“அவார்டா கொடுக்கறாங்க?” எங்களுடைய இன்னொரு ப்ளாக். நாங்கள் சினிமா பற்றி இங்கே எழுதுகிறோம். பொதுவாக பழைய சினிமா பற்றி, அபூர்வமாக புது சினிமாக்கள் (1975-க்கு பிறகு வந்ததெல்லாம் எங்களுக்கு புது சினிமா) பற்றியும் எழுதுவோம்.
வசந்தகுமார் எங்களை சுவாரசிய பதிவராக தேர்ந்தெடுத்திருக்கிறார். அவருக்கு நன்றி!
ஆர்வி எழுதிய அம்மாவுக்கு புரியாது சிறுகதை உரையாடல் போட்டியில் பரிசு பெற்றிருக்கிறது. போட்டியை நடத்திய பைத்தியக்காரன், மற்றும் ஜ்யோவ்ராம் சுந்தருக்கு நன்றிகள்!
வெற்றி பெற்ற சிறுகதைகளை புத்தகமாக வெளியிடப் போகிறார்களாம். இந்த புத்தகம் இன்னும் சில நாட்களில் – நவம்பருக்கு முன்னால் வெளியிடப்படுமாம். ஜ்யோவ்ராம் சுந்தர், சிவராமன், கிழக்கு பதிப்பகம் பத்ரி ஆகியோருக்கு நன்றிகள் பல!
பிருந்தா எழுதிய கவிதை பரிசு பெற்றிருக்கிறது. பரிசு விவரங்கள், இடுகையில்.
எழுதுவதில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. சிறுகதை வாரம் பாதியில் நின்றதற்கும் இதுதான் காரணம். கொஞ்ச நாள் ரெகுலராக எழுத முடியாத நிலை. எல்லாரும் மன்னிக்க வேண்டும்.
தீபாவளி வாழ்த்துகள்! சில தீபாவளி நினைவுகள் இங்கே.
சேதுராமன் மறைவு:
இந்த தளத்தில் நானும் பக்சும் எழுதுகிறோம் என்று சொன்னாலும் இங்கே மூன்று பேர் எழுதுகிறோம். சேதுராமன் இந்த தளத்தின் அங்கீகரிக்கப்படாத, அங்கீகாரம் வேண்டாத மூன்றாவது ப்ளாகர். அவர் மறைந்தது பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. எங்கள் அஞ்சலி இங்கே.
மார்ச் 26, 2009 at 5:16 பிற்பகல்
இந்த ஸ்டிக்கி போஸ்ட் ஒரு நல்ல ஐடியா. மேலும் சில தகவல்களை நாம் இதில் சேர்க்கவேண்டும்.
ஏப்ரல் 8, 2009 at 9:34 பிற்பகல்
#
Vijay Says:
ஏப்ரல் 5, 2009 at 4:59 பிற்பகல் e
Get Well Soon
#
Sethuraman Says:
ஏப்ரல் 8, 2009 at 1:20 மு.பகல் e
wish you a very speedy recovery!
because of a pc malfunction could see this only today.
best wishes
#
வினவு Says:
ஏப்ரல் 8, 2009 at 8:14 பிற்பகல் e
ஆர்.வி.
உங்களைத் தேடி வந்தபோது இந்த தகவல்.
கண் விழித்து பின்னூட்டம் இடாமல் ஓய்வெடுத்து விரைவில் உடல் நலம் அடையுங்கள்
நட்புடன்
வினவு
ஏப்ரல் 10, 2009 at 4:57 மு.பகல்
விஜய், சேதுராமன், வினவு குழுவினருக்கு,
உங்கள் நல்வாழ்த்துக்களுக்கு நன்றி! உடல் நிலை இப்போது தேறி வருகிறது. கூடிய விரைவில் மீண்டும் படிக்க எழுத ஆரம்பித்துவிடுவேன் என்று நம்பிக்கை இருக்கிறது.
ஏப்ரல் 8, 2009 at 9:36 பிற்பகல்
இரண்டு ஸ்டிக்கி போஸ்ட்கள் இடத்தை அடைப்பது போல் இருப்பதால் consolidate பண்ணிவிட்டேன். பதில்களையும் சேர்த்துதான்.
ஏப்ரல் 11, 2009 at 6:35 மு.பகல்
Get well soon…..
ஏப்ரல் 11, 2009 at 5:04 பிற்பகல்
வாழ்த்துக்களுக்கு நன்றி, நிகில்!
மே 19, 2009 at 5:46 மு.பகல்
லக்ஷ்மி ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் என்பதில் சந்தேகமில்லை. அடுப்படியிலே முடங்கிக்கிடந்த பிராம்மணப்பெண்களைப் படிக்கவைத்தவர் லக்ஷ்மி. – இதுதான் லக்ஷ்மி. இதற்குமேல் ஒன்றும் இல்லை.
ஜூன் 20, 2009 at 8:46 மு.பகல்
Been following your blog for some time, very very interesting.
Quite often you say you grew up in a village, may I know where ?
ஜூன் 21, 2009 at 6:37 மு.பகல்
கிருஷ்ணன்,
உங்கள் மறுமொழிக்கு நன்றி!
என் அப்பா ஒரு ஸ்கூல் ஹெட்மாஸ்டராக இருந்தவர். அதனால் நாங்கள் பல கிராமங்களில் இருந்திருக்கிறோம். எனக்கு நினைவு தெரிந்து நாங்கள் இருந்த கிராமங்கள் லாடாகரனை எண்டத்தூர், மானாம்பதி. செய்யூர் என்ற சிறு நகரமும் கொஞ்சம் நினைவிருக்கிறது.
நீங்களும் கிராமத்துக்காரரா?
ஜூன் 21, 2009 at 12:00 பிற்பகல்
///லாடாகரனை எண்டத்தூர், மானாம்பதி. செய்யூர்//
இவைல்லாம் எங்கே இருக்கின்றன????????????????????????
ஜூன் 21, 2009 at 12:01 பிற்பகல்
மன்னிக்கவும்!. “
இவையெல்லாம்” என்று படிக்கவும்!
ஜூன் 22, 2009 at 1:31 மு.பகல்
நல்லதந்தி,
மானாம்பதி காஞ்சிபுரத்துக்கு அருகில் இருக்கிறது. பக்கத்தில் இருக்கும் இன்னொரு சிறிய நகரம் உத்திரமேரூர். லாடாகரனை என்டத்தூரும் உத்திரமேரூருக்கு பக்கத்தில்தான் இருக்கிறது. பக்கத்தில் இருக்கும் இன்னொரு “பெரிய” நகரம் மதுராந்தகம். எல்லாமே பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்தவை. இப்போது எது எந்த மாவட்டத்தில் இருக்கிறது என்று தெரியாது.
வீரபாண்டியன் மனைவி பற்றி பலர் சொல்லி இருக்கிறார்கள், பத்திரிகையாளர் ஞானி உட்பட. யாரையாவது ஊரிலிருந்து கொண்டு வர சொல்ல வேண்டும்.
தமிழ்வாணனை ஹீரோவாக்கி கதைகள் 77-78 வாக்கில் வர ஆரம்பித்தன என்று ஞாபகம். தவறாக இருக்கலாம். அவர் 77-78-இல் மறைந்துவிட்டார் என்றால் நிச்சயம் தவறுதான். ஆனால் அவருக்கு எம்ஜிஆர் அளவுக்கு புகழ் இருந்தது என்பது கொஞ்சம் ஓவராக தெரிகிறது.
எனக்கு நிச்சயமாக அப்படி தோன்றவில்லை.
தேவனின் கதைகளில் எனக்கு மிக பிடித்தது ஸ்ரீமான் சுதர்சனம். வரவுக்குள் செலவை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறும் ஒரு மத்திய தர வர்க்க குடும்பத் தலைவனின் தவிப்பு மிக நன்றாக வந்திருக்கும். மிஸ்டர் வேதாந்தம் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.
சாதாரணமாக வரும் மறுமொழிகளுக்கு பதில் எழுதிவிடுவேன். ஏதாவது மிஸ் ஆகி இருந்தால் அது என் கவனக் குறைவுதான், மன்னிக்கவும். சில சமயம் ஒரு பதிவுக்கு வரும் பல மறுமொழிகளுக்கு ஒரே பதிலாக எழுதுவது, இல்லை பல பதிவுகளுக்கு ஒரே ஒருவர் எழுதும் மறுமொழிகளுக்கு ஒரே பதிலாக எழுதுவது நடக்கிறது. அது கொஞ்சம் குழப்பலாம்.
சபாஷ் மீனா திருத்தப்படாதது கவனக் குறைவுதான். திருத்த வேண்டும் என்று நினைத்திருந்தேன், திருத்திவிடுகிறேன்.
பி.வி.ஆரை பற்றி எண்பதுகளில் என் படிப்பில் குறிப்பிட்டிருக்கிறேன். அவர் எழுதிய கதைகள் எதுவும் எனக்கு சரியாக நினைவு வராததால் நிறைய எழுதவில்லை. நான் ஆர்வியின் எழுத்துகளை படித்ததில்லை.
ஜூன் 22, 2009 at 5:57 மு.பகல்
நீங்கள் குறிப்பிட்ட எல்லா கிராமங்களுமே
இன்னமும் காஞ்சி மாவட்டத்துள் தான்
இருக்கின்றன. செய்யூர் பற்றிச் சொல்லி
இருந்தீர்களே, அங்குள்ள கந்தஸ்வாமி
கோயிலைப் பற்றிச் சொல்லவே இல்லையே!
கூகிளில் செய்யூரைச் சொடுக்கினால் இந்தக்
கோயில் பற்றித்தான் வருகிறது. காஞ்சியில்
இருந்தவர், எப்படி காலேஜ் படிப்பிற்கு
சேலம் மாவட்டம் சென்றீர்கள்?
ஜூன் 22, 2009 at 10:38 பிற்பகல்
சேதுராமன் அவர்களே,
செய்யூரிலிருந்து நாங்கள் வெளியேறும்போது எனக்கு ஏழெட்டு வயதிருக்கலாம். அங்கே கந்த சஷ்டி கொண்டாடப்படுவது நினைவிருக்கிறது. (மானம்பதியில் தைப்பூசம் பெரும் விழாவாக கொண்டாடப்படும்.)
நாங்கள் படித்த போதெல்லாம் தனியார் எஞ்சினியரிங் காலேஜ் எதுவும் கிடையாது. சேலம் அரசு காலேஜில் சீட் கிடைத்தது, போனேன். அவ்வளவுதான்.
சக பதிவாளர் பக்சும் அங்கே என்னுடன் படித்த க்ளாஸ்மேட்தான் .
ஜூன் 23, 2009 at 4:24 மு.பகல்
>>>சக பதிவாளர் பக்சும் அங்கே என்னுடன் படித்த க்ளாஸ்மேட்தான்
ஒரே செண்டன்ஸில் இரண்டு பொய்.
1. ”என்னுடன் படித்த” என்பதில் ”நான் படித்தேன்” என்று பொருள்படுகிறது.
2. “பக்சும் அங்கே என்னுடன் படித்த” என்பதில் பக்சும் படித்தான் என்று கூறுவது.
தமாஷிற்குத் தான் எழுதுகிறேன். ஆர்.வி.யின் படிப்பு பலதரப்பட்டது. ஒரு நண்பன் இவன் படித்துக்கொண்டிருந்த ஒரு புத்தகத்தைப் பார்த்து இப்படி கிண்டல் செய்தான்:
“எதை படிக்கிறது என்று ஒரு வரைமுறையே கிடையாதாடா? மனுஷன் படிப்பானாடா இந்த் புத்தகத்தை?”
அந்த புத்தகத்தின் தலைப்பு:
“பாம்பு சட்டையை கழற்றுவது எதனால்?”
ஜூன் 23, 2009 at 6:50 மு.பகல்
பக்ஸ்,
எனக்கே இந்த மாதிரி ஒரு புஸ்தகம் படித்தது ஞாபகம் இல்லையே, உனக்கு எப்படி?
ஜூலை 8, 2009 at 6:03 மு.பகல்
அன்பு RV
சென்னையில் பிறந்து சென்னையில் வாழ்கிறேன். கிராமங்கள் மேல் ஒரு தீரா மோகம்
செப்டம்பர் 2, 2009 at 8:29 மு.பகல்
இன்று ஹிந்து மெட்ரோப்ளஸ் இதழில் ஒரு பழைய புகைப்படம் சென்னை பற்றிய கட்டுரையுடன் வந்திருந்தது. இப்படம் எனக்கு பழைய ஞாபகங்களை நினைவுக்குக் கொணர்ந்தது.. மௌண்ட் ரோடும் ஜெனரல் பாட்டர்ஸ் ரோடும் சந்திப்பும், அடிசன் ஹிக்கின்போதம்ஸ் கட்டிடத்திலிருந்து இப்போது தூன் பில்டிங்க்ஸ் இருக்கும் வரை உண்டான பகுதி… இது எந்த வருஷம் எடுத்தது
என்று பார்க்கும்போது, வலது மூலையிலுள்ள வெல்லிங்க்டன் தியேட்டரில்
அப்போது நடை பெற்றுக் கொண்டிருந்த சினிமாவின் பானர் தெரிந்தது —
சினிமா பெயர் “இரும்புத் திரை” – எந்த வருஷம் வந்தது என்று பார்க்கச் சொடுக்கினவுடன், திரையில் “அவார்டா கொடுக்கிறாங்க” தளம் தென்பட்டது.
வலைத் தேடலில் ஈடுபட்டவனுக்கு, இப்படம் 1960 பொங்கலன்று வெளியடப்
பட்டது என்று தெரிந்தது.
சிவாஜி கணேசன் “எனது சுயசரிதை”யில் இப்படத்தைப் பற்றிக் கூறுவதாவது:
இதே காலகட்டத்தில் ஜெமினி அதிபர், எஸ்.எஸ்.வாசன் அவர்களுக்காக ஒரு
படம் பண்ணினேன். தொழிலாளர்கள் பிரச்சினையை மையமாக வைத்து
அமைக்கப்பட்ட கதை. அந்தப் படம் தான் “இரும்புத் திரை”. அதில்
வைஜெயந்திமாலா அவர்கள் என்னுடன் கதா நாயகியாக நடித்தார்கள்.
“சந்திரலேகா” போன்ற பிரம்மாண்டமான படங்களை எடுத்தவரல்லவா
எஸ்.எஸ்.வாசன்! அவருடைய ஜெமினி பானரில் நடித்தது பெருமையல்லவா