarchies.
The religious men boasted that they could take on the kings. Sometimes, it was not a boast. It became true. Kings lost to Monks. Sometimes, persecution of the religious people happened.
In Tamilnadu, itself, the Jains were peresecuted by kings; the brahmins were persecuted by Pandian and Pallavan and the Vainavars were persecuted by Cholan etc. All this shows State Vs Religion. The State entered, not to eliminate the religion itself, but to side with one religious sect to eliminate others.
You can have a private religion. If you bring your religion to public sphere and take the masses with you showing your gods etc. for your own benefit swindling their hard earned money and labour to enrich yourself in the name of God, the State wont watch with folded hands.IT WILL ACT. Beware.
Your describing me, as paranoid, is a ploy to unsettle me. Such personal barbs are used for that purpose in debates.
The blog owner has rightly reminded you not indulge in personal attacks.
Answer my points and rest your case. Leave the conclusions to third party.
ஜூலை 30, 2009 at 9:01 பிற்பகல்
கரிகுலம்
“Answer my points” என்கிறீர்கள், ஆனால் உங்கள் பாயிண்டு என்ன என்று தெரியவில்லை. அதனால் ஒரு `ஆன்சர்` ஐயும் கொடுக்க முடியவில்லை.
நீங்கள் secular government அதாவது மத சார்பற்ற அரசை திண்ணமாக மறுக்கிறீர்கள். நான் நீங்கள் paranoid என சொல்லவில்லை; அது ஒருவித பரநய்ட் மனப்பான்மையை காண்பிக்கிறது என்றேன். நீங்கள் forced, harassed, insulted என்று உங்களுக்கும், மக்களுக்கும் தீங்கிழைத்தாற்போல் சொல்கிறீர்கள் – அது ஒருவித சமுதாய மனப்பான்மையை காண்பிக்கிறது – உங்களைப் பற்றி தனிமனித தாக்குதல் இல்லை. இந்த பிரச்சினையை ஒரு ஜாதி அடிப்படையில் பார்க்கிறீர்கள். இதுதான் உங்கள் `பாயிண்டுகள்` என்றால், அதற்கு பதில் ஒன்றும் இல்லை.
ஜூலை 31, 2009 at 11:40 மு.பகல்
““Answer my points”
அப்டீன்னா, பெர்சனலா எழுதாமெ போயிண்ட மத்தும் எழுதுங்கோன்னு அர்த்தமாக்கும்.
forced, harassed, insulted
இதில்லாம் விஜய்ராகவன் என்ற தனிநபருக்கல்ல, பொத்தாம் பொதுவா…
எனக்கென்ன சிதம்பரம் பூசாரிகள் மேல் தனிப்ப்ப்ட்ட வெறுப்பா அல்லாட்டி விருப்பா?
எல்லா ஒரு அப்ஸ்டராக்டுதான். We discuss the issue. We attack or praise ideologies and issues.
ஜாதி அடிப்படை…you write.
தவிர்க்கமுடியாது. ஏன்னா…உலகத்தில், மதத்தை ஜாதி சொத்தாக்கிப் பின்னர் மதத்தை விமர்சக்kuம்போது, தன் ஜாதியை விமர்சிக்கிறார்கள் என கூக்குரலிடுபவ்ருக்கு,
‘ஜாதி அடிப்படை’ எனத் தெரியாமல் வேறெப்படி தெரியும்?
The fact is plain and hitting: That is,
Hindu religion as practised or viewed by Tamil paarppanars, is nothing but the root in which they have sprung as a community. You cant spearate Tamil paarppanars fromt the religion. Therefore, any criticism for or against Hindu religion, is for or against the TPs.
That is why, the critics of TPs, if they want to attack TPs, attack the religion first, knowing clearly it will hit the TPs below the belt. EVR did it well.
In Chidambaram issue, except a few like RV, most TPs take the side of the priests.
Not only in this issue, in any issue, where priests or any aspect of the religion is involved, it is a foregone conclusion where the TPs’ mind is.
ஜூலை 31, 2009 at 2:14 பிற்பகல்
நீங்கள் நான் தீக்ஷிதர்கள் `பக்கம்` வாதிடுகிறேன் என்றால், இதுவரை எழுதினதை புரிந்து கொள்ளவில்லை. நான் சரியான ஜனநாயக முறைப்படி , சிதம்பரம் கோவில் பக்தர்களால் இந்த விஷயங்களில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என சொல்கிறேன். I am for a suitable process , not for a particular group or language . The process must focus on the issues and take into account the opinions of the people directly involved. The process must be just, fair and transparent
Secular government அதாவது மதசார்பற்ற அரசு என்றால், அது மத விஷயங்களில் இருந்து கைகழுவி விட வேண்டும். அதற்கு கோவில்களில் என்ன சடங்குகள் செய்கின்றனர், எப்படி செய்கிறனர் என்பதை கேட்பதற்கு – இந்திய கான்ஸ்டிட்யூஷனின் அடிப்படை கொள்கைகள முரண்படாத வரை – தட்டி கேட்பதற்கு உரிமை இல்லை.
“மக்கள்” forced, harassed, insulted என அடிக்கை சொல்வதெல்லாம் ஒரு victim complex தான்.
ஜூலை 31, 2009 at 3:17 பிற்பகல்
இந்தியாவில் நடப்பது செக்குலர் அரசாங்கம் என்று சொல்லிக்கொள்ளும் அரசாங்கம் அவ்வளவே. அது உண்மையான செக்குலர் அதாவது மதச்சார்பற்ற அரசு அல்ல.
பிரச்சனைகள்:
1. இந்து மத விஷயங்களில் காட்டும் வீரியம் மற்ற மத கோவில் விஷயங்களில் காட்டப்படுவதில்லை.
2. தங்களை கம்யூனிஸ்டு, மதச்சார்பற்றவர்கள், என்றெல்லாம் பரைசாற்றிக்கொள்பவர்கள் இதுவரை இந்து மதத்தைத் தவிர மற்ற மத கோவில் விஷயங்களில் தலையிட்டதாகத் தெரியவில்லை. அதைக் கேட்டால் கேட்பவனுக்கு பூனூல் மாட்டிவிட்டு “Evil பார்ப்பானன்” சாதி வெறியன் என்று பட்டம் கட்டிவிடுகிறார்கள்.
3. மதச்சார்பற்ற அரசு என்பது விஜயராகவன் சொல்வது போல் மத விஷயங்களில் தலையிடக்கூடாது.
அல்லது தன்னை ஒரு மதச்சார்பற்ற அரசு என்று பரைசாற்றிக்கொள்ளக்கூடாது.
4. இன்றைய சூளலில், அனைத்து முக்கிய கோவில்களும் அரசு அமைத்த இந்து அறநிலைத்துறை தான் கவனித்து வருகிறது. கோவில் உண்டியலில் ஏழை பக்தர்கள் இடும் காணிக்கைகள் அரசாங்க கஜானாவுக்குப் போகிறது.
இதிலிருந்து பணத்தை எடுத்து ஹஜ் பயணம் செல்லக்கூடச் செலவு செய்யப்படுவதாக இந்து அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.
5. வக்பு வாரியத்திலோ, இந்திய கத்தோலிக்க சபையிலோ நடக்கும் பண மோசடிகள் அவ்வப்போது செய்திகளில் வந்தாலும், இந்திய அரசாங்கம்/மாநில அரசாங்கம் pro active ஆக எதுவுமே செய்வதில்லை. சும்மா, அது அவர்கள் பிரச்சனை என்று விட்டுவிடுகிறது.
மைனாரிட்டி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும். ஹிப்னாட்டிசம் போல் அப்படியே நின்றுவிடுவார்கள். பிரச்சனை புஸ்ஸாகிப்போய்விடும்.
இதுவே ஒரு இந்து கோவிலாக இருந்தால், மத்தியில், மாநிலத்தி, தெரு ஓரத்தில் என்று அனைத்தும் “மதச்சார்பற்ற” மக்கள் ஒன்று கூடி அந்தக் கோவிலை எப்படி அரசாங்கச் சொத்தாக்கி அதன் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை கபளீகரம் செய்யலாம் என்று திட்டம் தீட்டுகின்றனர்.
6. எந்த ஒரு நாட்டிலாவது தங்கள் சாதியை/சமூகத்தை “மைனாரிட்டி” அதாவது சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்கச் சொல்லி மக்கள் போராடுவார்களா ? இந்தியாவில் நடக்கிறது. ஏன் ?
ஜூலை 31, 2009 at 5:51 பிற்பகல்
//3. மதச்சார்பற்ற அரசு என்பது விஜயராகவன் சொல்வது போல் மத விஷயங்களில் தலையிடக்கூடாது.
அல்லது தன்னை ஒரு மதச்சார்பற்ற அரசு என்று பரைசாற்றிக்கொள்ளக்கூடாது. //
இதை ஒப்புக் கொள்ள முடியாது. நீங்கள் ஒதுங்குங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்ல மதவாதிகளுக்கு தகுதி இல்லை. இத்தனை காலம் அரசாங்கம் தலையிடாமல்தான் தீண்டாமை தலை விரித்து ஆடியது. அரசு சட்டங்களால்தான் திருத்தம் ஆரம்பித்துள்ளது. தன்னைத்தானே சீர் படுத்திக் கொள்ளும் பக்குவம் எந்த மதத்திற்கும் இல்லை.
திரும்பத் திரும்ப முஸ்லீமைப் பார், கிருஸ்துவனைக் கேள் என்றே சொல்கிறீர்களே, இந்து மதத்தில் இருக்கும் ஏற்ற தாழ்வுகளைச் சீர் செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவே இல்லையா? நீங்கள் சரியாக இருந்தால் நாம் சேர்ந்தே மற்ற மதத்தினரிடம் சொல்லலாமே! ஏன் அவனைக் கேள் இவனைக் கேள் என்று திசை திருப்புகிறீர்கள்?
ஆகஸ்ட் 1, 2009 at 11:44 மு.பகல்
நீங்களாக சேய்யாதவரை அந்தக் கேள்வி வரத்தான் செய்யும்.
அந்தக் கேள்வி கேட்கிறீர்கள் என்று திரும்பத் திரும்ப நீங்கள் சொல்கிறீர்கள், ஆனால் அந்தக் கேள்வி ஏன் வருகிறது என்று யோசிக்கவே மாட்டீர்களா ?
அந்தக் கேள்வி வரக்காரணம், நீங்கள் மதச்சார்பற்றவர்கள் என்று பறைசாற்றிக் கோள்வதனால் தான்.
இந்து மதத்தைத் திருத்துவது தான் எங்கள் வேலை, மற்றவர் பற்றியெல்லாம் எங்களுக்கு அக்கறை இல்லை என்று உங்களால் ஓப்பனாகச் சொல்ல முடியுமா ?
முடியும் என்றால், நீங்கள் இந்துவாக இருந்து அதைத் திருத்த எல்லா முயற்சியும் எடுங்கள் என்று கூறி நாங்களும் உங்களுடன் இணைந்து இந்து மத தவறுகளைத் திருத்த வழி வகுப்போம்.
அதெல்லாம் இல்லை, நாங்கள் வெளியில் தான் இருப்போம், உன்னை மட்டும் தான் நொள்ளை சொல்லுவோம், பக்கத்தில் கண்முன்னே நடக்கும் தவறுகளை எல்லாம் தட்டிக்கேட்க மாட்டோம் ஏனென்றால் அது தான் எங்கள் மதச்சார்பின்மை என்று நீங்கள் கூறுவது உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் ஹிப்பாக்கிரசி மனப்பான்மை.
ஒரு ஹிப்பாகிரசி மனம் கொண்ட கேவலமான மனிதன் சொல்லி நாங்கள் ஒன்றும் திருந்தத் தேவையில்லை. எங்கள் தவறுகளை உணர்த்தும் நல்ல மனிதர்கள் எங்களிலிருந்தே வந்து எங்களைத் திருத்தட்டும்.
அப்படிப்பட்ட திருத்தம் தான் நிலைக்கும்.
காலம் காலமாக அப்படித்தான் நடந்துவந்துள்ளது. புத்தரும், விவேகானந்தரும் வந்து திருத்தியது போல் ஒருவர் வந்து எங்களைத் திருத்தட்டும் அதுவரை நாங்கள் திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் என்றே இருந்துவிட்டுப் போகின்றோம்.
சிலுவைப்போராளிகளிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு சமூக நீதியைக் காப்பதாகச் சொல்லிக்கொண்டு திரியும் ஈன ஜென்மங்கள் எல்லாம் எங்களை ஒன்றும் திருத்தத் தேவை இல்லை.
அதனால் நாங்கள் ஒன்றும் திருந்தப்போவதும் இல்லை.
ஆகஸ்ட் 1, 2009 at 2:59 பிற்பகல்
//ஒரு ஹிப்பாகிரசி மனம் கொண்ட கேவலமான மனிதன் சொல்லி நாங்கள் ஒன்றும் திருந்தத் தேவையில்லை. எங்கள் தவறுகளை உணர்த்தும் நல்ல மனிதர்கள் எங்களிலிருந்தே வந்து எங்களைத் திருத்தட்டும்.//
இந்து மதத்தில் உள்ள குறைகளை நீங்களே திருத்திக் கொள்வதற்கு உங்களுக்குப் பொறுமை இருக்கலாம். உங்களால் அடக்கப் பட்ட சாதிக்காரர்களுக்கு இருக்காது. ஒரு மேல் சாதி இந்து எங்கள் மதத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்வதற்கு பதில் தாழ்த்தப்பட்ட சாதிக்காரர்கள் சொல்லட்டும். அதன் பின் வெளி ஆட்கள் ஒதுங்கிக் கொள்வார்கள். மேல் சாதிக் காரர்களுக்கு status quo ரொம்பப் பிடித்திருக்கிறது. அதனால்தான் மற்றவர்கள் தலையிடும் போது கோபம் வருகிறது. இந்த வாதம் எங்கும் எடுபடாது. Winds of change எல்லாத் திசைகளிலும் வீசுகின்றது. மாற்றம் வந்தே தீரும்.
“கேவலமான மனிதன்” என்று யாரைச் சொல்கிறீர்கள்? இந்து மதத்திற்கு வெளியில் இருந்து உத்தமன் வரவே முடியாதா?
ஆகஸ்ட் 2, 2009 at 9:14 மு.பகல்
உத்தமர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள்.
எங்கள் பிரச்சனையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். எங்களில் உத்தமர்கள் இருக்கிறார்கள். அவர்கள் செயல் ஆற்றவேண்டிய நேரம் இது.
ஆகஸ்ட் 1, 2009 at 3:02 பிற்பகல்
//அதனால் நாங்கள் ஒன்றும் திருந்தப்போவதும் இல்லை.//
அப்படியே உங்களையெல்லாம் விடவும் போவதில்லை.
ஆகஸ்ட் 1, 2009 at 3:10 பிற்பகல்
//புத்தரும், விவேகானந்தரும் வந்து திருத்தியது போல் ஒருவர் வந்து எங்களைத் திருத்தட்டும் //
புத்தர் இந்து மதத்தை வெறுத்து வெளியேறியவர். அவர் சொல்லியுமே நீங்கள் கேட்கவில்லையே. இன்னும் 2500 வருடங்களாகியும் அதே சாதி வேறுபாடு பார்த்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள். உங்களுக்கெல்லாம் ஈ.வே.ரா. வும் கருணாநிதியும்தான் சரி. சிலைக்கு செருப்பு மாலை போடுவது, பூணூல் அறுப்பது என்று செவுட்டில் அறைந்தாற்போல் சொல்லி, இட ஒதுக்கீட்டை அதிகப் படுத்திக் கொண்டே போயி இப்போது 97% எடுத்தாலும் பிராமணனுக்கு வேண்டிய பிரிவில் இடம் கிடைக்காதென்று ஆக்கினால்தான் கொஞ்சமாவது அடங்குவீர்கள். மற்றபடி எப்படி சொன்னாலும் மேற்கண்ட உங்கள் பதிலில் இருக்கும் holier than thou attitude ஐ காட்டி அதிகாரமாகப் பேசுவீர்கள்.
சாதி வேறுபாடை ஒழிக்க வேண்டும் என்ற தார்மீகப் பொறுப்பு உண்டா எனக் கேட்டால் விவேகானந்தர் வரட்டும் என்கிறீர்கள். வந்தாரே! என்ன கேட்டீர்கள்? இந்த அதிகப் பிரசங்கித்தனமான பேச்சால்தான் எல்லா பிராமண இளைஞர்களும் அமெரிக்காவில் குப்பை கொட்டிக் கொண்டு இருக்க அவர்கள் பெற்றோர்கள் இங்கு தனித்திருக்கிறார்கள்.
ஆகஸ்ட் 2, 2009 at 9:34 மு.பகல்
வித்தகன் ஐயா, ஒரு சாதியை கேவலப்படுத்திப் பார்க்கும் மனப்போக்கு திராவிட கட்சி அரசியல். இங்கு நமக்கு அது வேண்டியதில்லை.
“நீங்கள் அப்போது தான் அடங்குவீர்கள்” உங்க சாதியை அடித்து விரட்டினால் தான் சரி என்றெல்லாம் நீங்கள் பேசுவது எந்தவிதத்தில்லும் சாதியை அழிக்கும் நினைக்கும் அல்லது சாதி வேறுபாட்டை அகற்றும் தார்மீகப்பொறுப்பு உள்ள ஒரு மனிதன் பேசும் பேச்சு போல் எனக்குத்தெரியவில்லை. உங்களுக்கு பொதுவாக சாதி அழியவேண்டுமா அல்லதுகுறிப்பிட்ட பிராமணர்கள் என்ற சாதி மட்டும் அழியவேண்டுமா ?
அதெல்லாம் இருக்கட்டும்.
புத்தர் மீது கூட எனக்கு மிகப்பெரிய விமர்சனங்கள் உண்டு. அவர் ஒன்றும் சாதியையோ அல்லது இந்து மதத்தையோ வெறுத்து தனி மதம் அமைக்கவேண்டும் என்றெல்லாம் போராடவில்லை. தன் வாழ்நாள் முழுவதும் அவர் இந்துவாகத்தான்வாழ்ந்தார். ஞானத்தை தேடி அலைந்தார், கண்டுகொண்டார், அவரது சீடர்கள் உருவாகிய மதம் தான் புத்தமதம்.
//
சாதி வேறுபாடை ஒழிக்க வேண்டும் என்ற தார்மீகப் பொறுப்பு உண்டா எனக் கேட்டால் விவேகானந்தர் வரட்டும் என்கிறீர்கள். வந்தாரே! என்ன கேட்டீர்கள்? இந்த அதிகப் பிரசங்கித்தனமான பேச்சால்தான் எல்லா பிராமண இளைஞர்களும் அமெரிக்காவில் குப்பை கொட்டிக் கொண்டு இருக்க அவர்கள் பெற்றோர்கள் இங்கு தனித்திருக்கிறார்கள்.
//
பிராமணர்கள் அமேரிக்கா செல்ல பல காரங்கள் இருக்கலாம். என்னை பிராமணன் என்று நீங்கள் நினைப்பது எதனால் ?
தானால் ஒழிந்தால் ஒழிய சாதி அழியாது. சாதி அடிப்படை ஏற்றத்தாழ்வுகளை வேண்டுமானால் அழியும். அது அழிந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் ஆறரை கோடி மக்கள் மனதில் இருக்கும் விஷயத்திற்கெல்லாம் யாரும் தார்மீகப்பொறுப்பு ஏற்க முடியாது. அப்படி ஏற்பதாகச்சொல்பவன் ஏமாற்றுக்காரன்.
ஆகஸ்ட் 2, 2009 at 11:26 மு.பகல்
தானாக சாதி ஒழியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. புத்தர் இந்துவாக வாழ்ந்ததாகவும் நான் நம்பவில்லை. இந்து மத்ததின் அடிப்படை சித்தாந்தங்கள் பலவற்றை உடைத்ததுதான் அவரது வாழ்க்கையின் சாதனையே. அவரும் விஷ்ணுவின் அவதாரம் என்று இந்துத்துவா குரல்கள் செய்யும் பம்மாத்தை அவர்களே நம்புவதில்லை.
//அது அழிந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் ஆறரை கோடி மக்கள் மனதில் இருக்கும் விஷயத்திற்கெல்லாம் யாரும் தார்மீகப்பொறுப்பு ஏற்க முடியாது. அப்படி ஏற்பதாகச்சொல்பவன் ஏமாற்றுக்காரன்.//
இதை நான் மறுக்கவில்லை. ஆனால் சாதி ஒழிய வேண்டும் என்ற conscious effort கண்டிப்பாக எடுக்கப்பட வேண்டும். தானாக எதுவும் நடக்காது.
//உங்க சாதியை அடித்து விரட்டினால் தான் சரி என்றெல்லாம் நீங்கள் பேசுவது எந்தவிதத்தில்லும் சாதியை அழிக்கும் நினைக்கும் அல்லது சாதி வேறுபாட்டை அகற்றும் தார்மீகப்பொறுப்பு உள்ள ஒரு மனிதன் பேசும் பேச்சு போல் எனக்குத்தெரியவில்லை.//
அடித்து விரட்ட வேண்டும் என்று நான் சொல்லவே இல்லை.
உங்களுக்கெல்லாம் ஈவேராவும் கருணாநிதியும்தான் சரி என்று சொன்னதிலிருந்தே நான் அவர்களது முழு ரசிகன் இல்லை என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். வன்முறையிலும் அடக்கு முறையிலும் எனக்கு விருப்பம் இல்லை. நீங்கள் ஒதுங்குங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்ற தொனியில் நீங்கள் பேசியதால் நான் எழுதிய பதில்தான் இது. சாதாரணக் குரலில் சொல்லும் போதே காது கொடுத்துக் கேட்டு விட்டீர்களானால் கத்த வேண்டிய அவசியமே வராதே!
ஆகஸ்ட் 1, 2009 at 4:23 பிற்பகல்
‘நீங்கள் நான் தீக்ஷிதர்கள் `பக்கம்` வாதிடுகிறேன் என்றால், இதுவரை எழுதினதை புரிந்து கொள்ளவில்லை. நான் சரியான ஜனநாயக முறைப்படி , சிதம்பரம் கோவில் பக்தர்களால் இந்த விஷயங்களில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என சொல்கிறேன். I am for a suitable process , not for a particular group or language . The process must focus on the issues and take into account the opinions of the people directly involved. The process must be just, fair and transparent
Secular government அதாவது மதசார்பற்ற அரசு என்றால், அது மத விஷயங்களில் இருந்து கைகழுவி விட வேண்டும். அதற்கு கோவில்களில் என்ன சடங்குகள் செய்கின்றனர், எப்படி செய்கிறனர் என்பதை கேட்பதற்கு – இந்திய கான்ஸ்டிட்யூஷனின் அடிப்படை கொள்கைகள முரண்படாத வரை – தட்டி கேட்பதற்கு உரிமை இல்லை.
“மக்கள்” forced, harassed, insulted என அடிக்கை சொல்வதெல்லாம் ஒரு victim complex தான்.” -Vijyaraaghavan
Last is first.
Victim complex – is an attempt to suppress an important fact.
Forced, harassed and insulted – is possible. You want to deny that. In society, people belonging to a particular religion, may be less or more. In India, the Hindus, in TN, in particular, are a huge majority. Not each one is a person ‘aware’. They are innocent masses. They dont think; but accept anything if given or shown attractively, without question.
Forced, harassed and insulted – can be indirect, which the people themselves are not aware. Some others have to point them out. When they do, no doubt, the exploiters of the innocent are annoyed.
You call all ‘victim complex’? I can say, you don’t want to see the issue from outside.
The above is applied, more or less, to other religious people also. We are taking Hindus as a sect of such people is under debate here.
Secular government – You point out the constitutional rights of religious people to do anything within their religion. This is correct. My argument is that, the nature of the right will become corrupt when the right is abused to hoodwink innocent masses. If a cult leader asks their thousands of followers to commit mass suicide, and they do – as happened in one case – you want the secular government to keep off. No, it shouldn’t. Here, the right to follow your religion – the concerned fellow wont call it ‘cult’- is not absolute. You are abusing the constitutional rights.
If an evangelist cheats millions of people in the name of faith healing, promising false cures in order to swinde their money etc., a secular government should take it a public crime, and the evangelists cant take refuge under the article which disallows the government from interfering in the rights of a particular religious people.
If Indian government is selectively interfering, or TN government is selectively interfering with the affairs of the Hindus, it is not the fault of a secular government in theory; but that of the individuals who disregard the theory in practice or abuse it.
The religious cheats shouldn’t exploit the democratic rights granted to them with good intentions by the law makers.
Today, the Supreme Court pronounced a judgment under which no one can construct a mosque, a church or a temple etc. obstructing public convenience, like traffic, movement of people etc. In the petition, the religious organization took the same view as you do here.
We must rein in the religious cheats VR.
“The process must focus on the issues and take into account the opinions of the people directly involved. The process must be just, fair and transparent” – You say.
Ok, just, fair and transparent. I think this is also a convenient argument. Because, in religion, people have already been brainwashed into believing all that is past is acceptable and should be acceptable. Among the stakeholders, you eliminate the secular government, correct? The rest of the stakeholders, excluding the people, like the priest class, the commercial class which live by the religion in various ways – getting teritiary employment etc. – will be the voters. So, the result of the poll is a foregone conclusiion: overwhelming support to the status quo ante of the relgious people who are at the helm, here, the priests of the Chidambaaram and their supporters.
An example will be clinching. In TN, the issue is Tamil medium vs English medium in school education. The stakeholders involved, excluding the government, are the parents, the teachers, the commercial interests. The poll will take place to ascertain which medium is desired. Should I say to you what is the outcome of the poll: Overwhelming support to English medium? Even a rural parent wants his child to learn in English. The poll is no doubt fair, just and transparent.
If a poll is taken in Chidambaram issue, the winner will be the priests; and the loser will be the Tamil language. The poll is not rigged. It is fair, just and transparent.
ஆகஸ்ட் 1, 2009 at 5:08 பிற்பகல்
“If a poll is taken in Chidambaram issue, the winner will be the priests; and the loser will be the Tamil language. ”
மொழிகளுக்கு தோல்வியும் இல்லை, வெற்றியும் இல்லை. அது மனிதர்களுக்கு தான் உண்டு. தீக்ஷிதர்கள் நீங்கள் நினைப்பதுபோல் அப்படிப்பட்ட தேர்தலில் வெற்றிபெற்றால், அது பெரும்பான்மை தமிழர்கள் விருப்பம் என்று அத்துடன் சமாதானம் செய்து கொள்ள வேண்டும். பெற்றோர்களே, நீங்கள் சொல்லும் படி, தங்கள் பிள்ளைகளை ஆங்கில மீடியம் அனுப்ப தயாராக இருக்கின்றார்கள் என்றால், அத்துடன் ஒப்பிடும் போது கோவிலில் தமிழ் தோற்கவே இல்லை. வேலை, படிப்பு, ஆராய்சி இவைகளில் தமிழ் பயன்படுத்தாததால், தமிழ் தோல்வி அடைகிறது, தீக்ஷிதர்களால் அல்ல.
”They are innocent masses. They dont think; but accept anything if given or shown attractively, without question” உங்கள் மனப்பான்மையையே மக்கள் முட்டாள்கள், எனக்குதான் அவர்களுக்கு எது நல்லது தெரியும் என்று நினைத்து, உங்கள் கருத்துகளை மக்கள் மீது திணிக்க முயல்கிறீர்கள். மக்கள் , ஒவ்வொருவரும், தங்களுக்கு நல்லது எது என நினைக்கிறார்கள். மக்களின் மேலோங்கிய சுயநலத்தை (enlightened self-interest) குறைவாக மதிப்பிடாதீர்கள்.
ஆகஸ்ட் 1, 2009 at 6:21 பிற்பகல்
We are differing on basis points; and it appears to be a dialogue of the deaf.
My point you don’t want to accept is: THERE IS MUCH ROOM TO CHEAT HERE USING YOUR SENTENCE: அது பெரும்பான்மை தமிழர்கள் விருப்பம் என்று அத்துடன் சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.
It was done in the past. In the name of religion, superstitions, and in the name of Hinduism, conveniences for Brahmins were passed off as being good to the whole society. The caste system is an example. Failure of Tamil here means not just the language, but the indigenous culture based on their language; and the indirectly telling them that their language is unworthy and only Sanskrit which they don’t know, is worthy. We shouldn’t sit on the word, language here. It means more.
The important other point is the clever word பெரும்பான்மை தமிழர்கள். The priests and their supporters are sure the majority of Tamils can be ‘used’ for your purpose. That is why, I say the priest and their parties will win, and Tamil losing means all that is different from the priests want. If the priests are not against Tamil, there would be no controversy now.
உங்கள் மனப்பான்மையையே மக்கள் முட்டாள்கள், எனக்குதான் அவர்களுக்கு எது நல்லது தெரியும் என்று நினைத்து, உங்கள் கருத்துகளை மக்கள் மீது திணிக்க முயல்கிறீர்கள். மக்கள் , ஒவ்வொருவரும், தங்களுக்கு நல்லது எது என நினைக்கிறார்கள். மக்களின் மேலோங்கிய சுயநலத்தை (enlightened self-interest) குறைவாக மதிப்பிடாதீர்கள்.
Here, too, we differ basically. It is convenient for priests to say the people are intelligent; because, they are sure பெரும்பான்மை தமிழர்கள் விருப்பம் can be easily achieved.
Why we differ?
You are sure the masses are intelligent. I am not sure about that. It is easy to cheat the millions of masses; it is easy to cheat the whole nation. Hitler did it. The religious men – the Christians and Moslems – did it during the crusades. Everywhere you see, people follow religion blindly; and die for it. Therefore, one view is that masses don’t have a mind of their own. Their mind is easily manipulated. They allow anyone to manipulate it, especially in religious matters because the religious men can tell them if they don’t do this or that, the wrath of God will be upon them. Fear of God leads to fear of priests. They see the priests as the representatives of God. Remmber, the Chidambaram priests claim – a claim the Tamil masses believed – that they are the direct descendants of Lord Shiva. In making them believe this, and that only through Sanskrit, a Hindu valid worship is possible, we are taking the mob or masses as we take toddler. Unquestioning belief.
.
You view is that the mob has a mind of their own which nobody can manipulate. In religious affairs, too, according to you, they choose from the many offerings, applying their mind.
You decline to see that the history invalidated your view. In history, the masses were manipulated by religious men and other figures too. The mob has no mind of its own – is also the view psychologists have taken.
We beg to differ with each other.
ஆகஸ்ட் 1, 2009 at 9:32 பிற்பகல்
“We beg to differ with each other.”
Indeed.
ஆகஸ்ட் 2, 2009 at 2:12 மு.பகல்
இதைத் தமிழைக் காக்கும் முயற்சியாக நான் நினைக்கவில்லை. மொழியை பிரிவினைவாத ஆயுதமாக உபயோகிக்காமல் எல்லோரையும் இணைக்க பயன்படுத்த வேண்டும் என்பதால்தான் தமிழில் வழிபாடு செய்யும் option இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.
ஆகஸ்ட் 2, 2009 at 9:17 மு.பகல்
‘எங்கள் தவறுகளை உணர்த்தும் நல்ல மனிதர்கள் எங்களிலிருந்தே வந்து எங்களைத் திருத்தட்டும்.’
உங்கள் தவறுகள் உங்களை மட்டுமே பாத்தித்தால் மற்றவர்களுக்கு கவலையில்லை.
மற்ற அப்பாவிகள் – எ.டு. தலித்துகள் – பாதிக்கப்படுகிறார்களே. அப்படி தான் பாதிக்கப்படுகிறோம் என்று தெரிந்தும் அவர்களால் காலம்காலமாக எதிர்க்க முடியவில்லயே?
இப்போ கேட்டவர்களைப் பார்த்து ‘பார்ப்பனத் துவேசம்’ ‘எங்களை அழிக்கப் பார்க்கிறார்கள்’ என்றல்லவா சொல்கிறீர்கள்?
உங்கள் பார்ப்பனீயம் யாருக்குத் தேவை. அதை நீங்கள் வைத்துக்கொண்டு தனித்து வாழலாம். வாழ்ந்தும் வருகிறீர்கள்.
அந்த யீயம் மாற்றானைப் பாதிக்கும்போது, அவன் விடுவானா?
ஆகஸ்ட் 2, 2009 at 10:05 மு.பகல்
கரிக்குலம்,
நீங்கள் கொள்கை அடிப்படையில் எடுக்கும் முன்முடிவுடன் வந்து பேசுவதை நிறுத்திக் கொள்ளாதவரை நீங்கள் பேசுவது எப்படி எனக்கு முட்டாள்தனமாகத் தெரிகிறதோ அப்படித்தான் நான் பேசுவதும் உங்களுக்கு முட்டாள் தனமாகத் தெரியும்.
ஆகஸ்ட் 2, 2009 at 4:09 பிற்பகல்
’எங்கள் தவறுகள்” என்று எழுதி விட்டீர்கள். அத்தவறுகளினால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? ஏனெனின், தவறுகள் என்றாலே யாராகாவேனும் பாதிக்க்பட்டிருப்பார்கள் கண்டிப்பாக. அப்பாதிக்கப்ப்ட்டவர்கள் நீங்கள் மட்டுமே என்றால்தான், எங்களுள் ஒருவன் வந்து எஙகளைத் திருத்தட்டும் என ஆணவமாகச் சொல்ல்லாம்,
உண்மை அதுவா?
இப்படி நான் சுட்டிக்காட்டுவது, உங்களுக்கு முட்டாள்தனமாக்த் தெரிகிறது.
எனக்கு என்ன தெரிகிறதென்றால்,
”நாங்கள் தவறுகள் செய்வோம். அது உங்களைப் பாதிக்கும். ஆனால் நீங்களோ அல்லது உங்கள் சார்பாகவோ எவரும் எங்களைத் தட்டிக்கேட்கக்கூடாது. நாங்களாக மனது வைத்தால், எஙக்ள் தவறுகளைத் திருத்திக்கொண்டு, உங்களுக்கு நல்லது செய்வோம்”
இதுதான் நீங்கள் சொல்கிறீர்கள்!
நல்லவேளை, உங்களைத்தட்டிக் கேட்பவர்கள் வந்தார்கள். இல்லையென்றால்,..எல்லாம் அப்படியேதான் இருக்கும்.