ஜூன் 2009
மாதாந்திர தொகுப்பு
ஜூன் 6, 2009
Posted by RV under
Reading [4] Comments
If you are not a Harry Potter fan, skip this post.
There are four houses in Hogwarts:
Gryffyndor – Bravery is the dominant trait
Ravenclaw – Intelligence
Hufflepuff – Loyalty
Slytherin – Ambition.
It is reasonable to assume that all the British wizards went to Hogwarts. Rowling doesn’t tell the house every character belonged to. Here is my guess.
Hagrid – Hufflepuff
Lockhart – Ravenclaw. Slytherin is also a possibility.
Quirrel – Hufflepuff. Ravenclaw is also a possibility
Moody – Gryffindor
Umbridge – Slytherin. Ravenclaw is also a possibility
Fudge – Hufflepuff
Shacklebolt – Gryffindor
Ludo Bagman -Hufflepuff
Crouch Sr. – Ravenclaw
Crouch Jr. – Slytherin or Ravenclaw
Scrimgeour – Ravenclaw
Stan Shunpike – Hufflepuff
Madam Pomfrey – Ravenclaw
Trelawney – Hufflepuff
Tonks – Gryffindor or Hufflepuff
Rita Skeeter – Ravenclaw or Slytherin
Ollivander – Ravenclaw
What do the readers think? Any additions, changes to my list?
ஜூன் 6, 2009
Posted by RV under
Reading | குறிச்சொற்கள்:
Aalam vizhudhu,
Appusamiyum 1001 iravukalum,
Appusamiyum africa azhagiyum,
Bhagyam Ramasami,
Chayavanam,
Gokulam,
Jaya jaya sankara,
Jayakanthan,
Ka.sri.sri.,
Kadal pura,
Kanni madam,
Kaveriyin anbu,
Kumudam,
Malai vasal,
Malaimathi,
Manavar thalaivar appusami,
Manian,
Namma makkalu,
Olivatharku idamillai,
Oru manidhan oru veedu oru ulagam,
Oru nadigai natakam parkkiral,
Poovannan,
Ra.ki. rangarajan,
Raja mutthirai,
Rani muthu,
S.a.p. annamalai,
Sa. kandasami,
Saavi,
Sandilyan,
Sila nerangalil sila manitharkal,
V.s. khandekar,
Vikatan,
Washingtonil thirumanam,
Yavana rani,
Yayati |
[2] Comments
எனக்கு படிப்பதில் ஒரு பித்து ரொம்ப வருஷமாக இருக்கிறது. சாண்டில்யனை பற்றி எழுதியபோது இந்த பித்து எப்படி வளர்ந்தது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சரி நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று ஒரு சீரிசை ஆரம்பிக்கிறேன். முதலில் எழுபதுகள் நடுவில். என்னுடைய ஏழு வயதிலிருந்து பன்னிரண்டு வயது வரை.
சின்ன வயதில் நான் கிராமங்களில் வளர்ந்தவன். நான் வளர்ந்த கிராமங்களில் அரசு அமைப்புகள் என்றால் எலிமெண்டரி ஸ்கூல், ஹைஸ்கூல், மாட்டாஸ்பத்திரி (மனித ஆஸ்பத்திரிக்கு ஒரு பத்து மைல் போக வேண்டும், அதுவும் அரசு ஆஸ்பத்திரி கிடையாது), அப்புறம் லைப்ரரி. குக்கிராமம் என்றால் எலிமெண்டரி ஸ்கூல் மட்டும்தான் இருக்கும். எனக்கு அப்போதெல்லாம் நான் கிராமத்தில் இருக்கிறேன், குக்கிராமத்தில் இல்லை என்று ஒரு சின்ன பெருமை உண்டு.
அந்த கிராமத்து லைப்ரரிகளில் ஒரு ஆயிரம் ஆயிரத்தைநூறு புஸ்தகம் இருக்கும். புது புஸ்தகங்கள் எனக்கு தெரிந்து பத்து வருஷங்களில் வந்ததில்லை. பேப்பர் வரும். பத்திரிகைகள் வரும். ஒரு நூறு புஸ்தகம் சிறுவர் புஸ்தகம் ஆக இருக்கும்.
எனக்கு ஏழு வயது இருக்கும்போது என் அம்மா என்னை அந்த லைப்ரரியில் ஒரு மெம்பராக சேர்த்துவிட்டாள். நான் ஒன்றிரண்டு வருஷங்களில் அந்த சிறுவர் புஸ்தகங்களை முடித்துவிட்டேன். எனக்கு இன்னும் நினைவிருப்பவை வாண்டு மாமாவின் காட்டுச்சிறுவன் கந்தன், பூவண்ணனின் காவேரியின் அன்பு, அப்புறம் ஆலம் விழுது – ஸ்கூல் படிக்கும் பிள்ளைகள் குடும்ப நிர்வாகத்தை ஏற்று நடத்துவார்கள். இது கன்னடத்தில் நம்ம மக்களு என்று சினிமாவாகக் கூட வந்தது. (அதில் ஒரு அற்புதமான காட்சி – ஸ்கூலில் ராமாயணம் டிராமா. ராவணன் சீதையின் சுயம்வரத்துக்கு வருவான். தோளைத் தட்டி என்னை போல பலசாலி உண்டா என்று நாலு வரி பாடிவிட்டு பிறகு தெரியாத்தனமாக வில்லை எடுத்து உடைத்துவிடுவான். என்ன செய்வது என்று தெரியாமல் டீச்சர் திரை போட்டுவிட்டு பிறகு அது சும்மா முதல் ரவுண்ட், லுலுலாயி வில்தான், இதோ உண்மையான வில் என்று சமாளிப்பார்)
சரி எங்கெல்லாமோ போய்விட்டேன். நூறு புஸ்தகம் என்றால் படித்துவிடலாம். அவற்றை முடித்த பிறகு என்ன படிப்பது என்று தெரியவில்லை. முதல் வழிகாட்டி அம்மாதான். எட்டு வயதிலிருந்து ஒரு மூன்று நான்கு வருஷம் அம்மா கை காட்டிய சாண்டில்யன் புஸ்தகங்கள் எல்லாம் படித்தேன். சரித்திரப் பாடப் புத்தகத்தில் தெரிந்து கொண்டதைவிட சாண்டில்யன் மூலமாக தெரிந்து கொண்டது இன்னும் நினைவில் இருக்கிறது. அந்த வயதில் சாண்டில்யன் இளவரசிக்கு மேடு, காடு என்று எழுதினால் அதெல்லாம் புரியவில்லை. சாகசங்கள் – கடல் புறா, மலை வாசல், ராஜ முத்திரை, யவன ராணி – மட்டுமே மனதில் நின்றது.
ஆனால் ஒரு பத்து புத்தகம் படித்த பிறகு சாண்டில்யன் ஃபார்முலா பிடிபட்டுவிட்டது. ஒரு கற்பனையான அல்லது நிஜமான, சரித்திரத்தில் பெரிய இடம் பெறாத பாத்திரம்தான் ஹீரோ. யாராவது ஒரு mentor இருப்பார். ஹீரோயின் எப்போதும் 40-20-40 சைசில் இருப்பார். (இந்த சைசின் மகத்துவம் ஒரு பனிரண்டு வயது வாக்கில் புரிய ஆரம்பித்தது). நிறைய இயற்கை வர்ணனை இருக்கும். சுலபமாக அலுப்பு தட்டிவிட்டது.
அடுத்தபடி என் அம்மா படிக்க சொன்னது ஜெயகாந்தன். அந்த வயதில் எனக்கு போர் அடித்தது. அவர் கதைகளில் வருபவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். பாதி நேரம் ஆங்கிலத்திலேயே பேசிக் கொள்வார்கள். சில நேரங்களில் சில மனிதர்கள், சில பல சிறுகதைகள் எதுவும் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. ஆனால் ரொம்ப பிடித்திருப்பது போல (அம்மா எனக்கு ரசனை இல்லை என்று நினைத்துவிட்டால்?) பாவ்லா செய்து கொண்டிருந்தேன். முதல் முதலாக பிடித்தது அவர் ஜய ஜய சங்கர என்று எழுதிய ஒரு சீரிஸ்தான். இன்றும் நான் சி.நே.சி. மனிதர்கள், ஜ.ஜ. சங்கர தாண்டிப் போகவில்லை. என்றாவது ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படிக்க வேண்டும்.
அப்புறம் காண்டேகர். காண்டேகர் என்று சொல்லக் கூடாது, யயாதி என்றுதான் சொல்ல வேண்டும்.இப்போது யோசித்து பார்த்தால் யயாதி அந்த வயதுக்கு கொஞ்சம் அதிகப்படியோ என்று தோன்றுகிறது. மிகவும் பிடித்திருந்தது. கச்ச தேவயானியின் கதை, யயாதியின் தேடல், யதியின் தேடல், சர்மிஷ்டையின் தேடல் – எல்லாம் மிக அற்புதமாக வந்திருந்தன. அந்த வயதில் பாயிண்ட் ஆஃப் வ்யூ யயாதியிலிருந்து தேவயானியிலிருந்து சர்மிஷடக்கு மாறுவது மிக அற்புதமாக டெக்னிக் என்று தோன்றியது. காண்டேகரின் பிற புத்தகங்கள் எதுவும் அவ்வளவாக பிடிக்கவில்லை.
என் அம்மாவின் சிபாரிசுகளில் அற்புதமான புத்தகம் என்று நான் அப்போது நினைத்தது, இப்போதும் நினைப்பது சா. கந்தசாமியின் சாயாவனம்தான்.
அடுத்தபடி குமுதம், விகடனில் வரும் தொடர்கதைகளை ஒரு பத்து வயதில் படிக்க ஆரம்பித்தேன். ரா.கி. ரங்கராஜன், எஸ்.ஏ.பி. அண்ணாமலை ஆகியோர் பரவாயில்லை என்று தோன்றியது. மணியன் உலக மகா போர். பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி கதைகள் ஓரளவு பிடித்திருந்தது. தேடித் பிடித்து அப்போது படித்த புத்தகங்கள், ரா.கி. ரங்கராஜனின் ஒளிவதற்கு இடமில்லை, பாக்யம் ராமசாமியின் மாணவர் தலைவர் அப்புசாமி, சாவியின் வாஷிங்டனில் திருமணம். அம்மாவும் நானும் இவற்றை பற்றி பேசுவோம்.
என்னுடைய sources இவைதான் – கிராம நூலகங்கள், பாப்புலர் பத்திரிகைகளான குமுதம், விகடன், கோகுலம், உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் பத்திரிகைகலிருந்து கிழித்து பைண்ட் செய்யப்பட தொடர்கதைகள், இந்த கால கட்டத்தின் இறுதியில் வரத் தொடங்கின மாத நாவல்கள் (ராணி முத்து ரொம்ப நாளாக வந்துகொண்டிருந்தது. இப்போதுதான் மாலைமதி ஆரம்பித்தது.) எனக்கு மட்டுமல்ல, என் அம்மாவுக்கும் இவைதான் sources. எனக்கு தெரிந்த எல்லாருக்குமே இவைதான் sources. புத்தகங்களை வாங்கலாம் என்று எனக்கு தோன்றியது கூட இல்லை.
இன்றைக்கு நாஸ்டால்ஜியா, மற்றும் நல்ல புத்தகங்கள் என்று நான் இந்த காலத்தில் படித்த புத்தகங்களுள் சிபாரிசு செய்வது:
நல்ல புத்தகங்கள்:
1. சா. கந்தசாமியின் சாயாவனம்
2. வி. எஸ். காண்டேகரின் யயாதி
3. ஜெயகாந்தனின் ஜய ஜய சங்கர (4 மாத நாவல்கள், ஒரு சீரிஸ்)
4. ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் (இந்த வயதில் பிடிக்கவில்லை, ஓரளவு பெரியவன் ஆன பிறகு பிடித்திருந்தது)
இரண்டாம் பட்டியல்:
1. ரா.கி. ரங்கராஜனின் ஒளிவதற்கு இடமில்லை
2. பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி புத்தகங்கள் அப்புசாமியும் ஆயிரத்தொரு இரவுகளும்
3. பாக்கியம் ராமசாமியின் மாணவர் தலைவர் அப்புசாமி
4. பாக்கியம் ராமசாமியின் அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்
5. சாண்டில்யனின் யவன ராணி
6. சாண்டில்யனின் கடல் புறா
7. சாண்டில்யனின் ராஜ முத்திரை
8. சாண்டில்யனின் மலை வாசல்
9. சாண்டில்யனின் கன்னி மாடம்
10. சாவியின் வாஷிங்டனில் திருமணம்
நாஸ்டால்ஜியா:
1. வாண்டு மாமாவின் காட்டு சிறுவன் கந்தன்
2. பூவண்ணனின் காவேரியின் அன்பு
3. பூவண்ணனின் ஆலம் விழுது
ஐந்தாறு வருஷ படிப்புக்கு பதினேழு புஸ்தகம்தான் தேறுகிறது. வேண்டுமானால் இன்னும் சில சாண்டில்யன் கதைகள், எஸ்.ஏ.பி. அண்ணாமலை (கதை பெயர் எதுவும் ஞாபகம் வரவில்லை) சேர்த்துக் கொள்ளலாம்.
ஜூன் 4, 2009
Posted by RV under
Reading | குறிச்சொற்கள்:
Harry potter |
[2] Comments

Albus Dumbledore
If you are not a Harry Potter fan, this post probably won’t interest you.
Dumbledore was a great wizard. No question about that. He was the only one whom even Lord Voldemort feared. He defeated Grundelwald in a great duel. He had the elder wand. He inspired great loyalty among his followers. Even Snape, who probably was as talented as Dumbledore, was loyal to him.
However, how did he perform as the headmaster of Hogwarts? If you are among the governors of Hogwarts, how would you rate him? That’s what this post attempts to do.
The official picture of Dumbledore is that he is practically a saint, and a great Headmaster, who did a brilliant job of grooming young wizards and witches. Deathly Hallows does show that he has a manipulative side to him. I think that his brother Aberforth is the only person who has something to negative to say about him, even though he was against Voldemort.
However, for such a brilliant wizard, Dumbledore was hoodwinked several times.
1. Riddle, who unleashed the basilisk from the chamber of secrets was never caught by Dumbledore. I cannot understand how Dumbledore ever believed that Hagrid unleashed the basilisk. OK, perhaps we can say that he suspected Riddle, but didn’t have proof; and he didn’t think Hagrid was guilty, but couldn’t do much about it.
2. The Marauders learnt the tricks of becoming animagi during his headmastership, and he never suspected it. Rita Skeetter, who probably went to Hogwarts, was another unregistered animagus, though there is no evidence she learnt this when she was at school.
3. Quirrel had Voldermort under his turban for a whole school year, and Dumbledore never caught on. Dumbledore did ask Snape to keep an eye on Quirrel; but he clearly didn’t have any inkling that the greatest threat to wizards is right under his nose.
4. He never suspected the fake Mad-Eye Moody, despite being an old friend of Moody and being in close touch with the fake Moody for a year.
5. Umbridge almost got the better of him.
However, I cannot in all honesty blame him if somebody is actively trying to hookwink him. Dumbledore tended to trust people as a strategy, and if a few clever witches and wizards tricked him, many idolized him. So overall, it was a good strategy.
I see two major problems with his headmastership.
a. Several of his teacher appointments were very poor at teaching. Trelawney, Quirrel, Lockhart, Hagrid all are poor teachers. Trelawney’s appointment came through only because she made one “real” prediction. Of course, Lupin was excellent; Barty Crouch Jr. aka false Mad-Eye Moody was probably ok. Firenze and Slughorn were probably very good. Perhaps good wizard teachers were hard to find.
1. Why in the world did he give Professor Trelawney a job? He knows that she is a fraud – remember his remarks when Harry tells him about her prophecy on Voldemort coming back? Dumbledore then says that she has made two real predictions so far. Doesn’t he want his students to get a good education? How can he do that if he appoints people like Professor Trelawney?
2. Did he seriously think that Hagrid would make a good teacher? What was he smoking when he appointed him? The only good thing about this appointment is that Hagrid is better than Trelawney. Perhaps after a few years, after he overcomes his nerves, Hagrid may turn into a good teacher.
3. Snape is clearly a very biased teacher. Forget his antipathy towards Harry, he consistently favored Slytherins, and was harsh on Gryffyndors, especially Longbottom. Dumbledore needed Snape for the big plan and Snape is a great wizard – probably a great teacher too, but he didn’t want to teach everyone. Why didn’t Dumbledore do anything to deal with this overt bias?
4. It is difficult to understand how Quirrel was allowed to do whatever he wanted. How was Voldemort’s presence in the school not recognized? Quirrel is a known expert at handling of trolls. His fainting at the sight of a troll should have been investigated. If nothing else, Snape knew that Quirrel was trying to jinx Harry during his first quidditch game. Snape would have undoubtedly told Dumbledore. And Dumbledore allowed Quirrel to continue? Allowed a teacher who actively tried jinxing a student so that he would fall from a flying broom to continue? No questions? No suspicions?
b. He seems to let things drift. Whenever there is a problem in the school, he almost seems to feel that somebody would take care of it, and he should just let things be.
1. The chamber of secrets has been opened for the second time. Hermione, a brilliant but a second year student, figures out that there is a basilisk in the chamber of secrets. Dumbledore, with all his years of experience, and undoubted talent, cannot figure this out? If he did, why didn’t he warn the students to look into a mirror before turning corners?
2. Sirius Black is believed to have escaped to kill Harry. Black and Lupin were close friends. Lupin knows all about the Shrieking Shack-Whomping Willow route into Hogwarts. How come Dumbledore never told the dementors to keep an eye on the Shrieking Shack? At least, he could have got the dementors out of Hogwarts earlier.
3. The goblet of fire chooses four champions instead of three. And Dumbledore doesn’t do anything to find out how this happened!
There are several good points too. His tendency to give the students a long rope is a good thing. His tolerance – no, active encouragement of other “people” like centaurs, werewolves, free elves etc. would of course encourage a sense of tolerance among his students. He is a great example to his students. The bigger thing – the war against the second coming of Voldemort – may have made him focus less on his headmasterly duties.
If I were a governor, I would give him a B+. Although a great wizard, he doesn’t seem to be in control of the school, and doesn’t really try hard to fix problems that come up. His teacher appointments, overall, is a mixed bag.
ஜூன் 4, 2009
இரண்டு மூன்று முறை அபிவாதயே பற்றி குறிப்பிட்டிருந்தேன். அப்படி என்றால் என்ன என்று சேதுராமன் மறைந்த காஞ்சி மடாதிபதி சந்திரசேகரேந்திரர் – மஹா பெரியவர் என்று அழைக்கப்படுபவர் – அளித்த விளக்கத்தை அனுப்பி இருக்கிறார். அவருக்கு நன்றி!
நம் ஊரில் நிச்சயதார்த்த, கல்யாண நிகழ்ச்சிகளில் ஓலை வாசிக்கும்போது இன்னாரின் பேரனும், இன்னாரின் மகனும் ஆன மாப்பிள்ளையும் இன்னாரின் பேத்தியும் இன்னாரின் மகளும் ஆன பெண்ணும் என்று படிப்பார்கள். வட மாநிலங்களிலும், குறிப்பாக ஜாட் பிரிவினரிடம் ராம் சிங் வல்து தசரத் சிங் வல்து திலீப் சிங் (திலீப் சிங்கின் மகன் தசரத் சிங்கின் மகன் ராம் சிங் என்று அர்த்தம்) மாதிரி சொல்லிக் கொள்வதை கேட்கலாம். பத்திரங்களிலும் இப்படி எழுதுவது சகஜம். இங்கே இரண்டு மாற்றங்கள் – ஒன்று உடனடி மூதாதையரை விட, புராண கால மூதாதையரை அறிவிப்பது. அப்புறம் சாகை, சூத்ரம் (சூத்ரம் என்றால் என்ன என்று விளக்கத்தை படித்த பிறகும் சரியாக புரியவில்லை.) என்று இன்னும் விவரங்கள்.
அபிவாதனம் என்று முதலில் சொன்னேனே, அதன் வாசகத்தைப் பற்றிக் கொஞ்சம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுகிறேன்.
அபிவாதனம் சொல்வதில் முதலில் ஒருத்தன் என்ன கோத்திரமோ, அதை ஆரம்பித்து வைத்தவர்களான மூல ரிஷிகளின் பெயர்கள் வரும். இதற்கு ப்ரவரம் என்று பெயர். ரிஷி என்றால், வேதங்களில் அது வரை லோகத்துக்கு வந்திருக்காத ஒரு புது மந்திரத்தை அகண்ட ஆகாசத்திலிருந்து கண்டுபிடித்து லோகத்துக்குக் கொடுத்தவர். இப்படி ஒவ்வொரு கோத்ரத்திலும் மூலவர்களாக ஒன்றிலிருந்து ஐந்து வரை ரிஷிகள் இருந்திருக்கிறார்கள். அந்த ரிஷிகளிலும் யார் ரொம்ப முக்கியமானவரோ, அவர் பெயரிலேயே கோத்ரம் இருக்கும். ஆங்கீரச கோத்ரம் என்பது அந்த வம்ச ஆரம்பத்தில் வந்த முதல் ரிஷியான ஆங்கீரசர் பெயரில்
இருக்கிறது. கௌன்டின்ய கோத்ரம் என்பது அந்த வம்ச ஆரம்பத்தில் வந்த மூன்று ரிஷிகளில், மூன்றாமவரான கௌண்டின்யரின் பெயரில் இருக்கிறது. இதற்குச் சில விலக்கும் உண்டு. அந்த சமாசாரம் இப்போது வேண்டாம்.
ப்ரவரத்தில் சொல்கிற ரிஷிகளில் – பெரும்பாலான கோத்ரங்களில் மூன்று ரிஷிகளின் பெயர் வரும். அப்படிப்பட்ட ரிஷிகளில் – எவர் பெயரில் கோத்ரமிருந்தாலும், அந்த ரிஷிகளின் பரம்பரை க்ரமம், lineage, ஆதி முதலில் இருந்த ரிஷி, அப்புறம் அவருடைய பிள்ளை ரிஷி, அதற்கப்புறம் அந்தப் பிள்ளையின் பிள்ளை ரிஷி என்பதாகவே வரும். (பித்ரு தர்ப்பணத்திலோ இதற்கு மாறாக நம் வம்சத்தில் முடிவாக நமக்கு முன்னால் வந்த மூன்று பேரைச் சொல்லி அவர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது: அதிலும் கடைசி கடைசியாய் வந்த அப்பாவில் ஆரம்பித்து, அப்புறம் அவருடைய அப்பா, அதற்கப்புறம் அவருக்கும் அப்பா என்று வரிசைப்படுத்திக் கொடுக்கிறது) கல்யாணங்களில் கன கோஷமாக ப்ரவ்ரம் சொல்கிறது வழக்கம். வதூ-வரர் என்ற கல்யாணப் பெண்ணும் பிள்ளையும் சகோத்ரமாக இல்லாமல் வெவ்வேறு கோத்ரத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டுமென்பது முக்கியமான விதியாதலால், அந்த விதியை அனுசரித்தே ஒரு விவாஹம் நடக்கிறது என்று சபைக்கு ப்ரகடனம் செய்யும் உத்தேசத்துடன் இப்படி கன கோஷமாக ப்ரவரம் சொல்லுவது. அதன்போது, அபிவாதனத்தில் சொல்லுவது, தர்ப்பணத்தில் சொல்லுவது ஆகிய இரண்டையும் சேர்த்துச் சொல்லுவார்கள். முதலில் அபிவாதனத்தில் அதே வரிசைக் கிரமத்தில் ஆதி முதல் ரிஷி, அவர் பிள்ளை, பேரர் என்று கோத்ரத்தைத் தெரிவிப்பார்கள். அப்புறம் பித்ருக்களின் வரிசை, ஆனால் அப்பா – தாத்தா – கொள்ளுத் தாத்தா என்று தர்ப்பணத்தில் சொல்லுகிற கிரமத்தை இங்கு மாற்றி கொள்ளுத்தாத்தா – தாத்தா-
அப்பா என்று சொல்லுவார்கள்.
அபிவாதனத்தில் முதலில் மூல ரிஷிகளின் பெயர்கள் வரும் என்பது தான் இங்கே முக்கிய விஷயம். அப்புறம் அந்த கோத்ரப் பெயரும், அப்புறம் கர்மாக்களை வகை தொகைப் படுத்திக் கொடுக்கும் ஸூத்ரங்களில் இவன் எதைச் சேர்ந்தவனோ அதன் பெயரும், அப்புறம் நாலு வேதங்களில் இவன் எதைச் சேர்ந்தவனோ அதன் பெயரும் வரும். அந்த வேத சாகையைத்தான் அத்யயனம் பண்ணுவதாக வரும் (இந்தக்
காலத்தில் பண்ண வேண்டியவன் என்று வைத்துக் கொள்ளலாம்!) – முடிவாகத் தன் பெயரைச் சொல்லி போ (Bhoh) – அதாவது ‘பெரியவரே’ , ‘ஐயனே’ என்று நமஸ்கரிக்கப்படுபவரைக் கூப்பிட்டு நமஸ்காரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இன்ன ரிஷிகளைக் கொண்ட, இன்ன கோத்ரக்காரன், இன்ன ஸூத்ரக்காரன், இன்ன வேத சாகையை அத்யயனம் பண்ணும் இன்ன பெயருள்ளவனாக இருக்கிறேன் ஐயா!’ என்று மொத்தத்தில் அர்த்தம் கொடுக்கும்.
இப்பேர்ப்பட்ட குடியின் வழித்தோன்றலாக, இன்ன பெயர் கொண்ட நான் இருக்கிறேன், என்பதாகக் குடியைச் சொன்ன பிறகு, தன்னுடைய பெயரை ஒருத்தன் சொல்லுவதாக அபிவாதனத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் – இத்தனைக்கும் ஆரம்பம் – ‘அபிவாதயே’ – சரி வரச் சொல்லுகிறேன், அதாவது அறிமுகம் பண்ணிக் கொள்கிறேன் என்று நேர் அர்த்தம் – தங்களுடைய ஆசீர்வசனத்தை (மறுமொழியை) வேண்டிச் சொல்கிறேன் என்று நீட்டி அர்த்தம் சொல்லுவதுண்டு.
ஸன்யாசிகளுக்கு அபிவாதனம் சொல்லக் கூடாது. கோயில்களிலும், வீட்டுப் பூஜைகளிலும் நமஸ்கரிக்கிறபோது அபிவாதயே சொல்லக் கூடாது. சபைக்கு நமஸ்காரம் செய்யும்போதும் அபிவாதயே கிடையாது. ஸ்த்ரீகளில், தாயாரைத் தவிர, மற்றவர்களுக்கு அபிவாதனம் இல்லாமலேதான் நமஸ்காரம்.
(தெய்வத்தின் குரல் – ஏழாம் பகுதி (கடைசிப் பகுதி) – தொகுப்பு ரா. கணபதி – வானதி பதிப்பகம் – 2000)
தொடர்புடைய சில முந்தைய பதிவுகள்:
அதர்வ வேதம் பற்றி சந்திரசேகரேந்திரர்
அதர்வ வேதம்
விஸ்வாமித்ர கோத்ரம்
ஜூன் 3, 2009

சந்திரசேகரேந்திரர்
அதர்வ(ண) வேதம் ஓதும் பாரம்பரியம்(சாகை) உள்ள குடும்பங்கள் இப்போது எதுவுமே இல்லையா என்று ஒரு பதிவில் கேட்டிருந்தேன். மறுமொழி இட்ட பலர் மஹா பெரியவர் என்று அழைக்கப்படும் மறைந்த காஞ்சி மடாதிபதி சந்திரசேகரேந்திரர் இதை ஓதுவதை மீண்டும் வழக்கத்துக்கு கொண்டு வர பெரும் முயற்சி எடுத்துக்கொண்டார் என்றும் இதை பற்றிய விவரங்களை தெய்வத்தின் குரல் புத்தகத்தில் காணலாம் என்றும் சொன்னார்கள்.
நான் தடி தடி புத்தகங்களை கண்டால் காத தூரம் ஓடுபவன். அதுவும் இது நாலைந்து வால்யூம் என்று ஞாபகம். வழக்கம் போல சேதுராமன் உதவிக்கு வந்திருக்கிறார். அந்த புத்தகத்திலிருந்து அதர்வ(ண) வேதம் பற்றி சில பகுதிகளை கீழே தந்திருக்கிறார்.
அதர்வன் என்றால் புரோஹிதர் என்று அர்த்தம். அந்தப் பெயரிலேயே ஒரு ரிஷி இருந்தார். அதர்வா என்ற அந்த ரிஷியின் மூலம் பிரகாசமானது அதர்வ வேதம். அதிலே பல விதமான ஆபத்துக்களைப் போக்கிக் கொள்வதற்கும் சத்துருக்களை அழிப்பதற்கும் மந்திரங்கள் இருக்கின்றன. ப்ரோஸ் பொயட்ரி இரண்டும் கலந்து இருக்கின்றன. மற்ற வேத மந்திரங்களுக்கும் இந்தப் பிரயோஜனம் உண்டு. ஆனால் மற்ற வேதங்களில் இல்லாத அனேக தேவதைகள், இன்னம் கோரமான பல வித ஆவிகள் இவற்றைக் குறித்தும் மந்திரங்கள் அதர்வத்தில்தான் இருக்கின்றன. மாந்திரீகம் என்று இப்போது சொல்கிற அனேக விஷயங்கள் அதர்வ வேதத்திலிருந்து வந்தவைதான்.
ரொம்ப உயர்ந்த தத்துவங்களைக் கொண்ட மந்திரங்களும் அதர்வத்தில் இருக்கின்றன. லோகத்தில் இருக்கப்பட்ட ஸ்ருஷ்டி விசித்திரத்தையெல்லாம் கொண்டாடுகிற ப்ருத்வீ ஸூக்தம் இந்த வேதத்தில்தான் வருகிறது.
யக்ஞத்தை மேற்பார்வை இடுகிற பிரம்மாவை அதர்வ வேதத்திற்குப் பிரதிநிதியாகச் சொல்லியிருப்பது இதற்கு ஒரு பெருமை. இதன் சம்ஹிதா பாகத்தின் அத்யயனம் வடக்கே ரொம்ப ரொம்பத் தேய்ந்து போய் தெற்கே அடியோடு இல்லாமல் போய்விட்டாலும், பிரசித்தமான பத்து உபநிஷத்துக்களுக்குள் பிரச்னம், முண்டகம், மாண்டூக்யம் என்ற மூன்று உபநிஷத்துக்கள் அதர்வ வேதத்தைச் சேர்ந்தனவாகவே உள்ளன.
முமுக்ஷுவானவன் (ஞான ஸாதகன்) மோக்ஷம் பெறுவதற்கு மாண்டூக்ய உபநிஷத் ஒன்றே போதும் என்ற வசனம் இருக்கின்றது. அப்படிப்பட்ட உபநிஷத் அதர்வத்தைச் சேர்ந்ததாகவே இருக்கிறது.
பிற்காலத்தில் அதர்வ அத்யயனம் விட்டுப் போனாலும், நீண்ட காலம் அது வழக்கில் இருந்திருக்கிறது என்பது கல்வெட்டுக்களிலிருந்து தெரிகிறது. திண்டிவனத்திற்குப் பக்கத்தில் பேரணிக்குக் கிட்டே எண்ணாயிரம் என்ற ஊரிலும், காஞ்சீபுரத்திற்குப் பக்கத்திலுள்ள வாலாஜாபாத் சமீபத்திலேயும் கிடைத்திருக்கிற கல்வெட்டுக்களில், ஆங்காங்கே இருந்த பெரிய வித்தியாசாலைகளைப் பற்றித் தகவல்கள் இருக்கின்றன. இவற்றைப் பார்த்தால் பிற்காலச் சோழர் ஆட்சிக் காலத்திலும் கூடத் தமிழ் தேசத்தில் அதர்வ வேத அத்யயனம் இருந்திருக்கின்றது என்று தெரிகிறது.
வடக்கே ஒரிசாவில் இருக்கும் பிராமணர்களில் பதினெட்டுப் பிரிவுகள் உள்ளன. அவர்களில் ஆதர்வணிகர் என்றே ஒரு பிரிவுக்குப் பெயர். அதர்வ வேதிகள் என்பதே இதற்கு அர்த்தம். இப்போதும் குஜராத், சௌராஷ்டிரம், கோசலம் முதலான தேசங்களில் ரொம்பவும் அபூர்வமாக அதர்வ வேதிகள் இருக்கிறார்கள்.
(ஸ்ரீ பெரியவர்கள் மேற்கொண்ட முயற்சிகளால் அதர்வ வேத அத்யயனம் மீண்டும் பொலிவு பெற வாய்ப்புள்ளது. தமிழக வித்தியார்த்திகளும் குஜராத்தில் உள்ள ஸினோருக்குச் சென்று அதர்வ வேதப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.)
தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி 1978 – தொகுப்பாசிரியர் ரா.கணபதி வானதி பதிப்பகம் சென்னை)
அவரும் அதர்வ வேதம் என்றே குறிப்பிடுகிறார். சிறு வயதில் நான் படித்த பாடப் புத்தகத்தின் தவறோ, இல்லை என் ஞாபகத்தின் தவறோ, எனக்கு அதர்வண வேதம் என்றுதான் படித்தாற்போல இருக்கிறது. வேதங்களை பற்றி அவரை விட எனக்கு எந்நாளும் தெரியப்போவதில்லை, அதனால் நானும் உஜாலாவுக்கு மாறிவிடுகிறேன். இனி மேல் அதர்வ வேதம் என்றே எழுதுகிறேன்.
ஜூன் 3, 2009
Posted by RV under
Reading | குறிச்சொற்கள்:
Annals and antiquities of Rajasthan,
Avani sundari,
Cheran selvi,
Chittoor v. nagaiya,
Col. todd,
En veedu,
Jala dheepam,
Jala mohini,
Jeeva bhoomi,
Kadal pura,
Kanhoji angre,
Kanni madam,
Kavarntha kangal,
Kumudam,
Malai vasal,
Manjal aaru,
Mannan Magal,
Moongil kottai,
Naga dheepam,
Nila mangai,
Pallava thilagam,
Pandian bhavani,
Porattangal,
Raja mutthirai,
Raja yogam,
Rana hameer,
Randor guy,
Sandilyan,
Sathyamoorthi,
Skandha gupta,
Thandivarman,
Thuravi,
Toramana,
Vandu mama,
Yavana rani |
[4] Comments
நாட்டுடமை சீரிஸின் வேர்ப்பதிவு இங்கே.
சேதுராமன் எழுதிய முதல் பகுதி இங்கே.
சாண்டில்யன் வாரிசுகள் நாட்டுடமை வேண்டாம் என்று நிராகரித்துவிட்டார்களாம். ராயல்டியே இன்னும் நிறைய வந்துகொண்டிருக்கும் என்று நினைக்கிறேன்.
சாண்டில்யன் என் வாழ்க்கையில் இரண்டாவது ஸ்டார் எழுத்தாளர். (முதல்வர் வாண்டு மாமா). ஒன்பது பத்து வயதில் அவர் புத்தகங்கள் – கடல் புறா, யவன ராணி, மலை வாசல், ராஜ முத்திரை போன்றவை – மிகவும் த்ரில்லிங்காக இருந்தன. கிருஷ்ணமூர்த்தி சொன்ன மாதிரி இந்திய சரித்திரத்தின் சில பகுதிகளை அவர் மிகவும் கவர்ச்சிகரமாக அறிமுகம் செய்து வைத்தார். எனக்கு இன்றும் ஸ்கந்த குப்தனை பற்றி தெரிந்ததெல்லாம் மலை வாசல் புத்தகத்தில் படித்ததுதான். ஹூணர்கள், ராஜபுதனம், கனோஜி ஆங்க்ரே பற்றி முதலில் தெரிந்து கொண்டதெல்லாம் சாண்டில்யனின் கதைகள் மூலம்தான்.
ஆனால் சீக்கிரத்திலேயே அலுத்துவிட்டார். ஒரே ஃபார்முலா வைத்து எழுதுவார். என் கருத்தில் அவர் நாவல்களை இன்னும் ஒன்றிரண்டு ஜெனரேஷன்களில் மறந்துவிடுவார்கள்.
அவரது சரித்திர நாவல்கள் தமிழ் நாட்டில் மிக பாப்புலராக இருந்தன. குமுதம் பல வருஷங்களாக அவரது சரித்திர நாவல்களை தொடர்கதையாக வெளியிட்டது. யவன ராணி, கடல் புறா ஆகியவை அவரது மாஸ்டர்பீஸ்கள் என கருதப்படுகின்றன. அவருக்கு வால்டர் ஸ்காட், டூமாஸ் ஆகியோரை விட ரஃபேல் சபாடினி போன்றவர்கள்தான் ரோல் மாடல் என்று நினைக்கிறேன். அவருடைய நாவல்களில் பேச்சு இருக்கிற அளவுக்கு ஆக்ஷன் இருக்காது. உதாரணமாக மன்னன் மகள் நாவலில் முக்கால் நாவல் முடிந்த பிறகுதான் கதை நகரவே ஆரம்பிக்கும.
சாண்டில்யனின் பெரிய குறையே வளவள என்று எழுதிக் கொண்டே போவதுதான். பேப்பருக்கு பிடித்த கேடு. ஒவ்வொரு சாப்டரிலும் போன சாப்டரில் என்ன நடந்தது என்று ஒரு சுருக்கத்தோடு ஆரம்பிப்பார். பத்திரிகையில் தொடர்கதையாக படிக்கும்போது அது உபயோகமாக இருக்கலாம். நாவலாக படிக்கும்போது எரிச்சல் ஊட்டுகிறது. இயற்கை வர்ணனை, ஹீரோயின் வர்ணனை ஆகியவற்றை எடுத்துவிட்டால் புத்தக கனம் பாதியாக குறைந்துவிடும்.
சமயத்தில் அவர் சரித்திரத்தை மாற்றவும் தயங்குவதில்லை. பல்லவ அரசனான தந்திவர்மன் ராஷ்டிரகூடர்களால் தோற்கடிக்கப்பட்டான். பல்லவ திலகம் கதையில் தந்திவர்மன் ஹீரோ. ஹீரோ தோற்கக் கூடாது, அதனால் அவர் ராஷ்டிரகூடர்களை வெல்வான். பிறகு நான் வென்றாலும் உன்னிடம் தோல்வியை ஒத்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிடுவான்.
சாண்டில்யனின் புத்தகங்களில் யவன ராணி, கடல் புறா, மலை வாசல், ராஜ முத்திரை, கன்னி மாடம் ஆகியவை சுவாரசியமானவை. ஜல தீபம் (இரண்டாம் பாகம் சுத்த வேஸ்ட் – இந்த பகுதி பூராவும் ஒரு வெள்ளைக்காரி ஹீரோவை மயக்க முயற்சிப்பாள், அவ்வளவுதான்), ஜீவ பூமி, அவனி சுந்தரி, பல்லவ திலகம், மூங்கில் கோட்டை, ஜல மோகினி, கவர்ந்த கண்கள், மஞ்சள் ஆறு, ஆகியவை படிக்கலாம். பாண்டியன் பவனி, ராஜ யோகம், நில மங்கை, சேரன் செல்வி, ராணா ஹமீர், துறவி, நாக தீபம் போன்றவை எல்லாம் வேஸ்ட்.
அவரது முதல் சமூக நாவலான பலாத்காரம் (புரட்சிப் பெண்) மிக அமெச்சூர்தனமாக எழுதப்பட்டது. அந்த நாவலின் ஒரே ஆச்சரியம் சத்தியமூர்த்தி இதை எப்படி இவ்வளவு சிலாகித்து ஒரு முன்னுரை எழுதினர் என்பதுதான். அவரது ராஜஸ்தானிய நாவல்கள் பல கொடுமையாக இருக்கும். கர்னல் டாட் எழுதிய Annals and Antiquities of Rajasthanஇலிருந்து ஒரு வரி எடுத்துக் கொள்வார். அதை வைத்து ஒரு நூறு பக்கத்துக்கு ஒரு கதை எழுதுவார்.
ராஜ யோகம், நில மங்கை, சேரன் செல்வி என்ற மூன்றும் ஒரு trilogy மாதிரி வந்தது என்று நினைவு. இப்படி எழுதுவது தமிழில் அபூர்வம்.
அவரது போராட்டங்கள் என்ற சுய வாழ்க்கை வரலாற்றை எல்லாருக்கும் சிபாரிசு செய்கிறேன். மிக அற்புதமான memoirs. அதில் அவர் என் வீடு திரைப்படத்தை பற்றி மிகவும் உருகி உருகி எழுதி இருப்பார். ராண்டார்கை இதை பற்றி எழுதி இருப்பது இங்கே. ராண்டார்கை அவரது நெருங்கிய நண்பர் சித்தூர் நாகையாவை பற்றி எழுதிய இந்த கட்டுரையில் அவரும் நாகையாவும் பிற்காலத்தில் சந்தித்த ஒரு நிகழ்ச்சியை பற்றி உருக்கமாக எழுதி இருக்கிறார்.
நெட்டில் கடல் புறாவை ஒருவர போட்டுக் கொண்டிருக்கிறார் – இங்கே.
விக்னேஸ்வரன் என்பவர் சில சாண்டில்யன் நாவல்களுக்கு விமர்சனங்கள் எழுதி இருக்கிறார். விலை ராணி, கடல் புறா, மன்னன் மகள், ராஜ யோகம் ஆகியவற்றுக்கான விமர்சனங்கள் கிடைக்கின்றன.
என் கண்ணில் சாண்டில்யனின் புத்தகங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை இல்லை. சுமாரான இலக்கியத் தரம்தான். தமிழ் உரைநடை வரலாற்றில் அவர் ஒரு footnote மட்டுமே. ஆனால் அவர் ஒரு கால கட்டத்தின் பிரதிநிதி. அவர் மூலமாக நான் கற்றுக் கொண்ட சரித்திரம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. இந்த முறை வந்த லிஸ்டில் பலரை விட அவர் சிறந்த தெரிவுதான்.
ஜூன் 1, 2009
Posted by RV under
Reading | குறிச்சொற்கள்:
Chittoor v. nagaiya,
En veedu,
Kadal pura,
Kalki,
Kanni madam,
Kumudam,
Mannan Magal,
Raja yogam,
Randor guy,
Sandilyan,
Sethuraman,
Thiru.vi.ka.,
Ve. saminatha sarma,
Vigneswaran,
Vikatan,
Vilai rani,
Yavana rani |
[23] Comments
-
-
சாண்டில்யன்
-
-
கடல் புறா
-
-
என் வீடு
சேதுராமனின் தொடரும் அறிமுகங்கள்.
நாட்டுடமை சீரிஸின் வேர்ப்பதிவு இங்கே.
*** சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாணவிகள் என்னைப் பார்க்க வந்தார்கள். நான் மாடியில் இருந்தேன். என் பெண்கள் அவர்களை ‘மேலே இருக்கிறார், போங்கள்” என்று அனுப்பி வைத்தனர். மாடிக்கு வந்த மாணவிகள் என்னைப் பார்த்து “சாண்டில்யனைப் பார்க்க வந்தோம்” என்றனர். “என்ன வேண்டும்” என்று கேட்டேன் — மாணவிகள் பரஸ்பரம் பார்த்துக் கொண்டார்கள், சற்றுக் குழம்பினார்கள் – ‘இல்லை, அவரைப் பார்த்துத்தான் பேச வந்தோம்” என்றனர். நான் என்ன பதில் சொல்ல? நான், கதை எழுதும் சாண்டில்யனாக இருக்க முடியாது என்ற தீர்மானத்திற்கு, அவர்கள் வந்ததற்குக் காரணமும் இருந்தது. யவன ராணியையும், கடல் புறாவையும் படித்துவிட்டு அவற்றைப் பற்றி சந்தேகம் கேட்க வந்தவர்கள் நெற்றியில் நாமத்தைப் போட்டுக்கொண்டு, எட்டு முழம் வேட்டி இடையில் கட்டி, மேலே ஒரு மூன்று முழத்துண்டுடன் உட்கார்ந்திருந்தவனைப் பார்த்தால் அந்தக் கதைகளுக்கு ஆசிரியன் இவன்தான் என்று எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?
நானும் மெல்ல வெட்கத்தை விட்டு மெல்லப் புன்முறுவல் கொண்டு “நான்தான் சாண்டில்யன், என்ன வேண்டும்”? என்று அறிமுகம் செய்து கொண்டேன். நீங்களா? வியப்பு அவர்கள் முகத்தில் நன்றாகக் காட்சி அளித்தது. ‘ஆம் நானேதான்” – “எப்படியெப்படியோ கதை எழுதுகிறீர்களே” என்றாள் அந்த மாணவி – “என்ன செய்வது, அப்படித்தான் எழுத வருகிறது” – “உங்கள் வர்ணனை தான்…” என்று மாணவி தொடங்கினாள். இப்போது மற்ற மூவர் மௌனமும் ஆரம்ப அதிர்ச்சியும் கலைந்தன – இன்னொரு மாணவி, முதல்வளின் சொற்களைப் பாதியில் வெட்டி ‘தத்ரூபமாயிருக்கிறது” என்று பாராட்டினாள். (போராட்டங்கள் என்ற தன் சுய சரிதையில், நாவலாசிரியர் சாண்டில்யன்) ***
தமிழ் நாடு திருக்கோயிலூரில், திரு. இராமானுஜம் ஐயங்கார், திருமதி பூங்கோவில்வல்லி தம்பதிகளுக்கு ஒரே மகனாக, 1910ம் வருஷம் நவம்பர் மாதம் 10 தேதி பிறந்தவர் சாண்டில்யன். பெற்றோர் இட்ட பெயர் பாஷ்யம். குடும்பத்தினருடைய சொந்த ஊர் மாயவரம் அருகேயுள்ள திரு இந்தளூர் என்ற கிராமம்.
இளமைக்கல்வி, நன்னிலம் பண்ணைனல்லூர் திண்ணைப் பள்ளியிலும், பிறகு சென்னை பச்சையப்பன் பள்ளி, சைதாப்பேட்டை மாடல் பள்ளியிலும் தொடர்ந்தது. கல்லூரிக் கல்வி திருச்சி செயின்ட் ஜோசஃப் காலேஜில். திருச்சி கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது 1930ல் ராஜாஜியின் விஜயம் இவரை சட்டமறுப்பு இயக்கத்தில் ஈர்த்தது. தந்தைக்கு ஒரே மகன் என்ற காரணத்தால், சத்தியாக்கிரகத்தில் ஈடுபட வேண்டாம், நிர்மாணப் பணியில் ஈடுபடுங்கள் என்ற ராஜாஜியின் அறிவுரை, இவரைக் காங்கிரஸ் கட்சியில் அங்கத்தினராக்கியது. துயிலி வேஷ்டியையும், பாப்ளின் சட்டையையும், கதருக்கு மாற்றிக்கொண்டார்.
கல்லூரியில் படிக்கும்போதே 1929ம் வருஷம் ஸ்ரீரங்கம் சடகோபாச்சாரியாரின் மகள் ரங்க நாயகியை மணம் புரிந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் சென்னை தியாகராய நகரில் வாசம் தொடங்கியது. இவர் வீட்டுக்கெதிரில் ராமசாமி தெருவில், கல்கியும், சற்றுத் தள்ளி உஸ்மான் ரோடில் வெங்களத்தூர் சாமினாத சர்மாவும் வசித்து வந்தனர். சர்மா அப்போது திரு.வி.க. அவர்களின் நவசக்தியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர்களின் நட்பு சாண்டில்யனின் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. நகைச்சுவையுடன் பேசும் பழக்கத்தைக் கொண்டிருந்த சாண்டில்யனை ஏதாவது கதை எழுதலாமே என்று ஊக்குவித்த போதிலும், எனக்கு எழுத வராது என்று இவர் மறுத்து விட்டார். இந்த சால்ஜாப்பு அவர்களது இன்னொரு நண்பரும் திராவிடன் என்ற பத்திரிகையின் ஆசிரியருமான தோழர் சுப்பிரமணியத்திடம் எடுபடவில்லை. அவரது கட்டாயத்தின் பேரில் சாந்த சீலன் என்ற காங்கிரஸ் பின்னணி கொண்ட ஒரு கதை எழுதிப் பிரசுரமும் ஆனது. அக்கதை கல்கிக்கும் பிடித்துப் போகவே, இவரை எழுதச் சொல்லி கண்ணம்மாவின் காதல், அதிர்ஷ்டம் முதலிய கதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார் கல்கி.
ஆரம்ப முதல் சம்ஸ்கிருதமே படித்திருந்தவருக்கு, தமிழின் இந்த ருசி பிடித்துப் போயிற்று. முப்பதிலிருந்து ஒரு நான்கு வருஷங்கள் திருக்கண்ணபுரம் ஸ்ரீனிவாசாச்சாரியார் என்ற வித்துவானிடம் தமிழ் பயில ஆரம்பித்து, திருவாய் மொழி ஆயிரமும், நம்பிள்ளையின் முப்பத்து ஆறாயிரப்படி வியாக்கியானத்துடன் மற்றும் பல தமிழ்க் காப்பியங்களையும் கற்றார்.
சுதேசமித்திரன் வாரப்பதிப்பிலும் சிறுகதைகள் எழுதி வந்த சாண்டில்யனுக்கு பத்திரிகையில் சேர வாய்ப்பு கிடைத்தது. 1935ம் வருடத்திலிருந்து 1942ம் வருடம் வரை, சுதேசமித்திரன் பத்திரிகையில் நிருபரானார். நாற்பத்து மூன்றில் ஆசிரியர் சி.ஆர்.ஸ்ரீனிவாசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், நிருபர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஹிந்துஸ்தான் டைம்சில் துணை ஆசிரியரானார். அந்த நேரம், சண்டே டைம்சின் ஆசிரியரான திரு கே.ஆர்.நாராயணன் இவரை, வாகினி பி.என்.ரெட்டிக்கும், சித்தூர் வி.நாகையாவுக்கும் அறிமுகம் செய்து வைத்த பின், சினிமா உலகிலும் பிரவேசித்து, திரைக் கதை எழுதத் தொடங்கினார். ஸ்வர்க சீமா, என் வீடு என்ற படங்களின் திரைக் கதைகளின் உருவாக்கத்தில் இவருக்குப் பங்கிருந்தது. தொடர்ந்து நாகையாவின் ரேணுகா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான வித்துவானாக மாறினார்.
அஹிம்சைக் கொள்கைக்கும், பலாத்காரத்துக்குமுள்ள வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டும், சத்தியாக்கிரக இயக்கத்தைப் பின்னணியாக வைத்தும், இவர் எழுதிய பலாத்காரம்தான் தமிழகத்தின் முதல் அரசியல் நாவலாகும். சத்தியமூர்த்தியின் முகவுரையுடன், சொந்த செலவில் தானே அந்தப் புத்தகத்தைப் பிரசுரம் செய்தார்.
மித்திரன் ஸ்ரீனிவாசன் இவரைத் திரும்ப அழைத்ததும், மித்திரனில் சேர்ந்தவர், அப்பத்திரிகையின் விசேஷப் பகுதிகள் அனைத்தையும் திருத்தி அமைத்து, மித்திரனின் வாசகர் வட்டத்தையும், சர்குலேஷனையும் அதிகரித்துக் காட்டினார். சி.ஆர்.எஸ். இவரை வெளியிலும் எழுதலாம் என்று அனுமதித்த பிறகு, அமுதசுரபியில் தன் கதைகளை வெளியிடலானார். பாலைவனத்துப் புஷபம், சந்த தீபம் என்ற இரு சரித்திரக்கதைகளுக்குப் பிறகு, வே.லக்ஷ்மணனின் விருப்பத்தின் பேரில் ஜீவ பூமி என்ற தொடர்கதையையும் எழுதினார்.
பத்திரிகைக்காரர்கள் சம்மேளனத்துக்கு இவர் செய்த பணிகள் குறிப்பிடத்தக்கவை. பெரிய வித்துவான்கள் பாட்டுக்கச்சேரிகள் வைத்து, சம்மேளனக் கட்டடத்திற்குப் பணம் திரட்டினார். பத்திரிகையாளர் சங்கத்தை தொழிற்சங்கமாக மாற்ற இவர் எடுத்த முயற்சிகள் இனிப்பையும் கசப்பையும் கலந்தே ஈர்த்தன. பத்திரிகைத் தொழில் பற்றி இவர் எடுத்த முதல் செய்திப் படம் Birth of a Newspaper எல்லோரது பாராட்டையும் பெற்றது. தியாகப்பிரம்ம சபா, கிருஷ்ண கான சபா என்ற இரு சங்கீத சபாக்களின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் இவருக்குப் பெரும்பங்கு உண்டு.
தான் சரியென்று நினைத்ததை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற இவரது மனப்பான்மை, பல முன்னாள் நண்பர்களின் மனக்கசப்புக்குள்ளாகியது. இவர் எழுதிய சினிமா/நாடக விமர்சனங்களாலும், சர்ச்சைகள் உண்டாகியன. ராஜாஜியின் பரம பக்தராக இருந்தவர், ராஜாஜியின் 1952 சினிமா எதிர்ப்புக் கொள்கையைக் கடுமையாகவே விமர்சித்தார். கல்கி, கி.வா.ஜ., ஆர்.வி., டி.கே.ஷண்முகம் போன்றோரும் இதில் உள்ளடங்குவர்.
இவரது குடும்பத்தினர் – இரு பிள்ளைகள் – பேராசிரியர் சடகோபன், பேராசிரியர் கிருஷ்ணன். ஐந்து பெண்கள் – வேதவல்லி, புஷ்பவல்லி, விஜயவல்லி, பத்மா, லக்ஷ்மி.
இவரது படைப்புகள் விவரம் வருமாறு:
இலக்கியத் திறனாய்வு – கம்பன் கண்ட பெண்கள் – திருப்பாவை விளக்க உரை
வாழ்க்கை வரலாறு – ஸ்ரீ இராமானுஜர் – போராட்டங்கள் (சாண்டில்யனின் சுய சரிதை)
சிறுகதைத் தொகுப்பு – ராணியின் கனவு
சமூக நாவல்கள் – புரட்சிப்பெண் (பலாத்காரத்தின் மறுபதிப்பு) – செண்பகத் தோட்டம் – மனமோகம் – நங்கூரம் – மதுமலர்
சரித்திர நாவல்கள் – கடல் புறா (மூன்று பாகங்கள்) – ஜல தீபம் (மூன்று பாகங்கள்) – யவன ராணி (இரண்டு பாகங்கள்) – ராஜ பேரிகை – ராஜ திலகம் – கன்னி மாடம் – மன்னன் மகள் – சேரன் செல்வி – கவர்ந்த கண்கள் – மலை வாசல் – ஜீவ பூமி- மஞ்சள் ஆறு – மூங்கில் கோட்டை – சித்தரஞ்சனி – மோகினி வனம் – இந்திர குமாரி – இளைய ராணி – நீள் விழி – பல்லவ திலகம் – நாக தீபம் – உதய பானு – அவனி சுந்தரி – மங்கல தேவி – நிலமங்கை – ஜலமோகினி – ராஜ முத்திரை (இரு பாகங்கள்) – கடல் ராணி – மலை அரசி – மோகனச் சிலை – ராஜ யோகம் – ராணா ஹமீர் – நீலவல்லி – நாக தேவி – விலை ராணி – சந்திரமதி – பாண்டியன் பவனி – ராஜ்யஸ்ரீ – வசந்த காலம் – விஜயமஹாதேவி
தகவல் ஆதாரம்:
1. மது.ச.விமலானந்தம் எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு’ 1987 -
2. போராட்டங்கள் (சாண்டில்யனின் சுய சரிதை – முற்றுப் பெறாதது)
3. பேராசிரியர் சடகோபன் (நேர் காணல்)
4. வானதி பதிப்பகம் பட்டியல்
5. வலைத்தளக் கட்டுரைகள்
ஆர்வி: பதிவு கொஞ்சம் பெரியதாக இருப்பதால் என் கருத்துகளை இன்னொரு பதிவாக எழுதி இருக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டுடமை சீரிஸ்
தொடர்புடைய பதிவுகள்:
சாண்டில்யனைப் பற்றி ஒரு அலசல்
நாட்டுடமை சீரிஸின் வேர்ப்பதிவு
37.523851
-122.047324
« முந்தைய பக்கம்